Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. டெல்லி: நரேந்திர மோடியை பிரதமராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே பாஜக கூட்டணி வைக்கும் என்று பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார். அதிமுகவுடன் ஏன் கூட்டணி கிடையாது என்பதற்கான விளக்கத்தையும் அவர் அளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் முக்கிய கட்சிகளான அதிமுக, திமுக ஆகியவற்றுடன் கூட்டணி கிடையாது என்று பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் இன்று டெல்லியில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறுகையில், பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி. அவரை பிரதமராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே பாஜக கூட்டணி வைக்கும். திமுகவுடன் பாஜக கூட்டணி வைத்துக்கொள்ள விரும்பவில்லை. ஒரே அணியில் இரண்டு பிரதமர் வேட்பாளர்கள் இருக்க முடியாது. அதனால் தான் அதிமுகவுடன் கூட்டணி இல்லை…

  2. ஷின் ஜியாங் மாகாணத்தில் அமைதிக்குலைவு ( ஆவணப்படம்) சீனாவின் அமைதி குலைந்த மேற்குப்புற மாகாணமான, ஷின்ஜியாங்கில் நடந்த வன்முறைக் கலவரங்களில், போலிசார் 14 பேரை சுட்டுக்கொன்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த முஸ்லீம் பெரும்பான்மை மாகாணத்தில் பிரிவினைவாதம் காரணமாக அவ்வப்போது வன்செயல்கள் ஏற்படுவதுண்டு. ஆனால் இந்த சம்பவத்தில் குற்றம் புரிந்ததாக சந்தேகிக்கப்படும் சிலரை கஷ்கார் நகருக்கருகே போலிசார் கைது செய்ய முயன்றபோது அவர்களை சிலர் வெடிபொருட்கள் மற்றும் கத்திகளைக் கொண்டு தாக்கியதாக அரச ஊடகங்கள் தெரிவித்தன. இந்த சம்பவங்களில் இரண்டு போலிசாரும் கொல்லப்பட்டனர். சீனாவின் உய்குர் இன முஸ்லீம்கள் ( ஆவணப்படம்) இந்த ஆண்டு ஷின்ஜியாங் மாகாணத்தில் நடந்த பல வன்செயல்களில் இத…

  3. லண்டன்: இந்தியத் தொழிலதிபரான லட்சுமி மிட்டலின் சகோதரர் பிரமோத் மிட்டலின் மகள் திருமணம் இந்திய மதிப்பில் சுமார் 500கோடி ரூபாய் செலவில் ஸ்பெயினில் நடத்தப் பட்டது. இதன் மூலம் உலகளவில் நடத்தப் பட்ட ஆடம்பர திருமணங்களில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது இத்திருமணம். எஃகு இரும்புத் தொழிலில் முன்னணி வகித்து வரும் இந்தியரான லக்ஷ்மி நிவாஸ் மிட்டல் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். உலகப் பணக்காரர்களில் முண்ணனியில் இருக்கும் இவரது மகள் திருமணம் கடந்த 2004ம் ஆண்டு 46 மில்லியன் யூரோ செலவில் நடந்தது. உலகமே வியந்து பார்த்த அத்திருமணத்தைத் தொடர்ந்து, தற்போது அவரது சகோதரர் பிரமோத் மிட்டல் தனது மகள் ஸ்ருஷ்டி மிட்டல் திருமணத்தை அதைவிட படு விமர்சையாக நடத்தி முடித்துள்ளார். http://tamil.oneind…

  4. பெய்ரூட்: சிரியாவில் நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் சிக்கி சிறுவர்கள் 14 பேர் உட்பட 25 பேர் பலியானதாக மனித உரிமைக் கண்காணிப்புக் கழகம் தெரிவித்துள்ளது. கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்ப அரசியல் நடத்தி வருவதாகக் கூறி, சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது அது கலவரமாக மாறி ஏராளமானோரைப் பலி வாங்கியுள்ளது. லட்சக்கணக்கானோர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்காக ராணுவ வீரர்களும் பதில்த் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில், ஆயிரக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். இடைவிடாத போரினால் உருக்குலைந்த நகரமான அலெப்போ காட்சி அளிக்கிறது. இந்நிலையில், நேற்று அலெப்போ நகரில் புரட்சியாளர்கள் …

