உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26884 topics in this forum
-
பிரித்தானியாவில் சரிந்து விழுந்த ரோலர் கோஸ்டர்: 4 பேர் படுகாயம் (வீடியோ இணைப்பு) [ புதன்கிழமை, 03 யூன் 2015, 05:51.54 மு.ப GMT ] பிரித்தானியவில் ரோலர் கோஸ்டர் விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்தின் ஆல்டன் டவர்ஸ் பூங்காவில்(Alton Tower Theme park) உள்ள ரோலர் கோஸ்டரில் வழக்கம் போல பலர் சவாரி செய்து விடுமுறையை அனுபவித்துக் கொண்டிருந்தனர். அப்போது,ரோலர் கோஸ்டரானது தரையிலிருந்து 25 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்தபோது அப்படியே சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தின் போது 16 பேர் ரோலர் கோஸ்டரில் இருந்ததாக கூறப்படுகிறது, இதில் 4 பேர் படுகாயமடைந்தனர், மேலும் பலர் இடிபாடுக்குள் சிக்கிக் கொண்டனர். …
-
- 1 reply
- 334 views
-
-
”ரொஹிங்யா மக்களிடம் பாரபட்சம் காட்டுவதை நிறுத்துங்கள்”: மியான்மர் அரசிற்கு ஒபாமா வலியுறுத்தல் [ செவ்வாய்க்கிழமை, 02 யூன் 2015, 08:26.33 மு.ப GMT ] மியான்மர் நாட்டில் பல இன்னல்களுக்கு உள்ளாகி வரும் ரொஹிங்யா சிறுபான்மையின மக்களிடம் பாரபட்சம் காட்டுவதை நிறுத்தங்கள் என அமெரிக்க அதிபரான ஒபாமா அந்நாட்டு அரசை வலியுறுத்தியுள்ளார். மியான்மர் நாட்டில் பிறந்து வளர்ந்த ‘ரொஹிங்யா’ இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்க மறுத்துள்ள மியான்மரின் பெளத்த மத அரசாங்கம், அவர்களை மறைமுகமாக நாட்டை விட்டு வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆதரவற்ற சூழலில் தங்களை காப்பாற்றிக்கொள்ள ஆயிரக்கணக்கான ரொஹிங்யா மக்கள் கும்பல் கும்பலாக கடல் மார்க்கமாக ஆபத…
-
- 0 replies
- 410 views
-
-
கனடா- ரொறொன்ரோ பெரும்பாகம் பூராகவும் பொலிசார் நடாத்திய 25 அதிரடி சோதனைகளில் 18 பேர்கள் வரையில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் எற்றோபிக்கோவில் இருவர் மற்றும் வாகனில் ஒருவரும் அடங்குவர். செவ்வாய்கிழமை காலை இந்த அதிரடி நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இத்திடீர் சோதனை சிறப்பு அமுலாக்க பிரிவினரின் முயற்சியின் ஒரு பகுதியாக நடாத்தப் பட்டதென்றும், ஆர்சிஎம்பி மற்றும் ஒன்ராறியோ பொலிஸ் சேவையை சேர்ந்த பல அதிகாரிகளும் இதில் ஈடுபட்டனர். யோர்க் பிராந்திய கனரக ஆயுதமேந்திய தந்திரோபாய பிரிவினர் மற்றும் பொலிஸ் நாய்களுடன் அதிகாரிகள் ஆகிய பிரிவினரும் இந்த அதிகாலை சோதனையில் ஈடுபட்டனர். குறைந்தது ஐந்து பேர்கள் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே சமயம் இவான் அவெனியுவில் மிக …
-
- 0 replies
- 354 views
-
-
1995 அளவில் கியுபெக்கை கிட்டத்தட்ட இறையாண்மைக்கு இட்டுச்சென்றவரும் கியுபெக்கின் முன்னாள் முதல்வருமான Jacques Parizeau தனது 84-வது வயதில் காலமானார். இச்செய்தியை திங்கள்கிழமை பிற்பகல் எட்டு மணிக்கு சிறிது முன்னராக அவரது மனைவி Lisette Lapointe முகநூலில் எழுதியுள்ளார். 1995ல் இவரது தலைமையின் கீழ் நடாத்தப்பட்ட கருத்து கணிப்பில் 50.6% வாக்குகள் இல்லை எனவும் 49.4 %ஆம் எனவும் கிடைக்கப்பெற பணம் மற்றும் இனவழி வாக்குகளும் தோல் விக்கு காரணமென தெரிவித்து அடுத்த நாள் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இவரது தலைமுறையினரில் கியுபெக்கினரிடையே மிகவும் செல்வாக்கு மிக்கவர்.ஒரு போதும் வார்த்தைகளை துண்டு துண்டாக வெட்டமாட்டார். இவருக்கு இசபெல்லா -ஒரு வழக்கறிஞர் மற்றும் பேனாட்- ஒரு டா…
