உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27027 topics in this forum
-
லண்டனில், பாரிய தீ விபத்து! லண்டனிலுள்ள கட்டடம் ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கிழக்கு லண்டனின் Barking பகுதியிலுள்ள ஒரு குடியிருப்பில், உள்ளூர் நேரப்படி நேற்று(ஞாயிற்றுக்கிழமை) 3.31 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 10 தீயணைப்பு வாகனங்களில் விரைந்த 100 தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் மாலை 6 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன்போது எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். http://athavannews.com/லண்டனில்-பாரிய-தீ-விபத்த/
-
- 0 replies
- 501 views
-
-
ஹொங்கொங்கில் பாரிய ஆர்ப்பாட்டம் சீனாவிடம் ஹொங்கொங் கைதிகளை ஒப்படைப்பது தொடர்பாக கொண்டு வரப்படும் சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹொங்கொங் மக்கள் பெருந்திரளாக வந்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். ஹொங்கொங் முதலில் இங்கிலாந்தின் காலனி நாடாக இருந்து வந்தது. 1997-ம் ஆண்டு, அது சீனாவின் சிறப்பு நிர்வாக பகுதிகளில் ஒன்றாக மாறியது. சீனாவின் நேரடிக்கட்டுப்பாட்டில் இந்த நாடு உள்ளது. இங்கிலாந்து உள்ளிட்ட 20 நாடுகளுடன் கைதிகள் பரிமாற்றத்துக்கு ஹொங்கொங் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஆனால் சீனாவுடன் மட்டும் கைதிகள் பரிமாற்றத்துக்கு ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்ளவில்லை. கடந்த 20 ஆண்டுகளாக இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலை…
-
- 0 replies
- 520 views
-
-
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 10 லட்சம் குடியேறிகளை தன் நாட்டில் குடியேறச் செய்ய பிற நாடுகளிடம் கேட்டு கொண்டுள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. நைஜீரியா, கென்யா, ஜிம்பாப்வே, ஜாம்பியா, கானா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளிலிருந்து இந்த குடியேறிகள் எதிர்பார்க்கப்படுவதாக இந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தெரிவிக்கும் கட்டுரைகள் இணையத்திலும், சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த செய்திகளில் உண்மை இல்லை. இந்த கட்டுர…
-
- 2 replies
- 729 views
-
-
பேருந்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேக நபர்கள் கைது! லண்டனில் பேருந்து ஒன்றில் பயணம் செய்த ஓரினச்சேர்க்கையாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லண்டனில் பேருந்து ஒன்றில், உருகுவேயைச் சேர்ந்த Melania Geymonat (28), தனது அமெரிக்க காதலியான Chris உடன் பயணம் செய்து கொண்டிருந்தார். குறித்த இருவரும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என அறிந்து கொண்ட பேருந்தில் பயணம் செய்த சில இளைஞர்கள், அவர்கள் இருவரையும் முத்தமிட்டுக்கொள்ளுமாறு கூறி, தாங்கள் அதைப் பார்த்து ரசிக்க விரும்புவதாக கோரியுள்ளனர். எனினும் குறித்த இரண்டு ஓரினச்சேர்க்கையாளர்களும் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கோபமடைந்த இளைஞர்கள் அவர்கள் மீது …
-
- 2 replies
- 708 views
-
-
ஐ.நா சர்வதேச நீதிமன்றத்தை நாடும் லண்டன் போக்குவரத்து துறை! லண்டன் போக்குவரத்து துறைக்கு சில நாடுகளின் தூதரகங்கள் செலுத்த வேண்டிய ஒருதொகைப் பணம் செலுத்தப்படாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. லண்டனில் போக்குவரத்து நெரிசல் மற்றும் மாசுபாட்டை குறைப்பதற்காக 2003ஆம் ஆண்டு முதல் நெரிசல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது. இந்த நெரிசல் கட்டணமானது 1961ல் தூதரக உறவுகள் தொடர்பான வியன்னா மாநாட்டில் உருவாக்கப்பட்டதாகும். இந்த திட்டத்தால் கனரக வாகனங்கள் மாற்று வழியில் பயணம் செய்யவேண்டும். இதனால் நெரிசல் குறைவடையும். போக்குவரத்து நெரிசல் கட்டணம் அமல்படுத்தப்பட்டுள்ள வீதிகளில் குறைவான புகையை வெளிப்படுத்தும் சிறிய வகை வாகனங்கள் இலவசமாக பயணிக்க முடியும். அதிக புகைய…
