Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. முஸ்லீம்களை சீற்றப்படுத்தும் விதத்தில் வெளியான முகநூல் பதிவினால் ஏற்பட்ட கலவரத்தினால் பங்களாதேசில் நால்வர் பலியாகியுள்ளனர். முகமது நபியை விமர்சிக்கும் விதத்தில் வெளியான முகநூல் பதிவே கலவரத்தை தூண்டியுள்ளது. இந்த பதிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பங்களாதேசின் போலாமாவட்டத்தில் உள்ள பொர்கானுடின் நகரில் ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கலவரத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் செய்ததில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வதை தவிர எங்களிற்கு வேறு வழியிருக்கவில்லை என காவல்துறையை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த இந்து ஒருவரின் முகநூல் பதிவின் காரணம…

    • 2 replies
    • 555 views
  2. நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நபர் ஒருவர் அம்புலன்சை கடத்தி வீதியில் பயணித்துக்கொண்டிருந்த குடும்பமொன்றின் மீது மோதியதில் இரட்டை குழந்தைகள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து குறிப்பிட்ட வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டு அந்த நபரை கைதுசெய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடத்தப்பட்ட அம்புலன்சினால் குடும்பமொன்றின் மீது நபர் ஒருவர் தாக்கியதில் ஏழு மாத குழந்தைகள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அம்புலன்ஸ் ஒன்று செல்வதையும் அதன் மீது துப்பாக்கிபிரயோகம் இடம்பெறுவதையும் தொலைக்காட்சிகள் காண்பித்துள்ளன. இந்த சம்பவத்தில் இரு அம்புலன்ஸ்கள் தொடர்புபட்டுள்ள ஒரு அம்புலன்சை நபர் ஒருவர் கடத்…

    • 0 replies
    • 374 views
  3. மலேசியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம் – பிரதமர் எச்சரிக்கை! மலேசியா மீது வல்லரசு நாடுகளால் பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம் என்று அந்த நாட்டுப் பிரதமர் மஹாதீர் முகமது எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவுக்கும்-சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போரால் சுய பாதுகாப்பு மற்றும் ஏற்றுமதி சார்ந்த மலேசியப் பொருளாதாரத்தை பாதிக்கும் என்று கோலாலம்பூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கருத்தரங்கில் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், மலேசியா மீது எந்த நாடு வர்த்தகத் தடைகளை விதிக்கும் என்று பிரதமர் குறிப்பிடவில்லை. எனினும், பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக நடைமுறைகளால் தடையற்ற வர்த்தகம் பாதிக்கப்படுவது தமக்கு ஏமாற்றமளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். …

  4. வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலும் தமிழ் மக்களின் நிலைப்பாடும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் வெளிச்சம் நிகழ்ச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடல் இதில் பங்கு பற்றி அவர்கள் அரசியல் ஆய்வாளர்கள் திரு கருணாகரன் திரு யதிந்திரா மற்றும் திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள்

    • 3 replies
    • 821 views
  5. சிரியாவிலிருந்து வீரர்களை விலக்கிக் கொள்ளும் முன், அமெரிக்க படையினர் தங்கள் சொந்த விமான தளத்தை குண்டு வைத்து தகர்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வடகிழக்கு சிரியாவின் அல்-ஹசாக் மாகாணத்தில், டல் டாமர் நகர் அருகே, அமெரிக்காவின் படைத் தளம் அமைந்திருந்தது. அமெரிக்க ஆதரவு பெற்ற குர்து படைகளுக்கும் துருக்கி ராணுவத்திற்கும் இடையே அப்பகுதியில் சண்டை மூண்டது. குர்து படைகள் அமெரிக்க ஆதரவு பெற்றவை என்றாலும், இந்த மோதலில் தலையிட்டுக் கொள்ள விரும்பவில்லை எனக் கூறி, அமெரிக்கா தனது வீரர்களை விலக்கிக் கொண்டது. அப்படி வெளியேறும் முன், டல் டாமர் நகர் அருகே அமைத்திருந்த விமான தளத்தை அமெரிக்க வீரர்கள் குண்டுவைத்து தகர்த்துவிட்டே வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல, …

