உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26853 topics in this forum
-
எலோன் மஸ்க் – விவேக் ராமசாமிக்கு முக்கிய பொறுப்பு : டிரம்ப் அதிரடி! christopherNov 13, 2024 09:29AM அமெரிக்க அரசின் செயல்திறன் துறையை வழிநடத்த எலோன் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி இருவரையும் நியமித்து டொனால்ட் டிரம்ப் இன்று (நவம்பர் 13) உத்தரவிட்டுள்ளார். நடந்து முடிந்தஅமெரிக்க தேர்தலில் 312 தேர்தல் வாக்குகளை பெற்று பெரும்பான்மை வெற்றியுடன் 2வது முறையாக அதிபர் ஆகியுள்ளார் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப். வரும் ஜனவரி மாதம் பதவியேற்க அவர் உள்ளார். அவரது தேர்தல் வெற்றிக்கு உலகின் நம்பர் 1 பணக்காரரான எலோன் மஸ்க் மற்றும் இந்திய வம்சாவளியும், தொழிலதிபருமான விவேக் ராமசாமி கடுமையாக உழைத்தனர். அவரது வெற்றிகரமான தேர்தல் பிரச்சாரத்திற்கு இருவரின…
-
- 3 replies
- 536 views
- 1 follower
-
-
தெளிவான செய்தியை அனுப்ப முயற்சிக்கும் அரபு நாடுகள்; முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையில் டிரம்ப் - மத்திய கிழக்கில் சூழல் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES சௌதி அரேபியாவும் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் இரானுடனான மோதல் போக்கை குறைக்க வேண்டும் என விரும்புகின்றன. அமெரிக்கா - இரானுடனான உறவுகளை மேம்படுத்த புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சமாதானப்படுத்தப்படுத்த முடியும் என்றும் அவர்கள் நம்புகின்றனர். இரானுடனான சௌதி அரேபியாவின் உறவு பதற்றமாகவே உள்ளது. ஆனால் அரபு நாடுகள், டிரம்ப் தனது இரண்டாவது முறை பதவிக்காலத்தில் இரான் மீது சுமூகமான போக்கை கொண்டிருக்க வேண்டும் என்றும், காஸா மற்றும் லெபனானில் நடந்து வரும்…
-
- 0 replies
- 257 views
- 1 follower
-
-
பிட்காயின் விலை திடீரென உயரக் காரணம் என்ன? கிரிப்டோகரன்சி பற்றிய முக்கிய கேள்விகளுக்கான பதில் பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், அபினாவ் கேயல் பதவி, பிபிசி செய்தியாளர் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பின் வெற்றிக்குப் பிறகு, பிட்காயின் எனும் இணைய நாணயம் (கிரிப்டோகரன்சி) 90,000 அமெரிக்க டாலர்களைத் தாண்டி விற்பனையாகி வருகிறது. அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவை உலகின் ‘கிரிப்டோ தலைநகராக’ உருவாக்குவதாக உறுதியளித்திருந்தார். உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சியான பிட்காயினின் விலை, இந்த வருடம் 80%-க்கு மேல் உயர்ந்துள்ளது. பிட்காயின் மட்டுமின்றி இதரக் கிரிப்டோக…
-
- 0 replies
- 315 views
- 1 follower
-
-
எரிமலை சாம்பல் வானில் 10 கிலோ மீற்றர் (32,808 அடி) உயரத்திற்கு படர்ந்து காணப்படுவதால் புதன்கிழமை இந்தோனேசியாவின் பாலி சுற்றுலா தீவுக்கான விமான சேவைகளை பல சர்வதேச விமான நிறுவனங்கள் இரத்து செய்துள்ளன. வானத்தில் எரிமலை சாம்பல் சூழ்ந்து காணப்படுவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக பாலிக்கு விமான பயணங்கள் இடைநிறுத்தப்பட்டதாக ஜெட்ஸ்டார் மற்றும் குவாண்டாஸ் ஆகிய விமான சேவைகள் தெரிவித்துள்ளன. அதேவேளை, ஏர் ஏசியா மற்றும் விர்ஜின் ஆகிய விமான சேவைகளும் விமான பயணங்களை இரத்துசெய்துள்ளதாக ஃப்ளைட்ராடார் 24 என்ற விமான கண்காணிப்பு வலைத்தளம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் சிறந்த சுற்றுலாப் பகுதியாக பாலி காணப்படுவதோடு, அவுஸ்திரேலிய சுற்றுலா பயணிகளை கவர்ந்த இடமாக…
-
- 0 replies