-
- 0 replies
- 431 views
-
-
புகையிலை நிறுவனங்களுக்கு எதிராக வரலாறு காணாத வழக்கும் தீர்ப்பும் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பகிர்க சிகரெட்டுகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் புகை பிடிப்பதால் உடலுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து போதிய எச்சரிக்கை விடுக்காததால் மூன்று புகையிலை நிறுவனங்களுக்கு 12 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான நட்ட ஈடு வழங்கி கனடா நீதிபதி ஒருவர் உத்தரவிட்டுள்ளார். லட்சக் கணக்கானோருக்கு கோடிக் கணக்கான டாலர்கள் நட்ட ஈடு வழங்கி கனடா நீதிமன்றம் தீர்ப்புபுகை பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தங்களுக்கு போதிய எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று கூறி, புகை பிடிப்பவர்கள் கனடாவின் க்யூபெக் மாகாணத்தில் இந்த வழக்கை முன்னெடுத்தனர். கனேடிய நீதிமன்ற சரித்திரத்தில் இதுவரை இல்லாத வகையில் பத்…
-
- 0 replies
- 343 views
-
-
தாய்ப்பால் கொடுப்பதை... குறைகூறிய நபரை, உணவகத்தை விட்டு வெளியேற்றிய உரிமையாளர்கள். பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவில் உள்ள உணவகத்தில் பெண் ஒருவர் தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தது குறித்து புகார் தெரிவித்த நபரை கடையின் உரிமையாளர்கள் வெளியேற்றியுள்ளனர். ஆஸ்திரேலியாவின் க்வீன்ஸ்லேண்டில் இருக்கும் ராக்ஹாம்ப்டன் நகரில் உள்ளது சீஸ் அன்ட் பிஸ்கட்ஸ் உணவகம். அந்த கடையை குழந்தை இல்லாத தம்பதியான ஸ்டீபன்-ஜெசிகா ஆன் ஆலன் ஆகியோர் நடத்தி வருகிறார்கள். கடந்த புதன்கிழமை கடைக்கு வந்த நடுத்தர வயது நபர் காபி ஆர்டர் செய்துவிட்டு ஒரு நாற்காலியில் அமர சென்றுள்ளார். அங்கு ஒரு பெண் தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார். இதை பார்த்த அந்த நபர் கடை உரிமையாளர்களிடம் வந்து அந்த …
-
- 0 replies
- 639 views
-
-
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரிக்கு ஆதரவு தெரிவிக்கிறது ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு JUN 02, 2015 | 1:32by கி.தவசீலன்in செய்திகள் அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடத் திட்டமிட்டுள்ள அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டனுக்கு ஆதரவு தெரிவித்து, ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. 2016ம் ஆண்டு நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் ஹிலாரி கிளின்டன் போட்டியிடத் திட்டமிட்டுள்ளார். இந்தநிலையில், அவருக்கான ஆதரவை உறுதிப்படுத்தி அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களின் அமைப்பான ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு கடிதம் ஒன்றை கடந்த மாதம் 30ம் நாள் ஹிலாரிக…
-
- 0 replies
- 351 views
-
-
