உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26872 topics in this forum
-
கடாபியின் குடும்பத்தினருக்கு ஓமான் அடைக்கலம் லிபியாவின் முன்னாள் அதிபர் முஹம்மர் கடாபியின் குடும்ப உறுப்பினர்கள் சிலருக்கு ஓமான் அடைக்கலம் வழங்கியுள்ளது. ஓமான் அரசாங்கம் இதனை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது. சர்வதேச காவல்துறையான இன்டர்போலினால் தேடப்பட்டுவருவோர் பட்டியலிலுள்ள இருவரும் இதில் அடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், அவர்களை நாடு கடத்துவது தொடர்பான கோரிக்கை குறித்த பேச்சுவார்த்தை அவசியமற்றது எனவும் லிபியா கூறியுள்ளது. கடாபியின் ஆட்சிக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட கிளர்ச்சியாளர்கள் கடந்த 2011 ஆம் ஆண்டு தலைநகர் த்ரிப்போலியைக் கைப்பற்றிய பின்னர், அவர்கள் அல்ஜீரியாவில் அகதி அந்தஸ்து கோரியிருந்தனர். இந்த நிலையில், கடாபியின் மனைவியும் அ…
-
- 0 replies
- 536 views
-
-
சிப்ரஸ் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் ஐரோப்பியா ஒன்றியத்திலிருந்து 10 பில்லியன் யூரோ பிணைய நிதி பெற ஒப்பந்தமாகியுள்ளது.இந்நிலையில் சிப்ரஸ் நாட்டின் வங்கிகளில் இருந்து யாரும் பணத்தை எடுத்துவிடக்கூடாது என்பதால் வங்கிகள் சில நாட்களாக மூடப்பட்டுள்ளன. லச்சாட் பெர்ன் நகரில் நடைபெற்ற நிறுவனங்களை மதிப்பீடு செய்யும் ஆண்டுக் கூட்டத்தில் சுவிஸ் சந்தை கண்காணிப்பு நிறுவனமான ஃபின்மாவின் தலைவி ஆனி ஹெரிட்டியர்(Anne Héritier) கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது அவர் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், சிப்ரஸில் இருந்து கறுப்புபணம் சுவிஸ் வங்கிகளுக்குள் வந்துவிடாமல் இருக்க கண்காணிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். ஏனெனில் திங்கட் கிழமையன்று சிப்ரஸ் நாடு ஐரோப்பிய ஒன்றியத்துடன் 10 பில்ல…
-
- 0 replies
- 616 views
-
-
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்திய அரசு புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் தெரிவித்தார். புதுவை சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இன்று (புதன்கிழமை) 4-வது நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தை சபாநாயகர் சபாபதி குறள் வாசித்து தொடங்கினார். முதல் நிகழ்வாக புதுச்சேரி சினிமா ஒழுங்குமுறை படுத்துதல் சட்டம், மதிப்பு கூடுதல் வரி சட்டம் ஆகியவற்றின் நகல்களை முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் தாக்கல் செய்தார். இதையடுத்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெறும் என்று சபாநாயகர் சபாபதி அறிவித்தார். அப்போது அ.தி.மு.க. உறுப்பினர் அன்பழகன் குறுக்கிட்டு இலங்க…
-
- 3 replies
- 389 views
-
-
திருச்சியில் கல்லூரிமாணவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், இலங்கை அரசுக்கு எதிராகவும் அறவழியில் கோஷங்கள் செய்து போராட்டம் நடத்தியபோது தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஞானசேகரன் ஆட்கள் உருட்டைக்கட்டை போன்ற ஆயுதங்களால் தாக்கியதால் ஏற்பட்ட சம்பவத்தில் 10க்கும் அதிகமான மாணவர்கள் மண்டை உடைந்து கவலைக்கிடமாக திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அற வழியில் போராடிய மாணவர்கள் மீது முன்னாள் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் ராஜசேகர் மற்றும் சில காங்கிரஸ் கட்சி குண்டர்கள் சுமார் 50 பேர்கள் கத்தி , கம்பு , அருவா போன்ற பயங்கர கருவிகளால் தாக்கி உள்ளனர் . இதில் 10 மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது . மூன்று மாணவர்கள் நிலை கவலைக்கிடமாக உள்ள…
