உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26872 topics in this forum
-
சவுதி அரேபியாவில் புதிய தொழிலாளர் சட்டத்தால், பாதிக்கப்படும் வெளிநாட்டு தொழிலாளர்கள் வேறு வேலை தேடிக் கொள்ளவோ அல்லது நாட்டை விட்டு வெளியேறவோ 3 மாத கால அவகாசம் அளிக்க அந்நாட்டு மன்னர் அப்துல்லா உத்தரவிட்டுள்ளார். சவுதி அரேபியாவில் இந்தியா, ஏமன், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 90 இலட்சம் வெளிநாட்டவர் பணியாற்றி வருகின்றனர். சவுதி அரேபியாவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், அந்நாட்டு அரசு புதிய தொழிலாளர் சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன்படி, தனியார் நிறுவனங்களில் 10 தொழிலாளிகளில் ஒருவர் அந்நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தனியார் துறையில் தங்கள் நாட்டவர்களை அதிகமாக பணியில் சேர்க்க அந்நாட்டு …
-
- 0 replies
- 478 views
-
-
அணைகளில் நீர் வற்றிப்போனால் சிறுநீர் கழித்து பாசனத்திற்கு நீர் வழங்க முடியுமா என்னும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த அஜித் பவாரை உடனடியாக பதவி நீக்கம் செய்யவேண்டுமென எதிர்கட்சிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன. மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரை சேர்ந்த ஒரு விவசாயி, தனது நிலத்திற்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து கடந்த 55 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இந்நிலையில், புனேயில் நடைபெற்ற ஓர் நிகழ்ச்சியில் பங்கேற்ற மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித் பவார், 'அணையில் தண்ணீர் இல்லாத நிலையில் அவருக்கு மட்டும் எப்படி தண்ணீர் வழங்க முடியும்? அணையில் சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிறாரா? குடிக்க கூட தண்ணீர் கிடைக்காமல் நாம் இருக்கும் நி…
-
- 0 replies
- 336 views
-
-
பசுபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான பப்புவா நியூகினியாவில் சூனியக்காரிகள் என்று சந்தேகப்பட்டு 2 பெண்களை சித்தரவதை செய்து தலையை துண்டித்து கொலை செய்தனர் கிராமத்தினர். பப்புவா நியூகுனியா நாட்டில் மூடநம்பிக்கை பழக்கவழக்கங்கள் அதிகமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்த பழக்கவழக்கங்களால் பலர் பலியாகியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக அந்நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்த ஓய்வு பெற்ற ஆசிரியையை சூனியம் வைத்து கொன்று விட்டதாகக் கூறி 2 பெண்களை கிராம வாசிகள் பிடித்துச் சென்றனர். கொண்டு செல்லப்பட்ட அந்த பெண்களை மூன்று நாட்கள் சித்தரவதை செய்து, பின் அவர்கள் இருவரின் தலையையும் துண்டித்து கொலை செய்தனர் கிராம மக்கள். காவல்துறையினரின் முன்னிலையிலேயே நடந்த இந்த கோர சம்பவத்திற்கு, மனித…
-
- 0 replies
- 552 views
-
-
இலங்கை வாழ் ஈழ தமிழர்களின் வாழ்வுரிமையை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டியும் மத்திய அரசின் இரட்டை வேடத்தை கண்டித்தும் பாரத மனித உரிமை பாதுகாப்பு கழகம் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இலங்கைவாழ் ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமையை காக்கவும், அவர்கள் சுதந்திரமாக செய்லபடவும், கால் நூற்றாண்டு காலமாக அவர்கள் உரிமைக்காக போராடிவரும் ஈழத் தமிழர்கள் மீது அத்துமீறி, மனிதநேயமற்ற, ஈவுஇரக்கமன்றி அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சவை போர் குற்றவாளி என அறிவிக்கக் கோரியும், தமிழ்இன துரோகி ராஜபக்சவுக்கு துணைபோன இந்திய அரசை வன்மையாக கண்டிக்கும் வகையிலும், இலங்கைவாழ் ஈழத்தமிழர்களை படுகொலை செய்த மனிதநேயமற்ற அரக்கன் ராஜபக்சவை …
