Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கொரோனா வைரஸ் தொற்று: சீனாவுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் - இந்திய வம்சாவளி பெண் தலைவர் தொடங்கினார் னாவில் உள்ள உகான் நகரில் கடந்த டிசம்பர் 1-ந்தேதி முதன்முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. ஆனால் இது தொடர்பாக எச்சரித்தவர்களை சீன கம்யூனிஸ்டு அரசு கைது செய்தது, உண்மை தகவல்களை வெளியிடாமல் மறைத்தது, மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியதுதான் கொரோனா வைரஸ் தொற்று என்பதை தொடக்கத்தில் மறைத்து விட்டது என்று சீனா மீது அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அது மட்டுமல்ல, இந்த வைரஸ், உகான் பரிசோதனைக்கூடத்தில் செயற்கையாக உருவாக்கிய ஒன்றுதான் என்பது சீனா மீதான அமெரிக்காவின் சமீபத்திய பரபரப்பு குற்றச்சாட்டாக உள்ளது. இந்த நிலையில், அங்க…

    • 2 replies
    • 486 views
  2. கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தொட்டது! உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தொட்டுள்ளது. கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று தொடர்பான விடயங்களை மதிப்பிட்டுவரும் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகமும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. உலகளவில், உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 2.88 மில்லியனுக்கும் அதிகமான எண்ணிக்கையை காண்பிக்கின்றது. அத்துடன் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் சுமார் 813,000பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். http://athavannews.com/கொரோனா-வைரஸ்-தொற்றால்-உய-2/

  3. கொரோனாவில் இருந்து விடுதலையான 8 இலட்சம் பேர்! உலகம் முழுவதும் மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் அமெரிக்கா கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் அங்கு நேற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மரணித்துள்ளனர். இதனைவிட, அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 இலட்சத்தை நெருங்கிவருகிறது. இதேவேளை, உலகம் முழுவதும் மொத்த பாதிப்பு 30 இலட்சத்தை நெருங்கி வருவதுடன் மொத்த உயிரிழப்புக்கள் 2 இலட்சத்தைக் கடந்துள்ளன. கடந்த 24 மணிநேரங்களில் உலக நாடுகளில் 90 ஆயிரத்து 722 புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக 29 இலட்சத்து 21 ஆயிரத்து 439 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்துடன், 6 ஆயிரத்து 69 பேர் நேற்று மட்டும் உயிரிழந்…

  4. கொரோனா நோயாளிகள் சிலர் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளினால் மரணமடைந்துள்ளதாக தற்போது அமெரிக்காவிலிருந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. கொரோனா வைரஸ் சிகிச்சையில் மலேரியாவுக்கு எதிரான ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளின் பாதுகாப்புத் தன்மையை ஆய்வாளர்கள் பலரும் கேள்விக்குட்படுத்தி எச்சரித்து வரும் நிலையில் அதிபர் ட்ரம்ப் உட்பட பலரும் இதுதான் தீர்வு என்ற ரீதியில் செயல்பட அது தற்போது பின்னடைவை சந்தித்துள்ளதாக அமெரிக்காவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தன்னுடைய சொந்த வர்த்தக நலன்களுக்காக அதிபர் ட்ரம்ப் எந்த ஒரு விஞ்ஞான ஆதாரமும் இல்லாமல் இதை பரிந்துரை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது, ஹைட்ராக்சிகுளோரோகுய்னால் மரணங்கள் குறித்த அறிக்கையை நான் பார்க்க…

  5. அறைகளில் உள்ள கொரோனா வைரஸ்களை அழித்து சுத்தம் செய்ய நாசா புதிய கருவி கண்டுபிடிப்பு அறைகளில் உள்ள கொரோனா வைரஸ்களை அழித்து சுத்தம் செய்ய புதிய கருவியை நாசா அறிமுகப்படுத்தியுள்ளது. ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரப்படி அமெரிக்காவில் வெள்ளிக்கிழமை 1,258 கொரோனா வைரஸ் இறப்புகள் பதிவாகியுள்ளன, இது கிட்டத்தட்ட மூன்று வாரங்களில் நாட்டின் மிகக் குறைந்த தினசரி எண்ணிக்கை. இதுவரை, மொத்த இறப்பு எண்ணிக்கை 51,016 ஆக உள்ளது. கடந்த 10 நாட்களில் இறப்பு எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்து உள்ளது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நாசா மற்றும் ஜெட் ப்ராபல்ஷன் லேபரேட்டரி (ஜேபிஎல்) அதிகாரிகளைச் சந்தித்து உர…

