Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்காவில் உள்ள சுதந்தர தேவி சிலைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அப்பகுதியிலிருந்து பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. மோப்பநாய்களுடன் வந்த காவல்துறையினர் அப்பகுதி முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர். நான்கு மணி நேர சோதனைக்கு பிறகு, வெடிகுண்டுகள் ஏதும் கைப்பற்றப்படாததால், அப்பகுதி முழுவதும் பாதுகாப்பாக உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுத்தவர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் சுதந்தர தேவி சிலையைக் காண ஒவ்வோர் ஆண்டும் 40 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். கடந்த 2012 ஆம் ஆண்டு தாக்…

  2. எனது மகனுக்கு குடியுரிமை இல்லையா? கனடா அரசின் மீது வழக்கு தொடுக்கும் தந்தை [ சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2015, 11:44.47 மு.ப GMT ] கனடா நாட்டில் வசித்து வரும் சிறுவனுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, அவருடைய தந்தை அந்த அரசின் மீது வழக்கு தொடர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கனடாவில் உள்ள Ontario மாகாணத்தை சேர்ந்தவர் பால் காம்ப்டன் (Paul Compton, 45). இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 2009ம் ஆண்டு கனடா அரசு குடியுரிமை சட்டத்தில் சில திருத்தங்களை நடைமுறைப்படுத்தியது. இதன் மூலம், 2009ம் ஆண்டிற்கு பிறகு வெளிநாட்டை சேர்ந்த பெற்றோர்களுக்கு பிறக்கும் இரண்டாவது குழந்தைக்கு கனடா குடியுரிமை கிடைக்காது என அரசு அறிவித்திருந்தது. …

  3. புலம்பெயர்வோரின் மரணத்திற்கு பிரித்தானிய அரசாங்கம் காரணமா? [ சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2015, 12:34.42 பி.ப GMT ] மத்திய தரைக்கடல் புலம்பெயர்வோரின் மரணத்திற்கு பிரித்தானிய அரசாங்கம் தான் காரணம் என எதிர்க்கட்சி தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார். ED Miliband நேற்று தனது உரையில் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனை எதிர்த்து குற்றம் சுமத்தி பேசியுள்ளார். Mr Edmilband பிரித்தானிய அரசாங்கத்தை மத்திய தரைக்கடல் புலம்பெயர்வோரின் மரணத்திற்கு காரணமாக குற்றம் சுமத்தியுள்ளார். Mr Edmilband மத்திய தரைக்கடல் புலம் பெயர்வோரின் மரணங்களை பிரித்தானிய அரசாங்கம் பெரிதும் தவிர்த்திருக்க கூடிய சூழ்நிலையில் இருந்தும் கூட, சரியான வகையில் திட்டமிட செய்யாத படியால் இந்த மத்திய ப…

  4. மரண தண்டனையை நிறைவேற்றினால் விளைவுகளை சந்திப்பீர்கள்..எச்சரிக்கும் பிரான்ஸ் [ சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2015, 09:00.09 மு.ப GMT ] பிரான்ஸ் குடிமகனிற்கு மரண தண்டனையை நிறைவேற்றினால், இந்தோனேஷியா கடும் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பிரான்ஸ் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரான்ஸ் குடிமகனான Serge Atlaoui என்பவரை போதை பொருள் கடத்தியதாக குற்றம்சாட்டி கடந்த 2008ம் ஆண்டு இந்தோனேஷியா அரசு கைது செய்து மரண தண்டனை வழங்கியது. சமீபத்தில் பிரான்ஸ் குடிமகன் உள்பட 10 கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற இந்தோனேஷிய அரசு தயார் நிலையில் உள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனைதொடர்ந்து, தனது நாட்டு குடிமகனை மீட்க அனைத்து வகையான நடவடிக்கையும் எடுக்கப்படும் என பிரான…