-
- 0 replies
- 662 views
-
-
வெளிநாட்டு நிறுவனத்தின் கைக்குப் போகிறது சென்னை விமான நிலையம்! [Wednesday, 2013-03-27 08:05:25] கோல்கட்டா மற்றும் சென்னை விமான நிலையங்களை பராமரிக்கும் பொறுப்பை, உலகளாவிய நிறுவனங்களுக்கு, ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது என, விமான போக்குவரத்துத் துறை அமைச்சர், அஜித்சிங் கூறினார்.டில்லியில் நேற்று நடந்த, இந்திய தொழில் கூட்டமைப்பு கூட்டத்தில், அமைச்சர், அஜித் சிங் கூறியதாவது:இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தால், சென்னை மற்றும் கோல்கட்டா நகரங்களில், புதிதாக கட்டப்பட்ட, விமான நிலையங்களை நிர்வகிக்கும் பொறுப்பிலிருந்து, ஆணையம் விலகிக் கொள்ள முடிவு செய்துள்ளது. நிர்வகிக்கும் பொறுப்பை, ஏலத்தில் விட முடிவு செய்துள்ளோம்; உலகளாவிய நிறுவனங்களுக்கு, நிர்வகிக்கும் பொறுப்பை வழங்க…
-
- 0 replies
- 443 views
-
-
ஈராக்கில் இருந்து துருக்கி நாட்டிற்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் முக்கிய பைப் லைனை தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்தனர். இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடும், விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஈராக்கில் இருந்து துருக்கி வழியாக பல்வேறு நாடுகளுக்கு பைப் லைன் மூலம் பெட்ரோலிய கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து மெடிட்டேரனியன் கடலில் உள்ள துறைமுகம் வழியாக இந்த கச்சா எண்ணெய் கப்பல்கள் மூலம் உலக நாடுகளில் உள்ள பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்களை சென்றடைகின்றன. பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தியில் முதலிடத்தை வகிக்கும் ஈராக்கின் பொருளாதாரம் பெரும்பாலும் கச்சா எண்ணெய் ஏற்றுமதியையே சார்ந்துள்ளது.இந்நிலையில், துருக்கி நாட்டிற்கு கச்சா…
-
- 0 replies
- 507 views
-
-
கல்பாக்கம் அணு மின் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள் மீது போலீஸ் தடியடி பிரிவு: தமிழ் நாடு கல்பாக்கம் அணு மின் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியுள்ளனர். போலீஸ் தாக்கியதில் பெண்கள் உட்பட 10 பேருக்கு மண்டை உடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சீரான மின்சாரம், கல்வி, மருத்துவ வசதிகளை செய்து தரக் கோரிக்கை விடுத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோரிக்கையை வலியுறுத்தி சதுரங்கப்பட்டினம், புதுப்பட்டினம் கிராமத்தினர் முழக்கமிட்டனர். 2 வது நாளாக போராடிய மக்களை கலைந்து செல்லும்படி போலீஸ் கூறியும் கேட்காததால் தடியடி நடத்தப்பட்டுள்ளது http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13601:kalpakkam&catid=36:tamilnadu&Ite…
-
- 0 replies
- 426 views
-
-
ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி: வைகோ உள்பட 88 பேர் கைது பிரிவு: தமிழ் நாடு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச் செயலர் வைகோ உள்பட 88 பேரை போலீஸார் கைது செய்தனர். தூத்துக்குடி சிப்காட் பகுதியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து சனிக்கிழமை அதிகாலை வெளியான நச்சுவாயு காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இதனால் கண் எரிச்சல், மூக்கரிப்பு, தொண்டை வலி, மூச்சுத்திணறல் உள்ளிட்டவை ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வைகோ தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை காலை மாவட்ட ஆட்சியர்…
-
- 0 replies