- 919 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1997-இல் எடுக்கப்பட்ட 48 மைல் நீள நெப்ட் டேஷ்லரி மிதக்கும் நகரத்தின் கழுகு பார்வைப் புகைப்படம் எழுதியவர், அலிசியா ஹெர்னாண்டஸ் பதவி, பிபிசி உலக செய்திக்காக காஸ்பியன் கடலுக்கு நடுவே, வானுயர்ந்த ஸ்டீல் கோபுரங்கள், துருப்பிடித்த குழாய்கள், மரப் பாலங்கள், சோவியத் காலத்தை சேர்ந்த பிரமாண்டமான கட்டடங்கள் என உலக வரைபடத்தில் இல்லாத மனிதனால் உருவாக்கப்பட்ட தீவு ஒன்று இருக்கிறது. அது தான் நெப்ட் டேஷ்லரி நகரம். 1940களில், காஸ்பியன் கடலில் எண்ணெய் வளங்கள் இருப்பதை கண்டறிய ஜோசப் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் விளைவாகவே இந்த நகரம் உருவானது. அஜர்பைஜானின் பாகு நகரத்தில் இருந்து 55 கிலோ மீ…
-
- 1 reply
- 751 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ட்ரோனை வழிநடத்தும் யுக்ரேனிய வீரர் எழுதியவர், பாவெல் அக்செனோவ், ஓலே செர்னிஷ் மற்றும் ஜெர்மி ஹோவெல் பதவி, பிபிசி உலக சேவை 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா - யுக்ரேன் இடையே போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யாவும் யுக்ரேனும் மாறி மாறி ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. சமீபத்திய நாட்களில் இந்த தாக்குதல்களின் தீவிரம் அதிகரித்துள்ளது. யுக்ரேன் ரஷ்யாவிற்கு எதிராக 80 ட்ரோன்களை செலுத்தியது. அவற்றில் சில மாஸ்கோவை இலக்காகக் கொண்டவை. மற்றொருபுறம் யுக்ரைன் முழுவதும் உள்ள இலக்குகளை நோக்கி ரஷ்யா 140க்கும் மேற்பட்ட ட்ரோன்களை செலுத்தியது. இந்த மோதலில் ஆளில்லா விமானங்களான ட்ரோன்களை ஆயு…
-
- 0 replies
- 302 views
- 1 follower
-
-
ஏர்ஷோ சைனா அல்லது ஜுஹாய் ஏர்ஷோ 2024 என்றும் அழைக்கப்படும் 15ஆவது சீன சர்வதேச விமான மற்றும் விண்வெளி கண்காட்சி, தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஜுஹாய் நகரில் இன்று ஆரம்பமாகியுள்ளது. சீன மக்கள் விடுதலை இராணுவ விமானப்படையின் தளபதி ஜெனரல் சாங் டிங்கியூ ஆரம்ப விழாவில் உரையை நிகழ்த்தினார்.தகவல் தொடர்புத் தளத்தை திறந்ததாகக் முன்னேற வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். தொடக்க விழாவில் பல்வேறு நாடுகளின் விமானப் படையைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள் பங்கேற்று விமானச் செயற்பாட்டைப் பார்வையிட்டனர். கண்கவர் விண்வெளி நிகழ்ச்சிகள் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்காக சமீபத்திய மேம்பட்ட இராணுவ உபகரணங்களை காட்சிப்படுத்தும் இந்த விமான நிகழ்ச்சி…
-
- 0 replies
- 765 views
- 1 follower
-
-
மத்திய கிழக்கில், காஸா மற்றும் லெபனானில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில் இஸ்லாமிய மற்றும் அரபு நாடுகளின் தலைவர்கள் சௌதி அரேபியா தலைநகர் ரியாத்தில் ஒன்று கூடியுள்ளனர். அப்போது பேசிய சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், காஸாவில் இஸ்ரேலின் தாக்குதல்களை "இனப்படுகொலை" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் லெபனான் மற்றும் இரான் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களையும் அவர் விமர்சித்தார். "பாலத்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்திவரும் தொடர் தாக்குதல்கள் மற்றும் லெபனான் மக்கள் மீதும் அந்நாடு தாக்குதலை விரிவுபடுத்த வாய்ப்புள்ள இந்த சூழலில், இவ்வுச்சிமாநாடு நடைபெறுகிறது", என்று அவர் கூறினார். ஆனால் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை இஸ…
-
- 1 reply
- 898 views
- 1 follower
-
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024. இன்னும் சில நேரங்களில் (7 மணி) புளோரிடா ஜேர்ஜியா மாநிலங்களில் முடிவுகள் வெளிவரப் போகின்றன.
