உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26696 topics in this forum
-
ஏமன் நாட்டில் அதிபர் அப்த்-ரப்பு மன்சூர் ஹாதியின் ராணுவத்துக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த ஒரு ஆண்டாக தீவிர சண்டை நடந்து வருகிறது. அங்கு அமைதியை ஏற்படுத்த அதிபர் மன்சூர் ஹாதியும், அரபு நாடுகளும் எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இதனால் கிளர்ச்சியாளர்களை ஒடுக்க சவுதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகளின் கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இதில் ஐக்கிய அரபு அமீரகத்தின் சண்டை விமானங்களும் இணைந்து கொண்டு உள்ளன. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் ஏமனில், கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்த சென்ற அமீரகத்தின் போர் விமானம் ஒன்று திடீரென மாயமானது. இந்த தகவலை ஐக்கிய அரபு அமீரக அரசு செய்தி நிறுவனமான ‘வாம்’ ஒப்புக்கொண்டு உள்ளது. இதற்கிடையே இ…
-
- 0 replies
- 472 views
-
-
மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக வட கொரியா அதிபர் கிம் ஜோங் உன் மற்றும் அந்நாட்டு உயர் அதிகாரிகள் குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று வட கொரியாவிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் புலன்விசாரணை அதிகாரி கூறியுள்ளார். இது குறித்து ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் பேசிய புலன் விசாரணை அதிகாரி மார்ஜூகி தருஸ்மன், தன்னுடைய நாட்டு மக்கள் அதிக அளவு உணவு பற்றாக்குறையிலும், அடிமை வாழ்விலும் இருக்கையில் வடகொரியா பேரழிவை உண்டுபண்ணும் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருகிறது என்று குற்றம்சாட்டினார். அதிபர் கிம் ஜான் உன் உள்ளிட்ட கொரிய ஜனநாயக மக்கள் குடியரசின் முக்கிய தலைவர்களின் பொறுப்புகளை உறுதி செய்ய சர்வதேச அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுற…
-
- 0 replies
- 282 views
-
-
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகு ரக போர் ஹெலிகாப்டர் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைச் சோதனை திங்கள்கிழமை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் (ஹெச்.ஏ.எல்.) மூலம் தயாரிக்கப்பட்ட சுமார் 5.5 டன் எடையுடைய இந்த ஹெலிகாப்டரானது அணு ஆயுதங்கள், ஏவுகணைகள், சிறிய ரக குண்டுகள் ஆகியவற்றை தாங்கிச் சென்று தாக்கும் திறனுடையது.இந்நிலையில், இந்த ஹெலிகாப்டரைப் பயன்படுத்தி ஏவுகணைத் தாக்குதல் நடத்தும் சோதனையானது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில் உள்ள பாலைவனப்பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, ஹெலிகாப்டர் மூலம் ஏவப்பட்ட ஏவுகணைகள், குறிப்பிட்ட வான் இலக்குகளை துல்லியமாகத் தாக்கின. போர் ஹெலிகாப்டர் சோதனையில் இது ஒரு மைல் கல் ஆகும். http://www.seithy.com/bre…
-
- 0 replies
- 279 views
-
-
