Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பிரதமர் எர்னா சொல்பேர்க், அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகவாண்மை (NSA snooping) இரகசியமாக உலகெங்கும் பல்லாயிரம் தொலைபேசி அழைப்புக்களை கண்காணிப்பதாக குற்றஞ் சாட்டியுள்ளார். நேச நாடுகள் ஒன்றையொன்று கண்காணிப்பது நல்லதல்ல என்றும் சுட்டிக் காட்டினார். அவரது எல்லா அமைச்சர்களும் இந்தவாரம் மாற்றியமைக்கப்பட்ட தொலைபேசிகளைப்(encrypted telephones) பெறுவார்கள் என நோர்வே அரச ஊடகமான NRK அறிவித்துள்ளது. முன்னாள் நோர்வே வெளிநாட்டமைச்சர் ஜொனாஸ் கர் ஸ்டோர், நோர்வே அரசியலாளர்கள், அமெரிக்காவாலோ அல்லது ஏனைய நாடுகளாலோ உளவு பார்க்கப்படவில்லை என்று நம்புவது அப்பாவித்தனமானது என்று குறிப்பிட்டதுடன், எனினும் நட்பு நாடுகளிடையேயான உளவு பார்த்தலை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார். h…

  2. பெங்களூரில் இருந்து ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்துக்கு நேற்றிரவு 10.30 மணிக்கு ஒரு ஆம்னி பஸ் புறப்பட்டது.வால்வோ வகையைச் சேர்ந்த அந்த ஏ.சி. பஸ்சில் 47 பயணிகள், டிரைவர், கிளீனர் என மொத்தம் 49 பேர் இருந்தனர். இன்று அதிகாலை 5.10 மணிக்கு அந்த பஸ் ஆந்திராவில் மெகபூப்நகர் மாவட்டம் கொத்தகோட்டா பகுதியில் பாலம் என்ற ஊரில் வந்து கொண்டிருந்தது. அப்போது பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். பஸ் 120 கிலோ மீட்டர் வேகத்துக்கும் மேல் சென்று கொண்டிருந்தது. அப்போது ஆம்னி பஸ் டிரைவர் பெரோஸ்கான் முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு காரை முந்த முயன்றார். கார் மெல்ல சென்று கொண்டிருந்ததால் ஆம்னி பஸ் டிரைவர், அதன் மீது மோதாமல் இருப்பதற்காக பஸ்சை சற்று விலக்கினார். அப்போது …

  3. சோமாலியாவில் செயற்படும் அல் ஷபாப் எ தீவிரவாத இயக்கம், சமீபத்தில் நைரோபியில் வணிக வளாகத்தில் தாக்குதல் நடத்தி 67 பேரை கொன்றனது. இதனால் இவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் சோமாலியா ராணுவமும், அமெரிக்கா ராணுவமும் ஈடுபட்டு வருகின்றன.இந்நிலையில் சோமாலியாவின் தெற்குபகுதியில் சென்று கொண்டிருந்த காரை,அமெரிக்க உளவு விமானம் குண்டு வீசி தகர்த்தது. அதில் காரில் பயணம் செய்த 2 பேர் இறந்தனர். இவர்களில் ஒருவர் இப்ராகிம் அலி என்ற பெயருடையவர், தீவிரவாத இயக்கத்தின் குண்டு தயாரிக்கும் நிபுணர் ஆவார். http://www.seithy.com/breifNews.php?newsID=96061&category=WorldNews&language=tamil

  4. மோடி பிரதமராகக்கூடாது! - அ. குமரேசன் “இணக்கம் மிகுந்த வாழ்க்கை, வந்தாரை வரவேற்கும் இன்முகம் – இவற்றுக்கு அடையாளமானவர்கள் குஜராத் மக்கள்.” -முப்பது ஆண்டுகளுக்கு முன் எனது நண்பனோடு குஜராத்திற்கு அவனது தொழில் தொடர்பாக ஒரு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, ஒரு ஆசிரியர் இப்படிச் சொல்லி வழியனுப்பி வைத்தார். அந்த மாநிலத்தில் அதை நாங்கள் நேருக்கு நேர் அனுபவித்தோம். பலித்தானா என்ற ஊரில் நள்ளிரவு சென்று இறங்கியபோது, அந்த நேரத்தில் ஒரு கூலித்தொழிலாளி ஒரு குதிரை வண்டிக்காரரிடம் எங்களுக்காக அவர்களது மொழியில் பேசி, தங்கும் விடுதிக்கு அனுப்பி வைத்தார். மறுநாள் காலையில் வந்து, வண்டிக்காரர் சரியாகக் கொண்டுவந்து சேர்த்தாரா என்றும், விடுதி வசதியாக இருக்கிறதா என்றும் விசாரித்தார். அவருக…

