உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26866 topics in this forum
-
ஜெர்மனியின் பிரபல லூப்தான்ஸா விமான நிறுவன ஊழியர்கள் ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், அந்நிறுவனத்தின் 700 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஜெர்மனியின் மிகப்பெரிய விமான நிறுவனமாக திகழும் லூப்தான்ஸா, பல்வேறு நகரங்களுக்கும் விமானங்களை இயக்கி வருகிறது. இந்நிலையில், அந்நிறுவன ஊழியர்கள் 48 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இன்று ஒரே நாளில் 700 விமானங்களை அந்நிறுவனம் ரத்து செய்தது. பிராங்பர்ட் விமான நிலையத்தில் மட்டும் 400 விமானங்களை லூப்தான்ஸா ரத்து செய்தது. முனிச் விமான நிலையத்தில் 250 விமானங்களும், மேலும் சில சிறிய விமான நிலையங்களில் 50 வரையிலான விமானங்களும் லூப்தான்ஸா நிறுவனத்தால் ரத்து ச…
-
- 0 replies
- 811 views
-
-
சவூதி அரேபியாவுக்கு உளவு பார்த்ததாக ட்விட்டர் நிறுவன முன்னாள் ஊழியர்கள் 2 பேர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரபல சமூகவலைதள நிறுவனமான ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் அலி அல்ஜாபாரா, அகமது அபுவாமோ மீதும், சவூதி அரேபியா அரச குடும்ப முன்னாள் ஊழியரான அகமது அல்முதைரி ((Ahmed Almutairi)) மீதும் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் இக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் துருக்கியில் உள்ள சவூதி அரேபியா தூதரகத்தில் முன்பு கொலை செய்யப்பட்ட எழுத்தாளர் கசோக்கி உள்ளிட்டோரின் ட்விட்டர் பக்கங்களை கண்காணித்து, அதிலிருக்கும் தனிப்பட்ட தகவல்களை பணத்துக்கு சவூதி அரேபியா அதிகாரிகளிடம் அளித்ததாக குற்றம்சாட்டப்ப…
-
- 0 replies
- 783 views
-
-
சீனா தங்கள் நாட்டின் மீது போர் தொடுக்கும் வாய்ப்பு இருப்பதாக தைவான் நாடு தெரிவித்துள்ளது. அண்டை நாடான தைவானை, சீனா அங்கீகரிக்காததுடன், அதை தமது பகுதியாக உரிமை கொண்டாடி வருகிறது. அந்நாட்டுடன் எந்தவொரு வெளிநாடும் ராஜ்ஜீய உறவு வைக்கக் கூடாதெனவும் சீனா வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், தைபேயில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தைவான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோசப் வூ ((Joseph Wu )) பேட்டியளித்தார். அதில் அமெரிக்காவுடனான வர்த்தக போரினால் ஏற்படும் பொருளாதார பிரச்னையால் உள்நாட்டில் சந்திக்கும் நெருக்கடிகளில் இருந்து கவனத்தை திசை திருப்ப தைவான் மீது சீனா போர் தொடுக்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார். https://www.polimernews.com/dnews/87828/தைவான்-மீத…
-
- 0 replies
- 584 views
-
-
புதிய ஆடைகளில் விலங்குகளின் உரோமத்திற்கு தடை! தனது புதிய ஆடைகளில் விலங்குகளில் உரோமம் பயன்படுத்துவதற்கு பிரித்தானிய மகாராணி தடை விதித்துள்ளார். விலங்கு நல அமைப்புகளின் கோரிக்கைக்கு அமைய அவர் இவ்வாறு தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுகுறித்து பிரித்தானிய அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரித்தானிய மகாராணிக்காக புதிதாக வடிவமைக்கப்படும் ஆடைகளில் விலங்குகளின் உரோமம் பயன்படுத்தப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், மகாராணியிடம் தற்போது உள்ள விலங்கு உரோமத்தால் ஆன ஆடைகளை அவர் தொடர்ந்தும் அணிவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது நிகழ்ச்சிகளில் மகாராணி அணிந்து வரும் ஆடைகளில் விலங்குகளின் உரோமங்கள் பயன்படுத்தப்படுவதற்கு விலங்கு நல ஆர்…
-
- 0 replies
