Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. முன்னாள் மத்திய அமைச்சர் அருண் நேரு (வயது 69) உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். லக்னோவில் பிறந்த அருண் நேரு, நேரு குடும்பத்து உறவினராவார். ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த போது மிக முக்கிய நபராக இருந்தார். ராஜிவ் அமைச்சரவையிலும் அவர் இடம்பெற்றிருந்தார். அருண்நேருவின் ஆலோசனையின் பேரில் 1984ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அமிதாப் பச்சன், சுனில் தத் மற்றும் மாதவ் ராவ் சிந்தியா ஆகியோரை ராஜிவ் களமிறக்கினார். இருப்பினும் போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் வி.பி.சிங்., ராஜிவ் அமைச்சரவையில் இருந்து வெளியேறிய போது அருண் நேருவும் விலகினார். வி.பி.சிங் முதலில் உருவாக்கிய ஜன் மோர்ச்சாவில் அருண் நேரு ஐக்கியமானார். பின்னர் வி.பி.சிங் தலைமையில் ஜனதா தள் அரசு அமைவதிலும் அருண் நேரு முக்கிய பங்கு வகித்…

  2. முன்னாள் மத்திய அமைச்சர் அருண் நேரு (வயது 69) உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். லக்னோவில் பிறந்த அருண் நேரு, நேரு குடும்பத்து உறவினராவார். ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த போது மிக முக்கிய நபராக இருந்தார். ராஜிவ் அமைச்சரவையிலும் அவர் இடம்பெற்றிருந்தார். அருண்நேருவின் ஆலோசனையின் பேரில் 1984ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அமிதாப் பச்சன், சுனில் தத் மற்றும் மாதவ் ராவ் சிந்தியா ஆகியோரை ராஜிவ் களமிறக்கினார். இருப்பினும் போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் வி.பி.சிங்., ராஜிவ் அமைச்சரவையில் இருந்து வெளியேறிய போது அருண் நேருவும் விலகினார். வி.பி.சிங் முதலில் உருவாக்கிய ஜன் மோர்ச்சாவில் அருண் நேரு ஐக்கியமானார். பின்னர் வி.பி.சிங் தலைமையில் ஜனதா தள் அரசு அமைவதிலும் அருண் நேரு முக்கிய பங்கு வகித்…

  3. அமெரிக்காவின் உளவு முகத்தை உலகம் முழுவதும் அம்பலப்படுத்திய பெரும் பரபரப்பூட்டிய விக்கீக்ஸ் அதிபர் ஜூலியன் அசாஞ்சே அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளார். பிறப்பால் ஆஸ்திரேலியரான இவர், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் செனட் தேர்தலில் தனது கட்சியை களம் இறக்கியுள்ளார். இத்தேர்தலில் 2 இந்திய வம்சவாளியினருக்கும் அவர் தேர்தலில் சீட் கொடுத்துள்ளார். மொத்தம் 7 வேட்பாளர்களை அசாஞ்சே இதுவரை அறிவித்துள்ளார். அதில் 2 பேர் இந்திய வம்சவாளியினர் என்பது குறிப்பிடத்தக்கது.லண்டனிலிருந்தபடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் தனது கட்சியை தொடங்குவதாக அறிவித்தார் அசாஞ்சே.மேலும் விக்டோரியா தொகுதியிலிருந்து தானே போட்டியிடுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.மலேசியாவில் பிறந்தவரான பினோய் கம்ப்மார்க் விக்டோரியா மேல் சபைக்குப்…

  4. ஸ்பெயின் நாட்டில் நேற்று நடந்த கோர ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. படுகாயமடைந்த 100க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஸ்பெயின் நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள சான்டியாகோ நகரில் நேற்று நடைபெற இருந்த கிறிஸ்தவ ஆலய விழாவில் பங்கேற்பதற்காக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ரயில்களில் ஏராளமானோர் வந்துள்ளனர். அதுபோன்று யாத்ரீகர்கள் வந்த ஒரு ரயில்தான் விபத்தில் சிக்கியிருக்கிறது. 8 பெட்டிகள் கொண்ட அந்த ரயிலில் 5 ரயில்வே பணியாளர்களும், 218 பயணிகளும் இருந்துள்ளனர் . ரயில் வளைவு ஒன்றில் அதிவேகத்தில் திரும்பும்போதுதான் தடம்புரண்டு பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கியுள்ளது. அந்த வளைவில் அதிகபட்ச…