  6. வியட்நாமில் கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை - சாத்தியமானது எப்படி? Getty Images உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட் 19 தொற்று, சீனாவுடன் நில எல்லையை பகிர்ந்திருக்கும் வியட்நாம் நாட்டில் மட்டும் பெரும் பாதிப்பை இதுவரை ஏற்படுத்தவில்லை. வியட்நாமின் மக்கள் தொகை சுமார் 9.7 கோடி ஆகும். அங்கு இதுவரை 268 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை (ஏப்ரல் 23 வரை) ஒரு மரணம் கூட பதிவாகவில்லை.மக்களை ஒன்றுதிரட்டி "கொரோனாவுக்கு எதிரான போரை" அந்நாடு அறிவித்தது. தற்போது அங்கு கட்டுப்பாடுகள் தளர்தத ஆரம்பித்துள்ளதோடு, பள்ளிகள் மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியமானது? இதனை மற்ற நாடுகள் பின்பற்ற முடியுமா? …

  7. 5 வருட ரகசிய திட்டத்தை தற்போது செயல்படுத்தி உள்ள சீனா, டிஜிட்டல் கரன்சிக்கு மாறியுள்ளது. சீனாவிலிருந்த பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் அதிக உயிர் பலியை சந்தித்து வருகின்றன. உலக நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறையை அமல்படுத்தி உள்ளதால், பொருளாதாரமும் அதள பாதாளத்துக்கு சென்று விட்டது. ஆனால் சீனா இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. அங்கு சுற்றுலா தளங்கள், மால்கள், ஓட்டல்கள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளும் செயல்படத் துவங்கி உள்ளன. இதனால் சீன பொருளாதாரம் சீரடைய துவங்கி உள்ளது. இந்நிலையில் சீனா, டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்யவுள்ளது. அந்நாட்டின் மத்திய வங்கிகள் ஒன்றிணைந்து டிஜிட்டல் 'யு…

    • 1 reply
    • 718 views
  8. ஏற்கெனவே சாதித்ததை இழக்க அனுமதிக்கக் கூடாது: ஜேர்மனி அதிபர்! நாம் ஏற்கெனவே சாதித்ததை இழக்க அனுமதிக்கக் கூடாது என ஜேர்மனி அதிபர் அங்காலா மெர்கல் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று அதிகம் ஏற்பட்டுள்ள நாடுகளில ஆறாவது இடத்தில் உள்ள ஜேர்மனியில், மே மற்றும் ஜூன் மாதங்களில் பாதிப்பு அதிகம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இதுகுறித்து ஜேர்மனி அதிபர் அங்காலா மெர்கல் கருத்து தெரிவிக்கையில், ‘நாம் இறுதியில் இல்லை. ஆரம்பத்தில் உள்ளோம். நாம் இந்த வைரஸுடன் நீண்ட நாள் இருக்கப் போகிறோம். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மிகப் பெரிய சவாலை எதிர் கொண்டுள்ளோம். நாம் முடிந்த அளவு கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும். நாம் ஏற்கெனவே சாதித்ததை இழக்க அனுமதிக…

