உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
பிரிட்டனைச் சேர்ந்த மாடலிங் பெண் ஒருவரை, கொடூரமாக கற்பழித்து இரண்டு மார்பகங்களுக்கு நடுவில் கத்தியால் ஆழமாக குத்தி, கொலை முயற்சியில் ஈடுபட்டவர் மீதான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது குற்றவாளியும் பாதிக்கப்பட்ட மாடலிங் பெண்ணும் நிதிமன்றத்தில் ஆஜரானார்கள். பிரிட்டனைச் சேர்ந்த 25 வயது மாடலிங் பெண், Cheryl Maddison, கடந்த 2008ஆம் ஆண்டு Moroccan Mohamed Fadel El Anssari என்ற பயங்கர ஆசாமியால் கடத்தப்பட்டு, கொடூரமாக பாலியல் வல்லுறவுக்கு ஈடுபடுத்தப்பட்டார். பாலியல் வல்லுறவுக்குப் பின், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெண்ணின் இரண்டு மார்புகளுக்கு நடுவே ஆழமாக குத்தி காயப்படுத்திய்தோடு அவருடைய் உடலில் 21 இடங்களில் கத்தியால் காயப்படுத்தியுள்ளான். இதனால் ரத…
-
- 1 reply
- 838 views
-
-
கடந்த 3-ம் தேதியில் இருந்தே தி.மு.க-வில் மேகம் கருக்க ஆரம்பித்துவிட்டது. 'இந்தச் சமுதாய மேன்மைக்காக, எழுச்சிக்காக நான் என் ஆயுள் இருக்கிற வரை பாடுபடுவேன். அப்படியானால், அதற்குப் பிறகு என்ற கேள்விக்குப் பதில்தான் இங்கே அமர்ந்திருக்கிற தம்பி ஸ்டாலின் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.’ இதுதான் கடந்த 3-ம் தேதி அண்ணா அறி வாலயத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் கருணாநிதி சொன்னது. ஸ்டாலின் தன்னுடன் மேடையில் இருந்தால், அவருக்கு உற்சாகம் ஊட்டுவது மாதிரி கருணாநிதி சில டானிக் வார்த்தைகளைச் சொல்வது வழக்கம்தான். அப்படி ஒரு சம்பவம் இது என்றுதான் பலரும் அமைதியாக இருந்தனர். 'இந்த மாதிரி தலைவர் எத்தனையோ முறை சொல்லிவிட்டார். அதுமாதிரிதான் இதுவும்’ என்று முன்னாள் அமைச்சர்களுக்குள் பேச்சு எழுந்…
-
- 1 reply
- 2.4k views
-
-
புதுடெல்லி, டிச. 31- டெல்லியில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட மாணவி சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் உயிருக்குப் போராடிய கடைசி 8 மணி நேரம் மிகவும் பரபரப்பாக இருந்தது தெரிய வந்துள்ளது. மாணவியுடன் அவரது பெற்றோர் மற்றும் 2 தம்பிகள் அழைத்து செல்லப்பட்டிருந்தனர். அவர்கள் மாணவி அருகிலேயே இருந்தனர். வியாழக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது தான் அவருக்கு தலையில் காயம் இருப்பதை சிங்கப்பூர் டாக்டர்கள் கண்டு பிடித்தனர். இந்த நிலையில் மறு நாள் (வெள்ளிக்கிழமை) மாணவி உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழக்க தொடங்கின. கிருமி தொற்றும் உடல் முழுக்க பரவி விட்டதால் டாக்டர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு மாணவி பெற்றோரை சந்தித்த டாக்டர்கள் வருத்தம் தெ…
-
- 4 replies
- 900 views
-
-
புதுடெல்லி: டெல்லி மாணவி பாலியல் வழக்கை மூடப்பட்ட அறையில் விசாரிக்கவும், அதனை விடியோவில் பதிவு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் பாலியல் வன்கொடுமையால் மாணவி பலியான வழக்கு டெல்லி சாகேத் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்றைய விசாரணையின்போது,டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்சிங், முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா, அக்சய் தாக்கூர் ஆகியோரை பலத்த பாதுகாப்புடன், சாகேத் விரைவு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது டெல்லி காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம்,டெல்லி மாணவி பாலியல் வழக்கை மூடப்பட்ட அறையில் விசாரிக்கவும், …
