உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26867 topics in this forum
-
கே எஃப் சி உணவில் ஈகோலி கிருமி! அதிர்ச்சி தகவல். Jan 15 2013 09:42:23 நோவா ஸகாட்டியா, நியு பரன்ஸ்விக், ஒண்டோரியோ பகுதிகளில் வயிற்றுக் கோளாறு நோய் தீவிரமாக பரவி வருகிறது. அதற்கு அடிப்படை காரணமாக கேஎஃப்சி மற்றும் டாகோ பெல் உணவகங்களில் பறிமாறப்பட்ட லெட்யுஸ் கீரையில் இருந்த ஈகோலி கிருமிதான் என்று சொல்லப்படுகிறது. ‘இந்த மூன்றுப் பகுதிகளிலும் பரவியுள்ள ஈகோலி கிருமிகளுக்கு இதுதான் மூலம் என்று கருதப்படுகிறது’ என்று நோவா ஸாக்ட்டியாவின் துணை மருத்துவ அதிகாரி ஃப்ரான்க் அதார்டன் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து தன்னிடமுள்ள கிருமி பாதிக்கப்பட்ட லெட்யுஸ் கீரையை அகற்றிவிட்டதாக கேஃப்சி நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது தங்களது உணவகங்களில் பறிமாறப்படும் உணவு வகைகள் பாதுகாப்பானது எ…
-
- 0 replies
- 731 views
-
-
சறேயில் செவ்வாய் அதிகாலை துப்பாக்கி வன்முறை மீண்டும் கிளம்பியது. வன்கூவரது புறநகரம் அங்கு நடைபெற்ற அண்மையக் கொலையைப் பதிவு செய்தது. ஆனால் விசாரணை செய்வோர் குழுச்சண்டை பெருகுவதான ஊகத்தைப் புறக்கணித்துள்ளனர். இந்நேரத்தில் அது குறிவைத்த குழு தொடர்பான சூட்டு நிகழ்வாகக் காணப்படுவதாக தாக்குதல் நடைபெற்ற இடத்துக்கு செவ்வாய் அதிகாலை 2 மணிக்கு வந்து சேர்ந்த சார்ஜென்ற் ஜெனிபர் பவுண்ட் கூறினார். வழமையாக அமைதியாயுள்ள சறே பிறிட்ஜ்வியூ சுற்றுவட்டார பகுதியின் ஒரு சந்து வழியில் காவல்துறைக்குத் தெரிந்தவர் என விவரிக்கப்பட்ட பெயரறியப்படாத தாக்கப்பட்டவர் விழுந்து கிடந்தார். ஞாயிற்றுக் கிழமை தொடக்கம் சறேயில் இது நான்காவது இறப்பாகவிருப்பினும் 27 அகவையுள்ள மேன்ஜொற் டிலோனும் வேறு இரு ஆடவரும் இ…
-
- 0 replies
- 409 views
-
-
தலைமை சொல்வதை மற்றவர்கள் கேட்டு நடந்தால்தான் அந்த கட்சி சிறப்பாக செயல்பட முடியும் என்று துக்ளக் வார இதழின் ஆண்டு விழாவில் ஆசிரியர் சோ பேசினார். துக்ளக் வார இதழின் 43 வது ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சோ பேசியதாவது, அ.தி.மு.க.வை பொருத்தவரை தமிழகத்தில் உள்ள மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண சிறப்பான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, மின்சார பற்றாக்குறைக்கு தீர்வு காணும் வகையில் புதிய மின் உற்பத்தி திட்டங்களை விரைவுபடுத்துவது, மத்திய மின் பாதையில் கூடுதல் இடம் ஒதுக்குவதற்கு மத்திய அரசை வலியுறுத்துவது, கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை முழு அளவில் தமிழகத்துக்கு தர மத்திய அரசை வலியுறுத்துவது என பல்வேறு முயற்சிகளை அ.தி.மு.க. அரசு எடு…
-
- 1 reply
- 643 views
-
-
ஜப்பானிய All Nippon Airways விமானசேவை நிறுவனத்தின் சேவையில் உள்ள Boeing 787 Dreamliner விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த வகை விமானங்கள் அனைத்தையும் சேவையில் இருந்து இடைநிறுத்துவதாக ஜப்பானிய விமான சேவை நிறுவனங்கள் அறிவித்தன. All Nippon Airways விமானம் ஒன்று பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தபோது, பற்றரியில் ஏற்பட்ட பிரச்சினை ஒன்றை அடுத்து அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதனையடுத்து All Nippon Airways நிறுவனம் 17 டிறீம்லைனர்ஸ் விமானங்களையும், ஜப்பான் எயார்லைன்ஸ் 6 விமானங்களையும் சேவையில் இருந்து இடைநிறுத்தியுள்ளன. எண்ணைக் கசிவு, விமானம் செலுத்தும் பகுதியின் யன்னல் கண்ணாடியில் வெடிப்பு ஏற்பட்டமை போன்ற சிக்கல்கள் அண்மைக் காலத்தில…
