Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. 9000 அகதிகளை நாடு கடத்தியது ஜேர்மனி! கடந்த ஆண்டில் மாத்திரம் 9000 அகதிகளை ஜேர்மனி அரசாங்கம் ஐரோப்பிய நாடுகளுக்கு நாடு கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜேர்மனிய பத்திரிகை ஒன்றில் வெளியாகியுள்ள கட்டுரை ஒன்றிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜேர்மனியில் ஜனவரிக்கும் நவம்பருக்கும் இடையில் 51,558 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவற்றில் 35,375 ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கடந்த கோடை காலத்தில் ஜேர்மனியின் உள்துறை அமைச்சரான Horst Seehofer இத்தாலியையும் கிரீஸையும் அங்கு முதலில் பதிவு செய்த அகதிகளை ஏற்றுக் கொள்ள வலியுறுத்தியிருந்த நிலையில…

  2. பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் அமெரிக்க பாடகர் கைது அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகர் கிறிஸ் பிரவுண், பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார். 29 வயதான கிறிஸ், பிரான்ஸில் பாரிஸ் பொலிஸாரால் நேற்று கைதுசெய்யப்பட்டார். அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாக, நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. கிறிஸ்- உடன் அவரது நண்பர் மற்றும் மெய்ப்பாதுகாவலர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 15ஆம் திகதி இசை நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டுவிட்டு, விடுதியில் தங்கியிருந்தபோது துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக 24 வயதான யுவதியொருவர் அளித்த முறைப்பாட்டின் பிரகாரம் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். கடந்த 2009ஆம் ஆண்டு…

  3. அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை அமுலாக்கக் கூடாது என்ற கோசங்கள் தென்பகுதியில் பரவலாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது. புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை நிறைவேற்ற முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ கூறியதை அடுத்து தென்பகுதிப் பேரினவாதசக்திகள் அரசியலமைப்புச் சீர்திருத்தத்துக்கு எதிராக கோசம் எழுப்பத் தொடங்கியுள்ளன. இதில் பெளத்த பீடங்களும் இணைந்து கொள்ள வேண்டுமென்ற கோரிக்கைகளும் விடப்பட்டுள்ளன. மிகப்பெரியதொரு யுத்தத்தை நடத்தி தமிழ் மக்களைக் கொன்றொழித்த பின்பும் சிங்களப் பேரினவாதத்தின் இனவாதப் பசி அடங்கவில்லை என்பது தெரிகிறது. ஆக, சிங்கள ஆட்சியாளர்களுடன் இணைந்து சென்று தமிழர்கள் தங்கள் உரிமையைப் பெறமுடியுமென்று யார் நினைத்தாலும் அந்தச் சிந…

  4. வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு நேற்று முன்தினம் 20ஆம் திகதி கூடியது. புதிய கட்சியின் முதலாவது மத்திய குழுக் கூட்டம் என்ற வகையிலும் தமிழ் மக்கள் கூட்டணியின் பொறுப்பு வாய்ந்த பதவிகளை அறிவிக்கப்படுகின்ற கூட்டம் என்பதாலும் அதன் மீதான பார்வை அந்தக் கட்சி தொடர்பான கணிப்பை அளவிடுவதற்கு உதவுகின்றது. இந்த வகையில் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியில் ஒரு சிலர் அதிகாரம் செலுத்துகின்ற சிலர் உரிமைத்தன்மை அறவே இல்லை எனலாம். இது அந்தக் கட்சி தமிழ் மக்களுக்கு ந…

  5. அமெரிக்காவில் சீக்கியர் மீது இனவெறி தாக்குதல் Tweet அ-அ+ அமெரிக்காவில் ஒரேகான் மாகாணத்தில் சீக்கியர் மீது இனவெறி தாக்குதல் நடத்திய வெள்ளைக்கார வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். #Racistattack நியூயார்க்: அமெரிக்காவில் ஒரேகான் மாகாணத்தில் ஹர்விந்தர்சிங் டாட் என்ற சீக்கியர் குடும்பத்துடன் தங்கியுள்ளார். அங்குள்ள ஒரு கடையில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் அவர் பணியில் இருந்தார். அப்போது அங்கு ஆண்ட்ரூ ராம்சே என்ற 24 வயது வெள்ளைக்கார வாலிபர் வந்தார். அவரிடம் சிகரெட்…

