உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26865 topics in this forum
-
கொரோனா வைரஸ்: சீனாவை விஞ்சிய அமெரிக்கா - புதிய உச்சத்தை தொட்ட உயிரிழப்பு; மற்ற நாடுகளில் நடப்பது என்ன? Coronavirus World update Getty Images 85,000க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகளுடன் உலகிலேயே கொரோனா வைரஸால் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய தரவின்படி, கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனா (81,782), இந்த தொற்றால் பேரழிவை சந்தித்து வரும் இத்தாலி (80,589) உள்ளிட்ட நாடுகளை விஞ்சிய அமெரிக்காவில் இதுவரை 85,653 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனினும், உயிரிழப்புகளை பொறுத்தவரை, அமெரிக்காவை (1200) விட இத்தாலி (8,215), ஸ்பெயின் (4,365) மற்றும் சீனாவில்…
-
- 3 replies
- 628 views
-
-
கொரோனாவை கட்டுப்படுத்த அமெரிக்க பல்கலைக்கழகத்தால் மருந்து பரிந்துரை! by : Litharsan கொவிட்-19 நோய்க்கு இரத்தம் கட்டுவதை நீக்கும் மருந்துகள் பயன்படலாம் என்று கருதப்படுகிறது. இதன்பொருட்டு அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ஆய்வுகளில் மாரடைப்பு போன்றவற்றில் பயன்படுத்தப்டும் Tissue Plasminogen Activator என்ற மருந்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள சில மருத்துவனைகள் இந்த மருந்தின் தாக்கம் எத்தகையது என்று ஆய்வுசெய்து வருகின்றன. இரத்தம் கட்டுவதைத் தடுக்கும் இத்தகைய மருந்து கோவிட்-19 நோய்க்கு எதிராகப் பயன்படலாம் என்று அண்மையில் ஆய்வேடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உடல் உறுப்புகள்…
-
- 0 replies
- 449 views
-
-
அமெரிக்காவில் மிசௌரி மாகாணத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஒன்றை தாக்குவதற்காக திட்டமிட்டதாக சந்தேக நபர் ஒருவர், அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எஃப்.பி.ஐ-யுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டார். பெல்டன் நகரில் 36 வயதான டிமோத்தி ஆர் வில்சன் எனும் நபர் ஒருவரை உள்நாட்டு தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்ய முயற்சித்தபோது இந்த துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது என எஃப்.பி.ஐ தெரிவித்துள்ளது. அந்த நபர் இனவெறி மற்றும் அரசுக்கு எதிரான கொள்கைகளால் ஊக்குவிக்கப்பட்டுள்ளார் என அதிகாரிகாரிகள் கூறியுள்ளனர். அவர் மருத்துவமையை தாக்குவதாக திட்டமிடும் முன் பல இலக்குகளைத் தாக்க குறி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. …
-
- 0 replies
- 364 views
-
-
(நா.தனுஜா) மக்களின் நடமாட்டத்தை முழுவதுமாகக் கட்டுப்படுத்தி, தமது நகரங்களை மூடியிருக்கும் அனைத்து நாடுகளும் இத்தருணத்தை வைரஸை தாக்கி, தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் ரெட்றோஸ் அதானொம் கேப்றியேஸிஸ் அறிவுறுத்தியிருக்கிறார். அதற்கான ஆறு பிரதான வழிமுறைகளையும் அவர் பட்டியலிட்டிருக்கிறார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் உலகளாவிய ரீதியில் பாரிய அச்சுறுத்தல் நிலையைத் தோற்றுவித்திருக்கிறது. இது உலகின் பல பாகங்களிலும் சுகாதார ரீதியில் மாத்திரமன்றி மக்களின் அன்றாட வாழ்க்கை நிலையிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் இவ்வருடம் டோ…
-
- 2 replies
- 473 views
-
-
சீனாவில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் முக்கிய சுற்றுலாத்தலங்கள் அனைத்தும், மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டு வருகின்றன. பிங்காயோ பண்டைய நகரம், புத்தர்களின் புனித தலமாக கருதப்படும் வுடாய் மலை, உலகின் எட்டாவது அதிசயம் என்று புகழப்படும் முதல் கின் பேரரசரின் கல்லறை, பாண்டா ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் கடுமையான நோய் தடுப்பு கட்டுப்பாடுகளுடன் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் டிக்கெட்டுகள் பெற வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்றி வரிசையாக செல்ல வேண்டும், பாதுகாப்பு கவசங்கள்அணிந்திருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ளது. https://www.polimernews.com/dnews/104986/சீனா…
