உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26884 topics in this forum
-
சர்வதேச மனித உரிமை ஆணையத்தில் நளினி திடீர் மனு! முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிறையிலுள்ள நளினி சர்வதேச மனித உரிமை ஆணையத்தில் மனு அளித்துள்ளார். "25 ஆண்டுகள் சிறையில் இருக்கும் தன்னை விடுவிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். 1991ஆம் ஆண்டு தமிழகம் வந்த ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. இதையடுத்து கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதனிடையே இவர்களது தூக்குத்தண்டனை ரத்து செய்யப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். …
-
- 0 replies
- 426 views
-
-
"பைத்தியம் பிடித்தவரிடம் அணு ஆயுதங்கள்" : கிம் ஜோங்கை விமர்சித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி..! "பைத்தியம் பிடித்தவரிடம் அணுஆயுதங்கள்" என வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார். மேலும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டுட்டெர்ட்டேவுடனான தொலைபேசி உரையாடலின்போது கிம் ஜோங் உன்னை பைத்தியம் பிடித்தவர் என தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுவாயுத பரிசோதனைக்களுக்கெதிராக உலக நாடுகள் மற்றும் ஐக்கியநாடுகள் சபை என்பன விமர்சனங்களை ஏற்படுத்தி இருந்த நிலையில், அமெரிக்கா தனது முழுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தும் முகமாக அந்நாட்டு …
-
- 0 replies
- 829 views
-
-
இன்றைய (24/05/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * அதிகபட்ச ஆபத்தை பிரிட்டன் எதிர்கொள்வதாக அறிவிப்பு; மேன்செஸ்டர் குண்டுதாரி குறித்து கூடுதல் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிப்பு. * பெண்களுக்கு எதிரான வன்முறையை குறைக்கப்போராடும் ஆண்கள்; பெண்களை பாதுகாக்க ஆப்ரிக்காவில் வித்தியாசமான முன்னெடுப்பு. * அமெரிக்க அதிபரின் கொள்கைகள் மெக்ஸிகோ கார் உற்பத்தியை பாதிக்குமா? உலகின் நான்காவது பெரிய கார் உற்பத்தி நாட்டிலிருந்து நேரடி தகவல்கள்.
-
- 0 replies
- 197 views
-
-
பிரிட்டனில் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை உச்சபட்சமாக அதிகரிப்பு படத்தின் காப்புரிமைGETTY IMAGES பிரிட்டனின் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கான அளவு உச்சபட்சமாக நெருக்கடி நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது என்றும், மேலும் உடனடி தாக்குதல் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்றும் தெரீஸா மே கூறியுள்ளார். மான்செஸ்டர் குண்டுவெடிப்பில் சந்தேக நபரான சல்மான் அபெடி தாக்குதல் சம்பவத்தில் தனியோருவராக இயங்கினாரா என்று விசாரணையாளர்கள் முடிவுக்கு வராதததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரீஸா மே குறிப்பிட்டுள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES முக்கிய பகுதிகளை பாதுகாக்க ராணுவப் படையினர் தற்போது …
-
- 0 replies
- 211 views
-
-
சீனாவுடன் ஒப்பிட்டு அமெரிக்க சூழலை புகழ்ந்த சீன மாணவி: வலைத்தளங்களில் சீற்றம் அமெரிக்க பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உரையில், அமெரிக்க ஜனநாயகத்தில் புதிய காற்று வீசுவதாக பாராட்டி பேசிய சீன மாணவி, சமூகவலைத்தளங்களில் வெளியான சீற்றம் மிகுந்த எதிர்வினைகளுக்கு பிறகு மன்னிப்பு கோரியுள்ளார். படத்தின் காப்புரிமைYOUTUBE Image captionசீன மாணவி யாங் சூபிங் மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பேசிய சீன மாணவியான யாங் சூபிங், சீனாவில் நிலவும் காற்று மாசுபாடு மற்றும் அந்நாட்டில் சுதந்திர பேச்சுரிமைக்கு எதிராக நிலவும் கட்டுப்பாடுகளை அமெரிக்காவில் நிலவும் சூழலுடன் ஒப்பிட்டு பேசினார். இதனால் சினமடைந்த சீன சமூகவலைத்தள…
-
- 0 replies
- 376 views
-
-