-
- 1 reply
- 562 views
-
-
தன்னுடைய ஆடம்பர திருமண செலவிற்காக முதலாளியின் 170,000 பவுண்ட் பணத்தை திருடிய இளம்பெண், கைது செய்ய்பப்பட்டு உடனடிய திருடிய பணத்தின் பத்தில் ஒரு பாகத்தை ஒப்படைக்குமாறு வற்புறுத்தப்பட்டுள்ளார். பிரிட்டனைச் சேர்ந்த Kirsty Lane என்ற பெண்மணி, இங்கிலாந்தின் மிக உயர்ந்த திருமண மண்டபமான The Great Hall at Mains என்ற இடத்தில் மிக ஆடம்பரமாக தன்னுடைய திருமணத்தை நடத்தினார். திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு உயர்ரக மதுவகைகள் பரிமாறப்பட்டன. நாட்டிலேயே மிகச்சிறந்த விருதுபெற்ற சமையல்காரர் செய்த உயர்ந்த வகை உணவுகள் விருந்தினர்களுக்கு பரிமாறப்பட்டன. உடைகள், நகைகள் எல்லாமே மிக உயர்ந்த விலையில் வாங்கப்பட்டன. சாதாரண ஒரு நிறுவனத்தில் வேலைபார்க்கும் சராசரி இளம்பெண்ணுக்கு இவ…
-
- 0 replies
- 506 views
-
-
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பெண், தன்னுடைய பாய்பிரண்ட் மீது உள்ள கோபத்தால், அவருடைய 2 வயது மகள் மீது வேகமாக மிளகாய்ப் பொடியை தூவி கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, கைது செய்யப்பட்டார். தெற்கு கலிபோர்னியாவைச் சேர்ந்த 21 வயது பெண், Amanda Sorensen, தன்னுடைய பாய்பிரண்டிடம் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டே இருந்திருக்கின்றார். ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடு முற்றியதால், பாய்பிரண்டை பழிவாங்குவதற்காக, அவருடைய இரண்டு வயது குழந்தை மீது மிக வேகமாக மிளகாய்ப் பொடியை தூவி இருக்கின்றார். மிளகாய்ப்பொடி வேகமாக தூவப்பட்டதால், அலறிய குழந்தை மூச்சுவிட முடியாமல் திணறி, இறந்துவிட்டது. இதுகுறித்து விசாரணையில் இறங்கிய கலிபோர்னியா காவல்துறை, Amanda Sorensen ஐ…
-
- 0 replies
- 488 views
-
-
இங்கிலாந்து முழுவதும் சுமார் 18 மில்லியன் போலி காண்டம்கள் சட்டத்திற்கு புறம்பாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் தேவையில்லாத கர்ப்பங்களும், பால்வினை நோய் பரவுவதற்கான அபாயம் இருப்பதாக இங்கிலாந்து சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இங்கிலந்து அரசின் சுகாதாரத்துறை அதிகாரி நேற்று விடுத்த ஒரு எச்சரிக்கை அறிக்கையில், நாடு முழுவதும் சுமார் 18 மில்லியன் தரம் குறைவாக உருவாக்கப்பட்ட போலி காண்டம்கள் விற்பனைக்கு வந்துள்ளதாகவும், இதை உபயோகிப்பவர்களுக்கு எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாகவும், மேலும் தேவையில்லாத கர்ப்பங்கள் அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதுபோன்ற போலி காண்டம்களை கடைகளில் விற்பனை செய்வதை தடை செய்து, காண்டம் விற்பனையை ஒ…
-
- 8 replies
- 770 views
-
-
சென்னை: மேல்மருவத்தூர் ஆதிபரசாக்தி அறக்கட்டளையின் கீழ் செயல்படும் பல்மருத்துவக் கல்லூரியில் உயர் படிப்புக்கு அனுமதி பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்ற போது கல்லூரி நிர்வாகிகள் 3 பேரை சிபிஐ கைது செய்தது. லஞ்சம் பெற முயன்ற அனுமதி தரும் குழுவைச் சேர்ந்த ஒருவரும் சிக்கினர். மேல்மருவத்தூரில் தனிராஜாங்கம் நடத்தி வருபவர் 'ஆதிபராசக்தி" சாமியாக தம்மை பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கும் பங்காருஅடிகள். பங்காரு அடிகளிடம் கொட்டிக் குவிந்த பணத்தைக் கொடுத்து ஏராளமான கல்வி நிறுவனங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில் ஒன்று பல் மருத்துவக் கல்லூரி. இந்த பல்மருத்துவக் கல்லூரியில் உயர்படிப்புக்கு அனுமதி கோரி நிர்வாகத்தினர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் கல்லூரியில் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை என்பதா…
