Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. புதுடெல்லி: மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்பட்ட தேர்வில் பாலிவுட் நடிகைகள் 4 பேரது பெயர்களை கொடுத்து இவர்களில் யார் உயரமானவர் என்று கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை எழுந்துள்ளது. மத்திய அமைச்சகங்களிலும், இதர மத்திய அரசு துறைகளிலும் பணியாளர்களை நியமிப்பதற்காக,ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் அண்மையில் எழுத்து தேர்வு ஒன்றை நடத்தியது. அதில் 92 வது கேள்வியாக பாலிவுட் நடிகைகள் பிரீத்தி ஜிந்தா, தீபிகா படுகோனே, கத்ரினா கைஃப், ஹுமா குரேஷி ஆகிய 4 பேரது பெயர்களை கொடுத்து இவர்களில் யார் உயரமானவர் என கேட்கப்பட்டிருந்தது. அதேப்போன்று காதலர் தினம் எந்த மாதம் கொண்டாடப்படுகிறது? என்ற மற்றொரு கேள்வியும் இடம்பெற்றிருந்தது. இந்த கேள்வியுடன் இந்த ஆண்டில் நடத்தப்பட்ட நாடாளு…

  2. இந்திய வெளிவிவகாரக் கொள்கை மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்டது, நிலைமையைப் புரிந்து கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் அதில் தலையீடு செய்யக் கூடாது என்று தாம் எதிர்பார்ப்பதாக, பாஜகவின் வெளிவிவகாரக் கொள்கைப் பிரிவு தேசிய அமைப்பாளரும், பாஜகவின் தேசிய நிறைவேற்று உறுப்பினருமான கலாநிதி சேசாத்ரி சாரி தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் அவர், மாநில அரசாங்கங்கள், அதில் தலையிடக் கூடாது என்று நாங்கள் பலமாக உணர்கிறோம். அவர்கள் ஆலோசனை வழங்கலாம், ஆனால் அதில் செல்வாக்கைச் செலுத்தக் கூடாது. தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள், தமது செல்வாக்கைப் பயன்படுத்தி, வெளிவிவகாரக் கொள்கை விவகாரத்தில், மத்திய அரசுக்கு அழுத்தங்களைக் கொடுத்துள்ளன. ஆனால், மோ…

  3. மருத்துவமனை, பள்ளிவாசல் போன்ற இடங்களும் குண்டுவீச்சிலிருந்து தப்பவில்லை காசாவில் இஸ்ரேல் தனது குண்டுவீச்சுக்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது, திங்கள் இரவு பள்ளிவாசல்கள், விளையாட்டு கூடங்கள் உட்பட எழுபதுக்கும் அதிகமான இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. காசா சென்ற தமது படைவீரர் ஒருவரைக் காணவில்லை என்பதை உறுதிசெய்த இஸ்ரேலிய இராணுவம், அவர் இறந்துவிட்டார் என்று தாம் நம்புவதாகத் தெரிவித்துள்ளது. இதுவரையில் இஸ்ரேலிய படைத்தரப்பில் 27 பேரும், இஸ்ரேலிய சிவிலியன்கள் 2 பேரும் இந்த மோதலில் கொல்லப்பட்டுள்ளனர்.கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதலுக்குள்ளாகி ஆறு சிப்பாய்கள் இறந்த கவச வாகனத்தில் இவரும் இருந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது. பாலஸ்தீனத் தரப்பில் கிட்டத்தட்ட 6…

    • 0 replies
    • 334 views
  4. ஈராக்கின் ஐஎஸ் ஐஎஸ் படையினர், ஈராக்கின் வடக்கு பகுதியில் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் கிறிஸ்தவர்களை அப்பகுதியிலிருந்து விரட்டிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதோடு 1800 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தையும் தீயிட்டு அழித்துள்ளனர். ஈராக்கில் உள்ள மொசூல் நகரத்தில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் குடும்பங்கள் குடும்பமாக பல ஆண்டுகளாக வாழ்ந்துவந்தனர். இந்நிலையில் மொசூல் நகரத்தை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த ஐ.எஸ்.ஐ.எஸ் படையினர், நகரத்தில் உள்ள முஸ்லிம் அல்லாத அனைவரும் 24 மணிநேரத்தில் முஸ்லிம்களாக மதம் மாற வேண்டும் மற்றும் கூடுதல் வரி ஒன்றையும் கட்ட வேண்டும் என்றும் இல்லை என்றால் கொலை செய்யப்படுவீர்கள் என்று அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது…