- 556 views
-
-
Thursday, November 7, 2019 - 6:00am அமெரிக்காவின் மாநிலத் தேர்தல்களில் ஜனநாயகக் கட்சியனர் வெற்றிகளை பெற்றிருப்பது அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. டிரம்பின் குடியரசுக் கட்சியினர் செல்வாக்குச் செலுத்தும் கென்டக்கி ஆளுநர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியில் அன்டி பெஷீர் கடும் போட்டிக்குப் பின் வெற்றியீட்டினார். இதேநேரம் கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக விர்ஜினிய சட்டமன்றம் ஜனநாயக கட்சியினரின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த தேர்தல் முடிவுகள் தீர்க்கமானதாக பார்க்கப்படுக…
-
- 0 replies
- 428 views
-
-
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது எடுக்கப்பட்டுவரும் பதவி நீக்க நடவடிக்கைகள் அடுத்த வாரம் முதல் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று அதை முன்னெடுத்துள்ள, எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். முதல் நேரலை ஒளிபரப்பின்போது மூன்று வெளியுறவு அதிகாரிகள் விசாரிக்கப்படுவார்கள். 2020இல் நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள ஜனநாயக கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஜோ பைடன் மற்றும் அவரது மகன் மீது உக்ரைன் அரசு விசாரணை நடத்த அந்நாட்டு அதிபர் வலாடிமிர் ஜெலென்ஸ்கிக்கு, டிரம்ப் அழுத்தம் தந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. முன்னாள் அமெரிக்க துணை அதிபரான ஜோ பைடன் மற்றும் அவரது மகன் ஹண்டர் ஆகிய இர…
-
- 0 replies
- 414 views
-
-
அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக நடுவிரலை காட்டியதாக அரசு பணியிலிருந்து நீக்கப்பட்ட பெண், லவுடன் (Loudoun) கவுன்டி வாரியத்தின் கண்காணிப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இரு குழந்தைகளுடன் அமெரிக்காவில் வசித்து வரும் ஜூலி பிரிஸ்க்மேன் என்பவர் கடந்த 2017ம் ஆண்டு, சைக்கிள் ஓட்டியபடி சென்றபோது அந்த வழியாக காரில் சென்ற அதிபர் டிரம்புக்கு நடுவிரலை காட்டியதாக கூறப்படுகிறது. இந்த ஆபாச செயல் தொடர்பான புகைப்படம் வலைதளங்களில் வைரலானதை அடுத்து, ஜூலி மார்க்கெட்டிங் துறை நிபுணர் என்ற அரசு பணியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால் ஜனநாயக கட்சி அவருக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தது. அதன்படி விர்ஜீனியா மாநிலத்தில் இந்தாண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டி…
-
- 4 replies
- 1k views
- 1 follower
-
-
வடகிழக்கு சிரியாவில், குர்து கிளர்ச்சியாளர்களுடன் சண்டை இட்டுவரும் துருக்கி ஆதரவுப் படைகள் போர்க்குற்றங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. சமீபத்தில் வெளியாகத் தொடங்கிய கைபேசி காணொளிகளின் உதவியோடு இந்த குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. இத்தகைய செயல்பாடுகளுக்கு துருக்கியே பொறுபாக்கப்படும் என்று ஐ.நா எச்சரித்துள்ள நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தபடும் என்று துருக்கி உறுதியளித்துள்ளது. தாடி வைத்துள்ள ஒரு மனிதர், "அல்லாஹூ அக்பர்" (இறைவனே மேன்மையானவர்) என்று கோஷமிடுகிறார். இந்த செயல்களை கைபேசியில் காணொளியாக எடுக்கும் நபர், குர்து வீர்ரகளின் உடல்கள் உள்ள இடத்தில் நின்று, "நாங்கள் ஃபேலஹ் அல்-மஜித் பெட்டாலியனை சேர்ந்த முஜாஹிதீன் (போர் வீரர்கள்)" என்று கூறுகிறா…
-
- 0 replies
- 618 views
-
-