  5. நிலநடுக்கத்தால் நிலைகுலைந்துள்ள நேபாளத்தில் 3 லட்சம் சுற்றுலா பயணிகள் சிக்கித் தவிப்பதாக தகவல்கள் கூறுகின்றன. உலகின் முக்கிய சுற்றுலாதலமாக விளங்கும் நேபாளத்தில் வசந்த கால சீசன் நிலவுவதால் இயற்கை எழிலை ரசிக்கவும், மலையேற்றம் செய்வதற்காகவும் உலகெங்கிலுமிருந்து சுமார் 3 லட்சம் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். இந்தியா, சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். தற்போது அவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் அவதியுற்று வருகின்றனர். காத்மண்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது தாயகம் திரும்புவதில் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. - See more at: http://www.canadamirror.com/canada/41730.h…

    • 0 replies
    • 545 views
  6. நியூஸிலாந்தை தாக்கியது பயங்கர நிலநடுக்கம்… April 24, 2015 at 1:14 pm admin scroller, slider, top news, உலகம் இவ்வளவுதான் நியூஸிலாந்தில் இன்று காலை மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.9 ஆகப் பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை அந்நாட்டு நேரப்படி 3.36 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன. இரண்டுமே மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளன. இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக எந்த தகவலும் இல்லை.வீடுகள் கடைகளில் இருந்த பொருட்கள் கீழே விழுந்துள்ளன. அச்சத்தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். நடப்பு காம்

  7. மரண படுக்கையில் அல்பாக்தாதி: ஐ.எஸ் தீவிரவாதிகளை வழிநடத்தும் புதிய தலைவர் (வீடியோ இணைப்பு) [ வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2015, 11:15.16 மு.ப GMT ] ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ் அமைப்பில் கலிபாவாக (தலைவர்) அபுபெக்கர் அல்பாக்தாதி இருந்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் படுகாயமடைந்ததாகவும், நடமாட முடியாத நிலையில் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. மேலும் இதனை ஐ.எஸ் அமைப்பும் உறுதி செய்தது. தற்போது உயிருக்கு போராடும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், அவரால் பணியாற்ற முடியவ…

  8. உலகிலேயே மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடு சுவிட்சர்லாந்து என்ற பெருமையை பெற்றுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகில் மொத்தம் உள்ள 158 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் சுவிட்சர்லாந்து முதல் இடத்தைப் பிடித்துள்ளதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த இடங்களை ஐஸ்லாந்து, டென்மார்க், நோர்வே மற்றும் கனடா ஆகிய நாடுகள் பிடித்துள்ளன. இந்த நாடுகளின் மக்கள் வாழ் நாள் முழுக்க மகிழ்ச்சியாக உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. நிலையான அபிவிருத்தி தீர்வு அமைப்பு நடத்திய இந்த ஆய்வில் டோகோ, புருன்டி, சிரியா, பெனின் மற்றும் ருவாண்டா ஆகிய நாட்டு மக்கள் நிம்மதியைத் தொலைத்து மகிழ்ச்சியற்ற நிலையில் வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது. பணம் மட்டுமே மகிழ்ச்சியைத் தந்துவிடாது. நேர்மை, பெருந்தன்மை, நம்பிக்கை மற்றும் நல…

  9. இலங்கை - சீனா - இந்தியா இலங்கையால் சீனாவைப் புறக்கணிக்க முடியாது; இந்தியாவுக்கும் இலங்கையுடனான அணுக்கம் அவசியம். மார்ச் மாத இறுதியில் இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா சீனாவுக்கு வருகை தந்தார். அவருக்கு பெய்ஜிங் மக்கள் மாமன்றத்தில் சிறப்பான வரவேற்பு அளித்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங். கடந்த செப்டம்பர் மாதம் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் ‘கொழும்பு துறைமுக நகரம்’ எனும் திட்டத்தைத் தன் சொந்தக் கரங்களால் தொடங்கி வைத்திருந்தார் சீன அதிபர். அப்போது இன்னும் நான்கு மாதங்களில் இலங்கையில் ஆட்சி மாறும் என்றும் புதிய அதிபர் இந்தத் திட்டத்தை நிறுத்தி வைப்பார் என்றும் அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனாலும், தலைவர்களின் சந்திப்பு சுமுகமாகவே நடந்தது. சீனாவின் திட்…

  10. பீர் குடிப்பதில் ஆர்வம் குறைந்து வரும் யேர்மனி மக்கள். 1995 10.7 பில்லியன் லிற்றர் 2000 9.95 பில்லியன் லிற்றர் 2004 9.24 பில்லியன் லிற்றர் 2008 8.79 பில்லியன் லிற்றர் 2014 8.02 பில்லியன் லிற்றர்

