உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26853 topics in this forum
-
கனடாவில் (Canada) உள்ள இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரிகள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும், இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் இந்தியா (India) தெரிவித்துள்ளது. இந்த கருத்தை வெளிவிவகார அமைச்சகத்தின் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இன்று (07) வெளியிட்டுள்ளார். அத்துடன், கடந்த ஆண்டில், கனடாவில் உள்ள இந்திய இராஜதந்திரிகள், அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் மற்றும் துன்புறுத்தல்களை அதிகளவில் எதிர்கொண்டனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாதுகாப்பு இந்தநிலையில் தமது உயர்ஸ்தானிகரக அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்ட போதும், கனேடிய தரப்பால் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, கனடாவின் பிர…
-
- 0 replies
- 351 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,REUTERS எழுதியவர், ஜான் டொன்னிசன், ஜார்ஜ் ரைட் பதவி, பிபிசி செய்திகள் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அந்த நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலண்டை பதவியில் இருந்து நீக்கிய பிறகு போராட்டங்கள் வெடிக்கத் துவங்கியுள்ளது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட நம்பிக்கையின்மை காரணமாகவே இந்த முடிவுக்கு வந்ததாக நெதன்யாகு அறிவித்திருக்கிறார். கடந்த சில மாதங்களாக கேலண்ட் மீது வைத்திருந்த நம்பிக்கை குறையத் துவங்கியதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ள இஸ்ரேல் கட்ஸ் பாதுகாப்பு அமைச்சராகிறார். மூன்று முக்கியமான விவகாரங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே இந்த முடிவு…
-
- 1 reply
- 311 views
- 1 follower
-
-
James Waterhouse bbc தமிழில் ரஜீபன் தனது கடையின் உடைந்த கண்ணாடியை சுத்தம் செய்துகொண்டிருக்கும் உக்ரைனின் இனாவிற்கு தனது நாட்டின் எதிர்காலம் 5000 மைல் தொலைவில் உள்ள அமெரிக்க வாக்காளர்களின் கரங்களில் உள்ளது என்பது தெரியும். கமலாஹரிஸ் என்ற பெண் வெற்றிபெற்று எங்களிற்கு உதவுவார் என நம்புகின்றோம் என்கின்றார் அவர். ரஸ்யாவின் குண்டு கடையின் ஜன்னல்களை சிதறடித்துள்ளது. ஜபோரிஜியாவில் இது வழமையான நிகழ்வு. வீதியில் பத்துமீற்றர் குழி காணப்படுகின்றது. தேர்தல் முடிவுகள் குறித்து நாங்கள் கவலையடைந்துள்ளோம் என அவர் தெரிவிக்கின்றார். 'நாங்கள் எதிரியை தோற்கடிக்க விரும்புகின்றோம்" என அவர் குறிப்பிடுகின்றார். போரில் வ…
-
-
- 15 replies
- 871 views
- 1 follower
-
-
வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற ஸ்பெய்ன் அரச தம்பதியர் மீது சேறு வீச்சு! வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வலென்சியாவிற்கு விஜயம் செய்த போது கோபமடைந்த எதிர்ப்பாளர்களால் ஸ்பெய்ன் மன்னர் மற்றும் ராணி மீது சேறு மற்றும் பிற பொருட்களை வீசியுள்ளனர். கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான பைபோர்டா நகரில் எதிர்ப்பாளர்கள் அரச தம்பதிகள் மற்றும் ஸ்பெய்னின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகியோரை நோக்கி “கொலைகாரன்” என்று கூச்சலிட்டனர். எனினும், முகத்திலும் உடைகளிலும் சேறு படிந்த நிலையில், மன்னன் ஃபெலிப்பே மற்றும் ராணி லெடிசியா பின்னர் கூட்டத்தின் உறுப்பினர்களை ஆறுதல்படுத்துவதற்கு முனைந்தார். அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்றொரு நகரமான சிவாவுக்குச் ச…
