உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26609 topics in this forum
-
தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் அமைச்சர் மரணம்! தலைநகர் காபூலில் புதன்கிழமை (11) நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் அகதிகளுக்கான ஆப்கானிஸ்தானின் அமைச்சர் கலீல் ஹக்கானி (Khalil Haqqani) கொல்லப்பட்டதாக அந்நாட்டின் தலிபான் ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஹக்கானி தனது அலுவலகத்தை விட்டு வெளியேறும் போது, நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் மேலும் 6 பேர் உயிரிழந்ததாக உள்துறை அமைச்சு வட்டாரங்கள் சுட்டிக்காட்டின. இவர், ஹக்கானி நெட்வொர்க் என்று அழைக்கப்படும் தலிபானின் சக்திவாய்ந்த பிரிவின் முக்கிய உறுப்பினராக இருந்தார், மேலும் அவர் அமெரிக்காவால் உலகளாவிய பயங்கரவாதியாக அடையாளம் காணப்பட்டார். இந்த தாக்குதலுக்கு, இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) அமைப்பு பொறுப்பேற்றது. …
-
- 0 replies
- 173 views
-
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்! சிரியாவின் முன்னாள் ஜனாதிபதியும் ஆட்சி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி பஷர் அல் - அஷாட்டின் தந்தையுமான ஹபீஸ் அல் - அசாட்டின் கல்லறையைக் கிளர்ச்சியாளர்கள் தீ வைத்து அழித்துள்ளனர். 54 ஆண்டு கால ஆட்சியைக் கவிழ்ந்துள்ள கிளர்ச்சியாளர்கள், முன்னாள் ஜனாதிபதியின் சொந்த ஊரில் உள்ள கல்லறையையே இவ்வாறு அழித்துள்ளனர். அதேநேரம், ஆட்சி கவிழ்க்கப்பட்ட சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷர் அல் - அஷாட், ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளார். ரஷ்யாவின் பிரதி பாதுகாப்பு அமைச்சர் இதனை ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார். இவ்வாறான பின்னணியில் சிரியாவில் உள்ள பல ஆயுத களஞ்சிய சாலைகளை இலக்கு வைத்து வான்வழித்…
-
-
- 223 replies
- 12.7k views
-
-
சிரியாவின் அசாத்தின் நிலவறைக்குள்…! – சித்திரவதை மற்றும் சொல்ல முடியாத கொடுமைக்கான ஆதாரங்கள் சிரிய தலைநகரின் புறநகர் பகுதியில் – நீண்ட கால சர்வாதிகாரியின் பிடியிலிருந்து நாடு விடுபடுவதற்கு குறித்த நம்பிக்கைகளின் மத்தியில் அசாத் அரசாங்கத்தின் கொடுமைகள் குறித்து வெளிவரும் தகவல்கள் குழப்பத்தை ஏற்படுத்துபவையாக காணப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் அந்த சிறைச்சாலைக்கு விரைந்தவண்ணமிருந்தனர். கண்ணிற்கு தெரியாத ஆழத்தில் காணாமல்போய்விட்டதாக, அவர்கள் கருதும் தங்கள் அன்புக்குரியவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள் என்பதற்கான அடையாளங்கள் ஏதாவது உள்ளதா என்பதை அறிவதற்காககவே அவர்கள் அந்த சிறைச்சாலைக்கு சென்றுகொண்டிருந்தனர். மனித உரிமை மீறல்களிற்கு பெயர் போன அந்த சிறைச்சா…
-
-
- 13 replies
- 1k views
-
-
சிரியாவின் புதிய அரசின் பிரதமராக முகமது அல் பஷீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே முக்கியத் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் உரையாற்றிய அவர், அடுத்தாண்டு மார்ச் ஒன்றாம் தேதி வரை இடைக்கால அரசு செயல்படும் என்று அறிவித்தார். அபு முகமது அல் கோலனி தலைமையிலான கிளர்ச்சி படைகள், கடந்த சில நாள்களாக முன்னேறி, தலைநகர் டமாஸ்கஸை கடந்த 8 ஆம் தேதி அடைந்தன. அப்போது அந்நாட்டு அதிபர் பஷார் அசாத், ரஷ்யா தப்பிச் சென்றார். இப்படியான சூழலில், சிரியா தங்கள் கட்டுபாட்டுக்குள் வந்ததாக கிளர்ச்சி படைகள் அறிவித்த நிலையில், அரசாங்கம் கிளர்ச்சிப் படைகளிடம் கொடுக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/313543