    • 0 replies
    • 463 views
  6. பிரித்தானியாவிற்கு ஆலோசனை வழங்கப் போவதில்லை: ஜேர்மன் நாம் பிரித்தானியாவிற்கு ஆலோசனை வழங்க விரும்பவில்லை. ஆனால், குடிமக்கள் தொடர்பாக பொறுப்புடன் செயற்படுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்வதாக ஜேர்மன் பொருளாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரெக்ஸிற் தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”அனைவரும் விரும்புவார்களாயின் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றை தவிர்த்துக் கொள்ளலாம். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையானோர் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றை விரும்பவில்லை. ஆக்கபூர்வமான, முறையான பிரெக்ஸிற்றையே ஜேர்மனியும் விரும்புகிறது. இது தொடர்பான தெளிவான நிலைப்பாட்டை பிரித்தானிய அரசாங்கமும், நா…

  7. மத்திய தரைக்கடலில் கப்பல்கள் மூழ்கியதில் 170 அகதிகள் உயிரிழப்பு! மத்திய தரைக்கடல் பகுதியில் இரு கப்பல்கள் கவிழ்ந்த சம்பவங்களில் 170 அகதிகள் உயிரிழந்துள்ளதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் தெரிவித்துள்ளது. சுமார் 117 அகதிகள் பயணித்த கப்பலொன்று லிபிய கடற்பரப்பில் மூழ்கியதாக இத்தாலியின் கடற்படை தெரிவித்துள்ளது. அதேவேளை மொரோக்கோ மற்றும் ஸ்பெயின் அதிகாரிகள் மேற்கு மத்தியதரைக் கடலில் காணாமற்போன கப்பலொன்றை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியவில்லை என அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு மட்டும் மத்திய தரைக்கடல் பகுதியை கடக்க முயன்றபோது 2200 க்கும்…

  8. தலிபான் தாக்குதலில் 126 ஆப்கான் படையினர் பலி ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலொன்றில் நூற்றிற்கும் மேற்பட்ட ஆப்கான் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மைடன் வர்டாக் பிராந்தியத்தில் உள்ள இராணுவ பயிற்சி முகாமிற்குள் இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் காரணமாக 126 பேர்கொல்லப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளதாக ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன இராணுவசோதனை சாவடி மீது காரை மோதி தாக்குதலை ஆரம்பித்த தீவிரவாதிகள் பின்னர் இராணுவ பயிற்சி தளத்தின் முக்கிய கட்டிடம் மீது மற்றொரு காரை மோதி தாக்குதலை மேற்கொண்டனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குண்டுதாக்குதல் இடம்பெற்ற பின்னர் உள்ளே நுழைந்த இரு துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட தா…

  9. படத்தின் காப்புரிமை JACK GUEZ சிரியாவில் உள்ள இரானின் இலக்குகளை தாங்கள் தாக்க தொடங்கிவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இரானிய புரட்சிப் படையின் சிறப்பு பிரிவான குட்ஸ் படைக்கு எதிராக தங்களின் தாக்குதல் நடவடிக்கை அமைந்ததாக இஸ்ரேல் பாதுகாப்பு படை பிரிவு (IDF) கூறியுள்ளது. படத்தின் காப்புரிமை EPA மேலும், இது குறித்து எந்த தகவலையும் இஸ்ரேல் ராணுவம் தெரிவிக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமையன்று சிரியாவில் உள்ள கோலான் மலை பகுதி உச்சியில் உள்ள இலக்குகளில் இருந்து ஏவப்பட்ட ஒரு ராக்கெட்டை தாங்கள் இடைமறித்ததாக இஸ்ரேல் பாதுகாப்பு படை …

  10. படத்தின் காப்புரிமை Getty Images நடப்பு நிதியாண்டின் இறுதி காலாண்டில் சீனாவின் பொருளாதாரம் தொடர்ந்து பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த அதிகாரபூர்வ தரவுகளால் சர்வதேச பொருளாதாரத்தின் மீது இது ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் குறித்த அச்சம் எழுந்துள்ளது. இதற்கு முந்தைய காலாண்டில், சீனா பொருளாதாரம் 6.4% என்ற அளவில் வளர்ந்திருந்தது. இந்த வளர்ச்சியை அதற்கு முந்தைய காலாண்டோடு ஒப்பிடுகையில் சீனா 6.5% என்ற வளர்ச்சியை எட்டியிருந்தது. இந்த முழு ஆண்டில் சீனா 6.6% என்ற அளவில் வளர்ச்சியை கண்டுள்ளது. 1990ஆம் ஆண்டு முதல் சீனாவில் பதிவான மிக குற…

