உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27038 topics in this forum
-
வடகொரியாவில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் மார்ச் 9-ஆம் தேதி நடைபெறும் என்று அந்நாட்டு மாநில ஊடகங்கள் இன்று தெரிவித்துள்ளன. பொதுவாகவே நாடாளும் அதிபரின் ஆணைகளுக்கு ஒப்புதல் அளிக்கும் விதமாகவே இந்நாட்டு நாடாளுமன்றம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இதன் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். எனினும் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியிலிருந்தே நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு விடுவதால் தேர்தல் என்பது இந்நாட்டில் ஒரு சம்பிரதாயமாகவே செயல்பட்டு வந்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டின் இறுதியில் அதிபர் கிம் ஜோங்-2 இறந்து அவரது மகன் கிம் ஜோங் உன் பதவி ஏற்றபின்னர் நடக்கவிருக்கும் முதல் நாடாளுமன்றத் தேர்தல் இதுவாகும். இவர் கடந்த மாத இறுதியில் அரச த…
-
- 0 replies
- 323 views
-
-
பாராளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக பாராளுமன்றத்தை கூட்டி கூடுதல் செலவுக்கான முன் அனுமதி பெற திட்டமிட்டுள்ளனர். இதற்கான பாராளுமன்ற கூட்டத்தொடர் பிப்ரவரி முதல் வாரம் கூடும் என்று பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி கமல்நாத் இன்று தெரிவித்தார். http://www.maalaimalar.com/2014/01/08132805/Parliament-meets-for-the-first.html
-
- 0 replies
- 241 views
-
-
டெல்லி: டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என அறிவுரை கூறியுள்ளார் சமூக ஆர்வலரான அன்னா ஹசாரே. நடந்து முடிந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்துள்ளது ஆம் ஆத்மி கட்சி. கட்சி ஆரம்பித்த ஓராண்டிற்குள் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ள அக்கட்சி தற்போது நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு செயல் பட்டு வருகிறது. ஆம் ஆத்மி வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் யோகேந்ர யாதவ் தெரிவித்துள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட…
-
- 0 replies
- 301 views
-
-
தெலங்கானா விவகாரம் தொடர்பாக 5வது நாளாக இன்றும் ஆந்திர சட்டசபை முடங்கியது. ஆந்திர மாநில சட்டசபை இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. தொடங்கிய 3 நிமிடத்திலேயே சீமாந்திரா எம்.எல்.ஏ.க்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். சபாநாயகர் உறுப்பினர்களை இருக்கையில் அமரும் படி கேட்டுகொண்டார். இருப்பினும் தெலங்கானா விவாகரம் குறித்து கூச்சல் கடுமையாக இருந்ததால் அவையை ஒத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. http://www.dinamani.com/latest_news/2014/01/08/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-5%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE/article19…
-
- 0 replies
- 299 views
-
-
புதுதில்லியில் இன்று புலம்பெயர்ந்தவர்கள் 12வது மாநாடு நடந்தது.இன்றைய மாநாட்டை துவக்கிவைத்து பேசிய பிரதமர் மன்மோகன்சிங் இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் தனது வளர்ச்சியை இழந்துள்ளது என வெளியில் பேசப்படுகிறது இதை பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது எனப்துதான் உண்மை வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக உள்ளனர் என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார். மேலும் . வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். தற்போதைய அல்லது எதிர்காலத்தை பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை இந்தியாவின் எதிர்காலம் குறித்து நம்மபிகையோடு இருங்கள் பொருளாதாரத்தில் நாம் மேலும் வளர்ச்சி அடைவோம் என்று தெரி…
