Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. துருக்கியில் மக்கள் தொகை பெருக்கம் மிக குறைவாக உள்ளது. அங்குள்ள பெண்கள் அளவோடு குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். எனவே, துருக்கி பெண்கள் குறைந்த பட்சம் தலா 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள வேண்டும்.அதன் மூலம் நாட்டின் மக்கள் தொகை பெருக்கத்துக்கு உதவ வேண்டும் என அந்நாட்டு அதிபர் ரிசெப் தாயப் எர்டோகன் கோரிக்கை விடுத்துள்ளார்.பெண்ணாக பிறந்து விட்டால் அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர்களின் வாழ்க்கை முழுமை பெறாது என்றும் அறிவுரை வழங்கினார். மக்கள் தொகை பெருக்கத்தை ஊக்கப்படுத்த சமீப காலமாக இவர் வெளியிட்டு வரும் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. http://www.seithy.com/breifNews.php?newsID=159003&catego…

  2. ராஜ்சிவா இதுவரை ஐரோப்பியக் குடும்பத்தில் அங்கம் வகித்து வந்த பிரிட்டன், எங்களுக்கு உங்களுடன் ஒட்டும் வேண்டாம்... உறவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து (EU) பிரிவதற்குத் தயாராகிறது. ‘ ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ந்திருக்க வேண்டாம்’ என்பதற்கான வாக்கெடுப்புகள் ஏற்கெனவே பலமுறை நடைபெற்றிருக்கின்றன. முன்னர் நடைபெற்ற வாக்கெடுப்பில், 40 சதவிகிதமான மக்கள் விலகக் கூடாது என்றும், 43 சதவிகித மக்கள் விலக வேண்டும் என்றும் சொல்லியிருந்தார்கள். இதில் எஞ்சியிருக்கும் 17 சதவிகிதமான மக்கள், எதையும் தீர்மானிக்கும் நிலையில் இல்லை. இந்த மக்களில் சிலர் ஏதாவது ஒரு பக்கத்தில் சாய்ந்தாலும், அது 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக மாறிவிட…

  3. ஆப்கானிஸ்தானிலுள்ள தலிபான் அமைப்பும், பிற தீவிரவாத குழுக்களும் சட்டபூர்வமற்ற சுரங்கத்தொழில் மூலம் ஆண்டுக்கு மில்லியன் கணக்கான டாலர் வருவாய் பெறுவதாக லண்டனில் இருந்து இயங்குகின்ற ஊழல் எதிர்ப்பு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.பாதக்ஷான் மாகாணத்தில் லபிஸ் லஸூலி என்ற ஓரளவு விலை உயர்ந்த கல்லை தோண்டி எடுக்கும் சுரங்கத் தொழில் நடைபெறுகிறது பாதக்ஷான் மாகாணத்திலுள்ள லபிஸ் லஸூலி என்ற ஓரளவு விலை உயர்ந்த கல்லை தோண்டி எடுக்கும் சுரங்கத் தொழிலில் குளோபல் விட்னஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை கவனம் செலுத்துகிறது.சுரங்கங்களை எடுக்க ஏற்பட்டுள்ள வன்முறையான போட்டி ஸ்திரமற்ற தன்மையை உருவாக்குகிறது என்று குறிப்பிடும் இந்த அறிக்கை சில ஆப்கான் அதிகாரிகள் இந்த வர்த்தகத்திலிருந்து இலாபம் அட…

    • 1 reply
    • 476 views
  4. இன்றைய நிகழ்ச்சியில் - மனிதர்களுக்கான உடலுறுப்புகளை வளர்க்க பன்றிகளை பயன்படுத்தலாமா? மனித குருத்தணுக்களை விலங்குகளில் செலுத்தும் அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வு குறித்த பிபிசியின் நேரடிச் செய்திகள். - மில்லியன் கணக்கான டாலர்களை தீவிரவாதிகளுக்கு வழங்கும் ஆப்கானின் இயற்கை வளம். ஆப்கான் இரத்தினச் சுரங்கங்கள் குறித்த பிபிசியின் தகவல்கள். - பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்ட சயன நிலைப் புத்தர் சிலை. ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகால சிலையை பாதுகாக்க பெரும் பிரயத்தனம்.