    • 2 replies
    • 2k views
  5. மலேசிய எம்.எச். 17 விமானத்தை சுட்டு வீழ்த்த பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பக் ஏவுகணை முறைமை கிழக்கு உக்ரேனிய நகரொன்றிலிருந்து ரஷ்யாவுக்கு இராணுவ டிரக் வண்டியொன்றில் கடத்தப்படுவதை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் அந்த வழியாக வாகனத்தில் சென்ற ஒருவரால் எடுக்கப்பட்டு இணையத்தளங்களில் வெளியிடப்பட்டதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்ய எல்லையிலுள்ள பிரதான வீதியில் சனிக்கிழமை இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு வந்த டிரக் வண்டியை இரு கிலோமீற்றர் பின் தொடர்ந்து குறிப்பிட்ட வாகன சாரதி படமாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இதையொத்த இரண்டாவது டிரக் வண்டி ஒன்றும் படமாக்கப்பட்டுள்ளது. http://virakesari.lk/articles/2014/07/22/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9…

    • 0 replies
    • 525 views
  6. பார்வையற்ற மாணவர்களை அடித்து துன்புறுத்திய பள்ளி முதல்வரை சரமாரியாக தாக்கிய பொதுமக்கள். ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பார்வையற்ற மாணவர்கள் பயிலும் பள்ளி ஒன்றில், அப்பள்ளியின் முதல்வர் மாணவர்களை தனது அறையில் அழைத்து அடித்து துன்புறுத்தியுள்ளார். இந்த காட்சி தொலைக்காட்சிகளில் வெளியானதும் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சி வெளியானதும், அப்பள்ளியின் முதல்வரையும், உதவியாளரையும் ஆந்திர காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணைக்கு காவல்நிலையம் அழைத்து வரப்பட்ட அவர்களை, அங்கு கூடியிருந்த பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர். பெரும் சிரமப்பட்டு பொதுமக்களின் பிடியில் இருந்து அவர்களை மீட்டு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். காக்கிநாடாவில் இந்…

  7. இஸ்ரேல், பாலஸ்தீனத்துக்கு இடையிலான போர்குறித்து நிலவும் தவறான கருத்துகளும், உண்மையும். இஸ்ரேலிய ராணுவம் காஸா பகுதியில் மீண்டும் ஊடுருவியதால் அப்பாவிகள் பலி எண்ணிக்கை மேலும் உயர்ந்துவருகிறது; இரு தரப்பிலிருந்தும் அரசியல்ரீதியிலான சாடல்கள் ஒரே மாதிரியாக ஒலிக்கின்றன. இருதரப்பினருக்கும் பொதுவாக, தவறான கருத்துகள் சில உள்ளன. அவற்றைப் போக்குவது நம் கடமை. கருத்து1: இப்போது நடப்பது இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹமாஸுக்கும் இடையிலான சண்டை அல்ல; நன்மைக் கும் - தீமைக்கும், சரியான கருத்துகளுக்கும் - தவறான கருத்துகளுக்கும் இடையிலான மோத லாகும். நம்மால் சும்மா இருக்கவும் முடியாது, சமரசம் செய்துவைக்கவும் முடியாது; வேறு வழியில்லை, எப்படியாவது நாம் செயல்பட்டே ஆக வேண்டும். நாம் நினைப்பதற்கு ம…