    • 1 reply
    • 468 views
  9. கொவிட்-19 இலிருந்து பாதுகாத்துக்கொள்ள ‘விட்டமின் டி’ மாத்திரைகளை எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்! மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று (கொவிட்-19) பாதிப்பிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள, தேவையான அளவுக்கு ‘விட்டமின் டி’ மாத்திரைகளை எடுத்துக்கொள்ளுமாறு, மக்களை பிரித்தானிய நல்வாழ்வுத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பைக் குறைப்பதில் ‘விட்டமின் டி’ மாத்திரைகளுக்குப் பங்கிருப்பதாக இதுவரை எவ்வித சான்றுமில்லை என்றும் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது பொதுவாக, நுரையீரல்களில் நோய் எதிர்ப்பு ஆற்றலை ஊக்குவித்து சுவாசத் தொற்றுகளைத் தடுப்பதில் ‘விட்டமின் டி’-க்குப் பங்கிருப்பதாகக் கருதப்படுகிறது. கொரோனா முடக்கம் காரணமாக நாம் பெ…

  10. சீனா மூன்றாம் உலகப் போரை தொடுத்து விட்டதாக அரசியல் நிபுணர்கள் சிலர் அச்சம் தெரிவித்துள்ளனர் திட்டமிட்டே சீனா கொரோனாவைப் பரப்பியதாக அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், சீனாவின் திட்டம் குறித்த சர்ச்சை வலுத்துள்ளது. இரண்டாம் உலகப் போர் முடிந்து 75 ஆண்டுகளாகியுள்ள நிலையில் அணு ஆயுதமோ, வேறு எந்த ஆயுதமோ இல்லாமல் கிருமி மூலமாக சீனா மூன்றாம் உலக யுத்தத்தை தொடங்கிவிட்டதாகவே கூறப்படுகிறது.ராணுவ ரீதியாக பலம் வாய்ந்த அமெரிக்காவே இந்த கொரோனா தொற்று நோயால் 50 ஆயிரம் பேரை பறிகொடுத்து விட்டது. மேலும் பல லட்சம் பேர் உலகம் முழுவதும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரத்தை சீர்குலைத்து மண்டியிட வைப்பதுடன் அடுத்த 20 ஆண்டு…

    • 4 replies
    • 1.3k views
  11. கிருமிநாசினியை ஊசி வழியாக உட்செலுத்துவதா? ட்ரம்பின் கருத்தால் மருத்துவர்கள் அதிருப்தி! கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சையாக கிருமிநாசினியை, ஊசி வழியாக உடலுக்குள் செலுத்தலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிய கருத்துக்கு எதிராக, ரெக்கிட் பென்கிசர் நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. கிருமி நாசினிகளுக்கு பெயர்போன டெட்டால், லைசால் ஆகியவற்றை தயாரிக்கிற ரெக்கிட் பென்கிசர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எந்தவொரு சூழ்நிலையிலும், எங்கள் கிருமி நாசினிகளை மனித உடலுக்குள் ஊசி வழியாகவோ பிற விதங்களிலோ செலுத்தக்கூடாது. இதில் தெளிவாக இருக்க வேண்டும். எங்களது எல்லா தயாரிப்புகளையும் போல கிருமிநாசினிகளையும், சுகாதார தயரிப்புகளையும் அவற்றை என்ன நோக்கத்திற்காக…

  12. கொரோனா வைரஸ் குறித்த சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க சீனா மறுப்பு கொரோனா வைரஸ் எங்கிருந்து தோன்றியது என்பது குறித்து ஆராய தனிப்பட்ட சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு ஒத்துழைக்க சீனா மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த விசாரணையில் அரசியல் உள்நோக்கம் உள்ளதாக அந்நாடு கூறுகிறது. கொரோனா தொற்றுக்கு எதிராக போராடும் சீனாவின் கவனத்தை இது திசைத்திருப்பும் என்றும் இந்த விசாரணைக்கு ஒப்புக் கொள்ள முடியாது என்றும் பிரிட்டனுக்கான சீனாவின் துணை தூதர் சென் வென் பிபிசியிடம் தெரிவித்தார். கோவிட் 19 தொற்று எங்கிருந்து தோன்றியது, முதலில் எவ்வாறு பரவத் தொடங்கியது என்பது குறித்த தகவல் தெளிவாக கிடைத்தால், இத்தொ…

