Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பாலியல் வல்லுறவு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீனுக்கு 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நியூ யார்க்கில் கடந்த மாதம் இது தொடர்பாக நடந்த வழக்கு விசாரணையில் ஹார்வி வைன்ஸ்டீன் குற்றம் செய்ததாக அறிவிக்கப்பட்டார். 67 வயதான ஹார்வி புதன்கிழமையன்று நீதிமன்றத்துக்கு சக்கர நாற்காலியில் தான் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தீர்ப்பில் கனிவான போக்கை கையாள வேண்டும் என்று கோரிக்கை விடுத்த ஹார்வியின் வழக்கறிஞர்கள், அவருக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டாலே, அது அவருக்கு ''ஆயுள் தண்டனை போலதான்'' என்று குறிப்பிட்டனர். ஆனால், இதற்கு எதிராக வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர்கள், 'நீண்ட காலமாக பெண்களிடம் தவ…

    • 1 reply
    • 374 views
  2. ரஷ்ய ஜனாதிபதியாக 2036ஆம் ஆண்டு வரையில் தான் பதயிலிருப்பதை அனுமதிக்கும் அரசமைப்பு மாற்றங்களுக்கான கதவை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நேற்று திறந்துள்ளார். எனினும், அரசியல் ரீதியாக ரஷ்யா முதிர்ச்சியடைந்த பின்னர் ஜனாதிபதி பதவிக்கால எல்லைகளைத் தான் விரும்புவதாக ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் குறிப்பிட்டுள்ளார். தனது இரண்டாவது தொடர்ச்சியானதும், நான்காவதுமான பதவிக் காலம் முடிவடையும்போது அரசமைப்பின்படி எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பதவி விலக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. எவ்வாறெனினும், தனது பதவிக்காலத்தை உத்தியோகபூர்வமாக பூச்சியமாக்கும் முன்மொழியப்பட்ட அரசமைப்பின் மாற்றத்துக்கு நாடாளுமன்றத்தின் கீழ்ச்சபையில் உரையாற்றும்போது தனது ஆதரவ…

  3. கொரோனா வைரஸ் ஒரு தீவிர தொற்றுநோய் : உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு கொரோனா வைரஸ் ஒரு தீவிர தொற்றுநோய் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் சீனாவுக்கு வெளியே உள்ள நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டொக்ரர் ரெட்ரோஸ் அடனோம் கெப்ரியசுஸ் (Dr Tedros Adhanom Ghebreyesus) தெரிவித்துள்ளார். ஒரு தீவிர தொற்றுநோய் என்பது ஒரே நேரத்தில் உலகெங்கிலும் பல நாடுகளில் பரவி வரும் ஒரு நோயாகும். வைரஸ் குறித்த எச்சரிக்கையற்ற செயற்பாட்டினால் தான் ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எனவே அவசர மற்றும் கடுமையான நடவடிக்கை எடுத்து வைரஸ் பரவுவதன் போக்கை மாற்றுமாற…

  4. 1,500 தலிபான் கைதிகளை சிறையிலிருந்து விடுவிக்க ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி உத்தரவு! ஆப்கானிஸ்தானில் 18 ஆண்டுகால நடைபெற்றுவரும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு கிளர்ச்சிக் குழுக்களுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு வழி வகுக்கும் வகையில் எதிர்வரும் நாட்களில் 1,500 தலிபான் கைதிகளை விடுவிக்க ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப்கானி உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறு விடுவிக்கப்படும் அனைத்து தலிபான் கைதிகளும் "போர்க்களத்திற்கு திரும்பக்கூடாது என்பதற்கு எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை" வழங்க வேண்டும் என்று ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப்கானி தெரிவித்துள்ளார். கைதிகள் எவ்வாறு சட்ட ரீதியான முறையில் விடுவிக்கப்படுவார்கள் என்பது …