-
- 0 replies
- 357 views
-
-
காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி தான் தேர்ந்தெடுக்கப்பட்ட அமேதி தொகுதிக்கு வரும் ஜனவரி 10 ஆம் தேதி செல்கிறார். அங்கு பாரதஸ்டேட் வங்கியின் 9 கிளைகளை திறந்து வைக்கும் அவர், ஒரு எப்எம் ரேடியோ ஸ்டேசனையும் திறந்து வைக்கவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன http://www.dinamani.com/latest_news/2014/01/08/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9.10-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE/article1989537.ece
-
- 0 replies
- 328 views
-
-
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். லஞ்சம் மற்றும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை காட்டி கொடுக்கும் ஸ்டிங் ஆப்ரேசன் பற்றி தெரிந்து கொள்வதற்காக பொதுமக்களுக்கு இலவச உதவி எண்ணை அறிவித்துள்ளார். 011-27357169 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு ஊழல்வாதிகளை எப்படி காட்டிகொடுப்பது என்பது பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம். சிறப்பம்சங்கள்: காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை இந்த உதவி எண் வேலை செய்யும். அனைவரது மனதில் பதியும் வகையில் நான்கு டிஜிட் உதவி எண் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த உதவி எண்ணை தில்லிவாசிகள் அனைவரும் பயன்படுத்தலாம். உதவி தேவைப்படும் எனில் தில்லி போலீஸ் உதவும். மாநில லஞ்ச ஒழிப்பு துறை இதனை கண்…
-
- 0 replies
- 351 views
-
-
டெல்லியில் உள்ள ராகுல் காந்தி வீட்டில் நேற்று காங்கிரஸ் கட்சி கூட்டம் நடந்தது. அதில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா திடீரென கலந்து கொண்டார். இதன்மூலம் இவர் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளார் என்றும், காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்ற கருத்து நிலவுகிறது. இதுகுறித்து பா.ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி கூறியதாவது:– பிரியங்கா காந்தி மீண்டும் அரசியலுக்கு வந்து இருப்பது காங்கிரஸ் கட்சியின் உள் விவகாரமாகும். பிரியங்காவின் வருகை பாராளுமன்ற தேர்தலில் அக்கட்சிக்கு எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாது. அவரது பிரசாரத்தின் மூலம் காங்கிரஸ் கட்சியை காப்பாற்ற முடியாது. பா.ஜனதாவை பொறுத்த வரை எங்களது தலைமை மிக தெ…
-
- 0 replies
- 392 views
-
-
மும்பை பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் முறைகேடுகளை கண்டித்து பேசிய பேராசிரியர் நீரஜ் ஹடேகர் கடந்த சனிக்கிழமையன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மும்பை பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜன் வெலுக்கர் தவறான நிர்வாகம் செய்து வருவதாக பேராசிரியர் ஹடேகர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதையடுத்து, பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து வெளிப்படையாக பேசியதற்காக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஹடேகரை சஸ்பெண்ட் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறன்றனர். பிரபல வரலாற்று ஆய்வாளரான ராமசந்திரா குஹாவும் பேராசிரியருக்கு ஆதரவாக தனது டுவிட்டர் இணையதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மாணவர்களின் இந்த போராட்டத்த…
-
- 0 replies
- 358 views
-
-