    • 4 replies
    • 513 views
  11. புதுடெல்லியிலிருந்து சிகாகோவுக்கு செல்லும் ஏர் இந்தியா (Flight AI-127) விமானத்தில் 270 பயணிகள் பயணம் செய்ய காத்திருந்தனர். புதுடெல்லி, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து (இன்று அதிகாலை 2.20 மணிக்கு) புறப்பட தயாராக இருந்த இந்த விமானத்தை இயக்க போதுமான விமானிகள் மற்றும் விமான பணியாளர்கள் இல்லாத காரணத்தால் 15 மணி நேரம் தாமதமாக சென்றது பயணிகளுக்கு பெரும் சிரமத்தை உண்டாக்கியது. இரண்டு நாட்களுக்கு முன்னர் கொச்சிக்கு செல்லும் விமானத்தில் விமானி ஒருவர் தூசிகள் படிந்த ஆக்ஸிஜன் மாஸ்கை அணிய மறுத்ததால் 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது ஏர் இந்தியா பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. - See more at: http://www.canad…

    • 0 replies
    • 371 views
  12. அமெரிக்காவின் சிகாகோ நகரிலிருந்து ஹார்ட்போர்டு நகருக்கு புறப்பட்டு சென்ற ஜெட் விமானத்தில் அழுத்த குறைபாடு ஏற்பட்டதால் மூன்று பயணிகள் சுயநினைவிழந்தனர். பல பயணிகளை சிரமத்திற்கு உள்ளானார்கள். 75 பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட அந்த விமானம் ஒன்றரை மணி நேரம் வானில் பறந்த நிலையில், திடீரென விமானத்தில் அழுத்தக்குறைவு(Cabin Pressure) ஏற்பட்டது. இதன் காரணமாக மூன்று பயணிகள் தங்கள் சுயநினைவை இழந்தனர். இந்த நேரத்தில் 38000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் டைவ் அடித்தவாறு மூன்றே நிமிடங்களில் 10000 அடிக்கு கீழிறங்கியது. இதனால் பயணிகள் அனைவரும் பயத்தில் உறைந்து போனார்கள். எனினும் திறமையாக செயல்பட்ட விமானி அவசரமாக விமானத்தை தரையிறக்க முடிவு செய்தார். உடனடியாக பப்பல்லோ விமான நில…

    • 0 replies
    • 358 views
  13. மாயமான மலேசிய விமானம் எம்.ஹெச்.370 விபத்தில் சிக்கியது என்று மலேசியா அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை சேர்ந்த எம்.எச்.370 விமானம் கடந்த மார்ச் 8-ந்தேதி மாயமானது. கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் பெய்ஜிங் சென்றபோது மாயமான மலேசியா விமானம் எங்கே தான் போனது, என்னதான் ஆனது என்பது தெரியவில்லை. விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்தது விபத்துக்குள்ளானது என்று தெரிவிக்கப்பட்டது. விமானத்தில் இருந்தவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டனர் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், விமானத்தை தேடும் பணியில், ஆஸ்திரேலியா, சீனா மற்றும் மலேசியா நாட்டை சேர்ந்த மீட்பு குழு ஈடுபட்டது…

    • 7 replies
    • 902 views
  14. இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், இளம் வயதுடையவருமான விவேக் மூர்த்தி, அமெரிக்க நாட்டின் மருத்துவத்துறை தலைவராக பொறுப்பேற்றார். கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே விவேக் மூர்த்தி இப்பதவியில் நியமிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில் நேற்று அவர் தனது புதிய பொறுப்பை ஏற்றார். 2013 முதல் அந்நாட்டின் பொது சுகாதாரத்துறை தலைவராக இருந்த விவேக் மூர்த்தியை இப்பதவியில் அமர்த்த அதிபர் ஒபாமா முடிவு செய்தார். எனினும் துப்பாக்கி கட்டுப்பாட்டு நடவடிக்கைக்கு ஆதரவாக விவேக் மூர்த்தி கையெழுத்திட்டதால் அந்நாட்டு செனட் சபை அவரது நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்து வந்தது. எனினும் 2014 ஆம் ஆண்டு குடியரசுக்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒரு மனதாக மருத்துவத்துறை தலைவராக விவேக் ம…

