உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26883 topics in this forum
-
உலகிலேயே மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடு சுவிட்சர்லாந்து என்ற பெருமையை பெற்றுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகில் மொத்தம் உள்ள 158 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் சுவிட்சர்லாந்து முதல் இடத்தைப் பிடித்துள்ளதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த இடங்களை ஐஸ்லாந்து, டென்மார்க், நோர்வே மற்றும் கனடா ஆகிய நாடுகள் பிடித்துள்ளன. இந்த நாடுகளின் மக்கள் வாழ் நாள் முழுக்க மகிழ்ச்சியாக உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. நிலையான அபிவிருத்தி தீர்வு அமைப்பு நடத்திய இந்த ஆய்வில் டோகோ, புருன்டி, சிரியா, பெனின் மற்றும் ருவாண்டா ஆகிய நாட்டு மக்கள் நிம்மதியைத் தொலைத்து மகிழ்ச்சியற்ற நிலையில் வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது. பணம் மட்டுமே மகிழ்ச்சியைத் தந்துவிடாது. நேர்மை, பெருந்தன்மை, நம்பிக்கை மற்றும் நல…
-
- 4 replies
- 470 views
-
-
இலங்கை - சீனா - இந்தியா இலங்கையால் சீனாவைப் புறக்கணிக்க முடியாது; இந்தியாவுக்கும் இலங்கையுடனான அணுக்கம் அவசியம். மார்ச் மாத இறுதியில் இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா சீனாவுக்கு வருகை தந்தார். அவருக்கு பெய்ஜிங் மக்கள் மாமன்றத்தில் சிறப்பான வரவேற்பு அளித்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங். கடந்த செப்டம்பர் மாதம் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் ‘கொழும்பு துறைமுக நகரம்’ எனும் திட்டத்தைத் தன் சொந்தக் கரங்களால் தொடங்கி வைத்திருந்தார் சீன அதிபர். அப்போது இன்னும் நான்கு மாதங்களில் இலங்கையில் ஆட்சி மாறும் என்றும் புதிய அதிபர் இந்தத் திட்டத்தை நிறுத்தி வைப்பார் என்றும் அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனாலும், தலைவர்களின் சந்திப்பு சுமுகமாகவே நடந்தது. சீனாவின் திட்…
-
- 0 replies
- 365 views
-
-
பீர் குடிப்பதில் ஆர்வம் குறைந்து வரும் யேர்மனி மக்கள். 1995 10.7 பில்லியன் லிற்றர் 2000 9.95 பில்லியன் லிற்றர் 2004 9.24 பில்லியன் லிற்றர் 2008 8.79 பில்லியன் லிற்றர் 2014 8.02 பில்லியன் லிற்றர்
-
- 4 replies
- 516 views
-
-
புதுடெல்லியிலிருந்து சிகாகோவுக்கு செல்லும் ஏர் இந்தியா (Flight AI-127) விமானத்தில் 270 பயணிகள் பயணம் செய்ய காத்திருந்தனர். புதுடெல்லி, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து (இன்று அதிகாலை 2.20 மணிக்கு) புறப்பட தயாராக இருந்த இந்த விமானத்தை இயக்க போதுமான விமானிகள் மற்றும் விமான பணியாளர்கள் இல்லாத காரணத்தால் 15 மணி நேரம் தாமதமாக சென்றது பயணிகளுக்கு பெரும் சிரமத்தை உண்டாக்கியது. இரண்டு நாட்களுக்கு முன்னர் கொச்சிக்கு செல்லும் விமானத்தில் விமானி ஒருவர் தூசிகள் படிந்த ஆக்ஸிஜன் மாஸ்கை அணிய மறுத்ததால் 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது ஏர் இந்தியா பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. - See more at: http://www.canad…