-
- 0 replies
- 500 views
-
-
கொரோனா வைரஸ்: தனிமைப்படுத்திக் கொண்ட ஜஸ்டின் ட்ரூடோ, மூடப்பட்ட எல்லைகள் - கனடாவின் நிலை Getty Images குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியுரிமை பெற்றவர்களைத் தவிர மற்ற வெளிநாட்டு மக்கள் கனடாவுக்குள் நுழைய முடியாது என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஆனால் அமெரிக்கக் குடிமக்கள் இதில் விதிவிலக்காகக் கருதப்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் விமான நிறுவனங்கள், கொரோனா அறிகுறிகள் உள்ள பயணிகளைக் கனடாவுக்குச் செல்லும் விமானங்களுக்குள் அனுமதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கனடாவின் நிலை மாண்ட்ரியல், டொரோண்டோ, கல்கரி மற்றும் வான்கூவர் ஆகிய நான்கு சர்வதேச விமான நிலையங்களில் வரும் புதன்கிழமை நாளை முதல்…
-
- 11 replies
- 1.8k views
-
-
about 4 hours ago1.4kViews கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் பழகியவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கும் வைரஸ் தொற்றியுள்ளதா என்பதை கண்டறிய உம் சலால் அலியில் 32 கட்டிடங்களில் 18000 கட்டில்களுக்கான வசதியுடன் கொரோனா தனிமைப்படுத்தும் நிலைய நிர்மாண வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இவ் வேலைகள் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் முடிவடைந்து கொரோனா தனிமைப்படுத்தலுக்காக பாவனைக்கு விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேவையான பாதுகாப்பு, மருத்துவ வசதிகள், பொழுதுபோக்கு இன்னும் பல வசதிகள் செய்யப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 479 views
-
-
கொரொனா கடும் பிடி: ஐரோப்பிய நாடுகளில் ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் மேல் உயிரிழப்பு: by : Litharsan உலகம் முழுவதும் தீவிரமாக ஆதிக்கம் செலுத்திவரும் கொரோனா வைரஸ் இதுவரை 21ஆயிரத்து 295 பேரின் உயிரைப் பறித்துள்ளது. நேற்று இரவு வரையான காலப்பகுதியில் 4 இலட்சத்து 71ஆயிரத்து 417 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ள நிலையில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 48 ஆயிரத்து 440 பேர் புதிய நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் ஒரேநாளில் நேற்று மட்டும் 2 ஆயிரத்து 388 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதுடன் இதுவரை ஒரு இலட்சத்து 14ஆயிரத்து 642பேர் தொற்றிலிருந்து குணமாகி வெளியேறியுள்ளனர். இதனிடையே கடந்த இரண…
-
- 0 replies
- 504 views
-
-
கொரோனா வைரஸ் : பிரித்தானிய ராஜதந்திரி ஹங்கேரியில் உயிரிழந்தார் கொரோனா வைரஸ் நோயினால் பிரித்தானியாவின் சிரேஸ்ர ராஜதந்திரி ஒருவர் ஹங்கேரியில் உயிரிழந்துள்ளார். புடாபெஸ்ற்-இல் (Budapest) உள்ள பிரித்தானியத் தூதரகத்தின் துணைத் தலைவரான ஸ்டீவன் டிக் (Steven Dick) நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். 37 வயதான ஸ்டீவன் டிக்கின் உயிரிழப்பினால் தூதரக ஊழியர்கள் மிகுந்த மனவருத்தத்தில் உள்ளனர் என்று பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் அவர் தனது தாய்நாட்டினை பிரதிநிதித்துவப்படுத்தி சிறப்பாகச் செயற்பட்டார் என்று அவரது பெற்றோர் தெரிவித்தனர். ஸ்டீவன் எமது அன்புக்குரிய மகன், பேரன் மற்றும் மருமகன் என்று அவரது பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர். …
-
- 0 replies
- 294 views
-
-
உலக மக்கள்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் முடக்கப்பட்டுள்ளனர் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுகின்ற நிலையில் உலக மக்கள்தொகையில் நான்கில் ஒருபகுதியினர் வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ளனர். Covid-19 தொற்றுநோய்க்கு மத்தியில் பல நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டு பயணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஏறக்குறைய 2 பில்லியன் மக்கள் கொரோனா வைரஸ் அச்சத்தினால் முடக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவின் 1.3 பில்லியன் மக்கள் மூன்று வாரங்களுக்கு வீடுகளுக்குள்ளே முடக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயினில் இறப்பு எண்ணிக்கை நேற்று செவ்வாயன்று 3,434 ஐ எட்டியதன் மூலம் உயிரிழப்பு எண்ணிக்கையில் உலகின் இரண்டாவது பாதிப்புமிக்க நாடாக மாறியுள்ளது. மிகவும் பாதிக்கப்பட்டுள…
