Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இந்திய இராணுவம் ஒரு கொலைகார இராணுவம், இந்திய நீதி அமைப்புகள் அநீதியானது என்பதை காஷ்மீர் மக்கள் இரத்தமும் சதையுமாய் உணர்ந்திருக்கிறார்கள். 2000-ம் ஆண்டு மார்ச் மாதம். மறக்க முடியாத சில நிகழ்வுகளை உள்ளடக்கிய மாதம் அது. சுமார் 22 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்த மாதமும் கூட. துணைக்கண்ட பிரதேசத்தில் பனிப்போர் காலத்திய புவிசார் அரசியல் கூட்டுகளில் ஏற்பட்டிருந்த பாரிய மாற்றங்களை வெளிப்படையாக அறிவித்தது அப்போதைய ஜனாதிபதி பில் கிளிண்டனின் இந்திய வருகை. பின்னர் ஏற்படவிருக்கும் அணுவுலை ஒப்பந்தங்கள் உள்ளிட்டு பல்வேறு இந்திய – அமெரிக்க அடிமை ஒப்பந்தங்களுக்கு இந்த வருகை கட்டியம் கூறியது. இந்திய அடிமைகளுக்கு அருள் பாலிக்க வந்த அமெரிக்க…

  2. பனிப்புயலில் சிக்கி தவிக்கும் அமெரிக்கா [saturday, 2014-02-15 11:42:44] அமெரிக்காவில் வடகிழக்கு மாகாணங்கள் பனிப்புயலில் சிக்கி தவித்து வருகின்றன. ஜார்ஜியா, தெற்கு கரோலினா மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவின் காரணமாக இயல்பு வாழ்க்கை முடங்கிப்போய்விட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் மின் இணைப்பு துண்டிப்பால் அவதியுற்று வருகின்றனர். வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், தலைநகர் வாஷிங்டன் முதல் கனெக்டிகட் வரை பல்வேறு நகரங்கள் பனிப்புயலின் பிடியில் நேற்று சிக்கின. இந்த நகரங்களில் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. வடகிழக்கு மாகாணங்களில் தொடர்ந்து பனிப்பொழிவு இருக்கும் என வானிலை மைய வட்டாரங்கள் கூறுகின்றன. கடலோர நியூ இங்கிலாந்தில் மழையும், ஆலங்கட்டி மழையும் பெய்யு…

  3. இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் எம்.பிக்கள் மீது மிளகாய் தூள் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று சுஷில் குமார் ஷிண்டே தெலுங்கானா மசோதாவை தாக்கல் செய்து கொண்டிருந்தார். அதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்த ஆந்திராவைச் சேர்ந்த எம்.பி. ராஜ்கோபால், தான் மறைத்து வைத்திருந்த மிளகாய் தூள் ஸ்பிரேயை எம்.பி.க்கள் மீது தெளித்து தாக்கியுள்ளார். இதனால் மக்களவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மிளகாய் பொடி பரவியதால் அங்கிருந்த எம்.பி.க்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. உடனே நாடாளுமன்ற மருத்துவர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் எம்.பி.க்களுக்கு …

    • 7 replies
    • 668 views
  4. அஹமதாபாத்: நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் உள்ள டீகடைக்காரர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துரையாடும் நிகழ்ச்சியை நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். பா.ஜ.க. பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடியை, டீ விற்றவர், நாட்டை ஆள முடியாது, அவருக்கு வேண்டுமானால் டீக்கடை வைத்து தருகிறோம் என காங்கிரசார் விமர்சனம் செய்து வந்தனர். இதையடுத்து, நரேந்திர மோடி நாட்டிலுள்ள டீக்கடைக்காரர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்து வந்தனர். அதன்படி, நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் உள்ள டீக்கடைக்காரர்களிடம், டி.டி.ஹெச். தொழில்நுட்பத்தின் மூலம் கலந்துரையாடும் நிகழ்ச்சியை, குஜராத் மாநிலம், அஹமதாபாத்தில் மோடி இன்று தொடங்கி வைத்தார். டீ கு…