  5. இலங்கையில் இருந்து படகு மூலம் இராமேஸ்வரம் வந்துள்ளதாக கருதப்படும் ஒரு தொகுதி அகதிகளைத் தேடி, தமிழ்நாடு காவல்துறையினர் பாரிய தேடுதல்களை ஆரம்பித்துள்ளனர். தனுஷ்கோடி அருகே உள்ள அரிச்சல்முனையில் நேற்று இலங்கை அகதி ஒருவர் கடலோரக் காவல்படையினரால் கைது செய்யப்பட்டதை அடுத்தே இந்த தேடுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சாந்தன் என்ற இந்த அகதியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஒரு இலட்சம் ரூபா வாடகை செலுத்தி பலர் அகதிகளாக வந்திறங்கியதாக கூறியுள்ளார். எனினும் எத்தனை பேர் வந்திறங்கினர் என்ற விபரம் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவரவில்லை என்று பிரதி காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். மற்றவர்கள் எங்கே மறைந்துள்ளனர் என்ற விபரம் அவருக்குத் தெரியவில்லை என்றும், அவர்கள் …

  6. ஜோன் பொண்டெயின் , திகில் பட நாயகி மரணம் திகில் படங்களை இயக்கிய ஆல்ப்ரட் ஹிட்ச்காக்கின் பல படங்களில் கதாநாயகியாக நடித்த, புகழ் பெற்ற, ஹாலிவுட் நடிகை, ஜோன் போண்டெயின், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில், தனது 96வது வயதில் காலமானார். பிரிட்டிஷ் பெற்றோர்களுக்கு மகளாகப் பிறந்த ஜோன், கலிபோர்னியாவுக்கு புலம்பெயர்ந்து, அவரது அக்கா, ஒலிவியா டி ஹாவிலாண்டுடன் ,நடிப்புத் தொழிலில் ஈடுபட்டார். ஹிட்ச்காக்கின் முதல் ஹாலிவுட் படமான "ரெபெக்கா"வில் ஜோன் பொண்டெயின் கதாநாயகியாக நடித்தார். "சஸ்பிஷன்" என்ற படத்தில் கதநாயகன் கேரி க்ராண்டுடன் இணைந்து, ஒரு பலவீனமான மனைவி கதாபாத்திரத்தில் நடித்த அவருக்கு, ஆஸ்கார் விருது கிடைத்தது. "தெ கான்ஸ்டண்ட் நிம்ப்", "ஜேன் எய்ர்" " லெட்டர்…

  7. ரொறொன்ரோ மற்றும் பீல் பிராந்தியங்களில் பனிபொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பனிபருவகாலத்திற்கான முதல் பலத்த பனிபுயல் அடிக்கலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது. 15-20 சென்ரி மீற்றர்கள் அளவிலான பனி GTA பகுதிகளில் பொழியலாமெனவும் எதிர்பார்க்கப் படுகின்றது. இது ஞாயிறு காலை வரை தொடரும் எனவும் இன்று மாலை கடுமையா பனி பெய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. ஹமில்ரன், ஓக்வில், பேளிங்ரன் ஆகிய இடங்களிலும் பனிபுயல் எதிர்பார்க்கப்படுகின்றது என கனடா சுற்றுச் சூழல் பிரிவினரின் கூற்றுப்படி தெரியவருகின்றது. காற்று மணித்தியாலத்திற்கு 50 கிலோ மீற்றர்கள் வேகத்தில் வீசலாமெனவும் இதனால் பனி பறந்து பார்வையை மறைக்க கூடிய சாத்தியக் கூறுகளும் ஏற்படலாம் என எதிர்பார்ககப் படுகின்றது. பனிப்புயலினால…

  8. சைப்ரஸ் - கந்து வட்டிகாரனாகும் ஐரோப்பிய யூனியன் கடந்த சில வருடங்களாகவே ஐரோப்பிய யூனியனில் பல நாடுகள் கடனில் மூழ்குவதையும் ,அவற்றை வெவ்வேறு விதமாக பெயில் அவுட் செய்து வருவதையும் பார்த்திருக்கிறோம்.பொதுவாக பெயில் அவுட் செய்யும் போது அரசிடம் இருக்கும் ஒரு சில தொழிற்துறையை தனியாரிடம் விற்று பணத்தை பெறவும், மக்கள் நல்வாழ்வு திட்டங்களை நிறுத்தி பணத்தை சேமிக்கவும் மற்றும் அரசின் செலவினங்களை குறைக்கவும் அறிவுறுத்த படும். பல நேரங்களில் இது விவாதத்திற்கு உரிய பொருளாக இருக்கும். அயர்லாந்து பெயில் அவுட் பற்றி பிரிதொரு பதிவில் எழுதி இருந்தேன்.தற்போது ஐரோப்பிய யூனியனின் மற்றொரு சிறிய நாடான சைப்ரஸ் நாடு தற்போது பெயில் அவுட் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளபட்டுள்ளது.மற்ற நாடுகளில் நடந்தது …

