Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. 20 JUN, 2024 | 10:15 AM புதுடெல்லி: கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் நினைவாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில்மௌன மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை கண்டித்து இந்தியா பதிலடி கொடுத்தது. கடந்த ஆண்டு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ளகுருத்வாரா அருகே மர்ம நபர் களால் காலிஸ்தான் தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக இந்தியா மீது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். ஆனால் இந்த குற்றச்சாட்டு உள்நோக்கம் கொண்டது என்றும் அபத்தம் என்றும் இந்தியா மறுத்துவிட்டது. இதனால் இந்தியா-கனடா நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில…

  2. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜூனா மூன் பதவி, பிபிசி கொரியா 18 ஜூன் 2024 மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் வட கொரிய பயணம் செவ்வாயன்று திட்டமிடப்பட்டுள்ளது. இது பல மாத ஊகங்களுக்குப் பிறகு ரஷ்ய அரசாங்கத்தால் உறுதிப்படுத்தப்பட்டது. புதின் கொரிய நகரமான பியாங்யாங்குக்கு செல்லவிருக்கிறார். கடந்த 24 ஆண்டுகளில் புதின், வடகொரியாவில் கால் பதிப்பது இதுவே முதல் முறையாகும். கடந்த 2000ஆம் ஆண்டு வடகொரியத் தலைவர் `கிம் ஜாங் இல்’ ஆட்சியில் இருந்த போது அவர் அங்கு சென்றிருந்தார். கடந்த ஆண்டு செப்டம்பரில் ரஷ்யாவின் வோஸ்டோச்னி காஸ்மோட்ரோமில் (Vostochny Cosmodrome) நடந்த …

  3. சவுதியில் கடும் வெப்பம் – மக்காவில் 19 வெளிநாட்டு யாத்திரீகர்கள் உயிரிழப்பு! சவுதி அரேபியாவில் நிலவும் கடும் வெப்ப அலைகாரணமாக 19 வெளிநாட்டு யாத்திரீகா்கள் உயிாிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜோர்டானை சேர்ந்த 14 யாத்ரீகர்கள் மற்றும் ஈரானை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 19 பேர் இவ்வாறு உயிரிழந்து உள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் சவுதி அரேபியாவில் வெப்பம் அதிகரித்து காணப்படுவதாகவும், மக்காவில் 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகி உள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வெப்பத் தாக்கத்தினை எதிர்கொள்ள கூடிய வகையிலான மருத்துவ குழுவினர் உள்ளிட்ட 1600 இராணுவ வீரர்களை சவுதி இராணுவம் மக்காவிற்கு அனுப்பியுள்ளது. அத்துடன், 30 வ…

  4. பிரிட்டனில் வரும் ஜூலை 4 ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியடைந்து தேர்தலிலிருந்து முற்றிலுமாக துடைத்தெறியப்படும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் தொழிலாளர் கட்சிக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த வாரம் இரு கட்சிகளும் தங்களின் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டிருந்தன. பிரிட்டனில் 40 வருடங்களுக்கு பிறகு ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையால் முந்தைய பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த 2022 ஆம் ஆண்டு பதிவு விலகிய நிலையில் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்த்த வலதுசாரியான ரிஷி சுனக் பிரதமராக நியமிக்கப்பட்டார். அவரின் செயல்பாடுகள் மீதான அதிருப்தி …

  5. கட்டுரை தகவல் எழுதியவர், லூசில் ஸ்மித் மற்றும் ப்ன் ஸ்டீல் பதவி, பிபிசி டிவி நடப்புச் செய்திகள் 17 ஜூன் 2024 மூன்று ஆண்டு காலப்பகுதியில், மத்தியதரைக் கடலில் டஜன்கணக்கான தஞ்சம் கோரிகள் இறந்ததற்கு கிரீஸ் கடலோரக் காவல்படை தான் பொறுப்பு என சாட்சிகள் கூறுகின்றனர். கடலோரக் காவல்படையினர் ஒன்பது தஞ்சம் கோரிகளை வேண்டுமென்றே கடலில் தூக்கி வீசினர் என்றும் சாட்சிகள் கூறுகின்றனர். கிரீஸ் கடல் எல்லையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாலோ, கிரீஸ் தீவுகளை அடைந்த பிறகு மீண்டும் கடலுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாலோ 40-க்கும் மேற்பட்டவர்கள் இறந்ததாகக் கூறப்படுகிறது. இதில் அந்த ஒன்பது பேரும் அடங்குவர், என்று பிபிசி பகுப்பாய்வு க…