  5. இயற்கை சீற்றத்தால் நிலைகுலைந்த ஆஸ்திரேலிய மாநிலங்கள் ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரை பகுதி கடும் மழை, பலமான காற்று மற்றும் திடீர் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்துள்ள சிட்னி நகரம் நியூசவுத்வேல்ஸ், விக்டோரியா, குயின்ஸ்லாந்து மற்றும் டாஸ்மேனியா ஆகிய மாநிலங்கள் இந்த இயற்கை சீற்றத்தால் மிகவும் பாதிப்படைந்துள்ளன. மின்சாரம் இல்லாமல் நூற்றுக்கணக்கான மக்கள் தவித்து வரும் வேளையில், மக்களை வெளியேற்றும் சில உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. கடுமையான சூறாவளி காற்றின் காரணமாக சிட்னி விமான நிலையத்தில் உள்ள மூன்று விமான ஒடு தளங்களில் இரண்டு ஒடு தளங்கள் மூடப்படுள்ளன. http://www.bbc.com/tamil/global/2016…

  6. தென் சீனக் கடல் பகுதியில், சீனா வான் வழி தற்காப்பு மண்டலம் அமைப்பதை அமெரிக்கா கருத்தில் கொள்ளும் என்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஜான் கெரி சீனாவை எச்சரித்துள்ளார். அப்பகுதி ஆத்திரமூட்டுவதும், நிரந்தர தன்மையை சீர்குலைப்பதாகவும் இருந்தால் அமெரிக்கா இது பற்றி ஆராயும் என்று அவர் தெரிவித்துள்ளார்.அவ்வாறு செய்வதால் சீனாவுக்கும் பிற ஆசிய நாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலை அதிகரிக்கும். மங்கோலியாவுக்கு குறுகியதொரு பயணம் மேற்கொண்டபோது பத்திரிகையாளர்களிடம் கெரி இதனை தெரிவித்தார். தென் சீனக் கடலின் பெரும் பகுதியை தன்னுடையதாக உரிமை கோரும் சீனா, “பிரச்சினைகளை கண்டு பயமில்லை” என்று கூறி அமெரிக்காவின் விமர்சனத்தை நிராகரித்துள்ளது. சாச்சைக்குரிய கடல் எல்ல…

  7. சென்னை பொறியியல் கல்லூரியில் படித்த இளைஞர், ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்காக கொடி மற்றும் சின்னத்தை வடிவமைத் துள்ளார் என்று சிறப்பு நீதிமன் றத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தெரி வித்துள்ளது. சிரியாவில் வன்முறையில் ஈடுபட்டு வரும் ஐஎஸ் தீவிரவாதி களுக்கு உலக நாடுகளில் ஆதரவு திரட்டப்படுகிறது. இந்தியாவிலும் இளைஞர்கள் சிலர் ஐஎஸ் தீவிர வாத இயக்கத்தில் சேர்ந் துள்ளதாக மத்திய அரசு கூறுகிறது. மேலும், ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த சிலரை கைது செய்துள்ளனர். இந்நிலையில், சூடானில் இருந்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட முகமது நசீர் என்ற இளைஞரிடம் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். மேலும் அவருடைய தந்தை அமீர் முகமது போக்கரிடமும் விசாரணை …

    • 0 replies
    • 324 views
  8. துருக்கிக்குக் கடுப்பை ஏற்படுத்தும் ஜேர்மனியின் 'ஆர்மேனிய இனவழிப்பு' வாக்கெடுப்பு ஒட்டோமான் படைகளால் ஆர்மேனியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், ஓர் இனவழிப்பு என்பதை ஏற்றுக் கொள்ளும் தீர்மானமொன்றில், ஜேர்மனிய நாடாளுமன்றம், நாளை மறுதினம் வியாழக்கிழமை (02) வாக்களிக்கவுள்ளது. துருக்கியின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியிலேயே இந்த வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. சிறுபான்மையினரான ஆர்மேனியர்களை, ஒட்டோமானிலுள்ள அவர்களின் பூர்வீக இடத்தில் வைத்து, ஒட்டோமான் அரசாங்கத்தால் கட்டமைப்புரீதியாகக் கொன்றொழித்தமை, ஆர்மேனிய இனவழிப்பு எனப்படுகிறது. ஏப்ரல் 24, 1915ஆம் ஆண்டு ஆரம்பித்த இந்த நடவடிக்கையில், 1.5 மில்லியன் வரையிலானோர் கொல்லப்பட்டிருக்கலாம் எனக்…