    • 0 replies
    • 436 views
  15. கனடாவிற்குச் செல்ல வேண்டுமென்ற ஒரே நோக்குடன் எம்.வீ. சன் சீ அகதிகள் கப்பல்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர் என கனேடிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐந்நூறுக்கும் மேற்பட்ட இலங்கை இளைஞர்கள் ஆபத்து குறித்து யோசிக்காமல் இக்கப்பல்களில் பயணித்து வருகின்றனர் என அவ் ஊடகம் தெரிவித்துள்ளது. கடந்த 5 வருடங்களில் மாத்திரம் அகதி அந்தஸ்து கோரி பிரிட்டிஷ், கொலம்பியா கடற்கரையை நோக்கி சென்றவர்களில் ஆயிரத்து 700 பேர் இதுவரை மத்தியதரைக்கடல் பகுதியில் உயிரிழந்துள்ளதாக கனேடிய ஊடகம் தெரிவித்துள்ளது. 2010ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இக்கப்பலில் பயணம் செய்த 380 ஆண்களும், 4 கர்ப்பிணி தாய்மார்கள் உட்பட 63 பெண்களும், 49 சிறுவர்களும் மத்திய தரைக்கடல் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டனர். 2009ம் ஆண்டு …

  16. நடிகை ஐஸ்வர்யா ராய் இடம்பெற்ற பிரபல நகைக்கடை விளம்பரம் ஒன்று தொடர்பாக எழுந்த சர்ச்சையை அடுத்து, அந்த விளம்பரத்தை திரும்ப பெறுவதாக அந்த நகைக்கடை நிறுவனம் அறிவித்துள்ளது. நடிகை ஐஸ்வர்யா ராய் நகை அணிந்து அமர்ந்திருப்பது போலவும், அவருக்கு அருகில் உற்சாகமற்ற, உடல் மெலிந்த குழந்தை ஒன்று அவருக்கு குடை பிடிப்பது போல அமைந்திருக்கும் சமீபத்தில் வெளியான பிரபல நகைக்கடை ஒன்றின் விளம்பரம் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. இந்த விளம்பரம் இனவாதத்தை வெளிப்படுத்தும் வகையிலும், குழந்தை தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்திருப்பதாய் ஆர்வலர்கள் பலர் கருத்து வெளியிட்டனர். சமூக வலைத்தளங்களில் இந்த விளம்பரம் சர்ச்சையான கருத்துக்களோடு பரவியிருந்தது. இது போன்ற ஒரு விளம்பரத்துக்கு ஐஸ்வர்யா ராய…

  17. அமேரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பாட்டி சாரா உமர் மற்றும் ஒபாமாவின் மாமா சயீத் ஒபாமா ஆகியோர் புனித உம்ராவை நிறைவேற்றுவதற்க்காக சவூதி அரேபியா வந்துள்ளனர். மேலும் மக்காவில் நடைபெற்று வரும் முஹம்மது நபி குறித்த கண்காட்சியை 2 மணி நேரம் பார்வையிட்ட சாரா உமர் கண்காட்சி மிகவும் அருமையாக இருந்ததாகவும் இஸ்லாத்தை மக்கள் மத்தியில் அதிகம் பரப்புவதற்க்கும் இஸ்லாம் குறித்த குழப்பங்களை போக்குவதற்க்கும் இது போன்ற கண்காட்சிகள் அதிகம் நடத்த வேண்டும் என்று கூறினார். அதிபர் ஒபாமாவின் குடும்பத்திற்கு ஹிதாயத்தை வழங்கிய அல்லாஹ் அதிபர் ஒபாமாவுக்கு ஹிதாயத்தை வழங்குவானாக. - See more at: http://www.canadamirror.com/canada/41556.html#sthash.uzD0M8Bi.dpuf