-
- 0 replies
- 221 views
-
-
-
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ரஷியாவில் மட்டும் கட்டுக்குள் வந்தது எப்படி என்பது குறித்து பார்க்கலாம். கோப்பு படம் “அட.. இதெப்படி இவர்களுக்கு மட்டும் சாத்தியமாயிற்று?” - இப்படித்தான் உலக நாடுகளையெல்லாம் இன்றைக்கு அண்ணாந்து பார்க்க வைத்திருக்கிறது புதின் ஆளுகிற ரஷியா. உலக நாடுகளில் எல்லாம் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களை மிக குறைவான எண்ணிக்கையில் கொண்ட நாடு என முதலாவது இடத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பது ஐக்கிய அரபு அமீரகம். இரண்டாவது இடத்தில் இருப்பது ரஷியா.ரஷியா, இப்படி இரண்டாவது இடத்தில் இருப்பது ஆச்சரியப்பட வைப்பதற்கு அர்த்தமுள்ள காரணங்கள் பல உ…
-
- 17 replies
- 1.9k views
-
-
மோசமான கட்டத்தில் இத்தாலி, ஸ்பெயின்: உலகம் முழுவதும் ஒரேநாளில் 2000இற்கும் மேல் உயிரிழப்பு! உலகம் முழுவுதும் தீவிரமாகப் பரவிவரும் கொரோனா வைரஸால் கடந்த 24 மணிநேரத்தில் அதிகளவான உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இந்த வைரஸால் இதுவரை 4 இலட்சத்து 22 ஆயிரத்து 829 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 18,907 பேரை வைரஸ் மாய்த்துள்ளது. இதில் இத்தாலி ஏற்கனவே பெடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஸ்பெயினிலும் தற்போது நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இத்தாலியில் கடந்த 24 மணித்தியாலத்தில் 743பேர் உயிரிழந்துள்ளதுடன் 5,249 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அங்கு மொத்தமாக 69 ஆயிரத்து 176 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் உயிர…
-
- 1 reply
- 315 views
-
-
அமெரிக்காவில் கொரோனா வைரசினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அடுத்த மூன்று வாரங்களில் உச்சநிலையை எட்டலாம் என அமெரிக்காவின் பிரபல தொற்றுநோயியல் நிபுணர் எச்சரித்துள்ளார். அமெரிக்காவில் அடுத்த மூன்று வாரங்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை உச்சநிலையை அடையும் அந்த காலப்பகுதிக்குள் அனேகமான பாதிப்புகள் இடம்பெற்றிருக்கும் என அமெரிக்காவின் பிரபல தொற்றுநோயியல் நிபுணர் ஐரா லொங்கினி தெரிவித்துள்ளார். அடுத்த மூன்று வாரங்களில் அமெரிக்காவில் உயிரிழப்பவர்களில் எண்ணிக்கை உயர்நிலையை அடையும் என தெரிவித்துள்ள அவர் இரண்டு மூன்று நாட்களில் இரட்டிப்பாகும் எனவும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வேறு இரு நிபுணர்களும் இந்த கருத்தினை ஏற்றுக்கொண்டுள்ளனர். வன்டெர்பிட் பல்கலைகழகத்தின்…
-
- 0 replies
- 317 views
-
-
நோட்றைன் வெஸ்ற்வாலென் மாநிலத்தில் பண ஒறுப்புத் தண்டனை நடைமுறைக்கு வந்துள்ளது. யேர்மனியில் தற்போது நோட்றைன் வெஸ்ற்வாலென் மாநிலத்தில் கொறொனோ தொடர்பாகப் புதிய சட்டவரைபுகளை மாநில அரசு நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது. பொது வெளியில் இருவருக்கு மேல் கூடுதல், மூதாளர் இல்லங்கள் மருத்துவமனைகளுக்குப் பார்வையாளராகச் செல்லுதல் போன்றவற்றுக்கான பண ஒறுப்புத் தண்டணையாக ஒவ்வொருவருக்கும் 200யூரோவும், சுற்றுலா மற்றும் கிறில் போன்றவற்றை முன்னெடுத்தால் பங்கேற்கும் ஒவ்வொருவருக்கும் 250யூரோவும், விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்தால் 1000 யூரோவும், பங்கேற்றபாளருக்கு 250யூரோவும், வீட்டிலிருந்து 50 மீற்றருக்கு அப்பால் உணவு உண்ணுதல் மற்றும் உணவகத்திற்குபோதல் போன்றவற்றிற்கு 50யூரோவும் எ…
-
- 8 replies
- 689 views
-
-