- 433 views
-
-
காங்கிரஸின் நண்பர்களை நான் ஏன் இழக்க வேண்டும். அழகிரியின் அறிவிப்பால் திமுக தலைமை அதிர்ச்சி. பிரிவு: அரசியல் தனக்கு உடல்நிலை சரியில்லாததால் தான் மதுரையில் ஓய்வெடுக்க வந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். திமுக மத்திய அரசில் இருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் வெளியேறியது. இதையடுத்து திமுக மத்திய அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்நிலையில் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயற்குழு கூட்டம் நடந்தது. ஆனால், கடந்த 3 மாதங்களாக சென்னையில் இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி செயற்குழு கூட்டம் நடக்கும் இன்று காலை தனது மனைவி காந்தியுடன் மதுரைக்கு வந்துவிட்டார். மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கி…
-
- 0 replies
- 646 views
-
-
குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள மம்தாவிடம்அனுமதி கேட்கும் மேற்குவங்க நிஜ பரதேசிகள். பிரிவு: தலையங்கம் பாலா தன்னுடைய பரதேசி படத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வறுமை குறித்து தத்ரூபமாக படமாக்கியிருந்தார். அவருடைய படத்தில் வருவது போன்று நிஜமாகவே மேற்குவங்கத்தில் உள்ள தேயிலை தொழிலாளர் குடும்பங்கள் கும்பல் கும்பலாக வறுமையில் வாடி, தங்கள் வீட்டு இளம்பெண்களை விபச்சாரத்திற்கு அனுப்பி வறுமையில் வாடி வருகின்றனர். இவ்வாறு கஷ்டப்படும் அவர்கள் தங்கள் குடும்பத்தாருடன் தற்கொலை செய்து கொள்ள தங்களுக்கு அனுமதியளிக்க வேண்டும்' என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு தோட்ட தொழிலாளர்கள் கடிதம் எழுதியுள்ளனர். 10 ஆண்டுகளுக்கு மன்னர் ஜல்பய்குரி மாவட்டத்தில் உள்ள தேயில…
-
- 0 replies
- 449 views
-
-
இதுவரை வெளியிலிருந்து ஆதரவளித்து வந்த சமாஜ்வாதிக்கட்சி காங்கிரஸ்ஆட்சிக்கான ஆதரவை விலக்கிக் கொள்ளப்போவதாக அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரலாம்என எதிர்பார்க்கப்படுகிறது.
-
- 3 replies
- 850 views
-
-
கென்யா போலீஸுக்கு இது தான் தொழில் ஆகி விட்டுது. சில ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு பணம் படைத்த இந்திய குடும்பத்தின் நைரோபி வீட்டினுள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டுக் காரரை தாக்கி பொருட்களை கொள்ளை அடித்து செல்ல, தகவல் பெற்று வந்த போலிஸ்காரர்களோ, காயமடைந்து, வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல, வாகனத்தில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்த வீட்டுக்காரரையும், ஏற்றிக் கொண்டிருந்த குடுபத்தினரையும், கொள்ளையர்கள் என தவறாக நினைத்து வெடி வைக்க குடும்பமே காலி. கென்யா போலீஸின், மானமே கப்பல் ஏறிய அந்த வியாதி இப்போது நையீரியாவிற்கும்... மீண்டும் ஒரு முறை, ஆப்பிரிகாவில், அடப் பாவிகளே!! http://news2.onlinenigeria.com/headline/213504-policemen-called-to-help-with-an-armed-robbery-shoot-victims-instead…
-
- 0 replies
- 598 views
-
-
போர்க் குற்றங்கள் குறித்து பன்னாட்டு ஆணையம் விசாரணை: தி.மு.க. செயற்குழுவில். பிரிவு: தமிழ் நாடு இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து பன்னாட்டு ஆணையம் மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் தி.மு.க. செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க. செயற்குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் இன்று நடந்தது. 10.20 முதல் 11.40 வரை நடந்த கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு: ஈழத் தமிழர்களுக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலைகள் உருவாக்கப்பட்ட நிலையில், மத்திய ஆட்சியில் தி.மு.க. நீடிப்பது தமிழினத்துக்கே இழைக்கப்படும் தீமை என்பதால் மத்திய அமைச்சரவையில் இருந்தும், …