வாடிகனில் பாப்பரசரை சந்தித்தார் டிரம்ப்..! அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முதல் முறையாக பாப்பரசர் பிரான்சிசை இன்று வாடிகனில் சந்தித்தார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றபின் முதன் முறையாக சவுதி அரேபியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அதன்படி சவுதி அரேபியா, இஸ்ரேல், சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று இத்தாலி வருகை தந்திருந்த அவர், அங்கு வாடிகன் சென்று பாப்பரசரை இன்று சந்தித்தார். தேர்தல் பிரசாரத்தின் போது மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்படும் என டிரம்ப் தெரிவித்து இருந்தார். அதற்கு பாப்பரசர் பிரான்சிஸ் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. http://www.vi…
-
- 6 replies
- 535 views
-
-
வெளியானது மான்செஸ்டர் தற்கொலை தாக்குதல்தாரியின் பெயர்..! மான்செஸ்டர் நகரில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவரின் பெயரை பிரித்தானிய உளவுப்பிரிவினர் வெளியிட்டுள்ளனர். பிரிட்டனின் மான்செஸ்டர் நகரத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது நிகழ்ந்த தற்கொலைபடை குண்டுவெடிப்பில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளதுடன், 58 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த தாக்குதலுக்கு தாம் பொறுப்பேற்பதாக, ஐஎஸ் தீவிரவாத அமைப்பு டெலிகிராம் மூலமான செய்தி ஒன்றை அனுப்பி இருந்தது. ஆனால் குறித்த செய்தி குறித்து எவ்வித கருத்துக்களையும் வெளியிடாமல் இருந்த பிரித்தானிய பாதுகாப்பு பிரிவானது, லிபியாவிலிருந்து சிறு வய…
-
- 0 replies
- 234 views
-
-
அண்டார்டிகாவில் இருந்து குடிநீர் எடுக்க ஐக்கிய அமீரகம் திட்டம்! அண்டார்டிகாவில் இருந்து ஐக்கிய அரபு நாடுகளுக்கு குடிநீர் எடுக்கும் திட்டத்தை 2019-ம் ஆண்டிற்குள் தொடங்க, அமீரக நாடுகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வர்த்தக தலைநகராக விளங்கும் ஐக்கிய அரசு நாடுகள் எண்ணெய் வளத்தில் செழித்து காணப்படுகின்றன. இருப்பினும், அங்கு போதிய மழையின்றி மக்களிடையே குடிநீர் பிரச்சனை நிலவி வருகிறது. மழை என்பதே அரிதான ஒன்றாகும். எனவே அங்கு கடல்நீரை குடிநீராக்கி தண்ணீர்ப் பிரச்சனையை சமாளித்து வருகின்றனர். தற்போது குடிநீர் பிரச்சனையை தீர்க்க பனிப்பாறகைளை வெட்டி எடுத்து அதனை தண்ணீராக்க, அரபு நாடுகள் திட்டமிட்டுள்ளன. இதற்காக புஜைரா துறைமுகத்தில் சிறப்பு …
-
- 3 replies
- 580 views
-
-
மான்செஸ்டர் குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர் அடையாளம் காணப்பட்டார்! பிரித்தானியாவின் மான்செஸ்டர் நகரில் 22 பேரை பலிகொண்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியை காவல்துறை அடையாளம் கண்டுள்ளனர். பிரித்தானியாவின் மான்செஸ்டர் நகரத்தில் அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி ஏரியனா கிராண்ட்டின் இசை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சுமார் 10.30 மணியளவில் நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கில் பலத்த சத்தத்துடன் குண்டுகள் வெடித்தது. இதனால் அங்கு குழுமியிருந்த 22 பேர் உயிரிழந்தனர். சுமார் 58-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு எந்த தீவிரவாத அமைப்புகளும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. எனினும் ஐ.எ…
-
- 1 reply
- 448 views
-
-
இன்றைய (23/05/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * மேன்செஸ்டரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 22 பேர் பலி; 59 பேர் காயம்; இசை கேட்கச்சென்று உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் இளம்பிராயத்தினரும் அடக்கம். * இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அமைப்பு மேன்செஸ்டர் தாக்குலதலுக்கு பொறுப்பேற்பு; 23 வயதுடைய நபர் இது தொடர்பில் கைது. * பாலஸ்தீன தலைவர் மஹ்மூத் அப்பாஸை சந்தித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்; இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கு இடையில் சமாதானம் உருவாக்க தன்னால் முடிந்ததையெல்லாம் செய்வேன் என்று அறிவிப்பு.