மிதிவண்டி விபத்தில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியின் கால் முறிந்தது JUN 01, 2015by ஐரோப்பியச் செய்தியாளர்in செய்திகள் பிரான்சில் மிதிவண்டி விபத்தில் சிக்கி அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி படுகாயமடைந்துள்ளார். அவரது கால் முறிந்த நிலையில் ஜெனிவா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சுவிஸ் எல்லையில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள பிரான்சின் சியோன்சியர் நகரில் இந்த விபத்து நேற்றுக்காலை இடம்பெற்றது. ஜோன் கெரியின் மிதிவண்டி நடைபாதை ஓரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாகவும், அந்த வேளையில் எந்த வாகனமும், அங்கு இருக்கவில்லை என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்து அவரது கால் முறிந்த போதிலும், ஜோன் கெரி சுயநினைவை இழக்க…
-
- 4 replies
- 396 views
-
-
பழைய காலாவதியாகும் திகதியுடனான ஒரு புதிய விசா, மற்றும் ஆவணங்கள் தபாலில் காணாமல் போதல் உட்பட்ட அதிகாரத்துவ தவறுகளிற்கான விலையை கனடாவிற்கு புதியவர்கள் செலுத்த வேண்டிய நிலைக்கு ஆளாகிவருகின்றனர் என கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து வந்த ஒரு வெளிநாட்டு மாணவன் ஏற்கனவே காலாவதியான திகதியுடன் கூடிய ஒரு புதிய விசாவை பெற்றுள்ளான். ஜமேக்கா மனிதரொருவருக்கு அவரது குடிவரவு விண்ணப்பம் செயல்முறைக்குள்ளாக்கப் பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு கிடைத்தது. ஒரு மாதத்தின் பின்னர் வேறொரு தகவல் தெரிவிக்கப்பட்டது. என்னவென்றால் நீண்ட காலத்திற்கு முன்னரே பூர்த்தி செய்யப்படாத அவரது விண்ணப்ப தொகுப்பு திருப்பி அனுப்பபட்டு விட்டது என்பதாகும். அவரது கோப்பு இப்போது எங்கே என்பது எவருக்கும் தெரியாது. அ…
-
- 0 replies
- 337 views
-
-
கனடாவில் பழங்குடியினத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு நடைமுறையில் உள்ள residential school system என்று சொல்லப்படும், தங்கியிருந்து கல்வியைப் பெறும் நடைமுறையில் இதுவரை 6000 குழந்தைகள் இறந்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 19 நூற்றாண்டு முதல் பழங்குடியினக் குழந்தைகளுக்கு நடைமுறையில் உள்ள இந்தக் கல்வித்திட்ட முறை தொடர்பில், பல்வேறு விமர்சனங்கள் தற்சயம் வெளியாகியுள்ளது. பாலியல் ரீதியான தாக்குதல்கள், தனிமை மற்றும் குடும்பத்தில் இருந்தான பிளவு போன்ற காரணங்களே, இதற்கான காரணங்களாக அமைந்துள்ளன என்று இத்தகவலை வெளியிட்ட உண்மையைக் கண்டறியும் மீளிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை இது ஓர் கலாச்சாரப் படுகொலை என்று கனடாவின் உயர்நீதிமன்ற நீதிபதி Beverly McL…
-
- 0 replies
- 389 views
-
-
பயங்கரவாதம், தேசத்துரோகம் போன்ற குற்றச் சாட்டுக்களில் தண்டனை விதிக்கப்பட்ட இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களின் கனடிய பிரஜா உரிமையை இரத்துச் செய்தவற்கான அதிகாரத்தை அரசுக்கு வழங்கும் சட்டம் அமுலுக்கு வந்துள்ளது.கடந்த யூன் மாதம் கொண்டு வரப்பட்ட சட்டம் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளதாக பிரஜா உரிமை மற்றும் குடிவரவு அமைச்சு தெரிவித்துள்ளது.மிகவும் பாரதூரமான குற்றங்;களை இழைத்த பலர் கனடிய பிரஜா உரிமையை இழக்கின்றனர் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது. பயங்கரவாதம், தேசத் துரோகம், வெளிநாட்டு அரசாங்கத்துக்கு உளவு பார்த்தது போன்ற குற்றச் சாட்டுகளில் தண்டனை பெற்றவர்கள் கனடிய பிரஜா உரிமையை இழப்பர் எனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இரட்டை பிரஜா உரிமை கொண்டவர்கள் வெளிநாடுகளின் இராணுவம் அல…
