Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு எல்லாம் தெரியும். அவருக்கு ரகுராம் ராஜனை போன்ற அறிவாளிகள் தேவையில்லை என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் ஒரு இந்தியர் இல்லை. அவரால் இந்திய பொருளாதாரம் நலிவடைந்து விட்டது. எனவே, அவரை அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும் என பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான சுப்பிரமணியன், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதோடு, செய்தியாளர்களிடமும் இதை தெரிவித்தார்.இந்நிலையில், ''நான் கவர்னர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை. மீண்டும் ஆசிரியர் பணிக்கே செல்ல விரும்புகிறேன்'' என ரகுராம் ராஜன் கூறியிருந்தார். இதையடுத்து, ''புதிய கவர்னர் விரைவில் அறிவிக்கப்படுவார்'' என மத்திய நிதி அமைச்சர் அருண்…

  2. பிரிட்டன் இருத்தலியல் தெரிவை எதிர்கொள்கிறது - கேமரன் ஐரோப்பிய ஒன்றியத்தோடு தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுமா என்ற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் “இருத்தலியல் தெரிவை” பிரிட்டன் எதிர்கொள்கிறது என்று பிரதமர் டேவிட் கேமரன் தெரிவித்திருக்கிறார். எந்த முடிவை எடுத்தாலும் திரும்பி செல்வது சாத்தியமில்லை என்றும் அவர் கூறியுள்ளார். விலக வாக்களிப்பது பெரியதொரு தவறாக அமையும் என்று தெரிவித்திருக்கும் கேமரன், அது ஒரு தசாப்தம் வரை பலவீனமான ஸ்திரமின்மைக்கு வழிநடத்தும் என்று கூறியிருக்கிறார். இந்நிலையில், பிரிட்டன் விலக வேண்டும் என்று பரப்புரை மேற்கொள்ளும் மைக்கேல் கோவ், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கு வாக்களிப்பதன் மூலம் ஜனநாயக…

    • 1 reply
    • 501 views
  3. அமெரிக்காவில் வீட்டின் முன்பக்கமாக விளையாடிக் கொண்டிருந்த 5 வயது மகனின் திடீர் அலறல் சப்தம் கேட்டு, வீட்டுக்குள்ளிருந்து ஓடி வந்த தாய், மகன் ஒரு மலைச் சிங்கத்தின் பிடியில் சிக்கியிருப்பதை கண்டு அதிர்ந்து, அஞ்சாமல் அதனோடு போராடி மகனை காப்பற்றி இருக்கிறார். ஆயுதம் ஏதுமில்லாமல் மலைச் சிங்கத்தோடு நடந்த இந்த சண்டையில் அம்மா, மகன் இருவருக்குமே மிதமான காயங்கள் ஏற்பட்டுள்ளது. காப்பாற்றப்பட்ட சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். அமெரிக்காவில் கொலொரோடா மாவட்டத்தில் ஆஸ்பென்னுக்கு அருகில், பிட்கின் என்ற ஊர் உள்ளது. இது மலைப்பகுதியை ஒட்டியுள்ளதால் அங்கு வாழும் விலங்குகள் சமயங்களில் ஊருக்குள் வந்து விடுவதுண்டு. கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஒரு வீட்டில் 5 வயது ச…

    • 1 reply
    • 521 views
  4. பிரிட்டன் பிரிவது பொருளாதாரம் பின்னடைவை ஏற்படுத்தும் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு பிரிட்டன் வாக்களித்தால் அதனுடைய பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்படும் என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது. பெருளாதார ஸ்திரமற்றநிலை, உள்ளக முதலீடு இழப்பு, வர்த்தகத்தில் பாதிப்புகள் ஆகிய ஆபத்துக்களை சர்வதேச நாணய நிதியத்தின் இந்த விவரமான அறிக்கை எடுத்துக்காட்டுகின்றது. இவையனைத்தும் குறைவான கட்டுப்பாடுகளால் கிடைக்கின்ற பயன்களுக்கு அதிகமாக செல்லும். ஐரோப்பிய ஒன்றியத்தின் வரவு செலவு திட்டத்திற்கும் எந்த பங்கையும் வழங்காது என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது. 2019 ஆம் ஆண்டிற்குள் குறைந்தது 1.4 சதவீதம் ப…