-
- 1 reply
- 650 views
-
-
Hello -- Today President Obama announced a plan to help protect our kids and communities from gun violence. You're going to hear a lot about it, but I wanted to make sure you got a chance to get the facts, straight from me. After hearing from Americans from across the political spectrum, we decided to focus on some key priorities: closing background check loopholes, banning military-style assault weapons, making our schools safer, and increasing access to mental health services. The ideas we sent to President Obama are straightforward. Each of them honors the rights of law-abiding, responsible Americans to bear arms. Some of them will require action from Congress; t…
-
- 0 replies
- 521 views
-
-
கனடாவில் ஒரு கருத்தெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது. அதில் கடன் அட்டை பயன்படுத்துபவர்களில் இருபதில் ஒருவர் தன்னால் கடனை அடைக்க இயலாது என்று புலம்புகிறார் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கருத்துக் கணிப்பை ஹாரிஸ்ஃடெசிமா நிறுவனத்தினர் நடத்தியிருகிறார்கள். கடன் அட்டை பயன்படுத்துபவர்களில் பலர் தங்கள் முழு கடனை அடைப்பதில்லை. கடன் பாக்கி வைத்திருக்கிறார்கள். அதற்காக அவரகள் கட்டும் வட்டித் தொகையைப் பற்றி அவர்கள் அதிகம் கவலைப்படவில்லை. கடன் அட்டை கடன் பாக்கிக்கு வட்டி இருபது சதவீதம் போல் இருக்கிறது. ‘ஒருவன் கடணாளியாவதற்கும், பண-சொத்து முடக்கம் அடைவதற்கும் கடன் அட்டைதான் முக்கிய காரணமாக இருக்கிறது. அதனால்தான் அது குறித்து கருத்துக் கணீப்பு நடத்தினோம் ‘ என்கிறார் டாவ…
-
- 18 replies
- 767 views
-
-
அமெரிக்காவின் சிக்காக்கோ விமானநிலையமான ஓ'ஹாரே இல் ஒரு பொதியில் 18 மனித்தலைகள் சில நாட்களுக்கு முன் வந்திருந்தன என தெரிவிக்கப்படுகிறது இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்று இன்று புதன்கிழமை தெரிவிக்கப் பட்டுள்ளது.. ஆனால் பின்னர் இத்தலைகள் யாவும் சிக்காகோவின் புறநகர்ப் பகுதியில் உள்ள மருத்துவ ஆய்வு கூடத்தில் உடற்கூறியல் தொடர்பான ஆய்வை மேற்கொள்வதற்குக் கொண்டு வரப்பட்டவை என ஊடகங்களால் அறிவிக்கப் பட்டுள்ளது. கிறிஸ்மஸ்ற்கு முதல் நாளே ரோமில் இருந்து வந்து சேர்ந்த இத்தலைகள் முறையாகப் பதிவு செய்த ஆவணங்கள் காட்டப் படாமையால் இவ்வளவு நாளும் கேட்பாரற்றுக் கிடப்பில் போடப்பட்டு இருந்துள்ளதாக சிக்காக்கோ விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். எனினும் சிக்காக்கோ சன் டைம்ஸ் எனும் பத…
-
- 0 replies
- 427 views
-
-
டமாஸ்கஸ்: கடும் உள்நாட்டுப் போர் நடந்து வரும் சூழலில் சிரிய அதிபர் பஸார் அல் ஆசாத் தனது குடும்பத்தினருடன் போர்க் கப்பலில் தஞ்சம் புகுந்துள்ளார். அவருக்கு ரஷ்ய கடற்படையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். சிரிய அதிபர் ஆசாத் பதவி விலகக் கோரி பெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அமெரிக்கா மற்றும் செளதி அரேபியாவின் உதவியோடு ஆயுத, நிதி உதவி பெற்ற குழுக்கள் அரசுப் படைகளை எதிர்த்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்தப் போராட்டக்காரர்களுடன் ராணுவம் கடும் மோதலில் ஈடுபட்டுள்ளது. இந் நிலையில், ஆசாத் தலைநகர் டமாஸ்கஸில் இருந்து குடும்பத்தினருடன் வெளியேறிவிட்டார். அவர் தனது கடற்படையின் போர்க் கப்பலில் குடும்பத்தினருடன் தங்கியுள்ளார். அவருக்கு ரஷ்ய கடற்படையினர் பாதுகாப்பு அளித்து வருகி…