  5. உலகிலேயே சிறந்த கிரிக்கெட் அணி உள்ள நாட்டுக்கு சென்று வந்துள்ளேன் என்று அமெரிக்கா சென்றதும் டெலாவேர் கிரிக்கெட் கிளப்பில் கூறுவேன் என்று அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடென் தெரிவித்துள்ளார். அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடென் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் நேற்று மும்பைக்கு வந்தார். மும்பை பங்குச் சந்தைக்கு சென்ற அவர் அங்கு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறுகையில், 1972ம் ஆண்டில் எனது 29வது வயதில் அமெரிக்க செனட்டுக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டபோது ஒரு கடிதம் வந்தது. அதை கண்டுகொள்ளாமல் விட்டதை நினைத்து வருத்தப்படுகிறேன். என் பெயர் பிடென், நான் மும்பையில் இருந்து எழுதுகிறேன். நாம் உறவினர்கள் என்று அதில் எழுதப்பட்டிருந்தது. எங்களுடைய வம்சத்தினர் 1700களில் கிழக்கு…

  6. சென்னை: குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா தரக் கூடாது என்று கோரி அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அனுப்பப்பட்ட மனுவில் தொல்.திருமாவளவன் கையெழுத்திட்டுள்ளார். குஜராத்தில் நடந்த இனப்படுகொலையை அமெரிக்க உள்ளிட்ட பல வெளிநாடுகள் கண்டித்தன. இங்கிலாந்தைச் சேர்ந்த 24 எம்.பி.க்கள் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா வழங்கக்கூடாது என்று கோரிக்கை விடுத்தன. மேலும் இந்திய எம்.பி.க்கள் 65 பேர் கையெழுத்திட்ட கடிதம் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்தில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் எம்.பி.யும் கையெழுத்து போட்டுள்ளார். இது குறித்து கூறிய திருமாவளவன், ’’குஜராத்தில் நடந்த இனப்படுகொலையை அமெரிக்க உள்ளிட்ட பல வெளிநாடுகள் கண்டித்தன. இங்கிலாந்தைச் சேர்ந்…

  7. தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா செல்ல விசா அளிக்கக் கூடாது என்று இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கையெழுத்திட்டு அமெரிக்கக் குடியரசு தலைவருக்குக் கடிதம் எழுதியதாக ஏடுகளில் செய்தி வந்துள்ளது. ஆனால் அந்தக் கையெழுத்தினை தாங்கள் போடவில்லை என்றும், இந்தப் பிரச்சினையைக் குறிப்பிட்டு தங்களிடம் யாரும் கையெழுத்து பெறவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருக்கிறார்கள். தி.மு. கழக நாடாளுமன்ற உறுப்பினர்களை நான் தொடர்பு கொண்டு கேட்டபோது தாங்கள் அவ்வாறு கையெழுத்திடவில்லை என்று மறுத்துள்ளார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீத்தாராம் யெச…

    • 0 replies
    • 306 views
  8. இந்தியாவில் உள்ள அனைவருக்கும் அறிவிப்பது என்னவென்றால் இனி F.I.R கேட்க கூடாது! இந்தியாவிலுள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் ஒரு அறிவிப்பு… சாலை விபத்தில் யாரேனும் உயிருக்கு போராடும் சூழ்நிலையில்,தங்களின் பார்வையில் பட்டால், உடன் அவர்களை அருகில் உள்ள மருத்துவ மனையில் சேர்த்து, விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற வேண்டியது நமது மற்றும்மருத்துவரின் மனிதாபிமானமான கடமை. இதற்கு மருத்துவமனை நிர்வாகம் கண்டிப்பாக முதல் தகவல் அறிக்கை (F.I.R.) கேட்கக்கூடாது என்று நமது மாண்புமிகு உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது…. முதலுதவி அளித்த பிறகு காவல்துறைக்கு தகவல் தெரிவித்து கொள்ளலாம்… தயவு செய்து இந்த செய்தியை தங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் பரப்புங்கள்…. அது அனை…

