உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26686 topics in this forum
-
கோரத்தாண்டவமாடும் கொரோனா – கட்டுப்படுத்த முடியாமல் திணறும் நாடுகள்! கொரோனா வைரஸ் காரணமாக இத்தாலியில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 650 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதன்காரணமாக கடந்த ஒருவாரத்திற்குள் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பால் அங்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஐரோப்பிய நாடான இத்தாலி கொரோனாவின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது. அங்கு சுமார் 60 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் புதிதாக 5 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு 5 ஆயிரத்து 500 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில் நேற்றைய தினத்தி…
-
- 0 replies
- 388 views
-
-
உலகமே கொரோனா பீதியிலிருக்கும் நிலையில் ஏவுகணை சோதனையில் வடகொரியா.! ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை மீறியும், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை சோதித்து வந்தது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வடகொரியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதித்தன. இவ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. இந்த பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங்கும் இரண்டு தடவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அணு ஆயுத தயாரிப்பதை முழுமையாக கைவிடுமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கையை வடகொரியா ஏற்கவில்லை. இ…
-
- 0 replies
- 513 views
-
-
டொனால்ட் ட்றம்ப், இலான் மஸ்க் ஆகியோர் இம் மருந்தின் பாவனையை ஆதரித்திருந்தார்கள் குளோறோகுயீன் பொஸ்ஃபேட் என்னும் மருந்தை உட்கொண்டதால் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் மரணமானார். அவரது மனைவி மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது மலேரியா மற்றும் மூட்டு வாதம் போன்ற் நோய்களுக்காகப் பாவிக்கப்பட்டு வரும் ஒரு மருந்து என அறியப்பட்ட ஒன்று. இம் மருந்து கோவிட்-19 வரஸ் நோயைக் குணப்படுத்துமெனெ அமெரிக்க ஜனாதிபதி ட்றம்ப் மற்றும் ரெஸ்லா நிறுவனத்தின் அதிபர் இலான் மஸ்க் ஆகியோர் சமீபத்தில் கூறியிருந்தனர். ஆரம்பகட்ட ஆராய்ச்சிகளின்படி குளோறோகுயீன் பொஸ்ஃபேட் கொரோனாவைரஸ் பரவலைத் தடுக்க வல்லது என்ற செய்தி சில ஊடகங்களிலும் வெளிவந்திருந்தது. “எழுந்துள்ள அவ…
-
- 1 reply
- 716 views
-
-
இடிந்துவிழும் இத்தாலியின் நிலை கண்டு கலங்கி நிற்கும் மக்களை காக்கபிடல்ஹேஸ்ரோ"வின் கியூபா மருத்துவ குழு இத்தாலி மண்ணில் கால் பதித்தனர்
-
- 0 replies
- 366 views
-
-
கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிக்கின்றது என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது. ஜெனீவாவில் செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெ;டிரோஸ் அடெனெம் கெப்ரெயேசஸ் முதல் நோயாளி குறித்த அறிவிப்பிற்கும் 100,000 நோயாளிகள் குறித்த அறிவிப்பிற்கும் இடையில் 67 நாட்கள் காணப்பட்டன என தெரிவித்துள்ளார். எனினும் அடுத்த 11 நாட்களில் மேலும்100,000 நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ள அவர் இறுதியாக நான்கு நாட்களில் 100,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். தற்போது சுமார் 300,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், உலகின் அனைத்து நாடுகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் இனம் காணப்பட்டுள்ளனர் என அவர் தெர…
-
- 1 reply
- 565 views
-
-
பிரித்தானியாவில் கொரோனா வைரஸைக் குறைப்பதற்காக புதிய சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது ஜேர்மனிய செய்திகளின்படி பிரித்தானிய பிரதமர் மூன்று வாரங்களுக்கு மக்களை வீட்டிற்குள் முடங்குமாறு அறிவித்துள்ளார்
-
- 3 replies
- 657 views
-
-