-
- 0 replies
- 373 views
-
-
அமெரிக்காவின் சிகாகோ நகரிலிருந்து ஹார்ட்போர்டு நகருக்கு புறப்பட்டு சென்ற ஜெட் விமானத்தில் அழுத்த குறைபாடு ஏற்பட்டதால் மூன்று பயணிகள் சுயநினைவிழந்தனர். பல பயணிகளை சிரமத்திற்கு உள்ளானார்கள். 75 பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட அந்த விமானம் ஒன்றரை மணி நேரம் வானில் பறந்த நிலையில், திடீரென விமானத்தில் அழுத்தக்குறைவு(Cabin Pressure) ஏற்பட்டது. இதன் காரணமாக மூன்று பயணிகள் தங்கள் சுயநினைவை இழந்தனர். இந்த நேரத்தில் 38000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் டைவ் அடித்தவாறு மூன்றே நிமிடங்களில் 10000 அடிக்கு கீழிறங்கியது. இதனால் பயணிகள் அனைவரும் பயத்தில் உறைந்து போனார்கள். எனினும் திறமையாக செயல்பட்ட விமானி அவசரமாக விமானத்தை தரையிறக்க முடிவு செய்தார். உடனடியாக பப்பல்லோ விமான நில…
-
- 0 replies
- 360 views
-
-
மாயமான மலேசிய விமானம் எம்.ஹெச்.370 விபத்தில் சிக்கியது என்று மலேசியா அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை சேர்ந்த எம்.எச்.370 விமானம் கடந்த மார்ச் 8-ந்தேதி மாயமானது. கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் பெய்ஜிங் சென்றபோது மாயமான மலேசியா விமானம் எங்கே தான் போனது, என்னதான் ஆனது என்பது தெரியவில்லை. விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்தது விபத்துக்குள்ளானது என்று தெரிவிக்கப்பட்டது. விமானத்தில் இருந்தவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டனர் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், விமானத்தை தேடும் பணியில், ஆஸ்திரேலியா, சீனா மற்றும் மலேசியா நாட்டை சேர்ந்த மீட்பு குழு ஈடுபட்டது…
-
- 7 replies
- 904 views
-
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், இளம் வயதுடையவருமான விவேக் மூர்த்தி, அமெரிக்க நாட்டின் மருத்துவத்துறை தலைவராக பொறுப்பேற்றார். கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே விவேக் மூர்த்தி இப்பதவியில் நியமிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில் நேற்று அவர் தனது புதிய பொறுப்பை ஏற்றார். 2013 முதல் அந்நாட்டின் பொது சுகாதாரத்துறை தலைவராக இருந்த விவேக் மூர்த்தியை இப்பதவியில் அமர்த்த அதிபர் ஒபாமா முடிவு செய்தார். எனினும் துப்பாக்கி கட்டுப்பாட்டு நடவடிக்கைக்கு ஆதரவாக விவேக் மூர்த்தி கையெழுத்திட்டதால் அந்நாட்டு செனட் சபை அவரது நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்து வந்தது. எனினும் 2014 ஆம் ஆண்டு குடியரசுக்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒரு மனதாக மருத்துவத்துறை தலைவராக விவேக் ம…
-
- 0 replies
- 442 views
-
-