  5. கொரோனா வைரஸ் அச்சம் காரணமான அரச குடும்ப ஆண்டு விழாவான காமன்வெல்த் நிகழ்வில் கைகுலுக்குவது தவிர்க்கப்பட்டதுடன் இளவரசர் சார்லஸ் கை கூப்பி வணக்கம் தெரிவித்துள்ளார். திங்களன்று காமன்வெல்த் நிகழ்வில் அரச குடும்ப உறுப்பினர்கள் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் கூடினர். ஆனால் அவர்கள் பிரமுகர்களை வாழ்த்தும்போது வழக்கமான ஹேண்ட்ஷேக்குகளுக்கு பதிலாக, இளவரசர் சார்லஸ் தனது கைகளை கூப்பி"வணக்கம்" தெரிவித்தார். இதனிடையே குறித்த நிகழ்வுக்கு வருகை தந்த மேகன் மார்க்ல், இளவரசர் ஹாரி, கேட் மிடில்டன் மற்றும் இளவரசர் வில்லியம் உட்பட ஏனைய அரச குடும்ப உறுப்பினர்கள், சக பங்கேற்பாளர்களுடன் கை குலுக்குவதைத் தவிர்த்துள்ளனர். இந்நிலையில், 93 வயதான பிரித்தானி மகாராணி, இரண்டாம் எலிசபெத், எதிர்வரும்…

    • 0 replies
    • 302 views
  6. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில் முன்னிலை பெற்றுள்ள ஜோ பிடன், ட்ரம்பை வீழ்த்த ஒன்றிணைந்து செயல்படுவோம் என சக போட்டியாளர் பெர்ணி சாண்டர்சுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் களமிறங்கும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்பை எதிர்த்து களம் காணும், ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கு பலமுனை போட்டி நிலவியது. இதையடுத்து ஜனநாயகக் கட்சி வேட்பாளரை தேர்வு செய்யவே அங்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. அதில் பெருவாரியான இடங்களில் அபார வெற்றி பெற்றுள்ள முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், இறுதியாக மிச்சிகன் மாநில தேர்தல் முடிவிலும் வெற்றி வாகை சூடியுள்ளார். இதையடுத்து பிலதெல்பியாவில் தனது ஆதரவாளர்களிடையே உரையாற்…

    • 1 reply
    • 253 views
  7. ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 300ஐ நெருங்குகிறது. ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அமெரிக்காவைப் பொறுத்தவரை கொரோனாவின் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. இணையதளத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிகளைக் கவனித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளது. நியூயார்க் நகரில் உள்ள ஐநா சபைக்கு பொதுமக்கள் வருகைக்கு தடை விதிக்கப்ப…

    • 0 replies
    • 327 views
  8. உலகை ஆக்கிரமித்துள்ள கொரோனா – சீனாவைத் தொடர்ந்து இத்தாலியில் அதிகரிக்கும் உயிரிழப்புக்கள் உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியிலேயே அதிகமாகப் பதிவாகியுள்ளது. அதற்கமைய இந்த வைரஸ் காரணமாக இத்தாலியில் இதுவரை 463 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 ஆயிரத்து 172 பேருக்கு வைரஸ் பரவியிருப்பது உறுதியாகியுள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகின் 80க்கும் அதிகமான நாடுகளில் பரவி பெரும் உயிரிழப்புக்களை ஏற்படுத்தி வருகிறது. சர்வதேசத்தின் பல நாடுகளை கொரோனா வைரஸ் ஆக்கிரமித்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 800க்கும்…

    • 3 replies
    • 424 views
  9. கோரத்தாண்டமாடும் கொரோனா – உலகளவில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தென்கொரியாவில் 54 பேரும், பிரான்சில் 33 பேரும், ஜப்பானில் 16 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா பரவல் குறித்த அச்சம் மக்களிடையே உச்ச நிலையை அடைந்துள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் பரவி 4 ஆயிரத்துக்கும் அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. இந்நிலையில், தென்கொரியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 7 ஆயிரத்து 513 பேர் வைரச…