  5. பெல்ஜியத்தில் தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்ட 12 பேர் கைது தீவிரவாதத் தாக்குதலுக்குத் திட்டமிட்டதாக, சந்தேகத்தின் பேரில் 12 பேரை பெல்ஜியம் போலீசார் கைது செய்துள்ளனர். பெல்ஜியம் போலீஸ் நேற்றிரவில் மட்டும் பிரஸ்ஸல்ஸின் முக்கிய இடங்கள் உள்பட பல இடங்களில் போலீசார் சோதனை நடத்தினார்கள். 40 பேர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அந்த சோதனை நடவடிக்கைகளின்போது ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று மத்திய அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இஸ்லாமிக் நாடு என்ற ஆயுதக்குழுவைச் சேர்ந்த தீவிரவாதிகள் சிலர், சிரியாவில் இருந்து புறப்பட்டு ஐரோப்பா நோக்கி வந்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு எ…

  6. ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு ரஷியாவுக்கு தடை பாரபட்சமானது - புதின் ரஷியாவின் விளையாட்டு வீர்ர்களை ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்க தடை விதித்திருப்பது பாரபட்சமானது, நியாயமற்றது என்று அதிபர் விளாடிமிர் புதின் விமர்சித்துள்ளார். ரியோ ஒலிம்பிக்ஸில் ரஷியாவுக்கு தடை பாரபட்சமானது, நியாயமற்றது - புதின் பரவலான ஊக்கமருந்து பயன்பாட்டால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரஷியாவுக்கு விதித்திருந்த தடையை அகற்ற போவதில்லை என சர்வதேச தடகள கூட்டமைப்பு முடிவுசெய்துள்ளது. இந்த தடையை அகற்ற முயற்சிக்க போவதாக புதின் தெரிவித்திருக்கிறார். கடும் ஊக்கமருந்து கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிருப்பதை உறுதி செய்தால் ரஷிய வீரர்கள் தனிப்பட முறையில் போ…

  7. ஆர்லாண்டோ தாக்குதலின்போது 70 பேரின் உயிரை காப்பாற்றிய இந்தியர் இம்ரான் யூசுப் அமெரிக்காவின் ஆர்லாண்டோ நகர கேளிக்கை விடுதி தாக்குத லின்போது இந்திய வம்சாவழி யைச் சேர்ந்த இம்ரான் யூசுப் 70 பேரின் உயிரைக் காப்பாற்றியு ள்ளார். அவரை அமெரிக்க மக்கள் ஹீரோவாக கொண்டாடுகின்றனர். கடந்த 12-ம் தேதி அதிகாலை ஆர்லாண்டோ நகர தன்பாலின உறவாளர் கேளிக்கை விடுதிக் குள் புகுந்த ஒமர் என்ற ஐ.எஸ். தீவிரவாதி 49 பேரை சுட்டுக் கொன்றான். அந்த நேரத்தில் அங்கிருந்த இந்திய வம்சா வளியைச் சேர்ந்த இம்ரான் யூசுப் தைரியமாகச் செயல்பட்டு 70 பேரின் உயிரைக் காப்பாற்றி யுள்ளார். அமெரிக்க கடற்படை முன்னாள் வீரரான அவர் சிபிஎஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: …

  8. ஐ.எஸ்.ஸிடம் இருந்து பலுஜா நகரம் மீட்பு பலுஜா நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக சிறிய ரக ஏவுகணைகளை வீசும் இராக் ராணுவ வீரர்கள். படம்: ஏஎப்பி ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்த பலுஜா நகரை இராக் ராணுவம் நேற்று மீட்டது. எனினும் அந்த நகரின் புறநகர்ப் பகுதிகள் ஐ.எஸ். கட்டுப்பாட்டில் உள்ளது. அவற்றையும் மீட்க கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இராக், சிரியாவில் பெரும் பகுதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள் ளனர். அவர்களுக்கு எதிராக இராக் ராணுவம், குர்து படைகள் தீவிரமாகப் போரிட்டு வருகின்றன. அமெரிக்க கூட்டுப் படைகளும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதன்கார…