  5. பொஸ்னியாவில் தேசிய இனமுரண்பாடுகள் அழிந்து வர்க்கப் போராட்டம் ஆரம்பமானது துல்ஸா ஆர்ப்பாட்டம் பொஸ்னியாவில்(BiH) 1990 களில் தேசியவாதமும் இனமோதல்களும் உச்சமடைந்திருந்தது. மனித உரிமை என்ற தலையங்கத்தில் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் தலையிட்டு அந்த நாட்டை ஒட்டச் சுரண்டின. பொஸ்னியாவின் பணக்காரர்கள் தேசியத்தின் பெயரால் மக்களைச் சுரண்டினர். ஐ.எம்.எப் ஐயும் உலக வங்கியையும் அழைத்துவந்து நாட்டை அடகுவைத்தனர். இரண்டு தன்னாட்சி கொண்ட பிரதேசங்களை இணைத்து உருவாக்கப்பட்ட பொஸ்னியா வழமையான முதலாளித்துவ அரசுகளைப் போன்று ஊழல், எதேச்சதிகாரம் போன்ற பண்புகளைக் கொண்டிருந்தது. இன முரண்பாடு ஆட்சியாளர்களதும் பணக்காரர்களதும் சட்டைப்பைகளை நிரப்பிக்கொள்ள உதவியது. எஞ்சியவற்றை ஐ.எம்.எப் உம் உலகவ…

  6. மன்மோகன்சிங்கிற்கு ஒபாமா அளித்த காஸ்ட்லி விருந்து! - செலவு 9.3 கோடி ரூபாவாம். [Thursday, 2014-02-13 18:47:35] இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் 2009ம் ஆண்டு அமெரிக்கா சென்றிருந்த போது, அவரை கௌரவிப்பதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா நவம்பர் 24ம் தேதி பெரும் செலவில் விருந்து ஒன்றை அளித்துள்ளார். இதற்கு செலவிடப்பட்ட தொகை இந்திய மதிப்பில் ரூ.9.3 கோடியாகும். இரவு உணவிற்காக மட்டும் ரூ.3.4 கோடி செலவிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு தலைவர்களுக்கு ஒபாமா அளித்த விருந்துகளில் இதுதான் காஸ்ட்லியான விருந்தாகும். இதன் பின்னர் 2010ல் மெக்சிகன் அதிபருக்கு ரூ.3.3 கோடிக்கும், 2011ல் சீன அதிபருக்கு ரூ.2.4 கோடிக்கும் ஒபாமா விருந்து அளித்துள்ளது தெரியவந்துள்ளது. htt…

  7. பாஜக தேர்தல் அறிக்கையில் ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான ஷரத்துகளை சேர்க்க அக்கட்சியின் தமிழக நிர்வாகிகள் முயற்சித்து வருகின்றனர். இலங்கை மீது போர் தொடுத்தாவது ஈழப் பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என்ற ரீதியில் தேர்தல் அறிக்கை இருக்கலாமா என்று ஈழத் தமிழ் தலைவர் ஒருவரிடம் பாஜக தலைவர்கள் ஆலோசனை கேட்டதாகவும் சொல்லப்படுகிறது. தேர்தல் தேதியும் கூட்டணி களும் இன்னும் இறுதியாகவில்லை என்றாலும் தேர்தல் அறிக்கைகளை தயாரிக்கும் வேலைகளில் அனைத்துக் கட்சிகளும் மும் முரமாய் இருக்கின்றன. பாஜக தரப்பிலும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஒரு குழு ஈடுபட்டுள்ளது. பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி, உள்நாட்டுப் பாதுகாப்பு, அண்டை நாடுகளுடனான உறவு, மாநில அரசுகளுக்கு உரிய முக்கியத்து…