  5. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களை சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆதரவாளர்கள் நேற்று பல மணி நேரத்திற்கு முடக்கி வைத்தனர்.இந்த பக்கங்களை பார்வையிடுவதற்காக இணைப்புகளை கிளிக் செய்த நபர்கள், சிரியாவின் மின்னணு ராணுவம் என்ற இணைய இணைப்புக்கு திசை திருப்பப்பட்டனர். அவர்கள் சிரியாவின் மின்னணு ராணுவம் என்ற இணையதளத்திற்க்கு அழைத்து செல்லப்பட்டனர். அதில், உங்கள் நுழைகைக்கு நன்றி! ஒபாமாவின் அபாயகரமான பிரச்சார இணைப்புகளை நாங்கள் முடக்கியுள்ளோம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சில மணி நேரங்களுக்கு இந்த இணைப்புகள் முடக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை அதிகாரிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர். விஷமிகள் சிலர் அதிபரின் இணைப்புகளை முடக்கியுள்ளனர். எனின…

  6. பாட்னாவில் பல்வேறு இடங்களில் நடந்த 6 வெடிகுண்டு வெடிப்பு சம்பவங்களில் இதுவரை 5 பேர் பலியாயி னர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ரயில் நிலையம் அருகிலும், நரேந்திர மோடி பேசிய காந்தி மைதானத்திலும் குண்டு வெடிப்புகள் தொடர்ச்சி யாக நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் காந்தி மைதானமே பெரும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்நிலையில், இந்த வெடிகுண்டு சம்பவம் குறித்து அதிர்ச்சி அடைந்த பீகார் முதல்வர் நிதீஷ்குமார், அவசர ஆலோசனை நடத்தினார். மேலும் இது குறித்து மத்திய அரசுக்கு அம்மாநில அரசு அறிக்கை அனுப்ப உள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மன்மோகன்சிங் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார் http:/…

  7. ஸ்ரீ நகர்: ஜம்மு-காஷ்மீர் எல்லையில் உள்ள இந்திய நிலைகள் மீது இன்று காலையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். உரி என்ற இடத்தில் பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக பீரங்கிகள் கொண்டு இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த சண்டையின் போது, இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு ராணுவ வீரர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பாகிஸ்தான் அத்துமீறல் தொடர்வதால், எல்லையில் கடும் பதற்றம் நிலவுவதாக எல்லையில் வசிக்கும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். http://tamil.oneindia.in/news/india/ceasefire-v…

  8. எதிர்வரும் சனி நள்ளிரவிற்குப் பின்னர் அதாவது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூன்று மணிக்கு நேரம் மாற்றப்பட்டு இரண்டு மணியாக மாற்றப்படும். அதாவது பிரான்சில் குளிர்கால நேரமாற்றம் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூன்று மணிக்கு மாற்றப்படுகின்றது. இதனால் ஒரு மணிநேரத் தூக்கம் அதிகமாகக் கிடைக்கின்றது. இந்த நேர மாற்ற முறை 1916ம் ஆண்டில் பிரான்சில் தொடக்கப்பட்டது. ஆனால் இரண்டாம் உலகப் போரின் பின்னர் இது கைவிடப்பட்டிருந்தது. பின்னர் 1975ம் ஆண்டு முதல் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டது. http://www.paristamil.com/tamilnews/view-news-MzAxOTc4NDUy.htm#.UmwRNfnPWnY