  11. கொங்கோவின் எதிர்க்கட்சி வேட்பாளர், தன்னை ஜனாதிபதியாக அறிவித்துள்ளார்! கொங்கோ குடியரசின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர் மார்ட்டின் ஃபயுலூ தன்னை ஜனாதிபதியாக அறிவித்துள்ளார். அத்துடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவரது எதிர்தரப்பு வேட்பாளர் வெற்றிபெற்றதாக நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பையும் அவர் நிராகரித்துள்ளார். இந்தநிலையில் தற்போதுள்ள நெருக்கடிகளை மேலும் தூண்டிவிடும் விதமாக தானே ஜனாதிபதி தேர்தலில் அதிகபடியாக வாக்குகளை பெற்றுள்ளதாக ஃபயுலூ குறிப்பிட்டுள்ளார். “தவறான தேர்தல் முடிவுகளை உறுதிப்படுத்துவதன் மூலம், அரசியலமைப்பு நீதிமன்றம் ஒரு சர்வாதிகார ஆட்சிக்கு உதவுவதாக உறுதிப்படுத்தியுள்ளது. இது ஒரு அரசியலமைப்பு சதித்திட்டம்” என்று அவ…

  12. தாய்லாந்தில் இரு புத்த துறவிகள் சுட்டுக் கொலை January 20, 2019 தாய்லாந்தில் அடையாளம் இனந்தெரியாதேரால் இரு புத்த துறவிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தாய்லாந்தின் தென் பகுதியில் அமைந்துள்ள நாராதிவாட் மாகாணத்தில் உள்ள ரத்தனுபாப் புத்த மதம் ஆலயத்திலேயே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தி புத்த துறவிகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் ஈடுபட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது என தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தாய்லாந்தில் புத்த மதம் பரவலாக காணப்…

  13. பிரெக்ஸிற் தொடர்பாக பிரித்தானியர்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்! – கருத்துக்கணிப்பு பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது தொடர்பாக பிரித்தானிய மக்கள் நம்பிக்கையற்றவர்களாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாக்கெடுப்பின் போது பிரதமர் தெரேசா மேயின் பிரெக்ஸிற் ஒப்பந்தம் நாடாளுமன்ற உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டது. எனவே, பிரதமர் மேயின் அரசாங்கம் புதிய திட்டத்துடன் வந்து உடன்பாடுகளை நிறைவேற்றும் பட்சத்தில் அனைவரையும் திருப்திப்படுத்த முடியும் என்று பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் குறுகிய காலத்தில் பூர்த்தி செய்ய முடியாத ஒரு பணியாக இது இருக்கின்றது. இந்தநிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் மேயின…

  14. ரஷியாவின் இரு போர் விமானங்கள் மோதல் : விமானி பலி ரஷியா விமானப்படைக்கு சொந்தமான இரு Su-34 ரக போர் விமானங்கள் ஜப்பான் பெருங்கடல் பகுதியின் மீது நேற்று (பயிற்சி) கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தன.கடலோரத்தில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தூரத்தில் வானத்தில் வட்டமிட்டு பறந்தபோது எதிர்பாராத விதமாக இரு விமானங்களும் ஒன்றோடொன்று மோதி கடலில் விழுந்தது. இந்த விபத்தில் இரு விமானிகளும் அவசர வாசல் வழியாக குதித்து உயிர் பிழைத்ததாக நேற்று தகவல் வெளியானது. 3 விமானங்கள், ஹெலிகாப்டர் மற்றும் 5 கப்பல்களில் சென்று விபத்து நிகழ்ந்த பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்ட மீட்புப்படையினர் ஒரு விமானியின் உடலை கைப்பற்றியுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட…