-
-
- 174 replies
- 9.7k views
- 2 followers
-
-
ஹெய்ட்டியின் வான்பரப்பில் அமெரிக்காவின் இரண்டு ஜெட்விமானங்கள் துப்பாக்கி பிரயோகத்தினால் சேதமடைந்துள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது. ஹெய்ட்டியில் அதிகரிக்கும் காடையர் குழுக்களின் வன்முறைகளின் மத்தியில் அந்த நாடு விமானப்போக்குவரத்தினை இடைநிறுத்தியுள்ள நிலையிலேயே இந்த சம்பவம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஹெய்ட்டி தலைநகர் போட் ஒவ் பிரின்சில் தரையிறங்கிக்கொண்டிருந்த ஸ்பிரிட் எயர்லைன்ஸ் விமானத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது, அதன் பணியாளர் ஒருவர் சிறியகாயங்களிற்குள்ளானார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் பின்னர் அந்த விமானம் அங்கு தரையிறங்காமல் டொமினிக் குடியரசின் சான்டியாகோவில் தரையிறங்கியது, அங்கு விமானத்தை சோதனையிட்டவேளை துப்பாக்…
-
- 0 replies
- 228 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டொனால்ட் டிரம்ப் எழுதியவர், மேட்லைன் ஹால்பர்ட் பதவி, பிபிசி செய்தி, நியூயார்க் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு, டொனால்ட் டிரம்பைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக ஆஃப்கானிஸ்தான் நாட்டவர் மீது அமெரிக்க அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது இரானில் உருவான சதித்திட்டம் என்றும் அமெரிக்கா கூறுகிறது. ஆஃப்கானிஸ்தானை சேர்ந்த, 51 வயதான ஃபர்ஹாத் ஷகேரி என்பவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அமெரிக்க நீதித்துறை வெள்ளிக்கிழமை அறிவித்தது. டிரம்பைக் கொல்ல 'திட்டமிட்டதாக’ ஃபர்ஹாத் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஷகேரி இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் இரானில் இரு…
-
- 2 replies
- 211 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, டொனால்ட் டிரம்ப் போரை நிறுத்துவது குறித்து அமெரிக்க தேர்தல் பரப்புரையில் தொடர்ச்சியாக குறிப்பிட்டு வந்தார். எழுதியவர் சோஃபியா ஃபெரெய்ரா சாண்டோஸ் பதவி, பிபிசி செய்திகள் அமெரிக்காவில் அமையவிருக்கும் புதிய நிர்வாகம், யுக்ரேன் ரஷ்யாவிடம் இழந்த பிராந்தியங்களை மீட்பதற்கு உதவுவதைக் காட்டிலும், அமைதியை நிலை நிறுத்தவே முக்கியத்துவம் அளிக்கும் என்று டொனால்ட் டிரம்பின் முன்னாள் ஆலோசகர் கூறியுள்ளார். ப்ரையன் லான்ஸா என்ற அந்த ஆலோசகர் 2024-ஆம் ஆண்டு அமெரிக்க தேர்தலில் டிரம்பின் பரப்புரை பணிகளில் பங்கேற்றார். பிபிசியிடம் பேசிய அவர், "வருகின்ற புதிய நிர்வாகம், யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஜெலன்ஸ்கியிட…
-
- 1 reply
- 432 views
- 1 follower
-
-
இஸ்ரேலிற்கும் ஹமாசிற்கும் இடையில் பணயக்கைதிகள் விடுதலை, யுத்த நிறுத்த பேச்சுவார்த்தைகள் போன்றவற்றில் அனுசரணையாளராக செயற்படுவதை கத்தார் இடைநிறுத்தியுள்ளது. இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தினால் மாத்திரமே மீண்டும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப்போவதாக கத்தார் தெரிவித்துள்ளது. கத்தாரில் ஹமாஸ் அமைப்பின் பிரதிநிதிகள் செயற்படுவதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையிலேயே கத்தாரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஹமாசினை தனது அரசியல் அலுவலகத்தினை மூடுமாறு கத்தார் கேட்டுக்கொள்ளவேண்டும் என அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கத்தார் அதற்கு இணங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள…