-
-
- 9 replies
- 548 views
-
-
-
- 0 replies
- 584 views
-
-
ரொய்ட்டர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் ஒரு மோசமான விளைவான - டிரம்பின் வெற்றியை எதிர்கொள்வதற்கு ஈரானும் அதன் சகாக்களும் தயாராகிவருவதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. ரொய்ட்டர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கமலா ஹரிஸுக்கும் டொனால்ட் டிரம்புக்கும் இடையில் கடும் போட்டி நிலவுவதை கருத்துக்கணிப்புகள் வெளிப்படுத்துகின்ற போதிலும், ஈரான் தலைவர்களும் லெபனான், யேமன் ஈராக்கில் உள்ள அவர்களின் சகாக்களும் நவம்பர் 5ஆம் திகதி தேர்தலில் டிரம்ப் வெற்றிபெறுவார்; அதனால் தங்களிற்கு மேலும் நெருக்கடிகள் உருவாகும் என கருதுகின்றனர். ஈரானின் அணுநிலைகள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கும் இலக்குவைக்கப்பட்ட படுகொலைகளில் ஈடுபடுவதற்கும் இஸ்ரேலின் பிரதம…
-
- 0 replies
- 353 views
- 1 follower
-
-
காசாவில் பொதுமக்களை கொலை செய்யவேண்டிய நிர்பந்தத்திற்கு இஸ்ரேல் தள்ளப்பட்டது என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் தெரிவித்துள்ளமைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அமெரிக்க முஸ்லீம்களும் அராபிய அமெரிக்கர்களும் பில்கிளின்டனின் கருத்திற்கு தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். ஜனநாயக கட்சியினர் மிச்சிக்கன் உட்பட பல மாநிலங்களில் இஸ்லாமியர்கள் அராபியர்களின் வாக்குகளை நம்பியுள்ள நிலையில் பில்கிளின்டனின் இந்த கருத்து வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மிச்சிகனில் கமாலா ஹரிசிற்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் பேசியவேளை பில்கிளின்டன் நான் காசாவில் இரத்தகளறி குறித்த மக்களின் கரிசனையை புரிந்துகொள்கின்றேன். ஆனால் சர்வதேசநீதிமன்…
-
-
- 4 replies
- 397 views
- 1 follower
-
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கிறது, அமெரிக்கர்கள் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை தங்களது ஜனாதிபதியை தெரிவு செய்கிறார்கள். குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹரிஸுமே பிரதான வேட்பாளர்கள். இருவருக்கும் இடையிலான போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை இறுதி நேரம் வரை கூறமுடியாமல் இருக்கிறது. ஜனாதிபதி ஜோ பைடன் இரண்டாவது பதவிக்காலத்துக்கு போட்டியிடவிருந்தார். ஆனால் அவரது வயது மூப்பு மற்றும் வேறு காரணங்களினால் அவரை ட்ரம்ப் இலகுவாகத் தோற்கடித்துவிடக்கூடிய சாத்தியம் இருந்த நிலையில் அவர் போட்டியில் இருந்து விலகியதை அடுத்து ஜனநாயக கட்சியின் வேட்பாளராக கமலா ஹரிஸ் களமிறங்கின…
-
- 0 replies
- 451 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, அறிவியல் நிருபர் மெக்சிகோவில் காடுகளுக்கு அடியில் புதைந்திருந்த மிகப்பெரிய மாயன் நகரம் ஒன்று, பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வாளர்கள் மெக்சிகோவின் தென்கிழக்கு மாகாணமான காம்பேச்சியில் பிரமிடுகள், விளையாட்டு மைதானங்கள், மாகாணங்களை இணைக்கும் பாதைகள் மற்றும் சுற்று மாளிகை அரங்கத்தைக் (ஆம்பிதியேட்டர்) கண்டறிந்துள்ளனர். அப்பகுதியில் புதைந்துபோன வளாகம் ஒன்றையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். அதற்கு அவர்கள் `வலேரியானா’ என்று பெயரிட்டுள்ளனர். `லிடார்’ (Lidar) என்னும் லேசர் சென்சார் கருவியைப் பயன்படுத்தி, பூமிக்கு அடியில் புதைந்…