  6. Published By: RAJEEBAN 17 JUN, 2024 | 10:40 AM அமெரிக்காவில் சீக்கிய பிரிவினைவாதியொருவரை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டிய நபர் செக்குடியரசிலிருந்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். அமெரிக்காவின் சிறைச்சாலை சமஸ்டி பணியகம் இதனை தெரிவித்துள்ளது. நிக்கில் குப்தா என்பவரே நாடு கடத்தப்பட்டுள்ளார். நிக்கில் குப்தாக காலிஸ்தானிற்காக குரல்கொடுத்த குர்பட்வன்ட் சிங் பனுன் என்பவரை கொலை செய்ய திட்டமிட்டார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. செக்குடியரசிற்கு சென்றவேளை கடந்தவாரம் நிக்கில் குப்தா கைதுசெய்யப்பட்டார். தான் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படவேண்டாம் என்ற அவரது மனுவை நீதிமன்றமொன்று நிராகரித்த…

  7. உலகம் முழுவதும் இன்று (ஜூன் 17) திங்கட்கிழமை ஹஜ் பண்டிகை கொண்டாட்டங்கள் கோலாகலமாக தொடங்கியுள்ளது. உலகெங்கிலும் பரந்து விரிந்த அதிக மக்களைக் கொண்ட இரண்டாவது பெரிய மதம் இஸ்லாம் (முதலாவது கிறிஸ்துவம்) ஆகும் . இந்நிலையில் இன்று ஹஜ் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி தேசியத் தலைவர்களும் உலகத் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர். தற்போது உள்ள உலக நடப்பின்படி இஸ்லாமிய மக்களைக்கொண்ட பாலஸ்தீன நாட்டின்மீது இஸ்ரேல் தொடுத்துள்ள போரில் இதுவரை சுமார் 37,000 மக்கள் பலியாகியுள்ளனர். வெடிகுண்டுகளால் தகர்க்கப்பட்ட மசூதிகளே காஸாவில் மிஞ்சுகின்றன. முகாம்களில் தங்களின் துயர நிலையிலும் இறுக்கமான மனதுடன் பாலஸ்தீன மக்கள் கொண்டாடும் பண்டிகையாக இது அமைகிறது . தற்காலிகமாக தாக…

  8. மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி சென்ற விமானம் மாயம்…! தேடுதல் பணி தீவிரம்..! தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி பயணித்த இராணுவ விமானம் காணாமல் போனதால் அங்கு பதற்றம் நீடித்து வருகிறது. மலாவி தலைநகர் லிலாங்வேயில் இருந்து துணை ஜனாதிபதி சவுலோஸ் கிளாஸ் சிலிமா (51) மற்றும் 9 பேருடன் திங்கட்கிழமை காலை புறப்பட்ட மலாவிய பாதுகாப்பு படை விமானம், ராடாரில் இருந்து வெளியேறியதாக அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “ரேடாரில் இருந்து விலகியதில் இருந்து விமானத்துடன் தொடர்பு கொள்ள விமான அதிகாரிகளின் அனைத்து முயற்சிகளும் இதுவரை தோல்வியடைந்துள்ளன” என்று மலாவியின் ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அமைச்சரவை தெரிவித்த…

