உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
April 13, 2013 டோக்கியோ: ஜப்பானில் இன்று காலையில் ஏற்பட்ட கடும் நில நடுக்கத்திற்கு 22 பேர் காயமடைந்தனர். அதில் 7 பேர் பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜப்பானின் தென்மேற்கு பகுதியான கோபே அருகே இன்று அதிகாலை இந்திய நேரப்படி 2.00 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கடியில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆகப் பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் வீடுகள் இடிந்து விழுந்து 22 பேர் காயமடைந்தனர். 7 பேர் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருவதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவ…
-
- 0 replies
- 355 views
-
-
11 ஏப்ரல் 2013 சிரியாவில் அதபர் பஷார் அல் ஆசாத்தின் ஆட்சியை எதிர்த்து, அந்நாட்டில், 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுக் கலவரங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் சிரியாவின் கிளர்ச்சிப்படை அல்கய்தா இயக்கத்தோடு தன்னை இணைத்து கொண்டதாக அறிவித்துள்ளது. சிரியாவில் உள்நாட்டு போர் சூழ்ந்துள்ளது. அதிபருக்கு எதிரான இந்த போராட்டத்தில் 70,000 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். இப்புரட்சியில் முன்னணியில் நிற்பது அல்- நுஸ்ரா என்ற ஜிகாதிகள் இயக்கமாகும். இதன் தலைவர், அபு முகமது அல் ஜவலானி. இவர்,தங்களுடைய இயக்கம் அல் கொய்தாவுடன் இணைந்து பணியாற்றும் என்று அறிவித்துள்ளார். ஆயினும், சிரியா குறித்த நிலைப்பாட்டில் ஏதும் மாற்றமில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஈராக் நாட்டில் உள்ள அல்கய்தா இயக்…
-
- 1 reply
- 576 views
-
-
போர்காலங்களில் நடைபெறும் பாலியல் கொடுமைகள் முற்றிலுமாக ஒடுக்கப்பட வேண்டுமென ஹாலிவுட் பிரபலமும், ஐ.நாவின் அகதிகளுக்கான சிறப்புத் தூதருமான ஏஞ்சலீனா ஜோலி தெரிவித்திருக்கிறார். லண்டனில் நேற்று நடைபெற்ற G 8 உலகநாடுகளின் கூட்டமைப்பில்,கலந்துக்கொண்டு பேசிய ஜோலி, போர்க்காலங்களில் நடைபெறும் பாலியல் கொடுமை, வன்முறைகளுக்கு நிரந்தர தீர்வு காணவேண்டுமென வலியுறுத்தினார். போர் காலங்களில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படும் பெண்கள் நீண்ட காலங்களாக மறக்கப்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் எனக் குறிப்பிட்ட ஜோலி, இந்த போர்கால பாலியல் கொடுமை தற்போது உலக நாடுகளின் கவனத்தை பெற்றிருப்பதால் இதற்கு நிரந்தர தீர்வும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நீதியும் வழங்கப்பட வேண்டுமெனவும் கூறினார். http:/…
-
- 0 replies
- 447 views
-
-
தனது வாரிசுகளை அரசியல் களத்தில் ஈடுபடுத்துவதால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரும் பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு அரசியலிலிருந்து விலகுவார் என்று எதிர் பார்க்கப் படுகிறது. இது தொடர்பில் இந்திய செய்திகள் வெளியிட்டுள்ள செய்திகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த ஜனவரி மாதம் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் போது, ராகுல்காந்திக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரியங்காவையும் அரசியலுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை சோனியா தற்போது தீவிரப்படுத்தி உள்ளார். சோனியாவின் திடீர் உடல் நலக் குறைவு பிரியங்காவை, அரசியலில் குதிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கு…
-
- 8 replies
- 1.1k views
-
-