-
- 7 replies
- 476 views
- 1 follower
-
-
சிரியாவின் கடற்படை, இராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் சரமாரியான தாக்குதல்! ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து அந்நாட்டு இராணுவம் விட்டுச் சென்ற ஆயுதங்களை அழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கடந்த இரு நாட்களில் நூற்றுக்கணக்கான சிரியாவின் கடற்படை மற்றும் பிற இராணுவ சொத்துக்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேலிய ஏவுகணைக் கப்பல்கள் அசாத்தின் படைகளுக்குச் சொந்தமான கடற்படைக் கப்பல்களை அழித்தன, அவை 120 மைல்கள் வரை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் திங்கட்கிழமை ஒரு அறிக்கையில், லதாகியா மற்றும் எல் பெய்டா விரிகுடாவின் துறைமுகப் பகுதியில் இந்த தாக்குதல்கள் நடத்தியதாக கூ…
-
-
- 3 replies
- 732 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு ஆபத்து.!
-
-
- 26 replies
- 1.2k views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, சமீப மாதங்களில் ரஷ்யா கிழக்கு யுக்ரேன் பிராந்தியத்தில் நிலையாக முன்னேறி வருகிறது எழுதியவர், பால் ஆடம்ஸ் பதவி, பிபிசி செய்திகள் இந்த 2024-ஆம் ஆண்டு முடியப்போகிறது. குளிர் காலமும் வந்துவிட்ட நிலையில், ரஷ்யப் படைகள் யுக்ரேன் படைகளைப் தொடர்ந்து பின்னுக்குத் தள்ளி சண்டையிட்டு வருகிறது. மொத்தமாக, கிழக்கு உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் பிராந்தியத்தில் சுமார் 2,350 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை ரஷ்யா கைப்பற்றியுள்ளது மற்றும் மீட்டுள்ளது இதில் பயங்கரமான உயிர்சேதங்களும் ஏற்பட்டுள்ளன. "நவம்பரில், 45,680 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பிப்ரவரி 2022 இல் போர் தொடங்கி…
-
- 0 replies
- 269 views
- 1 follower
-
-
சிரியா விவகாரம் தொடர்பான ஐ.நா.வின் அறிக்கை விரைவில்! ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் உறுப்பினர்கள் எதிர்வரும் நாட்களில் சிரியா குறித்த அறிக்கையை வெளியிடுவார்கள் என்று அமெரிக்க மற்றும் ரஷ்ய இராஜதந்திரிகள் திங்களன்று (10) தெரிவித்தனர். தலைநகர் டமாஸ்கஸை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியது மற்றும் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தை வெளியேற்றியது குறித்து ஐ.நா.வின் மூடிய கதவு கூட்டத்திற்குப் பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது. 15 உறுப்பினர்களை கொண்ட கூட்டத்தின் பின்னர் உரையாற்றிய ரஷ்யாவுக்கான ஐ.நா.வின் தூதுவர் வசிலி நெபென்சியா (Vassily Nebenzia), சிரியாவின் பிராந்திய ஒருமைப்பாடு, ஒற்றுமையைப் பாதுகாப்பது, குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் தேவைப்படும் மக்…
-
- 0 replies
- 308 views
-
-
ஹெய்ட்டியில் ஆயுதகுழுக்களால் 100க்கும் அதிகமானவர் படுகொலை - சர்வதேச ஊடகங்கள் 10 Dec, 2024 | 12:16 PM ஹெய்ட்டில் ஆயுத குழுக்கள் வார இறுதியில் 110 பேரை கொலை செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹெய்;ட்டியின் தலைநகரில் வறியமக்கள் வசிக்கும் பகுதியில் இந்த படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. உள்ளுர் கும்பலொன்றி;ன்தலைவரின் தனி;ப்பட்ட பழிவாங்கும் செயல் இதுவென தெரிவித்துள்ள மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. வார்வ் ஜெரெமி குழுவின் தலைவர் மொனெல் மிக்கானோ பெலிக்ஸ் தனது பிள்ளை உடல்நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த படுகொலைக்கு உத்தரவ…