அன்னை தெரசாவுக்கு செப்டம்பர் 4ல் புனிதர் பட்டம் சமூக சேவகர் அன்னை தெரசா செப்டம்பர் 4ஆம் தேதியன்று புனிதராக அறிவிக்கப்படுவார் என போப் ஃப்ரான்சிஸ் அறிவித்திருக்கிறார். அன்னை தெரசாவின் இரண்டு அற்புதங்கள் அங்கீகரிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுகிறது. கொல்கத்தாவின் ஏழை மக்களுக்காகப் பணியாற்றிய அன்னை தெரசா, ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் புனிதர் வரிசையில் இனி இடம்பெறுவார். அன்னை தெரசா தனது சக்தியின் மூலம் ஒருவரை குணப்படுத்தியதாகச் சொல்லப்படும் இரண்டாவது சம்பவத்தை வத்திகானின் மூத்த மதகுருக்கள் அங்கீகரித்ததையடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருக்கும் அன்னை தெரசா, அல்…
-
- 0 replies
- 214 views
-
-
Image copyrightRIA Novosti சிரியாவிலிருந்து வெளியேறும் ரஷ்ய போர் விமானங்களின் முதல் தொடரணி ரஷ்யாவை நோக்கி வந்துக்கொண்டிருப்பதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிரியாவில் ரஷ்ய தலையீட்டின் முக்கிய நோக்கங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், ரஷ்யா தமது படைகளை வெளியேற்றத்தொடங்கியுள்ளது என்றும் அதிபர் புட்டின் நேற்று திடீரென அறிவித்ததையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இன்று விடியற்காலை இராணுவ உபகரணங்கள் சரக்கு விமானங்களில் ஏற்றப்படுவதை ரஷ்ய அரச ஊடகம் ஒளிப்பரப்பியுள்ளது. அதிபர் அஸ்ஸத்துக்கு ஆதரவாக நடத்தப்பட்ட குண்டு தாக்குதல்கள் மோதலின் அலையை திசை திருப்பியுள்ளன என்று தெரிவித்த அதிபர் புட்ட்டின், தற்போது அமைதி பேச்சுக்கள் ஆரம்பிக்க ஏ…
-
- 0 replies
- 370 views
-
-
படம் நன்றி : AFP கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் சரித்திர முக்கியத்துவம் மிக்க தேர்தலில் வெற்றிபெற்ற ஜனநாயகத்துக்கான தேசிய முன்னணியின் தலைவியான ஆன் சான் சூச்சியின் நெருங்கிய சகாவாக இவர் பார்க்கப்படுகிறார். தனது நியமனம் ஆன் சான் சூச்சிக்கு கிடைத்த பெரிய வெற்றி என்று அவர் கூறியுள்ளார். அரசியலமைப்பின்படி அதிபர் பதவிக்கு வருவதில் இருந்து சூச்சி தடுக்கப்பட்டுள்ளார், ஆனால் தானே நாட்டை வழி நடத்துவேன் என்று அவர் கூறியுள்ளார். அதிபர் தேர்வின் போது மொத்தமான 652 வாக்குகளில் 360 வாக்குகளை டின் ஜோவ் பெற்றார். http://www.bbc.com/tamil/global/2016/03/160315_burmapresident ஆசியாவில் ஒரு மகிழ்வான விடயம்.
-
- 0 replies
- 502 views
-
-
ஐ.எஸ் தீவிரவாதிகளின் கொடூர முகத்தை ரகசியமாய் படம் பிடித்த பெண்கள் (வீடியோ) சிரியாவில் ஐ.எஸ். ஆதிக்கத்தில் இருக்கும் ரக்கா நகரம் சிதைந்து வருவதை அங்குள்ள பெண்கள் இருவர் படம் பிடித்துள்ளனர். சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளவர்களின் வாழ்க்கை முறை எப்படி மாறியுள்ளது என்பதை அந்த பெண்கள் படம் பிடித்துள்ளனர். கிளர்ச்சி வெடிக்கும் முன்னர் பரபரப்பாகவும் மிகவும் சுதந்திரமாகவும் இருந்த ரக்கா நகரத்தில் தற்போது கெடுபிடிகள் அதிகரித்துள்ளதாகவும், பெரும்பாலும் வெளிநாட்டு ஐ.எஸ். தீவிரவாதிகள் மட்டுமே வீதியில் நடமாடி வருவதாகவும் அந்த பெண்கள் குறிப்பிடுகின்றனர். ஐ.எஸ். ஆதிக்கத்தினால் இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் அவர்கள், …
-
- 0 replies
- 533 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - ஞாயிறன்று முப்பத்தியேழு பேர் பலியான கார் குண்டுத்தாக்குதலுக்கு துருக்கிய அரசு, குர்து தீவிரவாதிகளை குற்றஞ்சாட்டுகிறது. - மெக்ஸிகோவில் ஆட்கள் கடத்தப்படுவது வேகமாக அதிகரித்துள்ளது. பிபிசியின் சிறப்புத் தகவல். - ஐரோப்பாவும், ரஷ்யாவும் இணைந்து செவ்வாய்க்கு அனுப்பும் முதல் விண்கலம்.