கர்நாடக முன்னாள் முதல்–மந்திரி பி.எஸ். எடியூரப்பா. 2008–ம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா ஆட்சியை பிடித்தது. அவர் முதல்வர் ஆனார். தென் இந்தியாவின் முதல் பா.ஜனதா முதல்– மந்திரியான எடியூரப்பா சுரங்க நில பேர ஊழல் வழக்கில் சிக்கினார். இதனால் முதல்–மந்திரி பதவியை இழந்தார். இதைத் தொடர்ந்து அவர் பாரதீய ஜனதாவில் இருந்து விலகி 2012–ம் ஆண்டு கர்நாடகா ஜனதா கட்சியை தொடங்கினார். சட்டமன்ற தேர்தலில் அவருக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதன் காரணமாக பாரதீய ஜனதாவில் மீண்டும் இணைய எடியூரப்பா முடிவு செய்தார். தனது ஆதரவாளர்களுடன் அவர் பாரதீய ஜனதாவில் இணைந்தார். அதிகாரப்பூர்வமாக தனது கட்சியை பா.ஜனதாவுடன் நாளை இணைத்துக் கொள்கிறார். இந்த நிலையில் பாராளு மன்ற தேர்தலி…
-
- 0 replies
- 364 views
-
-
இந்தியப் பாதுகாப்புத்துறையின் தகவல்களின்படி கடந்த சில மாதங்களாக இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையேனும் சீனத் துருப்புகள் இந்திய எல்லைக்குள் நுழைவதாகத் தெரியவந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி இந்திய எல்லையின் சில இடங்களில் சீனப்படையினரின் ஊடுருவல்கள் காணப்பட்டன. அதன்பின் அந்த மாதம் 19, 20 தேதிகளில் சுமரில் உள்ள தெப்சங் சமவெளியிலும், ஜனவரி முதல் வாரத்தில் தக்டிப் பகுதியிலும் சீனத் துருப்புகள் கண்டறியப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. இந்திய எல்லைக்குள் வரும் சீனத் துருப்புகள் தங்களின் ஆதிக்கத்தை அங்கு உறுதிப்படுத்துவதில்லை. அந்தப் பகுதிகளில் நிலவும் கடுங்குளிரினைத் தாங்க முடியாமல் அவர்கள் ஒரு மணி நேரத்தில் திரும்பிச் சென்றுவிடுகின்றார்கள். சமீப காலங்களில் இவர்க…
-
- 0 replies
- 249 views
-
-
புதுடெல்லி, – டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி குடிநீர் வாரிய தலைவராகவும் இருக்கிறார். அவர் பதவி ஏற்ற அன்றே குடிநீர் வாரிய தலைமை செயல் அதிகாரி தேபஸ்ரீ முகர்ஜி இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், குடிநீர் வாரிய பணிகளை மேம்படுத்தும் நடவடிக்கையாக, அதன் அதிகாரிகள் 800–க்கும் மேற்பட்டோரை இடமாற்றம் செய்ய அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார். அதன்பேரில், நேற்று இரவு அவர்களுக்கு இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. மேலும், லஞ்சம் வாங்கிய டெல்லி குடிநீர் வாரிய ஊழியர்கள் வினோத் குமார், பட்வாரி சுனில்குமார், அது பிரகாஷ் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் லஞ்சம் வாங்குவதை, தனியார் டெலிவிஷன் சேனல் ரகசியமாக படம் பிடித்து அம்பலப்படுத்தியதை தொடர்ந்து இந்த நடவட…
-
- 4 replies
- 684 views
-
-
Posted Date : 10:00 (08/01/2014)Last updated : 10:00 (08/01/2014) ஜனவரி 8: ஸ்டீபன் ஹாகிங் எனும் நம்பிக்கை நாயகன் பிறந்த தினம் ஜனவரி எட்டு. இதே தினத்தில் எழுபத்தி ஒரு வருடங்களுக்கு முன் பிறந்தார் அவர் ;பள்ளியில் சுட்டியாக இருந்த அவர் இளம் வயதிலேயே வீட்டில் கிடந்த சாமான்கள்,கடிகார பாகங்கள் அட்டைகள் எல்லாவற்றையும் இணைத்து ஒரு கணினியை உருவாக்கினார் . அப்பா மருத்துவம் படிக்க சொல்ல இவர் இயற்பியலை ஆக்ஸ்போர்டில் படித்தார் ; வகுப்புகள் அவருக்கு போர் அடித்தன . மூன்று வருட காலத்தில் மொத்தமே ஆயிரம் மணிநேரம் தான் படித்திருப்பார் ; முதல் கிரேடில் தேர்வு பெறாவிட்டால் காஸ்மாலஜி துறையில் மேற்படிப்பை படிக்க இயலாது ;எனினும் தன் திறனை கல்லூரியின் நேர்முகத்தில் காட்டி கேம்ப்ரிட்ஜில்…
-
- 0 replies
- 427 views
-
-
வீடியோவை பார்க்க: http://www.ndtv.com/video/player/news/salman-khan-woos-the-aam-aadmi/304272?hp&video-featured ஹிந்தியில் கதைப்பதை ஹிந்தி தெரிந்த யாராவது மொழிபெயருங்கள்.