-
- 0 replies
- 509 views
-
-
https://www.mixcloud.com/widget/iframe/?light=1&feed=%2FArul2000%2Fatbc-இன-07062019-9pm-வளசசம-நகழசசயல-எத-வனறத-கவய-நதய-சடடம-அலலத%2F&fbclid=IwAR3nzIlAiz5mFljCAMEM4cFTAXbvL4hbWctQbeZatgpY8L9219HHe8Qy5BQ
-
- 0 replies
- 405 views
-
-
டுபாயில் கோர விபத்து : 17 பேர் பலி டுபாயில் நேற்று மாலை இடம்பெற்ற பஸ் விபத்து ஒன்றில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ரமழான் கொண்டாட்டத்திற்காக ஓமன் நாட்டின் தலைநகரம் மஸ்கட்டிற்கு சென்று விட்டு, டுபாய் நோக்கி 31 பயணிகள் பஸ் ஒன்றில் நேற்று மாலை 6 மணியளவில் திரும்பிக்கொண்டிருந்த போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. டுபாய் ராசிதியா மெட்ரோ ரயில் நிலையம் அருகில் இருந்த அறிவிப்பு பலகையின் மீது திடீரென மோதி குறித்த பஸ் விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பஸ்ஸில் பயணித்த 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 12 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என…
-
- 0 replies
- 587 views
-
-
85 நோயாளிகளைக் கொலைசெய்த ஆண் தாதிக்கு ஆயுட்தண்டனை வடக்கு ஜேர்மனியில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில் தாதியாக வேலைசெய்த நீல்ஸ் ஹுகெல் 85 நோயாளிகளைக் கொலைசெய்த குற்றத்துக்காக அவருக்கு ஆயுட்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 42 வயதான ஹுகெல் மீது ஏற்கனவே இதற்கு முன்னர் இரு கொலைக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. 1999 – 2005 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இதயத்தில் பாதிப்பு உள்ள மக்களுக்கு மாரடைப்பு மருந்துகளை வழங்கியுள்ளார். விசாரணை முடிவில் தீர்ப்பு வழக்கப்பட்டபோது; நீல்ஸ் ஹுகெல் தனது பயங்கரமான செயல்கள் மூலமாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களிடம் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன் என்று கூறினார். நீதிபதி செபஸ்ரியன் பூயர்மன் தெரிவிக்கையில்; குற்றவாளி நீல்ஸ் ஹ…
-
- 0 replies
- 389 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images தனது பிரிட்டன் பயணத்தின்போது இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் உடன் சுற்றுச்சூழல் குறித்து நடத்திய பேச்சுவார்தைக்குப் பிறகு அளித்த பேட்டியில் சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளில் அதிகரிக்கும் மக்கள்தொகையே உலகின் நீர் மற்றும் காற்றின் தரம் குறையக் காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். பருவநிலை மாற்றம் உண்மையல்ல என்று கூறிவரும் டிரம்ப் 2017ஆம் ஆண்டு பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார். புவி வெப்பமடைதல் தொழில்புரட்சிக்கு முந்தைய காலத்தில் நிலவிய வெப்பத்தை…
-
- 0 replies
- 627 views
-
-
நைல் நதியிலிருந்து 40 பேரின் சடலங்கள் மீட்பு சூடானின் நைல் நதிக் கரையிலிருந்து சுமார் 40 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சூடான் நாட்டு தலைநகர் கார்டோமை ஊடறுத்து செல்லும் நைல் நதியிலிருந்தே குறித்த 40 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவை கடந்த திங்கட்கிழமை முதல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது படையினர் நடத்திய தாக்குதல்களில் பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர்களுள் 60 பேர் வரை கொல்லபட்டிருக்கலாம் என்றும் தற்போது 40 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக சூடான் மத்திய வைத்திய குழு the Central Committee of Sudan Doctors (CCSD) தெரிவித்துள்ளது இந்நிலையில் துணை இராணுவக் குழு Rapid Support Forces (RSF) ஒன்று அ…
-
- 1 reply
- 671 views
-
-
