Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பாகூர்: ஜார்க்கண்டில் 2 சிறுமிகள் 4 பேரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் பாகூர் மாவட்டத்தில் உள்ளது கட்சோரா கிராமம். அந்த கிரமாத்தைச் சேர்ந்த 2 சிறுமிகள் 4 பேரால் நேற்று இரவு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் இன்று காலை அந்த கிராமத்திற்கு சென்ற சிறுமிகளை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த சிறுமிகளை அதே கிராமத்தைச் சேர்ந்த 4 பேர் கற்பழித்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முன்னதாக கடந்த மாதம் 14ம் தேதி இதே பாகூர் மாவட்டத்தில் உள்ள வேறொரு கிராமத்தில் இருக்கும் விடுதியில் இருந்து 4 பழங்குடியின சிற…

  2. காலக்கோட்டுப் படங்கள் நாமெல்லாம் கோழைகளா ?? இல்லை நம் நாடு கோழை நாடா?? 6 வருட பாஜக ஆட்சியில் நாடு எப்படி இருந்தது? நான்கு மற்றும் ஆறு வழி சாலை, அணுகுண்டு சோதணை 4 இந்திய ராணுவ வீரர்களை கொன்றதற்கு கார்கில் போர்..... போரில் வெற்றி.... பாகிஸ்தான் பயந்தது....சீனா வாயே பேச வில்லை... அணுகுண்டு சோதணை நடந்த போது அமெரிக்கா நம் மீது பொருளாதர தடை விதித்தது... பின் அமெரிக்காவே அந்த தடையை விலக்கியது....ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து... மற்ற எல்லா நாடுகளும் நம்முடன் நெருங்கி வந்தது... ஜ.நா சபையில் இந்தியாவை உறுப்பினராக்க வேண்டும் என்று எல்லா வல்லரசு நாடுகளும் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தன... உலகமே இந்தியாவை கண்டு பயந்தன.... இவையெல்லாம் யாரால் நடந்தது... ஒரு தேச பக்தி மி…

  3. நேதாஜி பற்றிய ஆச்சரிய தகவல் நேதாஜியின் மரணம் குறித்த விஷயங்களை சேகரித்து வைத்திருப்பவரும், அகில இந்தியப் பார்வார்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளருமான தேவப்பிரதா பிஸ்வாஸ் சமீபத்தில் புதுச்சேரி வந்திருந்தார். அவருடன், மாநிலங்களவை உறுப்பினரான பரூண் முகர்ஜியும் இருந்தார். பிஸ்வாஸும் முகர்ஜியும் நேதாஜி பற்றிய மர்மங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள். ''நேதாஜியின் மரணம் சட்டப்படி உறுதி செய்யப்பட்டுவிட்டதா?'' ''ஆகஸ்ட் 18, 1945-ல் தைவான் தலைநகர் தாய்பேய் விமான நிலையத்திலோ, அதற்கு அருகாமையிலோ நடந்த விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை. எப்படியென்றால், நேதாஜி மரணம் குறித்து இந்திய அரசால் அமைக்கப்பட்ட முகர்ஜி கமிஷனிடம், அமெரிக்க உளவுத்துறையால் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண …

    • 7 replies
    • 7.1k views
  4. கடந்த 4 ஆண்டுகளில் பாராளுமன்ற மக்களவை கூட்டம் மொத்தம் 314 நாட்கள் நடைபெற்றன. அவற்றில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் ஏறத்தாழ பாதி நாட்கள் நடைபெற்ற கூட்டங்களில் மட்டுமே பங்கேற்று இருக்கிறார்கள். சோனியா காந்தி 48 சதவீதமும், ராகுல் 43 சதவீத கூட்டங்களிலும் கலந்து கொண்டனர். கட்சித்தலைவர்களில் முலாயம்சிங் யாதவ் (சமாஜ்வாடி) அதிக நாட்கள், அதாவது 86 சதவீத கூட்டங்களுக்கு வந்து இருக்கிறார். அவருக்கு அடுத்து பா.ஜனதாவின் மூத்த தலைவர் அத்வானி 82 சதவீதமும், ராஜ்நாத்சிங் 80 சதவீத நாட்களும் சபை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ், 83 சதவீத நாட்களும், ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத் யாதவ் 70 சதவீத நாட்களும் சபை…