-
- 2 replies
- 656 views
-
-
புதுடெல்லி: சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழக அரசு நிர்வகிக்க தடை விதித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு கூறியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுகா குமுடிமூலை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவனடியார் ஆறுமுகசாமி (90). கடந்த 2000ம் ஆண்டில் இவர், சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழில் தேவாரம் பாடுவதற்கு சென்ற போது, கோயில் பொது தீட்சிதர்களால் தாக்கப்பட்டார். சிவனடியார் ஆறுமுகசாமிக்கு ஆதரவாக மனித உரிமை பாதுகாப்பு மையம், பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தமிழ் உணர்வாளர்கள் இணைந்து கடலூர் மாவட்டத்தில் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். தமிழக அரசுக்கு மனுக்கள் அனுப்பி கோரிக்கையை தெரிவித்தனர். இதன்பின், 2008ம் ஆண்டு அப்போதைய திமுக அரசின் உத்தரவையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிவனட…
-
- 0 replies
- 491 views
-
-
புதுடெல்லி, மத்தியில் ஆட்சிக்கு வந்தால் வரி விதிப்பு முறையில் மாற்றம் செய்ய பாரதீய ஜனதா தீர்மானித்து உள்ளது. இது தொடர்பாக, ஆய்வுக்குழு சில யோசனைகளை தெரிவித்து அக்கட்சியிடம் அறிக்கை தாக்கல் செய்து இருக்கிறது. வரி சீர்திருத்தம் பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றால் வரிவிதிப்பு முறையில் மாற்றங்கள் செய்யப்படும் என்று அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி சமீபத்தில் அறிவித்தார்.மத்தியில் ஆட்சியை பிடிக்கும் பட்சத்தில் பல்வேறு துறைகளிலும் சீர்திருத்தங்களை செய்ய பாரதீய ஜனதா தீர்மானித்து உள்ளது. இதற்காக முன்னாள் தலைவர் நிதின் கட்காரியின் தலைமையில், ‘விஷன் 2025 கமிட்டி’ என்ற பெயரில் பாரதீய ஜனதா அமைத்துள்ள தொல…
-
- 0 replies
- 1k views
-
-
புதுடெல்லி, சேது சமுத்திர திட்டம் தொடர்பான வழக்கில் இருந்து மத்திய அரசு வக்கீல் ராஜீவ் தவான் நேற்று திடீரென்று விலகினார். இதனால் விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. சேதுசமுத்திர திட்டம் சேது சமுத்திர திட்டம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு காரணமாக, அந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்திற்காக ராமர் பாலத்தை சேதப்படுத்தக்கூடாது என்றும், மாற்றுப்பாதையில் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், இத்திட்டத்தை மாற்று வழிப்பாதையில் கொண்டு செல்ல சாத்தியமில்லை என்றும், அதே சமயம் தற்போதைய நிலையில் திட்டத்தை செயல்படுத்தினால் எந்த பலனும் இருக்க…
-
- 0 replies
- 522 views
-
-
திபெத்திய பிரச்னைக்கு விரைவில் தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளதாக, புத்தமத ஆன்மிகத் தலைவர் தலாய்லாமா தெரிவித்தார். கோவை கொடிசியா அரங்கில் ரமண மகரிஷி சன்மார்க்க பக்தி இயக்கம் மற்றும் யுனிராம் அறக்கட்டளை சார்பில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவேகானந்தரின் 150-ஆவது பிறந்தநாள் நிறைவு விழாவில் அவர் பேசியது: உலகளவில் பல்வேறு நாகரிகம் இருந்தாலும் இந்தியாவின் கலாசாரம் மற்றும் நாகரிகம் ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியமிக்கது. பல நாடுகளில் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடையே மோதல்கள் ஏற்படுகின்றன. ஆனால், பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக வாழ்ந்து வந்தாலும் இந்தியாவில் மதச்சார்பின்மை காக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகத் தான் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் ஒற்றுமைய…
-
- 0 replies
- 362 views
-
-