  9. சுவீடன் நாட்டில் புகலிடம் தேடுவோர் இல்லத்தில் தங்கிருந்த ஆப்கன் சிறுவர்கள் இருவரை வற்புறுத்தி அந்த இல்லத்தின் பெண் அதிகாரி உறவு கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவீடனில் Sodermanland பகுதியில் அமைந்துள்ள புகலிடம் தேடுவோர் இல்லத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பெண் அதிகாரி ஒருவர் இரண்டு ஆப்கன் சிறுவர்களை வற்புறுத்தி பாலியல் உறவு வைத்திருந்துள்ளார். அந்த சிறுவர்களை வேறு நாடுகளுக்கு அனுப்பவோ அல்லது சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பவோ அவர் தயாராக இல்லை என தெரிய வந்ததை அடுத்து அந்த சிறுவர்கள் வேறு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். அந்த இளவயது சிறுவர்களை கட்டாயப்படுத்தி இதுவரை 5 முறைக்கும் மேல் உறவு கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். விசா…

    • 0 replies
    • 453 views
  10. ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு சேகரித்து வைத்துள்ளதாக கூறப்படும் கொலைப் பட்டியலில் 151 கனேடியர்களின் பெயர்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த பட்டியலில் உலகெங்கிலும் உள்ள 8,300 நபர்களின் முகவரி உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் ஐ.எஸ். அமைப்பு சேகரித்து வைத்துள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள கனேடியர்கள் 151 பேரில் பெரும்பாலும் பெண்கள் என தெரிய வந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் அதிகம் ஈடுபாடு காட்டும் நபர்களின் பெயர் முகவரிகளை அந்த அமைப்பு சேகரித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதிர்ச்சியளிக்கும் இந்த தகவலை மத்திய கிழக்கு நாடுகளை மையமாக கொண்டு செயல்படும் MEMRI என்ற ஆய்வு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. பட்டியல் மிகவும் பெரிதாக இருப்ப…

  11. இன்றைய நிகழ்ச்சியில் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை ஒரு நபர் எப்படி சுட்டுக்கொல்ல முடிந்தது என்று கேள்விகள் எழுந்துள்ளன; இதனால் பாதுகாப்பு நடைமுறைகளில் ஏற்படக் கூடிய மாற்றங்கள் என்ன? ஆராய்கிறது பிபிசி. துருக்கி சுற்றுலாத்துறையில் நாற்பத்தைந்து சதவீதம் வீழ்ச்சி; ரஷ்ய விமானம் வீழ்த்தப்பட்டது மற்றும் வேறுபல பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் விளைவு இன்னும் மோசமாகுமா? சீனாவின் ஐந்து புள்ளி ஐந்து பில்லியன் டாலர் செலவிலான டிஸ்னி பூங்கா; சாதாரண மக்களால் பார்க்க முடியாது என்கிறார்கள் விமர்சகர்கள்; ஆனால், ''நிஜ அனுபவத்தைத் தரும்'' என்கிறார் இதன் உரிமையாளர். உள்ளிட்ட செய்திகள் இடம்பெறுகின்றன.

  12. ஒபாமா நிர்வாகத்தின் சிரியா கொள்கை மீது அமெரிக்க வெளியுறவு துறை அதிகாரிகள் கடுமையான விமர்சனம் ஐம்பதற்கும் மேற்பட்ட அமெரிக்க வெளியுறவு துறை அதிகாரிகள் ஒபாமா நிர்வாகத்தில் சிரியா குறித்த கொள்கையை கடுமையாக விமர்சித்து குறிப்பு ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது. நியூ யார்க் டைம்ஸ் மற்றும் வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் பத்திரிகைகளால் பார்க்கப்பட்ட-அந்த ஆவணத்தில், அமெரிக்கா, சிரியாவில் தொடரும் போர் நிறுத்த மீறலை நிறுத்த, சிரியாவின் அதிபர் ஆசாத்தை எதிர்த்து ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என்றும் குறிப்பிடபட்டுள்ளது. சிரியாவின் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வர எடுக்கப்படுவதற்கான தார்மீக நியாயங்கள் கேள்விக்கப்பாற்பட்டது என்று அவர்கள் வ…

  13. சீனாவிடம் பேச்சு நடத்துங்கள் என திபெத் மதகுரு தலாய் லாமா அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் வலியுறுத்தியுள்ளார்.அமெரிக்க அதிபர் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் திபெத் மதகுரு தலாய் லாமா சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், ”திபெத் விடுதலை குறித்து ஒபாமாவிடம் தலாய் லாமா தெரிவித்தார். மேலும் தனது பிரதிநிதிகளுடன் சீன அரசு மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்குமாறும், தலாய் லாமா கூறியுள்ளார். சீனாவில் உள்ள திபெத்தியர்களின் மனித உரிமைகள் பாதுகாப்புக்கு ஒபாமா ஆதரவு தெரிவித்தார்” . இவ்வாறு வெள்ளை மாளிகை செய்தியில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக ஒபாமா-தலாய் லாமா சந்திப்புக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்த சந்திப்பு இருநாடுகளின் உறவில் பாதிப்பை ஏற்படு…