  9. 100 ஆண்டுகளில் இல்லாத மழை: வெள்ளத்தில் மிதக்கும் பிரான்ஸ், ஜெர்மனி பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அங்கு படகுகள் மூலம் மீட்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது. படம்: ஏஎப்பி பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா வில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பாரீஸ் உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மழை காரணமாக ஜெர்மனியில் 8 பேரும் பிரான்ஸில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக் கானோர் வீடு, உடைமைகளை இழந்துள்ளனர். ஒரு வாரமாக மழை பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் மற்றும் அந்த நாட்டின் மத்திய, தென்கிழக்கு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த மழை ப…

  10. <p>Your browser does not support iframes.</p> அதி சொகுசு விமானம்; மெல்போர்னில் இருந்து லண்டன் செல்ல 11 மில்லியன் ரூபா நட்சத்திர ஹோட்டல்களில் கிடைக்கும் சொகுசுடன் உலகிலேயே விலை உயர்ந்த விமானப் பயணத்தை எத்திஹாட் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் பயணம் செய்ய ஒரு டிக்கெட்டின் விலை சுமார் 53 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அபூ தாபியை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் எத்திஹாட் ஏர்லைன்ஸ் நிறுவனம் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து அவுஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்னுக்கு புதிய ஏர்பஸ் ஏ380 ரக சொகுசு விமானச் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த விமானத்தில் ‘தி ரெஸிடென்ஸ்’ (இல்லம்) என்ற சிறப்பு…

  11. செம்மை காணுமா செர்பியா? - 1 செர்பிய தலைநகர் பெல்கிரேட்டில் பழங்காலத்திலேயே மிக நேர்த்தியாக அமைக்கப்பட்ட கெனிஸ் மிகாஜ்லோவா சாலை. ஐரோப்பிய நாடுகளில் ஒன்று செர்பியா. அதன் வட பகுதி யில் அமைந்த சில நாடுகள் பலருக்கும் அறிமுகமான இங்கி லாந்து, நெதர்லாந்து, பிரான்ஸ் ஆகியவை. ஐரோப்பாவின் தென் பகுதியில் அமைந்த நாடு என்று கிரீஸைச் சொல்லலாம். அதற்குச் சற்று மேலே அமைந்துள்ளது செர்பியா. செர்பியாவைச் சூழ்ந்துள்ள நாடுகள் போஸ்னியா, மான்டெ னெக்ரோ, அல்பேனியா, மாசிடோ னியா, குரோவேஷியா போன் றவை. செர்பியாவைப் பற்றிய இந்தக் கட்டுரைத் தொடரில் இந்த நாடுகளும் அதிக அளவில் இடம் பெறுவது தவிர்க்க முடியாத ஒன்று. இவை ஒன்றுக்குள் ஒன்றாக இருந்த நாடுகள். கொலைவெ…

  12. கிரீஸ் அருகே 700 அகதிகளுடன் கப்பல் மூழ்கியது: 340 பேர் மீட்பு, 100 உடல்கள் கண்டுபிடிப்பு மத்திய தரைக்கடல் பகுதியில் கடந்த மாத இறுதியில் 3 கப்பல்கள் அடுத்தடுத்த நாட்களில் கடலில் மூழ்கின. இதில் ஒரு கப்பல், அகதிகளின் பாரம் தாங்காமல் சரிந்து மூழ்கிய கடைசி நிமிட புகைப்படங்கள். படங்கள்: ஏஎப்பி கிரீஸ் நாட்டின் கிரிதி தீவு அருகே 700 அகதிகளுடன் சென்ற கப்பல் கடலில் மூழ்கி யது. இதில் இதுவரை 340 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 100 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட் டன. இதர அகதிகளை தேடும் பணி தொடர்கிறது. சிரியா, இராக் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆயிரக்க ணக்கான அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடி செல்கின்றனர். ஆபத்தான கடல் பயணம் மூலம் கிரீஸ் ந…

  13. காணாமல் போன ஜப்பான் சிறுவன் கண்டுபிடிப்பு தண்டனை என்ற பெயரில் பெற்றோரால் வனப்பகுதிக்குள் விடப்பட்டு, காணாமல் போன ஜப்பான் சிறுவன் 6 நாட்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டான். யமடோ டனூகா (கோப்புப்படம்) யமடோ டனூகா என்ற அந்த 7 வயது சிறுவன், வனப்பகுதியில் உள்ள ராணுவப் பயிற்சி முகாமில் இருந்தான். கற்களை வீசியதாகக் கூறி, அதற்கு தண்டனை வழங்க வனப்பகுதியில் சாலையோரம் அந்தச் சிறுவனை விட்டுச் சென்றார்கள். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அவனைக் காணவில்லை. பெற்றோரால் தனியாக விடப்பட்ட தான், வனப்பகுதிக்குள் தொடர்ந்து நடந்து சென்றதாகவும், வனப்பகுதிக்குள் ஒரு குடில் இருந்ததைப் பார்த்து அங்கு சென்றுவிட்டதாகவும் அச் ச…