புதிய சட்டங்களை இயற்றுவதற்கு முன்பாக பொதுமக்கள் கருத்தை அறியும் திட்டம் குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. மத்திய அரசின் அமைச்சகங்கள் புதிய சட்டங்களை இயற்றுவதாக இருந்தால், அந்த சட்டம் குறித்து பொதுமக்களின் கருத்துகளை அறிந்து கொள்வதை சட்டபூர்வமாக்கும் செயல் திட்டம் பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. ஆனால், இதில் இறுதி முடிவு எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். புதிய திட்டத்தை அமல்படுத்த முடிவு எடுக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட சட்டம் குறித்து விவாதிப்பதற்காக அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறையின் செயலாளர்களின் கூட்டத்தை கூட்டுவது கட்டாயமாக்கப்படும். அதேபோல் சட்ட மசோதாவின் வரைவு நகலை தயாரிப்பதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அமை…
-
- 0 replies
- 366 views
-
-
டமாஸ்கஸ், ஜன. 5- சிரியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் ரசாயண குண்டுகள் வீசப்பட்டு பொதுமக்கள் 1400 பேருக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து சிரியா மீது போர் தொடுக்க அமெரிக்கா ஆயத்தமானது. பின்னர் ரஷ்யா-அமெரிக்க கூட்டு உடன்படிக்கைபடி, சிரியாவிலுள்ள இரசாயன ஆயுதங்களை அகற்றும் பணியை ஐ.நா. சர்வதேச இரசாயண தடுப்பு அமைப்பு மேற்கொண்டது. இதன், முதல் கட்டமாக சிரியாவின் ரசாயன ஆயுதங்களை ஏற்றிய டேனிஷ் நாட்டு கப்பல், நேற்று லடாக்கிய துறைமுகத்தில் இருந்து இத்தாலிக்கு புறப்பட்டு சென்றது. அக்கப்பலுக்கு ரஷ்ய மற்றும் சீனா கப்பல்கள் பாதுகாப்பாக செல்கின்றன. இந்த மிகமோசமான இரசாயன ஆயுதங்கள் இத்தாலியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள அமெரிக்க கப்பலுக்கு மாற்றப்படும். அங்கு, டைட்டேனியம் தொட்ட…
-
- 0 replies
- 484 views
-
-
மைசூர், கர்நாடக மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளர் என்.மகேஷ் மைசூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. எந்த கட்சிகளுடனும் கூட்டணி அமைக்காமல் கர்நாடகத்தில் பஜகுன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. வருகிற 15–ந்தேதி கட்சியின் தலைவரும், உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்–மந்திரியுமான மாயாவதியின் பிறந்தநாள் விழா உத்தரபிரதேசத்தில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் கர்நாடகத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொள்ள இருக்கிறோம். அப்போது பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் பற்றி, மாயாவதியுடன் பேசி முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார். http://www.…
-
- 0 replies
- 312 views
-
-
தண்ணீர் ஐஸ் ஆக மாறும்போது, அதன் கன அளவு அதிகரிக்கும் (வீட்டில் உள்ள freezer-ல் பாட்டில் தண்ணீரை வைத்தால், அது ஐஸ் ஆகும்போது வெடிப்பது, இதனால்தான்) பெருமாள்
-
- 0 replies
- 412 views
-
-
-
மும்பை, ஆம் ஆத்மி கட்சி பற்றி எங்களுக்கு எந்த வித பயமும் இல்லை என்று சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார். ஆம் ஆத்மி டெல்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, மராட்டியத்தில் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிட போவதாகவும், இதற்காக மாநிலம் முழுவதும் ஒருங்கிணைப்பு கமிட்டி ஏற்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியினர் தெரிவித்தனர். இதனால், மராட்டியத்தில் ஆளும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்–தேசியவாத காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா–சிவசேனா கட்சிகளுக்கு நெருக்கடி முற்றி உள்ளது. தாயார் நினைவு தினம் இந்த நிலையில் நேற்று தனது தாயாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, மும்பை தாதர் சிவாஜி பார்க் பகுதியில் அமைந்து உள்ள…
-
- 0 replies
- 333 views
-
-
இயற்கை விவசாயத்துக்கு உதவக்கூடிய பயிர்களை அழிக்கும் பூச்சிகளை கொல்லக்கூடிய சூரியஒளியால் செயற்படும் பூச்சிக்கொல்லி விளக்கை தமிழக அரசின் தோட்டக்கலை உதவி இயக்குநர் டேவிட் ராஜா பெவ்லா வடிவமைத்திருக்கிறார் Audio news in tamil http://www.bbc.co.uk/tamil/science/2014/01/140107_scienceforall.shtml
-
- 0 replies
- 487 views
-