  9. நெல்சன் மண்டேலாவின் இரங்கல் கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவும் கை குலுக்கிக் கொண்டது ஏற்கனவே திட்டமிட்டதல்ல, எதிர்பாராமல் நடந்தது என அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 1961-ஆம் ஆண்டு ரஷ்யாவுடன் அரசியல் உறவு ஏற்படுத்திக் கொண்டதால் கியூபாவுடனான அரசியல் உறவை துண்டித்துக் கொண்டது அமெரிக்கா. இந்நிலையில், நேற்று முன்தினம் தென்ஆப்ரிக்காவில் மறைந்த நெல்சன் மண்டேலாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமாவும், கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொண்டனர். இதற்கு, சுதந்திர உலகத் தலைவர் ஒருவரும், சர்வாதிகாரி ஒருவரும் கைகுலுக்கிக் கொள்வது ஏற்கத்தக்…

  10. முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவர் மற்றும் பூங்காவை சட்டத்திற்குப் புறம்பான வகையில் இடித்துத் தள்ளிய தமிழக அரசின் தமிழின விரோதப் போக்கை கண்டித்தும், முற்றத்தின் நிரந்தர பராமரிப்பு, பாதுகாப்புக்கென நிதி திரட்டும் வகையிலும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் அய்யா பழ. நெடுமாறன் அவர்கள் தலைமையில் 14.12.2013., 15.12.2013. (சனி, ஞாயிறு) ஆகிய இரு நாட்கள் தொடர்வண்டி மூலம் பரப்புரை பயணம் செய்யப்படவுள்ளது. கீழ்கண்ட தொடர்வண்டி நிலையங்களில் பயணக்குழுவினரை வரவேற்க அந்தந்த ஊர்களில் உள்ள தமிழின உணர்வாளர்கள், ஈழ ஆதரவு அரசியல் கட்சியினர், மனித உரிமை இயக்கத்தினர் திரளாக கூடி வரவேற்று நிதியளித்து வழியனுப்பி வைக்குமாறு வேண்டுகிறோம். தொடர்புக்கு: கா. தமிழ்வேங்கை, 94421 70011, 7871…

  11. இந்தியா - பாகிஸ்தான் இடையே, அணு ஆயுதப் போர் மூண்டால், 200 கோடி பேர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக, சர்வதேச அணு ஆயுதப் போர் தடுப்பு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, சர்வதேச அணு ஆயுதப் போர் தடுப்பு ஆர்வலர்கள், தங்கள் அறிக்கையில் கூறியுள்ளதாவது: உலக நாடுகள், தங்களுக்குள் போர் செய்யும் போது, அணு ஆயுதங்களை பயன்படுத்தினால், ஏராளமான உயிர்ச் சேதமும், பொருட்சேதமும் ஏற்படுவதோடு, எதிர்கால சந்ததியினரையும் கடுமையாக பாதிக்கும். இந்தியா - பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக தீராத பிரச்னைகள் உள்ளன. ஏற்கனவே, மூன்று முறை, இரு நாடுகளிடையே போர் நடந்துள்ளது. எனினும், இனி வரும் காலங்களில் இரு நாடுகளிடையே போர் ஏற்பட்டால், அதில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தும் அபாயம் உள்ளது. அவ்வாறு…

  12. http://youtu.be/hd0UyrDFJXY All looked lost when this young and lone buffalo was attacked by two lions in a South African national park. But the pair had not bargained on the buffalo's friends coming to his rescue, and moments later they were tossed several feet in the air before being chased away. The dramatic scene was captured on camera in the Mjejane Reserve on the border of the Kruger Park. Scroll down for video Flyin' lion! A lion blindsides a smaller buffalo as it emerges from bushes at the Mjejane Reserve in South Africa. Two on one: The hungry cat doesn't factor in the first buffalo's larger friend following …