  10. க்ரீஸ் நாட்டிற்குள் நுழைய முயலும் அகதிகளை ஊக்குவிப்பதை நிறுத்த வேண்டும் என துருக்கி அதிபர் தாயிப் எர்டோகனிடம் ((Tayyip Erdogan)) ஐரோப்பிய ஒன்றியம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த அகதிகள் துருக்கி வழியாக ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான க்ரீஸ் நாட்டினுள் செல்ல முயன்று வருகின்றனர். இதனால் தனது படைகளை பலப்படுத்தியுள்ள க்ரீஸ் அகதிகளை எல்லையிலே தடுத்து நிறுத்தி வெளியேற்றி வருகிறது. இந்நிலையில் பெல்ஜியம் சென்ற அதிபர் தாயிப் எர்டோகன் அங்கு ஐரோப்பிய ஒன்றிய கமிஷன் தலைவர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளார். இதில் சிரியா அரசுக்கு எதிராக துருக்கி நடத்தி வரும் போருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்ததுள்ளார். அதே சமயம் க்ரீஸ் எல்லைப்பகுதியில் நடந்து…

    • 9 replies
    • 1k views
  11. வைத்தியர்களை கோரோனாவின் நெருக்கடிகளில் இருந்து விடுவிக்கும் வகையில் யேர்மனிய மருத்துவக் காப்புறுதி புதிய நடவடிக்கை ஒன்றை யேர்மனியில் நடைமுறைப் படுத்தியிருக்கிறது. இந்த நடைமுறையின் பிரகாரம் நோயாளர், காய்ச்சல், இருமல் போன்ற சாதாரண நோய்களுக்கு மருத்துவரிடம் நேரடியாகச் செல்ல வேண்டிய தேவையில்லை. வைத்தியருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது நிலைமையைத் தெரியப்படுத்தினால் போதும். நோயாளரின் நிலைக்கு ஏற்ப அவருக்கு ஏழு நாட்கள் மருத்துவ விடுப்புக்கு வைத்தியர் பரிந்துரைத்து உறுதிப்படுத்தித் தருவார். நோய்க்கான சான்றிதழ் வாடிக்கையாளரின் விலாசத்திற்கு மருத்துவரால் அனுப்பி வைக்கப்படும். அந்தச் சான்றிதழை நோயாளர் தனது வேலை இடத்துக்கு அஞ்சலில் அனுப்பித் தனது மருத்துவ விடுமுறையைப் பெற…

  12. ஈரான் பாராளுமன்ற உறுப்பினர் கொரோனா வைரசிற்கு பலி ஈரானின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்துள்ளார் என அந்த நாட்டின் செய்திச்சேவையொன்று தெரிவித்துள்ளது. தலைநகர் டெஹ்ரானை சேர்ந்த பட்டமே ரபார் என்ற நாடாளுமன்ற உறுப்பினரே உயிரிழந்துள்ளார். ஈரானில் 124 பேர் வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ள நிலையிலேயே பெண் நாடாளுமன்ற உறுப்பினரின் மரணம் குறித்த செய்தி வெளியாகியுள்ளது. ஈரானின் ஆன்மீக தலைவரிற்கு ஆலோசனை வழங்கும் குழுவின் உறுப்பினர் ஒருவர் மார்ச் இரண்டாம் திகதி கொரோனவைரஸ் காரணமாக உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த உயிரிழப்புகள் ஈரானின் அரசாங்க ஸ்தாபனங்களிற்குள் வைரஸ் பரவிவருவதை வெளிப்படுத்தியுள்ளன. https://www.virakes…

  13. பிரித்தானியாவும் அடுத்த சில வாரங்களில் இத்தாலி போன்று முழுமையாக இழுத்து மூடப்படவேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பிரித்தானியா தற்போது வட இத்தாலியின் நிலையில் உள்ளது என தெரிவித்துள்ள பேராசிரியர் பிரான்கொய்ஸ் பலொக்ஸ் குறிப்பிட்டுள்ளார். வட இத்தாலியின் நிலைமை பிரிட்டனின் நிலைமையை விட மோசமாக உள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் இத்தாலி முற்றாக முடங்கியுள்ள நிலை போன்று பிரித்தானியாவிலும் உருவாகலாம் என தெரிவித்துள்ளார். இதேவேளை பிரித்தானியாவின் அரச வைத்தியர் ஒருவர் ஆயிரக்கணக்கான மக்கள் வைரசிஸ் தொற்றிற்கு உள்ளாகலாம் என தெரிவித்துள்ளார். எழுத்தாளரும் மருத்துவருமான அடம் கே இரண்டு வாரங்களில் பிரித்தானியா இத்தாலியின் நிலையை…