-
- 0 replies
- 368 views
-
-
பிரபல சாமியார் சந்திராசாமி டெல்லியில் காலமானார் நீண்ட காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல சாமியார் சந்திராசாமி டெல்லியில் இன்று காலமானார். அவருக்கு வயது 69. புதுடெல்லி: முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் சாமியார் சந்திராசாமி. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய ஜெயின் கமிஷன், இந்த வழக்கில் சாமியார் சந்திராசாமியிடம் விசாரிக்கப்பட வேண்டும் என தனது அறிக்க…
-
- 4 replies
- 2.1k views
-
-
ஜேம்ஸ் பொண்ட் காலமானார் 'ஜேம்ஸ் பொண்ட் 007' தொடரில் உளவு அதிகாரியாக நடித்த புகழ்பெற்ற நடிகர் சேர் ரோஜர் மூர், தனது 89ஆவது வயதில் காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சுவிற்சர்லாந்திலுள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று (23) உயிரிழந்துள்ளார் என, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மூர், 1973ஆண்டுக்கும் 1985ஆம் ஆண்டுக்கும் இடையில் வெளியிடப்பட்ட ஏழு திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/popularity/ஜேம்ஸ்-பொண்ட்-காலமானார்/97-197195 முன்னாள் ஜேம்ஸ் பாண்ட் ரோஜர் மூர் காலமானார்! ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில்…
-
- 3 replies
- 697 views
-
-
பிரித்தானியாவில் குண்டுவெடிப்பு!19 பேர் வரை உயிரிழப்பு!50 பேர் வரையில் காயம்!தீவிரவாதத் தாக்குதலென காவற்துறை தெரிவிப்பு! Manchester Arena blast: 19 dead and about 50 hurt. BBC.
-
- 9 replies
- 1.1k views
-
-
இன்றைய (22/05/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * அமெரிக்க இஸ்ரேல் உறவு உடைக்க முடியாத உறவுப்பாலம் என்கிறார் டொனால்ட் ட்ரம்ப்; இஸ்ரேல் சென்றுள்ள அமெரிக்க அதிபர் நம்பிக்கை. * யெமெனில் வேகமாக பரவும் காலரா; இதுவரை இருநூற்று ஐம்பது பேர் பலி; மோசமான கொள்ளைநோயாக மாறுமென ஐநா எச்சரிக்கை. * அனைத்து மகளிர் ஆப்கான் தொலைக்காட்சி; ஊடகத்துறையில் பெண்ணுரிமைக்குரல்களைப் பெண்களே முன்னெடுக்கும் வித்தியாசமான முயற்சி.
-
- 0 replies
- 252 views
-
-
இஸ்ரேல் வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப் அமெரிக்க அதிபர் டொல்டு டிரம்ப்பின் முதல் வெளிநாட்டுப் பயணத்தில், சௌதி அரேபியாவை அடுத்து தற்போதுஇஸ்ரேலை வந்தடைந்துவிட்டார். படத்தின் காப்புரிமைREUTERS அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியான சௌதி அரேபியாவில் இஸ்லாமிய தலைவர்களிடம் பேசிய பிறகு, விமானம் மூலம் இஸ்ரேல் வந்தடைந்தார். தனது இரண்டு நாள் பயணத்தில், டிரம்ப் இஸ்ரேல் மற்றும் பாலத்தீன தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். இஸ்ரேலிய-பாலத்தீன தரப்புகளுக்கிடையே ஏற்படக்கூடிய ஒரு அமைதி ஒப்பந்தத்தை ''இறுதி ஒப்பந்தம்'' என்று அதிபர் டிரம்ப் கூறியி்ருந்தார். ஆனால், அந்த ஒப்பந்தம் எந்த வடிவை எடுக்க வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இல்லை. இரு நாடுகளும் அ…
-
- 2 replies
- 636 views
- 1 follower
-
-
7500 சட்டவிரோத அகதிகளை வெளியேற்ற முடிவு : அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவிப்பு அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ள சட்டவிரோத அகதிகள் சுமார் 7500 பேரை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு அரசாங்க தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் அவுஸ்திரேலியாவில் போதிய காரணங்கள் இன்றி, இலங்கை, மியான்மர் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தஅகதிகள் தஞ்சமடைந்துள்ளமையினால் அரசிற்கு பொருளாதார நெருக்கடி நிலைமை தோன்றியுள்ளதாக அந்நாட்டு குடிவரவு அமைச்சர் பீட்டர் டைட்டன் தெரிவித்துள்ளார். அத்தோடு போதுமான காரணங்கள் இல்லாமல் சிலர் தங்கியிருப்பதாகவும், அவர்கள் தம்மை அகதிகளாக பதிவு செய்வதற்கு பொய்யான காரணங்களை அளித்து, சட்டவிரோதமாக நாட்டிற்குள் தங்கியுள…