-
- 0 replies
- 496 views
-
-
மக்கள் தொகை பெருக்கத்தால் கடுமையான நெருக்கடிகளை பல ஆசிய ஆப்பிரிக்க நாடுகள் எதிர்கொண்டுவரும் நிலையில், பிறப்பு வீதம் வீழ்ச்சியடைவது வளர்ச்சியடைந்த நாடுகளை பாதிப்பதாக உள்ளது. பல ஆண்டுகளாக பிறப்பு வீதம் குறைந்து வரும் ஜப்பானைப் பின்தள்ளிவிட்டு உலகிலேயே குறைந்த அளவுக்கு குழந்தைகள் பிறக்கும் நாடாக ஜெர்மனி தற்போது மாறி இருக்கிறது. அங்கே ஆயிரம் பேருக்கு 8.2 குழந்தைகள் என்ற வீதத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பிறப்பு வீதம் இருந்துள்ளது. ஐப்பானில் பிறப்பு வீதம் 8.4 எனஅற அளவில் இருக்கிறது. ஏனையஐரோப்பிய நாடுகளிலும் மக்கள் தொகை குறைந்துவருகிறது. போர்த்துக்கல்லில் பிறப்பு வீதம் 9 ஆக இருக்கிறது. இத்தாலியில் இது 9.3 ஆக இருக்கிறது. பிரான்ஸ் மற்றும் ஐக்கிய ராஜ்ஜியத்தில் பிறப்பு வீதம் 13 …
-
- 4 replies
- 791 views
-
-
தம்மாம்: சவுதி அரேபியாவில் உள்ள தம்மாம் நகரில் இருக்கும் ஷியா பள்ளிவாசலுக்கு வெளியே நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 4 பேர் பலியாகினர், 5 பேர் காயம் அடைந்தனர். சவுதி அரேபியாவின் தம்மாம் நகரில் உள்ள ஷியா மசூதியான அல் அனௌத் மசூதியில் இன்று மதியம் ஜும்மா தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு காரில் வந்த நபர் ஒருவர் பெண்கள் அணியும் பர்தா அணிந்து வந்தார். அவர் பெண்கள் மசூதிக்குள் நுழையும் வாயிலுக்கு சென்றார். அந்த வாயில் பூட்டியிருந்ததால் ஆண்கள் செல்லும் வழியாக மசூதிக்குள் நுழைய முயன்றார். அப்போது புர்காவில் இருந்த அந்த நபரை பாதுகாவலர்கள் இருவர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர் தனது உடலில் இருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இதில் அவர், பாதுகாவலர்கள் இருவர் மற்ற…
-
- 0 replies
- 231 views
-
-
டெல்லி: ஜப்பானில் 7.9 ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்லியிலும் லேசான நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. நேபாள நாட்டில் சில வாரங்களுக்கு முன்பு, ரிக்டர் அளவுகோலில் 7.9 என்ற அளவுக்கு பதிவான நில நடுக்கத்தால் அந்த நாடே சின்னாபின்னமாகி போனது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த அச்சம் நீங்கும் முன்பாக, ஜப்பானில் இன்று 7.9 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்யோவில் பல கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லி வரை எதிரொலித்தது. டெல்லி மக்கள் லேசான நிலநடுக்கத்தை உணர்ந்ததால், வீதிகளுக்கு ஓடிச் சென்றனர். கிழக்காசிய நாடுகள் சுனாமி பீதியடைந்தாலும், சுனாமி எச்சரிக்கைவிடப்படாததால் மக்கள் ந…
-
- 0 replies
- 191 views
-
-