-
- 0 replies
- 319 views
-
-
வடகொரியாவில் போர் மேகம் சூழந்துள்ளதால், அந்நாடு போருக்கான ஆயத்தப் பணிகளில் உள்ளது. மேலும், தென்கொரியாவுக்கு ஆதரவான அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை அணு ஆயுதங்கள் கொண்டு தாக்குவோம் என்று வடகொரியா அறிவித்துள்ள நிலையில், ஜப்பான் நாடும் பதில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வடகொரியாவில் இருந்து தங்கள் பகுதிக்கு எந்த ஏவுகணைகள் வந்தாலும் உடனே அதை சுட்டு வீழ்த்துமாறு அது ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளது. ராணுவ அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா இதுகுறித்து ஞாயிற்றுக் கிழமை ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ஓரிரு நாளில் அனைத்தும் தயாராகிவிடும். கடலில் இருந்தும், நிலப் பகுதியில் இருந்தும் எதிர்ப்பு ஏவுகணைகள் தயாராக நிறுத்தப்படும் என்று கூறியுள்ளார். http://…
-
- 2 replies
- 889 views
-
-
திருமண நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி இன்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் சண்முகம் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளா வரவேற்றார். விழாவில் அமைச்கர் கே.வி. ராமலிங்கம் கலந்து கொண்டு 58 பேருக்கு ரூ. 37 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் நிதி உதவிகளை வழங்கினார். இதன்பிறகு அமைச்சர் கே.வி. ராமலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:- காவிரி ஆணையத்தின் இறுதி தீர்ப்பு கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதி வெளியானது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணைய வாரியத்தை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி முதல் அமைச்சர் ஜெயலலிதா கடிதம் அனுப்பினார். இதன்பிறகு மீண்டும் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் மத்திய …
-
- 0 replies
- 303 views
-
-
பிரதமராவதற்கு முன்பு ஸ்வீடன் நிறுவனங்களுக்கு 'தரகராக' செயல்பட்டார் ராஜிவ் காந்தி? Posted by: Mathi Published: Monday, April 8, 2013, 10:11 [iST] டெல்லி: நாட்டின் பிரதமராவதற்கு முன்பு விமானியாக பணிபுரிந்த போது ஸ்வீடன் நிறுவனங்களுக்கான தரகராக ராஜிவ்காந்தி செயல்பட்டிருக்கிறார் என்று விக்கிலீக்ஸ் அதிரடி தகவல்களை வெளியிட்டிருக்கிறது. தி ஹிந்து நாளிதழ் வெளியிட்டுள்ள விக்கிலீக்ஸ் தகவல்களின்படி 1970களில் ஸ்வீடன் நிறுவனமான சாப்-ஸ்கானியா இந்தியாவுக்கு போர் விமானங்களை விற்பனை செய்ய முன்வந்தது. இதில் ராஜிவ் காந்தி இடைத்தரகாக செயல்பட்டிருக்கிறார். இந்தியாவின் போர் விமான கொள்முதலில் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் …
-
- 0 replies
- 406 views
-
-
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அமெரிக்காவின் அட்டர்னி ஜெனரல் கமலா ஹாரிஸை ஒபாமாவர்ணித்து பேசியதாக எழுந்த பிரச்சனையில் நேற்று ஒபாமா தனது வருத்தத்தையும், மன்னிப்பையும் தெரிவித்தார். இதற்கு இன்று பதில் கூறிய கமலா ஹாரிஸ் தரப்பு, அதிபர் ஒபாமாவின் வருத்தத்தை தான் ஏற்றுக்கொண்டதாகவும் இதை ஒரு பெரிய விஷயமாக தாம் நினைக்கவில்லை என்றும் அறிவித்திருக்கின்றார். இத்துடன் ஊடகங்கள் இந்த பிரச்சனையை முடித்துக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் கமலா ஹாரிஸ் பல வருடங்களாக நெருங்கிய நண்பராக இருந்து வந்திருக்கின்றார் என்றும் அன்றைய நிகழ்ச்சியில் ஒபாமா தன்னுடைய அழகை வர்ணித்து கூறியதை தாம் தவறாக ஒருபோதும் நினைக்கவில்லை என்றும், ஊடகங்கள…
-
- 0 replies
- 610 views
-
-