-
- 0 replies
- 405 views
-
-
பிரிவு: இந்தியா 55 ஆண்டு காலமாக ஆட்சி செய்து நாட்டை படு குழியில் தள்ளிவிட்டது காங்கிரஸ் கட்சிக்கு இனி ஆட்சி செய்யும் அதிகாரத்தை பெற தகுதி இல்லை என பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் கட்சியின் பேரணியில் கலந்து கொண்ட போது இதனை கூறியுள்ளார். விவசாயிகளின் பிரச்சனை, வேலையில்லா திண்டாட்டம், மின்வெட்டு போன்ற அடிப்படை பிரச்சனைகள் கூட காங்கிரஸ் ஆட்சியில் தீர்க்கப்படவில்லை என ராஜ்நாத் சிங் சுட்டிக்காட்டியுள்ளார். ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நாட்டை காப்பாற்ற பாரதிய ஜனதா கட்சியால் மட்டுமே முடியும் என அவர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நடத்தப்பட்ட பல்வேறு கருத்துக் கணிப்புகளின் படி 2014ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலி…
-
- 0 replies
- 652 views
-
-
தலிபான் பயங்கரவாதிகள் விடுத்த கொலை மிரட்டலை புறக்கணித்து விட்டு பாகிஸ்தான் திரும்பியுள்ளார் அந்நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப். துபையில் இருந்து விமானம் மூலம் கராச்சி நகருக்கு ஞாயிற்றுக்கிழமை அவர் வந்தார். பாகிஸ்தானில் மே 11-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, சுமார் 4 ஆண்டுகளுக்குப் பின் அவர் நாடு திரும்பியுள்ளார். கொலை மிரட்டலை மீறி... முஷாரப், பாகிஸ்தானுக்கு வந்தால் அவர் மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவோம் என்று தெஹ்ரிக்-இ-தலிபான் பயங்கரவாதிகள் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தனர். எனினும் அதனைப் பொருட்படுத்தாமல் முஷாரப், நாடு திரும்பியுள்ளார். ஆதரவாளர்கள், பத்திரிகையாளர்கள் என சுமார் 150 பேர் அவருடன் வந்துள்ளனர். உற்ச…
-
- 1 reply
- 420 views
-
-
ஜெனிவாவில் எடுபடாமல் போன இந்தியாவின் திருத்தங்கள் – ‘ரைம்ஸ் ஒவ் இந்தியா‘ தகவல் [ வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2013, 01:29 GMT ] [ கார்வண்ணன் ] திமுகவைத் திருப்திப்படுத்துவதற்காக, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்த தீர்மானத்தில், இந்தியா ஏழு திருத்தங்களை முன்வைத்ததாகவும், ஆனால் அவற்றை அமெரிக்கா முறைப்படி நிராகரித்து விட்டதாகவும் ‘ரைம்ஸ் ஒவ் இந்தியா‘ செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைப் பாதுகாப்பதற்கு, திமுகவை மீண்டும் அதனுள் கொண்டு வருவதற்காக, அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் ஏழு திருத்தங்களைச் செய்வதற்கு, இந்திய வெளிவிவகார அமைச்சுக்கு கடந்த புதன்கிழமை இந்திய அரசாங்கம் உத்தரவிட்டிருந்தது. …
-
- 2 replies
- 567 views
-
-
பாலிவுட் நடிகர் சஞ்சய்தத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை தனக்கு மிகவும் வேதனை அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தரப்பிலிருந்து வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: சஞ்சய்தத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனை மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது. அதே வேளையில் அவரை விடுதலை செய்ய வேண்டும் என பல தரப்பினரும் விடுத்து வரும் கோரிக்கைகள் நம்பிக்கையூட்டுகின்றன. இந்த தண்டனையிலிருந்து அவருக்கு விலக்கு கிடைத்து, எஞ்சியுள்ள நாள்களை அவர் அமைதியாகவும், நிம்மதியாகவும் கழிக்க வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன் என ரஜினிகாந்த் கூறியுள்ளார். 1993-ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய் தத்த…