-
- 0 replies
- 452 views
-
-
பாங்காக்கில் தீயணைப்பு வாயுக் கசிவால் 7 பேர் பலி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், வங்கி ஒன்றின் தீயணைப்பு வாயுக் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 8 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர். திடிரென ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் அங்கிருந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது தாய்லாந்தின் மிகப் பெரிய நிதி நிறுவனங்களில் ஒன்றான சியாம் வர்த்தக வங்கியின் தலைமையகத்தில் தீயணைப்பு கட்டமைப்பில் திருத்த வேலைகள் நடந்துகொண்டிருந்தபோது, விபத்தொன்று ஏற்பட்டுவிட்டதாக அந்த வங்கி கூறியுள்ளது. இந்த வாயுவில் நச்சுத் தன்மை ஏதும் இல்லை என்று கூறப்படுகின்றது. ஆனால், குறிப்பிட்ட பகுதியில் திடிரென ஆக்ஸிஜன் ப…
-
- 0 replies
- 313 views
-
-
பிரதமர் நரேந்திர மோடி அரசைவிட சீக்கிய அமைச்சர்கள் கனடாவில் அதிகம்: பிரதமர் ஜஸ்டின் பெருமிதம் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அரசைவிட எனது அரசில் சீக்கிய அமைச்சர்கள் அதிகம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் கடந்த வெள்ளிக்கிழமை வாஷிங்டனில் உள்ள அமெரிக்க பல்கலைக் கழகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த ஜஹான் என்ற மாணவர், உங்கள் அரசில் சீக்கிய அமைச்சர்கள் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார். இதற்குப் பதில் அளித்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியப் பிரதமர் நர…
-
- 0 replies
- 432 views
-
-
வடகொரியாவின் நீர்மூழ்கியொன்று காணமற் போயுள்ளதை அமெரிக்கா, உறுதி செய்துள்ளது வடகொரியாவின் நீர்மூழ்கியொன்று காணமற் போயுள்ளதை அமெரிக்கா, உறுதி செய்துள்ளது. குறிப்பிட்ட நீர்மூழ்கி நீரில் மூழ்கியிருக்கலாம் என தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் வடகொரிய கடற்பரப்பில் காணப்பட்ட நீர்மூழ்கியே இவ்வாறு காணமற் போயுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து தென்கொரியா விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அந்தநாட்டின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வாரம் முழுவதும் குறிப்பிட்ட நீர்மூழ்கியை அமெரிக்க படையினர் கண்காணித்து வந்ததாக தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரிகள் தற்போது வடகொரியா காணமற்போன தனது நீர்மூழ்கியை தேடுவத…
-
- 0 replies
- 379 views
-
-
கே.எப்.சி சிக்கன் சாப்பிட்ட ஒருவர் பலி Published by Rasmila on 2016-03-14 12:06:56 இந்தோனேசியாவில் கே.எப்.சி சிக்கன் சாப்பிட்ட ஒருவர் பரிதாபமாக இறந்துள்ளார். இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்தாவில், நேற்று சிக்கன் சாப்பிடும் போட்டி ஒன்றை சிக்கன் உணவகமான கே.எப்.சி என்று அழைக்கப்படும் கெண்டகி பிரைட் சிக்கன் நடத்தியது. இந்த போட்டியில் பங்கேற்று கே.எப்.சி சிக்கனை அதிகமாக சாப்பிட்ட 3 நபர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்த நபர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது, இதையடுத்து அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 45 வயதான…
-
- 0 replies
- 466 views
-
-