  9. வினவின் பக்கம் சொத்துக்களைக் கைப்பற்ற சாய்பாபா உறவினர்கள் அடிதடி ! ஆன்மீக ‘மணம்’ பரப்பும் புட்டபர்த்தி சத்ய சாய்பாபாவின் உறவினர்களுக்கு இடையேயான சண்டை சமீபத்தில் வன்முறையாக வெடித்திருக்கிறது. சாய்பாபாவின் உறவினரும் சத்ய சாய் அறக்கட்டளையின் உறுப்பினருமான ரத்னாகர் ராஜுவுக்கும் இன்னொரு உறவினரும் அந்த அறக்கட்டளையில் தனது தனது செல்வாக்கு இருக்க வேண்டும் என்று முயற்சித்து வரும் கணபதி ராஜூ என்பவருக்கும் இடையே மோதல் நடந்திருக்கிறது. கணபதி ராஜு, ரத்னாகரின் சட்ட விரோத செயல்களைப் பற்றி பிரதமர், ஜனாதிபதி முதல் பல்வேறு உயர் பதவி வகிப்பவர்களுக்கு கடிதங்கள் எழுதியிருக்கிறார். அதனால் ரத்னாகர் அவர் மீது கடுப்பாக இருந்திருக்கிறார். பிறகு rajuug1958@yahoo.com என்ற மின்னஞ்சலிலிருந்து அற…

  10. இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் கடந்த 22ம் தேதி லண்டனில் உள்ள புனித மேரி ஆஸ்பத்திரியில் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இங்கிலாந்து அரச வம்சத்தின் புதிய வாரிசை வரவேற்று நாடெங்கிலும் விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில் இங்கிலாந்து அரண்மனை மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குட்டி இளவரசன் பிறந்த 22ம் தேதி இங்கிலாந்து நாட்டில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் அரச முத்திரை பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயங்களை அன்பளிப்பாக வழங்குவதாக பக்கிங்காம் அரண்மனை நேற்று அறிவித்தது. இதற்காக 2013 வெள்ளி நாணயங்கள் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளன. இந்திய மதிப்புக்கு சுமார் ரூ 2 ஆயிரத்து 500 பெறுமானமுள்ள இந்த நாணயங்களை பெற விரும்புவோர் த…

  11. பாகிஸ்தானில் பிறந்து, தற்போது இங்கிலாந்தில் வாழ்ந்து வந்த சாண்ட் கவுர் பஜ்வா என்ற 115 வயது பாட்டி கடந்த வெள்ளியன்று இயற்கை எய்தினார். மூன்று நூற்றாண்டுகள் மற்றும் இரண்டு உலகப்போர்களைப் பார்த்த மிகவும் வயது முதிர்ந்த பெண்மணியான இவர், கடந்த வெள்ளியன்று வயோதிகத்தின் காரணமாக உயிரிழந்தார். சாண்ட் கவுர் பஜ்வா 1898ம் ஆண்டு ஜனவரி 1ம்தேதி தற்போது பாகிஸ்தானில் உள்ள குஜராத் பகுதியில் பிறந்தார். ஆனால், 1960ம் ஆண்டு இங்கிலாந்துக்கு குடி பெயர்ந்தார். இங்கிலாந்தின் பாட்டி... பஜ்வா தான் இங்கிலாந்தின் வயது மூத்த பெண்மணி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. உலகளவில் வயது முதிர்ந்த இரண்டாவது பெண்மணி இவர். 16 வயதில் மணமுடிக்கப்பட்ட பஜ்வா, சிறு வயதிலேயே பெற்றோரை இழந…

  12. 73 அரசியல் கைதிகளை பர்மா விடுதலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாற்றுக் கொள்கையாளர்கள் அனைவரும் இந்த வருட இறுதிக்குள் விடுதலை செய்யப்படுவர் என பர்மா ஜனாதிபதி தெய்ன் சியன் உறுதியளித்திருந்தார். காச்சின் இன சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2010ம் ஆண்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டது முதல் பல்வேறு அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இன்னமும் 100க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் பர்மாவின் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் குறித்த கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/94371/language/ta-IN…