பிரித்தானிய பாராளுமன்றம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் அதன் கலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அடுத்த 25 நாட்களுக்கு, பிரித்தானிய சட்டமன்ற நடவடிக்கைகள் எதுவும் இருக்காது எனவும் அரசாங்கம் ஒரு சிறப்பு விதிகளின் கீழே செயற்படும் எனவும் அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானிய தேர்தலை எதிர்வரும் டிசம்பர் 12 ஆம் திகதி நடத்துவதற்கான பிரதமர் போரிஸ் ஜோன்ஸனின் திட்டத்திற்கு அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 30 ஆம் திகதி ஆதரவளித்திருந்தனர். தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான மேற்படி சட்டமூலத்திற்கு பிரித்தானிய பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 வாக்குகளுக்கு 438 வாக்க…
-
- 2 replies
- 599 views
-
-
நியூசிலாந்தில் தனது தலைமையிலான அரசு செய்த இரு ஆண்டு சாதனைகளை இரண்டே நிமிடங்களில் விளக்கி கூறி, அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். லேபர் கட்சியின் இளம் தலைவரான ஜெசிந்தா ஆர்டன், நியூசிலாந்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமையுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்நிலையில், 2வது ஆண்டு கொண்டாட்டத்தை ஒட்டி, அவரது இரு ஆண்டு சாதனைகளை இரண்டே நிமிடங்களில் விளக்கிக் கூறும்படி அவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்று வீடியோ பதிவுக்கு தயாரான ஆர்டன், அரசு நியூசிலாந்தில் புதிதாக 92,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கியது, 2,200 அரசு குடியிருப்புகளை கட்டியது, கார்பன் வெளியேற்றத்தை பூஜியமாக்குவது தொடர்பான மசோதா கொண்டு வந்தது, கைதிக…
-
- 2 replies
- 749 views
-
-
787 ட்ரீம்லைனரில் ஒக்ஸிஜன் அமைப்பு மீது சந்தேகங்கள் எழுந்துள்ளன – போயிங்கின் முன்னாள் ஊழியர் போயிங் 787 ட்ரீம்லைனரில் பயணிப்பவர்கள் திடீரென அமுக்க நீக்கத்தை எதிர்கொண்டால் விமானத்தின் உட்பாகத்தில் உயிர் வாயுவான ஒக்ஸிஜன் இல்லாமல் இருக்கக் கூடும் என்று போயிங் நிறுவனத்தின் முன்னாள் பொறியியலாளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜோன் பார்னெட் எனும் முன்னாள் ஊழியர் கூறுகையில், உயிர்வாயுவான ஒக்ஸிஜன் கட்டமைப்பில் கால் பகுதி வரை தவறாக இருக்கலாம் என்றும் தேவைப்படும்போது இயங்காமல் இருக்கலாம் என்றும் சோதனைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டார். குறிப்பிட்ட ஒரு போயிங் தொழிற்சாலையில் உற்பத்தி வரிசையில் உள்ள விமானங்களுக்கு தவறான பாகங்கள் வேண்டுமென்றே பொருத்தப்பட்டிருப்பத…
-
- 0 replies
- 291 views
-
-
ஐ.எஸ். அமைப்பின் தலைவரின் சகோதரி, துருக்கி அதிகாரிகளால் கைது! இஸ்லாம் ராஜ்ஜிய தீவிரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பாக்தாதியின் சகோதரியை துருக்கி அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவரான அபூபக்கர் அல் பாக்தாதி, சிரியாவில் கடந்த மாதம் கொல்லப்பட்டதாக அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். சிரியாவில் இத்லிப் நகருக்கு அருகே பாரிஷா என்ற கிராமத்தில் ஒரு வளாகத்தில் பாக்தாதி, பதுங்கி இருப்பதை புலனாய்வு தகவல் கிடைத்த நிலையில், கடந்த மாதம் 26 ஆம் திகதி அமெரிக்க சிறப்பு படை அந்த பகுதியை சுற்றி வளைத்தது. இந்த நிலையில் தப்பிச் செல்வதற்கு எந்த வாய்ப்பும…
-
- 0 replies
- 415 views
-
-