    • 0 replies
    • 393 views
  6. கறுப்புநிற மை பூசப்பட்டு வெளியான பத்திரிகைகள் ; காரணம் இதுதான் ! Published by Priyatharshan on 2019-10-21 15:28:51 அவுஸ்திரேலியாவில் முக்கிய பத்திரிகை நிறுவனங்கள் தங்களது முதல் பக்கங்களை கறுப்புநிற மை பூசி இருட்டடிப்பு செய்து வெளியிட்டுள்ளன. போர்க்குற்றங்கள், அவுஸ்திரேலிய குடிமக்களை உளவு பார்த்த அரசு நிறுவனம் என இரு கட்டுரைகள் ஆஸ்திரேலிய பத்திரிகைகளில் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தின. இந்நிலையில், அவுஸ்திரேலியாவின் முக்கிய பத்திரிகை நிறுவனமான அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (ஏபிசி) மற்றும் நியூஸ் கார்ப் அவுஸ்திரேலியா நிறுவனத்தின் பத்திரிகையாளர் வீடு ஆகிய இடங்களில் கடந்த ஜ…

    • 0 replies
    • 330 views
  7. ‘பிறெக்சிட்’ | ஜோன்சன் – ஐ.ஒன்றியம் உடன்படலாம்? ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஜோன்சன் சமரசம் பிரித்தானிய பிரதமர் போறிஸ் ஜோன்சன் பிறெக்சிட் இழுபறி ஒருவாறு முடிவுக்கு வரும்போலிருக்கிறது. அயர்லாந்து எல்லை, சுங்கத் தீர்வை விடயங்களில் முடிவு எட்டமுடியாமல் இதுவரை இழுபறியிலிருந்த பிறெக்சிட் பிரதமர் ஜோன்சனின் பல விட்டுக்கொடுப்புகளின் பின்னர் ஒரு சுமுகமான நிலையை எட்டியிருக்கிறது. பிரதமர் அலுவலகத்துக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கிமிடையில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் வரைவு புதனன்று வெளியிடப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. ஐரிஷ் கடலை சுங்க எல்லையாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் வேண்டுகோளை முன்னாள் பிரதமர் தெரேசா மே நிராகரித்திருந்…

    • 5 replies
    • 829 views
  8. நியூயார்க்: 230 மில்லியன் டாலர் நிதிப்பற்றாக்குறையுடன் இயங்கி வரும் ஐ.நா.வில், இம்மாத இறுதிக்குள் மீதமுள்ள நிதியும் தீர்ந்துவிடும் என்ற அபாயம் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய ஐ.நா.வின்., பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெரெஸ், ஐக்கிய நாடுகள் சபை தற்போது 230 மில்லியன் டாலர் பற்றாக்குறையுடன் இயங்கி வருகிறது. மேலும் அக்டோபர் மாத இறுதிக்குள் சபையை நடத்த பணம் இல்லாமல் போகக்கூடும். ஐ.நா. செயலகத்தில் உள்ள 37,000 ஊழியர்களுக்காக சம்பளம் மற்றும் உரிமைகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஐ.நாவுக்கு வழங்க வேண்டிய நிதிகளை உறுப்பு நாடுகள் முறையாக செலுத்தவில்லை. அதாவது, 2019ம் ஆண்டில் எங்கள் வழக்கமான பட்ஜெட் நடவடிக்கைகளுக்குத் தேவையான மொத்தத் தொகையில் 70 சதவிகிதத்…

  9. ஸ்பெயினில் பிரிவினைவாதத் தலைவர்களை கைது செய்ததைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. ஸ்பெயினைப் பிரித்து கேட்டலோனியா என்ற தனிநாடு வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. இதற்கு ஆதரவு தெரிவித்த தலைவர்கள் கைது செய்யப்பட்டு 9 ஆண்டுகள் முதல் 13 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஸ்பெயின் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பார்சிலோனா நகரில் நடந்த பேரணியில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் டயர்கள், குப்பைத் தொட்டிகள் போன்றவற்றை வைத்து தீயிட்டு எரித்தனர். இதையடுத்து குறிப்பிட்ட பகுதிக்கு வந்த காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைத்தனர். தொடர்ந்து அப்பகுதில் பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டு…