  8. 'இஸ்ரேலின் தாக்குதல்களில் இதுவரை 500க்கும் அதிக மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்' காசாவில் உடனடி போர்நிறுத்தத்துக்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ள நிலையிலும், அங்கு இஸ்ரேலின் விமான தாக்குதல்களும் தாங்கிப்படை ( tank) தாக்குதல்களும் தொடர்கின்றன. ஆயிரக்கணக்கான மக்களை வெளியேறும்படி அறிவிக்கப்பட்டுள்ள ஷஜாய்யா மற்றும் மகாஸி பிரதேசங்களில் இஸ்ரேலிய விமானங்கள் வட்டமிட்டு வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல்களில் 500க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசாவில் உள்ள பாலஸ்தீன சுகாதார அமைச்சு கூறுகின்றது.அங்கு பீரங்கித் தாக்குதல்களும் தொடங்கப்பட்டுள்ளதாக பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறினார். நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த மோதல்களில் தமது படைவீரர்கள் 13…

    • 0 replies
    • 268 views
  9. கொல்கத்தா: பா.ஜ.க. அரசுக்கு எதிராக பிரசாரம் தொடங்க உள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசுகையில், ''பா.ஜ.க.வினர் தேர்தலுக்கு முன்பு பல்வேறு வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்ததும் அப்படியே தலைகீழாகச் செய்து வருகின்றனர். ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திற்குள் பெட்ரோல், டீசல் மற்றும் ரயில் கட்டணத்தை உயர்த்திவிட்டனர். பா.ஜ.க. அரசின் இந்த செயல்பாடுகளைக் கண்டித்து விரைவில் பிரசாரம் தொடங்க இருக்கிறேன். மேற்கு வங்காளத்தில் இனவாத கட்சிக்கு இடம் கிடையாது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 2 தொகுதிகளை வென்ற பா.ஜ.க.வினர், அளவுக்கு அதிகமான பொய்களை பேசி …

  10. "முள்ளிவாய்க்கால் ஞாபகங்கள் மீண்டும் மனதை வதைக்கின்றன" தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- காஸாவில் காயம்பட்டவர்கள் மத்தியில் பணியாற்றும் பேராசிரியர் மாட்ஸ் கில்பேர்ட் தனது அனுபவங்கள் குறித்து இவ்வாறு சனல் 4 இற்கு எழுதியுள்ளார். கடந்த இரவு என்பது மிக பயங்கரமானது, காஸா மீது மேற்கொள்ளப்பட்டுள்ள தரைவழி ஊருடுவல் காரணமாக மிகப் பெருமளவானவர்கள் காயமடைந்துள்ளனர், அங்கவீனர்களாகி உள்ளனர், இறந்து கொண்டிருக்கின்றனர்- இவர்களில் எல்லா வகையான பாலாஸ்தீனியர்களும் உள்ளனர், சகல வயதினரும்--இவர்கள் அனைவரும் அப்பாவிகள் பொதுமக்கள். அம்புலன்ஸ்களிலும் மருத்துவமனைகளிலும் பணியாற்றும் அந்த மாமனிதர்கள் 24 மணிநேரமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் களைத்துப் போயுள்ளனர், சாதாரண மனிதாகள…

  11. சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில், மலேசிய தமிழ் நடிகை குடும்பத்துடன் பரிதாபமாக பலியாகி விட்டார். பிறந்த நாள் கொண்டாடிய 2 நாளில் மரணம் அவரை வந்து தழுவிய கொடுமை நேர்ந்துள்ளது. நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி 298 பேருடன் வந்து கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம்– எம்.எச்.17, உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள ஷக்தர்ஸ்க் என்ற இடத்தில் கடந்த 17–ந் தேதி சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் ஒருவர் மலேசிய தமிழ் நடிகை சுபா ஜெயா (வயது 38) என தெரிய வந்துள்ளது. இவர் கோலாலம்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். 31 வயதில் நடிக்க வந்தார். ‘ரிலேசன்ஷிப் ஸ்டேட்டஸ்’, ‘டோகாக்’ ஆகிய மலேசிய சினிமா படங்களில் ந…

  12. மலேஷிய விமானம் யுக்ரெய்னில் விழுந்து விபத்துக்குள்ளானதாக ஆரம்ப கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. அதில் 295 பயணிகள் இருந்தனர். யுக்ரெய்னுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான எல்லைப்பகுதியில் இந்த விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல். இந்த விமானம் ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூருக்கு வந்துகொண்டிருந்த வழியில் இந்த விபத்து நடந்திருக்கிறது. http://www.bbc.co.uk/tamil/global/2014/07/140717_ukrainemalaysiaflight.shtml