  8. சோனியாகாந்தியுடன் கனிமொழி பேச்சுவார்த்தை [Thursday, 2014-02-13 07:55:34] பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணியை இறுதி செய்ய தமிழக அரசியல் கட்சிகளும், தேசிய கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. அ.தி.மு.க. தனது கூட்டணிகளுடன் தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், தி.மு.க. தனது கூட்டணியை பலப்படுத்தும் பணியை விரைவு படுத்தியுள்ளது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவாக இருந்த தி.மு.க. எம்.பி., கவிஞர் கனிமொழியை, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி டெலிபோனில் தொடர்பு கொண்டு, உடல்நிலை குறித்து விசாரித்தார். இந்தநிலையில் உடல்நிலை சீரடைந்ததை தொடர்ந்து பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக கவிஞர் கனிமொழி எம்.பி. டெல்லி சென்றார். பாராளுமன்…

  9. டூத் பேஸ்ட் குண்டுகள் மூலம் விமானங்களை தகர்க்க சதி! – அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை. [Thursday, 2014-02-06 17:34:59] குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்காக ரஷ்யா செல்லும் விமானங்களைத் தகர்க்க வெடிபொருள் துகள்கள் கொண்ட டூத் பேஸ்ட்களை தீவிரவாதிகள் பயன்படுத்தலாம் என்று அமெரிக்கா உள்ளிட்ட சில வெளிநாட்டு விமானங்களுக்கு அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. வெடிக்கும் தன்மை கொண்ட இந்த டூத் பேஸ்ட் ட்யூப்கள் மூலம் விபத்துக்களை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=103071&category=WorldNews&language=tamil

  10. ரஷ்யாவுக்கு வேவுபார்த்த முன்னாள் அமெரிக்க கடற்படை வீரருக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை! [Wednesday, 2014-02-12 18:45:06] ரஷ்யாவுக்காக வேவு பார்த்த அமெரிக்க கடற்படை முன்னாள் வீரர் ராபர்ட் ஹாப்மேனுக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க கடற்படையின் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றிய ஹாப்மேன் மீது எப்.பி.ஐ. புலனாய்வு அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. கடற்படை நீர்மூழ்கிக் கப்பலில் எலெக்ட்ரானிக் சென்சார் தகவல்களை சேகரிக்கும் முக்கிய பொறுப்பில் இருந்த அவர், எதிரி நாடுகளுக்கு தகவல்களை அளித்ததாக சந்தேகிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ரஷ்ய உளவாளிகள் போன்று நடித்து ராபர்ட் ஹாப்மேனை அணுகிய எப்.பி.ஐ. அதிகாரிகள் சில முக்கிய தகவல்களைக் கோரினர். …

  11. நாடாளுமன்ற அமளி: இதயத்தில் ரத்தம் வடிவதாக மன்மோகன் சிங் ஆதங்கம்! புதுடெல்லி: தெலங்கானா பிரச்னை காரணமாக, நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் நடந்துகொள்வதை பார்க்கும்போது தனது இதயத்திலிருந்து ரத்தம் வடிவதாக பிரதமர் மன்மோகன் சிங் ஆதங்கத்துடன் கூறியுள்ளார். நடப்பு நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால், தமிழக மீனவர் பிரச்னை மற்றும் தெலங்கானா விவகாரத்தால் ஏற்பட்ட அமளியால் இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இன்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஐதே பிரச்னை காரணமாக கடும் அமளி நிலவியது. ஆந்திர மாநில எம்.பி.க்களின் கடும் கூச்சல் குழப்பங்களுக்கு இடையேதான் ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜூன் கார்கே, மக்களவையில் இன்று ரயில்வே இடைக்…

  12. போர்மியூலா வன் காரோட்டத்தில் முன்னாள் உலக சம்பியனான மைக்கல் ஷூமாக்கரை கோமா நிலையிலிருந்து விழித்தெழச் செய்வதற்காக, அவரின் மனைவி தினமும் பல மணித்தியாலங்கள் அவருக்கு அருகிலிருந்து உரையாடி வருகிறார். 45 வயதான மைக்கல் ஷூமாக்கர் கடந்த டிசெம்பர் 29 ஆம் திகதி பிரான்ஸில் பனிச்சறுக்கலில் ஈடுபட்டபோது விபத்துக்குள்ளானதிலிருந்து பிரான்ஸிலுள்ள கிறேனோபிள் வைத்தியசாலையில் செயற்கை கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை கோமாவிலிருந்து விழித்தெழச் செய்வதற்கான நடவடிக்கைகளை மருத்துவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக, அவரை கோமா நிலையில் வைத்திருப்பதற்கு செலுத்தப்பட்ட மருந்தின் அளவை படிப்படியாக மருத்துவர்கள் குறைத்து வருகின்றனர். கடந்த மாத இறுதியில் இந்நடவடிக்கை ஆரம்பி…