-
- 0 replies
- 406 views
- 1 follower
-
-
நைஜீரியாவில் வாழ்கைசெலவு அதிகரிப்பிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 29 சிறுவர்களிற்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நேற்று இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவேளை நால்வர் மயங்கி விழுந்துள்ளனர். வாழ்க்கை செலவு அதிகரிப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 76 பேருக்கு எதிரான தேசத்துரோக குற்றச்சாட்டுகள் உட்பட பல குற்றச்சாட்டுகளை நைஜீரியா அரசாங்கம் சுமத்தியுள்ளது. இவர்களில் 14 முதல் 17 வயதானவர்களும் காணப்படுகின்றனர். நைஜீரியாவில் வாழ்க்கை செலவு அதிகரிப்பு குறித்த விரக்தி காரணமாக பொதுமக்கள் தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகஸ்ட் மாதம் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட நால்வர் …
-
- 0 replies
- 170 views
- 1 follower
-
-
ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய கடற்படை தளபதியை கைது செயதுள்ளதாக இஸ்ரேல்(israel) அறிவித்துள்ளது.நேற்று (01.11.2024) வடக்கு லெபனானில்(lebanon) தமது கமாண்டோ படையினரால் இவர் கைது செய்யப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட ஹிஸ்புல்லா தளபதியின் பெயர் இமாத் அம்ஹாஸ் எனவும் இவர் அந்த அமைப்பின் கடற்படையின் மூத்த உறுப்பினர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார் ஹிஸ்புல்லாவின் கடற்படை நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க இமாத் அம்ஹாஸ் அழைத்துச் செல்லப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கைதுடன் தொடர்பு : ஐ.நா அமைதிப்படை மறுப்பு இதேவேளை நேற்று வடக்கு லெபனானில் இஸ்ரேலிய கடற்படை கமாண்டோக்களால் ஹிஸ்புல்லா கடற்படை…
-
- 1 reply
- 349 views
- 1 follower
-
-
சைபர் எதிரியாக இந்தியாவை வகைப்படுத்திய கனடா! பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனேடிய அரசாங்கம் அதன் அண்மையை நடவடிக்கையாக இந்தியாவை ஒரு “சைபர் எதிரியாக” வகைப்படுத்தி, இணைய பாதுகாப்பில் உள்ள விரோத நாடுகளின் பட்டியலில் சேர்த்துள்ளது. இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான இராஜதந்திர நெருக்கடி நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலையில் கனேடிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை வந்துள்ளது. இந்த தீர்மானத்துக்கு இந்திய வெளி விவகார அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், கனடா இந்தியாவின் உலகளாவிய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளது. இதனிடையே கனடா, அங்குள்ள தமது தூதரக ஊழியர்கள் மீது கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் கூறியுள…
-
-
- 1 reply
- 489 views
-
-
எழுதியவர் ,ஃபெர்கல் கியானே பதவி,சிறப்புச் செய்தியாளர் அந்த குழந்தையை ஆண்கள் அதிகமாக நிரம்பியிருக்கும் கூட்டத்தில் பார்ப்பது மிகவும் கடினமாக இருந்தது. மிகவும் சின்னஞ்சிறிய பெண் குழந்தை, அந்த கூட்டத்தின் கடைசியில் அமர்ந்திருந்தார். இஸ்ரேல் ராணுவ வீரர்கள், அங்கே இருந்த ஆண்களின் உடைகளையெல்லாம் பரிசோதனைக்காக நீக்க உத்தரவு பிறப்பித்திருந்தனர். வயதானவர்களும் கூட அதற்கு விதிவிலக்கல்ல. கேமராக்களின் பக்கம் அவர்களின் பார்வை திரும்பின. இந்த புகைப்படத்தை இஸ்ரேல் ராணுவ வீரரைத் தவிர வேறு யார் எடுத்திருக்கக் கூடும் . இஸ்ரேல் பாதுகாப்புப் படையினருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் ஊடகவியலாளர் ஒருவரின் டெலிகிராம் பக்கத்தில் தான் முதன் முதலாக இந்த புக…