  18. 1- நெடுஞ்சாலை 400-ல் ஆபாயகரமான போக்குவரத்து டிரக் மோதலில் பெண் மரணம். கனடா- போக்குவரத்து டிரக் ஒன்று காருடன் மோதியதில் பெண் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் வியாழக்கிழமை காலை பார்ரி என்ற இடத்தில் நடந்தது. நெடுஞ்சாலை 400 தெற்கில் பயணித்து கொண்டிருந்த போக்குவரத்து டிரக் நெடுஞ்சாலை 89-ற்கு அருகில் அதிகாலை 2.15அளவில் கட்டுப்பாட்டை இழந்து கொன்கிரிட் தடை ஒன்றை நொருக்கி ஊடக சென்று தெற்கு புறமாக வந்து கொண்டிருந்த காருடன் மோதியது. காரின் சாரதியான பெண் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். பனிப்பொழிவு மற்றும் உறைபனி வெப்பநிலை காரணமாக வீதிகள் பளபளப்பான நிலையில் காணப்பட்டதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிசார் தெரிவித்தனர். நெடுஞ்சாலை 400 போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ளது. 2-…

    • 0 replies
    • 467 views
  19. சந்தேகத்திற்கிடமான பொடி தூவப்பட்ட கடிதம் வந்ததையடுத்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் பல அறைகள் காலி செய்யப்பட்டன.அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு வந்த கடிதம் ஒன்றில் சந்தேகத்திற்கிடமான பொடி தூவப்பட்டிருந்தது. இதனால் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனவே நாடாளுமன்றக் கட்டிடத்தின் பல்வேறு அறைகள் காலி செய்யப்பட்டன. அந்த அறைகளுக்கு சீல் வைத்த பாதுகாப்பு அலுவலர்கள், பல்வேறு பொருட்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணை முடியும் வரை அந்த அறைகளை யாரும் பயன்படுத்தக் கூடாது எனவும் பாதுகாப்பு அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர் . - See more at: http://www.canadamirror.com/canada/41535.html#sthash.74BxYe57.dpuf

    • 0 replies
    • 259 views
  20. கனடா- ஒன்ராறியோ முதல்வர் கத்லின் வின் புதன்கிழமை காலை யூனியன் நிலையத்திலிருந்து பியர்சன் சர்வதேச விமானநிலையத்திற்கு செல்லும் கடுகதி ரயில் வண்டியில் 23-நிமிட பயணம் ஒன்றை மேற்கொண்டார். விமான நிலையத்திலிருந்து டவுன் ரவுன் செல்ல விரும்பும் பயணிகள் யூன் மாதம் 6-ந்திகதியிலிருந்து பயணிக்கலாம் என தெரிவித்தார். போக்குவரத்து அமைச்சர் Steven Del Duca மற்றும் மெற்றோலிங்ஸ் அதிபர் Bruce McCuaig ஆகியோருடன் தனது பயணத்தை மேற்கொண்ட வின் “இன்றய நாள் ஒரு மைல்கல்” என கூறினார். பல தசாப்தங்களாக மாகாணம் இந்த அடிப்படை வசதியை அலட்சியப்படுத்ததியது. ஆனால் தனது அரசாங்கத்தில் இது முடிவிற்கு வந்துள்ளதெனவும் தெரிவித்தார். இது வின்னின் இரண்டாவது போக்குவரத்து சம்பந்தமான அறிவித்தலாகும். 1.6 பில்லிய…

    • 0 replies
    • 361 views
  21. நேபாளத்தில் பேருந்து விபத்தில் பலியான 17 இந்தியர்களின் உடல்களை மீட்டுக்கொண்டு வர ஐஎல் 76 ரக விமானத்தை இந்தியா அனுப்ப முடிவு செய்துள்ளது. இந்த விமானம் இன்று இரவு காத்மாண்டு சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சில நடைமுறை பணிகள் பூர்த்தி செய்யப்பட வேண்டி இருப்பதால் நாளைதான் பலியான 17 பேர் உடல்களுடன் காயம் அடைந்த 28 பேரையும் விமானம் மூலம் மீட்டுக்கொண்டு வரப்படுகின்றனர். இந்த தகவலை வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் விகாஷ் ஸ்வார்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். முன்னதாக, நேபாளத்தில் காத்மாண்டு பள்ளத்தாக்கில் இருந்து 5 கி.மீ. வடகிழக்கே பாக்மதி நதிக்கரையில் அமைந்துள்ள பசுபதிநாதர் கோவிலுக்கு குஜராத் மாநிலத்தை சேர்ந்த 45 பக்தர்கள் பஸ் மூலம், ஆன்மி…