  14. இன்றைய நிகழ்ச்சியில்.. *பெரும் சாத்தான் என்று வர்ணித்த அமெரிக்காவுடன் மிக நெருக்கமாக இருந்திருக்கிறார் இரானின் முன்னாள் அதியுயர் ஆன்மீகத்தலைவர்; பிபிசிக்கு கிடைத்த பிரத்யேக ஆதாரங்கள்! *பயங்கரவாத எதிர்ப்பு மறுசீரமைப்புக்களை முன்வைக்கிறது ஜெர்மனி; ஜெர்மனியிலுள்ள அகதிகளை கடும்போக்கு இஸ்லாமியவாதிகள் இலக்கு வைப்பதாக அந்தநாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் கவலை *பிரிட்டிஷ் தெருக்களில் அதிகரிக்கும் குரூரமான நாய்ச்சண்டை; இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகும் கொடூரத்தை நிறுத்தக் கோரும் விலங்கு பாதுகாப்பாளர்கள்.

  15. எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் டொனால்ட் டிரம்ப்பை விட 2 சதவீதம் வாக்குகள் அதிகம் பெறுவார் என்று கருத்துக் கணிப்பு ஒன்று கூறியுள்ளது. வருகின்ற நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிபர் தேர்தல் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சிகளுக்கு உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. ஆளும் ஜனநாயகக் கட்சியில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும் கிட்டத்தட்ட இறுதியாகி விட்டனர். இந்நிலையில், கருத்துக் கணிப்பு ஒன்றில் டிரம்பை விட 2 சதவீதம் வாக்குகள் அதிகம் ஹிலாரி பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது. …

  16. பலூஜா நக­ரில் ஐ.எஸ்.பி­டியில் 20,000 சிறார்கள் – ஐக்கிய நாடுகள் சபை தெரிவிப்பு 2016-06-03 10:42:16 ஈராக்கின் பலூஜா நகரில் ஐ.எஸ். கிளர்ச்­சி­யா­ளர்­களின் பிடியில் 50,000 பேர் சிக்­கி­யுள்­ளனர். அவர்­களில் 20,000 சிறார்­களும் உள்­ள­டங்­கு­வ­தாக ஐ.நா. அறிக்கை வெளி­யிட்­டுள்­ளது. இது தொடர்பில் ஐ.நா. சிறார்கள் நிதிப் பிரிவின் ஈராக் பிர­தி­நிதி பீட்டர் ஹொக்கி ன்ஸ் தெரி­வித்­துள்­ள­தா­வது, ஐ.எஸ். கிளர்ச்­சி­யா­ளர்­களின் வச­முள்ள ஈராக்கின் பலூஜா நகரில் அவர்கள் தாக்­கு­தல்­களை நடத்தி வரு­கின்­றனர். இந்த நிலையில் அவர்­க­ளுக்­கெ­தி­ராக தாக்­கு­தலில் ஈடு­பட்டு வரு­கின்ற ஈராக் படை­க­ளிடம் ஆட் பற்­றாக்­குறை நில­வு­வத…

  17. சமூக வலைத்தளங்களில் ஜாம்பவானாக விளங்கிவரும் ‘பேஸ்புக்’ நிறுவனத்தின் நிறுவனரான மார்க் ஜுக்கர்பக் பூமியில் இருந்தவாறு விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்தபடி ஆய்வுகளை செய்துவரும் விண்வெளி வீரர்களுடன் ‘பேஸ்புக் லைவ்’ வீடியோ கால் சேவை மூலமாக வரும் ஜுன் முதல் தேதி பேசுகிறார். பேஸ்புக் லைவ் மூலம் சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ளவர்களுடன் மார்க் ஜுக்கர்பக் பேசுகிறார். அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையத்தை அமைத்து நிர்வகித்து வருகின்றன. இந்த ஆய்வு மையத்துக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் அங்கு தங்கியிருந்தபடி புவியில் ஏற்படும் மாற்றங்கள், செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூ…