-
- 0 replies
- 472 views
-
-
நெல்லை: ஊட்டியை போல் நெல்லையில் கடுங் குளிர் வாட்டுவதால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். வரலாறு காணாத குளிரால் அதிகாலையில் வாக்கிங் செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மார்கழி மாத பனி மச்சை பிளக்கும். தை பனி தரையை துளைக்கும் என கிராமப்புறங்களில் கூறுவதுண்டு. பருவ நிலை மாற்றத்தால் கோடை காலங்களில் வெயில் மண்டையை பிளப்பது போல் குளிர் காலத்தில் பனி வாட்டி வதைக்கிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மார்கழி பனி முடிந்து தை பிறந்த பிறகும் ஊட்டியை போன்று கடுங் குளிர் நிலவுகிறது. மாலையில் துவங்கும் பனிப் பொழிவு மறுநாள் காலை சூரியன் உதித்த பிறகும் நீடிக்கிறது. பகல் நேரங்களில் வெயில் அடித்த போதிலும் குளிர்ந்த காற்று வீசுகிறது. பனியில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் போர்வை, ஸ்வ…
-
- 0 replies
- 328 views
-
-
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் ஊடுருவித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவம் இந்திய மண்ணில் நிலக் கண்ணிவெடிகளையும் புதைத்து வைத்திருக்கிறது. இதற்கான ஆதாரங்களை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. தொடரும் பதிலடியும் பலியும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஜனவரி 6-ந் தேதி முதல் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு இந்தியா தந்த பதிலடியில் ஒரு பாகிஸ்தான் ராணுவ வீரர் கொல்லப்பட்டார். பின்னர் ஜனவரி 8-ந் தேதியன்று பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை மீறி இந்திய பகுதிக்குள் ஊடுருவி இரு இந்திய ராணுவ வீரர்களை மிகக் கோரமான முறையில் படுகொலை செய்தனர். மேலும் ஹேம்ராஜ் என்ற ராணுவ வ…
-
- 0 replies
- 337 views
-
-
புற்றுநோயை குணப்படுத்தும் மூலக்கூறை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உயிர்கொல்லி நோயான புற்றுநோயால், இந்தியாவில் ஆண்டுதோறும் ஏராளமானோர் இறக்கின்றனர். இந்த நோய்க்கு தற்போது அளிக்கப்படும் சிகிச்சைகள் பக்க விளைவுகள் ஏற்படுத்துவதாக இருக்கின்றன. இந்நோயை குணப்படுத்துவதற்கான மாற்று மருந்தை கண்டுபிடிக்க பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் டாக்டர் சதீஷ் சி ராகவன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. அதில், புற்றுநோயை குணப்படுத்துவதற்கான புதிய மூலக்கூறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்நோயை குணப்படுத்துவற்கான புதிய மருந்துகளை தயாரிப்பதில் இந்த மூலக்கூறு புரட்சியை ஏற்படுத்தும் என்று இக்குழு தெரிவித்துள்ளது. இந்த ம…
-
- 0 replies
- 333 views
-
-
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அரசுக்கு எதிராக புரட்சி வெடிக்கும் நிலையில் அதிபர் ஆசிப் அலி சர்தாரி அந்நாட்டைவிட்டு தப்பியோடிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானில் மதகுரு காத்ரி தலைமையில் மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில் அரசுக்கு எதிராக அந்நாட்டு உச்சநீதிமன்றமும் இன்னொருமுனையில் களமிறங்கியிருக்கிறது. இந்த சூழலில் அதிபர் ஆசிப் அலி சர்தாரி எங்கே என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிபர் ஆசிப் அலி சர்தாரி, கராச்சி விமான நிலையம் வழியே துபாய்க்கு குடும்பத்துடன் தப்பி ஓடிவிட்டதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு மாறுபாடாக கராச்சி விமான நிலையம் வழியாக சர்தாரியின் குடும்பத்தினர் மட்டும் நாட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இருப்பினும் சர்தாரியின் குடு…