மலேசிய பிரதமரிடம் கேள்வி கேட்க முனைந்த அவுஸ்திரேலிய ஊடகவியலாளர்கள் தடுத்து வைக்கப்பட்ட பின் விடுதலை மலேசிய பிரதமர் நஜீப்ரசாக்கிடம் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விகளை கேட்க முனைந்த அவுஸ்திரேலிய ஊடகவியலாளர்கள் தடுத்துவைக்கப்பட்ட பின்னர் விடுதலைசெய்யப்பட்டுள்ள சம்பவம் ஊடக உலகில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள குச்சிங் பகுதிக்கு மலேசிய பிரதமர் சென்றிருந்தவேளை பெசெர் .எரக்லம் என்ற இரு அவுஸ்திரேலிய ஊடகவியலாளர்கள் அவரை அணுகி அவர் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்ப முனைந்துள்ளனர். அவ்வேளையே இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இரு ஊடகவியலாளர்களும…
-
- 0 replies
- 259 views
-
-
துருக்கிய தலைநகரில் குண்டுவெடிப்பு; 27 பேர் பலி 2016-03-14 00:15:29 துருக்கியின் தலைநகர் அங்காராவில் ஞாயிறன்று மாலை இடம்பெற்ற குண்டுவெடிப்பினால் குறைந்தபட்சம் 27 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சுமார் 75 பேர் காயமடைந்துள்ளனர். கார் குண்டு ஒன்றே வெடித்துள்ளது. இந்த குண்டுவெடிப்புகளால் பல வாகனங்கள் தீப்பற்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. - See more at: http://www.metronews.lk/article.php?category=world&news=15492#sthash.Dp1VpdJ3.dpuf
-
- 1 reply
- 305 views
-
-
ஸ்ரீநகர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் சீன ராணுவத்தின் நடமாட்டம் காணப்படுவது, பாதுகாப்பு வளையத்திற்கு எச்சரிக்கை சமிக்ஞையை எழுப்பிஉள்ளது. ஜம்மு காஷ்மீரின் லாடக் பகுதியில் அவ்வபோது ஊடுருவி அத்துமீறல்களில் ஈடுபட்ட வந்த சீன ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா - பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் காணப்படுவது பாதுகாப்பு வளையத்திற்கு எச்சரிக்கை சமிக்ஞையை எழுப்பிஉள்ளது. வடக்கு காஷ்மீரின் நவ்காம் செக்டார் பகுதிக்குல் எதிர்முனையில் சீன ராணுவ அதிகாரிகளின் நடமாட்டத்தை ராணுவம் கண்டுபிடித்து உள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு…
-
- 1 reply
- 428 views
-
-
`ஜெர்மன்விங்ஸ் விமானி மனநல மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார்' `விபத்துக்குள்ளான ஜேர்மன் விங்ஸ்ஸில் பயணித்த அனைவரும் கொல்லப்பட்டனர்' ஜெர்மன்விங்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்றை துணை விமானி ஆண்ட்ரியாஸ் லூபிட்ஸ் விபத்துக்கு உள்ளாக்கிய சம்பவம் இடம்பெற்று கிட்டத்தட்ட ஒரு ஆண்டு ஆகிறது. இந்த சம்பவம் நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர், குறித்த துணைவிமானி மருத்துவரால் மனநல மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்ததாக விமான விபத்து குறித்த அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. விமானம் 9525 விபத்துக்கு உள்ளாகி ஒரு ஆண்டு ஆகிறது பிரான்ஸில் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் 9525 விமானம் விபத்துக்கு உள்ளாக…
-
- 0 replies
- 357 views
-
-
ஐஎஸ்-இன் பாலியல் அடிமைகளுக்கு கருத்தடை மருந்து கொடுக்கப்படுகிறது' அடிமை ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கமுடியும், ஆனால் அவர் கர்ப்பம் தரிக்கக்கூடாது என்ற இஸ்லாமிய பொருள் விளக்கம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டே கருத்தடை மருந்துகளை ஐஎஸ் பயன்படுத்துவதாக நம்பப்படுகின்றது இஸ்லாமிய அரசு ஆயுதக்குழுவினரால் பாலியல் அடிமைகளாக வைக்கப்பட்டிருக்கின்ற பெண்கள் கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்காக, அவர்களுக்கு கருத்தடை மருந்துகள் கொடுக்கப்படுவதாக நியுயோர்க் டைம்ஸ் இதழ் நடத்தியுள்ள புலனாய்வொன்றில் தெரியவந்துள்ளது. அந்தப் பெண்களை ஆயுததாரிகள் கைமாற்றிக்கொள்வதற்கு வசதியாக இந்த நடைமுறை முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகின்றது. இராக்கில், ஐஎஸ் ஆயுதக்குழுவின் …