-
- 5 replies
- 807 views
-
-
இலங்கையில் தமிழர்களுக்கு நீதி கிடைக்க தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மதுரையில் ராஜபக்சே, சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகிய மூவரும் போர்க்குற்றவாளிகள் என்பதை குறிக்கும் வகையில் 50 அடி உயர கட் அவுட் ஒன்றை பஸ் நிலையம் அருகே வைத்து அதற்கு செருப்பு மாலையும் சூட்டியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த கட் அவுட்டை அந்த பகுதியில் சென்று வரும் பொதுமக்கள் நின்று வேடிக்கை பார்ப்பதால் பெரும் சங்கடத்திற்கு உள்ளாகியிருக்கும் மதுரை போலீஸார், அந்த கட் அவுட்டை அகற்றும்படி கோரிக்கை வைத்தனர். ஆனால் அதை அகற்ற முடியாது என்றும் மீறி போலீஸாரால் கட் அவுட் எடுக்கப்பட்டால் போராட்டம் நடத்தப்படும் என மாணவர்களும் பொதுமக்களும் எதி…
-
- 4 replies
- 601 views
-
-
டொரண்டோவில் உள்ள முக்கியமான அரசு கட்டிடங்கள், தொழில் நிலையங்கள் மற்றும் அனைத்து கட்டிடங்களிலும் வரும் சனிக்கிழமை இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை அனைத்து மின் விளக்குகளையும் அணைத்து பூமி நேரம் என்று அழைக்கக்கூடிய எர்த் ஹவர் நிகழ்ச்சிக்கு ஒத்துழைக்குமாறு டொரண்டோவின் சுற்றுப்புற சூழல் துறையினர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். பூமி நேரம் கடைபிடிப்பதன் மூலம் உலகத்தின் சுற்றுப்புற சூழல் மற்றும் வெப்பத்தை குறைக்கும் எண்ணத்தால் அன்றைய தினம் உலகம் முழுவதும் ஒரு மணி நேரம் மின் விளக்குகளை அணைக்கும் நிகழ்ச்சி உலகின் பல நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது. அந்த ஒரு மணி நேரத்தில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சில விழாக்களும் நடத்தப்படுவதுண்டு. உலகின் 150 நாடுகளி அந்தந்த …
-
- 6 replies
- 521 views
-
-
சிறை கைதிகளின் கால்களை கழுவும் போப் சனி, 23 மார்ச் 2013( 11:41 IST ) புனித வியாழனை முன்னிட்டு வரும் 28ஆம் தேதி போப் பிரான்சிஸ் ரோம் நகரில் உள்ள சிறையில் இருக்கும் 12 கைதிகளின் கால்களை சுத்தம் செய்ய இருக்கிறார். இயேசு நாதர் சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் இரவு தனது 12 சீடர்களின் கால்களை கழுவினார். இயேசு பிரானை பின்பற்றும் விதமாக போப் ஆண்டவர்கள் இந்த பழக்கத்தை தொடர்ந்து வருகின்றனர். வழக்கமாக புனித வியாழன் அன்று வாடிகன் தேவாலயத்தில் வைத்து தான் இந்த கால் கழுவும் நிகழ்ச்சி நடந்துவந்தது.இந்நிலையில் போப் பிரான்சிஸ் கஸல் டெல் மார்மோ சிறைக்கு புனித வியாழன் மதியம் சென்று அங்குள்ள கைதிகளில் 12 பேரின் கால்களை கழுவவிருக்கிறார். http://tamil.webdunia.com/newsworld/news/int…
-
- 1 reply
- 507 views
-
-
வங்கதேசஅதிபரின் திடீர் மரணத்திற்கு கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் பேயர்டு இரங்கல் தெரிவித்துள்ளா. அவ்ருடைய இரங்கல் செய்தியில் வங்கதேசத்தின் நிகரில்லா தலைவர் ஜனாதிபதி ஜில்லூர் ரஹ்மான் மறைவிற்கு கனடா ஆழ்ந்த தெரிவிப்பதாகவும் அவருடைய ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். வங்காளதேச ஜனாதிபதி ஜில்லூர் ரஹ்மான் (85) சிறுநீரகம் மற்றும் சுவாச கோளாறினால் பாதிக்கப்பட்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து வங்காளதேசத்தில் 3 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் அவருடைய உடல்இன்று தனி விமானம் மூலம் டாக்கா கொண்டு வரப்பட்டத…
-