  9. Published By: RAJEEBAN 23 MAR, 2024 | 06:32 AM பிரிட்டிஸ் இளவரசி வில்லியம் கேட் மிடில்டன் புற்றுநோயல் பாதிக்கப்பட்டுள்ளார். வீடியோ அறிக்கையொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார் புற்றுநோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அதற்கு சிகிச்சை பெற்றுவருவதாக அவர் தெரிவித்துள்ளார். கடுமையான பல மாதங்களிற்கு பின்னர் இது மிகவும் அதிர்ச்சியை அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் நான் நன்றாகயிருக்கின்றேன் ஒவ்வொரு நாளும் வலிமை பெற்றுவருகின்றேன் என அவர் தெரிவித்துளளார். நோய் பாதிப்பு குறித்த விபரங்கள் முழுமையாக வெளிவராத போதிலும் இளவரசி முழுமையாக குணமடைவார் என கென்சிங்டன் அரண்மணை நம்பிக்கை வெளிய…

  10. பாதித்த இரண்டே நாட்களில் உயிரைப் பறிக்கும் சதையை உண்ணும் அரிய வகை பாக்டீரியா ஜப்பானில் பரவி வருவது மக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ட்ரெப்டோகோக்கல் டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் (Streptococcal toxic shock syndrome) (STSS) எனப்படும் நச்சு அதிர்ச்சி நோய் பாதிப்பு நச்சுக்களை இரத்த ஓட்டத்தில் பரவச் செய்து உடல் உறுப்புகளுக்கு கடுமையான சேதத்தை விளைவிக்கிறது. ஜப்பானில் கொரோனா கட்டுப்பாடுகள் சமீபத்தில் முழுவதுமாக தளர்த்தப்பட்ட நிலையில் இந்த சதையை உண்ணும் பாக்டீரிய ஜூன் 2 நிலவரப்படி சுமார் 977 பேரை தாக்கியுள்ளது. கடந்த வருடம் இதனால் 941 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த வருடம் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அறிவியலாளர்கள் கூற்றுப்படி கடந்த 1999 ஆம் ஆண்டு இந்த பாக்டீரியா ம…

  11. உக்ரைன் அமைதி மாநாடு – ரஷ்யா பக்கேற்காததனால் சீனாவும் புறக்கணிப்பு! நூறு நாடுகளுக்கும் மேல் பங்கேற்கும் ‘உக்ரைன் அமைதி மாநாடு’ சுவிட்ஸர்லாந்தில்(Switzerland) நேற்று(15) ஆரம்பமானது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் 2 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்துவரும் போா் குறித்து விவாதிப்பதற்காக, சுவிட்ஸர்லாந்தில் நிட்வால்ட் பகுதியில் அமைந்துள்ள பா்கன்ஸ்டாக் சுற்றுலா விடுதியில் இந்த சா்வதேச மாநாடு இடம்பெற்று வருகிறது. அதன்படி, இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாடு, நேற்று ஆரம்பமான நிலையில் இன்றும் நடைபெறுகிறது. குறித்த மாநாட்டில், அணுசக்தி பாதுகாப்பு, கடல் பயண சுதந்திரம், உணவு பாதுகாப்பு போன்ற மூன்று விவகாரங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படம் என…

  12. 15 JUN, 2024 | 11:56 AM (ஆர்.சேது­ராமன்) 2023 ஆரம்பம் முதல் 2024 மே மாதம் வரை உலகில் சுமார் 120 மில்­லியன் மக்கள் பல­வந்­த­மாக இடம்­பெ­யரச் செய்­யப்­பட்ட நிலையில் இருந்­தனர் என ஐ.நா வியா­ழக்­கி­ழமை (13) தெரி­வித்­துள்­ளது. அக­தி­க­ளுக்­கான ஐ.நா. உயர் ஸ்தானி­க­ரா­ல­யத்தின் அறிக்­கை­யொன்றில் இத்­த­ர­வுகள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. அக­திகள், புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்கள் மற்றும் உள்­ளக ரீதி­யாக இடம்­பெ­யர்ந்தோர், நாடாற்ற நிலையில் உள்­ள­வர்கள் குறித்த புள்­ளி­வி­ப­ரங்கள் இந்த அறிக்­கையில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. 2023 இறு­தியில், துன்­பு­றுத்­தல்கள், சண்­டைகள், வன்­மு­றைகள், மனித உரிமை மீறல்கள் மற்றும் படு­மோ­ச­…