11 ஏப்ரல் 2013 இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தியைக் கொலை செய்வதற்கு மூன்று முறை முயற்சி நடந்தது என்று அமெரிக்க தூதரக தகவலை மேற்கோள் காட்டி விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. உத்தர பிரதேசத்திற்கு ஒருமுறை செஞ்சய் காந்தி வந்தபோது மிகவும் சக்தி வாய்ந்த துப்பாக்கியால் அவரை சுட்டுக் கொல்ல முயற்சிக்கப்பட்டது என்றும் அந்த அமெரிக்க கேபிள் தகவல் தெரிவிக்கிறது. 1976ல் துப்பாக்கிச் சூடு 1976ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்க தூதரகம் அனுப்பிய கடிதத்தில், பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தியை அடையாளம் தெரியதா நபர் ஒருவர் கொலை செய்வதற்கு மிகவும் சாதுரியமான முறையில் திட்டமிட்டிருந்தார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது என்று கூறப்பட்டுள்ளது. அவசர நிலை க…
-
- 0 replies
- 534 views
-
-
டெல்லி: தென் சூடானில் போராளிகளின் தாக்குதலில் 5 இந்திய ராணுவத்தினர் பலியாகி இருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. கடந்த 2011-ம் ஆண்டு தென்சூடான் சுதந்திர நாடாக உருவெடுத்தது. அதன் பின்னரும் தொடர்ந்தும் அங்கு இன மோதல் நீடித்து வருகிறது. தென் சூடான் அரசுக்கு எதிராக டேவிட் யாயு யாயு தலைமையில் ஆயுதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது தென் சூடானில் ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் அமைதிப் படை பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த அமைதிப் படையில் 2000 இந்திய ராணுவத்தினரும் அமைதிப் படையினராக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் வாகன தொடரணிக்கு பாதுகாப்பாக சென்று கொண்டிருந்த போது போராளிகள் நடத்திய தாக்குதலில் 5 இ…
-
- 4 replies
- 566 views
-
-
கொரிய தீபகற்ப பதட்ட நிலைமை அண்மையில் தீவிரமாகுவது தொடர்கிறது. எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் வடகொரியா தாக்குதல் நடத்தக்கூடும் என தென் கொரியா தெரிவித்துள்ளது. எனினும், வடகொரியாவின் தாக்குதல் எவ்விதமாக இருக்கும் என்பதைக் கணிப்பிட முடியாமல் இருப்பதாகவும், இருந்தபோதிலும், வடகொரியாவின் எந்தவொரு தாக்குதலையும் முறியடிக்க தென் கொரியா தயாராகவே இருக்கிறது எனவும் தென் கொரியா அறிவித்துள்ளது. இந்த நிலையில், வடகொரியா தனது தாக்குதல் தளங்களை நகர்த்தி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இடத்தில் இருந்துதான் வடகொரியா தாக்குதல் நடத்தும் என்பதை தென்கொரியாவும், அமெரிக்காவும் ஊகிக்க முடியாத வகையில் வடகொரியா தனது தாக்குதல் தளங்கள் தொடர்ந்து நகர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதேவேளை, வடகொர…
-
- 10 replies
- 965 views
-
-
நைஜீரியாவின் வடக்கு ஷம்பரா மாகாணத்தில் உள்ள கிராமங்களில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பை தரக்கூடிய மாசடைதல் தொடர்பில் மிகவும் தாமதமான, செயற்திறனற்ற பதில் நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் அந்த நாட்டு அரசாங்கத்தை மருத்துவ தொண்டு அமைப்பான எம்எஸ்எஃப் குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த நான்கு வருடங்களில் அங்கு ஈய நஞ்சால், 450 க்கும் அதிகமான சிறார்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் சிகிச்சை பெறுகிறார்கள். உள்ளூரில் உள்ள சுரங்கங்களில் தங்கத்தை பிரித்தெடுப்பதற்காக கிராம மக்கள் உயர் நஞ்சுள்ள ஈயத்தை பயன்படுத்துகிறார்கள். ஆனால், அது அவர்களது வீடுகளைச் சுற்றவரவுள்ள மண்ணை மாசடையச் செய்துவிடுகிறது. இந்தப் பிரச்சினையை கையாள அங்கு ஏன் அரசாங்கம், விஞ்ஞானிகளையும், மருத்துவர்களையும…
-
- 1 reply
- 530 views
-
-