நோட்ரே-டாம் தீ விபத்து : ஈயம் உருகி வளிமண்டலத்தில் கலந்தது பிரான்சின் நோட்ரே-டாம் தேவாலயத்திற்கு அருகில் வசிக்கும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் இரத்த மாதிரிகளை பரிசோதிப்பதற்காக அவர்களை மருத்துவமனைகளுக்கு வருமாறு சுகாதாரத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்ற இந்த அசம்பாவிதத்தின் போது தேவாலயத்தின் கூரைச் சட்டங்களில் இருந்த பெருமளவிலான ஈயம் உருகி காற்றுடன் கலந்துள்ளது. இதன்காரணமாக வளி மாசு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அண்மையில் பரிஸ் மாநகரத்தின் தீவு (Île de la Cité) பகுதியில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குழந்தையொன்றின் இரத்தத்தில் ஈயத்தின் துணுக்குகள் கலந்திரு…
-
- 0 replies
- 513 views
-
-
அவுஸ்ரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தலைமையகத்தில் பொலிஸார் தீவிர சோதனை! அவுஸ்ரேலிய பொது ஊடக நிறுவனமான அவுஸ்திரேலிய ஒலி/ஔிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைமை அலுவலகத்தில் அந்த நாட்டின் பொலிஸார் தீவிர சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். நீதிமன்ற சோதனை ஆணையுடன் அவர்கள் இந்த சோதனையை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இரண்டு ஊடகவியலாளர்கள் மற்றும் செய்தி பணிப்பாளர் ஆகியோரின் பெயர்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் அவுஸ்ரேலிய படையினர் முறையற்ற வகையில் நடந்துக் கொண்டமை தொடர்பாக வெளியாக்கப்பட்ட செய்திகள் தொடர்பில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இன்று காலை அவுஸ்ரேலிய பொலிஸார் பெண் செய்திய…
-
- 0 replies
- 492 views
-
-
இந்தோனேசியாவில் கப்பல் மூழ்கி விபத்து: 17 பேர் மாயம்! இந்தோனேசிய கடற்பரப்பில் சரக்குகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த கப்பல் மூழ்கி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம்செய்த 17 பேர் காணாமற்போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிழக்கு இந்தோனேசியாவுக்குச் சொந்தமான சுலவேசி தீவின் வடக்குப் பகுதியான பிட்டங்கில் இருந்து தெற்கிலுள்ள மொரோவலி பகுதிக்குச் சென்ற கப்பலே இவ்வாறு மூழ்கியுள்ளது. இந்த கப்பல் கடந்த சனிக்கிழமை விபத்துக்குள்ளாகி மூழ்கிய போதும், 4 நாட்களாக மீட்புக் குழுவினர் தேடுதலை மேற்கொண்ட பின்னரே குறித்த கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்போது, அதில் பயணம் செய்த ஒருவர் உயிர்தப்பிய நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார். மீதியுள்ள 17 பேர் காணாமற் போயுள்ள நிலை…
-
- 0 replies
- 391 views
-
-
உலகின் மாபெரும் சர்வதேச பெண்கள் மாநாடு கனடாவில் ஆரம்பம்! கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா- வான்கூவர் நகரில் 2019 ஆம் ஆண்டுக்கான சர்வதேச பெண்கள் மாநாடு இடம்பெற்று வருகின்றது. பெண்கள் மற்றும் சிறுமியர் நல்வாழ்வு, சுகாதாரம், பால்நிலை, சமத்துவம், உரிமை குறித்து பெண்கள் மாநாட்டில் ஆராயப்படுகின்றது. குறித்த மாநாட்டில் 160 நாடுகளை சேர்ந்த 8,000 உறுப்பினர்கள் பங்கேற்கின்றுள்ளனர். அதேவேளை குறித்த பெண்கள் மாநாட்டில் சுமார் ஒரு லட்சம் பேர் வரை பார்வையாளர்களாக கலந்துகொண்டுள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான பெண்கள் மாநாடு நாளை(வியாழக்கிழமை) நிறைவடைகின்றது. இந்த மாநாட்டில் பெண்கள் உரிமை செயற்பாட்டாளர்கள், உலகத்தலைவர்கள், வழக்கறிஞர்கள், கல்விமான்கள்,…
-
- 0 replies
- 344 views
-
-
பாலஸ்தீனம் : தம்மை ஆளும் திறன் அவர்களுக்கு உள்ளதா? அமெரிக்க அதிபரின் மருமகனும் மத்திய கிழக்கிற்கு நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு ஆலோசகரும் பிறப்பால் யூதருமான கூச்னர் அளித்த பேட்டி ஒன்றில் ஒரு முக்கிய கேள்வி முன்வைக்கப்பட்ட்து. அதற்கு கூறிய பதிலில், பாலஸ்தீனத்துக்கு தன்னை தானே ஆளும் உரிமை உள்ளது ஆனால், அவர்களுக்கு அந்த திறமை இருக்கின்றதா? என்ற ஐயப்பாட்டை முன்வைத்தார். மேலும் கூறுகையில், பாலஸ்தீனத்தில் சமத்துவமான நீதித்துறை, பத்திரிகை சுதந்திரம், தனி மனித சுதந்திரம், மத சகிப்புத்தன்மை இல்லாமை போன்ற காரணங்களை முன்வைத்தார். https://www.aljazeera.com/news/2019/06/kushner-palestinians-capable-governing-190603051426199.html