    • 0 replies
    • 444 views
  10. வெள்ளிக்கிழமை தொழுகையின் போது குண்டுவெடிப்பு- ஆப்கானில் 62 பேர் பலி ஆப்கானிஸ்தானில் வெள்ளிக்கிழமை மதிய தொழுகையின் போது இடம்பெற்ற குண்டுவெடிப்பு காரணமாக 62 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள நன்ஹர்கர் பிராந்தியத்தில் உள்ள மசூதியொன்றிலேயே இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. பாரிய சத்தம் கேட்டது அதன் பின்னர் மசூதியின் கூரை இடிந்து விழுந்தது என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். மனதை மிகவும் வேதனைப்படுத்தும் சம்பவம் இடம்பெற்றது அதனை நான் என் கண்களால் பார்த்தேன் என பழங்குடி இனத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் தெரிவித்துள்ளார். மசூதியில் முல்லா ஒருவர் போதனை செய்துகொண்டிருந்த சத்தம் கேட்ட…

  11. உலகிலேயே முதல் முறையாக 20 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட தூரம் பயணிக்கும் விமான சேவை இன்று முதல் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது. குவாண்டாஸ் போயிங்787 ரக விமானம் ஐம்பது பயணிகளுடன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு தொடர்ந்து 20 மணி நேரங்களுக்கு மேலாக பயணிக்க உள்ளது. வெள்ளிக்கிழமை இரவு புறப்படும் இந்த விமானம் இடையில் எங்கும் நிற்காமல் பயணித்து ஞாயிற்றுக்கிழமை சிட்னி நகரை அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்துறையில் புதிய வரலாற்றை படைக்கும் இந்த முயற்சியில் பயணிகளுக்கு தேவையான உணவு, உறக்கம், மருத்துவம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளாதாக குவாண்டாஸ் போயிங் 787 நிறுவனத்தின் தலைமை அதிகார…

    • 0 replies
    • 559 views
  12. மெக்சிக்கோ கடத்தல் மன்னன் எல் சாப்போவின் மகனை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தும், பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவன் உடனடியாக விடுவிக்கப்பட்டான். மெக்ஸிக்கோவின் மேற்கு பகுதியில் உள்ள குலியாக்கன் நகரில் தேசிய பாதுகாப்பு படை மற்றும் ராணுவத்தை சேர்ந்த 30 வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வீடு ஒன்றில் கடத்தல் கும்பல் பதுங்கியிருப்பதை அறிந்து அங்கு சென்ற பாதுகாப்பு படையினர், துப்பாக்கிச்சூடு நடத்தி பிரபல கடத்தல் கும்பல் தலைவன் எல் சாப்போவின் மகன் ஒவிடியோ கஸ்மான் உள்ளிட்ட 4 பேரை சுற்றிவளைத்தனர். ஆனால் சத்தம் கேட்டு பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பல் பாதுகாப்பு படையை சுற்றி நின்றது. இதனால் நகரின் அமைதி சீர்குலைவதை விரும்பாத வீரர்கள், தங்களது சொந்த பாதுகாப்பை…

    • 0 replies
    • 767 views
  13. சிரியாவின் வடக்கு பகுதியில் தாக்குதல் – 637 குர்திஷ் போராளிகள் உயிரிழப்பு! சிரியாவின் வடக்கு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இதுவரை 637 குர்திஷ் போராளிகள் உயிரிழந்துள்ளனர். துருக்கி இராணுவத்தினை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் இதுகுறித்த செய்தியினை வெளியிட்டுள்ளன. சிரியாவில் இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்க படைகள் மற்றும் சிரிய கிளர்ச்சிப் படைகளுடன் இணைந்து குர்திஷ் போராளிகள் குழு போரிட்டது. மேலும், பிடிபட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள் குர்திஷ் மக்கள் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த போராளிகள் குழு தனி நாடு அமைக்கும் நோக்கில் சிரியாவில் குர்திஷ்தான் தொழிலாளர்கள் கட்சி எ…