  13. மத்திய கிழக்கு நாடுகளில் வரலாறு காணாத வகையில் பல வருடங்களுக்கு பிறகு பனிப்பொழிவும் கடும் குளிரும் நிலவுகிறது. உதாரணமாக எகிப்து தலைநகர் கெய்ரோவில் 112 வருடங்களுக்கு பிறகு முதன்முறையாக பனிமழை பொழிந்திருக்கிறது. யேசு கிறிஸ்து பிறந்த ஊராக கருதப்படும் ஜெருசேலத்தின் வழமையாக கிரிஸ்துமஸ்து கொண்டாட்டங்களின் போது பனிப் பொழிவு ஏற்படுவதில்லை. ஆனால் இம்முறை கிரிஸ்து மஸ்து கொண்டாட்டங்கள் களைகட்டியிருப்பதற்கு இப்பனிப்பொழிவும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. அதே போன்று சிரியா, இஸ்ரேல், லெபனான் போன்ற நாடுகளிலும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதுடன், வரலாறு காணத வகையில் கடும் குளிர் நிலவுகிறது. சிரிய உள்நாட்டு யுத்தத்தினால் இதுவரை அயல்நாடுகளுக்கு இடம்பெயர்ந்த இரு மில்லியன் சிரிய அகதிகள் தற்காலிக அ…

  14. ஸ்ரீரங்கத்தில் முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவருமான தேவே கவுடா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது; தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இந்தியாவின் பிரதமர் ஆகும் அனைத்து தகுதிகளும் இருக்கின்றன. தென் இந்தியாவில் இருந்து நரசிம்மராவுக்குப் பிறகு நானும் (தேவே கவுடா) பிரதமர் ஆனேன். ஜெயலலிதா இந்தியாவின் பிரதமர் ஆவதை நான் வரவேற்கிறேன். அதற்காக ஜெயலலிதாவை நான் ஆசிர்வதிக்கிறேன். ஓரின சேர்க்கை கிரிமினல் குற்றம் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்ததற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அப்படி மத்திய அரசு அந்த சட்டத்தை மாற்ற விரும்பினால் பாரதீய ஜனதா தலைவர் சுஷ்மா சுவராஜ் கருத்து தெரிவித்துள்ளபடி அனைத்து கட்சிகளும் சேர்ந்து ஆலோசித்து முடிவு எட…

  15. பாராளுமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயார் ஆகிவருகின்றன. பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 4 வட மாநில தேர்தலில் அந்த கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனால் அரசியல் கட்சிகளின் பார்வை பா.ஜனதா மீது திரும்பியுள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்திருந்த கட்சிகள் இந்த முறை கூட்டணி அமைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ் நாட்டிலும் பா.ஜனதா முக்கிய அரசியல் கட்சிகளை தனது கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ பா.ஜனதாவுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார். மோடி, பிரதமர் ஆவதற்குரிய ஒளிமயமான எதிர்காலம் தெரிகிறது என்றும் சமீபத்தில் கூறி இருந்தார். இந்த நிலையில் தமிழ்நாட்டி…

  16. நெல்சன் மண்டேலாவின் நினைவஞ்சலி பிரார்த்தனை நிகழ்வின்போது, டென்மார்க் நாட்டுப் பிரதமர் ஹெலி துரோனிங் ஸ்மித் அவர்கள் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரெனுடனும் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனும் கைபேசியில் படம் எடுத்துக்கொண்டது பிரிட்டிஷ் பத்திரிகைகளில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நினைவஞ்சலி கூட்டத்தில், சோகமான சூழ்நிலையில், அப்படியாக மூவரும் ஒட்டிக்கொண்டு தமது கைபேசியிலேயே படம்பிடித்துக்கொண்டது, பொருத்தமற்ற ஒரு நடவடிக்கை என்று சில பத்திரிகைகள் விமர்சித்திருந்தன. பெண்ணான டென்மார்க் பிரதமருடன் ஒபாமாவும், கேமரெனும் ஒட்டிக்கொண்டு படம் பிடிப்பதை, ஒமாபாவின் மனைவியான மிஷேல் ஒபாமா கோபத்துடன் பார்ப்பது போன்ற பாவனையில் ஒரு படத்தை வெளியிட்ட சில பத்திரிகைகள் அதிபர் ஒபாமா தனது மனைவ…