    • 0 replies
    • 407 views
  14. பிரான்ஸ் நாட்டின் கலாசார அமைச்சர் ஃபிராங்க் ரைஸ்டர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சி.என்.என். செய்திச் சேவை தெரிவித்துள்ளது. 46 வயதான ஃபிராங்க் ரைஸ்டருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. இதன் பின்னர் அவர் அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார். திங்கட்கிழமை மாத்திரம் பிரான்ஸில் 286 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது. இதன் மூலம் பிரான்ஸில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானத 1,412 ஆக உயர்வடைந்துள்ளதாக அந் நாட்டு பொது சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது. அது மாத்திரமல்லாது 30 பேர் உயிரிழப்புகளும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. h…

    • 0 replies
    • 388 views
  15. கொரோனா வைரஸ் நோய் குணமாகும் என்ற வதந்தியை நம்பி ஈரானில், மதுபானம் பருகிய 27 பேர் பரிதாபமாக பலியாகிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதென அந்நாட்டு அரச செய்தி நிறுவனம் ஐஆர்என்ஏ உறுதி செய்துள்ளது. ஈரானின் தென்மேற்கு மாகாணமான குஜெஸ்தானில் இருபது பேரும், அல்போர்ஸின் வடக்கு பிராந்தியத்தில் ஏழு பேரும் மதுபானத்தை (பூட்லெக் அல்ககோல்) பருகியதால் இறந்துள்ளனர் என்று ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது. குஜெஸ்தானின் தலைநகரான அஹ்வாஸில் உள்ள ஜுண்டிஷாபூர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் அலி எஹ்சான்பூர் இதுபற்றி கூறுகையில், அல்ககோலை குடித்து 218 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். "மதுபானம் அருந்துவது கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்…

    • 0 replies
    • 350 views
  16. ஆப்கானில் இரண்டு ஜனாதிபதிகள் பதவியேற்பு: மீண்டும் உள்நாட்டு போர் உருவாகும் அபாயம்! by : Anojkiyan ஆப்கானிஸ்தானில் ஒரே நேரத்தில் இரண்டு பேர் ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டுள்ளதால், அங்கு மீண்டும் உள்நாட்டுப் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீண்ட இழுபறிக்கு பின்னர் இரண்டாவது முறையாக தேர்தலில் வெற்றி பெற்ற அஷ்ரப் கானி, நேற்று (திங்கட்கிழமை) ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். அந்நாட்டு அரசின் உயரதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு தூதர்கள் முன்னிலையில் அவர் பதவியேற்றுக் கொண்டார். இதேபோல, அஷ்ரப் கானியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை தழுவிய வேட்பாளரான அப்துல்லா அப்துல்லாவும் காபுல் நகரில் தனது ஆதரவாளர்க…

  17. சோமாலியாவில் நடத்தப்பட்ட விமான தாக்குதலில் அல்-ஷபாபின் மூத்த தளபதி உயிரிழப்பு! by : Anojkiyan சோமாலியாவில் நடத்தப்பட்ட விமான தாக்குதலில் இஸ்லாமிய போராளிகள் இயக்கமான அல்-ஷபாபின் மூத்த தளபதி பஷீர் மொஹமட் கோர்காப் உயிரிழந்துள்ளார். கடந்த பெப்ரவரி 22ஆம் திகதி தெற்கு சோமாலிய நகரமான சாகோவில் சோமாலியா – அமெரிக்காவின் கூட்டு இராணுவ நடவடிக்கையில் பஷீர் மொஹமட் கோர்காப் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க தரப்பில் எவ்வி தகவலும் தெரிவிக்கப்படாத நிலையில், கோர்காபின் மரணத்தை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும், இந்த தாக்குதல் சம்பவம் குறித்த தகவல் வெளியாவதற்கு ஏற்பட்ட …