கொரோனா வைரசின் பிறப்பிடமான சீனாவில், கடந்த மூன்று நாட்களாக, புதிய நபர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருந்தது. ஆனால், நேற்று முன்தினம், புதிதாக ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்து, சீனாவின், தேசிய சுகாதார ஆணையத்தின் அறிக்கை:சீனாவில், நேற்று முன்தினம், புதிதாக, 46 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில், 45 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். குவாங்சோவை சேர்ந்த ஒருவருக்கு, புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால், ஹூபய் மாகாணத்தைச் சேர்ந்த, ஐந்து பேர் உள்ளிட்ட ஆறு பேர் இறந்த நிலையில், கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை, 3,261 ஆக உயர்ந்துள்ளது.கொரோனாவின் மையமான வூஹான் நகரில், நான்காவது நாளாக, புதிதாக யாரும் வைர…
-
- 0 replies
- 414 views
-
-
தென் கொரியாவில் 60 சதவீதம் பேருக்கு ஒரு பெண்ணால் மட்டும் கொரோனா பரவி உள்ள தகவல் வெளியாகி இருக்கிறது. உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஆழ்த்தியுள்ள கொரோனா சமீப காலமாக படு வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் மூன்றரை லட்சத்திற்கும் மேலாக பரவியுள்ளது. 15 ஆயிரத்திற்கும் மேல் உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது இந்த நோய் பரவல் மிக வேகமாக இருக்கும் என்பதால் அனைத்து நாடுகளும் எமர்ஜென்ஸி நிலை போல் கண்காணித்து வருகிறது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர் எங்கு சென்றார், யாரிடம் எல்லாம் பேசினார். யாருடன் தங்கினார் என்ற தகவலின்படி சுகாதார துறையினர் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தென்கொரியாவில் மொத்தம் 8 ஆயிரத்து 961 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 111 பேர் இறந்தனர். தற்போது 3 ஆயி…
-
- 0 replies
- 374 views
-
-
இத்தாலியில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த பின்னர் உயிரிழந்துள்ள மருத்துவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது என அந்த நாட்டின் மருத்துவர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. கொவிட் 19 நோய் தொற்று காரணமாக உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை துரதிஸ்டவசமாக கவலை தரும் விதத்தில் பெரிதாகி வருகின்றது என மருத்துவர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. தொற்றுநோய்க்குள்ளான சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாள் மாலையிலும் வெளியிடப்படும் அதேவேளை பல மருத்துவர்கள் திடீரென உயிரிழக்கின்றனர் என மருத்துவர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. அவர்களின் மரணத்திற்கான நேரடி காரணமாக வைரசினை சொல்ல முடியாது என மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. உயிரிழந்துள்ள 23 மருத்துவர்களில் 19 பேர் …
-
- 5 replies
- 770 views
- 1 follower
-
-
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் வுகான் நகரத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதமே மர்மக்காய்ச்சல் இருப்பதாக அங்குள்ள மருத்துவர் ஒருவர் சக மருத்துவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். வுகானின் இறைச்சிக் கூடத்துக்கு அருகே வசிப்பவர்களுக்கு நான்குபேருக்கு ஒரேவிதமான காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனவே, நோயாளிகளைக் கையாளும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என சமூகஊடகம் மூலம் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதையறிந்த சீன அரசாங்கம் அந்த மருத்துவரை எச்சரித்தது. சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அவரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விவகாரம் தொடர்பாக மூச்சுவிட்டால் கட…
-
- 13 replies
- 1k views
-
-