-
- 2 replies
- 974 views
- 1 follower
-
-
அவுஸ்ரேலியாவில் துப்பாக்கி பிரயோகம் : நால்வர் உயிரிழப்பு அவுஸ்ரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். அவுஸ்ரேலியாவின் டார்வின் பகுதியில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக கூறப்படும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐரோப்பியர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. http://athavannews.com/அவுஸ்ரேலிய-துப்பாக்கி-பி/
-
- 0 replies
- 422 views
-
-
சரி, உலக நாடுகள் எல்லாமே இவ்வாறு மறைநீர் வர்த்தகத்தைச் செய்துகொண்டுதானே இருக்கின்றன. நமக்கு மட்டும் என்ன வந்தது என்று நினைக்கலாம். தற்போதைய நிலையில் நீர் சுழற்சி அளவானது இந்தியாவில் குறைந்துகொண்டே வருகிறது. ``கோதுமை தேவை அதிகம் இருக்கும் ஒரு நாடு, ஒரு டன் கோதுமையை இறக்குமதி செய்யும்போது, அந்த நாடு 1,82,700 லிட்டர் அளவுக்குத் தனது நாட்டின் நீரைச் சேமித்துக்கொள்கிறது. அதாவது, ஒரு டன் தானியம், 1,82,700 லிட்டர் நீருக்குச் சமம்" என்கிறது மறைநீர்ப் பொருளாதாரம். இதைத்தான் இங்கிலாந்தைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன், மறை நீர்ப் பொருளாதாரம் வாயிலாக உலகுக்கு எடுத்துச் சொன்னார். ``கோதுமை தானியத்தை விளைவிக்க நீர் தேவை. ஆனால், அது விளைந்தவுடன் அதை உருவாக்க ப…
-
- 3 replies
- 1.5k views
-
-
வடகொரியா தனது விசேட தூதுவரை கொலைசெய்யவில்லை- சிஎன்என் அமெரிக்காவிற்கான வடகொரியாவின் விசேட பிரதி கிம் சொல் கொலை செய்யப்படவில்லை சிறைவைக்கப்பட்டுள்ளார் என சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க வடகொரிய ஜனாதிபதிகளிற்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்ததை தொடர்ந்து வடகொரியா அந்த பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்களிப்பை வழங்கிய தனது விசேட பிரதிநிதியை சுட்டுக்கொலை செய்துள்ளது என கடந்த வாரம் தகவல்கள் வெளியாகியிருந்தன. அவருடன் வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் சிலரும் கொல்லப்பட்டுள்ளனர், விமானநிலையத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என தென்கொரிய ஊடகங்கள் தெரிவித்திருந்தன. எனினும் அவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் தோல்வியில் முடிவடைந்த பேச்…
-
- 0 replies
- 957 views
-
-
மலையேறச் சென்று காணாமல் போனவர்கள் சடலங்களாக மீட்பு இந்தியாவின் இமய மலைத்தொடரில் ஏறச் சென்ற போது காணாமல் போய் இருந்த எட்டு மலையேறிகளில் ஐவரின் சடலங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் குறித்த 8 பேரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் குறித்த தகவலை உறுதிசெய்துள்ளனர். குறித்த காணாமல் போன குழுவினரில் 4 பிரித்தானியர்கள், 2 அமெரிக்கர்கள் மற்றும் 1 அவுஸ்திரேலியர் அடங்கிய இந்த குழுவினர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நந்தாதேவி சிகரத்தில் ஏற முயற்சித்தநிலையில் காணாமல் போய் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் பல்வேறு பனிச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படும் நிலையில் அவர்…
-
- 0 replies
- 520 views
-
-
லண்டன் மேயரை கடுமையாக விமர்சித்துள்ள அமெரிக்க அதிபர்! மூன்று நாள் இங்கிலாந்து விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் லண்டன் வந்தடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் லண்டன் மேயர் சாதிக் கானை ‘எதற்கும் மதிப்பற்றவர்’ எனவும் ‘முட்டாள்’ எனவும் விமர்சித்துள்ளார். சாதிக் கான் லண்டன் மேயராக மிகவும் மோசமான முறையில் பணியாற்றுள்ளார். இங்கிலாந்தின் மிக முக்கிய கூட்டாளியான அமெரிக்காவின் ஜனாதிபதியான எனது விஜயம் தொடர்பாக அவர் மிகவும் முட்டாள்தனமாக விமர்சித்துள்ளார் என தனது ட்விட்டர் பக்கத்தில் ட்ரம்ப் பதிவு செய்துள்ளார். டொனால்டு ட்ரம்பின் நடவடிக்கைகள் தவறானவை எனவும் இங்கிலாந்து அவரை மரியாதையான முறையில் வரவேற்க தேவையில்லை எனவும் அமெரிக்க ஜனாதிபதியின் இங்க…