10 ஏப்ரல், 2013 மலேசியாவில் எதிர்வரும் மே மாதம் 5 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த மாதம் நாடாளுமன்றத்தை கலைக்க பிரதமர் நஜீப் நடவடிக்கை எடுத்ததை அடுத்து அங்கு அடுத்த பொதுத் தேர்தலுக்கான நடவடிக்கைகள் தொடங்கின. மலேசியா அரை நூற்றாண்டுக்கு முன்னர் சுதந்திரம் அடைந்த பிறகு மிகவும் கடும் போட்டியை ஏற்படுத்தக் கூடியத் தேர்தலாக இது இருக்கும் என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள். ஆளும் தரப்பு, முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தலைமையிலான எதிர்கட்சிக் கூட்டணியிடமிருந்து கடுமையான சவாலை எதிர்கொள்கிறது. அடுத்த பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரம் முறைப்படி ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி தொடங்குகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு நடைப…
-
- 1 reply
- 402 views
-
-
இந்தியாவுடன் நீண்ட கால ராணுவ ஒத்துழைப்பு கொள்வதில் தீவிர கவனம் செலுத்தப்படும் என அமெரிக்க பாதுகாப்புத் துறையான பென்டகன் தெரிவித்துள்ளது. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் தனது நிலைப்பாட்டை அதிபர் ஓபாமா அரசு மறு ஆய்வு செய்து வரும் நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பென்டகன் இவ்வாறு தெரிவித்துள்ளது. இந்தியாவுடன் பலமான நீண்ட கால ராணுவ கூட்டை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். பிராந்திய அளவிலும், இந்திய பெருங்கடல் பகுதியிலும் இந்தியாவின் திறன்களை மேம்படுத்த அமெரிக்கா ஆதரவு தரும். இதுதொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் 2013-14-ம் ஆண்டுக்கு பாதுகாப்பு பட்ஜெட் திட்டங்கள் குறித்த அறிக்கையை பென்டகன் சமர்ப்பித்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ராணுவ ஒத்துழைப்பு எங்கு தேவையோ அங்கெல்…
-
- 7 replies
- 964 views
-
-
இந்தியா–ஜெர்மனி இடையே 6 ஒப்பந்தங்கள்: ரூ.50 கோடி செலவில் உயர்கல்வியில் கூட்டு ஆராய்ச்சி Posted by: Jayachitra Published: Friday, April 12, 2013, 10:07 [iST] பெர்லின்: இந்தியா-ஜெர்மனி இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. ரூ.50 கோடியே 40 லட்சம் செலவில் உயர் கல்வியில் கூட்டு ஆராய்ச்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன்சிங் ஜெர்மனிக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின்போது, இந்தியாவுக்கும், ஜெர்மனிக்கும் இடையே பல சுற்று பேச்சு வார்த்தைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நேற்று இரண்டாவது சுற்று பேச்சு வார்த்தை நடந்தது. இதில் இந்தியாவின் சார்பில் பிரதமர் மன்மோகன்சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், மரபுசாரா எரிசக்தித்துறை அமைச்சர் பரூக் அ…
-
- 0 replies
- 295 views
-
-
தென் கொரியா மற்றும் அமெரிக்க அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்த, எரிபொருள் நிரப்பி ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்துள்ளது வடகொரிய ராணுவம். இதனால் போர் பதற்றம் உச்ச கட்டத்தை எட்டி உள்ளது.கடந்த பிப்ரவரி மாதம் வடகொரிய அரசு 3வது ஏவுகணை சோதனையை நடத்தியது. இதனால் ஐ.நா. மற்றும் அமெரிக்கா உள்பட பல நாடுகள் வடகொரியா மீது பொருளாதார தடை விதித்துள்ளன. இந்நிலையில், மீண்டும் ஏவுகணை சோதனை நடத்த வடகொரிய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தென் கொரிய வெளியுறவுத் துறை அமைச்சர் யுன் பியுங் சி எச்சரித்துள்ளார். சீனா மற்றும் ரஷ்ய நாடுகள் இந்த பிரச்னையில் தலையிட்டு வடகொரியாவின் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால், தென்…
-
- 1 reply
- 761 views
-
-