    • 0 replies
    • 286 views
  18. வைரஸ் எதிரொலி- இத்தாலியின் பல சிறைகளில் வன்முறை – விடுதலை செய்யுமாறு கைதிகள் ஆர்ப்பாட்டம் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்hக இத்தாலி அறிவித்தள்ள நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற வன்முறைகள் காரணமாக ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிறைக்கைதிகளிற்கு வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக அவர்களை பார்வையிடுபவர்களிற்கு அதிகாரிகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதை தொடர்ந்தே சிறைச்சாலைகளில் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. மொடெனா என்ற பகுதியில் உள்ள சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் மெத்தைகளிற்கு தீ மூட்டியதுடன்,சிறைச்சாலையின் மருந்தகத்திற்குள் நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த மருந்துகளை அளவுக்கதிகமாக பயன்படுத்தியதில் ஆறுபேர் உயிரிழந்துள்ள…

  19. சீனாவில் கொரானா வைரசால் பாதிக்கப்பட்ட 100 வயது முதியவர், சிகிச்சைக்குப் பிறகு முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். பிப்ரவரி 24 ஆம் தேதி ஹூபே நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த முதியவருக்கு கொரானா தாக்குதல் தவிர, அல்சைமர் நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய பிரச்சினைகள் போன்றவையும் இருந்துள்ளன. தொடர்ந்து 13 நாட்களாக வைரஸ் எதிர்ப்பு மருந்துகள், பிளாஸ்மா மாற்றங்கள் மற்றும் பாரம்பரிய சீன மருத்துவம் போன்றவற்றால் கண்காணிக்கப்பட்ட அவர் கடந்த சனிக்கிழமை அன்று முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதனால் கொரானா வைரசை வென்ற அதிக வயதானவர் என குறிப்பிட்டு அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.polimernews.com/dnews/103045/கொரான…

  20. மூன்று மாத கால இடைவெளியைத் தொடர்ந்து வடகொரியா ஏவுகணைச் சோதனைகளை ஆரம்பித்த ஒரு வாரத்துக்குப் பிறகு, இடம்பெற்றுக்கொண்டிருக்கும் ஏவல் ஒத்திகைகளின் அங்கமாக பல குறுந்தூர எறிபொருள்களை கடலுக்குள் இன்று வடகொரியா ஏவியுள்ளதாக தென்கொரியாவின் இராணுவம் தெரிவித்துள்ளது. பல்லூடக றொக்கெட் ஏவும் அமைப்பொன்றிலிருந்து ஏவப்பட்ட ஆட்லறி உள்ளடங்கலான எறிபொருள்கள் 200 கிலோ மீற்றர் வரை சென்றதாகவும், 50 கிலோ மீற்றர் உயரத்தை அடைந்ததாக தென்கொரியாவின் பணியாட் தொகுதியின் தலைவர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. கடந்தாண்டு வடகொரியா ஏவுகணைகளை ஏவிய இராணுவ விமானத்தளமொன்றைக் கொண்ட கிழக்கு கரையோர நகரமான சொன்டொக்கிலிருந்தே குறித்த எறிபொருள்கள் ஏவப்பட்டதாக அறிக்கையொன்றில் தென்கொரியாவின் பணியாட் தொகுதிய…

  21. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் தீவிர நடவடிக்கையாக மூடப்பட்டிருந்த மக்கா பெரிய பள்ளிவாசலின் புனித கஃபாவை சூழவுள்ள பகுதி கடந்த சனிக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது. புனித கஃபாவை ஏழு தடவைகள் சுற்றிவரும் ஆண்டு முழுவதும் மேற்கொள்ள முடியுமான உம்ரா வழிபாட்டை சவூதி நிர்வாகம் கடந்த வாரம் இடைநிறுத்தியதோடு கஃபாவை சுற்றியுள்ள பகுதியும் தற்காலிகமாக மூடப்பட்டது. இந்நிலையில் உம்ரா அல்லாத வழிபாட்டுக்காக கஃபாவை வலம்வரும் பகுதியை திறப்பதற்கு மன்னர் சல்மான் சனிக்கிழமை ஒப்புதல் அளித்ததாக சவூதி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கஃபாவை வலம் வருவதை காணமுடிந்தபோதும் உம்ரா வழிபாட்டை பூர்த்தி செய்வதற்கான கஃபாவை நெருங்கிய பக…