    • 21 replies
    • 1.8k views
  17. உலகிலேயே முதன்முறையாக உருகுவே நாட்டில் கஞ்சாவுக்கு சட்டப்பூர்வமான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கஞ்சாச்செடியை வளர்க்கவும், கஞ்சாவை விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் உலகின் எந்தவொரு நாட்டிலும் சட்டப்பூர்வ அனுமதி இல்லை. இந்நிலையில், உருகுவே நாட்டில் கஞ்சாவுக்கு சட்டப்பூர்வ அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான மசோதா, பாராளுமன்றத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் நிறைவேறியது. தற்பொழுது செனட் சபையிலும் மசோதா நிறைவேறி இருக்கிறது. இதையடுத்து, வரும் ஏப்ரல் மாதம் இந்த சட்டம் அமலுக்கு வருகிறது. கஞ்சா சட்டப்பூர்வமாக்கப்பட்டிருப்பதால், 18 வயதுக்கு மேற்பட்ட கஞ்சா உபயோப்பவர்கள் மாதம் ஒன்றுக்கு 40 கிராம் கஞ்சா வாங்கிக்கொள்ளலாம் எனவும், உரிமம் பெற்ற மருந்துக்கடைகளில் மட்டுமே கஞ்சா விற்கப்…

  18. டெல்லி விமான நிலையத்தில், உயிர் தப்பிய ராகுல் காந்தி. டெல்லி: டெல்லி விமான நிலையத்தில் நேர இருந்த விமான விபத்தில் இருந்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மயிரிழையில் உயிர் தப்பினார். ரேபரேலி சென்றுவிட்டு ராகுல் காந்தி புதுடெல்லிக்கு விமானத்தில் திரும்பினர். அவர் சென்ற விமானம் தரையிறங்க விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்து அனுமதி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விமானம் தரையிறங்க தயாரானது. அதே நேரத்தில் அந்த ஓடு தளத்தில் ராணுவத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று நின்றுள்ளது. ராணுவத்திற்கு சொந்தமான விமானமும் ஓடு தளத்தில் மெதுவாக நகர்ந்த போது ராகுல் வந்த விமானம் தரையை நெருங்கியது. பின்னர், விமானம் இருப்பது குறித்து தகவல் அறிந்ததும் கடைசி நேரத்தில்…

  19. நேற்றிரவு (08-12-2013) சிங்கப்பூரில் நடந்த கலவரத்தின் காணொளி. http://www.dailymotion.com/video/x18614n_fatal-accident-leads-to-riot-in-singapore-s-little-india_fun கட்டிட தொழிலாளி தமிழர் ஒருவர் விபத்தில் இறந்ததின் ஆத்திரத்தால் கலவரம் மூண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. source:http://sg.news.yahoo.com/singapore-police--scdf-draw-praise-for-handling-of-little-india-riot-063040963.html

    • 26 replies
    • 3.2k views
  20. கடந்த 2009ம் ஆண்டு ஈழத்தில் நடந்த திட்டமிட்ட தமிழின படுகொலையால் இந்த உலகமே அதிர்ந்து நிற்கிறது. அந்த இனப்படுகொலைக்கு துணை போன போர் குற்றவாளி பிரணாப் முகர்ஜியை பழம்பெருமை வாய்ந்த லயோலா கல்லூரியின் சிறப்பு விருந்தினராக அழைத்திருப்பதை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அடைகிறோம். ரத்தக்கரை படிந்த பிரணாப் முகர்ஜியின் கால்தடங்கள் லயோலா கல்லூரியின் புனித மண்ணில் படவேண்டாம் என்று தமிழக மாணவர்கள் சார்பாக உங்களை கேட்டு கொள்கிறோம் விரைவில் தக்க நடவடிக்கை எடுப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு இந்த கடிதத்தை தங்களிடம் ஒப்படைக்கிறோம். # இன்று 50க்கும் மாணவர்கள் அளித்த கடிதம். இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் லயோலா கல்லூரி உலக அளவில் பேசப்படுவது நம் அனைவருக்கும் பெருமை சேர்க்கக்கூ…