-
- 3 replies
- 220 views
-
-
தாய்வானின் அருகே சீன போர்க் கப்பல்கள்; பாதுகாப்பினை அதிகரித்த தைபே! தாய்வானின் இராணுவம் திங்களன்று (09) அவசரகால பதிலளிப்பு மையத்தை அமைத்து அதன் எச்சரிக்கை நிலையை உயர்த்தியதுடன், போர் தயார் நிலைப் பயிற்சிகளையும் தொடங்கியுள்ளது. தாய்வான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியத்திற்கு அருகிலுள்ள கடல் பகுதியில் சீனா கிட்டத்தட்ட 90 கடற்படை, கடலோர காவல்படை கப்பல்களை வைத்திருப்பதாக தைபே பாதுகாப்பு வட்டாரம் ரொய்ட்டர் செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளது. போர்க்கப்பல்களைப் பொறுத்தவரை, வார இறுதியில் அதன் எண்ணிக்கை 08 இல் இருந்து 14 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தாய்வானை தனது சொந்தப் பிரதேசம் என்று கூறிவரும் சீனா, தாய்வான் ஜனாதிபதி லாய் சிங்-தேவின் பசிபிக் பயணத்திற்கு ப…
-
- 0 replies
- 200 views
-
-
அமெரிக்க கேபிடல் கலவரத்தில் ஈடுபட்டோருக்கு ட்ரம்ப் மன்னிப்பு! அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், அடுத்த மாதம் பதவியேற்கும் முதல் நாளில், 2021 அமெரிக்க கேபிடல் கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கப் போவதாக அறிவித்துள்ளார். அதேநேரம், 2024 ஜனவரி 6 கேபிடல் கலவரத்தை விசாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த லிஸ் செனி மற்றும் அவரது சக ஹவுஸ் கமிட்டி உறுப்பினர்களுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார். தனது மகனுக்கு பொது மன்னிப்பு வழங்கிய தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீது நீதித்துறை விசாரணையை நாடமாட்டேன் என்று ட்ரம்ப் கூறியதுடன், கேபிடல் கலவரத்தை விசாரித்த சட்டமியற்றுபவர்கள் உட்பட அவரது அரசியல் எதிரிகள் சிலர் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என…
-
- 1 reply
- 237 views
-
-
சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி ரஷ்யாவில் தஞ்சம்! பதவி நீக்கம் செய்யப்பட்ட சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல்-அசாத் (Bashar al-Assad) தனது குடும்பத்துடன் மொஸ்கோவிற்கு வந்தடைந்தார், அங்கு அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் ரஷ்யா புகலிடம் வழங்கியதாக கிரெம்ளின் வட்டாரம் தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிகாரிகள் ஆயுதமேந்திய சிரிய எதிர்ப்பின் பிரதிநிதிகளுடன் தொடர்பில் உள்ளனர், அவர்களது தலைவர்கள் சிரியாவில் உள்ள ரஷ்ய இராணுவ தளங்கள் மற்றும் இராஜதந்திர பணிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளித்துள்ளனர். சிரிய மக்களின் நலன்களைப் பாதுகாக்கவும் ரஷ்யாவிற்கும் சிரியாவிற்கும் இடையிலான உறவுகளை மேலும் மேம்படுத்தவும் அரசியல் உரையாடலைத் தொடர மொஸ்கோ எதிர்பார்த்துள்ளதாகவும் கிரெம்ளின் வட்டாரம்…
-
-
- 30 replies
- 1.4k views
-
-
சிரியா: 'அசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், நாடு விடுவிக்கப்பட்டது' எனக் கூறும் கிளர்ச்சியாளர்கள் 8 டிசம்பர் 2024, 03:48 GMT Getty Images அதிபர் வெளியேறியதனை அடுத்து, டமாஸ்கஸில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் புதுப்பிக்கப்பட்டது 3 நிமிடங்களுக்கு முன்னர் 'மோசமான ஆட்சியாளர்' அதிபர் பஷார் அல் அசாத் சிரியாவை விட்டு வெளியேறிவிட்டார் என கூறியுள்ள கிளர்ச்சி படைகள், நாடு 'விடுவிக்கப்பட்டது' எனவும் அறிவித்துள்ளன. ஒரு இருண்ட சகாப்தத்தின் முடிவு மற்றும் புதிய சகாப்தத்தின் ஆரம்பம் என்று டெலிகிராம் செயலியில் ஹயத் தஹ்ரிர் அல் ஷாம் கிளர்ச்சி குழு குறிப்பிட்டுள்ளது. ஹயத் தஹ்ரிர் அல் ஷாம், அதன் தாக்குதலை ஒ…