-
-
- 6 replies
- 935 views
- 1 follower
-
-
இஸ்ரேல், அதன் நட்பு நாடுகளுக்கு விரைவில் பதிலடி – ஈரானிய உச்ச தலைவர்! தெஹ்ரான் மற்றும் பிராந்தியத்தில் தாம் ஆதரிக்கும் குழுக்களை குறிவைத்து இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடான அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுப்போம் என ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei) சபதம் மேற்கொண்டார். யேமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கம் மற்றும் பாலஸ்தீனிய இஸ்லாமியக் குழுவான ஹமாஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய தெஹ்ரான் ஆதரவு ஆயுதக் குழுக்களின் கூட்டணிக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு மத்தியில் ஈரான் உச்ச தலைவரின் இந்த கருத்து வந்துள்ளது. 1979 ஆம் ஆண்டு தெஹ்ரானில் உள்ள அமெரிக்க தூதரகம் கைப்பற்றப்பட்டதன் ஆண்டு நிறைவை முன்னிட…
-
- 0 replies
- 194 views
-
-
லெபனானிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ரொக்கட் தாக்குதல்களில் இஸ்ரேலில் 11 பேர் காயமடைந்துள்ளனர். ரொக்கட் வீடொன்றை தாக்கியது என இஸ்ரேலின் அவரசசேவை பிரிவினர் தெரிவித்துள்ளனர். நாங்கள் அந்த வீட்டிற்கு சென்று பார்த்தவேளை புழுதி மண்டலத்தையும் சிறுவர்கள் பெண்கள் அலறுவதையும் பார்த்தோம் என ரொக்கட் தாக்குதல் இடம்பெற்ற டிராவை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். எங்களால் அந்த வீட்டிலிருந்தவர்களை காப்பாற்ற முடிந்தது எவரும் கொல்லப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இஸ்ரேலிய தலைநகரின் புறநகர் பகுதியில் உள்ள இராணுவ தளமொன்றை இலக்குவைத்ததாக ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. ரொக்கட் வெடிப்புச்சிதறல்கள் காரணமாக 11 பேர் காயமடைந்துள்ளன…
-
- 0 replies
- 297 views
- 1 follower
-
-
19 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை! உக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு உதவியதாக 19 இந்திய தனியார் நிறுவனங்கள் மற்றும் 2 இந்தியர்கள் மீது அமெரிக்க பொருளாதார தடை விதித்துள்ளது. உக்ரேனில் ரஷ்யாவின் போர் முயற்சிகளுக்கு உதவியதற்காக 10க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 19 இந்திய நிறுவனங்கள் உட்பட சுமார் 400 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. 120க்கும் மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது வெளியுறவுத்துறை தடைகளை விதித்துள்ள அதே நேரத்தில் கருவூலத்துறை 270க்கும் மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது தடை விதித்துள்ளது. வர்த்தகத்துறை தடை பட்டியலில் 40 நிறுவனங்கள் உள்ளன என அமெரிக்க வ…
-
- 1 reply
- 287 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், பிரான்சிஸ் மாவோ, பெத்தனி பெல் பதவி, பிபிசி நியூஸ் ஸ்பெயின், கடந்த 50 ஆண்டுகளில் கண்டிராத பெருவெள்ளத்தை தற்போது சந்தித்து வருகிறது. கிழக்கு மாகாணமான வலென்சியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பகுதிகளில் பெய்த கன மழை காரணமாகப் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் குறைந்தது 95 பேர் இறந்துவிட்டனர், மேலும் பலர் காணாமல் போய்விட்டனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாலங்களும் கட்டடங்களும் அடித்துச் செல்லப்பட்டன. மக்கள் வீட்டுக் கூரைகளின் மீது ஏறியும், மரங்களைக் கட்டி அணைத்தும் உயிர்…