உலகில் பசியோடு இருக்கும் மக்கள் அதிகமாக உள்ள நாடுகள் பட்டியலில் 194 மில்லியன் மக்களுடன் இந்தியா முதலிடம் பிடித்து உள்ளது. சீனாவை மிஞ்சி உள்ளது என்று ஐ.நா.வின் ஆண்டு பட்டினி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உலக அளவில் பசியோடு இருக்கும் மக்களின் எண்ணிக்கையானது 2014-15 ஆண்டில் 795 மில்லியனாக குறைந்து உள்ளது. கடந்த 1990-92-ம் ஆண்டுகளில் பட்டினியாக இருக்கும் மக்களின் எண்ணிக்கையானது ஒரு பில்லியன் ஆகும். உலகில் உணவுப் பாதுகாப்பின்மை நிலைகுறித்து (‘தி ஸ்டேட் ஆப் புட் இன்செக்குரிட்டி இன் தி வேல்ட் 2015’ ) ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு அறிக்கை சமர்பித்து உள்ளது. இந்தியாவில் பட்டினி குறைந்து உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. 1990-92ம் ஆண்டுகளில் பசியோடு இருந்த மக்…
-
- 1 reply
- 368 views
-
-
லாகூர் கடாஃபி மைதானத்தில் பாகிஸ்தான்- சிம்பாவே அணிகளுக்கு இடையே நடந்த கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்துக்கருகே நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பொலிஸ் அதிகாரி உட்பட 2 பேர் பலியாகியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானம் அருகே நேற்று வெள்ளிக்கிழமை இரவு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்தபோது மைதானத்தில் பாகிஸ்தான் - சிம்பாவே அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று கொண்டிருந்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. சரியாக 9 மணியளவில் கல்மா சவுக் என்ற இடத்திலிருந்து ரிக்ஷாவில் வந்த நபர், தான் அணிந்திருந்து வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததாக முதற்கட்ட தகவல…
-
- 0 replies
- 174 views
-
-
மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அருணாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நர்ஸ்கள். உள்படம்: அருணா படம்: விவேக் பிந்த்ரே மும்பை மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றியபோது, பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு, கடந்த 42 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த அருணா ஷன்பாக் (66) நேற்று காலை காலமானார். இதுகுறித்து, கேஇஎம் மருத்துவமனை முதல்வர் டாக்டர் அவினாஷ் சுபே நேற்று கூறும்போது, “அருணாவுக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பரிசோதனை செய்து பார்த்தபோது அவருக்கு நுரையீரல் தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப் பட்டது. குழாய் மூலம் உணவுப் பொருட்கள் செலுத்தப்பட்டது. இந்நிலையில்…
-
- 4 replies
- 504 views
-
-
இந்தியாவில் பணக்கார பிச்சைக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடிப்பவர்கள்! [Thursday 2015-05-28 18:00] பணக்கார பிச்சைக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடிப்பவர் மும்பையை சேர்ந்த பாரத் ஜெயின். தற்போது 49 வயதாகும் ஜெயினுக்கு மும்பை பரேல் பகுதியில் 2 பிளாட்டுகள் சொந்தமாக இருக்கிறது.ஒரு பிளாட்டின் மதிப்பு 70 லட்ச ரூபாய். அதோடு சொந்தமாக ஜுஸ் கடையை வாடகைக்கு விட்டு அதில் இருந்து மாதம் 10 ஆயிரம் ரூபாயை வாடகையாக சம்பாதிக்கிறார். இவரது மொத்த சொத்து மதிப்பு 2 கோடிக்கும் மேல். இந்த பட்டியலில் 2வது இடத்தை பிடிக்கும் பிச்சைக்காரரும் மும்பையை சேர்ந்தவர்தான். இவரது பெயர் கிருஷ்ணகுமார் கீதே. இவரது தினசரி வருமானம் 1500 ரூபாய். இவருக்கு மும்பை புறநகர் பகுதியான நால…