  13. ஜப்பானில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு நிரந்தர குடியுரிமை : ஜப்பான் அரசு வெளிநாட்டு ஊழியர்களுக்கான நிரந்தர குடியுரிமையை வழங்க ஜப்பான் அரசு தீர்மானித்துள்ளது. அதன்படிஇ வெளிநாட்டு ஊழியர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில்இ தொழில்நுட்ப வேலைவாய்ப்பு பயிற்சி திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நேற்று பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. திருத்தப்பட்ட புதிய சட்டம் 2027 முதல் ஜப்பானில் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படிஇ குடிவரவு கட்டுப்பாடு மற்றும் அகதிகளை அடையாளம் காணும் முந்தைய அடிப்படைகளும் திருத்தப்பட்டுள்ளன. மூன்று ஆண்டுகளுக்குள் குறிப்பிட்ட திறமையான தொழிலாளர்களாக ஜப்பானில் பணிபுரிய வெளிநாட…

  14. மத்திய தாய்லாந்திலுள்ள அயுதயா யானைகள் சரணாலயத்தில் ஆசிய யானையொன்று அரிய வகை இரட்டை யானைக் குட்டிகளை ஈன்றுள்ளது. இதுவொரு அதிசய நிகழ்வென அங்குள்ள பராமரிப்பாளர்கள் கூறுகின்றனர். 36 வயதான சாம்சூரி என்ற யானை இரட்டைக் குட்டிகளை ஈனும் என்று எதிர்பார்க்கப்படாத நிலையில், வெள்ளிக்கிழமை ஆண் குட்டியை ஈன்றெடுத்தது. அத்துடன் அதற்கான பிரசவம் முடிந்துவிட்டதாக நினைத்துள்ளனர். முதல் குட்டியை கழுவி சுத்தம் செய்து, தாய் யானையின் காலடியில் நிக்க வைக்க முயலும்போது பலத்த சத்தம் கேட்டுள்ளது. அப்போது சாம்சூரிக்கு இரண்டாவது பெண் குட்டி யானை பிறந்துள்ளது. இரண்டாவது பிரசவத்தின்போது தாய் யானை சற்று பீதியில் ஆழ்ந்ததால், ஈன்ற பெண் குட்டியை மிதித்து விடாமல் பராமரிப்பாளர்கள் காக்க வேண்டியி…

  15. கட்டுரை தகவல் எழுதியவர், யோலண்டே நீல், அனஸ்டசியா ஸ்லடோபோல்ஸ்கி பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் “அவர்கள் கிசுகிசுத்த குரல்களில் பேசுவற்குக் கட்டாயப்படுத்தப்பட்டனர்,” என்கிறார் மைக்கேல் கஸ்லோஃப். இவர், மத்திய காஸாவில் ஹமாஸ் குழுவினரால் சிறைபிடிக்கப்பட்டு, இஸ்ரேல் சிறப்புப் படைகளால் கடந்த சனிக்கிழமை (ஜூன் 8-ஆம் தேதி) ஆச்சரியகரமான வகையில் மீட்கப்பட்ட நான்கு பணயக்கைதிகளுள் ஒருவரான அந்த்ரேய்-இன் தந்தை. இஸ்ரேல் ராணுவத்தால் 'ஆபரேஷன் டைமண்ட்' என பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கை, ரஷ்ய இஸ்ரேலியரான அண்ட்ரே-யின் பெற்றோரை பொறுத்தவரை ஓர் 'அதிசயத்திற்குக்' குறைவானதல்ல. தங்களுடைய மகன் மீட்கப்பட்டது எப…