-
-
- 3 replies
- 444 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES மாவோ சேதுங் 1949இல் ஆட்சிக்கு வந்தபோது, சீனா வறுமையிலும் போரிலும் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. இன்று, கம்யூனிஸ்ட்களின் வெற்றிக்கு 75 ஆண்டுகளுக்குப் பிறகு, நாடு முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. இன்று சீனா ஒரு முன்னணி உலக சக்தியாக உள்ளது, உலகின் முன்னணி பொருளாதாரமாக மாறவும் விரும்புகிறது. வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ள, சீனாவின் ‘பொருளாதார அதிசயத்திற்கு’ காரணம் மாவோ சேதுங் அல்ல, மாறாக மற்றொரு கம்யூனிஸ்ட் தலைவரான டெங் ஷியோபிங். அவரால் முன்னெடுக்கப்பட்ட சீர்திருத்தம்தான் இதற்குக் காரணம். அது ‘சீர்திருத்தம் மற்றும் தாராளமயம்’ என்று அழைக்கப்பட்டது. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, அந்தச் சீர…
-
- 0 replies
- 653 views
- 1 follower
-
-
பிரித்தானியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு நிறுவனத்தில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பிஏஈ சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்தின் பகுதியொன்றில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ஐரோப்பாவின் மிகப்பெரிய பாதுகாப்பு நிறுவனங்களில் ஒன்று பிஏஈசிஸ்டம்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டனின் பரோ இன் பேர்னெஸ் என்ற பகுதியில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தில் பிரிட்டனிற்கான நீர்மூழ்கிகள் உருவாக்கப்படுகின்றன. அணுக்கசிவு ஆபத்தில்லை என அறிவித்துள்ள பொலிஸார் எனினும் அப்பகுதியில் வசிக்கும் மக்களை வீடுகளிற்குள் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். புகையை சுவாசித்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/197…
-
- 0 replies
- 278 views
- 1 follower
-
-
புதிய தலைவரை அறிவித்தது ஹெஸ்புல்லா! ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்ட சில வாரங்களுக்குப் பின்னர், ஈரானுடன் இணைந்த லெபனான் போராளிக் குழுவான ஹெஸ்புல்லா செவ்வாய்க்கிழமை (29) அதன் அடுத்த தலைவரை அறிவித்தது. AFP செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, நைம் காசிம் (Naim Qassem) ஹெஸ்புல்லாவின் புதிய தலைவராக இருப்பார். செப்டம்பர் மாத இறுதியில் பெய்ரூட்டில் இஸ்ரேலிய தாக்குதலால் நஸ்ரலே கொல்லப்பட்டார். லெபனான் மீதான இஸ்ரேலில் அண்மைய தாக்குதல்களில் பல மூத்த ஹெஸ்பொல்லா அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். https://athavannews.com/2024/1406353
-
-
- 26 replies
- 2.8k views
-
-
சத்தமாக பிரார்த்தனை செய்யவோ, குர்ஆன் ஓதவோ கூடாது: பெண்களுக்கு தலிபான் புதிய தடை October 31, 2024 ஆப்கானிதானில் பெண்கள் சத்தமாக பிரார்த்தனை செய்வதோ அல்லது மற்ற பெண்களின் முன்பு குர்ஆனை ஓதுவதோ தடைசெய்யப்பட்டுள்ளது என்று தலிபான் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் பெண்கள் தங்களின் குரல்களை உயர்த்துவதற்கும், வீட்டுக்கு வெளியே தங்களின் முகங்களை காட்டுவதற்கும் தடைவிதிக்கும் அந்நாட்டு அறநெறிச் சட்டங்களில் சமீபத்திய கட்டுப்பாடு இதுவாகும். அங்கு ஏற்கனவே பெண்கள் மூன்றாம் வகுப்புக்கு மேல் படிப்பதற்கும், பொது இடங்கள், வேலைக்குச் செல்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆப்கனின் கிழக்கு லோகர் பிராந்தியத்தில் அக்.27-ம் திகதி ஞாயிற்றுக்கிழமை …