பதவியில் இல்லாத போதிலும் மக்களிற்கு வழிகாட்டும் ஒபாமா : வைரசினை எதிர்கொள்வது குறித்து சமூக ஊடங்களில் தொடர்ந்து அறிவுரைகள் - ஆலோசனைகள் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக்ஒபாமா தனக்குள்ள பாரிய சமூக ஊடக தளத்தை பயன்படுத்தி கொரோனா வைரஸ் குறித்து பல கருத்துக்களை தெரிவித்து வருவதுடன் முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்கு பல பதிவுகளை வெளியிட்டு வருகின்றார். டிரம்பின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல விடயங்கள் குறித்து மௌனமாகயிருந்த ஒபாமா தற்போது டுவிட்டரில் பல பதிவுகளை வெளியிட்டு வருவதுடன் அவற்றினை முகநூலில் மீள்பதிவு செய்துவருகின்றார். பராக் ஒபாமா பாதுகாப்பு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதுடன் வைரசினை எதிர்த்து போரிடுவதற்கான புதிய நடவடிக்கைகளி;ற்கான காரணங்களையும் தெளிவுபடுத்த…
-
- 0 replies
- 623 views
-
-
நியுயோர்க்கில் கொரோனா வைரஸ் அதிவேகபுகையிரதத்தை விட வேகமாக பரவுகின்றது என தெரிவித்துள்ள ஆளுநர் அன்றூ குயுமோ மருந்துகள் மருத்துவ உபகரணங்களை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். நியுயோர்க் நிலங்கரி சுரங்கத்தில் சிக்குண்டுள்ள கனரி பறவை போல காணப்படுகின்றது,நியுயோர்க் வேகமாக பாதிக்கப்படுகின்றது நியுயோர்க்கில் தற்போது நடப்பது நாளை கலிபோர்னியா இலினொய்சில் நடக்கலாம்,எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார். நாங்கள் எதிர்பார்த்ததை விட உச்சநிலையை விரைவில் அடைந்துவிட்டோம், அது நாங்கள் எதிர்பார்த்ததை விட பெரிதாக காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார் வைரஸ் நெருக்கடியை எதிர்கொள்வதற்காக அமெரிக்க அரசாங்கம் அனுப்புகின்ற உயிர்காக்கும் கருவிகள் போதுமானவையாகயில்லை எனவும் அவர் கு…
-
- 1 reply
- 292 views
-
-
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சீக்கிய குருத்வாராவுக்குள் புகுந்து தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 27 பேர் பலியாகினர். காபூலின் சோர் பஜார் பகுதியிலுள்ள (Shor Bazar area of Kabul) குருத்வாராவில் இன்று காலை 4 பயங்கரவாதிகள் திடீரென புகுந்து தாக்குதல் நடத்தினர். தகவலின்பேரில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினர் விரைந்து வந்து பயங்கரவாதிகளை சுற்றி வளைத்தனர். இதைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. முடிவில் குருத்வாராவுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 4 பேரும் ஆப்கானிஸ்தான் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். எனினும் பயங்கரவாதிகளின் தாக்குதலில் அப்பாவி மக்கள் 27 பேர் பலியாகியுள்ளதாகவும், 8 பேர் காயமடைந்த…
-
- 0 replies
- 331 views
-
-
நியுயோர்க்கின் மருத்துவர்கள் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிற்கு விட்டமின் சி யினை பெருமளவிற்கு வழங்க ஆரம்பித்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அன்றூ வெபர் என்ற மருத்துவர் நான் ஐசியுவில் உள்ள நோயாளிகளிற்கு 1500 மில்லிகிராம் விட்டமின் சியினை வழங்குவதாக தெரிவித்துள்ளார். ஒரு நாளைக்கு மூன்று நான்கு தடவை விட்டமின் சியை வழங்குவதாக அவர் நியுயோர்க் போஸ்டிற்கு மருத்துவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவகம் பரிந்துரை செய்துள்ளதை விட 16 மடங்கு அதிகமாக வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சீனாவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளை அடிப்படையாக வைத்தே விட்டமின் சி யை வழங்குவதாக வெபர் தெரிவித்துள்ளார். விட்டமின் சி வழங்கப்…
-
- 0 replies
- 413 views
-
-
சீனாவில் உருவாகி உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தை எட்டியுள்ளது. 10 ஆயிரம் பேர் கவலைக்கிடமாக உள்ளனர். கோப்பு படம் பிஜிங்: சீனாவில் உருவாகி உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. 192 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரசுக்கு நேற்று ஒரே நாளில் 1,634 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 14,687ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. உலகம் முழுவதும் 3 லட்சத்து 38 ஆயிர…
-
- 0 replies
- 234 views
-
-