ஹீலியம்நிரம்பிய பலூன்கள் மூலம் Robben Island முதல் Cape Town வரை சாதனை புரிந்திருக்கின்றார் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஒரு மெடிக்கல்மார்க்கெடிங்க் மேனேஜர். தென்னாப்பிரிக்காவில்வாழும் Matt Silver-Vallance என்ற 37 வயது நபர் ஹீலியம் என்ற வாயு நிரப்பிய 60 பலூன்களின் உதவியால் Robben Island முதல் Cape Town வரை உள்ள 3.7 மைல் தூரத்தை கடந்து புதிய உலக சாதனை புரிந்து உள்ளார். இதுவரை ஹீலியம் பலூனில் யாரும் இந்த இடத்தை கடந்ததில்லை. தென்னாப்பிரிககாவில்உள்ள நெல்சன் மண்டேலா குழந்தைகள் மருத்துவமனைக்கு நிதி திரட்டவே தான் இந்த சாதனையை செய்ததாக கூறும் இவர், தொலைக்காட்சிகளில் வானில் பறக்கும் நிகழ்ச்சிகளை பார்த்தே தனக்கு இந்த ஐடியா வந்ததாக பேட்டியில் கூறினார். இவரது சாதன…
-
- 0 replies
- 498 views
-
-
டொரண்டோவில் உள்ள ஒரு வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புள்ள நான்கு இளைஞர்களை டொரண்டோ காவல்துறையினர் நேற்று அதிரடியாக கைது செய்தனர். இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புள்ள ஐந்தாவது நபரை வலைவீசி தேடிவருகின்றனர். கடந்த மார்ச் 19 ஆம் தேதி டொரண்டோவில் உள்ள Glenlake Avenue என்ற பகுதியில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட் வீட்டில் இரவு 10.30 மணியளவில் கதவை உடைத்து ஐந்து மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே புகுந்து வீட்டின் உரிமையாளரை கடுமையாக தாக்கி அவருடைய வீட்டில் உள்ள பணம் மற்றும் விலைமதிப்புள்ள பொருட்களை திருடிச்சென்றனர். காவல்துறையினர் தீவிர விசாரணை காரணமாக நேற்று படத்தில் காணப்பட்டுள்ள குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணை மூலம் டொர…
-
- 2 replies
- 702 views
-
-
கனடாவில் Gatineau, பகுதியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இரண்டு மர்ம நபர்கள் மரணம் அடைந்த சம்பவம் நேற்று நடந்தது. அதில் இறந்தவர்கள் யார் என்று தெரியாமல் இருந்த நிலையில், ஒருவர் பிரெஞ்ச் நாட்டை சேர்ந்தவர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. Gatineau, குழந்தைகள் காப்பகத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இறந்தவர்களில் ஒருவர் 38 வயதை சேர்ந்த பிரெஞ்ச் நாட்டை சேர்ந்தவர் என்றும் அவருடை பெற்றோர் பிரெஞ்சில் தற்போது வசித்து வருகிறார்கள் என்பது காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. துப்பாக்கி சூடு சம்பவத்தில் இறந்த மற்றொருவரின் பெயர் மற்றும் விபரங்கள் தெரியவில்லை. மேலும் துப்பாக்கி சூடு சம்பவத்தின் காரணமும் இன்னும் அறியப்படவில்ல…
-
- 0 replies
- 400 views
-
-
Arizona மலைப்பகுதியில் காணாமல் போன டொரண்டோ பெண் டாக்டர் மிட்புக்குழுவினரின் தீவிர முயற்சியால் உயிருடன் மீட்கப்பட்டார். Arizona பகுதியில் மலைப்பகுதிக்கு சென்ற டொரண்டோ பெண் டாக்டர் Elise Héon என்பவர் மலைப்பகுதியில் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் வந்ததை அடுத்து, மீட்புக்குழுவினர் ஹெலிகாப்டரில் சென்று அவரை தேடிவந்தனர். நீண்ட நேர தேடுதலுக்கு பின் அவரை மலைப்பகுதியில் கண்டுபிடித்த அவர்கள் பெரிய கயிறு ஒன்றின் மூலம் அவரை காப்பாற்றினார்கள். அவரைக் காப்பாற்றிய சம்பவதம் இண்டர்நெட்டில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அவருடைய் குடும்பத்தின் அவர் மீட்கப்பட்டதை நேரடியாக இண்டர்நெட்டில் பார்த்தனர். தற்போது Elise Héon சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கபப்ட்டதாகவு…
-
- 0 replies
- 471 views
-
-