  18. பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகருக்கு அருகே உள்ள அப்பர்தேவா கிராமத்தை சேர்ந்த பெண் மரியா அப்பாசி (வயது 19). இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரின் மகனுக்கு மரியாவை திருமணம் செய்து கொள்ள ஆசை, எனவே திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தோடு மரியாவிடம் சம்மதம் கேட்டுள்ளார். ஏற்கனவே விவாகரத்தான அவருக்கு மரியாவை விட இருமடங்கு வயது அதிகம். எனவே அவரது கோரிக்கையை நிராகரித்துள்ளார். இந்த விவகாரம் தலைமை ஆசிரியருக்கு தெரியவரவே அவர் மரியாவை திருமணம் செய்து கொள்ளுமாறு நிர்பந்தித்துள்ளார். அவரும், நான்கு நபர்களும் சேர்ந்து கொண்டு மரியாவை கொடுமைப்படுத்தியதுடன், உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். படுகாயமடைந்த நில…

  19. ஜெர்மனி: பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்திருப்பதே நல்லது பிரிட்டன் வெளியே இருப்பதைவிட ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்திருந்து அதிகாரத்தையும், செல்வாக்கையும் பயன்படுத்துவது நன்றாக இருக்கும் என்று ஜெர்மனிய அரசத் தலைவி ஏங்கலா மெர்கல் அம்மையார் கூறியிருக்கிறார். நேட்டோ பொதுச் செயலாளர் ஜன்ஸ் ஸ்டோலன்பெர்க்-வுடன் அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது, ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்திருப்பதா வேண்டாமா என்பது பிட்டன் மக்களின் முடிவை பொறுத்ததே என்று அவர் கூறினார். ஆனால், தனியொரு சந்தையின் முழு பயன்களையும் பெறுவதற்கு லண்டன் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்று விதிமுறைகளை உருவாக்க உதவுவது தேவைப்படுகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். ஐக்கிய ர…

  20. இன்றைய நிகழ்ச்சியில் * சிரியாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கான மனிதநேய உதவிகளை வான்வழியாக போட வேண்டுமென அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஐநாவிடம் கோரிக்கை; நான்கு ஆண்டுகளுக்கு பின் டாரேயா நகருக்குள் சென்றன உதவி வாகனங்கள். * சிறாரை துஷ்பிரயோகம் செய்வது குறித்த சொந்த கையேட்டை எழுதிய பிரிட்டிஷ் ஆண்; மலேசியாவில் செய்த தனது குற்றங்களை ஒப்புக்கொண்டு, ஆயுட்தண்டனையை எதிர்நோக்குகிறான். *ஆஸ்திரேலியாவின் மயக்கும் மயில் சிலந்திகள்; அழகாக நடனமிடும், ஆனால் பயம் வேண்டாம், அது கடிக்காது.

  21. அதிக கொத்தடிமைகளை கொண்ட நாடு எது தெரியுமா? ஆய்வில் வெளியானது உலக நாடுகளில் அதிக கொத்தடிமைகளை கொண்ட நாடாக இந்தியா முதலிடத்தையும் இலங்கை 42 ஆவது இடத்தையும் பெற்றுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியா முழுவதும் சுமார் 18 மில்லியன் பேரும் இலங்கையில் 45 ஆயிரத்து 900 பேரும் கொத்தடிமைகளாக வாழ்கின்றனர். இந்த தகவல்கள் 2016 உலக அடிமைத்தன அட்டவணையில் வெளியாகியுள்ளதோடு இந்த ஆய்வு அறிக்கையை வோல்க் பிரி அறக்கட்டளை வெளியிட்டுள்ளது. கொத்தடிமைகள் அல்லது நவீன அடிமைகள் தொடர்பான விடயத்தில் அரசின் நடவடிக்கைகள் எவ்வாறு அமைந்துள்ளன என்பது தொடர்பாக 167 நாடுகளில் 42 ஆயிரம் பேரிடம் 50 மொழிகள் மூலம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2…