-
- 0 replies
- 238 views
-
-
தீவிரவாதத்தை விரட்டியடிக்க முஸ்லிம் நாடுகளுக்கு டிரம்ப் வலியுறுத்தல் தீவிரவாதத்தை விரட்டியடிப்பதில் முஸ்லிம் நாடுகள் முன்னின்று செயல்பட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக செளதி சென்றுள்ள அவர், ரியாத்தில், முஸ்லிம் நாடுகளின் 55 பிராந்தியத் தலைவர்கள் கூட்டத்தில் பேசும்போது இந்தக் கருத்தை வலியுறுத்தினார். தனது ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது, முஸ்லிம் நாடுகளை வெறுப்புக்கு உள்ளாக்கும் வகையில் பேசிய அவர், தற்போது அவர்களுடன் ஓர் இணக்கமான உறவை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகப் பார்க்கப்படுகிறது. புதிய அத்தியாயம் துவங்கியிருப்பதாகக் கூறிய அவர், இது மாறுபட்ட மதங்களுக்கிடையிலான போர் அல்ல என்றும்…
-
- 0 replies
- 329 views
-
-
சர்வதேச நாடுகளின் கோரிக்கைகளை மீறி வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை படத்தின் காப்புரிமைGETTY IMAGES வட கொரியா மேலும் ஒரு ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதாக தென் கொரிய ராணுவம் கூறியுள்ளது. இன்று (ஞாயிறு) மதியம் உள்ளூர் நேரப்படி ஏவுகணை ஏவப்பட்டதாக தென் கொரியாவின் கூட்டுப்படைகளின் அலுவலகங்கள் கூறியுள்ளது. வட கொரியா ஒருவாரத்திற்கு முன்னர் ஏவுகணை ஒன்றை பரிசோதித்த நிலையில் தற்போது மீண்டும் ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது. முன்பு நடத்தப்பட்ட ஏவுகணை சோதனையை அடுத்து, இந்த ராக்கெட் பெரிய அணு ஆயுதம் ஒன்றை தாங்கிச்செல்லும் திறன் படைத்தது என்று வட கொரியா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. படத்தின் காப்புர…
-
- 0 replies
- 264 views
-
-
எவரெஸ்ட் சிகரத்தின் முக்கிய முனை வீழ்ந்தது படத்தின் காப்புரிமைSTR/AFP/GETTY IMAGES எவரெஸ்ட் சிகரத்தின் முக்கிய அம்சமாக கருதப்பட்ட ஹிலாரி முனை சேதமாகியுள்ளது. இதன் காரணத்தால் உலகிலேயே மிக உயரமான மலை இனிவரும் காலங்களில் மலை ஏறுபவர்களுக்கு மிகவும் ஆபத்து நிறைந்ததாக மாறலாம். 2015 ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக எவரெஸ்ட் சிகரத்திலிருந்த ஹிலாரி முனை சேதமடைந்திருக்கலாம் என்று மலை ஏறுபவர்கள் கூறுகின்றனர். மலையில் தென்கிழக்கு முனையில் சுமார் 12 மீட்டர் உயரத்திற்கு பாறைகள் உடைய பகுதியாக இது இருந்தது. மலையின் உச்சியை அடைவதற்கு இந்தப் பகுதிதான் இறுதி பெரும் சவலாக இருந்துவந்தது. பட…
-
- 0 replies
- 548 views
-
-
ஆப்கானிஸ்தான் துணை ஜனாதிபதி நாட்டை விட்டு தப்பியோட்டம் ஆப்கானிஸ்தானின் துணை ஜனாதிபதி அப்துல் ராசிட் டஸ்ரம் ( Abdul Rashid Dostum ) நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசியல் போட்டியாளர்களை கடத்தவும், கொலை செய்யவும், பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உட்படுத்தவும் துணை ஜனாதிபதி அப்துல் ராசிட் தனது அடியாட்களுக்கு உத்தரவிட்டார் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அப்துல் ராசிட் நாட்டை விட்டு வெளியேறி துருக்கிக்கு சென்றுள்ளதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உத்தியோகபூர்வமாக எவ்வித குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. குற்றச்சாட்டுக்கள் குறித்து…
-
- 0 replies
- 343 views
-
-