குடியுரிமைச் சட்டங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமெனக் கோரி ஆயிரக்கணக்கானோர் அமெரிக்காவில் போராட்டமொன்றை நடாத்தியுள்ளனர். அமெரிக்காவில் மில்லியன் கணக்கானவர்கள் குடியுரிமை இன்றி வாழ்ந்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்வாறு குடியுரிமையின்றி வாழ்ந்து வரும் மக்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியுள்ளனர். வொஷிங்டன், அட்லாண்டா உள்ளிட்ட நகரங்களில் பல்லாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவில் 11 மில்லியன் மக்கள் குடியுரிமையின்றி வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு, பராக் ஒபாமா நிர்வாகம் விரைவில் சலுகைகளை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. http://tamilworldtoday.com…
-
- 0 replies
- 496 views
-
-
டெஸ்ட் டியூப் கருத்தரிப்பு முறையை உருவாக்கிய டாக்டர் ராபர்ட் எட்வர்ட்ஸ் மரணம். லண்டன்: உலகம் முழுவதும் உள்ள இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ள பெண்களின் கண் கண்ட கடவுளாக போற்றப்படும் சர் ராபர்ட் எட்வர்ட்ஸ் தனது 87வது வயதில் மரணமடைந்தார். இவர்தான் சோதனைக் குழாய் மூலம் கருத்தரிக்கும் முறையை உருவாக்கியவர் ஆவார். எட்வர்ட்ஸ் அன்று ஆரம்பித்து வைத்த இந்த சோதனைக் குழாய் கருத்தரிப்பு முறை உலகம் முழுவதும் இன்று வெகு பிரபலமாக உள்ளது. உலகில் இன்று கிட்டத்தட்ட 50 லட்சம் சோதனைக் குழாய் முறையில் பிறந்த குழந்தைகள் நடமாடிக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சோதனைக் குழாய் குழந்தை முறையைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் டாக்டர…
-
- 1 reply
- 459 views
-
-
ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகிய இந்த நிலநடுக்கம், ஈரானின் தென் பகுதியில் பஷெர் அணு உலைக்கு அருகே நிகழ்ந்தது. அணு உலைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனினும், அந்த பகுதியில் இருந்து 37 பேர் உயிரிழந்தனர், சுமார் 850 பேர் காயம் அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தில் வீடுகள்,கடைகள் மற்றும் வணிகத் தலங்கள் பெரும் சேதம் அடைந்துள்ளன. பல இடங்களில் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணு உலை 8 ரிக்டர் அளவுகோல் நிலநடுக்கத்தை தாங்கும் அளவுக்கு கட்டப்பட்டுள்ளதாகவும், அணு உலைக்கு எந்த வித சேதமும் ஏற்படவில்லை எனவும் அரசு தரப்பில்…
-
- 1 reply
- 499 views
-
-
புதுடெல்லி: தனக்கு எதிரான முற்றுகை போராட்டத்தால் பிரதமருடனான சந்திப்பை மட்டுமல்லாது, நிதியமைச்சர் ப.சிதம்பரத்துடனான சந்திப்பையும் ரத்து செய்துவிட்டு மம்தா பானர்ஜி இன்று கொல்கத்தா திரும்பினார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில், மாணவர் சங்க தேர்தலை நடத்த வலியுறுத்தி இந்திய மாணவ கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.அப்போது கைது செய்யப்பட்ட அச்சங்கத்தின் தலைவர் குப்தா போலீஸ் தாக்குதலில் உயிரிழந்தார். ஆனால் போலீஸ் தாக்குதலில் குப்தா உயிரிழக்கவில்லை என்றும், மின்கம்பத்தில் மோதியதால் அவர் உயிரிழந்தார் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மாணவர்கள் தரப்பில் இதனை ஏற்க மறுத்துவிட்டனர்.மேலும் குப்தா உயிரிழந்தது பெரிய வி…
-
- 0 replies
- 701 views
-
-
தென்கொரியாவில் வசிக்கும் வெளிநாட்டவர்களை நாட்டில் இருந்து வெளியேறுமாறு வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.கொரிய தீபகற்பத்தில் யுத்த சூழ்நிலை ஏற்படும் சந்தர்ப்பத்தில் வெளிநாட்டவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என கருதியே வடகொரியா இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது. 1953 ஆம் ஆண்டு கொரிய தீபகற்பத்தில் இடம்பெற்ற யுத்தத்தின் பின்னர் இரண்டு நாடுகளுக்கிடையேயான இயல்பற்ற சூழ்நிலை தற்சமயம் வலுப்பெற்றுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, தென்கொரியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாகவும் அங்கு பணியாற்றும் இலங்கையர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து இலங்கையர்களும் தூதரகத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளவேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. வடக்கு மற்ற…