புதிய தலைவரை நியமித்தது ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு! ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் புதிய தலைவராக அபு இப்ராஹிம் அல் ஹாஸ்மி அல் குரேஷி நியமிக்கப்பட்டுள்ளார். சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த தீவிரவாதிகள் ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தனர். ஈராக்கையும், சிரியாவின் ஒருபகுதி மற்றும் துருக்கியின் ஒருபகுதி ஆகியவற்றை இணைத்து தனி முஸ்லிம் நாட்டை உருவாக்குவதே இவர்களின் திட்டமாக காணப்படுகின்றது. இதன்முதல்கட்டமாக, சில ஆண்டுகளுக்கு முன்னர் சிரியாவின் எல்லையோரம் உள்ள ஈராக்கின் மொசூல் நகரை கைப்பற்றிய இவர்கள் முஸ்லிம் அரசை அமைத்துள்ளதாக அறிவித்தனர். மொசூல் நகரில் ஆட்சிபீடமாக அமைத்து தங்களது அமைப்பின் பெயரை ஐ.எஸ். (இஸ்லாமிக் ஸ்டேட்) எனவும் சுருக்கி…
-
- 2 replies
- 880 views
-
-
மாலியில் இடம்பெற்ற கொடூர தாக்குதலில் 53 இராணுவ வீரர்கள் பலி! மாலியின் வடகிழக்குப் பகுதியில் இராணுவ முகாம்களை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 53 இராணுவ வீரர்கள் உட்பட மொத்தமாக 54 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மாலியில் மேற்கொள்ளப்பட்ட மோசமான தாக்குதல்களில் ஒன்றாக பதிவாகியுள்ள இந்தி சம்பவமானது மேனகா பிராந்தியத்தில், இன்தெலிமான் என்ற இடத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த இராணுவ முகாம்களுக்கு புகுந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டும், தற்கொலை குண்டுகளை வெடிக்கச் செய்தும் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இந் நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்று…
-
- 1 reply
- 577 views
-
-
செய்தியாளர்களை கொலை செய்தவர்களில் 90 சதவீதம் போர் தண்டிக்கப்படவில்லை: யுனெஸ்கோ சர்வதேச அளவில் செய்தியாளர்களை கொலை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் 90 சதவீதம் பேர் தண்டிக்கப்படவில்லை என்று யுனெஸ்கோ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோ வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2006 ஆம் ஆண்டிலிருந்து 2018-ஆம் ஆண்டு வரை உலகம் முழுவதும் பயங்கரவாதம், போர் வன்முறை உள்ளிட்ட சம்பவங்களில் 1,109 செய்தியாளர்கள் கொலை செய்யப்பட்டனர். இவர்கள் கொலையில் சம்பந்தப்பட்டவர்களில் 90 சதவீதமானோர் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படவில்லை. போர் இல்லாத பகுதிகளிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக 55 சதவீத செய்தியாளர்கள் கொலை செய்யப்பட்டனர். அந்தவகையில் அரசியல், குற்றம், ஊழ…
-
- 1 reply
- 328 views
-
-
ஐரோப்பிய நாடுகளை நோக்கி செல்லும் பிரித்தானியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ஐரோப்பிய நாடுகளை நோக்கி செல்லும் பிரித்தானியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜேர்மன் நிறுவனம் ஒன்றினால் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆய்வின் ஊடாகவே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கு பிரித்தானியர்கள் இடம்பெயர்ந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது குறித்த தீர்மானம் கடந்த 2016ஆம் எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்தே பிரித்தானியர்கள் அதிகளவில் ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. 2015ஆம் ஆண்டில் 622 பிரித்தானியர்கள் ஜேர்மன் க…
-
- 1 reply
- 499 views
-
-