டொரண்டோ downtown பகுதியில் உள்ள Front St. and Bremner Blvd என்ற இடத்தில் நேற்று சனிக்கிழமை மாலை 4.15 மணிக்கு ஐந்து வயது குழந்தை ஒன்று 9 மீ உயரமான கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐந்து வயது குழந்தை தனியாக எவ்வாறு அந்த கட்டிடத்தின் மேலே சென்றது என்றும் விழுந்தது எவ்வாறு என்றும் தெரியவில்லை என கூறப்படுகிறது. ஆனால் அந்த குழந்தை விழுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அழுது கொண்டிருந்ததாக இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். சம்பவம் குறித்து செய்தி அறிந்தவுடன் மீட்பு குழுவினர் விரைந்து வந்து உடனே அந்த குழந்தையை அருகிலுள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்த்தனர். மருத்துவமனையில் சேர்க்கும்போது அந்த க…
-
- 0 replies
- 385 views
-
-
புதுடெல்லி: மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியமைத்தால் 3 ஆவது முறையாக பதவி ஏற்பீர்களா? என்ற கேள்விக்கு " ஆமாம் என்றோ இல்லை என்றோ சொல்ல மாட்டேன்" என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். டெல்லியில் இன்று காலை நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்ள வந்த பிரதமர் மன்மோகன் சிங், செய்தியாளர்களிடம் பேசுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிற நிலையில், பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக கூறப்படும் மோடிக்கு எதிராக, காங்கிரஸ் தரப்பில் யார் நிறுத்தப்படுவார்கள் என்பது குறித்து இன்னமும் அக்கட்சியில் குழப்பமான நிலையே காணப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரான ராகுல் காந்தியைத்தான் நிறுத்த வேண்டும் என்று தி…
-
- 2 replies
- 576 views
-
-
தானே: மகாராஷ்டிர மாநிலம் தானேயில், அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ள நிலையில், 36 மணி நேரத்திற்கு பின்னர் பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். தானே - மும்ப்ரா இடையே உள்ள ஷில் பாட்டா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் நான்கு தளங்களில் மக்கள் குடியிருந்து வந்தனர்.மேலும் 3 மாடிகள் கட்டும் பணி அதில் நடைபெற்று வந்த நிலையில், தரமற்ற பொருட்களை வைத்து கட்டியதால், புதிய தளங்களோடு ஏற்கனவே கட்டப்பட்ட 4 மாடி கட்டிடங்களும் சேர்ந்து இடிந்துவிழுந்தன. இதில் 9 குழந்தைகள், 5 பெண்கள் உள்பட 45 பேர் பலியானதாகவும், 65க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் நேற்று தெரிவிக்கப்பட்ட நிலையில், 12 தீயணைப்புக்குழுவினரும், 24க்கும் மேற்பட்ட ஆம்ப…
-
- 1 reply
- 542 views
-
-
டெல்லி: ராகுல் காந்தி பிரதமர் ஆவதை எந்த நேரமும் வரவேற்க தயாராக உள்ளதாக பிரதமர் மன்மோகன்சிங் கூறினார். பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவுள்ளது. தற்போது காங்கிரஸ் கட்சிக்கு சோனியா காந்தி தலைவராகவும், பிரதமர் பதவி மூலம் மன்மோகன்சிங் ஆட்சிக்கு தலைவராகவும் உள்ளனர். ‘இந்த இரு அதிகார மையங்கள் வெற்றிகரமாக செயல்பட முடியாது, வரும் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்' என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கருத்து வெளியிட்டார். ஆனால் இதை காங்கிரஸ் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர் ஜனார்த்தன் திவிவேதி நிராகரித்தார். மீண்டும் பிரதமர் பதவிக்குப் போட்டி? இந்த நிலையில், டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த பத்ம விருது வழங்கும் விழா…
-
- 1 reply
- 338 views
-
-
டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு பின்னர் அவர் சிங்கப்பூரில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் வந்த சவப்பெட்டியில் டெல்லியில் இறந்த மாணவியின் உடல் இல்லை என்று குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் ஓடும் பஸ்ஸில் 23 வயது பிஸியோதெரபி மாணவி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு தாக்கப்பட்ட மாணவி முதலில் டெல்லியில் உள்ள சப்தர் ஜங் மருத்துவமனையிலும், பின்னர் சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து அவரது உடல் வ…