-
- 1 reply
- 526 views
-
-
இந்திரா காந்தி பிரதமராக இருந்த 1975 மற்றும் 1977 ல் நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது இந்திரா வீட்டில் அமெரிக்க உளவாளி பதுங்கி இருந்ததாக விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 1975 மற்றும் 1977 இடைபட்ட அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட இரண்டு வருடங்களில், இந்திரா காந்தியின் வீட்டுக்குள் அமெரிக்க உளவாளி இருந்தார் என்று விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்திரா காந்தியால் கொண்டு வரப்பட்ட 'மிசா' அவசரநிலை பிரகடனத்தின் பின்னணியில் அமெரிக்க உளவாளி இருந்ததாகவும், அவருக்கு உதவியாக இந்திராவின் மகன் சஞ்சய்யும், அவரது செயலாளர் ஆர்.கே.தவான் ஆகியோரும் இருந்ததாகவும் விக்கிலீக்ஸ் கூறியுள்ளது. http://tamil.webdunia.com/newsworld/news/international/1…
-
- 0 replies
- 523 views
-
-
உலக வரைபடத்தில் பாகிஸ்தான் பகுதியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளதை விக்கிலீக்ஸ் இணையதளம் அம்பலப்படுத்தியுள்ளது. மேலும் இந்த வரைபடம் 1975 ஆண்டினுடையது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு கோடு, இரண்டு நாடுகளுக்கு பொதுவானதாக இல்லமால் எல்லைக் கட்டுப்பாட்டு காஷ்மீர் பகுதி பாகிஸ்தான் நாட்டில் இருப்பதுபடியாக அமைந்துள்ள உலக வரைப்படத்தை விக்கிலீக்ஸ் இன்று வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வாஷிங்டனில் உள்ள இந்திய துதரகம் பதிலளிக்க மறுத்துள்ளது. மேலும் சர்வதேச எல்லை பிரதிநிதித்துவம் பற்றி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும் பேச மறுத்துள்ளது. http://tamil.webdun…
-
- 0 replies
- 557 views
-
-
கொல்கத்தா: பிரதமர் மன்மோகன் சிங்கை காங்கிரஸ் கட்சியினரே ஒரு தலைவராக ஏற்றுக்கொள்ளாதபோது, இந்த நாடு எப்படி அவரை தலைவராக ஏற்றுக்கொள்ளும் என்று குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பினார். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற தொழிலதிபர்கள் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசுகையில் இதனைக் கூறிய மோடி, மத்தியில் தற்போது அரசோ அல்லது நிர்வாகமோ இல்லை என்றும், தற்போதுள்ள ஐ.மு. கூட்டணி அரசு மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பை போன்று, 1947 ஆம் ஆண்டிலிருந்து மத்தியில் இருந்த வேறு எந்த ஆட்சி மீதும்வெறுப்பு ஏற்பட்டதில்லை என்றும் சாடினார். கஷ்டப்பட்டு வேலை செய்து வரி செலுத்தும் மக்களின் வரிப்பணத்தை தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வீணடிப்பதாகவும், என்ன வில…
-
- 1 reply
- 577 views
-
-
டெல்லி: இந்திய கடல் பகுதிக்குள், இந்தியப் பெருங்கடலுக்குள் அடிக்கடி சீனாவின் அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் ஊடுருவுவதாக செய்திகள் கூறுகின்றன. இதை இந்தியக் கடற்படையும் உறுதி செய்துள்ளது. இதுவரை 22 முறை சீனாவின் அணு நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்தியப் பெருங்கடலுக்குள் ஊடுருவியதாக இந்திய கடற்படைத் தரப்பில் கூறப்படுகிறது. கடைசியாக பிப்ரவரி மாதம் சீனா ஊடுருவியுள்ளது. மேலும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் பகுதியில் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் ஊடுருவியது பதிவாகியுள்ளது. இந்த அணு நீர்மூழ்கிக்கப்பல்களின் ஊடுருவல் குறித்து பாதுகாப்பு அமைச்சகத்திற்கு இந்திய கடற்படை அறிக்கை அனுப்பியுள்ளது. அமெரிக்காவின் சோனார் கருவியின் உதவியுடன் இந்திய கடற்படை இந்த ஊடுருவல்களைக் கண்டுபிடித்துள்ளது. …