    • 0 replies
    • 374 views
  13. ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், தலைமை மருத்துவ அதிகாரி பிரண்டன் மர்பியுடன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பதிவு: ஏப்ரல் 25, 2020 04:45 AM கான்பெர்ரா, கொரோனா தாக்கத்தின் முதல் நிலையை நாடு கடந்துள்ளது. மூச்சு திணறல், தொடர் இருமல், சளித் தொல்லை, காய்ச்சல், மூக்கில் நீர் வடிதல் போன்ற பிரச்சினை உள்ள அனைவருக்கும் நாடு முழுவதும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும். அப்போதுதான் அதன் தாக்கத்தை முழுமையாக கண்டறிய இயலும். முக கவசத்தை எல்லோரும் அணிய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உடல் நலம் குன்றியவர்கள் மட்டும் அணிந்தால் போதும். இதனால் அவர்கள் மூலம் பிறருக்கு நோய் தொற்று பரவுவதை தடுக்கலாம். தற்போது…

    • 1 reply
    • 526 views
  14. கொரோனா வைரஸ் நவம்பர் மாதமே அடையாளங் காணப்பட்டுவிட்டதா? சீனாவை சீண்டும் அமெரிக்கா by : Anojkiyan கொரோனா வைரஸ் தொற்று விவகாரத்தில் சீனா வெளிப்படையாக இல்லை என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிற நிலையில், தற்போது கொரோனா வைரஸ் குறித்து சீனாவுக்கு நவம்பர் மாதமே தெரிந்திருக்க கூடுமென அமெரிக்கா கூறியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் தாயகமாக திகழும் சீனா, வேண்டுமென்ற வைரஸினை பரப்பிவிட்டதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால் இதனை தொடர்ந்து ஏற்க மறுக்கும் சீனா, அமெரிக்கா தான் இதற்கு காரணம் என பதிலளித்து வருகின்றது. இதற்கிடையில், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ மீண்டும் சீனாவை விமர்சித்துள்ள…

  15. தொற்றுநோக்கீகளை உற்பத்தி செய்யும் பிரபல நிறுவனமொன்று மனித உடல்களில் அவற்றை பயன்படுத்தவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளது. லைசோல் டெட்டோல் போன்றவற்றை தயாரிக்கும் ரெக்கிட் பென்கைசர் என்ற நிறுவனம் இந்த வேண்டுகோளை விடு;த்துள்ளது. தனது உற்பத்தி பொருட்களை மனிதர்கள் எந்த சூழ்நிலையிலும்,ஊசி மூலமாகவோ அல்லது வேறு வழிகளிலோ உடலிற்குள் செலுத்தக்கூடாது என ரெக்கிட் பென்கைசர் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. எங்கள் தொற்றுநீக்கிகள் மற்றும் சுகாதார பொருட்களை நோக்கம் மற்றும் பயன்பாட்டு வழிகாட்டுதல்களில் குறிப்பிட்டுள்ள படி மாத்திரமே பயன்படுத்தவேண்டும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தொற்று நீக்கிகளை வைரசினை கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தலாம் எனஅமெரிக்க ஜனா…

    • 2 replies
    • 544 views
  16. தொழில்நுட்ப உதவியுடன் கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஜேர்மனி வெற்றி! ஐரோப்பிய நாடுகளில் மிகவும் முக்கியமான நாடான ஜேர்மனி, தொழில்நுட்ப உதவியுடன் கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளது. இதனை மெய்ப்பிக்கும் வகையில், கொரோனா பரவியவர்களில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை செய்யப்பட்டவர்களில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 129 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 44 ஆயிரத்து 254 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 2 …

    • 1 reply
    • 396 views
  17. உலகின் கவனத்தை ஈர்க்கத்தவறிய சோமாலியாவின் நிலை 1045 by : Yuganthini உலகளாவிய ரீதியில் கொரோனா பெருந்தொற்று பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் ஆபிரிக்காவின் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் ஒற்றை மருத்துமனை மாத்திரமே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் பலவிதமான தொற்றுநோய்கள் காலம் காலமாக ஏற்பட்டுக்கொண்டிருந்தாலும் மருத்துவ வசதிகள் ஆபிரிக்க நாடுகளை இன்னும் முழுமையாக சென்றடையவில்லை. இந்நிலை இவ்வருடம் கொரோனா வைரஸால் முழு உலகமும் அங்கலாய்த்துக் கொண்டிருக்கும் காலப்பகுதியிலும் மாற்றம் பெறவில்லை. அமெரிக்கா இத்தாலி பிரித்தானியா உள்ளிட்ட உலகின் செல்வந்த நாடுகள் போதுமான மருத்…