-
-
- 60 replies
- 3.4k views
- 1 follower
-
-
பிரான்ஸில் 5 ஆண்டுகளின் பின் திறக்கப்படும் தேவாலயம்; பல உலகத்தலைவர்கள் பங்கேற்பு Shar விளம்பரமபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள நோட்ரே டேம் தேவாலயம் 5 ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்களின் வழிபாடுகளுக்காக திறக்கப்பட உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு குறித்த தேவாலயத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து சுமார் 750 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டு இந்த தேவாலயம் புனரமைக்கப்பட்டுள்ளது. அதேவேளை இந்த தேவாலய திறப்பு விழாவில் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் உட்பட பல உலகத் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர்.
-
- 1 reply
- 274 views
-
-
சிரியாவின் முக்கிய நகரங்களை கைப்பற்றிய கிளர்ச்சிப் படைகள்: வெளியேறிய ராணுவம் - நடப்பது என்ன? டமாஸ்கஸ்: சிரியாவில் கிளர்ச்சி படைகளின் தொடர் தாக்குதலால், அந்நாட்டு ராணுவம் தெற்கின் பெரும்பான பகுதிகளில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், தரா மற்றும் ஸ்வீடா நகரங்களை கிளர்ச்சிப் படைகள் கைப்பற்றின. 2011-ம் ஆண்டு அதிபர் பஷார் அல்-ஆசாத்துக்கு எதிராக தராவில் இருந்துதான் கிளர்ச்சி தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வாரத்தில் சிரியாவின் ராணுவம் இழந்திருக்கும் நான்காவது மிகப் பெரிய நகரம்தான் தரா. கடந்த மாத இறுதியில் சிரியாவின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான அலெப்போவில் இருந்து அரசுப் படைகள் விரைவாக வெளியேறியதால், அந்த நகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற…
-
-
- 1 reply
- 352 views
-
-
06 DEC, 2024 | 08:03 PM இஸ்ரேலிய படையினர் வடகாசாவில் உள்ள கமால் அத்வான் மருத்துவமனை மீது மேற்கொண்ட தாக்குதலில் நான்கு மருத்துவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் இந்த தாக்குதல் காரணமாக மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகளில் பலர் கொல்லப்பட்டுள்ளனர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலிய படையினர் மருத்துவபணியாளர்களையும் நோயாளிகளையும் மருத்துவமனையிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்ட பின்னர் முக்கியமான மருத்துவ விநியோக பொருட்களை அழித்தனர் என மருத்துவமனையின் இயக்குநர் ஹ_சாம் அபு சாபியா தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை அதிகாலை சீருடையணியாத இருவரை மருத்துவமனைக்குள் அனுப்பிய இஸ்ரேலிய …
-
- 1 reply
- 360 views
- 1 follower
-
-
06 DEC, 2024 | 10:55 AM உலகம் அணுவாயுத யுகத்தின் விளிம்பில் உள்ளதாக பிரிட்டனின் ஆயுத படை தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகம் மாற்றமடைந்துவிட்டது என தெரிவித்துள்ள அட்மிரல் சேர் டொனி ரடக்கின் உலகளாவிய சக்தி மாறுகின்றது, மூன்றாவது அணுசக்தி யுகத்தை எதிர்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். இந்த யுகம் அதற்கு முந்தைய அணுசக்தியுகத்தை விட சிக்கலானது என தெரிவித்துள்ள பிரிட்டனின் ஆயுதப்படைகளின் தளபதி இந்த யுகத்தின் முதலாவது பனிப்போர், இரண்டாவது யுகத்தில் ஆயுதகளைவு முயற்சிகள் இடம்பெற்றன என தெரிவித்துள்ளார். உக்ரைனில் ரஸ்யாவின் யுத்தமும் மத்தியகிழக்கின் பல்வேறு யுத்தங்களும், உலகின் சமநிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன எனவும்…