  9. பிரிட்டனை தாக்கிய புயல் காற்றில் மூவர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கெண்ட் பகுதியில் ஒரு சிறுவனும், வட்ஃபோர்ட்டில் ஒருவரும் புயலில் மரங்கள் வீழ்ந்ததால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மேற்கு லண்டனிலும் ஒருவர் இறந்துள்ளார். ஐந்து லட்சத்து எண்பதினாயிரம் வீடுகள் மின் இணைப்பை இழந்துள்ளன. பிரிட்டனின் தென்பகுதிக்கான ரயில் பாதைகளில் மரங்கள் வீழ்ந்ததால் பல ரயில் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. எதிர்பார்த்ததைவிட சேதம் அதிகம் என்று ரயில் வலையமைப்பு கூறியுள்ளது. ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து 130 விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. ஐல் ஒஃப்வைட்டில் மணிக்கு 99 மைல் வேகத்தில் காற்று வீசியதாக காலநிலை அவதான நிலையம் கூறியுள்ளது. http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/10/131028_uk_…

  10. லண்டன்: நாளை கடும் புயல் ஒன்று சுமார் 160கிமீ வேகத்தில் இங்கிலாந்தைத் தாக்க இருப்பதாக அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்துள்ளது. கடந்த 1987, 2000, 2007, 2008 ஆகிய ஆண்டுகளில் இங்கிலாந்து கடும்புயல் தாக்கத்துக்கு ஆளாகியது. கிட்டத்தட்ட பல வருடங்களுக்குப் பிறகு நாளை மணிக்கு 100 மைல் அதாவது சுமார் 160 கி.மீட்டர் வேகத்தில் கடும் புயல் ஒன்று இங்கிலாந்தை தாக்க இருப்பதாக அந்நாட்டு வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. எனவே, இப்புயலை எதிர்கொள்ளும் விதமாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதி மக்கள் தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புயலின் விளைவாக சுமார் 30 முதல் 40 செ.மீட்டர் மழையும், அதனைத் தொடர்ந்து பெரும் வெள்ளப் பெருக்கும் ஏற்படும் என அஞ்சப்படுகிறது. புயல் முன்னெ…

  11. ஈரான் - பாகிஸ்தான் எல்லையில் ஆயுததாரிகளுடன் நடந்த மோதலில் ஈரானின் எல்லைப் பாதுகாவலர்கள் 14 பேர் கொல்லப்பட்டதாக இரானிய அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கான பதிலடியாக அரசாங்கத்துக்கு விரோதமான இந்தக் குழுவுடன் தொடர்புடைய 16 பேர் தூக்கிலிடப்பட்டதாகவும் அரச ஊடகம் தெரிவித்துள்ளது. சரவான் நகருக்கு வெளியே மலைப்பாங்கான பிராந்தியத்தில் இந்த மோதல் நடந்துள்ளது. ஈரானிய படையினர் பலர் பணயமாக பிடித்துச் செல்லப்பட்டதாகவும், அது கூறியுள்ளது. தாக்குதலாளிகளின் அடையாளம் சரியாகத் தெரியவில்லை. ஆனால், இவர்கள் புரட்சிக்கு எதிரான கெரில்லாக்கள் என்று சரவான் நாடாளுமன்ற உறுப்பினரான ஹிதயத்துல்லாஹ் மிர்மோரட்ஷெஹி கூறியுள்ளார். http://www.seithy.com/brei…

  12. சிறீலங்காவில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாடு அமர்வுகளில் மலேசியா பங்கேற்கக் கூடாது என அந்நாட்டு எதிர்க்கட்சியான ஜனநாயக செயற்பாட்டுக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. சிறீலங்கா மனித உரிமை நிலைமைகளை கருத்திற் கொண்டே, மலேசிய அரசாங்கம் சிறீலங்காவுக்கு செல்லாது மாநாட்டை புறக்கணிக்க வேண்டுமென வலிறுத்தியுள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பாரியளவில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாகவும் இந்த மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சிறீலங்கா அரசாங்கம் காத்திரமான விசாரணைகளை நடத்தத் தவறியுள்ளதாகக் அந்தக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. உரிய விசாரணை நடத்தப்படாமைக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் மலேசியா அரசாங்கம் அமர்வுகளை பகிஷ்கரிக்க வேண்டும் என எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது.…