  13. பாக்தாத்: சிறைச்சாலைகளில் விடிய விடிய துப்பாக்கிச் சண்டை நடத்தி சிறைக்கைதிகளாக உள்ள 1000க்கும் மேற்பட்ட அல்-கொய்தா தீவிரவாதிகளை விடுவித்துள்ளது ஜிஹாத் அமைப்பு. ஈராக்கின் தாஜி மற்றும் அபு கரிப் நகரங்களில் உள்ள 2 சிறைச்சாலைகளில் சாதாரணக் கைதிகளோடு இணைந்து, ஆயிரக்கணக்கான அல்-கொய்தா தீவிரவாதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று முந்தினம் இரவு அச்சிறைகளின் மீது தாக்குதல் நடத்திய ஜிஹாத் அமைப்பினர். இதில் சுமார் ஆயிரம் கைதிகள் தப்பி ஓடியதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நேற்று ஜிஹாத் அமைப்பினர் ட்வீட்டரில் வெளியிட்டுள்ள தகவலில் ‘தாங்களே சிறைச்சாலைகள் மீது தாக்குதல் நடத்தி சுமார் ஆயிரம் அல்-கொய்தா தீவிரவாதிகளை விடுவித்து சென்றோம்' என தெரிவித்துள்ளனர். கைதிகள் தப்பியோடி…

  14. குவைத் மன்னர் அப்துல்லாஹ் அல் ஷபாஹ் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றப்போவதாக தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின்போது தெரிவித்துள்ளார். தான் முழு மனதுடன் கிறிஸ்தாவ மதத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக அந் நிகழ்ச்சியின்போதுதெரிவித்துள்ளார். கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்ட காரணத்திற்காக தான் கொல்லப்படலாம் என்றும் மன்னர் தெரிவித்துள்ளார். இவரது அறிவிப்பு குவைத் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. http://www.ilankainet.com/2013/07/blog-post_23.html

  15. லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் ராணுவப் பிரிவை தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாக ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது. அமெரிக்காவும், இஸ்ரேலும் ஹிஸ்புல்லா இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக ஏற்கெனவே அறிவித்துள்ளன. ஐரோப்பிய யூனியனும் அந்த அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த 28 நாட்டு நிதியமைச்சர்களின் மாதாந்திர கூட்டத்தில் ஹிஸ்புல்லா இயக்கத்தை பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் சேர்ப்பது எனதிங்கள்கிழமை ஒருமனதாக முடிவு எட்டப்பட்டது. இதன்மூலம், இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கப்பட மாட்டாது. மேலும் இந்த அமைப்புடன் தொடர்புடையவர்களுக்குச் சொந்தமான சொத்துகள் முடக்கப்படும். இதுகுறித்து நெதர்லாந்து நாட்…

  16. கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க தாமதம் ஆவதை சுட்டிக் காட்டி தூக்கு தண்டனைய குறைக்கக் கோரும் மனுக்களை விசாரிக்க 5 நீதிபதிகளைக் கொண்ட தனி அரசியல் சாசன பெஞ்ச் அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி. சதாசிவம் தெரிவித்துள்ளார். தூக்கு தண்டனை கைதிகள் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுபுகின்றனர். அந்த மனு நிராகரிக்கப்பட்ட பின்னர் தாமதமாக முடிவு எடுக்கப்பட்டிருந்தால் அதை சுட்டிக்காட்டி தூக்கை குறைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்படுகிறது. அப்படியான வழக்குகள் தற்போதும் நிலுவையில் உள்ளன. இது தொடர்பாக தலைமை நீதிபதி சதாசிவத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், இதுபோன்ற விஷயங்களில் 2 அல்லது 3 நீதிபதிகளைக் கொண்ட சிறிய பெஞ்சுகள் முரண்பாடான தீர…

  17. சமீப காலமாக வீழ்ச்சி கண்டு வரும் இந்திய பொருளாதாரம், மீட்சி அடைவதற்கான எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை. கடந்த வெள்ளியன்று வெளியிடப்பட்ட பல்வேறு துறைகளின் உத்யோகப்பூர்வ தரவுகளில் பொருளாதார மீட்சி பெறும் எந்த ஒரு அடையாளமும் தெரியவில்லை. வெள்ளியன்று வெளியிடப்பட்ட தரவுகள், தொழில்துறை உற்பத்தி மற்றும் நாட்டின் ஏற்றுமதி போன்றாவை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கிறது. அதைவிட மிக முக்கியமாக நாட்டின் பணவீக்க விகிதம் இரட்டை இலக்கத்தை தொட்டுவிடும் தூரத்தில் உள்ளது. தொழில்துறை உற்பத்தி குறியீட்டு (IIP) கடந்த மே மாதத்தில் சுமார் 1.6 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த 11 மாதங்களில் இதுவே தொழில் துறையின் மிகக் குறைந்த உற்பத்திஅளவாகும். அதே நேரத்தில் ஜூன் மாதத்திற்கான நாட்டின் ஏற்றுமதி சு…