-
- 0 replies
- 494 views
-
-
புதுடெல்லி, தினமும் 5 முறை தொழுகை செய்வது என்பதை ஒன்றாக குறைக்க வேண்டிய காலம் என்றும் பொது இடங்களில் அனுமதிக்க கூடாது என்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின் கூறிஉள்ளார். வங்கதேசத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின் கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகிறார். கடந்த 20 வருடங்களில் அவர் அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இடமாறி வாழ்ந்து தனது எழுத்துப் பணியை தொடர்கிறார். கடந்த வருடம் ஆங்கில பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் என்னை முஸ்லிம் என்று அழைக்காதீர்கள் நான் ஒரு நாத்திகர் என்று தஸ்லிமா குறிப்பிட்டு இருந்தார். …
-
- 0 replies
- 333 views
-
-
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிரபலமான ஏல நிறுவனத்தில் இருந்து சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான 2 சாமி சிலைகளை அமெரிக்க குடியுரிமை மற்றும் சுங்க அமலாக்க துறை அதிகாரிகளும், மன்ஹாட்டன் மாவட்ட அதிகாரிகளும் மீட்டனர். மிருதுவான கல்லில் செய்யப்பட்ட அந்த சிலைகள் இந்தியாவில் இருந்து கடத்திச் செல்லப்பட்டவை ஆகும். அந்த சிலைகளின் அமைப்பை வைத்து பார்க்கும் போது அவை ராஜஸ்தான் அல்லது மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து கடத்திச் செல்லப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அந்த இரு சிலைகளின் மதிப்பும் சுமார் 3½ கோடி ரூபாய் ஆகும். அந்த ஏல நிறுவனம் அடுத்த வாரம் அந்த சிலைகளை ஏலத்தில் விற்பனை செய்வதாக இருந்தது. ஆனால் அதற்கு முன்னர் சிலைகளை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். இந்திய அரசு …
-
- 0 replies
- 364 views
-
-
ஆல்ப்ஸ் மலையில் பனிச்சரிவு; 6 பேர் பலி இத்தாலியின் ஆல்ப்ஸ் மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். 3000 மீட்டர் உயரத்தில் இந்த விபத்து நடந்திருக்கிறது (கோப்புப் படம்). மேலும் பலர் காணாமல் போயிருக்கும் நிலையில், அவர்களைத் தேடும் பணி நடந்துவருகிறது. ஆஸ்த்ரிய எல்லையை ஒட்டியுள்ள சவுத் டைரோலில் இருக்கும் மோண்ட் நெவோசோவில் மூவாயிரம் மீட்டர் உயரத்தில் இந்தப் பனிச்சரிவு ஏற்பட்டது. தேடுதல் பணியில் மோப்ப நாய்களும் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. http://www.bbc.com/tamil/global/2016/03/160312_alps
-
- 0 replies
- 407 views
-
-
காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: "சிறுவன் பலி" I `இஸ்ரேல் மேற்கொண்ட வான் தாக்குதலில் 10 வயது சிறுவன் பலி' காஸாவின் வடக்குப் பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட வான் தாக்குதலில் 10 வயது சிறுவன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சிறுவனது சகோதரர்கள் இருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இஸ்ரேல் மீது ஹாமாஸ் மேற்கொண்ட ராக்கட் தாக்குதலுக்கு பதில் தாக்குதலாகவே, தாம் ஹமாஸின் 4 இலக்குகளை குறிவைத்துத் தாக்கியதாக இஸ்ரேலியப் படை தெரிவித்துள்ளது. காஸாவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட 4 ராக்கட்கள் இஸ்ரேலிய நகரான ஸ்தெரோவுக்கு அருகே உள்ள திறந்த வெளியில் வெடித்ததாக இஸ்ரேல் படை மேலும் தெரிவித்துள்ளது. http://www.bbc.com/tamil/glo…
-
- 0 replies
- 273 views
-
-