- 0 replies
- 334 views
-
-
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு, மூன்று நாள் சுற்றுப் பயணமாக சென்ற அமெரிக்க அதிபர் ஒபாமா, இஸ்ரேல் பிரதமர் முன்னிலையில் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது, திடீரென எழுந்த மாணவர் ஒருவர் சரமாரியாக கேள்விகள் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் சாமர்த்தியமாக அந்த மாணவருக்கு பொறுமையாக பதில் கூறி, அனைவரது பாராட்டுக்களையும், கைதட்டல்களையும் பெற்றார் ஒபாமா. சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக, இஸ்ரேல் பல்கலைக் கழக மாணவர்களிடையே, ஒபாமா உரையாற்றினார். அப்போது, பார்வையாளர் அரங்கில் இருந்த ஒரு மாணவர், ஒபாமாவின் உரையை இடைமறிக்கும் வகையில், ஹீப்ரூ மொழியில், கோஷமிட்டார்.இதனால் அங்கு, சலசலப்பு ஏற்பட்டது. அம்மாணவரை அமரச் சொல்லி, மற்ற மாணவர்கள் கூச்சலிட்டனர்.எனினும், கோபப…
-
- 0 replies
- 440 views
-
-
கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆண்டுக்கணக்கில் பிடிபடாமல் வெளியுலகில் சுதந்திரமாக வாழும் இந்த காலத்தில் கொலையே செய்யாமல் 23 ஆண்டுகளாக சிறையில் வாடிய அமெரிக்கர் ஒருவரை தற்போது நிரபராதி என முடிவு செய்து விடுதலை செய்துள்ளது. அவர் விடுதலையான போது அவருடைய உறவினர்கள் கட்டித்தழுவி ஆனந்தக்கண்ணீர் வடித்து வரவேற்றனர். அமெரிக்காவின்,நியூயார்க் நகரை சேர்ந்த, டேவிட் ரான்டா, கடந்த, 1991ல், நடந்த வழிப்பறியின் போது, யூத மத குருவை கொன்றதாக, குற்றம் சாட்டப்பட்டார். இதையடுத்து, அவருக்கு, 37 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. எனினும், தனக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு இல்லை என, அவர் கூறி வந்தார். கடந்த 23 ஆண்டுகளாக, சிறையில் இருந்த இவரை, "குற்றமற்றவர்' என, கூறி, புரூக்ளி…
-
- 0 replies
- 376 views
-
-
"இலங்கையின் கொலைக் களம்'' என்ற தலைப்பிலான ஆவணப்படம் தில்லி பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை திரையிடப்படுகிறது. இலங்கைப் போரின் போது அந்நாட்டு ராணுவத்தினரின் போர்க் குற்றங்களை "சேனல் 4' தொலைக்காட்சி ஒளிபரப்பியது. "சேனல் 4' தொலைக்காட்சியில் வெளிவந்த காட்சிகளைத் தொகுத்து தில்லி தமிழ் மாணவர்கள் பேரவை ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளனர். தில்லி பல்கலைக்கழக சமூக அறிவியல் கட்டடத்தில் சனிக்கிழமை பகல் 2 மணிக்கு இப்படம் திரையிடப்படுகிறது. பிறகு, மார்க்சீய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் வே. ஆனைமுத்து, தில்லி பல்கலைக்கழக அறிவியல் துறைப் பேராசிரியர் டாக்டர் சுகுமார் ஆகியோர் உரையாற்றுவர். http://dinamani.com/edition_new_delhi/article1513166.ece
-
- 0 replies
- 434 views
-
-
ஒண்டோரியோ விமான நிலையத்தில் இருந்து 170 பயணிகளுடன் கிளம்பிய விமானம் ஒன்றின் பின்பகுதியான cockpit பகுதியில் திடீரென தீப்பிடித்ததால், விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக விமான ஓட்டிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பெரும் விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டது. ஒண்டோரியோ விமான நிலையத்தின் தீயணைப்பு வீரர்கள் விமானம் இறங்கியுடன் அதிரடியாக செயல்பட்டு விமானத்தின் உள்ளே தீ பரவாமல் உடனே அணைத்தனர். இதுகுறித்து நடந்த முதல் விசாரணையில், விமானத்தின் உள்ளே காலை மணிக்கே புகைவந்து கொண்டிருந்ததை சிலர் பார்த்ததாகவும், ஆனால் விமான நிலைய ஊழியர்களும் விமான ஓட்டிகளும் அதை கவனிக்காமல் விமானத்தை ஓட்டியதாகவும் தெரிய வ்ந்துள்ளது. தீய…
-
- 1 reply
- 399 views
-