-
- 0 replies
- 320 views
-
-
ரஷ்யாவுக்கு 10,000 இராணுவ வீரர்களை வடகொரிய அனுப்பியதாக குற்றச்சாட்டு! வடகொரியா சுமார் 10,000 இராணுவ வீரர்களை ரஷ்யாவிற்கு பயிற்சிக்காக அனுப்பியுள்ளதாக திங்கட்கிழமை (28) அமெரிக்கா தெரிவித்துள்ளது. பென்டகனின் அண்மைய மதிப்பீடு ரஷ்யாவில் 3,000 வட கொரிய பணியாளர்கள் என்ற அதன் முந்தைய மதிப்பீட்டை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது. உக்ரேனுடனான போரில் இவர்கள் கிழக்கு ரஷ்யாவில் நிலைநிறுத்தப்பட்டலாம், இது ரஷ்ய படைகளை வலுப்படுத்தும் என்றும் பென்டகன் கூறுகிறது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்த நடவடிக்கையை மிகவும் ஆபத்தானது என்று கூறியுள்ளார். இதேவேளை வடகொரிய வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர், ரஷ்யாவிற்கு வீரர்கள் அனுப்பப்படுவது பற்றிய ஊடக அறிக்கைகளை உறுதிப்பட…
-
-
- 13 replies
- 795 views
-
-
“ஜாம்ஷிட் ஷர்மாத்துக்கு( Jamshid Sharmahd)வழங்கப்பட்ட தீர்ப்பானது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று தயவு செய்து தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுங்கள்” என யேர்மனிய வெளியுறவு அமைச்சர் அன்னலெனா பேர்பொக் ஈரானைக் கேட்டிருந்தார். ஆனால் தான் வழங்கிய தீர்ப்பில் ஈரான் உறுதியாக இருந்தது. யேர்மனி,ஈரான் இரட்டைக் குடியுரிமை பெற்ற ஷர்மாத்துக்கு, ஈரான் இஸ்லாமியக் குடியரசு இப்போது மரண தண்டனையை நிறைவேற்றியிருக்கிறது. ஷர்மாத் அவரது ஏழு வயதில் தனது தந்தையுடன் யேர்மனிக்கு இடம் பெயர்ந்தவர். ஷர்மாத் சொந்தமாக ஒரு மென்பொருள் நிறுவனத்தை நிறுவி நடத்தி வந்திருக்கிறார். 2003 முதல் அமெரிக்காவில் வசித்துக் கொண்டிருந்தார். 2007இல் ஒரு சைபர் தாக்குதலை நடத்தினார் என்று ஈரான் ஷர்மாத் மேல் குற…
-
-
- 2 replies
- 1.3k views
-
-
ஈரான் மீதான தனது பதில்த் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல் இம்மாத ஆரம்பத்தில் தன்மீது நடத்தப்பட்ட 180 இற்கும் மேற்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கும், ஈரானின் கூலிகளான ஹமாஸ், ஹிஸ்புள்ளா, ஹூத்தீக்கள், ஈராக்கிலும் சிரியாவிலும் இயங்கும் இஸ்லாமியக் குழுக்கள் ஆகியவற்றின் ஊடாக தன்மீது ஈரான் நடத்திவரும் தாக்குதல்களுக்கும் பதிலடியாக இஸ்ரேல் சனி அதிகாலையிலிருந்து ஈரான் மீது தாக்குதலை மேற்கொண்டு வருகிறது
-
-
- 47 replies
- 3.1k views
- 1 follower
-
-
ஜி-7 கூட்டமைப்பில் உள்ள உலகின் மிக பெரிய பணக்கார நாடுகளின் தலைவர்கள் ஏற்கனவே முடக்கி வைக்கப்பட்டுள்ள ரஷ்யாவின் சொத்துக்களில் இருந்து 5000 கோடி டொலர்களை உக்ரைனுக்கு கொடுக்க முடி வெடுத்துள்ளனர். இத்தாலியின் நேபிள்ஸ் நகரில் நடைபெற்ற ஜி-7 நாடுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 7 நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியமும் அங்கம் வகிக்ககூடிய ஜி-7 நாடுகள் உக்ரைன் போரை நிறுத்துவதற்கு மாறாக மேலும் அதிகரிக்கவும் ரஷ்யாவின் கோபத்தை தூண்டும் வேலைகளையுமே செய்து வருகின்றன. 30 ஆயிரம் கோடி டொலர்களுக்கும் அதிகமான ரஷ்ய சொத்துக்களை மேற்கு நாடுகள் முடக்கி …
-
-
- 5 replies
- 836 views
- 1 follower
-