ஐரோப்பிய அகதிகள் பிரச்னைக்கு முக்கிய காரணமே ஜேர்மனி ஜனாதிபதி ஏஞ்சலா மெர்க்கல் தான் என போலந்தின் பழைமைவாத ஆளுங்கட்சியின் தலைவர் காசியின்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.அகதிகளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பகிர்ந்து கொள்வது குறித்த விடயத்திலேயே காசியின்ஸ்கி இவ்வாறு கூறியுள்ளார்.இதற்கு முன் அகதிகள் போலந்து நாட்டிற்கு நோய்களையும், கிருமிகளையும் கொண்டு வந்து விடுவர் என்ற அவர் கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியிருந்தது. அகதிகள் பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும், சிலர் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்தும் வந்துள்ளனர். தற்போது இவர்கள் க்ரீஸ்சிலும், இத்தாலியிலும் தங்கியுள்ளனர்.ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒவ்வொரு உறுப்பு நாடுகளும் தலா 160,000 அகதி…
-
- 0 replies
- 301 views
-
-
அமெரிக்காவின் 20 சிஐஏ உளவாளிகளை சீனா கொன்றதா? கடந்த 2010 முதல் 2012-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமையை (சிஐஏ ) சேர்ந்த சுமார் 20 உளவாளிகளை சீன அரசு கொன்றோ அல்லது சிறையில் அடைத்தோ அந்நாட்டில் பல ஆண்டுகளாக நடந்து வந்த அமெரிக்காவின் ரகசிய தகவல் சேகரிப்பு பணியை சேதப்படுத்தியதாக நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. படத்தின் காப்புரிமைAFP Image captionபீஜிங்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் காவல் பணியில் உள்ள சீன போலீசார் சிஐஏ முகவர்களை சீன அரசு அடையாளம் காண அந்த அமைப்புக்குள் ஊடுருவப்பட்டதா அல்லது ஊடுருவல் முகவர்கள் மூலம் அவர்கள் அடையாளம் காண…
-
- 0 replies
- 352 views
-
-
இரானில் பழமைவாதியை தோற்கடித்த மிதவாதி; மீண்டும் அதிபரானார் ஹசன் ரூஹானி படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇரண்டாவது முறையாக இரானின் அதிபரானார் ஹசன் ரூஹானி இரான் அதிபர் ஹசன் ரூஹானி, அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. தேர்தலில் பதிவான சுமார் 40 மில்லியன் வாக்குகளில், இதுவரை எண்ணப்பட்டதில் பாதிக்கும் மேற்பட்ட வாக்குகளை ரூஹானி பெற்றுள்ளதாகவும், சில பகுதிகளில் முடிவுகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகள் தொலைக்காட்சியில் அறிவித்தனர். மிதவாத தலைவராக அறியப்படும் ரூஹானி உலக முன்னணி நாடுகளுடன் ஏற்…
-
- 0 replies
- 322 views
-
-
இருபது ரூபாய் கேட்ட மனைவியை விவாகரத்து செய்த கணவர்! உத்திரபிரதேசத்தில் 20 ரூபாய் கேட்ட மனைவியை கணவர் விவாகரத்து செய்துள்ளார்.இஸ்லாமிய முறைப்படி மூன்று முறை தலாக் சொல்லி விட்டால், கணவன் மனைவி உறவு முடிந்துவிட்டது என்று அர்த்தம். இந்த தலாக் முறையால் இஸ்லாமிய பெண்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர்.இந்நிலையில், Shazia என்ற பெண்மணி தனது கணவனிடம் 20 ரூபாய் கேட்ட குற்றத்திற்காக தலாக் சொல்லி விவாகரத்து வழங்கியுள்ளார். Shazia - க்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர், இவரது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனை அறிந்த Shazia- தனது கணவருடன் பலமுறை சண்டையிட்டுள்ளார்.இதற்கிடையில், சம்பவம் நடைபெற்ற அன்று தனது…
-
- 10 replies
- 863 views
-
-
செளதி வந்தடைந்தார் அதிபர் டிரம்ப்; தயார் நிலையில் பல பில்லியன் டாலர் ஒப்பந்தங்கள் படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முதல் வெளிநாட்டு பயணம் ரியாத்திலிருந்து தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்கா - செளதி அரேபியா இடையே இன்று (சனிக்கிழமை) பல பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இன்று (சனிக்கிழமை) காலை உள்ளூர் நேரப்படி, செளதி தலைநகரில் மன்னர் சல்மான், அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவை வரவேற்றார். அதிபர் டிரம்பின் 8 நாள் பயணத்தில் இஸ்ரேல், பாலத்தீன பிராந்தியங்கள், பிரஸ்ஸல்ஸ், வத்திக்கான் மற்றும் சிஸிலி ஆகிய இடங்கள் இடம்பெறுகின்றன. படத்தி…
-
- 0 replies
- 242 views
-