அமேசன் காடுகளில் நிலத்துக்காகப் போராடிவந்த இளம் பழங்குடி செயற்பாட்டாளர் சுட்டுக்கொலை November 3, 2019 பிரேசிலில் உள்ள அமேசன் காடுகளில் நிலத்துக்காகப் போராடிவந்த இளம் பழங்குடி செயற்பாட்டாளர் ஒருவர் சட்டவிரோதமாக செயல்படும் மரம் வெட்டும் கும்பலால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். மரான்ஹூ மாகாணத்தில் உள்ள அராரிபோ என்ற பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் பழங்குடி பிரிவைச் சேர்ந்த பௌலோ பௌலினோ குவாஜஜ்ரா வேட்டையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது தாக்குதலுக்கு உள்ளாகி தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் அராரிபோ வனப்பகுதியில் சட்ட விரோதமாக மரம் வெட்டுபவர்களை தடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட கார்டியன்ஸ் ஒப் த பொரஸ்ட் என்…
-
- 0 replies
- 358 views
-
-
குவைத் செல்லும் பணிப்பெண்களிற்கு காத்திருக்கும் புதிய ஆபத்து- அடிமைகளாக சமூக ஊடகங்கள் மூலம் விற்பனை பணிப்பெண்களை சமூக ஊடங்கள் மூலம் அடிமைகளாக விற்க முயன்ற நபர்களை விசாரணைகளிற்கு வருமாறு குவைத் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். பிபிசியின் அராபிய செய்தி பிரிவு பணிப்பெண்கள் அடிமைகளாக சமூக ஊடகங்கள் மூலமாக விற்கப்படுவதை அம்பலப்படுத்திய பின்னரேகுவைத் அதிகாரிகள் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். அடிமை சந்தை குறித்த அப்ஸ் காணப்படுவதாகவும் பிபிசி தெரிவித்துள்ளது. பணிப்பெண்கள் மாற்றம் ,பணிப்பெண்கள் விற்பனைக்கு போன்ற ஹாஸ்டாக்குகள் மூலமாக பணிப்பெண்களை அடிமைகளாக விற்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக பிபிசிதெரிவித்துள்ளது. பிபிசி இதனை அம்பலப்படுத்த…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஐக்கிய அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகவரகத்தால் (சி.ஐ.ஏ) ஆதரவளிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் நடவடிக்கை படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஒதுக்குப்புறமாக கிராமங்களிலுள்ள வீடுகளில் இரவுநேர நடவடிக்கைகள், வலிந்த காணாமல் போதல்கள், சுகாதார வசதிகளின் மீதான தாக்குதல்கள், சட்டத்துக்கு புறம்பான கொலைகள் என்பன போர்க்குற்றங்களாக இருக்கலாம் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட 50 பக்க அறிக்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளில், ஆப்கானிஸ்தானின் ஒன்பது மாகாணங்களில் இடம்பெற்ற 14 சம்பவங்களை மனித உரிமைகள் கண்காணிப்பகம் பதிவு செய்துள்ளது. படைகளின் தடுப்பில் இருக்கும்போதே மக்களை படைகள் சுட்டுக் கொண்டதாகவும், முழுச் சமூகங்களையுமே இரவுநேரத் தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்து…
-
- 0 replies
- 337 views
-
-
அமெரிக்கா நடத்திய தாக்குதலில்: ஐ.எஸ். தலைவர் கொலை! சிரியாவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ.எஸ். தலைவரான அபுபக்கர் அல்-பாக்தாதியை குறிவைத்து சிறப்பு நடவடிக்கை நடத்தியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த நடவடிக்கைக்காக கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு முன்பே அனுமதி வழங்கியிருந்தார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தாக்குதலின் போதே அவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. http://athavannews.com/isis-leader-abu-bakir-albaghdadi-killed-by-us-airstrike/ ################ ############## ################ ############### ஐ.எஸ்…
-
- 18 replies
- 2.7k views
-
-
விமானத்தில் விரிசல் : 50 விமானங்கள் நிறுத்தி வைப்பு - என்ன நடந்தது? 6 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த க்வாண்டாஸ் விமானப் போக்குவரத்து நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்றில் விரிசல் விட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அது பயன்படுத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டு…