என்னுடைய அடுக்குமாடி வீட்டில் அடங்கியிருந்து, பதற்றத்தின் பிடியில் உள்ள அமெரிக்காவையும், மக்களிடம் கொரோனா வைரஸ் பல மடங்கு வேகமாகப் பரவி வரும் நிலையில், இதை `அரசியல் புரளி' என்று கூறி அலட்சியம் காட்டிய அதிபர் டிரம்ப் தலைமையிலான வல்லாதிக்க நாடு இப்போது அந்த வைரஸ் தாக்குதலுக்கு ஒரு தீர்வு அளிக்க முடியாமல் திணறி வருவதைப் பார்ப்பது ஆச்சரியமாக உள்ளது. வெளியிலிருந்து பார்த்தால் இந்த நாடு பலருக்கும் ஒரு முழுமையான நாடாகத் தோன்றும். தங்களுடைய வருமானம் முழுவதையும் செலவிட்டு, வாழ்வை ஆபத்தான சூழ்நிலைகளுக்கு ஆட்படுத்திக் கொண்டு, ஆபத்தான வாழ்க்கைப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒரு சில நாட்களுக்குள் இந்த நாடு முற்றிலும் மாறிவிட்டது. இந்த வைரஸ் தாக்குதலால் 230க்கும் ம…
-
- 2 replies
- 525 views
-
-
பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றிற்குள்ளான மூன்று மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். பாரிசின் வடபகுதியில் உள்ள மருத்துவமனையொன்றில் விபத்து மற்றும் அவசர கிசிச்சை பிரிவை சேர்ந்த மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பிரான்சின் சுகாதார அமைச்சர் நேற்று உறுதி செய்திருந்தார். இதேவேளை மகப்பேற்று நிபுணர் ஒருவரும்,மற்றொரு வைத்தியரும் பிரான்சின் கிழக்கு பகுதியில் உயிரிழந்துள்ளனர்.பிரான்சின் கிழக்கு பகுதியே வைரஸ் காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற போதிலும் தனது சகாக்களிற்கு உதவுவதற்காக மருத்துவமனைக்கு பணிக்கு சென்ற ஜீன் ஜாக் ரஜாபிந்திரானாசி என்ற மருத்துவரே முதலில் உயிரிழந்துள்ளார். முதன் முதலில் பிரான்சில் நோயாளர் தொற்று பதிவான மருத்துவமனையில் அவசர …
-
- 0 replies
- 396 views
-
-
கொரோனா வைரஸினால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள இத்தாலிக்கு உதவும் நோக்கில் ரஷ்யா ஒன்பது இராணுவ விமானங்களில் பல மருத்துவ உபகரணங்களையும், நிபுணத்துவம் பெற்ற இராணுவத்தினரையும் இத்தாலிக்கு அனுப்பி வைத்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் சனிக்கிழமையன்று இத்தாலி பிரதமர் கியூசெப் கோண்டேவுக்கு அவசர உதவி வழங்குவதற்கு தயாராக இருப்பதாக உறுதியளித்தார். இந் நிலையில் புட்டினின் உத்தரவுக்கு அமையவே கிருமி நாஷினி உள்ளிட்ட மருந்துப் பொருட்கள் இத்தாலிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இன்றைய தினம் உறுதிப்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றினால் இத்தாலி அதிகளவாக பாதிக்கப்பட்டுள்ளது, ஐரோப்பிய நாடுகளை விட இத்தாலியில் சுமார் 60,000 பேர் அங்கு கொர…
-
- 2 replies
- 563 views
-
-
காஸாவில் இருவர் கொரோனாவைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளதையடுத்து முற்றுகைக்குள்ளாகியுள்ள பாலஸ்தீனியர்கள் எவ்வாறு நோயை எதிர்கொள்ளப்போகின்றனர் என அச்சம் தோன்றியுள்ளது. மேற்குகரையில் பாலஸ்தீன பிரதமர் வைரசினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிற்காக தனது மக்களை இரண்டு வாரங்களிற்கு வீடுகளிற்குள் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளார். பாக்கிஸ்தானிலிருந்து எகிப்தின் ஊடாக காஜாவிற்கு சென்ற 79 மற்றும 63 வயது நபர்களிற்கு வைரஸ் பாதிப்புள்ளமை உறுதியாகியுள்ளது. எகிப்து காஸா எல்லையில் உள்ள ராவா நகரில் நோயாளிகள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை தொடர்புகொண்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எல்லைகள் மூடப்பட்டு காஸா …
-
- 1 reply
- 297 views
-
-
வைரஸ் அச்சத்தினால் வன்முறை – கொலம்பிய சிறையில் 23 பேர் பலி கொலம்பியாவின் சிறைச்சாலையொன்றில் ஏற்பட்ட வன்முறைகள் காரணமாக 23 பேர் உயிரிழந்துள்ளனர். கொலம்பியாவின் தலைநகர் பொகோட்டாவில் உள்ள சிறையிலேயே இந்த வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. கொரோனா அச்சம் காரணமாக சிறைக்கைதிகள் சுகாதாரமான இடங்கள் தங்களிற்கு அவசியம் என கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனை தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகள் காரணமாக 23 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 85 பேர் காயமடைந்துள்ளனர். சுpறைச்சாலைக்குள் துப்பாக்கி பிரயோகம் இடம்பெறுவதையும் காயமடைந்தவர்களையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. வைரசிற்கு மத்தியில் நாங்கள் நாய்கள் போல கைவிடப்பட்டுள்ளோம் என சிறையில் உள்ள ஒ…