-
- 2 replies
- 314 views
- 1 follower
-
-
மனிதர்களை ஆவியாக்கும் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை ‘காசா’வில் இஸ்ரேல் பயன்படுத்துவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட குறித்த ஆயுதங்களை இஸ்ரேலிய இராணுவம் வடக்கு காசா பகுதியில் பயன்படுத்தியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வடக்கு காசா பகுதியில் உள்ள குடிமக்கள் மற்றும் மருத்துவர்கள் அளித்த சாட்சியங்களின்படி இதுவரை கண்டிராத புதியவகை ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளதாகத் தெரிகிறது. இந்த ஆயுதங்கள் மக்களை ஆவியாகச் செய்வதாக காசா சுகாதார அமைச்சக இயக்குனர் ஜெனரல் முனிர் அல்-புர்ஷ் தெரிவித்துள்ளார். அல் ஜசீரா ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில், இஸ்ரேலியப் படைகள் இதுவரை அறியப்படாத ஆயுதங்களை பயன்படுத்துகின்றன, இதன் விளைவாக மனித உடல்கள…
-
- 1 reply
- 427 views
- 1 follower
-
-
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.0 ஆக பதிவானது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும் அது சற்று நேரத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டது. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வடக்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கலிபோர்னியாவின் கடலோர பகுதியான கேப் மெண்டோசினா பகுதியில் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் சற்று அதிகமாக உணரப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால், மக்கள் பீதி அடைந்தனர். கடலோர பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். எனினும் சிறிது நேரத்தில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. முன்னதாக நிலநடுக்கத்தால் வீடுகளில் இருந்த பொருட்கள் அதிர்ந்தன. இது த…
-
-
- 3 replies
- 565 views
- 1 follower
-
-
வியட்நாமை உலுக்கிய வங்கி மோசடி; பெண் தொழிலதிபருக்கு மரண தண்டனை வியட்நாம் வங்கியில் 12 பில்லியன் டாலர் மோசடியில் ஈடுபட்ட பெண் தொழிலதிபர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. வியட்நாமின் ஹோ சி மின் நகரைச் சேர்ந்தவர் ட்ரோங் மை லான்(68). அந்நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர். ஆரம்ப காலத்தில் வறுமையில் வாடிய இவர், மார்க்கெட்டில் வேலைபார்த்து வந்தார். பிறகு தாயாருடன் சேர்ந்து அழகுசாதன பொருட்களை விற்கத் துவங்கினார். பொருளாதார சீர்திருத்தம் காரணமாக 1986 ல் அவர் தனது தொழிலை விரிவாக்கம் செய்தார். 1990ல் ஹோட்டல் மற்றும் உணவகம் துவக்கினார். பிறகு ‘Van Thinh Phat Group’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் துவங்கி அதில் கொடி கட்டிப் பறந்தார். 2022ம் ஆண்டு அக்., …
-
- 0 replies
- 250 views
-
-
பிரான்ஸ் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி December 5, 2024 07:29 am பிரான்ஸ் பிரதமர் மைக்கேல் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்துள்ளதால் ஆட்சி கவிழ்ந்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் பிரான்ஸ் அரசாங்கம் கவிழ்க்கப்படுவது இதுவே முதல்முறையாகும். பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 577 உறுப்பினர்களில் 331 பேர் பார்னியர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இதனால் பிரான்சில் ஆட்சி கவிழ்ந்துள்ளது. இது ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு கடும் பின்னடைவாகவே பார்க்கப்படுகின்றது. மேலும், பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரனும் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொட…