-
- 4 replies
- 739 views
-
-
ஈரோடு: ஈரோட்டில் பாதிரியார்கள் ஓட்டிப் பழகிய ஜீப் மோதி பத்தாம் வகுப்பு மாணவி பலியானார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்து உள்ளது மலைப்பகுதியான தாளவாடி. தமிழக கர்நாடக எல்லையில் உள்ள தாளவாடியில் கிறிஸ்தவ அமைப்பு ஒன்று டிவைன் என்னும் தனியார் மெட்ரிக் பள்ளியை நடத்தி வருகிறது. இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு படிப்பவர்கள் குமிட்டாபுரத்தைச் சேர்ந்த சந்தியா(15), சுஷ்மா(15). அந்த பள்ளிக்கு அருகே செயல்பட்டு வரும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் பங்குத் தந்தையாக இருப்பவர்கள் பாதிரியார்கள் டேவிட், லூர்துராஜ். அவர்கள் 2 பேரும் நேற்று மாலை டிவைன் பள்ளி மைதானத்தில் ஜீப் ஓட்டிப் பழகிக் கொண்டிருந்தனர். அப்போது சிறப்பு வகுப்பு முடித்து வந்த சந்தியா மற்றும் சுஷ்மா மீத…
-
- 0 replies
- 459 views
-
-
ராய்ப்பூர்: "கிரக நிலைகள் பாதகமாக இருப்பதால் தான், நாட்டில், பாலியல் வல்லுறவு சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன,'' என, சத்தீஸ்கர் மாநில உள்துறை அமைச்சர், நான்கிராம் கன்வர் கூறியுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கரில், ராமன் சிங் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் உள்துறை அமைச்சராக, பா.ஜ.,வைச் சேர்ந்த, நான்கிராம் கன்வர், பதவி வகிக்கிறார். சமீப காலமாக, நாட்டில், பாலியல் வல்லுறவு சம்பவங்கள் அதிகம் நடப்பது குறித்து, அவர் கூறியதாவது: நம் நாட்டில், தற்போது கிரக நிலை சரியில்லை. கிரகங்கள் அனைத்தும், பாதகமான நிலையில் உள்ளன. இதனால் தான், பாலியல் வல்லுறவு போன்ற துயர சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன; இந்த பிரச்னைக்கு நம்மால், தீர்வு காண முடியாது. ஜோதிடர்கள் தான்,…
-
- 1 reply
- 534 views
-
-
சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மாயமான சம்பவம் தொடர்பான மர்மங்களை தெளிவுபடுத்த உதவி செய்யும்படி, அவரது குடும்பத்தினர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நாடியுள்ளனர். இது தொடர்பாக, நேதாஜியின் உறவினரான சந்திர குமார் போஸ் என்பவர் மம்தா பானர்ஜிக்கு எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதியன்று பாங்காக் விமானநிலையத்திலிருந்து புறப்பட்ட நேதாஜி குறித்து அதன் பின்னர் தகவல் இல்லை. இது தொடர்பாக மத்திய அரசுக்கு பலமுறை வேண்டுகோள் விடுத்தும் முறையான பதில் இல்லை. உலகம் முழுவதும் உள்ள நேதாஜியின் ஆதரவாளர்கள் சார்பாக, தாங்கள் இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, அவரது மாயம் தொடர்பான விளக்கங்களை பெற வேண்டும் என கேட்டுக்கொண்டுள…
-
- 0 replies
- 2.7k views
-
-
ஒண்டோரியோவைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர், கடந்த புத்தாண்டு தினத்தில் திடீரென காணாமல் போனார். அவரை போலீஸார் தனிப்படை அமைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அவருடைய உடல் woodlot west of Petrolia என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டது. அவருடைய இறுதிச்சடங்கு இன்று நடைபெறுவதாக அவருடைய குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். ஒண்டோரியோவைச் சேர்ந்த 27 வயது இளம்பெண், Noelle Paquette என்பவர் kindergarten ஆசிர்யையாக வேலை பார்த்து வந்தார். இவர் சென்ற ஜனவரி 1ஆம் தேதி, புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது திடீரென காணாமல் போனார். இதுகுறித்து காவல்நிலையத்தில் அவருடைய உறவினர்கள் புகார் செய்தனர். போலீஸார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர…