  21. கேரள தமிழர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இருந்து கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு தமிழர்கள் சென்று அங்கு தரிசாக கிடந்த நிலங்களை எல்லாம் விளை நிலங்களாக மாற்றுவதற்கு பல ஆண்டுகளாக உழைத்தார்கள். அதன் விளைவாக கேரளாவின் எல்லைப் பகுதியில் கொங்கு நாட்டு மக்கள் அதிகளவில் குடியேறி விவசாயம் செய்தனர். கேரளாவின் விவசாயம் வளர்ச்சிக்கு கொங்கு தமிழர்கள் காரணமாக உள்ளனர். இத்தனை ஆண்டுகள் கழித்து நொண்டி காரணங்களை கூறி கொங்கு தமிழர்களை கேரளாவில் இருந்து துரத்த நினைப்பது கண்டிக்கத்தக்கது. கேரளாவில…

  22. டெல்லி: லோக்சபா தேர்தலுக்கான அரை இறுதி களமாக கருதப்பட்ட 4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன.. இதனைத் தமிழகத்தில் கூட்டணி மாற்றங்களுக்கு வலுவான அடித்தளமும் போடப்பட்டு வருகிறது. டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றுள்ளது. பாரதிய ஜனதாவுக்கு கிடைத்த இந்த வெற்றி லோக்சபா தேர்தலிலும் எதிரொலிக்கும் என்றே அனைத்து அரசியல் கட்சிகளும் கருதுகின்றன. ஏற்கெனவே தமிழகத்தில் பாரதிய ஜனதா அணியில் இடம் பிடித்துவிட்டோமே என்று துண்டு போட்டு உட்கார்ந்திருக்கிறது மதிமுக.. இதை உறுதிப்படுத்துவிதமாகவே 4 மாநில தேர்தல் முடிந்த உடனேயே மதிமுக பொதுச்செயலர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டார். http://tamil.oneindia.in/news/india/modi-wave-after…

  23. உலகம் நெல்சன் மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் அமைதியாக ஒரு டீலிங் நடந்து முடிந்திருக்கிறது. அமைதியாக நடந்தாலும் இது ஆபத்தான டீலிங். ஆயுத டீலிங்குக்கு சமமான டீலிங். அதுவும் அமெரிக்க டீலிங். அதனாலேயே இதனைக் கவனிப்பது அவசியமாகிறது. ரோஸோபொரான் எக்ஸ்போர்ட் (Rosoboron export) என்பது ஒரு ரஷ்ய கம்பெனி. ஆயுதங்கள் மற்றும் ராணுவத் தளவாடங்கள், ராணுவ வாகனங்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஸ்தாபனம். பிரசித்தி பெற்ற எம்.ஐ.17 ரக ஹெலிகாப்டர்களை உலகெங்கும் பறக்க விடுவது இந்த நிறுவனம்தான். இந்த நிறுவனத்துடன் அமெரிக்கா ஓர் ஒப்பந்தம் செய்து, முதல்கட்டமாக சுமார் ஒரு பில்லியனுக்குச் (சுமார் ரூ. 6200 கோடி) சற்று அதிகமான மதிப்பீட்டுத் தொகைக்கு எம்.ஐ.17 ரக ஹெ…

  24. South Africa's first black president and anti-apartheid icon Nelson Mandela has died, South Africa's president says. Mr Mandela, 95, led South Africa's transition from white-minority rule in the 1990s, after 27 years in prison. He had been receiving intense home-based medical care for a lung infection after three months in hospital. In a statement on South African national TV, Mr Zuma said Mr Mandela had "departed" and was at peace. http://www.bbc.co.uk/news/world-africa-25249520

  25. சவூதியில் பாகிஸ்தானிய பிரஜைக்கு தலையை வாளால் வெட்டி மரண தண்டனை சவூதி அரேபியாவில் பாகிஸ்தானிய பிரஜை ஒருவருக்கு அந்நாட்டிற்கு போதைவஸ்தை கடத்தி வந்த குற்றச்சாட்டில் தலையை வாளால் வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மொஹமட் ஸேயர் கான் என்ற மேற்படி நபர் சவூதிக்கு பெருமளவு போதைவஸ்தை கடத்திச் சென்றவேளை கைது செய்யப்பட்டார். http://www.virakesari.lk/?q=node/359777 அவருக்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனையுடன் இந்த வருடம் சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் தொகை 73 ஆக உயந்துள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.