    • 2 replies
    • 681 views
  22. கங்கை தீர்த்தத்தை தபாலில் பார்சல் மூலம் வீட்டிற்கு அனுப்பி வைக்கும் சேவையை, விரைவில் தொடங்க தபால்துறை திட்டமிட்டுள்ளது. புனிதமாக கருதப்படும் கங்கை நதி தண்ணீரை, காசி போன்ற இடங்களுக்கு செல்லும் இந்துக்கள் எடுத்து வருகின்றனர்.இதனால், கங்கை தண்ணீரை பார்சல் மூலம் வழங்க தபால் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.இதுகுறித்து, மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது, தபால் துறையின், இ - காமர்ஸ் பிரிவு, பல்வேறு பொருட்களை மக்களுக்கு பார்சல் மூலம் கொண்டு சேர்க்கிறது.பார்சல் சேவை, தற்போது பெரியளவில் வளர்ந்து வருகிறது, வருவாய், 80 சதவீதம் உயர்ந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ், ஹரித்துவார் போன்ற இடங்களில் இருந்து புனிதமான கங்கை நீரை எடுத்து பார்சல் மூலம…

  23. சுவிஸ்ஸில் உலகின் நீளமான ரெயில் சுரங்கப்பாதை இன்று திறப்பு 17 ஆண்டு கால கட்டுமானப் பணி நிறைவடைந்து இன்று உலகின் நீளமான மற்றும் ஆழமான ரெயில் சுரங்கப்பாதை அதிகாரபூர்வமாக சுவிட்சர்லாந்தில் திறக்கப்படவுள்ளது. சுவிஸ் சாலைகளில் ஏற்படும் வாகனப்போக்குவரத்தை குறைக்க ஆல்ப்ஸ் மலைப் பகுதியின் கீழ் 57 கி.மீ. நீளமுள்ள கோத்தார்ட் சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் தெற்கு ஐரோப்பாவை இணைக்கும் ரயில் வலையமைப்பின் ஒரு பகுதியாக இந்த சுரங்கப்பாதை இருக்கும். இந்த சுரங்கப்பாதையை பொறியியல் அற்புதம் என்றும் சுவிஸ்சின் துல்லியத்தன்மையோடு குறித்த நேரத்தில் மற்றும் 12 பில்லியன் டாலர் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்றும் வர்ணிக…

    • 4 replies
    • 476 views
  24. இந்தியாவை கடுப்பேற்றுகிறாரா விஜய் மல்லையா ? - வீடியோ இணைப்பு ஒன்பதாயிரம் கோடி கடன் வைத்துள்ள விஜய் மல்லையா இந்தியாவுக்கு தண்ணி காட்டிவிட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார். சாதாரண விவசாயியிடம் ஐம்பாதாயிரம் கடனை வசூலிக்க அட்ராசிட்டி செய்யும் வங்கி நிர்வாகங்கள் ஒன்பாதியிரம் கோடியை கை கழுவிவிட்டு விழி பிதுங்கி நிற்கிறார்கள். விஜய் மல்லையாவுக்கு சொந்தமான ஐ.பி.எல் அணி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ். கடந்த ஞாயற்று கிழமை நடந்த இறுதி போட்டியில் சன் ரைசர்ஸ் அணியுடன் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மோதியது. இப்போட்டியில் எட்டு ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்றது. லண்டனில் இருந்து இப்போட்டியை தனியறையில் மிகப்பெரிய திரையில் விஜய் மல்லையாவும் அவ…

  25. மஜுலா சிங்கப்புரா : தீயினில் வளர் சோதியே! - எம்.கே.குமார் பாகம்-1 'ஒரு சிறு விதைக்குள்ளே எப்படி ஒரு மாபெரும் சந்ததியின் பசி தீர்க்கும் மரம் இருக்கிறதோ அது போலத்தான் நமக்குள்ளே கிடக்கின்றன சாதிக்கவேண்டிய விஷயங்கள்' என்கிறார் மகான் அரவிந்தர். மனிதனின் மனமும் ஒரு விதைதான். எதைப்போட்டீர்களோ அதுவாகவே தான் அது வளரும். 'அதுவேதான் அது' என்றாகிப்போகும். 'தன்னம்பிக்கையையும் சாதிக்கும் மனப்பான்மையையும்' விதைகளாக்கிக்கொண்டு முளைவிட முயன்றால் அது தரும் பலன்களை நாம் மட்டுமல்ல நமது சந்ததியினரும் பகிர்ந்துகொள்வார்கள்; பசியாறி மகிழ்வார்கள். காலம் காலமாய் அதனைப் பின்தொடர்ந்து வருபவர்களும் அதை மனதில்கொள்வார்கள். உண்டு மகிழ்வார்கள் சரி; உண்டு மகிழ்ந்தவர்கள் அப்படியே உறங்கிவிடலாமா?…

    • 12 replies
    • 8.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.