கனடாவிற்குச் செல்ல வேண்டுமென்ற ஒரே நோக்குடன் எம்.வீ. சன் சீ அகதிகள் கப்பல்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர் என கனேடிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐந்நூறுக்கும் மேற்பட்ட இலங்கை இளைஞர்கள் ஆபத்து குறித்து யோசிக்காமல் இக்கப்பல்களில் பயணித்து வருகின்றனர் என அவ் ஊடகம் தெரிவித்துள்ளது. கடந்த 5 வருடங்களில் மாத்திரம் அகதி அந்தஸ்து கோரி பிரிட்டிஷ், கொலம்பியா கடற்கரையை நோக்கி சென்றவர்களில் ஆயிரத்து 700 பேர் இதுவரை மத்தியதரைக்கடல் பகுதியில் உயிரிழந்துள்ளதாக கனேடிய ஊடகம் தெரிவித்துள்ளது. 2010ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இக்கப்பலில் பயணம் செய்த 380 ஆண்களும், 4 கர்ப்பிணி தாய்மார்கள் உட்பட 63 பெண்களும், 49 சிறுவர்களும் மத்திய தரைக்கடல் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டனர். 2009ம் ஆண்டு …
-
- 1 reply
- 349 views
-
-
நடிகை ஐஸ்வர்யா ராய் இடம்பெற்ற பிரபல நகைக்கடை விளம்பரம் ஒன்று தொடர்பாக எழுந்த சர்ச்சையை அடுத்து, அந்த விளம்பரத்தை திரும்ப பெறுவதாக அந்த நகைக்கடை நிறுவனம் அறிவித்துள்ளது. நடிகை ஐஸ்வர்யா ராய் நகை அணிந்து அமர்ந்திருப்பது போலவும், அவருக்கு அருகில் உற்சாகமற்ற, உடல் மெலிந்த குழந்தை ஒன்று அவருக்கு குடை பிடிப்பது போல அமைந்திருக்கும் சமீபத்தில் வெளியான பிரபல நகைக்கடை ஒன்றின் விளம்பரம் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. இந்த விளம்பரம் இனவாதத்தை வெளிப்படுத்தும் வகையிலும், குழந்தை தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்திருப்பதாய் ஆர்வலர்கள் பலர் கருத்து வெளியிட்டனர். சமூக வலைத்தளங்களில் இந்த விளம்பரம் சர்ச்சையான கருத்துக்களோடு பரவியிருந்தது. இது போன்ற ஒரு விளம்பரத்துக்கு ஐஸ்வர்யா ராய…
-
- 1 reply
- 581 views
-
-
அமேரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பாட்டி சாரா உமர் மற்றும் ஒபாமாவின் மாமா சயீத் ஒபாமா ஆகியோர் புனித உம்ராவை நிறைவேற்றுவதற்க்காக சவூதி அரேபியா வந்துள்ளனர். மேலும் மக்காவில் நடைபெற்று வரும் முஹம்மது நபி குறித்த கண்காட்சியை 2 மணி நேரம் பார்வையிட்ட சாரா உமர் கண்காட்சி மிகவும் அருமையாக இருந்ததாகவும் இஸ்லாத்தை மக்கள் மத்தியில் அதிகம் பரப்புவதற்க்கும் இஸ்லாம் குறித்த குழப்பங்களை போக்குவதற்க்கும் இது போன்ற கண்காட்சிகள் அதிகம் நடத்த வேண்டும் என்று கூறினார். அதிபர் ஒபாமாவின் குடும்பத்திற்கு ஹிதாயத்தை வழங்கிய அல்லாஹ் அதிபர் ஒபாமாவுக்கு ஹிதாயத்தை வழங்குவானாக. - See more at: http://www.canadamirror.com/canada/41556.html#sthash.uzD0M8Bi.dpuf
-
- 1 reply
- 284 views
-
-
1- நெடுஞ்சாலை 400-ல் ஆபாயகரமான போக்குவரத்து டிரக் மோதலில் பெண் மரணம். கனடா- போக்குவரத்து டிரக் ஒன்று காருடன் மோதியதில் பெண் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் வியாழக்கிழமை காலை பார்ரி என்ற இடத்தில் நடந்தது. நெடுஞ்சாலை 400 தெற்கில் பயணித்து கொண்டிருந்த போக்குவரத்து டிரக் நெடுஞ்சாலை 89-ற்கு அருகில் அதிகாலை 2.15அளவில் கட்டுப்பாட்டை இழந்து கொன்கிரிட் தடை ஒன்றை நொருக்கி ஊடக சென்று தெற்கு புறமாக வந்து கொண்டிருந்த காருடன் மோதியது. காரின் சாரதியான பெண் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். பனிப்பொழிவு மற்றும் உறைபனி வெப்பநிலை காரணமாக வீதிகள் பளபளப்பான நிலையில் காணப்பட்டதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிசார் தெரிவித்தனர். நெடுஞ்சாலை 400 போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ளது. 2-…