  13. புதுடெல்லி/பாட்னா: பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஒரு மரண வியாபாரி என்று ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கடுமையாக தாக்கி உள்ளார். மோடியை கடுமையாக எதிர்க்கக்கூடியவரான லாலு, பீகாரில் இழந்துவிட்ட தனது அரசியல் செல்வாக்கை மீட்டெடுக்க போராடி வருகிறார். இந்நிலையில் வரும் மார்ச் 3 ஆம் தேதியன்று முஷாஃபர்பூரில் மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்வதில் பா.ஜனதாவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக அவர்கள் 3 இடங்களை தேர்வு செய்து, அதில் ஒரு இடத்தை தங்களுக்கு கூட்டம் நடத்த ஒதுக்குமாறு மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்திருந்தனர். இந்நிலையில் தற்போது லாலு கட்சியினர் அதே முஷாஃபர்பூரில், பா.ஜனதா குறிப்பிட்ட 3 இடங்களில் ஒன்றை தங்கள…

  14. சிபிஐ கூடுதல் இயக்குனராக தமிழக பெண் ஐபிஎஸ் அதிகாரி அர்ச்சனா நியமனம்! [saturday, 2014-02-08 19:01:34] மத்திய புலனாய்வு துறை (சி.பி.ஐ.) கூடுதல் இயக்குனராக தமிழக பெண் ஐபிஎஸ் அதிகாரிஅர்ச்சனா ராமசுந்தரம் நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழ்நாடு அரசு சீருடைபணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக, டி.ஜி.பி. அந்தஸ்தில் பணியாற்றி வருபவர் அர்ச்சனா ராமசுந்தரம். இவர் மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டு, இந்த பொறுப்பை ஏற்கும் முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை தமிழ்நாட்டுக்கும், தமிழக காவல்துறைக்கும் கொண்டு வந்துள்ளார். 1980ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக பொறுப்பேற்ற அர்ச்சனா ராமசுந்தரம் மதுரையில் உதவி கண்காணிப்பாளராக பணியை தொடங்கி, நீலகிரி மாவட்ட எஸ்.பி., வேலூர் டி.ஐ.ஜி,உட்பட தமிழக …

    • 4 replies
    • 1.3k views
  15. அல்ஜீரியாவில் விமான விபத்து: இராணுவ வீரர்கள் உட்பட 100 பேர் பலி! [Wednesday, 2014-02-12 12:30:45] அல்ஜீரியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஆம் எல்போவாகி மாகாணத்தில் ராணுவ விமானம் ஒன்று மலையில் மோதி வெடித்து சிதறியது. இதில், விமானத்தில் இருந்த அனைவரும், அதாவது சுமார் நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த விமானத்தில் ராணுவ வீரர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பயணம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கான்ஸ்டன்டைன்-எல் போவாகி இடையே சென்றபோது தரையில் உள்ள கட்டுப்பாட்டு நிலையத்துடன் இந்த விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் விபத்தில் சிக்கியதாக தகவல் வந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவும், ஆம்புலன்சு…

  16. தேம்ஸ் நதியில் வெள்ளப்பெருக்கு - தண்ணீரில் மிதக்கும் இங்கிலாந்து நகரங்கள்! [Tuesday, 2014-02-11 18:27:14] இங்கிலாந்தில் பெய்யும் கனமழையால் தேம்ஸ் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் லண்டன் அருகே வெள்ளம் புகுந்தது. இங்கிலாந்தில் தற்போது வறண்ட வானிலை நிலவுகிறது. இருந்தாலும் நாட்டின் பல பகுதிகளில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.இதனால் இங்கிலாந்தின் மிகப்பெரிய தேம்ஸ் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கரையோரம் இருக்கும் கிராம மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளப்பெருக்கு தொடர்ந்து அதிகரித்து வருவதால் தேம்ஸ் நதியின் சில கரைகள் உடைந்துவிட்டன. இதனால் லண்டன் அருகேயுள்ள பெர்க்ஷர…