  13. டெல்லி: முஸ்லிம் இளைஞர்களுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்கு தொடர்பு இருக்கிறது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியதற்கு உடனே மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் மத மோதல்கள் தூண்டிவிடப்பட்டன. இப்போது பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அங்கு தீவிரவாத இயக்கத்துக்கு ஆட்களை தேர்வு செய்து கொண்டிருக்கிறது என்று கூறினார். இதற்கு முஸ்லிம் மதகுருக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஷியா பிரிவு மதகுரு மெளலானா சைய்ஃப் அப்பாஸ் நக்வி கூறுகையில், இத்தகைய பேச்சுகள் முஸ்லிம் சமூகத்தினரை புண்படுத்தக் கூடியவை. இது மதவ…

  14. டெல்லி: இந்தியாவில் வெங்காயத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து 550 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனையாகிறது. சென்னையில் பெரிய வெங்காயம் 80 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்னும் மூன்று வாரங்களுக்கு நீடிக்கும் என மத்திய வேளாண் அமைச்சர் சரத்பவார் கூறியுள்ளார். இது தொடர்பாக மத்திய உணவுத்துறை அமைச்சர் கே.வி.தாமஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். டெல்லி, பீகார், காஷ்மீர் ஆகிய மூன்று மாநிலங்களில் வெங்காயத்துக்கு அதிக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்குவதால், வெங்காயம் வில…

  15. டெல்லி: பாரதீய ஜனதா கட்சியில் இருந்து தன்னை நீக்கியதற்கு ரூ.50 லட்சம் கேட்டு டெல்லி ஹைகோர்ட்டில் ராம் ஜெத்மலானி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி. பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருந்தார். நிதின் கட்காரி தலைவராக இருந்தபோது அவரது நிறுவனங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. அப்போது கட்காரி பதவி விலக வேண்டும் என்று ஜெத்மலானி வலியுறுத்தினார். இதேபோல சி.பி.ஐ. இயக்குனர் நியமனத்துக்கு பா.ஜனதா மூத்த தலைவர்கள் அதிருப்தி தெரிவித்தபோது அவர்களை ஜெத்மலானி கண்டித்தார். இதன் காரணமாக கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட அவர் பின்னர் நீக்கம் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.. கட்சிக்கு எதிராக நடந்து கொண்டதாக ராம் ஜெத்மலானி கடந்த மே மாதம் 28-ந்தேதி அக…

  16. ரசாயன ஆயுதங்களை ஒப்படைக்க சிரியாவுக்கு ஐ.நா. கெடு விதித்துள்ள நிலையில், அந்த ஆயுதங்களை கொண்டு வந்து நோர்வேயில் அழிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் வேண்டுகோளை நோர்வே அரசு ஏற்க மறுத்துள்ளது. இதுகுறித்து நோர்வே வெளியுறவுத்துறை அமைச்சர் போர்கே பிராண்டா செய்தியாளர்களிடம் கூறுகையில், "சிரியாவின் ரசாயன ஆயுதங்களை அழிக்கும் அமெரிக்காவின் எண்ணத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம். இதுதொடர்பாக, மிகத் தீவிரமாக ஆராய்ந்தோம். இதில் பல தொழில்நுட்ப மற்றும் சட்டச் சிக்கல்கள் உள்ளன. அதற்கு ஏற்ப வல்லுநர்கள் குழுவை அமைக்காதது மற்றும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாத நிலையில் ரசாயன ஆயுதங்களை அழிப்பது என்பது ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்' என்று தெரிவித்தார். …

  17. டெல்லி: அமெரிக்கா உலக நாடுகளின் தலைவர்களின் செல்போன் மற்றும் இமெயிலை ஹேக் செய்த போதிலும் அதனால் பிரதமர் மன்மோகன் சிங்கின் செல்போன் மற்றும் இமெயிலை மட்டும் ஹேக் செய்ய முடியவில்லை. வெள்ளை மாளிகை, பென்டகன் மற்றும் மாநில அரசு துறை அதிகாரிகள் அளித்த தொலைபேசி மற்றும் செல்போன் எண்களை வைத்து அமெரிக்க உளவாளிகள் உலகின் 35 நாடுகளின் தலைவர்கள் பேசியதை ஒட்டுக் கேட்டுள்ளனர் என்று தி கார்டியன் நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க அரசின் ரகசியங்களை வெளியிட்ட எட்வர்ட் ஸ்நோடன் அளித்த தகவல்களின் மூலம் தான் அமெரிக்கா ஒட்டுக் கேட்ட விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது குறித்து அறிந்த ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் கடும் கோபத்தில் உள்ளார். இந்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் இது க…