    • 0 replies
    • 364 views
  22. கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை சடுதியாக உயர்வு: இத்தாலியில் அதிதீவிரம், சீனாவில் குறைவு உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா ரைவஸின் பாதிப்புக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 827ஆக அதிகரித்துள்ள நிலையில் சீனாவில் நோயின் தாக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி 3 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் உலகம் முழுவதும் அதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 827 ஆக உயர்ந்துள்ளது. ஒரு இலட்சத்து 9 ஆயிரத்து 976 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6 ஆயிரத்து 129 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சீனாவில் நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கில் உயிரிழப்பு ஏற்பட்டு வந்தநிலையில் தற்போது நோயின் தாக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது. நேற்றைய க…

    • 1 reply
    • 344 views
  23. கொரோனா வைரஸ் தொற்றால் உலக நாடுகள் நடுங்கி வரும் வேளையில், இந்த உயிர்கொல்லியால் பலியானவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா என்னும் கொடூரனை உலகம் முழுவதும் பரப்பியதாக கூறப்படும் குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது. வூகானில் இருந்து தான் சீனாவின் பல பகுதிகளுக்கும் மற்ற உலக நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியது. இதுவரை கொரோனாவிற்கு 3800-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா சீனாவிலிருந்து உருவானது. வூகான் விலங்கு சந்தையில் விற்கப்பட்ட வௌவால் காரணமாக தான் இது தோன்றியது. இதற்கு முக்கிய காரணம் சீனர்களின் வித்தியாசமான உணவு பழக்கவழக்கங்களே என்ற குற்றச்சாட்டு உலக மக்களால் பரவலாக முன் வைக்கப்பட்டது. ஆன…

    • 3 replies
    • 634 views
  24. கொரானா வைரஸ் உச்சம்: ஈரானில் உயிரிழப்பு அதீத அதிகரிப்பு- எல்லையை மூடியது ஈராக் உலகை அட்டிப்படைக்கும் கொரோனா வைரஸால் ஈரானில் மாத்திரம் 194 பேர் இதுவரை இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இப்போது 6,566 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஈரான் நாட்டுடனான எல்லையை ஈராக் அரசு மூடியுள்ளது. வைரஸ் தோன்றிய சீனாவுக்கு வெளியே நோயால் இறந்தவர்களில் அதிக எண்ணிக்கையில் ஈரான் உள்ளது. ஈரானியர்களின் அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் கியானுஷ் ஜஹான்பூரால், அனைத்து பெரிய கூட்டங்களையும் தவிர்த்து வீட்டில் இருக்குமாறு அறிவிறுத்தியுள்ளார். மேலும், ஐரோப்பிய நாடுகளுக்கான அனைத்து விமான சேவைகளையும் ஈரான் எயார் நிறுவனம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. இ…

  25. எம்.எச். 370 என்ற மலேசிய ஏயர்லைன்ஸ் விமானம் மாயமாகி இன்றுடன் ஆறு வருடங்கள் ஆகியுள்ளன. இந் நிலையில் விமானத்தில் பயணித்த 239 நபர்களின் உறவினர்கள் காணாமல்போன விமானத்தை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 2014 ஆம் ஆண்டு மார்ச் 08 ஆம் திகதி மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து பீஜிங்கிற்கு செல்லும் வழியில் எம்.எச். 370 என்ற மலேசிய விமானம் மயமாகி போனது. இதன் பின்னர் சர்வதேச நாடுகளுடன் இணைந்து மலேசிய அரசாங்கம் விமானத்தை தேடும் நடவடிக்கைகளை முன்னெடுத்தருந்த நிலையில் எந்த தடையங்களும் கிடைக்காதமையினால் தேடல் நடவடிக்கையானது 2018 ஆம் ஆண்டில் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது வரை குறித்த விமானத்தின் மாயமானது உல…

    • 1 reply
    • 470 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.