-
- 0 replies
- 445 views
-
-
மலையில் மோத சென்ற விமானம்: விமானியின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பிய 37 பயணிகள் [ புதன்கிழமை, 27 மே 2015, 11:21.43 மு.ப GMT ] ஏர் பிரான்ஸ் விமானம் தென் ஆப்பிரிக்காவின் உயரமான மலை மீது மோதி விபத்தில் சிக்கவிருந்த தகவலை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். மே 2ம் திகதி 37 பயணிகளுடன் மாலபோவில் (Malabo) இருந்து கேமரூவின் பெரிய நகரமான டூலாவுக்கு (Douala) ஏர் பிரான்ஸ் விமானம் சென்றது. இந்த விமானம் மாலபோவில் இருந்து கிளம்பும் போதே விமானத்தின் தானியங்கி எச்சரிக்கை மணி பிரச்சனையாக இருந்துள்ளது. இந்த சமயத்தில் புயல் காரணமாக விமானமானது அதன் நிலையான பாதையில் இருந்து மாற்றி வேறு பாதைக்கு அனுப்பட்டது. இந்நிலையில் விமானம் 13, 255 அடி உயரமுள்ள கேமரூன் மலையில் மோ…
-
- 0 replies
- 360 views
-
-
புதுப்பிக்கவல்ல மின்சக்தியைப் பொறுத்தவரை ஜெர்மனிதான் இன்றைய நம்பிக்கை! பெர்லினில் உள்ள அமெரிக்க அகாடமியில் நான் கழித்த ஒரு வாரம் எனக்கு இரண்டு நேரெதிரான உணர்வுகளை ஏற்படுத்தியது: முதலாவது, இன்றைய ஜெர்மனிக்கு சமாதானத்துக்கான நோபல் விருது வழங்கப்பட வேண்டும். இரண்டாவது, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சமாதான நிலைப்பாட்டிலிருந்து ஜெர்மனி மீண்டுவந்து, இன்னும் தீவிரமாகச் செயல்படக்கூடிய உலக சக்தியாக மாற வேண்டும். இரண்டையுமே நான் பாராட்டாகத்தான் சொல்கிறேன். முதல் விஷயத்தைப் பொறுத்தவரை ஜெர்மானியர்கள் தங்களின் மின்உற்பத்தியில் 30 சதவீதத்தைப் புதுப்பிக்கத்தக்க சக்தியாக மாற்றியிருக்கிறார்கள். 0% என்ற நிலையிலிருந்து கடந்த 15 ஆண்டுகளில் இந்த நிலையை அடைந்திருப்பது நமது பூமி, அதன் ப…
-
- 21 replies
- 3k views
-
-
FIFA ஊழல் பல பெரும் புள்ளிகள் கைது உலக உதைபந்தாட்டச்சங்க வரலாற்றில் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் சங்கத்தின் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். உலக உதைபந்தாட்டச் சங்கத்தின் மாநாடு சூரிச்சில் நடைபெற உள்ள நிலையில் சுவிஸ் மற்றும் அமெரிக்கக் காவற்துறையினரின் இந்த நடவடிக்கை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கைது செய்யப்பட்ட ஏழு அங்கத்தவர்களின் மீது 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் லஞ்சம் பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. fifa தலைவர் செப் பிளெற்றரின் நேரடி வாரிசாகக் கருதப்பட்ட FiFa உதவித்தலைவர் Jeffrey Webb மற்றும் Eugenio Figueredo , Eduardo Li, Julio Rocha, Costas Takkas, Rafael Esquivel ,Jose Maria Marin ஆகியோர் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர். …
-
- 1 reply
- 986 views
-
-