    • 34 replies
    • 2.9k views
  13. சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்: பலியான மலேசிய தமிழ் ஏர் ஹோஸ்டஸ் பிரமீளா ராஜேந்திரன். கோலாலம்பூர்: உக்ரைன்- ரஷ்ய எல்லைப் பகுதியில் புரட்சிப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணியாற்றிய 15 ஊழியர்களில் ஒருவர் தமிழ்ப் பெண் என்று தெரிய வந்துள்ளது. ஏஞ்செலின் பிரமீளா ராஜேந்திரன் என்ற அந்த 30 வயதுப் பெண் ஏர் ஹோஸ்டஸாக பணியாற்றியுள்ளார். அவரும் இந்த சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விமானப் பணிப்பெண்ணாக வேண்டும் என்ற கனவு நனவாகி மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் இணைந்து பணியாற்றியவர் பிரமீளா என்று அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்கக் கூறியுள்ளனர். சீனப் பத்திரிகை வெளியிட்டது. சீன மொழியில் வெளியாகும் மலேசிய நாளிதழ் சின் சியூ சுட்…

  14. வங்காள தேசத்தின் தலைநகரான டாக்காவில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 'ராணா பிளாசா' ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனத்தின் 8 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் என ஆயிரத்து 134 பேர் உடல் நசுங்கி பலியாகினர். சுமார் 2400 பேர் உடல் உறுப்புகள் சிதைந்து படுகாயமடைந்தனர். ஆயிரக்கணக்கான பிணங்களின் குடலை புரட்டும் துர்நாற்றத்தை மூன்று நாட்களாக சகித்துக் கொண்டு, இடிந்து விழுந்த கட்டிடத்தில் இருந்து வெளியே வர முடியாமல் போராடிய ஒரு பெண், தனது ஒரே குழந்தையை காப்பாற்றவாவது உயிர் பிழைத்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்தில் தனது ஒரு கையால் ரம்பத்தை எடுத்து, மிகப் பெரிய கல்தூணின் கீழ் சிக்கியிருந்த மற்றொரு கையை வெட்டி வீசி விட்டு தப்பி வந்த சோகக் கதை தற்…

  15. இடிபாடுகளுக்குள் இன்னும் சடலங்கள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது இஸ்ரேலிய படைநடவடிக்கை தொடங்கிய கடந்த 13 நாட்களில் நேற்றிரவு நடந்துள்ள மிக மோசமான ஷெல் தாக்குதல்களில், காசாவில் உள்ள ஒரு மாவட்டத்தில் மட்டும் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் கூறுகின்றன. கிழக்கு காசாவில் ஷெஜாய்யா பகுதியில் இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல்கள் கூறுகின்றன. சடலங்கள் வீதியில் வைக்கப்பட்டிருப்பதாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.மேலும் பலரின் சடலங்கள் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. கடுமையதான ஷெல் தாக்குதல்கள் காரணமாக பெரும்பாலான இடங்களை ஆம்பியூலன்ஸ் வண்டிகள் செல்ல முடியாமல் இருப்பதாகவும் கூறப்…

    • 0 replies
    • 415 views
  16. யுக்ரைனில் மலேசிய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டமை தொடர்பிலான முழுமையான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். விமானத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் தெளிவான தகவல்கள் வெளிவராத நிலையில் அங்கு முன்னெடுக்கபடும் விசாரணைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்குமென மோடி கடிதம் மூலம் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு உறுதியளித்துள்ளார். அத்துடன் நேற்று அனுப்பிய கடிதத்தினூடாக எம்.எச்.17 விமானத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமது இரங்கலையும் மோடி தெரிவித்துள்ளார். நெதர்லாந்து தலைநகர் அம்ஸ்டர்டமிலிருந்து கடந்த வியாழக்கிழமை மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு பயணித்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் யுக்ரைனின் கிழ…