  5. பாக். தாக்குதல்- மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க சோனியா, ராகுல் வலியுறுத்தல். டெல்லி: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் அருகே எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாகிஸ்தான் தரப்பில் இருந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 இந்திய வீரர்கள் பலியாகினர். நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா வெளியிட்டுள்ள அறிக்கையில், இது போன்ற அப்பட்டமான துரோகத்திற்கு இந்திய தேசம் ஒரு போதும் அடி பணியாது. இது தொட…

  6. மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய பறவைக்காய்ச்சலின் வகையொன்று சீனாவில் கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முதல் தடவையாக இதுபோன்றதொரு நிலை ஏற்பட்டுள்ளது என பிரித்தானியாவின் மருத்துவ சஞ்சிகை ஒன்று குறிப்பிட்டுள்ளது. 32 வயதான பெண்ணொருவருக்கு அவரது தந்தையிடமிருந்து இந்தப் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. இவர்கள் இருவரும் பின்னர் உயிரிழந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. எனினும், H7N1 வைரஸ், மனிதர்களுக்குப் பரவும் அளவுக்கு விருத்தி பெற்றுள்ளதா என்பது குறித்து உறுதி செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. சீனாவின் கிழக்குப் பிராந்தியத்தில் இந்த வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ள 133 சம்பவங்கள் பதிவானதுடன், 43 பேர் உயிரிழந்துள்ளன…

  7. இந்திய ஜம்மு காஷ்மீர் எல்லையில் இன்று அதிகாலை இந்தியா, பாகிஸ்தான் ராணுவத்தினரிடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்துள்ளது. இதில் 2 பாகிஸ்தான் வீரர்கள் படுகாயமடைந்ள்ளனர். ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டைக் கோட்டை கடந்து இந்திய பகுதிக்குள் ஊடுருவி பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது. இந்த நிலையில் இன்று காலை ஊரி செக்டார் பகுதியில் கமல்கோட் என்ற இடத்தில் இரு ராணுவத்தினரிடையேயும் கடும் துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்துள்ளது. சுமார் ஒன்றரை மணி நேரம் இம்மோதல் நீடித்திருக்கிறது. இதில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 2 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாடு உறுதி செய்துள்ளது…

  8. டெல்லி: தமிழக மீனவர்கள் 90 பேரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கும் விவகாரம் தொடர்பாக இலங்கை தூதருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பி வரவழைத்து கண்டனம் தெரிவித்தது. தமிழக மீனவர்கள் கடந்த ஒரு சில வாரங்களில் கொத்து கொத்தாக கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்படுவது தொடர் கதையாகிவிட்டது. இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் இலங்கை அரசின் தூதரை நேரில் அழைத்து கண்டிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் மூலம் வலியுறுத்தி இருந்தார். இதைத் தொடர்ந்து இன்று மத்திய அரசு, இலங்கை தூதருக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து கண்டனம் தெரிவித்துள்ளது. இதேபோல் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சகத்திடமும் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரும் இந்த விவகாரம் தொடர்பாக…

  9. கடும் அமளி: ராஜ்யசபா நேற்று காலை கூடியதும், ஜம்மு - காஷ்மீரில், ராணுவ வீரர்கள் ஐந்து பேர், பாக்., ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், பெரிய அளவில் வெடித்தது. "இந்தப் பிரச்னை குறித்து, உடனே விவாதம் நடத்த வேண்டும்' என, பா.ஜ., உட்பட, எதிர்க்கட்சிகள் பலவும் கோரிக்கை விடுத்தன; அத்துடன், அமளியிலும் ஈடுபட்டன. இந்த அமளிக்கு இடையே, பா.ஜ.,வைச் சேர்ந்த, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி பேசியதாவது: ஐந்து ராணுவ வீரர்களை, இந்தியா பறிகொடுத்திருக்கிறது. இதை, சாதாரண உயிரிழப்பு என, எடுத்துக் கொள்ள முடியாது. ராணுவ வீரர்கள், சுட்டுக் கொல்லப்பட்ட விஷயத்தை, மத்திய அரசு தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டும். தொடர்ச்சியாக ஊடுருவல் சம்பவங்களையும், இதுபோன்ற உயிர்பலி சம்பவங்…