-
- 0 replies
- 477 views
- 1 follower
-
-
பாகிஸ்தானில் ஓடும் ரயிலில் தீ விபத்து: 16 பேர் உடல் கருகி பலி பாகிஸ்தானின், லியாகத்ப்பூர் நகருக்கருகே இன்று காலை ஓடும் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தினால் 16 பேர் உடல் கருகி உயிரிழந்ததுடன், மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தானில் கராச்சி - ராவல்பிண்டிக்கு தேஜ்காம் எக்ஸ்பிரஸ் என்ற ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், லியாகத்ப்பூர் அருகே இன்று அதிகாலை வந்தபோது, ஒரு பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வேகமாக பரவிய தீ, அடுத்தடுத்தப் பெட்டிகளுக்கும் பரவியது. இதையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இந்த தீ விபத்தில் 16 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். 13 பேர் படுகாயமடைந்து, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரயில…
-
- 1 reply
- 456 views
-
-
பெல்ஜியத்தில் கொள்கலனிற்குள் 12 பேர் உயிருடன் மீட்பு குளிரூட்டப்பட்ட கொள்கலன் ஒன்றிற்குள் காணப்பட்ட 12 குடியேற்றவாசிகளை உயிருடன் மீட்டுள்ளதாக பெல்ஜியம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பழங்கள் காய்கறிகள் அடங்கிய கொள்கலனிற்குள் 12 குடியேற்றவாசிகள் காணப்பட்டனர் என பெல்ஜியம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பெல்ஜியத்தையும் நெதர்லாந்தையும் இணைக்கும் நெடுஞ்சாலையொன்றில் பயணித்துக்கொண்டிருந்த லொறியொன்றின் கொள்கலனிற்குள் இருந்து 11 சிரிய பிரஜைகளையும் சூடானை சேர்ந்த ஒருவரையும் உயிருடன் மீட்டுள்ளோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போலந்தை சேர்ந்த டிரக்கின் சாரதி கொள்கலன் குறித்து சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து காவல்துறையினருக்கு அறிவித்ததன் காரணமாகவே உள்ளே குடியேற…
-
- 0 replies
- 530 views
-
-
இணையத்தில் வைரலாகும் சூரியனின் ஒளிப்படம்! ஹாலோவின் தினத்தை முன்னிட்டு நாசா வெளியிட்டுள்ள சூரியனின் ஒளிப்படம் வைரல் ஆகிவருகிறது. தீய சக்திகளை விரட்டும் ஹாலோவின் திருவிழா ஒக்டோபர் 31ஆம் திகதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் அயலவர்களை பயமுறுத்தும் விதமாக பூசணிக்காய் உள்ளிட்டவற்றை விளக்குகள் கொண்டு மக்கள் அலங்கரிப்பார்கள். இந்நிலையில், ஹாலோவினுக்கு அலங்கரிக்கப்படும் ஜாக்கோ லேண்டர்ன் வடிவ பூசணிக்காயை போல சூரியன் காட்சியளிக்கும் ஒளிப்படம் ஒன்றை நாசா வெளியிட்டுள்ளது. சூரியனும் கூட ஹாலோவினை கொண்டாட தயாராகிவிட்டது என குறித்த ஒளிப்படம் தொடர்பாக நாசா நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளது. http://athavannews.com/இணையத்தில்-வைரலாகும்-சூர/
-
- 0 replies
- 399 views
-
-
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கவலைக்கிடம்! Published by R. Kalaichelvan on 2019-10-30 12:41:07 பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அவரது வைத்திய வட்டாரம் தெரிவித்துள்ளது. ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உடல்நல குறைவினால் கடந்த சில தினங்களுக்கு முன் பிணை வழங்கப்பட்டதையடுத்து அவர் உடனடியாக வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபிற்கு அல் அஜீசியா இரும்பாலை ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த டிசம்பர் மாதம், லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார். …
-
- 0 replies
- 329 views
-