-
- 0 replies
- 471 views
-
-
சந்தேகத்திற்கிடமான பொடி தூவப்பட்ட கடிதம் வந்ததையடுத்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் பல அறைகள் காலி செய்யப்பட்டன.அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு வந்த கடிதம் ஒன்றில் சந்தேகத்திற்கிடமான பொடி தூவப்பட்டிருந்தது. இதனால் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனவே நாடாளுமன்றக் கட்டிடத்தின் பல்வேறு அறைகள் காலி செய்யப்பட்டன. அந்த அறைகளுக்கு சீல் வைத்த பாதுகாப்பு அலுவலர்கள், பல்வேறு பொருட்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணை முடியும் வரை அந்த அறைகளை யாரும் பயன்படுத்தக் கூடாது எனவும் பாதுகாப்பு அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர் . - See more at: http://www.canadamirror.com/canada/41535.html#sthash.74BxYe57.dpuf
-
- 0 replies
- 261 views
-
-
கனடா- ஒன்ராறியோ முதல்வர் கத்லின் வின் புதன்கிழமை காலை யூனியன் நிலையத்திலிருந்து பியர்சன் சர்வதேச விமானநிலையத்திற்கு செல்லும் கடுகதி ரயில் வண்டியில் 23-நிமிட பயணம் ஒன்றை மேற்கொண்டார். விமான நிலையத்திலிருந்து டவுன் ரவுன் செல்ல விரும்பும் பயணிகள் யூன் மாதம் 6-ந்திகதியிலிருந்து பயணிக்கலாம் என தெரிவித்தார். போக்குவரத்து அமைச்சர் Steven Del Duca மற்றும் மெற்றோலிங்ஸ் அதிபர் Bruce McCuaig ஆகியோருடன் தனது பயணத்தை மேற்கொண்ட வின் “இன்றய நாள் ஒரு மைல்கல்” என கூறினார். பல தசாப்தங்களாக மாகாணம் இந்த அடிப்படை வசதியை அலட்சியப்படுத்ததியது. ஆனால் தனது அரசாங்கத்தில் இது முடிவிற்கு வந்துள்ளதெனவும் தெரிவித்தார். இது வின்னின் இரண்டாவது போக்குவரத்து சம்பந்தமான அறிவித்தலாகும். 1.6 பில்லிய…
-
- 0 replies
- 363 views
-
-
நேபாளத்தில் பேருந்து விபத்தில் பலியான 17 இந்தியர்களின் உடல்களை மீட்டுக்கொண்டு வர ஐஎல் 76 ரக விமானத்தை இந்தியா அனுப்ப முடிவு செய்துள்ளது. இந்த விமானம் இன்று இரவு காத்மாண்டு சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சில நடைமுறை பணிகள் பூர்த்தி செய்யப்பட வேண்டி இருப்பதால் நாளைதான் பலியான 17 பேர் உடல்களுடன் காயம் அடைந்த 28 பேரையும் விமானம் மூலம் மீட்டுக்கொண்டு வரப்படுகின்றனர். இந்த தகவலை வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் விகாஷ் ஸ்வார்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். முன்னதாக, நேபாளத்தில் காத்மாண்டு பள்ளத்தாக்கில் இருந்து 5 கி.மீ. வடகிழக்கே பாக்மதி நதிக்கரையில் அமைந்துள்ள பசுபதிநாதர் கோவிலுக்கு குஜராத் மாநிலத்தை சேர்ந்த 45 பக்தர்கள் பஸ் மூலம், ஆன்மி…
-
- 0 replies
- 556 views
-
-
அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்வெழித் தாக்குதலில், ஐஎஸ்எஸ் அமைப்பின் தலைவர் அல்-பாக்தாதி படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சிரியா எல்லைப் பகுதியில் கடந்த மாதம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், அவர் காயமடைந்ததாக இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் அவர் உடல்நிலை தேறி வருவதாகவும், ஆனால் அன்றாட பணிகள் எதிலும் ஈடுபவில்லை என்றும் தெரிகிறது. ஈராக், சிரியாவை ஒன்றிணைத்து, இஸ்லாமிய நாடாக பிரகடனம் செய்து, முக்கிய நகரங்களை அந்த அமைப்பு ஆக்கிரமித்து வரும் நிலையில், அல்-பாக்தாதியின் தலைக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது - See more at: http://www.canadamirror.com/can…
-
- 0 replies
- 185 views
-
-
அகமதாபாத்: குஜராத் கடல் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தான் படகில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.600 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் இந்தியா வழியாக ஐரோப்பாவுக்கு கொண்டு செல்கையில் சிக்கியது என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. குஜராத் கடல் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த படகு பறிமுதல் செய்யப்பட்டது. அதில் இருந்த 8 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டனர். படகில் 232 பாக்கெட்டுகளில் இருந்த ரூ.600 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணயில் அந்த போதைப் பொருள் இந்தியா வழியாக ஐரோப்பாவுக்கு எடுத்துச் செல்லப்பட இருந்தது தெரிய வந்துள்ளது. ஆண்டுதோறும் பாகிஸ்தான் சுமார் 200 டன் ஹெராயினை கடத்தி உலக நாடுகளில் விற்பனை செய்க…
-
- 0 replies
- 226 views
-
-
ஆள் கடத்தல் குற்றச்சாட்டில் 9 பேர் மீது வழக்கு கனடா முழுவதும் பரந்து பட்ட “புரஜெக்ட் கார்டியன்” என்ற நடவடிக்கையில் பெண்களை கடத்தி பாலியல் ரீதியாக வியாபாரத்தில் ஈடுபடுத்திய சந்தேக நபர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மேல் 61 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. ஜேன் – வில்சன்(Jane & Wilson) மற்றும் கிப்பிளிங்-ரெக்ஸ்டேல்(Kipling & Rexdale) பகுதிகளில் 13 தேடுதல் நடவடிக்கைகள் இடம் பெற்றன. 15 வயது முதல் 33 வயதுவரையான பெண்களை பரிசுகள் மூலம் மயக்கி காதலர்களாக நடித்து அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். கனடாமுழுவதும் உள்ள பெண்களை பாடசாலை முதல் முகநூல் வரையாக பெண்களை ஏமாற்றிய இவர்கள் வருமானம் குறைந்த போது அவர்களை துன்புறுத்தியும் உள்ளனர். 18 மு…
-
- 0 replies
- 282 views
-
-
கொள்ளையுடன் தொடர்புடைய ஆசிய நாட்டவர் ! புகைப்படத்தை வெளியிட்ட லண்டன் பொலிஸார் தகவல் தருமாறு அறிவிப்பு! லண்டன் Mitcham பகுதியில் கடந்த வருடம் நடந்த கொள்ளை மற்றும் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் நபரது புகைப்படத்தை புலனாய்வு பிரிவு பொலிஸார் வெளியிட்டுள்ளனர். Mitcham,Montrose Gardens பகுதியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 30ம் திகதி புதன்கிழமை நடந்த கொள்ளை மற்றும் Belmont Avenue பகுதியில் செப்டம்பர் மாதம் 7ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் 24 வயதான அரவிந்தன் ரவீந்திரன் என்ற நபரின் புகைப்படமே தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஆசியாவை சேர்ந்த ரவீந்திரன் என்ற இந்த நபரின் உயரம் 5அடி 3அங்குலம் எனவும் மாநிறமா…