-
- 0 replies
- 331 views
-
-
[size=4]இந்தியா மற்றும் சீனாவில் தங்கத்தின் தேவை வலுவாக இருப்பதால் சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை 9ம் நாள் உயர் பதிவாகியுள்ளது. [/size] [size=4]நியூயார்க் வணிகச் சந்தையில் (NYSE) டிசம்பர் திங்களில் பட்டுவாடா செய்யப்படும் தங்கத்தின் விலை அன்று ஒரு அவுன்ஸுக்கு 1730.9 அமெரிக்க டாலராகியது. இது அக்டோபர் 18ஆம் நாளுக்குப் பிந்தைய மிக உயர் பதிவாகும். [/size] [size=4]நவம்பர் 11ஆம் நாள் தீபாவளி விழா துவங்கும் இந்தியாவில் தங்கத்துக்கான தேவை பெரிதும் அதிகரித்து வருகிறது. அதேவேளையில், சீனாவிலும் இவ்வாண்டு தங்க சந்தையின் தேவை கடந்த ஆண்டில் இருந்ததை விட ஒரு விழுக்காடு அதிகரித்து 860 டன்னாக இருக்கக் கூடும். [/size] [size=4]அதனுடன் சீனா இந்தியாவுக்குப் பதிலாக உலகில் மி…
-
- 12 replies
- 1.5k views
-
-
இந்தியா - பாகிஸ்தான் இடையே யுத்தம் தொடங்கியதா ? இந்திய எல்லைப் பகுதியில் 8 இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இரு நாட்டு எல்லைப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. எல்.ஓ.சி. என்றழைக்கப்படும் இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள கிருஷ்ணா காடி மற்றும் சோனகலி பகுதிகளில் நேற்று பாகிஸ்தான் ராணுவம் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எல்லைப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை குறைக்கும் நோக்கத்துடன், ஆலோசனை நடத்த பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. எனினும், அதுதொடர்பாக பாகிஸ்தான் தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில்,…
-
- 5 replies
- 810 views
-
-
மத்திய லண்டன் பகுதியில் கட்டட பணியில் இருந்த கிரேன் மீது ஹெலிகாப்டர் மோதி ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் பலியாகினர். சம்பவம் நடந்த இடத்தின் அருகே இங்கிலாந்தின் உளவு நிறுவனமான எம். 16 அலுவலகம் இருப்பதால் இது பயங்கரவாதிகளின் செயலாக இருக்குமோ என்ற ரீதியில் தற்போது விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின் மத்திய லண்டன் பகுதியில் தேம்ஸ் நதிக்கரையின் தெற்கு பகுதியில், கட்டடத்தின் மீது இருந்த கிரேன் மீது ஹெலிகாப்டர் ஒன்று மோதியது. இதில் தீப்பிடித்த அந்த ஹெலிகாப்டர் சாலையில் விழுந்து நொறுங்கியது. இந்த சம்பவத்தில் இரண்டு பேர் பலியானார்கள். மேலும் இருவர் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து லண்டனின் முக்கிய பகுதியான வாக்ஸ்ஹால் பகுதியில் …
-
- 1 reply
- 422 views
-
-
வாடகை தாய்மார்கள் குறித்த புதிய சட்ட திருத்தத்தை இந்தியா அமல்படுத்தி உள்ளதால் இனி ஆஸ்திரேலியர்களின் வரத்து மிக வெகுவாக குறையும் என தெரிய வந்துள்ளது.வெளிநாட்டில் வாழும் பலர் தங்களால் குழந்தை பெற்று கொள்ள இயலாத பட்சத்தில், விந்து அணுக்களை கொண்டு வந்து வாடகை தாய்மார்கள் உதவியுடன் இந்தியாவில் குழந்தை பெற்று எடுத்து செல்கின்றனர். ஆரம்பத்தில் மிக சிறிய அளவில்நடந்த இந்த தொழில் பின்பு மிக அதிக வருமானம் தரும் தொழிலாக மாறியது. வட இந்தியாவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுத்தர பல மருத்துவ மனைகள் முளைத்தன. கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ மனைகளுக்கு இது கல்லா கட்டும் தொழிலாக மாறியது. வெளி நாட்டில் வசிப்பவர்கள் இதுபோன்ற மருத்துவ மனைகளை தொடர்பு கொண்டு தங்கள் தேவைகளை கூறினால் போதும், அவர்க…