-
- 0 replies
- 483 views
- 1 follower
-
-
கல்விக்கான விசேட விரைவு விசா திட்டத்தை இரத்து செய்த கனடா! இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையிலான இராஜதந்திர மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனேடிய அரசாங்கம் எஸ்.டி.எஸ் என்ற பிரபலமான கல்விக்கான விசேட விரைவு விசா திட்டத்தை உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான சர்வதேச மாணவர்களுக்கு கனடாவில் உயர் படிப்புக்கான விசாக்களை விரைவாகப் பெற அனுமதிக்கும் இந்த விசா திட்டத்தின் நிறுத்தமானது இந்தியா உட்பட சர்வதேசத்திலுள்ள மாணவர்கள் மீது கடுமையான தாக்கத்தை செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா உட்பட 14 நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான விசா விண்ணப்ப செயல்முறையை எளிதாக்கும் வகையில் கனேடிய அரசாங்கத்…
-
- 0 replies
- 301 views
-
-
பட மூலாதாரம்,BILLY HENRI படக்குறிப்பு, அகலேகா தீவு எழுதியவர், ஜேக்கப் எவன்ஸ் பதவி, பிபிசி உலக சேவை இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அகலேகா எனும் சிறிய தீவிலிருந்து வெளியேற வேண்டுமென அர்னௌ பூலே ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால், தன்னுடைய சொந்த ஊரை ராணுவமயப்படுத்துவதாகக் கூறி, இந்தாண்டு தன்னுடைய உடைமைகளுடன் நொறுங்கிய இதயத்துடன், இங்கிருந்து புறப்பட்டார். சமீப காலம் வரை அகலேகா தீவில் வெறும் 350 பேர் மட்டும்தான் மீன்பிடித்தல் மற்றும் தென்னைகளை வளர்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். மற்ற உணவுப்பொருட்கள், தெற்கில் 1,100 கி.மீ. தொலைவில் உள்ள மொரீஷியஸின் தலைநகரிலிருந்து கப்பல் மூலம் ஆண்டுக்கு நான்கு முறை இங்கு வந்திறங்க…
-
- 0 replies
- 540 views
- 1 follower
-
-
பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 24 பேர் பலி! பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 24 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் இன்று (09) காலையில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 24 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 40 பேர் காயமடைந்துள்ளனர். குண்டுவெடிப்பு இடம்பெற்ற போது அங்கிருந்து ரயில் ஒன்று கிளம்பியது. சிறிது தாமதமாக சென்றிருந்தால், பலி எண்ணிக்கை கூடியிருக்கும் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த குண்டுவெடிப்பு, தற்கொலைப் படையினரால் நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். மேலும், ரயில் நிலையத்தில் வழக்கமாக இ…
-
- 1 reply
- 234 views
- 1 follower
-
-
நெதர்லாந்தில் இஸ்ரேலிய ரசிகர்கள் மீதான தாக்குதல்; மீட்பு பணிக்காக இரு விமானங்களை அனுப்ப உத்தரவு! ஆம்ஸ்டர்டாமில் ஏற்பட்ட வன்முறை மோதல்களைத் தொடர்ந்து கால்பந்து ரசிகர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக இரண்டு விமானங்களை நெதர்லாந்துக்கு அனுப்ப இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெள்ளிக்கிழமை (08) உத்தரவிட்டார். இது குறித்து நெதன்யாகுவின் அலுவலகம் எக்ஸ் கணக்கில் கூறியுள்ளதாவது, எங்கள் குடிமக்களுக்கு உடனடியாக உதவ இரண்டு மீட்பு விமானங்கள் அனுப்பப்படுகின்றன. பிரதமர் நெதன்யாகு இந்த சம்பவம் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளார். மேலும் டச்சு அரசாங்கமும் பாதுகாப்புப் படையினரும் கலவரக்காரர்களுக்கு எதிராக தீவிரமான மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். …