-
- 1 reply
- 612 views
-
-
சவுதி அரேபியாவில் புதிய தொழிலாளர் சட்டத்தால், பாதிக்கப்படும் வெளிநாட்டு தொழிலாளர்கள் வேறு வேலை தேடிக் கொள்ளவோ அல்லது நாட்டை விட்டு வெளியேறவோ 3 மாத கால அவகாசம் அளிக்க அந்நாட்டு மன்னர் அப்துல்லா உத்தரவிட்டுள்ளார். சவுதி அரேபியாவில் இந்தியா, ஏமன், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 90 இலட்சம் வெளிநாட்டவர் பணியாற்றி வருகின்றனர். சவுதி அரேபியாவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், அந்நாட்டு அரசு புதிய தொழிலாளர் சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன்படி, தனியார் நிறுவனங்களில் 10 தொழிலாளிகளில் ஒருவர் அந்நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தனியார் துறையில் தங்கள் நாட்டவர்களை அதிகமாக பணியில் சேர்க்க அந்நாட்டு …
-
- 0 replies
- 477 views
-
-
அணைகளில் நீர் வற்றிப்போனால் சிறுநீர் கழித்து பாசனத்திற்கு நீர் வழங்க முடியுமா என்னும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த அஜித் பவாரை உடனடியாக பதவி நீக்கம் செய்யவேண்டுமென எதிர்கட்சிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன. மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரை சேர்ந்த ஒரு விவசாயி, தனது நிலத்திற்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து கடந்த 55 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இந்நிலையில், புனேயில் நடைபெற்ற ஓர் நிகழ்ச்சியில் பங்கேற்ற மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித் பவார், 'அணையில் தண்ணீர் இல்லாத நிலையில் அவருக்கு மட்டும் எப்படி தண்ணீர் வழங்க முடியும்? அணையில் சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிறாரா? குடிக்க கூட தண்ணீர் கிடைக்காமல் நாம் இருக்கும் நி…
-
- 0 replies
- 334 views
-
-
பசுபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான பப்புவா நியூகினியாவில் சூனியக்காரிகள் என்று சந்தேகப்பட்டு 2 பெண்களை சித்தரவதை செய்து தலையை துண்டித்து கொலை செய்தனர் கிராமத்தினர். பப்புவா நியூகுனியா நாட்டில் மூடநம்பிக்கை பழக்கவழக்கங்கள் அதிகமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்த பழக்கவழக்கங்களால் பலர் பலியாகியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக அந்நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்த ஓய்வு பெற்ற ஆசிரியையை சூனியம் வைத்து கொன்று விட்டதாகக் கூறி 2 பெண்களை கிராம வாசிகள் பிடித்துச் சென்றனர். கொண்டு செல்லப்பட்ட அந்த பெண்களை மூன்று நாட்கள் சித்தரவதை செய்து, பின் அவர்கள் இருவரின் தலையையும் துண்டித்து கொலை செய்தனர் கிராம மக்கள். காவல்துறையினரின் முன்னிலையிலேயே நடந்த இந்த கோர சம்பவத்திற்கு, மனித…
-
- 0 replies
- 549 views
-
-
இலங்கை வாழ் ஈழ தமிழர்களின் வாழ்வுரிமையை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டியும் மத்திய அரசின் இரட்டை வேடத்தை கண்டித்தும் பாரத மனித உரிமை பாதுகாப்பு கழகம் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இலங்கைவாழ் ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமையை காக்கவும், அவர்கள் சுதந்திரமாக செய்லபடவும், கால் நூற்றாண்டு காலமாக அவர்கள் உரிமைக்காக போராடிவரும் ஈழத் தமிழர்கள் மீது அத்துமீறி, மனிதநேயமற்ற, ஈவுஇரக்கமன்றி அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சவை போர் குற்றவாளி என அறிவிக்கக் கோரியும், தமிழ்இன துரோகி ராஜபக்சவுக்கு துணைபோன இந்திய அரசை வன்மையாக கண்டிக்கும் வகையிலும், இலங்கைவாழ் ஈழத்தமிழர்களை படுகொலை செய்த மனிதநேயமற்ற அரக்கன் ராஜபக்சவை …
-
- 0 replies
- 317 views
-