    • 1 reply
    • 905 views
  18. துருக்கியை புரட்டி போடும் கொரோனா: ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு! 9 by : Anojkiyan உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாகுபாடின்றி அழிவுகளை ஏற்படுத்தி வருகின்றது. இதன்படி அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கு நிகராக ஆசிய நாடுகளிலும் பல மனித அழிவுகளை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆசியாவை பொறுத்தவரை துருக்கியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 101,790பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். 5481பேர் உயிரிழந்துள்ளதோடு, 80,808பேர் குணமடைந்துள்ளனர். 1,816 பேர் கவலைக்கிடமான நிலைய…

    • 0 replies
    • 378 views
  19. அடடே... இப்படியொரு சிகிச்சையா..? கொரோனாவை விரட்ட மாற்றி யோசித்த ட்ரம்ப்... உற்று நோக்கும் உலக மருத்துவர்கள்.? கிருமி நாசினியை பாதிக்கப்பட்டவரின் உடலுக்குள் செலுத்தி சுத்தம் செய்வதன் மூலம், கொரோனாவை அழிக்க முடியுமா என்பதை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என அமரிக்க அதிபர் ட்ரம்ப் புதிய யுக்தியை கூறியுள்ளார். அமெரிக்காவில் உள்நாட்டு பாதுகாப்பு துறையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இயக்குனரகம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், சூரிய ஒளியின் வெப்பம் மற்றும் ஈரப்பதம் ஆகியவை வைரஸ் பரவலை குறைப்பதற்கான சாதகமான சூழ்நிலையை உருவாக்க கூடுமென்று கூறப்பட்டுள்ளது. அதிக வெப்பமும், அதிக ஈரப்பதமும் கொரோனா நோய் பரவல் சங்கிலியை பலவீனப்படுத்தும் என்…

  20. கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களில் 72 சதவீதம் பேர் கருப்பு மற்றும் ஆசிய சிறுபான்மையினர்! இங்கிலாந்தில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களில் 72 சதவீதம் பேர் கருப்பு மற்றும் ஆசிய சிறுபான்மையினர் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தில், கொரோனா வைரஸ் இறப்பு நிகழ்ந்த மருத்துவமனையில், மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலமே இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதில், 19 சதவீதம் பேர் சிறுபான்மையினத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். இந்த கணக்கு மொத்த மக்கள் தொகையை கொண்டு மதிப்பிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து தேசிய சுகாதார இயக்குநர், ஹபீப் நக்வி கூறுகையில், இதுபோன்று கருப்பு மற்றும் ஆசிய சிறுபான்மையினர் அதிகம்பேர் உயிரிழந்தது கவலையை அளித்துள்ளது. இது மிகவும், கடினமான சூ…

  21. கொரோனா வைரஸ் எதிரொலி: ஐந்து வாரங்களில் 26 மில்லியன் மக்கள் வேலையின்மையால் திண்டாட்டம்! கொரோனா வைரஸ் தொற்று அமெரிக்காவை கடுமையாக பாதித்துள்ள நிலையில், கடந்த ஐந்து வாரங்களில் 26 மில்லியன் மக்கள் வேலையின்மையால் அவதிப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1930ஆம் ஆண்டுகளில் பெரும் மந்தநிலைக்குப் பின்னர் மிக மோசமான பணிநீக்கங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகின்றது. குறிப்பாக கொரோனா வைரஸ் தாக்கியதில் இருந்து ஆறு அமெரிக்க தொழிலாளர்களில் ஒருவர் வேலை இழந்துவிட்டதாக அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், அமெரிக்க பிரதிநிதிகள் சபை வணிகங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு உதவ கிட்டத்தட்ட 500 பில்லியன் டொலர் செலவு தொகுப்பை அனுப்பியுள்ளது. உலகையே அச்சுறுத்தி…