-
- 0 replies
- 499 views
-
-
மிஸ் கனடாவாக தேர்ந்தெடுக்கப்பட்ட கனடாவின் அல்பெர்ட்டா மாகாணத்தை சேர்ந்த Priya Banerjee என்பவர் தெலுங்கு சினிமா ஒன்றில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தின் வம்சாவழியில் பிறந்த Priya Banerjee சிறுவயது முதலே கனடாவில் வளர்ந்து வந்தார். கனடாவின் Calgary பல்கலைக்கழகத்தில் சர்வதேச மார்க்கெட்டிங் துறையில் பட்டப்படிப்பு படித்த இவர், மாடலிங் துறையில் ஈடுபட சமீபத்தில் இந்தியா வந்தார். பாலிவுட்டின் அனுபவம் மிக்க அனுபம்கேர் உதவியால், நடிப்புப் பயிற்சியில் ஈடுபட்ட பிரியா பானர்ஜிக்கு, தெலுங்கு சினிமா வாய்ப்பு ஒன்று வந்துள்ளது. Saikiran Adivi என்ற தெலுங்கு படத்தயாரிப்பாளர் தயாரிக்கும் கிஸ் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும், பிரியா தனது முத…
-
- 5 replies
- 630 views
-
-
அமெரிக்காவில் சிக்காக்கோ நகரில் வசித்து வரும் இந்தியப் பிரஜையொருவருக்கு அண்மையில் சுரண்டல் சீட்டு மூலம் மில்லியன் டொலர்கள் வெற்றி கிடைத்தது. இந்தப் பரிசின் பிரகாரம் மில்லியன் டொலர்கள் அவரது ஆயுட்காலம் முழுவதும் பிரித்துக் கொடுக்கப்படும் அல்லது ஒரு தடவைப் பரிசுத் தொகையாக 425,000 டொலர்கள் வழங்கப்படும். இந்தப் பரிசை வென்ற சலவை மற்றும் உடுப்பு அழுத்தித் தொழல்நிறுவனங்கள் மூன்றிற்கு உரிமையாளரான 46 வயதுடைய உருஜ்ட கான் பரிசுத்தொகை தபாலில் அனுப்பப்பட்டு அது கிடைக்கு முன்பே மரணமானார். இவரது மரணத்தைப் பரிசோதனை செய்ய வைத்தியர்கள் இயற்கை மரணம் என சான்றிதழும் கொடுத்து விட்டனர். இருந்த போதும் ஒரு நெருங்கிய உறவினருக்கு சந்தேகம் தீரவில்லை. அவர் பொலிசாரை நாடினார். சுடலம் தோண்டியெடுக்கப்ப…
-
- 6 replies
- 738 views
-
-
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுடனான மோதலில் 10 ரிசர்வ் படையினர் உயிரிழந்துள்ளனர். 2 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தின் லடேஹர் மாவட்ட வனப்பகுதியில் நேற்று காலை 10.30 மணிக்கு மாவோயிஸ்டுகளுக்கும் ரிசர்வ் படையினருக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. 200க்கும் மேற்பட்ட ரிசர்வ் படையினர் மிகப் பெரிய தேடுதல் நடாடிக்கையை 'அனகோண்டா-2" என்ற பெயரில் நேற்ற் தொடங்கினர். அப்போது படையினர் மீது 100க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் பெரும் பதில் தாக்குதலை நடத்தினர். இருதரப்பினரிடையே பல மணி நேரம் மோதல் நீடித்தது. பின்னர் இரவு 8 மணியளவில் இந்த மோதல் முடிவுக்கு வந்தது. இதில் 10 படையினர் பலியாகினர். 2 மாவோயிஸ்டுகள் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயமடைந்துள்ளனர…
-
- 0 replies
- 374 views
-
-
கோளத்தின் மக்கள்தொகை ஏறி ஏறி உயர்ந்துபோக, கொலம்பியக் கரைக்கு அப்பாலுள்ள, மிகச் சிறிய கரிபியனுக்கு வெளியே, தொலைவிலுள்ள காவல் நிலையம் வாழு; மக்கள், இடமான இன்றியமையாத ஒரு போகப் பொருள், இல்லாது வாழலாம் என்பதனை எண்பிக்கின்றனர் பத்தில் ஒன்றிலும் கொஞ்சம் கூடிய சதுரக் கிலோமீற்றரில் 1,200க்கும் கூடுதலான மக்களது வதிவிடமான, இந்தக் கோளில் மிகவும் நெருக்கமாக மக்கள் வாழ்கின்ற தீவான, சான்ரா குறூஸ் டெல் ஐலெற் வரவேற்கிறது. நிறங்கள் மிளிரும் வளைந்து வளைந்துள்ள ஒடுங்கிய நடைபாதைகளும், புழக்கடைகளும், 90 வீடுகளைத் தொடுக்கின்றன. இரண்டு கடைகளும் ஒரு உணவகமும் பள்ளிக்கூடமும் கடற்கரையில் கட்டப்பெற்றுள்ளன. மருத்துவர்; இல்லாமலும், தொடர் நீர்ப் பகிர்வு இன்றியும், நாளுக்கு ஐந்து மணி நேரம் மட்டும் இயங…