நிலக்கீழ் ரெயில் பயணத்தை நிறுத்துங்கள் அல்லது பலர் இறந்துவிடுவார்கள் : லண்டன் மேயர் சாதிக் கான் எச்சரிக்கை நிலக்கீழ் ரெயில் பயணத்தை நிறுத்துங்கள் அல்லது பலர் இறந்துவிடுவார்கள் என்று லண்டன் மேயர் சாதிக் கான் எச்சரித்துள்ளார். பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நேற்றிரவு விடுத்த அவரகாலநிலை அறிவிப்பினையும் மீறி இன்று செவ்வாய்க்கிழமை ஏராளமான பயணிகள் நிலக்கீழ் ரெயில்கள் மூலமாகப் பயணம் செய்துள்ளனர். மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பஸ் மற்றும் ரெயில் போக்குவரத்துச் சேவைகள் முக்கியமான அத்தியாவசியச் சேவைகளில் பணியாற்றுகின்றவர்களுக்காக இயக்கப்படுகின்றன. எனவே அரசாங்கத்தின் உத்தரவுகளை மீறி ரெயில்களில் பயணம் செய்வதை நிறுத்தாவிட்டால் அதிகமான மக்கள் கொரோனா வைரஸால் இறந்துவிடுவார்கள் எ…
-
- 1 reply
- 336 views
-
-
சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிகை ஹான்டா வைரஸ் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ட்விட்டரில் பதிவிடவே, அந்த ட்வீட் வைரலானது. உலக அளவில் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது கொரோனா வைரஸ். சமீபத்திய தரவுகளின்படி உலக அளவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,91,962 ஆக உயர்ந்திருக்கிறது. இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17,138 ஆக இருக்கிறது. அதேநேரம், கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து 1,02,844 பேர் மீண்டிருக்கிறார்கள். இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் இன்று (24.3.2020) மாலை 6 மணி முதல் ஏப்ரல் 1-ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. …
-
- 3 replies
- 835 views
-
-
இத்தாலியை புரட்டிப்போடும் கொரோனா: உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவல் ஒன்று கசிந்தது! இத்தாலியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட தொகையில் இருந்து 10 மடங்கு அதிகமாக இருக்கலாம் என அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி பதிவாகியுள்ளது. அந்நாட்டில் இதுவரை ஏறக்குறைய 64 ஆயிரம் பேர் குறித்த நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல் தெரிவிக்கிறது. அத்துடன் குறித்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று இரவு வரை 6 ஆயிரத்து 77 ஆகக் காணப்படுகிறது. இந்நிலையில், வைரஸ் தொற்று தொடர்பாக தம்மை பரிசீலித்துக்கொள்வதற்காக மட்டுப்…
-
- 0 replies
- 1.7k views
-
-
இத்தாலியில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த பின்னர் உயிரிழந்துள்ள மருத்துவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது என அந்த நாட்டின் மருத்துவர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. கொவிட் 19 நோய் தொற்று காரணமாக உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை துரதிஸ்டவசமாக கவலை தரும் விதத்தில் பெரிதாகி வருகின்றது என மருத்துவர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. தொற்றுநோய்க்குள்ளான சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாள் மாலையிலும் வெளியிடப்படும் அதேவேளை பல மருத்துவர்கள் திடீரென உயிரிழக்கின்றனர் என மருத்துவர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. அவர்களின் மரணத்திற்கான நேரடி காரணமாக வைரசினை சொல்ல முடியாது என மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. உயிரிழந்துள்ள 23 மருத்துவர்களில் 19 பேர் …
-
- 5 replies
- 788 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 700 ஆக உயர்ந்துள்ளது.p அதே போன்று ஒரே நாளில் 139 பேர் அதற்குப் பலியாகி, உயிரிழப்பு 550 ஐ தாண்டியுள்ளது.அமெரிக்காவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தொற்று எண்ணிக்கையும் மரணங்களும் அதிகரித்து வருவதை அடுத்து அத்தியாவசிய மருந்துகள், மாஸ்குகள், சானிடைசர்கள் உள்ளிட்டவை பதுக்கப்படுவதை தடுப்பதற்கான சட்டத்தில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதனிடையே அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் கொரோனாவுக்கு மருத்துவர்களின் பரிந்துரை இன்றி <strong>குளோரோகுயின் மாத்திரைகளை சாப்பிட்ட 60 வயதான தம்பதியரில் கணவர் உயிரிழந்தார்</strong>. அவர…
-
- 3 replies
- 648 views
-