-
- 1 reply
- 212 views
-
-
மலேசியா, தாய்லாந்தில் மழை, வெள்ளத்தில் சிக்கி 30 பேர் உயிரிழந்துள்ளனர். மலேசியாவில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக மலேசியாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் கடந்த 6 மாதங்களில் பெய்த மழையை விட கடந்த 5 நாட்களில் அதிக அளவு மழை கொட்டித் தீர்த்துள்ளது. தொடர் கனமழை காரணமாக மலேசியாவின் கிளந்தான், திரங்கானு உள்ளிட்ட மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்களை மீட்பு படையினர் படகுகள் மூலம் மீட்டு வருகின்றனர். சாலைகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் மலேசியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புக…
-
- 0 replies
- 502 views
- 1 follower
-
-
‘பல விஷயங்களை முயற்சிக்கும் ஆய்வுக் கூடம் இந்தியா’’ என மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் சமீபத்தில் அளித்த ரேடியோ பேட்டியில் கூறியிருப்பதாவது: சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி போன்ற பல கடினமான விஷயங்களில் முன்னேற்றம் காணும் நாட்டுக்கு உதாரணமாக இந்தியாவை கூறலாம். இந்திய அரசு போதிய அளவில் வருவாய் ஈட்டி நிலைத்தன்மையுடன் உள்ளது. அதன் காரணமாக, இன்னும் 20 ஆண்டுகளில் மக்கள் சிறந்த நிலைக்கு செல்லும் வாய்ப்புகள் உள்ளன. பல விஷயங்களை முயற்சிக்கும் ஆய்வுக் கூடமாக இந்தியா உள்ளது. அதன் வெற்றியை இந்தியாவில் நிருபிக்கும்போது, அந்த நடைமுறையை நாம் பிற இடங்களுக்கு எடுத்துச் செல்லலாம். வெளிநாடுகளில் இருக்கும் மைக்ர…
-
- 2 replies
- 417 views
- 1 follower
-
-
04 DEC, 2024 | 01:50 PM இஸ்ரேல் இனப்படுகொலையிலும் இனச்சுத்திகரிப்பிலும் ஈடுபடுகின்றது என இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மோசே யலூன் குற்றம்சாட்டியுள்ளார். ரெசெட் பெட் வானொலி நிலையத்திற்கான பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய அரசாங்கம் தனது படையினரிற்கு உயிராபத்தை ஏற்படுத்துகின்றது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குகளை அவர்கள் எதிர்கொள்ளும் நிலையை ஏற்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார். வடகாசாவில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கொமாண்டோக்கள் சார்பில் நான் பேசுகின்றேன், அங்கு யுத்த குற்றங்கள் இழைக்கப்படுகின்றன என இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை …
-
- 1 reply
- 240 views
- 1 follower
-
-
அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுத்த சீனா! கேலியம், ஜர்மானியம், ஆன்டமோனி உள்ளிட்ட மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த கனிமப் பொருள்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய சீனா தடைவிதித்துள்ளது. செமிகண்டக்டர்கள் தொடர்பான பொருள்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்துள்ளதற்குப் பதிலடியாக இந்த நடவடிக்கையை சீனா மேற்கொண்டுள்ளது. தங்களின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி, சீனாவுடனான வர்த்தகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது. இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துவருகிறது. இந்நிலையிலேயே , சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் பொருள்களின் பட்டியலில் கணினிகளுக்கான சிப்புகளைத் தயாரிக்கும…
-
- 1 reply
- 728 views
-