  14. துருக்கியின் தாக்குதல்களை அனுமதிக்க முடியாது : ரஷ்யா சூளுரை வடக்கு சிரியாவில் துருக்கி ராணுவத் தாக்குதல்களை மேற்கொண்டுவரும் நிலையில் துருக்கி மற்றும் சிரியப் படைகளுக்கு இடையிலான மோதல்களை அனுமதிக்க முடியாது என்று ரஷ்யா சூளுரைத்துள்ளது. இந்தத் தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம் என்றும் சிரியாவிற்கான மொஸ்கோவின் சிறப்புத் தூதர் அலெக்சாண்டர் லாவ்ரென்டேவ் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கான உத்தியோகபூர்வப் பயணத்தின்போது, துருக்கியின் தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அலெக்சாண்டர் லாவ்ரென்டேவ் விவரித்துள்ளார். 2015 இல் இருந்து சிரியாவில் நிறுத்தப்பட்டுள்ள ரஷ்யப் படைகள், சிரிய மற்றும் துருக்கிப் படைகளுக்கு இடை…

    • 2 replies
    • 564 views
  15. சிரியாவின் வடபகுதியில் உள்ள குர்திஸ் நிலைகள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ள துருக்கி தடைசெய்யப்பட்ட நேபாம் குண்டுகளையும் வெள்ளை பொஸ்பரசினையும் பயன்படுத்திவருவதாக குர்திஸ்அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். துருக்கியின் தாக்குதல் ஆரம்பித்து எட்டு நாள்களின் பின்னர் விடுத்துள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ள குர்திஸ் அதிகாரிகள் முக்கிய எல்லைப்புற நகரான ரஸ் அல் அய்னில் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ள நிலையிலேயே துருக்கி படையினர் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்துகின்றனர் என குர்திஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துருக்கி ஆக்கிரமிப்பாளர்கள் அனைத்து வகையான ஆயதங்களையும் பயன்படுத்துகின்றனர் என தெரிவித்துள்ள குர்திஸ் அதிகாரிகள் தனது திட்டம் தோல்வியடைய தொடங்கியுள்ளதால் துருக…

  16. ஹொங் கொங்கின் பிரதம நிறைவேற்றதிகாரி கரி லாமை ஹொங் கொங்கின் ஜனநாயகத்துக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுத்ததோடு, அவரைப் பதவி விலகுமாறு இன்று மீண்டும் மீண்டும் இடைநிறுத்தப்பட்ட சட்டசபை அமர்வொன்றில் கோரிய நிலையில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டிருந்தனர். அந்தவகையில், இவ்வாறானதொரு நிலைமை நேற்றும் ஹொங் கொங் சட்டசபையில் ஏற்பட்டிருந்த நிலையில் காணொளி மூலம் தனது வருடாந்த கொள்கையை நிகழ்த்தியிருந்த பிரதம நிறைவேற்றதிகாரி கரி லாம், அது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க முயன்றபோதே நேற்று இரண்டாவது நாளாகவும் ஹொங் கொங் சட்டசபையில் குழப்பம் ஏற்பட்டிருந்தது. இதேவேளை புதிய வீதி வன்முறையாக, கத்திகளையும், சுத்தியல்களையும் கொண்டிருந்த முகம…

    • 0 replies
    • 391 views
  17. சிரியா விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அனுப்பிய கடிதத்தை துருக்கி அதிபர் எர்டகன் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டதாக, துருக்கி அதிபர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிரியாவின் வடக்கு பகுதியில் ஐ.எஸ் பயங்கரவாதிகளை ஒழிக்க, அந்நாட்டின் குர்து படைகளுடன் இணைந்து செயல்பட்ட அமெரிக்கா, தனது துருப்புகளை அண்மையில் திரும்பப் பெற்றது. அதுமுதல் வடக்கு சிரியா பகுதிகளில் வாழும் குர்து போராளிகள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதையடுத்து துருக்கி அதிபர் எர்டகனுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்து கடிதம் அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்தில், முட்டாள்தனமாக செயல்படாமல், ஒரு நல்ல ஒப்பந்தத்தை மேற்கொள்வோம் என டிரம்ப் கூறியிருந்தார். மேலும் ஆயிர…