  10. பிரேசில் சிறையில் கைதிகளுக்கிடையே மூண்ட கலவரத்தை அடக்கும் முயற்சியில் போலீசாரால் கைதிகள் கொல்லப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட 25 போலீசாருக்கு 624 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. பிரேசில் நாட்டில் உள்ளது சாவோ பவுலோஸ் என்ற ஜெயில். இங்கு 1992-ம் ஆண்டு கைதிகள் இடையே பயங்கர கலவரம் உண்டானது. கலவரத்தை அடக்க போலீசார் கடும் முயற்சிகள் மேற்கொண்டனர். இந்தக் கலவரத்தில் சுமார் 111 கைதிகள் பரிதாபமாக பலியானார்கள். அவர்களில் 52 கைதிகள் போலீசாரின் குண்டடியில் பலியானவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது. எனவே, போலீசார் மிகவும் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டதாக, அவர்கள் மீது வழக்கு தொடரப் பட்டது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலே நடைபெற்ற வழக்கில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. க…

    • 1 reply
    • 366 views
  11. காஷ்மீரில் பூஞ்ச் பகுதியில்.. பாகிஸ்தான் elite commandos இந்திய எல்லைக்குள் ஊடுருவி நடத்திய பதுங்கித் தாக்குதலில் வீதி உலா வந்த 5 இந்தியப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் இப்படி இந்தியப் படைகளை அடிக்கடி வேட்டையாடி வரும் நிலையிலும் கையாலாகாத இந்தியா எதையாவது சாக்குப் போக்குச் சொல்லி தப்பித்துக் கொள்கிறது..! இவர்களின் வீரமெல்லாம்.. அப்பாவி.. ஈழத்தமிழர்களை சிங்களவனோடு சேர்ந்து நின்று கொல்வதில் தான். பிரதான செய்தி இங்கு: Kashmir: Five Indian soldiers 'killed in shooting' Five Indian soldiers have been shot dead in Indian-administered Jammu and Kashmir, the chief minister of the disputed region says. http://www.bbc.co.uk/news/world-asia-ind…

  12. இந்தியாவிலிருந்து தனது மகளுடன் துபாய்க்கு வந்திருந்த 67 வயது முதியவரை மெட்ரோ ரயிலில் ஏற அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தி விட்டனர் துபாய் போலீஸார். அவர் வேட்டியுடன் வந்திருந்ததே இதற்குக் காரணம். இதனால் அந்த முதியவரும், மகளும் ரயிலில் பயணிக்க முடியாமல் தவித்துப் போய் திரும்பும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து முதியவரின் மகளான மதுமது கூறுகையில், நானும் எனது தந்தையும் எடிசலாட் மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் சென்றோம். மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்காக அங்கு சென்றோம். ஆனால் எனது தந்தை வேட்டியுடன் இருந்ததால் அவரை அனுமதிக்க மறுத்து நிறுத்தி விட்டார் ஒரு போலீஸ்காரர். நான் அந்த போலீஸ்காரரிடம் பலமுறை கெஞ்சியும், வேட்டி பாரம்பரிய உடை என்று கூறியும் அவர் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. அனுமதிக்க மு…

  13. காஞ்சிபுரம்: கல்பாக்கம் அருகே கடலுக்கடியில் எரிமலை இருப்பதாக தேசிய பேரிடர் மேலாண்மைக் கழகத்தின் இணையத்தில் வரைபடம் உள்ளது. ஆனால் அரசு இதுகுறித்து எந்த பதிலும் தெரிவிப்பதில்லை என கல்பாக்கம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். ஹிரோசிமா-நாகசாகி நினைவு தினமான இன்று கல்பாக்கத்தில், 'கல்பாக்கம் சுற்று வட்டார கிராம மக்களுக்கு அணு ஆற்றல் நகரியத்திற்கு வழங்குவதைப்போன்று தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். இனி கல்பாக்கத்தில் புதிய அணு உலைகள் அமைக்கக் கூடாது. மறுசுழற்சி என்ற பெயரில் மற்ற அணு உலைகளின் கழிவுகளை கல்பாக்கத்திற்கு கொண்டுவரக்கூடாது. கதிர் வீச்சு பாதிப்புகளை கண்டறியவும், கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கவும் அனைத்து வசதிகளுடன் கூட…