    • 0 replies
    • 419 views
  15. டிரம்ப் மட்டுமே அமெரிக்கா இல்லை – ஜேர்மனிய அமைச்சர் டிரம்ப் மட்டுமே அமெரிக்கா இல்லை என ஜேர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சரான Heiko Maas தெரிவித்துள்ளார். ஜேர்மனிய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘கடந்த பல ஆண்டுகளாக ஜேர்மனிக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு குறிப்பிடத்தக்க விதத்தில் அதிகரித்துள்ளது. ஒரு ஜனாதிபதி மட்டுமே இரு நாடுகளுக்கிடையேயான உறவை முற்றிலுமாக அழித்து விட முடியாது. ரஷ்யாவுடனான எரிவாயு திட்டம் ஒன்றில் பங்கேற்பதற்காக தொடர்ந்து ஜேர்மனியை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விமர்சித்து வரும் நிலையிலும் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் முன்னேற்றம் காணப்படுகின…

  16. டிரம்ப் குறித்து பரபரப்பு தகவலை வெளியிட்ட மொடல் அழகி ரஸ்யாவில் கைது-வீடியோ இணைப்பு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்பிற்கு சார்பாக ரஸ்யா செயற்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் தன்னிடமுள்ளதாக தெரிவித்த மொடல் அழகியை ரஸ்ய அதிகாரிகள் கைதுசெய்யதுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன தாய்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்ட நஸ்டியா ரைபகா என அழைக்கப்படும் இந்த மொடல் அழகியை மொஸ்கோ விமானநிலையத்தில் அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். மொடல் அழகி கைதுசெய்யப்படுவதை காண்பிக்கும் வீடியோவை அவரது சட்டத்தரணி சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். பெண்ணொருவர் போராடுவதையும் நால்வர் அவரை சக்கரநாற்காலியில் அமரச்செய்து இழுத்துச்செல்வதையும் காண்பிக்கும் வீடியோவை மொடலின் சட்டத்தரணி வெளியிட்டுள…

  17. படத்தின் காப்புரிமை Getty Images அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்பு மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இடையே நடைபெற சாத்தியமுள்ள இரண்டாவது உச்சி மாநாட்டுக்கு முன்பு வட கொரியாவின் அரசு தரப்பபை சேர்ந்த முக்கிய அதிகாரியொருவர் அமெரிக்கா சென்றுள்ளார். கிம் யோங்-சோல் என்ற அந்த வட கொரிய பேச்சுவார்த்தையாளர் சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கிலிருந்து கிம்மிடமிருந்து அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஒரு கடிதத்தை கொண்டு சென்றதாக தென் கொரிய ஊடக தகவல்கள் கூறுகின்றன. வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க வெளியுறவு செயலர் மைக் பாம்பேயோவை கிம் யோங்-சோல் சந்திக்கவுள்ளார…

  18. கார் விபத்தில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் பிலிப் January 18, 2019 பயங்கர கார் விபத்தில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் பிலிப் காயங்களுடன் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாண்ட்ரிகம் எஸ்டேட் பகுதியில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவரான 97 வயதாக இளவரசர் பிலிப்பின் கார் நேற்று வியாழக்கிழமை சாலை வளைவின் போது கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காயம் அடைந்த இளவரசர் பிலிப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் செய்தியை பங்கிங்காம் அரண்மனையும் உறுதிப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது விபத்தில் பாதிப்படைந்த இரு கார்களினதும் சாரதிகள் மது அருந்தி காரை செலுத்தினார்களா …

  19. மோசமான நடத்தை காரணமாக நாடுகடத்தப்படும் பிரித்தானிய குடும்பம்! நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய குடும்பம் ஒன்று மோசமான நடத்தை காரணமாக நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர். பொது இடத்தில் குப்பை போட்டமை, உணவு உண்டதன் பின்னர் உணவகத்தில் பணம் செலுத்தாமை, திருட்டு ஆகிய குற்றச்சாட்டுக்கள் இவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஆக்லந்து நகர மேயர் ஃபில் கொஃப் (Phil Goff) பொலிஸாரிடம் கோரியிருந்தார். இந்தநிலையிலேயே பண்புகள் தொடர்பான விவகாரத்தினை மீறிய குறித்த பிரித்தானிய குடும்பத்தினை நாடு கடத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நியூஸிலாந்தின் குடிநுழைவுத் துறை உதவித் தல…