    • 0 replies
    • 402 views
  18. ட்ரோன்களின் விற்பனையை ஜோன் லூவிஸ் நிறுவனம் நிறுத்தியது பொதுமக்களால் ட்ரோன்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதனால் அவற்றின் விற்பனையை கடந்த மே மாதத்தில் இருந்து ஜோன் லூவிஸ் நிறுவனம் நிறுத்தியுள்ளது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கற்விக் விமான நிலையத்தில் ட்ரோன்கள் மூலம் இடையூறு ஏற்படுத்தப்பட்டதனால் அவற்றின் விற்பனை வீழ்ச்சியடைந்தது. நாடு முழுவதுமுள்ள குடியிருப்புப் பகுதிகளில் இந்தச் சாதனங்களை பறக்கவிடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதனால் ட்ரோன்களின் விற்பனை சரிவுக்குள்ளானது. ட்ரோன்களின் விற்பனை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து தாம் இந்த முடிவை எடுத்ததாக பிரித்தானியாவின் மிகப்பெரிய பல்பொருள் விற்பனை நிறுவனமான ஜோன் லூவிஸின் தொழில்நுட்பப் பணிப்பாளர் லோரன்ஸ் மிச்செல்…

  19. 2019 இல் சிறந்த வனவிலங்குப் ஔிப்படம் – Marmot அணிலை அதிர்ச்சியடையவைத்த திபெத்திய நரி! லண்டனில் இடம்பெற்ற இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் கண்காட்சியொன்றில், சீனாவில் எடுக்கப்பட்ட அரிய இயற்கை ஔிப்படம் முதலிடத்தை வென்றுள்ளது. சீனாவின் சிலியென் மலைப்பகுதியில் திபெத்திய நரியொன்று அணில் இனத்தைச் சேர்ந்த Marmot விலங்கை அதிர்ச்சியடையச் செய்ததைக் காட்டும் குறித்த ஔிப்படம் இந்த வருடத்தின் சிறந்த வனவிலங்குப் ஔிப்படத்திற்கான விருதை வென்றுள்ளது. இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த போட்டியில் 100 நாடுகளிலிருந்து 48 ஆயிரத்துக்கும் அதிகமான ஔிப்படங்கள் பங்கேற்கச் செய்யப்பட்டிருந்தன. தனது மூன்று குட்டிகளின் உயிரைக் காக்க திபெத்தியப் பெண் …

  20. ஜேர்மனியின் சான்செலராக அங்கெலா மேர்க்கலை அனெகிரெட் கிராம்ப்-கரென்போர் பிரதியிடுவதானது கடந்தாண்டு டிசெம்பர் மாதத்தில் ஆளும் கிறிஸ்தவ ஜனநாயகச் சங்கக் கட்சியின் தலைவராக அவர் அங்கெலா மேர்க்கலை பிரதிட்டபோது தெளிவாக இருந்தது. ஆனால், தற்போது 10 மாதங்களின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகவும் பலம் வாய்ந்த, மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள ஜேர்மனியை வழிநடத்த தற்போது பாதுகாப்பமைச்சராக இருக்கும் அனெகிரெட் கிராம்ப்-கரென்போர் தகுதியானவரா என அவரது கட்சியின் உறுப்பினர்கள் விவாதிக்கின்றனர். சமபாலின மக்கள் மீதான வேடிக்கையான கருத்துத் தெரிவித்தது உள்ளடங்கலாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் பொதுவெளியில் பின்னடைவுகளைச் சந்தித்ததைத் தொடர்ந்து அனெகிரெட் கிராம்ப்-கரென்போரின் ஆதரவு மட்ட…