  18. டெல்லி: கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவியதாக தகவல் கிடைத்துள்ளது. சீன ராணுவ வீரர்கள் 50 பேர் குதிரைகளில் கடந்த 16ம் தேதி கிழக்கு லடாக் பகுதியில் உள்ள சுமார் பகுதிக்குள் ஊடுருவியுள்ளனர். மேலும் அங்கு அவர்கள் கடந்த 17ம் தேதி காலை வரை தங்கியுள்ளனர் என்று தகவல் கிடைத்துள்ளது. சீன ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் வந்ததைப் பார்த்த நம் வீரர்கள் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் சீன வீரர்களோ இது எங்கள் பகுதி நீங்கள் ஆக்கிரமித்த எங்கள் பகுதியில் இருந்து வெளியேறுங்கள் என்று இந்திய வீரர்களிடம் தெரிவிக்கும் வகையில் பேனர்கள் வைத்துள்ளனர். ஒரு வழியாக 2 நாட்கள் சண்டைக்குப் பிறகு கடந்த 18ம் தேதி அவர்கள் இந்திய எல்லையில் இருந்து வெளியேறியுள்ளனர். இந்த சண்…

  19. இளவரசர் வில்லியமின் மனைவி, கேம்ப்ரிட்ஜ் சீமாட்டி, கேட்டுக்கு, ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. திங்கட்கிழமை மாலை 4 மணி 24 நிமிடங்கள் அளவில் இந்தக் குழந்தை பிறந்தது என்று பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகள் தெரிவித்தனர். குழந்தை மூன்றரை கிலோ எடையுடன் பிறந்தது என்றும் அவர்கள் தெரிவித்தனர். கேம்பிரிட்ஜ் இளவரசன் என்று அறியப்படவிருக்கும் இந்த ஆண் குழந்தை, பிரிட்டிஷ் சிம்மாசனத்துக்கு காலப்போக்கில் வர உரிமையுள்ள வாரிசுகளில் மூன்றாவதாக இருக்கும். 15 காமன்வெல்த் நாடுகளின் தலைமைப் பதவியையும் அது வகிக்கும். (குழந்தை பிறந்தது பற்றிய அறிவிப்பு --பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வெளியே) பிரிட்டிஷ் அரசியும், அவரது கணவர் எடின்பரோ கோமகனும் இந்தச் செய்தி கேட்டு மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார…

  20. வலுக்கும் மனித உரிமையாளர்கள் ஆதரவு! சிக்கலுக்குள்ளாகும் பிரான்சின் வழக்கு! - சோழ.கரிகாலன் ஸ்நோவ்டென் வேட்டை - 3 வெனிசுவேலா அமெரிக்க அச்சறுத்தலையும் மீறி ஸ்நோவ்டென்னிற்கு அடைக்கலம் கொடுக்க முன்வந்திருந்தது. ஆனாலும் வெனிசுவேலா நோக்கிச் செல்வது என்பது மிகவும் ஆபத்தான பயணமாகவே அமையும். அதனாலேயே ரஷ்யாவிலேயே தஞ்சம் கோரிவிட ஸ்நோவ்டென் முடிவு செய்திருப்பதாகத் தெரிகின்றது. ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவின் Cheremetievo விமான நிலையத்தின் விமான மாற்றுப் பகுதியில் ஸ்நோவ்டென் மூன்று வாரங்களிற்கும் மேலாக இருப்பதை அவர் அங்கு மேற்கொண்ட சந்திப்புக்களிள் ஒளிப்படங்கள் நிரூபித்துள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை ஆகியவற்றின் உறுப்பினர்க…