-
- 0 replies
- 1.8k views
-
-
பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த 7 கருணை மனுக்களை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தீர்வை நிராகரித்துள்ளார். இதன் மூலம் 5 வழக்குகளில் தூக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 வழக்குகளில் தூக்குத் தண்டனை, ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது. இதனுடன் பாலியல் குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கும் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் 5 பாலியல் பலாத்கார வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேர்களில் தூக்கு தண்டனை உறுதி ஆகி உள்ளது. சட்டப்பிரிவு 72 ன் கீழ் தனது அதிகாரத்தை பயன்படுத்திய ஜனாதிபதி, பலமுறை பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட கொடிய குற்றங்களில் ஈடுபட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் 9 பேர் தாக்கல் செய்த 7 கருணை மனுக்களின் மீத…
-
- 0 replies
- 809 views
-
-
இந்தியா முன்னேறிக் கொண்டு இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் இந்திய தொழிலாக கூட்டமைப்பில் தொழிலதிபர்களிடையே ராகுல் காந்தி உரையாற்றியுள்ளார். இந்தியர்கள் தைரியத்துடனும் உறுதியான எண்ணத்துடனும் செயல்படுகின்றனர். இந்தியர்களின் உறுதியை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்றும், கடந்த சில ஆண்டுகளாக இந்திய நிறுவனங்கள் செயல்பாடு சிறப்பாக உள்ளது. இளைஞர்களிடம் காணப்படும் சக்தியை இந்தியாவின் வளர்ச்சியாக மாற்ற வேண்டும் என்றும், நமது பல்கலைக்கழகங்கள் தொழில்துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் ராகுல் காந்தி உரையாற்றினார். மேலும் அவர், நிறுவனங்கள் கல்வித் துறையில் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்றும், அனைவ…
-
- 0 replies
- 553 views
-
-
நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட்டது (விரிவான செய்தி) பல மாதங்களாக வாக்காளர்களை ஊகிக்கவிட்டு வேடிக்கை பார்த்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், இன்று நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவித்தார். இன்று காலை பேரரசரைச் சந்தித்த பின்னர், காலை மணி 11.30க்கு தொலைக்காட்சியில் நஜிப் அந்த அறிவிப்பைச் செய்தார். இனி, தேர்தல் ஆணையம் (இசி) தேர்தலுக்கான நாளை நிர்ணயம் செய்யும். அதை 60 நாள்களுக்குள் நடத்தியாக வேண்டும். தேர்தல் மே மாதத் தொடக்கத்தில் அது நடத்தப்படும் என்பதே பலரது கணிப்பு. 2009, ஏப்ரல் 3-இல், அப்துல்லா அஹமட் படாவியிடமிருந்து நஜிப் பிரதமர் பதவியை ஏற்று இன்றுடன் சரியாக நான்கு ஆண்டுகள் ஆகின்றன. பிரதமர் என்ற முறையில் அவர் சந்திக்கப்போகும் முதலாவது பொதுத் தேர்தல் இதுவாகும். 200…
-
- 0 replies
- 591 views
-
-
நெல்சன் மண்டேலாவிற்கு தொடர்ந்தும் சிகிச்சை தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் உடல்நிலை தேறிஇருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 27ஆம் திகதி அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் உடல்நிலை நன்கு தேறி இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே அவர் கடந்த டிசம்பர் மாதமும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 1990ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுதலைப் பெற்று வெளியேறிதன் பின்னர், நீண்டநாட்கள் கடந்த டிசம்பர் மாதமே அவர் அதிக நாட்கள் வைத்தியசாலையில் கழித்திருந்தார். மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