  22. சீனாவின் வுஹான் நகரிலிருந்து காணாமல் போன பத்திரிகையாளர் - புதிய காணொளி வெளியீடு கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனாவின் வுஹான் நகரத்திலிருந்து செய்தி சேகரித்து வெளியிட்ட பிறகு காணாமல் போன செய்தியாளர் ஒருவர், சுமார் இரண்டு மாதங்களுக்கு பின்னர் மீண்டும் காணொளி வாயிலாக தனது இருப்பை உறுதி செய்துள்ளார். கடைசியாக கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி, லி ஸிஹுவா வெளியிட்ட காணொளியில் அவர் காவல்துறையினரால் கைது செய்யப்படுவது பதிவாகி இருந்தது. இந்நிலையில், தற்போது புதிதாக யூடியூபில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள அவர், தான் இடைப்பட்ட காலத்தில் வுஹான் நகரத்திலும், தனது சொந்த ஊரிலும் என இருமுறை “சுய தனிமைப்படுத்தலில்” இருந்ததாக தெரிவித்துள்ளார். கொரோன…

  23. அமெரிக்க கப்பல்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் துப்பாக்கிய ஏந்திய ஈரான் படகுகள் அனைத்தையும் சுட்டு வீழ்த்த கடற்படைக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கி இருந்தாலும் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கு இடையேயான பதற்றம் தனிந்தபாடில்லை. அணு ஆயுத சோதனை தொடங்கி பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. மேலும், பாரசீக வளைகுடா பகுதியின் சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்க கடற்படையினர் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், பாரசீக வளைகுடா கடற்பகுதியில் கடந்த 15-ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 6 அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பல்களை ஈரானிய படையினர் சுற்…

  24. கொரோனா வைரஸ் உண்டாக்கும் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை சீனா தொடர்ந்து குறைத்துக் காட்டிவருவதாக அமெரிக்க மற்றும் பிரிட்டன் பாதுகாப்பு அதிகாரிகள் கருதுகிறார்கள். எனினும், இது குறித்து சீனாவிடம் நேரடியாகக் கேள்வி கேட்க ஐரோப்பிய நாடுகள் தயங்குவதாக பிபிசிக்கு தகவல் கிடைத்துள்ளது. தாங்கள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் எதையும் மூடி மறைக்கவில்லை என்று சீனா தொடர்ந்து கூறி வருகிறது. ஏப்ரல் 17 அன்று, வைரஸ் பரவல் தொடங்கிய வுஹான் நகரில் நடந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கையை, முதலில் தெரிவித்த அளவைவிட சுமார் 50% அளவுக்கு உயர்த்திக்காட்டியது சீன அரசு. முக்கியமான மருத்துவக் கருவிகளுக்காக பல நாடுகள் சீனாவையே சார்ந்துள்ளதாலும், தற்போதைய பரவலின்போது என…

    • 0 replies
    • 742 views
  25. நியூயார்க்: 5 ஜி அலைக்கற்றையால் கொரோனா பரவாது என ஐ.நா. விளக்கியுள்ளது. உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை பலி எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு காரணம் 5 ஜி அலைக்கற்றை என பிரிட்டனில் கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி பரவியதால் மக்கள் 5 ஜி கோபுரத்திற்கு தீ வைத்தனர். இந்நிலையில் ஐ.நா.,வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில், அதிவிரைவு இணையதள தொழில்நுட்பமான '5 ஜி' அலைக்கற்றையால், கொரோனா வைரஸ் பரவாது 'இது வெறும் புரளி தான்; அதற்கு எந்தத்தொழில்நுட்ப ஆதாரமும் இல்லை' என, ஐ.நா., கூறியுள்ளது. https://www.dinamalar.com/news_detail.asp?id=2526939

    • 0 replies
    • 298 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.