  14. அமெரிக்காவில் மரியுவானா வணிகத்தில் கால்பதிக்கிறது மைக்ரோசாப்ட் அமெரிக்காவில் சட்டபூர்வமான மரியுவானா (போதை பொருள்) வணிகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனமும் தற்போது சேர்ந்திருக்கிறது. மரியுவானா தயாரிப்பு மற்றும் கேனபிஸ் (போதை பொருள்) விற்பனையைக் கண்காணித்து, ஒழுங்குபடுத்தும் மென்பொருளைத் தயாரிக்கும் கைன்ட் பைனான்சியல்(Kind Financial) என்ற நிறுவனத்துடன், தொழிற்நுட்ப ஜாம்பவானான மைக்ரோசாப்ட் கூட்டாளியாக இணைந்துள்ளது. பெரும்பாலான அமெரிக்கா மாகாணங்கள் மரியுவானாவை மருத்துவ அல்லது பொழுதுபோக்கு பயன்பாட்டிற்காக உபயோகப்படுத்துவதை சட்டப்பூர்வமாக்கியுள்ளன. ஆனால் அமெரிக்காவின் தேசிய சட்டத்தின்படி இன்னும்…

  15. ஜெர்மனியில் 94 வயதான ரீன்ஹோல்ட் ஹான்னிங்ன் வழக்கில் இன்று தீர்ப்பு நாஜிக்களின் பிடியில் இருந்த போலாந்தின் பகுதியான அவுஷ்விட்சின் முன்னாள் பாதுகாவலர் குறித்த வழக்கு ஒன்றின் தீர்ப்பை ஜெர்மனியில் உள்ள நீதிமன்றம் இன்று வழங்கவுள்ளது. 94 வயதான ரீன்ஹோல்ட் ஹான்னிங், 1,70,000 பேரை கொன்றதற்கு உதவியாக இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார். அவரது வழக்கறிஞர்கள் அவர் தனிப்பட்ட வகையில், யாரையும் அடிக்கவோ, கொல்லவோ இல்லை என்று வாதிட்டனர். ஹான்னிங் ஏப்ரலில் நடந்த இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டார். தான் அநீதியை பார்த்தபோதும், அதை நிறுத்த எதுவும் செய்யாமல் இருந்ததற்காக வெட்கப்படுவதாக கூறினார். ஜெர்மனியில் போர்க்கால நாஜிக்கள் கு…

  16. அல்­ஜீ­ரி­யா­வுக்கு கடத்­தி­ச்செல்­லப்­பட்ட 20 சிறார்கள் உட்பட 34 அக­திகளின் சட­லங்கள் நைஜீ­ரிய பாலை­வ­னத்தில் கண்டுபிடிப்­பு அல்ஜீரியா நாட்டுக்கு கடத்தி செல்லப்பட்ட 20 சிறார்கள் உட்­ப­ட 34 அகதிகள் நைஜீரிய பாலைவனத்தில் இறந்து கிடந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்­து நைஜீரிய உள்துறை அமைச்சகம் நேற்று முன்­தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 5 ஆண்கள், 9 பெண்கள் மற்றும் 20 சிறார்­கள் என 34 பேர் கடந்த வாரம் பாலைவனத்தினை கடக்க முயன்று பின்னர் பலியாகி உள்ளனர் என தெரிவித்துள்ளது. அதேவேளையில் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், குடிப்பதற்கு தண்ணீர் இன்றி அவர்கள் மரணம் அடைந்திருக்கல…

  17. இந்தோனேசியா ஜாவா தீவில் கரை ஒதுங்கிய 8 திமிங்கலங்கள் பரிதாபமாக உயிரிழப்பு! இந்தோனேசியாவின் ஜாவா தீவு பகுதியில் 8 பைலட் திமிங்கலங்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. தமிழகத்தில் சமீபத்தில் பெருமளவில் திமிங்கலங்கள் கரை ஒதுங்கி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்தோனேசியாவில் இப்போது திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது. பாலூட்டி இனத்தைச் சேர்ந்த திமிங்கலம், ஏறக்குறைய 56 மில்லியன் வருடங்களாக வாழ்ந்துவரும் கடல் விலங்குகள் ஆகும். உலகின் மிகப்பெரிய வாழும் விலங்கு திமிங்கலம்தான். இவற்றில் 80-க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. மற்ற மீன் இனங்களைப்போல செவுள்களால் சுவாசிக்காமல் மனிதர் களைப் போலவே நுரையீரல் இருப்பதால் சுவாசிப்பதற்கு கடலின் மேற்பரப்புக்கு அடிக்கடி வந…