-
- 0 replies
- 489 views
-
-
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையை பாதுகாக்க கோரி நடைபெற உள்ள போராட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்க உள்ளதாக அக்கட்சியின் எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று கன்னியாகுமரியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,"கன்னியாகுமரியில் விவேகானந்தர் ஜெயந்தியையொட்டி நடைபெறும் விழா வில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளேன். திமுக தலைவர் கருணாநிதி வருகிற 19 ஆம் தேதி திருவள்ளுவர் சிலையை பாதுகாக்க வலியுறுத்தி கன்னியாகுமரியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். அதில் தலைவர் கருணாநிதி,பேராசிரியர் அன்பழகன்,பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.நமது கலாச்சாரம், மொழி, இனம், பாரம்பரியம் காப்பாற்றப்பட வேண்ட…
-
- 0 replies
- 416 views
-
-
இரண்டு உலகப்போர்களை பார்த்த பிரிட்டனின் மிக அதிக வயதான 110 வயது முதியவர் சனிக்கிழமை மரணமடைந்தார். அவரது இறுதியஞ்சலியை நண்பர்கள் நடத்தி வைத்தனர். (தன்னுடைய மகன் கிறிஸ்டோபருடன் 110 வயது முதியவர்) பிரிட்டனிலேயே அதிக வயதுடைய மனிதராக வாழ்ந்து கொண்டிருந்த Reverend Reg Dean என்பவர், தன்னுடைய 110 வது வயதில் சென்ற சனிக்கிழமை மரணமடைந்தார். இவருக்கு சரியாக வயது 110 வருடங்களும் 63 நாட்களும் ஆகின்றது. கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் பிரிட்டனின் அதிக வயதுடையவர் என்ற பெருமையை தக்கவைத்திருந்த அவர், இரண்டாம் உலகப்போரின் போது நண்பராக கிடைத்த இந்திய மருத்துவர் ஒருவரின் ஆலோசனையின் பேரிலேயே தாம் மிகவும் அதிக வயதுவரை ஆரோக்கியமாக வாழ்ந்ததாக ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இவர் தன்னுடைய 11…
-
- 0 replies
- 359 views
-
-
இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ரானை படிக்க மறுத்த 7 வயது சிறுவனை கம்பால் அடித்தும், நெருப்பால் சுட்டும் கொடுமைப்படுத்தி, கொலை செய்த 33 வயது தாயார் ஒருவருக்கு ஆயுள் தனடனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. (கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுவனும், சிறுவனைக் கொன்ற தாயும்) இங்கிலாந்தின் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள Cardiff Crown Court என்ற நீதிமன்றத்தில் நேற்று ஒரு பரபரப்பான தீர்ப்பு அளிக்கபட்டது. Sara Ege, என்ற 33 வயது பெண் ஒருவர், தன்னுடைய 7 வயது சிறுவனை குர்ரான் படிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். விளையாட்டு பருவத்தில் இருந்த அந்த சிறுவன், குர்ரான் படிப்பதில் கவனம் செலுத்தவில்லை என்ற காரணத்தால், அந்த சிறுவனை கம்பால் அடித்தும், நெருப்பால் சூடு வைத்தும் கொடுமைப்படுத்தியுள்ளார் அந்த தாய். …
-
- 0 replies
- 1.4k views
-
-