-
- 0 replies
- 608 views
-
-
மகாராணியைச் சந்தித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிரித்தானியாவுக்கு மூன்று நாட்கள் விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் விஜயத்தின் முதல்நாளான இன்று(திங்கட் கிழமை) பிரித்தானிய மகாராணியைச் சந்தித்துள்ளார்கள். இன்று காலை லண்டன் வந்தடைந்த அமெரிக்க ஜனாதிபதியும் அவரது மனைவியும் பக்கிங்ஹாம் அரண்மனையில் இடம்பெற்ற மதிய விருந்துபசாரம் மற்றும் வரவேற்பு விழாவில் கலந்து கொண்டுள்ளனர். மதிய விருந்துக்கு பின்னர் ட்ரம்ப் தம்பதியர் வெஸ்ட்மின்ஸ்டர் சதுக்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்வர். அதைத் தொடர்ந்து இளவரசர் சார்ள்ஸ் மற்றும் அவரது பாரியார் கமீலா ஆகியோரால் அவர்களுக்கு தேநீர் விருந்து வழ…
-
- 0 replies
- 724 views
-
-
ஐ.எஸ் தீவிரவாதிகளின் புதிய யுத்தி குறித்த தகவல் வெளியானது! ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஐரோப்பியர்கள் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 2011 முதல் 2016ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவர்கள் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் ஈராக் மற்றும் சிரியாவில் தமது கட்டுப்பாட்டுப் பகுதியை இழந்த ஐ.எஸ் அமைப்பினர், தமது அமைப்பில் சேர்ந்துள்ள வெளிநாட்டவரை சொந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பி வைப்பதை புது தந்திரமாக மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது. இதன் ஊடாக ஐரோப்பிய நாடுகளில் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு அவர்கள் திட்டமிட்டு வருவதாகவ…
-
- 1 reply
- 679 views
-
-
அமெரிக்காவை தாக்கும் தொலைவில் நாங்கள் இருக்கிறோம் – ஈரான் எச்சரிக்கை! வளைகுடாவில் ஈரான் ஏவுகணைகள் தாக்கும் தொலைவிலேயே அமெரிக்க இராணுவம் உள்ளதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், இரண்டு நாடுகளுக்கும் இடையில் மோதல் ஏதாவது ஏற்பட்டால் பெற்றோல் ஒரு பீப்பாயின் விலை 100 டொலர்களுக்கும் மேல் உயர்த்தப்படும் எனவும் ஈரான் எச்சரித்துள்ளது. இவ்வாறு ஈரான் அயதுல்லா காமேனி அரசாங்கத்தின் இராணுவ உயரதிகாரியான ரஹீம் சஃபாவி தெரிவித்ததாக சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. உயர் ராணுவ அதிகாரியான யாஹ்யா ரஹீம் சஃபாவி இது குறித்து பேசுகையில், ”ஈரான் ஏவுகணைகள் தாக்கும் தொலைவில்தான் அமெரிக்க இராணுவ வாகனங்கள் உள்ளன. எங்கள் படையின் முழுமையான பலம் என்னவென்று அ…
-
- 1 reply
- 972 views
-
-
அமெரிக்க விசாவுக்கு புதிய விதிமுறை அமெரிக்காவுக்கு பயணிக்க விசா கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு அந் நாட்டு அரசாங்கம் புதிய விதிமுறைகளை விதித்துள்ளது. அதன்டி அமெரிக்காவுக்கு பயணிக்க விசா கோரி விண்ணப்பிப்பவர்கள், தங்களது சமூக ஊடக கணக்குகள் குறித்த விவரங்களோடு, கடந்த ஐந்தாண்டுகளாக பயன்படுத்திய மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்களை அளிக்க வேண்டும் என்று அந்த புதிய விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டபோது, இதன் காரணமாக ஓராண்டிற்கு 14.7 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. அரசு ரீதியான மற்றும் உத்தியோகபூர்வ விசா விண்ணப்பங்களுக்கு இந்த புதிய விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்ப…
-
- 5 replies
- 1.3k views
-
-
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு - 11 பேர் உயிரிழப்பு அமெரிக்க மாநிலமான விர்ஜீனியாவில் அரசு கட்டடம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர்; 6 பேர் காயமடைந்தனர். http://tamil.adaderana.lk/news.php?nid=114580
-
- 1 reply
- 1.1k views
-