-
- 2 replies
- 306 views
- 1 follower
-
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்பின் வெற்றி அமெரிக்காவின் கறுப்பின மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டொனால்ட் டிரம்ப் கமலா ஹரிசினை கருப்பின பெண்ணாக சித்தரித்து பிரச்சாரம் செய்த நிலையில் கறுப்பின மக்கள் கமலா ஹரிசிற்கு ஆதரவாக பெருமளவிற்கு வாக்களித்திருந்தனர். வடகரோலினாவில் டிரம்பிற்கு கறுப்பின மக்களின் வாக்குகள் கிடைத்துள்ளதுடன் அந்த சமூகத்தை சேர்ந்த மக்களில் சிலர் அவரது வெற்றியை கொண்டாடியுள்ளனர். எனினும் தேசிய அளவில் கறுப்பின மக்களின் வாக்குகளின் எண்ணிக்கை மாறவில்லை, 2020இல் பெற்ற அதேயளவு வாக்குகளையே அவர் பெற்றுள்ளார். 2020 இல் ஜோபைடன் வெற்றிபெற்றமைக்கு கறுப்பினமக்களின் வாக்குகளே முக்கிய…
-
- 0 replies
- 438 views
- 1 follower
-
-
சுவிட்சர்லாந்தில், முகத்தை முழுமையாக மூட தடை- மீறினால் அபாராதம். சுவிட்சர்லாந்தில் அடுத்தாண்டு ஜனவரி முதலாம் திகதிமுதல் முகத்தை முழுமையாக மூடியவாறு பொது வெளிகளில் நடமாடுவது தடைசெய்யப்படவுள்ளது. இந்த சட்டத்தை மீறினால், அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு எதிர்ப்புகளையும் தாண்டி, சுவிட்சர்லாந்து நாட்டில் முகத்தை மூடியபடி பொது வெளிகளில் நடமாட அடுத்தாண்டு ஜனவரி முதலாம் திகதிமுதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அறிவித்துள்ள சுவிட்சர்லாந்து அரசாங்கம், இந்த தடையை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தில், இது தொடர்பான தீர்மானம் கடந்த 2021 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டிருந்தது. இதற்கு அந்நாட்டிலுள்ள மு…
-
- 0 replies
- 393 views
-
-
பட மூலாதாரம்,SHIVAUN AND ADAM RAFF படக்குறிப்பு, ஷிவான் ராஃப் மற்றும் அவரது கணவர் ஆடம், கூகுளுக்கு எதிராக நீண்ட காலமாக சட்டப் போராட்டம் நடத்தினர். எழுதியவர், சைமன் டுலெட் பதவி, பிபிசி செய்தியாளர் "எங்கள் தளத்தை கூகுள் இணையத்தில் இருந்து மறையச் செய்துவிட்டது" என்று ஒரு முக்கியமானக் குற்றச்சாட்டை ஷிவான் ராஃப் மற்றும் அவரது கணவர் ஆடம் ராஃப் ஆகியோர் முன்வைத்துள்ளனர். பிரிட்டனை சேர்ந்த ஷிவான் ராஃப் - ஆடம் ராஃப் தம்பதி 2006 ஆம் ஆண்டு, ஜூன் மாதத்தில், நல்ல ஊதியம் வரும் வேலையை விட்டுவிட்டு, `ஃபவுண்டெம்’ (Foundem) என்ற 'விலை ஒப்பீட்டு’ இணையதளத்தைத் தொடங்கினர். பொதுவாக ஸ்டார்ட்அப் நிறுவனங்களை தொடங்கும் தொழில்முனைவோருக…
-
-
- 1 reply
- 396 views
- 1 follower
-
-
டிரம்புக்கு குவியும் வாழ்த்துகள் - யுக்ரேன், இஸ்ரேல், இந்தியா கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வாகியுள்ளார். வெற்றிமுகத்தில் இருக்கும் போதே ஃபுளோரிடாவில் உள்ள தனது பிரசாரக் குழுவின் தலைமையகத்தில், ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய டிரம்ப் "இது அமெரிக்க மக்களுக்கு கிடைத்த அற்புதமான வெற்றியாகும். இது அமெரிக்காவை மீண்டும் சிறந்த தேசமாக மாற்றும்" என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்திய பிரதமர் மோதி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உட்பட உலகத் தலைவர்கள் பலரும் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்திய பிரதமர் வாழ்த்து அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெ…