  18. பீகார் மாநிலத்தில் விடைத்தாளில் ஒரு வார்த்தை கூட எழுதாத மாணவர்களை எல்லாம் அங்குள்ள ஒரு பல்கலைக்கழகம் தேர்ச்சி பெற வைத்துள்ளது. முசாஃபர்பூரில் உள்ள பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில்தான் இந்த அதிசயம் நடந்துள்ளது. அந்த பல்கலைக்கழக மாணவர்களிடம் இருந்து, நிர்வாகத்திற்கு எதிராக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள், பல்கலைக்கழகத்தில் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், இளங்கலை பிரிவில், தேர்வுக்கான விடைத்தாளில் ஒரு வார்த்தை கூட எழுதாத 30 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பது இதில் தெரிய வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக, 'சம்பந்தப்பட்டவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்' என பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் சதீஷ் …

    • 0 replies
    • 404 views
  19. துப்பாக்கிச் சூட்டில் பிரிட்டன் தொழிற்கட்சி எம்.பி. மரணம் பிரிட்டனின் தொழிற்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஜோ காக்ஸ் துப்பாக்கியால் சுடப்பட்டு பலியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்வதா வேண்டாமா என்பதற்கான கருத்தறியும் வாக்கெடுப்புக்கான பிரசாரங்களை இரு தரப்பினரும் ரத்து செய்துள்ளனர். நாடாளுமன்றத்தின் தொழிற்கட்சி உறுப்பினரான ஜோ காக்ஸ், தான் ஒரு கூட்டம் நடத்திக் கொண்டிருந்த நூலகத்தின் வெளியே, சண்டை போட்டுக் கொண்டிருந்த இருவரிடையே தலையிட்டார் என்று சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்…

  20. இன்றைய நிகழ்ச்சியில்.. ஐ எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டிலிருந்து சிரியாவின் மாஞாபி நகரத்தை மீட்க கடும் முயற்சி; கூட்டணிப்படையினரின் முன்னரங்கிலிருந்து பிபிசி தரும் பிரத்தியேகச் செய்திகள். சொவாடோ கிளர்ச்சி நடந்து நாற்பதாம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிப்பு; நூற்றுக்கணக்கானோர் பலியான நிறவெறிக்கு எதிரான அந்த போராட்டத்தால் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? ஆராய்கிறது பிபிசி. பிரிட்டிஷ் விவசாயிகளுக்கு எதிராக வெட்டுக்கிளிகள் பெரும் படையெடுப்பு; காய்கறிகளையெல்லாம் வயலிலேயே அழிக்கும் இவற்றைத் தடுக்க வழி காண்பார்களா விஞ்ஞானிகள்? ஆகியவை இடம்பெறுகின்றன.

  21. 'உங்களால்தான் இந்த நாடு சீரழிந்தது..!' பிரதமரை பின்னி எடுத்த இளம்பெண் (வீடியோ) 'உங்களால்தான் இந்த நாடு சீரழிந்தது' என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் முன்னிலையில் இளம்பெண் ஒருவர் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பின நாடாக இங்கிலாந்து நீடிப்பதா அல்லது விலகுவதா என்பது குறித்து விரைவில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இங்கிலாந்து உறுப்பின நாடாக தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதையே பிரதமரான டேவிட் கேமரூன் விரும்புகிறார். இந்த நிலையில், ஃபேஸ்புக்கை கலக்கி வரும் இளம் தலைமுறையினருடன் நேரடி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரதமர் கேமரூன், அவர்களின் கருத்தை கேட்டுள்ளார். அப்போது, யாஸ்மின் என்ற இ…