    • 3 replies
    • 619 views
  18. ஆர்க்டிக்: ஆர்க்டிக் பகுதியின் வெப்பநிலை கடந்த 44,000 ஆண்டுகளில் இல்லாததவை விட தற்போது அதிகரித்துள்ளதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இதுகுறித்து லைப்சயின்ஸ் இதழில் டக்ளஸ் மெய்ன் விரிவாக எழுதியுள்ளார். ஆர்க்டிக் பகுதியில் தொடர்ந்து வெப்பநிலை அதிகரித்து வருவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் அங்குள்ள பல ஐஸ் மலைகள் உருகி வருகின்றன. இது நிச்சயம் கவலைக்குரியது என்று அத்தனை ஆய்வுகளும் ஒரு சேர கூறுகின்றன. இந்த நிலையில் கனடிய பகுதியில் உள்ள ஆர்க்டிக்கின் கோடைகால வெப்பநிலை கடந்த 44,000 ஆண்டுகளில் இருந்ததை விட அதிக அளவில் உயர்ந்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அதை விட முக்கியமாக கடந்த 1,20,000 ஆண்டுகளிலும் இது மிகவும் அதிகமான வெப்பநிலை என்றும் இந்த ஆய்வு பயமுறுத்துகிற…

  19. சென்னை: கொழும்பு காமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்தால் இந்தியா தனிமைப்படுத்தப்படும் என்று இலங்கை தூதர் கரியவாசம் தெரிவித்த கருத்துக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடத்தப்பட கூடாது. மீறி நடத்தப்பட்டால் இலங்கையின் தலைமை ஏற்று 2 ஆண்டுகள் செயல்பட வேண்டி வரும். எனவே இந்தியா இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள கூடாது. தமிழக சட்டசபையில் அனைத்து கட்சிகளின் ஆதரவோடு இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம். தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் தீர்மானம் நிறைவ…

  20. சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள மத்திய பிரதேசத்தில், காங்கிரஸ், எம்.எல்.ஏ.,வின், செக்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது, வாக்காளர்களை உஷ்ணப்படுத்தியுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள, ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வை சேர்ந்த, முதல்வர், சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான, மத்திய பிரதேசத்தில், நவம்பர், 25ல் தேர்தல் நடக்கிறது. சவுகானை வீழ்த்தி, ஆட்சியை கைப்பற்றி விட துடிக்கும் காங்கிரஸ், அதற்காக விறுவிறுப்பான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. ஆனால், காங்கிரசின் வெற்றி வாய்ப்பை சீர்குலைக்கும் வகையில், காங். எம்.எல்.ஏ., சத்யநாராயண் படேலின், செக்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. பெண் ஒருவருடன், எம்.எல்.ஏ., சத்யநாராயண் உல்லாசமாக இருக்கும் வீடியோ, இணைய தளங்களில், கடந்த இரண்…

  21. இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டது ஏன்? : சர்ச்சையை ஏற்படுத்திய பஞ்சாப் முதல்வரின் கருத்து ராஜஸ்தானில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பேசியபோது, “என் பாட்டி இந்திரா காந்தி மற்றும் தந்தை ராஜீவ் காந்தி ஆகியோர் வகுப்புவாதம் மற்றும் வெறுப்பு அரசியலால் படுகொலை செய்யப்பட்டனர். அதேபோல் நானும் கொல்லப்படலாம். அதற்காக கவலைப்பட மாட்டேன்” என்று உணர்ச்சி பொங்க உரையாற்றினார். இந்நிலையில், இந்திரா காந்தி படுகொலையை மீண்டும் நினைவுபடுத்தி வரும் ராகுல் காந்திக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அகாலி தளம் தலைவர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் கடுமையாக விமர்சித்துள்ளார். பஞ்சாப் முதல்வர் பாதலின் மருமகளான ஹர்சம்ரத் இது குறித்து, …