  17. புதுடில்லி: சீனா, தன் ராணுவ வீரர்களுக்கு புதிதாக வழங்கியுள்ள வரைபடங்களில், அருணாச்சல பிரதேச மாநிலத்தை, தங்களுக்கு சொந்தமானதாக உரிமை கொண்டாடியுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நம் நாட்டின், வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தை, சீனா, தங்களுக்கு சொந்தமானது என, அவ்வப்போது உரிமை கொண்டாடி, சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. சில நேரங்களில், அருணாச்சல பிரதேசத்துக்குள், சீன விமானங்கள், ராணுவ வீரர்கள், அத்துமீறி நுழைவதும் உண்டு. இந்திய அதிகாரிகள், சீன அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி, பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பர். இந்நிலையில், எல்லை பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள, தங்கள் வீரர்கள் அனைவருக்கும், சீனாவின் வரைபடம் ஒன்றை, அந்த நாட்டு அரசு வழங்கியுள்ளது. பாதுக…

    • 2 replies
    • 582 views
  18. பாக்தாத்தில் 5 இடங்களில் கார் குண்டு தாக்குதல்: 26 பேர் சாவு பிரதி ஈராக்கில் முக்கிய நகரங்களைப் பிடித்து தனி நாடாக அறிவித்துள்ள ஐ.எஸ். போராளிகள், ராணுவத்திற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றனர். பாக்தாத்தை நோக்கி முன்னேறி வரும் அவர்களை ஈராக் ராணுவமும், ஷியா போராளிகளும் இணைந்து விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இழந்த பகுதிகளை மீட்பதற்கும் ராணுவம் கடுமையாக சண்டையிட்டு வருகிறது. அதேசமயம் இனவாத தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. இந்நிலையில், பாக்தாத்தில் ஷியா முஸ்லிம்களை குறிவைத்து 5 இடங்களில் இன்று தற்கொலைப் படையினர் கார் குண்டுகளை வெடிக்கச் செய்தனர். முதல் குண்டு அபு தஷீர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடியில் வெடித்தது. இத…

    • 0 replies
    • 417 views
  19. பழமையான தமிழ் மொழியின் அடிப்படையில், வளமான கலாச்சாரப் பாரம்பரியம் கொண்ட தமிழகத்தில் அதிகாரபூர்வமாக சமஸ்கிருத வாரம் கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது எனத் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஆகஸ்ட் ஏழாம் தேதி முதல் பதிமூன்றாம் தேதிவரை, சமஸ்கிருத வாரத்தை எல்லா மாநிலங்களிலும் கொண்டாட வேண்டுமென மத்தியப் பள்ளிக் கல்வித் துறையின் செயலர் இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் அந்தக் கடிதத்தில், “தமிழகத்தில் தீவிரமான சமூக நீதி இயக்கமும் மொழி இயக்கமும் நடைபெற்றுள்ளது. ஆகவே அதிகாரபூர்வமாக சமஸ்கிருத வாரத்தைத் தமிழகத்தில் கொண்…

  20. காஸா மீதான தரைவழி தாக்குதலுக்குத் தயாராகும்படி இஸ்ரேல் பிரதமர் உத்தரவு! - ஒபாமா எச்சரிக்கை [saturday 2014-07-19 17:00] காஸா மீதான தரைவழி தாக்குதலை விரிவுபடுத்த தயாராகும்படி ராணுவத்துக்கு இஸ்ரேல் பிரதமர் உத்தரவிட்டுள்ளார். இஸ்ரேல் தாக்குதல்களில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 314 ஆகி உள்ளது. இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதல்களில் 48 ஹமாஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 21 பேர் கைது செய்யப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் கூறினார். இதற்கிடையே காஸா நிலவரம் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ, காஸாமுனை மீதான தரைவழி தாக்குதலை குறிப்…