  21. கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவியதாக தகவல் கிடைத்துள்ளது. சீன ராணுவ வீரர்கள் 50 பேர் குதிரைகளில் கடந்த 16ம் தேதி கிழக்கு லடாக் பகுதியில் உள்ள சுமார் பகுதிக்குள் ஊடுருவியுள்ளனர். மேலும் அங்கு அவர்கள் கடந்த 17ம் தேதி காலை வரை தங்கியுள்ளனர் என்று தகவல் கிடைத்துள்ளது. சீன ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் வந்ததைப் பார்த்த நம் வீரர்கள் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் சீன வீரர்களோ இது எங்கள் பகுதி நீங்கள் ஆக்கிரமித்த எங்கள் பகுதியில் இருந்து வெளியேறுங்கள் என்று இந்திய வீரர்களிடம் தெரிவிக்கும் வகையில் பேனர்கள் வைத்துள்ளனர். ஒரு வழியாக 2 நாட்கள் சண்டைக்குப் பிறகு கடந்த 18ம் தேதி அவர்கள் இந்திய எல்லையில் இருந்து வெளியேறியுள்ளனர். இந்த சண்டையில் உய…

    • 5 replies
    • 344 views
  22. சீனாவில் கார் ஒன்று மோதியதால் அதை ஓட்டிவந்த பெண் ஒருவர் காரின் முன் கண்ணாடியில் மோதி, தலை மட்டும் கார் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே நின்ற சம்பவம் அப்பகுதியை மிகவும் பரபரப்பாக்கியது. உடனடியாக மீட்புப்படையினர் வந்து, கார் கண்ணாடியை உடைத்து, அந்த பெண்ணை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தெற்கு சீனாவில் உள்ள ஒரு பெண் காரில் தன்னுடைய டிரைவருடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்கள் இருவருமே கார் பெல்ட் அணிந்திருக்கவில்லை. கார் வேகமாக சென்று கொண்டிருந்தபோது திடீரென முன்னாள் சென்ற ஒரு வாகனத்துடன் மோதியதால் நிலை தடுமாறிய பெண், கண்ணாடியில் மோதினார் மோதிய வேகத்தில் கார் கண்ணாடியை உடைத்துக்கொண்டு அவருடைய தலை மட்டும் வெளியே தொங்கியது. உடனடியாக ஆம்புலன்ஸ் மற்று…

    • 0 replies
    • 469 views
  23. நாட்டில் உள்ள முக்கிய விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியிருப்பதாக மத்திய உளவுத்துறை ரிப்போர்ட் எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. இதன்படி சம்பந்தப்பட்ட விமான நிலைய பாதுகாப்பு துறையினர் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து கூடுதல் பாதுகாப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மத்திய உளவுப்பிரிவுக்கு ( ஐ.பி) கிடைத்த தகவலில் தெரிய வந்துள்ள விவரம் வருமாறு: நாட்டில் விமான நிலையங்களில் திடீர் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியுள்ளனர். இதற்கான தருணம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். புதுடில்லி, மும்பை, பெங்களூரூ, சென்னை, ஆமதாபாத், ஐதராபாத் , கவுகாத்தி ஆகிய 7 விமான நிலையங்கள் பயங்கரவாதிகளின் சதி திட்ட பட்டியலி…

  24. இஸ்ரேலியர்களை ஏற்ற மாட்டோம் : சவுதி எயார்லைன்ஸ் இஸ்ரேலியர்களுக்கு விமானச் சீட்டு வழங்க மறுக்கும் சவுதி எயார்லைன்ஸ் நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்காவில் அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில் இஸ்ரேலியர்களை ஏற்ற மறுக்கும் தமது நிலைப்பாடு தொடர்பாக அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது. சவதி அரேபியா இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்கவில்லை, எனவே எமக்கும் அவர்களுக்கும் எந்தவிதமான ராஜதந்திர உறவும் இல்லை. நாம் அங்கீககரிக்காத ஒரு நாட்டின் பிரஜையெனக் கூறிக்கொள்வோரை ஏற்றும் தேவை எமக்கில்லை, ஏனெனில் விமானப் பயணங்களின் போது சில வேளைகளில் இடை நிறுத்தம் தேவைப்படுகிறது. அவ்வேளையில் விமானம் தாமதமானால் பயணிகளை நாட்டிற்குள் அழைத்துச் சென்று தங்குமிட வசதியும் தரும் தேவையிருக்கிறது. இஸ்ரேலிய பிர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.