தாக்குதலுக்குத் திட்டமிட்டதாக ஃப்ரான்சில் இரு பெண்கள் கைது கடந்த நவம்பரில் நடந்தது போன்ற ஒரு தாக்குதலைத் திட்டமிட்டதாக இரு பதின்ம வயதுப் பெண்களை ஃப்ரான்ஸ் நாட்டு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பரில் நடந்தது போன்ற ஒரு தாக்குதலை இப்பெண்கள் திட்டமிட்டதாக கூறப்படுகிறது (கோப்புப் படம்). இந்தத் தாக்குதல் குறித்து ஃபேஸ்புக்கில் அவர்கள் தகவல்களைப் பரிமாறிக்கொண்டிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மிகவும் ஆரம்ப நிலையில் இருந்ததாகவும் அவர்களிடமிருந்து ஆயுதங்களோ, வெடிமருந்துகளோ பறிமுதல் செய்யப்படவில்லையென்றும் அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். மேலும் இரண்டு பெண்களும் இது தொடர்பாக விசாரணைக்குட்படுத்தப்பட்டாலும் அவர்கள் பிறகு…
-
- 0 replies
- 369 views
-
-
காசியாபாத், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு வருகை தர உள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பாதுகாப்பு அளிக்க இருப்பது குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இதை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக மத்திய உள்முறை மந்திரி ராஜ்நாத்சிங் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, 'இந்தியாவுக்கு யார் வந்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். பாகிஸ்தானில் இருந்து மட்டுமல்ல எந்த நாட்டின் குடிமகனாக இருந்தாலும் இந்தியாவுக்கு வந்தால் அவர்களுக்கு எப்போதும் பாதுகாப்பு வழங்கப்படும். அதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்' என தெரிவித்தார். இதுபற்றி, உள்விவகாரத்துறை இணை மந்திரி கிரெண் ரிஜ்ஜூ தெரிவிக்கையில், பாகிஸ்தான் கிரிக்கெட…
-
- 0 replies
- 232 views
-
-
ராணுவத்தினருக்கு சம்பளத்திற்கு பதில் பெண்களை... - இப்படியும் ஒரு அநியாயம்! ஜெனீவா: ராணுவத்தினருக்கு சம்பளத்திற்கு பதில் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துகொள்ள சூடான் அரசாங்கமே அனுமதி கொடுத்ததாக ஐ.நா.வுக்கான மனித உரிமைகள் ஆணையம் அதிர்ச்சி தகவலை தனது விசாரணை அறிக்கையில் வெளியிட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தெற்கு சூடான் நாட்டில், கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் உள்நாட்டு போர் நடந்தது. ஆளும் கட்சி தனது பதவியை காப்பாற்றிக்கொள்ளவும், ஆட்சிக்கு எதிராக சதி செய்தவர்களுக்கு எதிராக ராணுவம் மூலம் கடுமையாகன தண்டனைகளை வழங்கியதாகவும், பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக ஐ.நா சபையின் மனித உரிமைகள் ஆணையம்…
-
- 0 replies
- 580 views
-
-
பிரித்தானிய பிரதமரான டேவிட் கமெரூனின் தாயார் மேரி கமெரூன் ஒரு குழந்தைகள் மையத்தில் பணிபுரிந்து வந்துள்ள நிலையில், தற்போது அவரிடமிருந்து பணி பறிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரதமர் கமெரூனின் தாயாரான மேரி கமெரூன் Oxfordshire நகரத்தில் உள்ளChieveley மற்றும் Area என்ற இரு குழந்தைகள் மையத்தில் கடந்த ஒரு வருடமாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், பிரதமர் கமெரூன் சில மாதங்களுக்கு முன்னர் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். நகரங்களில் உள்ள நிர்வாக கவுன்சில்களுக்கு அளிக்கப்பட வேண்டிய நிதியில் தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் 2020ம் ஆண்டில் இருந்து தற்போது அளிக்கப்படும் நிதியை விட 24 சதவிகிதம் குறைவாக அளிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்…
-
- 0 replies
- 322 views
-