-
- 0 replies
- 372 views
-
-
கொரோனா அச்சத்தால் தன்னைத்தானே தனிமைப்படுத்திய ஜெர்மனி அதிபர் Posted on March 23, 2020 by தென்னவள் 8 0 கொரோனா அச்சம் காரணமாக ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கொரோனா வைரசால் ஜெர்மனியில் மொத்தம் 18610 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 2000 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் அறிகுறி உள்ளவர்கள், அவர்களுடன் தொடர்பு உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மக்கள் அதிகம் கூடும் …
-
- 5 replies
- 463 views
-
-
அதி தீவிரமாகப் பரவும் கொரோனா வைரஸ்: உயிரிழப்பு 13 ஆயிரத்தைத் தாண்டியது! கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது இத்தாலியில் ஒரே நாளில் 793 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து அங்கு, மொத்த உயிரிழப்புக்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தை நெருங்குகிறது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 188 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் இதுவரை 3 இலட்சத்து 8 ஆயிரத்து 231 பேருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 13 ஆயிரத்து 67 பேர் உயிரிழந்துள்ளனர். ம…
-
- 0 replies
- 320 views
-
-
அனைத்து விமான சேவைகளும் இடைநிறுத்தியது – எமிரேட் விமான சேவை கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் எமிரேட்ஸ் விமான சேவையின் அனைத்து பயணிகள் விமான சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. குறித்த விமான சேவைகள் மார்ச் மாதம் 25 ஆம் திகதி முதல் இடை நிறுத்தப்படும் என எமிரேட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. http://athavannews.com/அனைத்து-விமான-சேவைகளும்/
-
- 0 replies
- 226 views
-
-
கொரோனா வைரஸின் புதிய அறிகுறிகளை வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்திய வைத்தியர்கள்! கொரோனா வைரஸின் புதிய அறிகுறிகளை பிரித்தானிய வைத்தியர்கள் வெளியிட்டுள்ளனர். வைரஸிற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தாத நோயாளிகள் மணம் மற்றும் சுவை உணர்ச்சிகளை இழந்தவர்களாக காணப்படுவார்கள் என பிரித்தானியாவின் காது தொண்டை மூக்கு தொடர்பான நோய்கள் குறித்த கற்கைகளிற்கான நிலையம் தெரிவித்துள்ளது. வைரஸ் கண்கள் மூக்கு மற்றும் தொண்டை ஊடாகவே நுழைகின்றன என்பதை ஏனைய நாடுகளின் ஆதாரங்கள் உறுதி செய்துள்ளன என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது. நாங்கள் புதிய அறிகுறிகளை அடையாளம் கண்டுள்ளோம், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாசனை மற்றும் சுவை உணர்வை இழந்தவர்களாக காணப்படுவார்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளன…
-
- 1 reply
- 699 views
-
-
இத்தாலிய பிரதமர் யூசெப் கோன்டே மார்ச் 16 திங்களன்று பகலில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இத்தாலி ஆபத்தான வாரங்களில் நுழைவதாக எச்சரித்தார். அன்று மாலையே மேலும் 349 புதிய உயிரிழப்புக்களைச் சந்தித்திருந்தது. அதற்கு முந்தைய நாளில் 368 உயிரிழப்புக்கள் என இரு தினங்களில் 700 பேரையும், வைரஸ் தொற்று அறியப்பட்ட இரு வாரங்களுக்குள் மொத்தமாக 2,158 காவு கொடுத்திருக்கிறது இத்தாலி. இது சீனாவிற்கு அடுத்தான பேரிழப்பு. ஆனால் இந்த மரணப்புள்ளியை சீனாவை விட வேகமாகத் தொட்டிருக்கிறது இத்தாலி. திங்களன்று காலையில் பிரதமர் கொண்டே பேசிய விடயங்கள் இத்தாலிக்கு மட்டுமானது எனக் கடந்து செல்ல முடியாதவை, அலட்சியப்படுத்த முடியாதவை. " நாங்கள் இன்னும் இழப்புக்களின் உச்சத்தை எட்டவில்லை என்று மருத்துவ…
-
- 2 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ள நபர் ஒருவரின் இறுதிசடங்குகளை போதகர் ஒருவர் கையடக்கதொலைபேசியை பயன்படுத்தி நடத்தியுள்ளார். கனெக்டிகட்டை சேர்ந்த பில்பைக் என்பவரின் இறுதிசடங்குகளையே போதகர் கையடக்க தொலைபேசி மூலம் நடத்தியுள்ளார். நோர்வோக் மருத்துவமனையின் தாதியொருவரின் உதவியுடன் இறுதி சடங்குகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பிட்ட தாதி போதகரை ஏற்பாடு செய்த பின்னர் தொலைபேசி மூலம் தனிமைப்படுத்தலில் உள்ள பில்பைக்கின் குடும்பத்தினரை தொடர்புகொண்டுள்ளார். பின்னர் போதகர் இறுதி சடங்குகளை மேற்கொண்டவேளை கைத்தொலைபேசியை தாதி பில்பைக்கின் காதில் வைத்துள்ளார். தனது வாழ்க்கையின் மிகவும் அழகான பிரார்த்தனை வரிகள் அவை என தெரிவித்துள்ள போதகர் தான் அவரை நேசிப்பதாக த…