-
- 5 replies
- 1k views
- 1 follower
-
-
டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) தைரியம் தன்னை ஈர்த்துள்ளது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தெரிவித்துள்ளார். ரஷ்யாவில்(Russia) நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “டொனால்டு ட்ரம்பை தாமாகவே முன்வந்து தொடர்பு கொள்வதில் எந்த அவமானமும் இருப்பதாக தாம் கருதவில்லை என குறிப்பிட்டுள்ள விளாடிமிர் புடின், அதை நான் செய்ய விரும்பவில்லை. டொனால்ட் ட்ரம்பின் தைரியம் எவரேனும் ஒருவர் மீண்டும் தம்மை தொடர்பு கொண்டால் அதை தாம் வரவேற்பதாகவும், விவாதிக்க தயார். அது போலவே, டொனால்டு ட்ரம்புடனும் தாம் விவாதிக்க தயாராக இருக்கின்றேன். …
-
- 1 reply
- 314 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டொனால்ட் டிரம்ப், கடந்த ஏப்ரல் மாதம் தனக்கு எதிரான முதல் குற்றவியல் விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜரானார். எழுதியவர், மேடலின் ஹால்பர்ட் பதவி, பிபிசி நியூஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அவர் மீது பல குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தீர்ப்பளிக்கப்படாத பல குற்றவியல் வழக்குகள் உள்ள ஒருவர் அமெரிக்க அதிபராவது இதுவே முதல்முறை. பல குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்ளும் அதேவேளையில் டிரம்ப் அமெரிக்காவின் மிக உயர்ந்த பதவியில் உட்காரப் போவது, அமெரிக்காவில் இதுவரை நடந்திராத ஒன்று. டிரம்ப் வெள்ளை மாளிகைக்குள் நுழையும் போது, அவர் எதிர்கொள்ளும் நான்க…
-
- 0 replies
- 270 views
- 1 follower
-
-
ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் - மாநாட்டில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு 16 JUL, 2024 | 07:52 AM அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சியின் வேட்பாளராக டொனால் டிரம்ப் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் மாநாட்டில் இது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. துணை ஜனாதிபதி வேட்பாளராக செனெட்டர் ஜேடி வின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான பின்னர் முதல் தடவையாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பொதுநிகழ்வில் கலந்துகொண்டுள்ளார். குடியரசுக் கட்சியின் மாநாட்டில் அவர் துணை ஜன…
-
-
- 100 replies
- 7.8k views
- 1 follower
-
-
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பின்(Donald trump) பதவியேற்பதற்கு முன்னதாக, உக்ரைனுக்கு பில்லியன் கணக்கான டொலர்களை பாதுகாப்பு உதவியாக வழங்க வெள்ளை மாளிகை திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைன் அரசாங்கத்தை வலுப்படுத்தும் நம்பிக்கையுடன், ஜோ பைடன்(Joe Biden) ஜனவரி மாதம் பதவி விலகுவதற்கு முன் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள வெள்ளை மாளிகை தொடர்பிலும், செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையின் கீழ் ஜனாதிபதி உக்ரைன் வோலோடோமிர் ஜெலென்ஸ்கியின் அரசாங்கத்திற்கான ஆதரவின் எதிர்காலம் தொடர்பிலும் கடந்த காலங்களில் ட்ரம்ப் விமர்சித்திருந்தார். …
-
-
- 3 replies
- 364 views
- 1 follower
-