    • 1 reply
    • 382 views
  14. புதுடெல்லி: இந்தியாவின் நகர்ப்புறங்களில் செயல்படும் கிளினிக்குகளில் உள்ள டாக்டர்களில் பெரும்பான்மையானோர், எம்.பி.பி.எஸ். மருத்துவம் படிக்காதவர்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. நகர்ப்புறங்களில் பொதுமருத்துவர் என்று பெயர் போட்டுக்கொள்ளும் மருத்துவர்களில் பெரும்பான்மையானோர் முறையாக எம்.பி.பி.எஸ். படிக்காமல் ஆயுர்வேதா, ஹோமியோபதி என்று ஏதாவது ஒன்றில் ஒரு பட்டத்தை வாங்கி வைத்துக் கொண்டு ஆங்கில மருத்துவம் எனப்படும் அலோபதி மருத்துவத்தில் இறங்கி விடுகின்றனர். அதேபோன்று கண், காது, மூக்கு என்று சிறப்பு மருத்துவம் படித்தவர்களும் பொது மருத்துவர் என்று சொல்லிக்கொண்டு இறங்குகின்றனர். இவர்களுக்கு நவீன மருத்துவம், அது சார்ந்த கருவிகள் பற்றி எதுவும் தெரிவதில்லை. கிளினிக்குக்கு வரு…

  15. இரண்டாம் உலகப்போரின் போது, ஜப்பான் தலைநகர் ஹிரோஷிமா மீது 1945 ஆக.6ம் தேதி அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்கியது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர்.இதன் தாக்கம் இன்றும் தொடர்கிறது. பலியான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், உலகில் அமைதி நிலவ வேண்டியும், ஆண்டுதோறும் ஆக.6ம் தேதி, ஹிரோஷிமா நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.இரண்டாம் உலகப்போரின் இறுதிக்கட்டத்தின் போது, ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. இதுவே உலகின் முதலும், கடைசியுமான அணுகுண்டு தாக்குதல். உலக வரலாற்றில் அமெரிக்கா, முதன் முதலாக அணுகுண்டு தாக்குதலை தொடங்கியது. �லிட்டில்பாய்' எனும் 60 கிலோ எடையுள்ள அணுகுண்டை சுமந்து வந்த "பி-29 ரக எனோலாகெ…

  16. 4 லட்சம் பிரித்தானியத் தமிழர்கள் வாக்குகளை இழக்கவிருக்கும் கான்சர்வேட்டிவ் கட்சி ! இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெலத் மாநாட்டிற்கு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் செல்லக்கூடாது, என்று தமிழர்கள் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். பிரித்தானியாவில் இயங்கிவரும் தமிழ் சொலிடாரிட்டி குழுவினர் மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவையினர் இதுதொடர்பாக பிரித்தானிய அரசுக்கு தொடர்ந்தும் அழுத்தங்களைக் கொடுத்து வருகிறார்கள். சுமார் 4 லட்சம் தமிழர்கள் வாழும் பிரித்தானியாவில், அவர்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுமாறு பல வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பிரித்தானிய வெளியுறவு அமைச்சுக்கு தமிழ் சொலிடாரிட்டி குழுவினர் இதுதொடர்பாக கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்கள். பி…

  17. டெல்லி: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 5 இந்திய ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் நாடாளுமன்றத்தில் கடும் அமளியை ஏற்படுத்தியது. அமளிக்கிடையே லோக்சபாவில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ஆண்டனி, எல்லையில் பாகிஸ்தானின் எத்தகைய ஒரு தாக்குதலையும் எதிர்கொள்ள ராணுவம் முழு அளவில் தயாராக இருக்கிறது என்றார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. ஆனால் தெலுங்கானாவுக்கு எதிர்ப்பது, புதிய மாநிலங்கள் உருவாக்க வேண்டும் என்று போன்ற முழக்கங்களால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இன்று காலையும் நாடாளுமன்ற இரு சபைகளும் கூடின. அப்போது மாநில பிரிவினை முழக்கங்களுடன் எல்லையில் 5 ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் தொடர்பாக அரசு விளக்கம் அளிக்கக் கோரியும் முழக…