-
- 1 reply
- 433 views
-
-
ஜப்பானிய ரயில் ஒன்று அதிவேகமாக ஓடுவதில் முன்னர் இருந்த சாதனையை முறியடித்து புதிய உலகச் சாதனை ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. Jump media playerMedia player helpOut of media player. Press enter to return or tab to continue. null ஃபூஜி மலைப் பகுதிக்கு அருகே நடைபெற்ற சோதனை ஓட்டத்தில் இந்த ரயில் மணிக்கு 603 கிலோமீட்டர் வேகத்தில் ஓடி புதிய சாதனையைப் படைத்துள்ளது. இந்த ரயில் வண்டி மிக அதிக காந்த சக்தி மூலம் இயங்குகிறது. ஓடும் ரயில் தண்டவாளங்களைத் தொடாமல் அதியுயர் காந்த சக்தி மூலமே செயல்படும் இந்த வண்டி, ஈர்ப்பு விசை மற்றும் இதர சக்திகளை சமன்படுத்தி பயணிக்கும். தலைநகர் டோக்யோ மற்றும் நகோயா நகருக்கு இடையே 2027 ஆம் ஆண்டு இந்த ரயில் சேவையை அறிமுகப்படுத்த மத்திய ஜப்பான் ரயில்வே நிறுவனம்…
-
- 0 replies
- 361 views
-
-
பாலிவுட் நடிகர் சல்மான் கான் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் வரும் மே 6-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று மும்பை விசாரணை நீதிமன்றம் அறிவித்துள்ளது. மதுபோதையில் கார் ஓட்டி, ஒருவர் இறக்கவும், நான்கு பேர் காயமடையவும் காரணமாக இருந்தார் என்று சல்மான் கான் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு மும்பை விசாரணை நீதிமன்றம் ஒன்றில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் நேற்றுடன் (திங்கள்கிழமை) வாதங்கள் முடிவடைந்தன. எனினும், ‘இந்த வழக்கில் நேரில் பார்த்த சாட்சியாக இருக்கும் ரவீந்தர் பாட்டீலின் சாட்சியத்தை ஏற்றுக்கொள்ளக் கூடாது. காரணம் அவர் குறுக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை' என்று சல்மானின் வழக்கறிஞர் கூறினார். ஆனால் குறுக்கு விசாரணை செய்வதற்க…
-
- 0 replies
- 202 views
-
-
குஜராத் மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நடனம் ஆடியவர்கள் மீது பாஜக பெண் எம்.பி. பணத்தை வாரி இறைத்துள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியானதால் சர்ச்சை எழுந்துள்ளது. ஜுனாகத் மாவட்டத்தில் உள்ள வெராவலில் புகழ்பெற்ற ‘பல்கா தீர்த்’ என்ற கலாச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஜாம் நகர் தொகுதியின் பாஜக பெண் எம்.பி. பூனம் மாடமும் கலந்து கொண்டார். இதில் கலந்து கொண்டு நடனமாடியவர்கள் மீது 10 ரூபாய் நோட்டுகளை பூனம் வாரி இறைத்துள்ளார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு குவிந்திருந்த ரூபாய் நோட்டுகள் எண்ணப்பட்டன. இதுகுறித்து பூனம் மாடம் கூறியதாவது: சவுராஷ்டிராவில் ஆஹிர் இனத்தவர்கள் கடந்த 100 ஆண்டுகளுக்க…
-
- 0 replies
- 236 views
-
-
ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு உதவும் இரானுக்கு எதிராக விமானம் தாங்கிய அமெரிக்க போர்க் கப்பல் புறப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஏமனில் அதிபர் ஹதி ஆதரவு படைகளை எதிர்த்து இரானின் ஆதரவோடு ஷியாப் பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு அந்நாட்டில் முன்னேறி வருகின்றனர். பல நகரங்களை அவர்கள் தங்கள் வசம் வைத்துள்ளனர். இரானைத் தவிர இவர்களுக்கு ஏமன் முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலே ஆதரவு படையும் சண்டையில் ஈடுபடுகின்றனர். ஏமன் அரசுக்கு ஆதரவாக சன்னி பிரிவு மக்கள் அதிகம் நிறைந்த சவுதி அரேபியா தலைமையில் வளைகுடா நாடுகளின் படைகள் போர் நடத்தி வருகின்றன. கடந்த மாதம் 26-ஆம் தேதில் நடந்து வரும் கடுமையான போரில் இதுவரை சுமார் 700 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 3000 பேர் ப…
-
- 0 replies
- 534 views
-
-
Media player help "வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மீன்பிடி அனுமதி,இந்திய மீனவர்களைப் பாதிக்கும்" 20 ஏப்ரல் 2015 கடைசியாக தரவேற்றப்பட்டது 16:40 ஜிஎம்டி இந்தியப் பிரத்யேகப் பொருளாதாரக் கடல் பரப்பில் பன்னாட்டு நிறுவன மீன்பிடிக் கப்பல்களை அனுமதிக்கவேண்டும் என்ற மீனாகுமாரி குழுவின் பரிந்துரை இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அது இந்திய மீனவர்களை வெகுவாகப் பாதிக்கும் என்று கூறும் இந்திய மீனவர் சங்கங்கள் , எதிர்வரும் ஏப்ரல் 22ம் தேதி இந்தியத் தலைநகர் டில்லியில் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளன. இந்தப் போராட்டத்துக்கு ஏற்பாடு செய்த அமைப்புகளில் ஒன்றான, தேசிய மீனவர் பேரவையின் தலைவர் மா.இளங்கோ, பிபிசி தமிழோசையிடம் கூறுகையில், இந்த மீனாகுமாரி குழுவின் …
-
- 1 reply
- 438 views
-
-
Media player help சீன பொருட்செலவில் பாகிஸ்தானில் விரைவு வழி நெடுஞ்சாலை 20 ஏப்ரல் 2015 கடைசியாக தரவேற்றப்பட்டது 15:49 ஜிஎம்டி பலுச்சிஸ்தான் மாகாணத்தின் தென் கரையிலிருந்து இருந்து சீனா வரை செல்லும் புதிய விரைவு வழி நெடுஞ்சாலை ஒன்று சீனப் பொருட்செலவில் அமைக்கப்படவுள்ளது. http://www.bbc.co.uk/tamil/global/2015/04/150420_pakchina
-
- 0 replies
- 364 views
-
-
இமயமலைப் பகுதியில் காணப்படும் காட்டு எருது நேபாளத்தின் வடமேற்கு பிரதேசத்திலுள்ள தொலைதூர பகுதியில் அடர்த்தியான நீண்ட முடிகளைக் கொண்ட காட்டு எருதுகளை தாங்கள் கண்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஐம்பது ஆண்டுகளில் இவ்வகையான எருதுகள் முதல்முறையாகக் காணப்பட்டுள்ளன. இந்தக் காட்டு எருதுகள் நேபாளம் மற்றும் பூட்டானை உள்ளடக்கிய பிராந்தியத்திலிருந்து முற்றாக அழிந்து போய்விட்டதாக கருதப்பட்டன. ஆனால் கடந்த ஆண்டு இமயமலைப் பகுதியில் பல்வேறு இடங்களில் ஆறு காட்டு எருதுகளை காணப்பட்டதாக ஆய்வை முன்னின்று நடத்திய ராஜு ஆச்சார்யா பிபிசியிடம் தெரிவித்தார். இந்த எருதுகளின் கானொளிகள், நேபாள இயற்கைவள அருங்காட்சியகத்திலுள்ள ஆவணங்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டன என்றும் அவர் கூறுகிறார…
-
- 2 replies
- 1.8k views
-