வியன்னா விமான நிலையம் ஊடாக இலங்கை அகதிகள் கடத்தல்! - ஊழியர்கள் உடந்தை [Wednesday 2015-05-27 07:00] வியன்னா விமான நிலையத்தில் பணிபுரியும் தனியார் பாதுகாப்பு பணியாளர்கள், இலங்கையர்கள் உட்பட்டவர்களை அகதிகளாக அனுப்பி வருவதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள், சோதனை நடவடிக்கையில் ஈடுபடும் தோரணையில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கு அகதிகளை அனுப்புவதாக அவுஸ்திரேலிய செய்தி ஒன்று கூறுகிறது. இதனையடுத்து சம்பவம் தொடர்பில் வியன்னா விமான நிலையத்தில் பணி புரியும் 13 தனியார் பாதுகாப்பு பணியாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்தநிலையில் தனியார் பாதுகாப்பு பணியாளர் ஒருவரால் சட்டவிரோதமாக அனுப்பப்படவிர…
-
- 0 replies
- 418 views
-
-
இலங்கையின் இறுதிப்போரில் கொல்லப்பட்ட இசைப்பிரியாவை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற திரைப்படத்துக்கு இந்திய திரைப்பட மத்தியக்குழு அனுமதி வழங்க மறுத்துள்ளது. அண்டை நாடுகளுடன் நட்புரிமை உறவு என்ற அடிப்படையிலேயே இந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த திரைப்படத்துக்கான அனுமதி மறுக்கப்பட்டமைக்கான உத்தியோகபூர்வ கடிதம் இன்னும் தமக்கு கிடைக்கவில்லை என்று திரைப்படத்தின் தயாரிப்பாளர் கே கணேசன் தெரிவித்துள்ளார். நட்பு நாடு என்ற அடிப்படையில் அணுகாது தமிழக அரசாங்கமே இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், இந்த திரைப்படத்துக்கான அனுமதி மறுக்கப்பட்டமை வியப்பானது என்று கணேசன் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் இந்த திரைப்படத்துக்கான அனுமதி ம…
-
- 4 replies
- 528 views
-
-
இந்த 'மாய்' வகை டால்ஃபின்கள் 1.5 மீட்டருக்கும் குறைவான நீளமுடையவை உலகில் மிகவும் அரிதானதும், மிகச் சிறியதுமான மாய் வகை டால்ஃபின்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த 15 வருடங்களுள் அவை முற்றாக அழிந்து போய்விடும் என, புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. தற்போது 'மாய்' எனப்படும் இந்த வகை டால்ஃபின்கள், உலகளவில் ஐம்பதுக்கும் குறைவாகவே உள்ளன என்றும் அந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி வலைகளில் சிக்கி ஏராளமான அவ்வகை டால்ஃபின்கள் உயிரிழக்கின்றன என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள். அருகி வரும் இந்த மாய் டால்ஃபின்கள், நியூசிலாந்தின் கடலுக்கு அப்பாலுள்ள ஆழமில்லாத கடற்பரப்பில் மட்டுமே காணப்படுகின்றன. 1970கள் முதல் இந்த வகை டால்ஃபி…
-
- 0 replies
- 395 views
-
-
வினிபெக்கில் கோழிக்குஞ்சுகளுடன் தொடர்பு கொண்டதால் சல்மொனெல்லா தொற்று ஏற்பட்டு 34-பேர்கள் சுகயீனமுற்றதாக நாட்டின் பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கனடிய சுகாதார அதிகாரிகள் விசாரனையில் ஈடுப்பட்டுள்ளனர். ஏப்ரல் 5 தொடக்கம் மே 12வரையிலான காலப்பகுதியில் அல்பேர்ட்டாவில் 17பேர்கள், பிரிட்டிஷ் கொலம்பியாவில் 13, மற்றும் சஸ்கற்சுவானில் நான்கு பேர்கள் சுகயீனமுற்றமை குறித்து விசாரனை செய்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர். சல்மெனெல்லா தொற்றின் அறிகுறிகள் சல்மொனெலொசிஸ் எனப்படும். காய்ச்சல், தசைபிடிப்புக்கள் மற்றும் வாந்தி போன்றனவும் காணப்படும். ஆரோக்கியமான மக்களிற்கு சிகிச்சை இன்றி குணமடையும் எனவும் ஆனால் சிலருக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் பொது…
-
- 1 reply
- 468 views
-