    • 0 replies
    • 698 views
  21. கடல்வழி தகவல் தொடர்புகளை கண்டறியும் அமைப்புகளின் கண்களில் மண்ணை தூவிவிட்டு, சீனக் கப்பல்கள், ஈரானின் கச்சா எண்ணெயை ரகசியமாக எடுத்துச் செல்வதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. ஈரானின் அணு ஆயுதத் திட்டத்துக்கும் அணு ஏவுகணைத் திட்டத்துக்கும் முட்டுக்கட்டை போடும் விதத்தில், அந்நாட்டின் மீது அமெரிக்கா கடும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்த நிலையில் ஈரான் கச்சா எண்ணெயை சீனக்கப்பல்கள் ரகசியமாக எடுத்துச் செல்வதாகக் கூறி, அமெரிக்கா கடுமையாக எச்சரித்துள்ளது . இரண்டு சீனக் கப்பல்கள் ஈரான் எண்ணெயை ரகசியமாக ஈராக் வழியாக எடுத்துச்சென்றிருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. தனது திருட்டுத்தனத்தை மறைக்க சீனக் கப்பல்கள், கடல்வழி தகவல் தொடர்புகளை கண்டறியும் அமைப…

    • 0 replies
    • 233 views
  22. துருக்கிக்கான ஆயுத விற்பனையை நிறுத்தியது பிரான்ஸ்! துருக்கிக்கான ஆயுத விற்பனையை நிறுத்த பிரான்ஸ் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சிரியாவின் வடபகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் குர்திஷ் இனப் போராளிகளை குறிவைத்து, துருக்கி இராணுவம் கடந்த 9ஆம் திகதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் குறித்த பகுதிகளில் இருந்து ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேறியுள்ளனர். பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரானும், சிரியா மீதான துருக்கியின் ஒருதலைபட்சமான தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் பிரான்ஸ் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், சிரியா மீதான தாக்குதலில் பயன்படுத்தப்படலாம் என்ற கா…

  23. கனடாவைச் சேர்ந்த 79 வயது பெண் எழுத்தாளர் மார்க்கரெட் ஆட்வுட், பிரிட்டனைச் சேர்ந்த 60 வயது பெண் எழுத்தாளர் பெர்னர்டீன் எவரிஸ்டோ ஆகிய இருவருக்கு இந்த ஆண்டிற்கான கௌரவம் மிக்க புக்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 1992ம் ஆண்டில்தான் இருவருக்கு புக்கர் விருது பகிர்ந்தளிக்கப்பட்டது.அதன் பின்னர் ஒருவருக்குத்தான் விருது என விதிமுறை வகுக்கப்பட்டது. ஆயினும் இந்த ஆண்டு தீவிரமான பரிசீலனைகளுக்குப் பிறகு மார்க்கரெட் ஆட்வுட் எழுதிய தி டெஸ்டமென்ட்ஸ் (The Testaments), எவரிஸ்டோ எழுதிய Girl Woman, Other ஆகிய இரண்டு நாவல்களும் சம அளவிலான தகுதி பெற்றன. இரண்டில் ஒன்றையும் தள்ள முடியாத நிலை ஏற்பட்டது. எனவே விதியை தளர்த்தி இருவருக்கும் புக்கர் விருதை பகிர்ந்தளி…

    • 0 replies
    • 256 views
  24. ஜெர்மனியில் குழந்தைகளின் ஆபாசப்படம் குறித்த சர்வதேச கும்பலுடன் தொடர்புடைய 7 இந்தியர்கள் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது ஜெர்மனியின் லுபெக் நகரில் சாச்சே ட்ரெப்கே என்பவன் குழந்தைகளிடம் ஆபாசமாக நடந்து கொண்டதுடன், அதை வீடியோவாக எடுத்து விநியோகித்தது ஆகிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டான். அவன் வீட்டில் மேற்கொண்ட சோதனையில் குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்கள் பகிரப்படும் 29 வாட்ஸ் ஆப் குழுக்கள் இருந்ததும், அதில் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 483 பேர் உறுப்பினராக இருந்ததும் கண்டறியப்பட்டது. அதில் 7 இந்தியர்களின் வாட்ஸ் ஆப் எண்களும் இருப்பதாகக் கூறி கடந்த ஜனவரியில் ஜெர்மனி தூதரகம் மூலம் இந்தியாவுக்கு தகவல் அனுப்பப்பட்டது. செப்டம்பர் மாத இ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.