  22. உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் உள்ள ராஜா ராவ் ராம் பக்ஷ் சிங் கோட்டைக்குள் தங்கப் புதையல் இருப்பதாக நினைத்து தோண்டவில்லை; அங்கு முதல் இந்திய சுதந்திரப் போரின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை கண்டெடுக்கவே தோண்டுகிறோம் என்று மத்திய கலாசார துறை அமைச்சர் சந்திரேஷ் குமாரி கடோச் தெரிவித்தார். உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டம், தாண்டியா கேரா கிராமத்தில் உள்ள கோட்டைக்குள் 1000 தொன் தங்கம் பூமியில் புதைந்திருப்பதாக ஷோபன் சர்க்கார் என்ற சாமியார் சொன்னதை அடுத்து, அங்கு அகழ்வுப் பணியைத் தொல்லியல் துறை மேற்கொண்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், டில்லியில் வியாழக்கிழமை இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில் அமைச்சர் சந்திரே…

  23. கூடங்குளம் அணு உலை செவ்வாய்க்கிழமை அதிகாலையில் தனது மின் உற்பத்திப் பயணத்தை தொடங்கி இருக்கிறது. இந்த நிகழ்வுக்கும் அண்மையில் தூத்துக்குடி கடல் பகுதியில் வளைக்கப்பட்ட அமெரிக்க கப்பலுக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்பதுதான் ஐ.பி. வட்டாரத்தில் இப்போது ஆழமாக விசாரிக்கப்படும் அபாயச் செய்தி. அமெரிக்காவின் அட்வன் போர்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான சீமேன் கார்டு ஓகியோ கப்பலை கடந்த 11-ம் தேதி சிறைபிடித்து தூத்துக்குடி துறைமுகத்தில் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இதிலிருந்த 12 இந்தியர்கள் உள்பட 35 பேரையும் பாளை சிறையில் அடைத்தது போலீஸ். கப்பல் எதற்காக இந்திய எல்லைக்குள் வந்தது என்பது குறித்து இதுவரை முழுமையான பதில் இல்லை. அதேநேரம், கப்பல் வந்ததன் நோக்கம் குறித்து க்யூ மற்…

    • 4 replies
    • 662 views
  24. உலக அளவில் ஆண்களின் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று வழுக்கைத்தலை. ஆண்களின் அழகுக்கு மிகப்பெரிய எதிரியாக வழுக்கைத் தலை பார்க்கப்படுகிறது. இதை தடுக்க விரும்பாத ஆண்களே இல்லை எனலாம். தலைப்பாகை துவங்கி, தொப்பியாக வளர்ந்து இன்றைய விக் வரை வழுக்கையை மறைக்க ஆண்கள் பலவகையான தந்திரங்களை கையாண்டு வந்திருக்கிறார்கள். வழுக்கையை தடுக்கும் மருந்துகள், முடி உதிராமல் தடுக்கும் மருந்துகள், உதிர்ந்த முடி வளர்க்கும் மருந்துகள், கடைசியாக முடிமாற்று அறுவை சிகிச்சை முறை என்று பலவகையான மருத்துவ தீர்வுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் இவை எதுவுமே வழுக்கை பிரச்சனைக்கான நீடிக்கத்தக்க நிரந்தர தீர்வை தரவில்லை என்றே பார்க்கப்படுகிறது. ஆனால் வழுக்கைக்கான நிரந்தர தீர்வை தாங்கள் நெருங்கிவிட்டதாக கூறுக…

  25. அவுஸ்திரேலியாவின், நியூ சவுத்வேல்ஸ் வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் காட்டுத்தீ, தற்போது தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து, அந்நாட்டு அரசு அவசரகால எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுவரை, 200 வீடுகள் காட்டுத் தீயால் நாசமாகி உள்ளன. கார் உள்ளிட்ட வாகனங்கள் எரிந்து சாம்பலாகிவிட்டன. உயிர்பலியை தவிர்க்க, பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் தீவீரம் அடைந்து வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த, நாடு முழுவதும் இருந்து 3000 தீ அணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள், தீயை அணைக்க தொடர்ந்து போராடி வருகின்றனர். கடும் காற்றும், அதிக வெப்பநிலையும் புதிய இடங்களில் காட்டுத் தீயை ஏற்படுத்தி வருவதால், தீயணைப்பு அவுஸ்ரேலிய அரச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.