  21. உக்ரைன் வான் பரப்பில் சுட்டு வீழ்த்தப் பட்ட மலேசிய ஜெட் பற்றிய முக்கிய தகவல்கள்! [Friday 2014-07-18 23:00] மலேசியன் ஏர்லைன்ஸின் MH 17 விமானம் அம்ஸ்டெர்டாமில் இருந்து கோலாலம்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது நேற்று வியாழக்கிழமை மாலை உக்ரைன் ரஷ்ய எல்லையில் இருந்து 40 Km தொலைவில் டொனெட்ஸ்க் மாவட்டத்திலுள்ள ஹ்ராபோவே வான் பரப்பில் ஏவுகணையால் தாக்கி அழிக்கப் பட்டது. இதன்போது விமானத்தில் பயணித்த அனைத்து 283 பயணிகளும் 15 விமானப் பணியாளர்களும் உட்பட 298 பேர் கொல்லப் பட்டனர். கிழக்கு உக்ரைனின் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் தரையில் இருந்து விமானம் தாக்கும் ஏவுகணையால் இவ்விமானம் தாக்கி அழிக்கப் பட்டதாக அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செ…

  22. வாஷிங்டன்: பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் தனது நிலையை ரஷ்யா மாற்றிக்கொள்ளாவிட்டால், அதை பார்த்துக்கொண்டு அமெரிக்கா சும்மா இருக்காது என அதிபர் ஒபாமா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் உக்ரைன் எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் 298 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, மலேசிய விமானம் ஏவுகணைகளைக் கொண்டு சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்த விமான விபத்தில் அமெரிக்கர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். விமான விபத்து தொடர்பாக ரஷ்யா, உக்ரைன் மற்றும் நெதர்லாந்து நாட்டு தலைவர்களுடன் விவா…

  23. சிரிய இராணுவம் ஐ.எஸ். போராளிகள் மோதல் 90 இராணுவ வீரர்கள் பலி: - எரிவாயு வயலை கைப்பற்றினர் போராளிகள் [Friday 2014-07-18 21:00] சிரியாவில் முன்னேறி வரும் ஐ.எஸ். போராளிகள் நேற்று எரிவாயு வயலை கைப்பற்றினர். அப்போது நடந்த சண்டையில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 90 பேரை சுட்டுக்கொன்றனர். அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளைப் பிடித்து இஸ்லாமிய நாட்டை உருவாக்கியுள்ள ஐ.எஸ். போராளிகள் குழு, தொடர்ந்து அதிபர் ஆசாத்தின் படைகளுக்கு சவாலாக விளங்குகின்றனர். அவர்களிடம் இழந்த பகுதிகளை மீட்பதற்காக சிரியா விமான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள ஷார் எரிவாயு வயலை ஆயுதங்களுடன் சுற்றி வளைத்த போராளிகள் குழு, அங்கு பாது…

  24. உக்ரைன் விமானம் என நினைத்து தாக்கினேன்: - ரஷ்ய ஆதரவுப்படை தலைவர் [Friday 2014-07-18 11:00] மலேசிய விமானத்தை உக்ரைன் விமானப்படை விமானம் என தவறுதலாக நினைத்து தான் சுட்டுவிட்டதாக ரஷ்ய ராணுவ ஆதரவுப் படையின் தலைவரான இகோர் ஸ்ட்ரெல்கோவ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து 295 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு வியாழக்கிழமை மதியம் கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 உக்ரைனில் ரஷ்ய எல்லை அருகே பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 295 பேரும் உடல் கருகி பலியாகினர். இந்நிலையில் ரஷ்ய ஆதரவுப்படை தீவிரவாதிகளின் தலைவரான இகோர் ஸ்ட்ரெல்கோவ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, உக்ரைன் விமானப்ப…

  25. https://www.facebook.com/photo.php?fbid=465419050262262&set=a.121009184703252.21333.100003825135026&type=1&theater நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய நோக்கி புறப்பட்ட MH17 விமானம் உக்ரேய்ன் வான் பரப்பில் வைத்து சுட்டுவீழ்த்தப்பட்டதால் அவ்விமானத்தில் பயணித்த 295 பேரும் நேற்று உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குறித்த விமானம் புறப்பட முன்னர் அதன் பயணிகளில் ஒருவரான நெதர்லாந்து நாட்டுக் காரர் Cor Pan என்பவர், ஆம்ஸ்டர்டாம் சிபோல் விமானநிலையத்தில் வைத்து அவ்விமானத்தை புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். 'ஒருவேளை இவ்விமானம் காணாமல் போனால், விமானத்தின் தோற்றம் இப்படித்தான் இருக்கும் என்பதை நினைவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.