    • 0 replies
    • 554 views
  22. அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்வெழித் தாக்குதலில், ஐஎஸ்எஸ் அமைப்பின் தலைவர் அல்-பாக்தாதி படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சிரியா எல்லைப் பகுதியில் கடந்த மாதம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், அவர் காயமடைந்ததாக இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் அவர் உடல்நிலை தேறி வருவதாகவும், ஆனால் அன்றாட பணிகள் எதிலும் ஈடுபவில்லை என்றும் தெரிகிறது. ஈராக், சிரியாவை ஒன்றிணைத்து, இஸ்லாமிய நாடாக பிரகடனம் செய்து, முக்கிய நகரங்களை அந்த அமைப்பு ஆக்கிரமித்து வரும் நிலையில், அல்-பாக்தாதியின் தலைக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது - See more at: http://www.canadamirror.com/can…

    • 0 replies
    • 182 views
  23. அகமதாபாத்: குஜராத் கடல் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தான் படகில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.600 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் இந்தியா வழியாக ஐரோப்பாவுக்கு கொண்டு செல்கையில் சிக்கியது என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. குஜராத் கடல் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த படகு பறிமுதல் செய்யப்பட்டது. அதில் இருந்த 8 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டனர். படகில் 232 பாக்கெட்டுகளில் இருந்த ரூ.600 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணயில் அந்த போதைப் பொருள் இந்தியா வழியாக ஐரோப்பாவுக்கு எடுத்துச் செல்லப்பட இருந்தது தெரிய வந்துள்ளது. ஆண்டுதோறும் பாகிஸ்தான் சுமார் 200 டன் ஹெராயினை கடத்தி உலக நாடுகளில் விற்பனை செய்க…

    • 0 replies
    • 224 views
  24. ஆள் கடத்தல் குற்றச்சாட்டில் 9 பேர் மீது வழக்கு கனடா முழுவதும் பரந்து பட்ட “புரஜெக்ட் கார்டியன்” என்ற நடவடிக்கையில் பெண்களை கடத்தி பாலியல் ரீதியாக வியாபாரத்தில் ஈடுபடுத்திய சந்தேக நபர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மேல் 61 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. ஜேன் – வில்சன்(Jane & Wilson) மற்றும் கிப்பிளிங்-ரெக்ஸ்டேல்(Kipling & Rexdale) பகுதிகளில் 13 தேடுதல் நடவடிக்கைகள் இடம் பெற்றன. 15 வயது முதல் 33 வயதுவரையான பெண்களை பரிசுகள் மூலம் மயக்கி காதலர்களாக நடித்து அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். கனடாமுழுவதும் உள்ள பெண்களை பாடசாலை முதல் முகநூல் வரையாக பெண்களை ஏமாற்றிய இவர்கள் வருமானம் குறைந்த போது அவர்களை துன்புறுத்தியும் உள்ளனர். 18 மு…

    • 0 replies
    • 280 views
  25. கொள்ளையுடன் தொடர்புடைய ஆசிய நாட்டவர் ! புகைப்படத்தை வெளியிட்ட லண்டன் பொலிஸார் தகவல் தருமாறு அறிவிப்பு! லண்டன் Mitcham பகுதியில் கடந்த வருடம் நடந்த கொள்ளை மற்றும் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் நபரது புகைப்படத்தை புலனாய்வு பிரிவு பொலிஸார் வெளியிட்டுள்ளனர். Mitcham,Montrose Gardens பகுதியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 30ம் திகதி புதன்கிழமை நடந்த கொள்ளை மற்றும் Belmont Avenue பகுதியில் செப்டம்பர் மாதம் 7ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் 24 வயதான அரவிந்தன் ரவீந்திரன் என்ற நபரின் புகைப்படமே தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஆசியாவை சேர்ந்த ரவீந்திரன் என்ற இந்த நபரின் உயரம் 5அடி 3அங்குலம் எனவும் மாநிறமா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.