பாலஸ்தீனம் ஐ.நாவில் வெறும் பார்வையாளர் அந்தஸ்த்து பெற்றால் அதனால் என்ன பயன் என்று சப்பைக்கட்டு கட்டியவர்களுக்கு இப்போது பாலஸ்தீனத்தில் நடக்கும் சம்பவங்கள் முதுகுத்தோல் உரித்து துடிக்கத் துடிக்க உப்புத்தடவ ஆரம்பித்துள்ளன. பாலஸ்தீனம் இனி தனிநாடு என்று பிரகடனம் செய்த அதிபர் முகமட் அபாஸ் அந்த நாட்டின் குடிமக்களுக்கு பாலஸ்தீன கடவுச்சீட்டு, அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் ஆகியவைகளை வழங்க ஆரம்பிக்கும்படி பணித்துள்ளார். சர்வதேச நாடுகளின் விமான நிலையங்கள் பாலஸ்தீன தனியரசின் கடவுச்சீட்டுக்களை முறைப்படி ஏற்க வேண்டிய நிலை இப்போது உருவாகியுள்ளது. ஒரு தனிநாடு என்னென்ன காரியங்களை செய்ய வேண்டுமோ அத்தனை காரியங்களையும் பாலஸ்தீனம் செய்ய அடியெடுத்து வைத்திருப்பது நாடற்ற இனங்கள…
-
- 3 replies
- 638 views
-
-
நான்காவது உருவாகிய கருவை அபார்ஷன் செய்ததால், கோபமடைந்து தன் மனைவியை கத்தியால் 26 இடங்களில் குத்தி கொலை செய்த இங்கிலாந்து கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் வாழும் Junior Saleem Oakes என்பவர், தன் 22 வயது மனைவி Natasha Trevis என்பவருடன் வாழ்ந்து வந்தார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் நான்காவதாக கருவுற்ற Natasha Trevis, அந்த குழந்தையை பெற்றெடுக்க விரும்பாமல், தன்னுடைய கணவனிடம் அனுமதி பெறாமல், மருத்துவமனைக்கு சென்று கருவை கலைத்துவிட்டார். இதனால் கடும் கோபமடைந்த கணவன், தன்னுடைய மனைவியை கூர்மையான கத்தியால் உடலின் பல பாகங்களிலும் 26 இடத்தில் குத்தி கொலை செய்தார். இதனால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட Junior Saleem Oakes மீத…
-
- 0 replies
- 453 views
-
-
-
- 4 replies
- 792 views
-
-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த பால் வியாபாரி கைது - இதுபோன்ற அவலநிலை நடைபெறுவது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புதியதலைமுறை கண்ட சிறப்பு பேட்டி...
-
- 0 replies
- 358 views
-
-
வட்ட செயலாளர் 'வண்டு முருகனும்' ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும்! அந்தியூர்: உதயகுமாரை ஆரம்பத்திலேயே அடக்கி இருந்தால் கூடங்குளத்தில் இப்போது மின் உற்பத்தி தொடங்கி இருக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் தேரடி திடலில் காங்கிரஸ் சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பேசிய இளங்கோவன், முதல்வர் ஜெயலலிதாவை தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் அதிக நேரம் பேச விடவில்லை என்பதற்காக தமிழ்நாட்டில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கொடும்பாவியை எரித்து அதிமுகவினர் அநாகரீமாக நடந்து கொண்டார்கள். இதை நாங்கள் திருப்பி செய்ய எவ்வளவு நேரம் ஆகும்?. அந்த செயலை நாங்கள் செய்ய மாட்டோம்…
-
- 1 reply
- 1.3k views
-
-
இந்திராகாந்தி கொலையாளிக்கு மாவீரர் பட்டம்: அகாலி தளம் கவுரவம். அமிர்தசரஸ்: இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியை சுட்டுக்கொன்ற சீக்கிய காவலாளிக்கு அகாளிதளம் மாவீரர் பட்டம் வழங்கி கவுரவத்துள்ளது. சத்வந்த் சிங்கின் வீரத்தையும் தியாகத்தையும் கவுரவிக்கும் வகையில், அவருடைய தந்தைக்கு போர் வீரர்கள் அணியும் அங்கியை வழங்கி, ‘மத நம்பிக்கைக்காக மரணத்தை தழுவிய மாவீரன்' பட்டத்தையும் வழங்கியுள்ளது. கடந்த 1984-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 31ம் தேதி, அப்போதைய பிரதமராக இருந்த இந்திராகாந்தி அவரது மெய்காப்பாளர்களான சத்வந்த் சிங், பியந்த் சிங் ஆகியோரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து, கடந்த 1989-ம் ஆண்டு, ஜனவரி மா…
-
- 18 replies
- 1.3k views
-