-
- 0 replies
- 345 views
-
-
தமிழகத்தில் ஈழ தமிழர் ஆதரவு ப்போராட்டங்கள் - வ.ஐ.ச.ஜெயபாலன் --------------------------------------------------------------------------------------------------------------- ஈழத்தமிழருக்கு ஆதரவான குரல்கள் மாணவர் கோரிக்கைகள் எல்லாம் தற்போது தேக்க நிலையை நோக்கி நகர்கிறது.. இதற்க்கு பல காரணங்கள் உண்டு. 1960கலில் இடம்பெற்ற பிரஞ்சு மணவர்கிளற்சிக்குப்பின் மாணவர்கள் மாணவர் போராட்டங்கள் பற்றி பல கோட்பாட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இவற்றை வாசிக்கும்படி கோருவதுடன் இவற்றுக்கும் வெளியில் உள்ள மிக முக்கியமான அடிப்படைக் காரணம் ஒன்றை அடையாளம் காட்டுவதே இக் கட்டுரையின் நோக்கம். இனவெறி இலங்கை அரசுக்கெதிராக நிலைபாடு எடுக்கும்படி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதுதான் …
-
- 7 replies
- 1.4k views
-
-
காஷ்மீர் மனித உரிமை மீறல் பற்றிய பதிவு போட்டவுடன் பலர் உள் டப்பியில் (inbox) இது பொய்யான தகவல் என்றும் மனித உரிமை மீறல்கள் எதுவும் நடக்கவில்லை என்றும் ஆதாரம் வேண்டும் என்றும் கேட்கின்றார்கள்....கஷ்மீர் மட்டுமல்ல வடகிழக்கு மாநிலங்களிலும் பல மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன....வியாபார நோக்கில் இயங்கும் சுயநல ஊடகங்கள் இவைபற்றி செய்திகளை வெளியிடாமல் தவிர்ப்பதால் உண்மைகள் மறைந்துவிடாது....சில வருடங்கள் முன்னர் வெளிவந்த மணிபூர் பற்றிய ஆவணப்படம் இது....மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் எங்குமே நடைபெறவில்லை என்பவர்கள் இதை முழுமையாக பார்க்கவும்....தேசபக்தியை காரணம் காட்டி இதை மூடி மறைக்க சொல்லும் யாருக்கும் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை பற்றி பேசும் தகுதி இல்லை...…
-
- 1 reply
- 532 views
-
-
மாணவர்கள் போராட்டம் எதிரொலியால், மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன் ஆகிய இருவரும் பங்கேற்க இருந்த, பொதுக்கூட்டங்கள் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தலைமையில் நடைபெற இருந்த தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம் லோக்சபா தொகுதிகளின் ஆலோசனைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு, தேர்வு துவங்கிய பின், தமிழகம் முழுவதும் பொதுக் கூட்டங்களை நடத்த, அக்கட்சி திட்டமிட்டு உள்ளது. இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக, தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதனால், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. திருச்சியில், லோக்சபா தொகுதிகளின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடந்தது. கூட்டம் நடைபெற்ற…
-
- 4 replies
- 860 views
-
-
ராகுல் காந்தியை பிரதமராக முன்னிறுத்திவதில் காங்கிரஸுக்கு திடீர் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. 2014 ஆம் தேர்தலை காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங்கேயே மூன்றாவது முறையாக பிரதமர் பதவி வேட்பாளராக அறிவிக்கும் என தெரியவந்துள்ளது. 2014 பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில்லை என்றும், காங்கிரஸ் வெற்றி பெற்றால் மன்மோகன் சிங் தான் 3-வது முறையாக பிரதமராக பொறுப்பு ஏற்பார் என்றும் முடிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது. இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜனார்த்தன் திவேதி கூறுகையில், "தற்போது மத்தியில் இருக்கும் மன்மோகன் சிங்- சோனியா தலைமையிலான இரட்டை அதிகார மையம் இனிவரும் காலங்களிலும் நீடிக்க வேண்டும்'' என்றார். சோனியாவுக்கும், மன்மோகன் சிங்குக்கும் இடை…
-
- 1 reply
- 481 views
-