  20. வாக்கெடுப்பில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே வெற்றி பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயிற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்துள்ள நிலையில், பிரெக்ஸிட் நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் தெரேசா மேயினால் கொண்டுவரப்பட்ட பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பான வாக்கெடுப்பு பிரித்தானிய பாராளுமன்றத்தில் தோல்வியடைந்த நிலையில், தெரேசா மேயின் 2 வருட கால ஆட்சி தோல்வியடைந்துவிட்டதாகத் தெரிவித்து எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பைன், தெரேசா மீது நம்பிக்கையில்லா தீர்மானமொன்றைக் கொண்டு வந்திருந்தார். இந்நிலையில், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பாராளுமன்றத்தில் விவாதமும் வாக்கெடுப்பும் நேற்று நடைபெற்றது. …

  21. பிரெக்ஸிற் வாக்கெடுப்பில் தெரேசா மே தோல்வி! பிரெக்ஸிற் திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக, பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரதமர் தெரேசா மேயின் தரப்பு தோல்வியடைந்தது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது தொடர்பான பிரெக்ஸிற் மீதான வாக்கெடுப்பில் 432 பேர் பிரெக்ஸிற்றிற்கு எதிராகவும் 202 பேர் பிரெக்ஸிற்றிற்கு ஆதரவாகவும் வாக்களித்தனர். இதன்மூலம் மேயின் தரப்பு 230 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பாக முடிவுசெய்யும் பொதுவாக்கெடுப்பு கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் பெரும்பாலானோர் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக ஆதரவு தெரிவித்தனர். பிரிரித்தானியா…

  22. துருக்கியை அழித்துவிடுவோம்! – டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை சிரியாவில் குர்திஸ் போராளிகள் மீது தாக்குதல் நடத்தினால், பொருளாதார ரீதியில் துருக்கியை அழித்துவிடுவோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள இரண்டு டுவிட்டர் பதிவுகளில் அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக சிரியாவில் குர்திஸ் போராளிகளுடன் இணைந்து அமெரிக்க துருப்புகள் சண்டையிட்டு வந்தன. எனினும், குர்திஸ் போராளிகளை பயங்கரவாதிகள் என சித்தரித்துள்ள துருக்கி, அமெரிக்கா அவர்களுக்கு உதவுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அத்தோடு, குர்திஸ் போராளிகளை ஒடுக்குவோம் என துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன் கடந்த வாரம் குற…

  23. கேமரூனில் துப்பாக்கி முனையில் 36 பயணிகள் கடத்தல்- பிரிவினைவாதிகள் கைவரிசையா? கோப்புப்படம் யாவுண்டே: மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில், ஆங்கிலம் பேசும் மக்கள் அதிகம் வாழும் தென்மேற்கு மற்றும் வடமேற்கு பிராந்தியங்களை தனி சுதந்திர நாடாக அறிவிக்க வலியுறுத்தி, பிரிவினைவாத அமைப்புகள் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவர்களை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் காரணமாக அரசுப் படைகளுக்கும், பிரிவினைவாத அமைப்புகளுக்குமிடையே தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு பிராந்தியத்தில் பியூவா-கும்பா நெடுஞ்சாலையில் சென்ற பயணிகள் பேருந்தை, ஆயுதம் தாங்கிய கும்பல் நேற்று தடுத்து நிறுத்தியது. பின்ன…

    • 0 replies
    • 658 views
  24. கென்ய தலைநகரில் ஹோட்டல் மீது தீவிரவாதிகள் தாக்குதல் - 15 பேர் பலி கென்யாவின் தலைநகர் நைரோபியில் இஸ்லாமிய தீவிரவாதிகள் ஹோட்டலொன்றின் மீது மேற்கொண்ட தாக்குதலில் அமெரிக்க பிரஜையொருவர் உட்பட 15ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கென்யாவை உலுக்கியுள்ள இந்த தாக்குதலிற்கு அல் சகாப் அமைப்பு உரிமை கோரியுள்ளது. கென்ய தலைநகரில் உள்ள டியுசுட்டி 2 என்ற கட்டிட வளாகத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.குறிப்பிட்ட வளாகத்தில் ஹோட்டல்கள் உட்பட பல வணிகவளாகங்கள் வெளிநாட்டு நிறுவனங்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. மூன்று மணிக்கு இந்த ஹோட்டல் மீது தாக்குதல் ஆரம்பமாகியுள்ளது. குறிப்பிட்ட ஹோட்டல் அமைந்திருந்த பகுதியிலிருந்து துப்பாக்கிவேட்டுகளையும் குண்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.