  16. உக்ரேனுக்கு 50 பில்லியன் டொலர் கடன் தொகையை வழங்க ஜி7 நாட்டு தலைவர்கள் ஒப்புதல்! ஜி 7 நாடுகளின் 50 ஆவது உச்சி மாநாடு நேற்று இத்தாலியில் அபுலியாவில் (Apulia) ஆரம்பமானது. உலகின் 7 முக்கிய முதலாளித்துவ நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மன் மற்றும் கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் இதில் செயற்படுகின்றன. குறித்த மாநாட்டில் இம்முறை இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உக்ரேன்(Ukraine) ஜனாதிபதி Volodymyr Zelenskyy மற்றும் துருக்கி(turkey) ஜனாதிபதி Recep Tayyip Erdoğan ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்துக்கொண்டனர். இந்த மாநாட்டில் ரஷ்ய இறையாண்மை சொத்துக்களிலிருந்து உக்ரேனுக்கு 50 பில்லியன் டொலர் கடன் தொகைகளை வழங்க ஜி 7 நாடுகளின் தல…

  17. இஸ்ரேல் – காசா போரின் விளைவாக காசாவில் 5 வயதிற்குட்பட்ட 8,000ற்கும் அதிகமான சிறுவர்கள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக காசாவில் 28 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் தற்போது காசாவில் பட்டினியை எதிர்கொள்வதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://thinakkural.lk/article/303632

  18. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் – பாலஸ்தீன போர் நிறுத்தத்தை முன்மொழிந்துள்ள நிலையில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அதனை அங்கீகரித்து போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் அரசு மற்றும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் அமைப்புக்கு அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை ஏற்ற ஹமாஸ் அமைப்பு முக்கிய முடிவை அறிவித்துள்ளது. பேச்சுவார்த்தை மூலம் சுமூகமான தீர்வை ஏற்படுத்துவது, ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள படைகளை முழுவதுமாக திரும்பப்பெறுவது, ஹமாஸ் – இஸ்ரேல் ஆகிய இரு தரப்பிலும் பிடித்துவைத்துள்ள கைதிகளை விடுதலை செய்வது, நிரந்தர போர் நிறுத்தத்துக்கு வழிவகை செய்வது உள்ளிட்ட முக்கிய கூறுகளை உள்ளடக்கிய போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும்படி இஸ்ரேல் அரசு மற்றும் ஹமாஸ் அமைப்பிடம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்…

  19. துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் ஹன்டர் பைடன் குற்றவாளி தினமலர் வாஷிங்டன்: சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் மகன் ஹன்டர் பைடன் குற்றவாளி என கோர்ட் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோபைடனின் மகன் ஹன்டர் பைடன் , இவர் தனக்கு கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் உள்ளதை மறைத்து 2018-ஆம் ஆண்டு கைத்துப்பாக்கி ஒன்றை சட்டவிரோதமாக வாங்கியதாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்துவருகிறது. அமெரிக்காவில் துப்பாக்கி வாங்கும் எவராயினும் அவர் போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையாகி இருக்க கூடாது என்ற விதி உள்ளது. இந்நிலையில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த விவகாரத்தில் போதை மருந்து பழக்கத்தை மறைத்த வழக்கில் இன்று ந…

  20. குவைத்தில் தீ விபத்து – இந்தியர்கள் உட்பட 35 பேர் உயிரிழப்பு! குவைத் நாட்டில் கட்டிடமொன்றில் ஏற்பட்ட பயங்க தீ விபத்தில் சிக்கி, குறைந்தது 35 பேர் வரை உயிரிழந்ததாக அந்நாட்டு அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தெற்கு குவைத்தில் மங்காப்(Mangaf) நகரிலுள்ள தொழிலாளர்கள் குடியிருப்பொன்றில், அந்நாட்டு நேரப்படி, இன்று அதிகாலை 6.00 மணிக்கு இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீ விபத்தில் உயரிழந்தவர்களில் 4 இந்தியர்களும் அடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், தீ விபத்துக்குள்ளான குறித்த கட்டடத் தொகுதியில் அதிகளவில் மலையால மக்களே வசிப்பதாகவும் தெரியவருகின்றது. இந்நிலையில், விபத்தில் காயமடைந்துவர்களை உடனடியாக மீட்டு அருகிலுள்…