  17. நிர்வாணக்கோலத்தில் மோடிக்கு ஆதரவு தேடும் மேக்னா பட்டேல்! – பாஜக அதிர்ச்சி. [Tuesday, 2014-02-11 18:05:18] பா.ஜ.க.வின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திரமோடியின் புகைப்படத்துடன் அவருக்கு வாக்கு சேகரிப்பது போல் வெளியாகியுள்ள மும்பை மாடல் அழகி மேக்னா பட்டேலின் நிர்வாண புகைப்படங்கள் பா.ஜ.க.வினரிடையே அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. இணையதளங்களில் தற்போது பரபரப்பாகவும், மின்னல் வேகத்திலும் பரவி வரும் இந்த சர்ச்சைக்குரிய புகைப்படம் பற்றி கருத்து தெரிவித்த மகாராஷ்டிர மாநில பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் மாதவ் பந்தாரி, ‘மோடிக்கு பலர் ஆதரவு திரட்டுவதை நாங்கள் வரவேற்கிறோம். எனினும், இதைப்போன்ற ஆபாசமான அணுகுமுறைகள் ஏற்கத் தக்கதல்ல. சில நிமிடங்களுக்குள் பிரபலமட…

  18. போர்மியூலா வன் காரோட்டத்தில் முன்னாள் உலக சம்பியனான மைக்கல் ஷூமாக்கர் மரணமடைந்துவிட்டதாக வெளியான தகவல்களை அவருக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலை அதிகாரிகள் மறுத்துள்ளனர். 45 வயதான மைக்கல் ஷூமாக்கர் கடந்த டிசெம்பர் 29 ஆம் திகதி பிரான்ஸில் பனிச்சறுக்கலில் ஈடுபட்டபோது விபத்துக்குள்ளானதிலிருந்து பிரான்ஸிலுள்ள கிறேனோபிள் வைத்தியசாலையில் செயற்கை கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் மரணமடைந்துவிட்டதாக சமூக வலைத்தளங்கள் மூலம் தகவல்கள் பரவியிருந்தன. ஆனால், மைக்கல் ஷூமாக்கர் உயிருடன் உள்ளதாகவும் அவரை கோமாவிலிருந்து மீட்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கிறேனோபிள் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். - See more at: http://www.metronews.…

  19. சவூதி அரேபியாவின் மதீனா நகரில் யாததிரிகர்கள் தங்கியிருந்த ஹோட்டலொன்றில் நேற்றுமுன்தினம் தீப்பற்றியதால் 15 பேர் உயிரிழந்ததுடன் 130பேர் காயமடைந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஷ்ரக் அல் மதீனா எனும் ஹோட்டலில் சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் தீப்பற்றியதாகவும் இறந்தவர்களில் எகிப்து, துருக்கி உட்பட வௌ; வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவதாகவும் மதீனா ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. அதேவேளை இறந்தவர்களில் பலர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். - See more at: http://www.metronews.lk/article.php?category=world&news=4169#sthash.T2mES6mm.dpuf

  20. காங்கிரஸ் வெற்றி பெற்றால் பிரதமர் பதவியை ஏற்க தயார் - ராகுல் காந்தி [saturday, 2014-02-08 08:08:05] பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைத்து, காங்கிரஸ் எம்.பி.க்கள் தன்னை பிரதமர் பதவிக்கு தேர்வு செய்தால், பிரதமர் பதவியை ஏற்க தயார் என்று ராகுல் காந்தி கூறினார். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில், அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதில் அளித்தார். அவர் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியில் நான் ஒரு சிப்பாய். இதை சமீபத…