    • 1 reply
    • 249 views
  18. பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய இருவேறு தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலுசிஸ்தான் பகுதியைச் சேர்ந்த பிரிவினைவாத கிளர்ச்சிக்காரர்கள் பிபிசியிடம் தகவல் தருகையில், கிழக்கிலுள்ள பஞ்சாப் மாநிலத்துக்கு சென்றுகொண்டிருந்த பஸ் ஒன்றிலிருந்து 26 பயணிகளைக் கடத்திக் கொண்டுபோய் அதில் பாதி பேரை சுட்டுக் கொன்றதாகத் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் பலுச் மாகாண தலைநகரான கெட்டாவுக்கு எழுபது கிலோமீட்டர் தொலைவில் பள்ளம் ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.இராணுவத்துடனோ பாதுகாப்பு துறையுனோ தொடர்பு இருப்பவர்களாக தாம் கருதியவர்களை பிரிவினைவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். பல காலமாகவே பிரிவினைவாத வன்முறைகளை பலுசிஸ்தான் அனுபவித்துவருகிறது. இரண்டாவது தாக்குதல் நாட்ட…

  19. டெல்லி: ஹிமாச்சல் பிரதேசம், அருணாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களை உரிமை கோரி தாக்குதல் நடத்த சீனா தயாராகி வருகிறது என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் தெரிவித்துள்ளார். லோக்சபாவில் ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதில் 5 இந்திய ராணுவ வீரர்கள் பலியானது தொடர்பாக பேசிய முலாயம்சிங், எல்லைகளில் சீனாவின் ஊடுருவல்கள் மற்றும் பாகிஸ்தான் தாக்குதல்களில் இந்திய வீரர்கள் பலியாகும் சம்பவங்களைத் தடுக்க என்ன நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது? என்பதை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விவரிக்க வேண்டும். சீனாவையும் பாகிஸ்தானையும் நாம் நம்பக் கூடாது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டி தொடர்ந்து சீனா இந்திய பகுதிக்குள் ஊடுருவி வருகிறது. இந்திய ராணுவ வீரர்களை பாகிஸ்தான் த…

    • 1 reply
    • 521 views
  20. பொதுநலவாய நாடுகளின் கொழும்பு மாநாட்டில் பங்கேற்கக்கூடாது என்ற தமது கோரிக்கைக்கு இந்திய மத்திய அரசாங்கம் உரிய பதிலை வழங்கவேண்டும். இல்லையேல் மத்திய அரசாங்கத்துடன் உறவுகளை வைத்துக்கொள்ளப்போவதில்லை என்று திராவிட முன்னேற்றக்கழகம் எச்சரித்துள்ளது. திராவிட முன்னேற்றக்கழகத்தின் பேச்சாளர் டிகேஎஸ் இளங்கோவன் இதனை தெரிவித்துள்ளார் ஏற்கனவே நட்பு நாடு என்ற வகையில் இலங்கையை கருதக்கூடாது என்று அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியபோதும் மத்திய அரசாங்கம் அதனை நிராகரித்தது இந்தநிலையிலேயே திராவிட முன்னேற்றக்கழகம் தமது கோரிக்கையை மத்திய அரசாங்கத்தின் முன்னால் வைத்துள்ளது என்று தெ இக்கோனோமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது. http://www.sankathi24.com/news/32110/64//d,fu…

  21. தனி தெலங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நடந்த பந்தின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.தனி தெலங்கானா மாநிலம் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளில் உள்ள 13 மாவட்டங்களில் பந்த் நடத்தப்பட்டது. ஆந்திர ஒருங்கிணைப்பு கூட்டுக்குழு, மாணவர்கள், அரசு ஊழியர்கள் தர்ணா, ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் சில இடங்களில் கலவரங்கள் மூண்டது. அனந்தபூர் மாவட்டத்தில் ஒருங்கிணைப்பு கூட்டுக்குழுவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று காலை கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து அனந்தபூரில் மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி…