-
- 0 replies
- 334 views
-
-
இத்தாலியில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் 793 பேர் உயிரிழப்பு! கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சீனாவை விட ஐரோப்பிய நாடான இத்தாலியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இத்தாலியில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி 793 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் ஒரே நாளில் பதிவான ஆக கூடிய மரண எண்ணிக்கை இது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இத்தாலி பிரதமர் கியுஸ்பி காண்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 825 ஆக அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளது. மேலும் இதையடுத்து, நாட்டில் செயல்படும் முக்கியத்துவம் இல்லாத நிறுவனங்களை மூடும்படி உத்தரவிட்டுள்ளார். மே…
-
- 0 replies
- 324 views
-
-
இத்தாலியில் 2,600க்கும் அதிகமான மருத்துவ ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர்களில் 1500 மருத்துவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இது அந்நாட்டில் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களில் 8.3 வீதமாகும். சுகாதார ஸ்தாபனம் ஒன்றினால் வெளியிடப்பட்டிருக்கும் இந்தத் தகவலின்படி, மருத்துவர்களுக்கான பாதுகாப்பு போதுமானதாக இல்லை என்பது உறுதியாவதாக அது குறிப்பிட்டுள்ளது. இந்தப் பிரச்சினை சீனாவை விடவும் மோசமாக உள்ளது. 8.3 வீதம் என்பது சீனாவை விடவும் இரட்டிப்பான மருத்துவ ஊழியர்கள் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதாக கிம்பே ஸ்தாபனத்தின் தலைவர் நினோ கார்டபெலோட்டா இத்தாலி ஊடகத்திற்கு குறிப்பிட்டுள்ளார். உத்தியோகபூர்வ தரவ…
-
- 1 reply
- 450 views
-
-
கொரோனா வைரஸ் குறித்து அமெரிக்கா புலாய்வு பிரிவினர் விடுத்த எச்சரிக்கையை ஜனாதிபதி டிரம்ப் அலட்சியம் செய்தார் என வோசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவில் பரவ ஆரம்பித்துள்ள வைரசின் தீவிரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு புலனாய்வு பிரிவினர் ஜனவரி மாதத்தில் எச்சரிக்கை விடுத்தனர் என வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் புலனாய்வு அமைப்புகள் வைரசின் இயல்பு மற்றும் சர்வதேச பரவல் குறித்தும் சீனா அதன் பாதிப்பை குறைத்து காண்பிப்பது குறித்தும் அமெரிக்க அரசாங்கம் எடுக்கவேண்டிய நடவடிக்கைககள் குறித்தும் எச்சரித்தன ஆனால் வழமைபோல டிரம்ப் அதன்; பாரதூரத்தை அலட்சியம் செய்தார் அதனை நிராகரித்தார் என வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. p>…
-
- 4 replies
- 911 views
-
-
கொரோனா வைரஸ்: ஸ்பெயினில் ஒரே நாளில் 324 பேர் மரணம்; சிங்கப்பூரில் இருவர் பலி Ore Huiying / Getty ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தகவலின்படி, சர்வதேச அளவில் கொரோனாவால் 2,74,707 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,397 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை இல்லாத அளவிற்கு ஸ்பெயினில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 324 பேர் பலியாகியுள்ளனர். நேற்று மட்டும் 235 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு மொத்தம் உயிரழந்தவர்களின் எண்ணிக்கை 1,326ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்து. இந்நிலையில், சிங்கப்பூரில் இன்று முதல் மரணம் பதிவாகியுள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த 75 வயது மூதாட்டியும் இந்தோனேசியாவை சேர்ந்த 64 வயது முதியவரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் அங்கு உயிரிழந்தது உற…
-
- 1 reply
- 390 views
-