  21. பாலின சமத்துவம்: 129வது இடத்தில் இந்தியா! உலகளாவிய ரீதியில் பாலின சமத்துவக் குறியீட்டில் இந்தியா 129வது இடத்தை பிடித்துள்ளது. பொருளாதாரம், கல்வி, ஆரோக்கியம், அரசியல் பங்களிப்பு ஆகிய 4 காரணிகளின் அடிப்படையில் உலகப் பொருளாதார அமைப்பு, பாலின சமத்துவத்தை மதிப்பீடு செய்து வருகின்றது. அந்தவகையில் 146 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் இந்தியாவுக்கு 129வது இடம் கிடைத்துள்ளது. அதேசமயம் குறித்த பட்டியலில் முதல் 5 இடங்களையும் முறையே ஐஸ்லாந்து, ஃபின்லாந்து, நோர்வே, நியூசிலாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகள் பிடித்துள்ளன. மேலும் 146 ஆவது இடத்தில் சூடான் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1387601

  22. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,விஞ்ஞானி அனடோலி மஸ்லோவ், 77 கட்டுரை தகவல் எழுதியவர், செர்ஜி கோரியாஷ்கோ பதவி, பிபிசி ரஷ்யா 11 ஜூன் 2024 ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் பயணிக்கும் ஹைப்பர்சோனிக் ஆயுதங்களை உருவாக்குவதில் தனது நாடு உலகிலேயே முன்னணியில் இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அடிக்கடி பெருமை கொள்கிறார். ஆனால் இதுபோன்ற தொழில்நுட்பங்களை உருவாக்க அடிப்படைத் தேவையாக இருக்கும் அறிவியல் பிரிவில் பணிபுரியும் ரஷ்ய இயற்பியலாளர்கள் சமீப ஆண்டுகளில் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மனித உரிமைக் குழுக்கள் இதனை ஒரு அதீதமான ஒடுக்குமுறையாகப் பார்க்கின்றன. கைது…

  23. ரஷ்ய இராணுவத்தில் சேர்க்கப்பட்ட இரு இந்தியர்கள் உயிரிழப்பு! ஷ்ய இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட இரு இந்தியர்கள் உக்ரைன் போரில் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இவ் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது இரு இந்தியர்கள் உக்ரைனுடான போரில் உயிரிழந்துள்ள சம்பவம் இந்திய தூதரகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ரஷ்யாவில் அதிக சம்பளத்துக்கு தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி, இந்தியா உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்தும், பயண முகவர்களால் ஏமாற்றப்பட்டு அநேகமானவர்கள் ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஆனால், அங்கு தொழில் பெற்றுத்தராது, உக்ரைனுடன் போரில் சண்டையிட, ரஷ்ய இராணுவத்தில் அ…

  24. இன்று பிராந்சில் நடந்து முடிந்த ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் தேசியவாத தீவிர வலதுசாரி கட்சி (RN) 31.5 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. வெற்றிபெற்ற Rassemblement national கட்சி உறுப்பினர்கள் நாசிகளுடன் தொடர்புடையவர்களாக பல தடவை சர்ச்சைக்குட்பட்டவர்கள். இக் கட்சியின் தலைவர் மரின் லுபென் ரஸ்ய அதிபர் புதினிடம் சட்டவிரோதமகப் பணம் பெற்று ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர். இவர்கள் பிரான்சிலுள்ள அனைத்து வெளிநாட்டவரையும் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள். ஏனைய தீவிர வலதுசாரிக் கட்சிகளுக்குக் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் 40 வீதமான வாக்குகள் தேசியவாதக் கட்சிகளுக்குக் கிடைத்துள்ளது. இத் தேர்தலில் ஆளும் கட்சி பலத்த தோல…

  25. ஏமனின் ஏடனில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த படகு ஹார்ன் ஒ ஃப் ஆப்பிரிக்காவிலிருந்து ஏடனின் கிழக்கே பகுதியை நோக்கிய பயணித்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. படகிலிருந்த மீனவர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் என 78 பேர் பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றனது. மேலும் 100 பேர் காணாமற்போயுள்ள நிலையில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உயர்அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, கடந்த வருடம் மாத்திரம் 97,000 புலம்பெயர்ந்தோர் ஹார்ன் ஒஃப் ஆப்பிரிக்காவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.