  22. ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டுப்படைகள் அடுத்த ஆண்டு விலகும்போது, தாங்கள் அதிகாரத்தை ஏகபோகமாகக் கைப்பற்ற முயலமாட்டோம் என்று ஆப்கன் தாலிபானின் தலைவர் முல்லா முகமது ஒமார் கூறியிருக்கிறார். முஸ்லீம் பண்டிகையான ஈத் பெருநாளுக்கு முன்னதாக விடுத்த அறிக்கை ஒன்றில், இஸ்லாமியக் கொள்கைகளின் அடிப்படையில் அமைந்த ஒரு அனைத்து தரப்புகளையும் உள்ளடக்கும் அரசு ஒன்றை உருவாக்குவதற்கு ஆப்கானிய மக்களுடன் ஒரு புரிந்துணர்வை தாலிபான்கள் எட்ட முயல்வார்கள் என்றார் ஒமார். அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தல்களைப் பற்றி தனது வெறுப்பை மீண்டும் வெளிப்படுத்திய ஒமார், இது ஒரு காலத்தை வீணடிக்கும் செயல் என்றார். முல்லா ஒமார், 2001ம் ஆண்டிலிருந்து தலைமறைவாக இருக்கிறார். அவரைப் பிடித்துத் தருபவர்களுக்கு…

  23. காஷ்மீரின் லடாக் பகுதியில் இந்திய ராணுவத்தினரின் ரோந்துப் பணியை சீன ராணுவம் தடுத்து வருகிறது. இதனால் அப்பகுதியில் புதிய பிரச்னை உருவாகி பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய, சீன எல்லையில் வடக்கு லடாக் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த 2 சோதனைச் சாவடிகள் இடையே இந்திய ராணுவத்தினர் திரங்காஎன்ற பெயரில் ரோந்துப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ரோந்துப் பணியில் இந்திய வீரர்கள் ஈடுபட்டனர். ஆனால், சீனா அந்த வழியில் ஒரு கண்காணிப்பு கோபுரத்தை அமைத்துள்ளது. இந்திய ராணுவத்தினர் ரோந்து வரும்போது அவர்களை சீன ராணுவத்தினர் இடைமறித்து, அது தங்களுடைய பகுதி என்று கூறி திருப்பி அனுப்பி விடுகின்றனர். கடந்த ஏப்ர…

  24. திபெத் அருகே உலகிலேயே மிகவும் உயரமான விமான நிலையத்தை சீனா அமைத்து வருகிறது. இமயமலைப் பிரதேசத்தில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக டாவ்செங் யாடிங் என்ற இந்த விமான நிலையத்தை சீனா கட்டி வருகிறது. சிச்சுவான் மாகாணத்தில் உள்ள கார்ஜி திபெத் தன்னாட்சி பகுதியின் அதிகார எல்லையில் 4411 மீட்டர் உயர விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக சீன அரசின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான ஜிங்குவா தெரிவித்துள்ளது. இது திபெத் தன்னாட்சி பிராந்தியத்தில் காம்டோ என்ற இடத்தில் அமைந்துள்ள பாங்டா விமான நிலையத்தை விட உயரமானதாகும். அந்த விமான நிலையம் கடல் மட்டத்தில் இருந்து 4 334 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. திபெத் பிராந்தியத்தில் இதுவரை கோங்க்கார் லாஸ பாங்டா ஸிக…

    • 1 reply
    • 509 views
  25. ஆஸ்திரேலியாவில் பொதுத் தேர்தலுக்கான தேதிகளை பிரதமர் கெவின் ரட் அறிவித்துள்ளார். செப்டம்பர் ஏழாம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. ஆனால் பிரச்சாரம் ஏற்கனவே தொடங்கிவிட்டதை இங்கு பலரும் உணர்ந்திருக்கின்றனர்.பிரதமருடைய இன்றைய அறிவிப்பின் மூலம் ஆஸ்திரேலியாவில் தேர்தல் பிரச்சாரங்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படுகின்றன என்று கூறலாம். நாட்டை ஆண்டுவரும் கெவின் ரட்டையும் அவரது தொழிற்கட்சியையும் எதிர்த்து எதிரணியில் உள்ள டோனி அப்பாடும் அவரது கன்சர்வேடிவ் கூட்டணியும் மோதுவதாக தேர்தல் அமைந்துள்ளது. ஆஸ்திரேலிய அரசியலில் கடந்த சில மாதங்களில் கணிசமான மாற்றங்கள் நடந்துள்ளன. சில மாதங்கள் முன்பு, இந்த தேர்தலில் ஆளும் தொழிற்கட்சி பெருந்தோல்வியைச் சந்திக்கும் என்ற நிலை இருந்துவந்தது. ஆனா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.