  22. பயங்­க­ர­வா­தத்­துக்கு நிதி உதவி அளிப்­பதை சவூதி நிறுத்த வேண்டும் - ஹிலாரி கிளிண்­டன் சவூதி அரேபியா போன்ற நாடுகள் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க ஜனா­தி­பதி வேட்­பாளர் ஹிலாரி கிளிண்டன் தெரி­வித்­துள்ளார். ஒர்லாண்டோ தாக்­குதல் சம்­ப­வத்துக்கு பின்னர் பேசிய ஜன­நா­யக கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ளர், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளிப்பதை சவூதி அரேபியா, கட்டார், குவைத் போன்ற நாடுகள் இனியாவது நிறுத்த வேண்டும். மேலும், உலகின் பல்வேறு நாடுகளில் இளம் சிறுவர்களின் மனங்களில் மதவெறியை விதைக்கும் மதரஸாக்களுக்கும், பள்­ளி­களுக்கும் நிதியுதவி அளிப்பதையும் அந்த நாடுகள் உடனடியாக நிறுத்த வேண்டும். ஒர்லாண்…

    • 1 reply
    • 300 views
  23. முஸ்லிம்கள் குறித்து டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட கருத்து வெட்கக்கேடானது - ஹிலாரி கிளின்டன் அமெரிக்க குடியரசுக் கட்சியின் உத்தேச ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் ஒர்லான்டோவில் தன்னினச்சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதியில் இடம்பெற்ற தாக்குதலையடுத்து ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் முஸ்லிம்கள் குறித்து வெளியிட்ட கருத்துகள் வெட்கக்கேடானவை என அமெரிக்க ஜனநாயக கட்சியின் உத்தேச ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் குற்றஞ்சட்டியுள்ளார். அடிப்படைவாத துப்பாக்கிதாரியொருவர் தாக்குதலை நடத்தியதற்கு மறுநாள் பராக் ஒபாமா தீவிரவாதிகள் மீது அனுதாபத்தைக் கொண்டிருப்பதாக டொனால்ட் டிரம்ப் ஊகம் வெளியிட்டுள்ளதாக ஹிலாரி கிளின்டன் கண்டனம் தெரிவித்தார். பிட்ஸ்பேர…

    • 1 reply
    • 312 views
  24.  புளுகு மூட்டையா துருக்கி ஜனாதிபதி எர்டொவான்? தனது அரசியல் வாழ்வில் தனது 44ஆவது கௌரவ கலாநிதிப் பட்டத்தை இந்த மாதம் பெற்றுக்கொண்ட துருக்கி ஜனாதிபதி றெசெப் தய்யீப் எர்டொவான், தனது உண்மையான கல்விப் பட்டங்கள் குறித்துப் பொய் சொல்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2003-04 காலப்பகுதியில் பிரதமராகப் பதவி வகித்து, அதனைத் தொடர்ந்து ஜனாதிபதியாகப் பதவி வகித்துவரும் எர்டொவானின் கல்விப் பட்டங்கள், வெறுமனே அரசியல் பிரச்சினையன்று. துருக்கியின் அரசியலமைப்பின்படி, நான்கு ஆண்டுகள் நீடித்த பல்கலைக்கழகப் பட்டமொன்றைப் பூர்த்திசெய்து, அதில் சித்தியடைந்தவரே அந்நாட்டு ஜனாதிபதியாக வருவதற்குத் தகுதியானவராவார். ஜனாதிபதியின…

  25. ஒரு பாலுறவுக்காரர்களுக்கான பத்திரிக்கையின் முன் அட்டையில் இளவரசர் வில்லியம் ஒரு பாலுறவுக்காரர்களின் பாலியல் தன்மை காரணமாக, அவர்களை தாக்குபவர்களுக்கு எதிராகப் பேச, பிரிட்டன் அரச குடும்ப அரியணைக்கு ஏற இரண்டாவது நிலையில் உள்ள இளவரசர் வில்லியம், ஒரு பாலுறவுக்காரர்களுக்கான பத்திரிக்கையொன்றின் முன் அட்டையில் தோன்றியுள்ளார். ஒரு பாலுறவுக்காரர்களுக்கான பத்திரிக்கையின் முன் அட்டையில் இளவரசர் வில்லியம் ஆண் ஒரு பாலுறவுக்காரர்கள், பெண் ஒரு பாலுறவுக்காரர்கள், இரு பாலுறவுக்காரர்கள் மற்றும் அரவாணிகள் ஆகியோர் தாங்கள் யார் என்பதில் பெருமை கொள்ள வேண்டும் என்று ‘அட்டிட்யூட்’ எனப்படும் அந்த பத்திரிக்கையில் வில்லியம் தெரிவித்துள்ளார். இங்கில…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.