    • 7 replies
    • 446 views
  21. மதுரை, முத்துராமலிங்க தேவரின் முக்கிய கொள்கையான காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைவதற்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்று, முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறினார். பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவித்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா விழாவில் பேசியதாவது:– தேவரின் பொன்மொழிகள் ‘‘இங்கு பெருந்திரளாக கூடியுள்ள சகோதர சகோதரிகளே கழக உடன்பிறப்புகளே உங்கள் அனைவருக்கும் எனது அன்புகலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய தினம் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் திருவுருவ சிலைக்கு 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை அனைத்திந்திய அ.தி.மு.க. சார்பில் அணிவித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரு கண்களாக கொண்டு செயல்பட்ட தேவர் திருமக…

  22. நரேந்திர மோடி வரலாறு தெரியாமல் ஆட்சி நடத்துகிறார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு [sunday, 2014-02-09 12:00:58] பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வரலாறு தெரியாமல் குஜராத்தில் ஆட்சி நடத்துவதாகவும், அவர் வரலாற்றை சரியாக படிக்கவில்லை என்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக தாக்கியுள்ளார். மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் பர்தோலியில் நேற்று மதியம் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையில் இவ்வாறு கூறிய அவர், மகாத்மா காந்தி, வல்லபாய் பட்டேல் ஆகியோரை பற்றி குஜராத் பா.ஜனதா தலைவர்களுக்கு எதுவுமே தெரியாது என்றும், ஆர்.எஸ்.எஸ்.ஸின் சித்தாந்தம்தான் காந்தி கொலைக்கு காரணம் என்றும், ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இந்த நாட்டை அழிக்கும் விஷம் போன்றது எ…

  23. புதுடில்லி: டில்லி மாநில, முன்னாள் முதல்வர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, ஷீலா தீட்ஷித் மீது, காமன்வெல்த் விளையாட்டு முறைகேடு தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு துறைக்கு, ஆவணங்களை அனுப்பியுள்ள, "ஆம் ஆத்மி' கட்சி, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு வற்புறுத்தியுள்ளது. டில்லியில், 2010ல் நடந்த, காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் போது, பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக, காங்கிரஸ், எம்.பி., சுரேஷ் கல்மாடி, ஷீலா தீட்ஷித் உட்பட, பலர் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இது குறித்து விசாரிக்க, பிரதமர், மன்மோகன் சிங் உத்தரவின் படி, ஷாங்லு கமிட்டி விசாரணை நடத்தி, ஷீலா மற்றும் அப்போதைய லெப்டினன்ட் கவர்னர், தேஜிந்தர் கன்னா ஆகியோர் மீது, பல குற்றச்சாட்டுகளை சுமத்தியது. அது தொடர்பான ஆதாரங்க…

  24. துருக்கி சென்ற விமானத்தை ரஷ்யாவுக்கு கடத்த மேற்கொண்ட முயற்சி முறியடிப்பு! [saturday, 2014-02-08 19:14:58] உக்ரைனில் இருந்து துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லுக்கு ஒரு பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. அதில் 110 பயணிகளும், விமான சிப்பந்திகளும் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது 45 வயது மதிக்கதக்க பயணி ஒருவர் எழுந்தார். அவர் தான் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், விமானத்தை குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறும் ரஷியாவின் சோஷி நகருக்கு ஓட்டும் படியும் மிரட்டல் விடுத்தான்.இந்த தகவலை காக் பிட் பகுதிக்கு சென்று விமானிகளிடம் கூறினான். இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. மாறாக அந்த கடத்தல்காரனிடம் தந்திரமாக நைசாக…

  25. உலகின் முதனிலை கணனி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து பில்கேட்ஸ் விலகிக்கொண்டார். உலகச் செல்வந்தர்களில் முன்னணி வகித்து வரும் பில் கேட்ஸ் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகர் என்பது குறிப்பிடத்தக்கது. பணிப்பாளர்களில் ஒருவரான ஜோன் தொம்பசன் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பணிப்பாளர் பதவியிலிருந்து விலகிக் கொண்ட பில் கேட்ஸ், நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசகராக தொடர்ந்தும் பணியாற்றுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் கடமையாற்றுவார் என குறிப்பிடப்படுகிறது. இதேவேளை, இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட சத்யா நடெல்லா மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக நியமிக்க…

    • 8 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.