-
- 0 replies
- 409 views
-
-
பாகிஸ்தானில் வெடிக்கும் புரட்சி- அதிபர் சர்தாரி குடும்பத்துடன் வெளிநாடு தப்பியோட்டம்? இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அரசுக்கு எதிராக புரட்சி வெடிக்கும் நிலையில் அதிபர் ஆசிப் அலி சர்தாரி அந்நாட்டைவிட்டு தப்பியோடிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானில் மதகுரு காத்ரி தலைமையில் மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில் அரசுக்கு எதிராக அந்நாட்டு உச்சநீதிமன்றமும் இன்னொருமுனையில் களமிறங்கியிருக்கிறது. இந்த சூழலில் அதிபர் ஆசிப் அலி சர்தாரி எங்கே என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிபர் ஆசிப் அலி சர்தாரி, கராச்சி விமான நிலையம் வழியே துபாய்க்கு குடும்பத்துடன் தப்பி ஓடிவிட்டதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு மாறுபாடாக கராச்சி விமான நிலையம் வழியாக சர்தாரியின் குட…
-
- 5 replies
- 951 views
-
-
போராட்டத்தில் பெரும் வன்முறை!! பாகிஸ்தான் அரசாங்கம் பதவி விலகக் கோரி மதகுரு தாகீர் உல் காத்ரி ஆதரவாளர்கள் நடத்திய நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம் பெரும் வன்முறையாக உருவெடுத்தது. பாகிஸ்தானின் மதகுருவான தாகீர் உல் காத்ரி கனடாவில் வசித்து வந்தார். தற்போது பாகிஸ்தான் திரும்பியிருக்கும் அவர் புரட்சி எனும் ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறார். தாகீர் உல் காத்ரி தலைமையிலான தெக்ரீக் இ மின்ஹாஜுல் குரான் கட்சி, ஆளும் அரசு பதவி விலக வலியுறுத்தி லாகூரில் இருந்து தலைநகர் இஸ்லாமாபாத் வரை மிக பிரமாண்டமான 2 நாள் பேரணியை நடத்தியது. இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். பேரணியின் முடிவில் பேசிய காத்ரி, தற்போது பேரணி முடிந்து விட்டது. ஆனால் புரட்சி தொடங்கி விட்டது, பாகிஸ்தானில் நி…
-
- 1 reply
- 591 views
-
-
ஜெர்மனி நாட்டின் தலைநகர் பெர்லினில் உள்ள புகழ் பெற்ற வங்கி ஒன்றில், சுரங்கம் அமைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வங்கியின் பாதுகாப்பு பெட்டக அறையில் இருந்து நேற்றிரவு புகை வருவதை கவனித்த காவலாளி, உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.அதிகாரிகள் வந்து பார்த்தபோது, பாதுகாப்பு பெட்டகம் திறக்கப்பட்டு, உள்ளே இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. போலீசார் வந்து சம்பவ இடத்தை சோதனையிட்டதில், வங்கிக்கு அருகில் இருக்கும் கார் ஷெட்டில் இருந்து 100 அடி நீளத்திற்கு சுரங்கம் வெட்டி, வங்கியின் உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், தங்கள் கைவரிசையை காட்டி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து பெர்லின் நகர போலீஸ் செய்த…
-
- 0 replies
- 456 views
-
-
தேனி: சோதனைகளை சமாளிப்பதற்கு மன உறுதி அவசியம் அதைத்தான் முல்லைப் பெரியாறு அணை பறைசாற்றுகிறது என்று முதல்வர் ஜெயலலிதா குட்டிக்கதை ஒன்றின் மூலம் விளக்கியுள்ளார். கூடலூர் லோயர் கேம் பகுதியில் பென்னிகுவிக் மணிமண்டபத்தை திறந்து வைத்து அவர் குட்டிக்கதை ஒன்றை கூறினார். திருமணமான பெண் ஒருத்தி தன் தாயாரைத் தேடி வந்தாள். அவளுடைய முகம் வருத்தமுற்றிருந்தது. கண்கள் கலங்கியிருந்தன. தாயார் தன் மகளைப் பார்த்து, 'என்ன விஷயம்?' என்று விசாரித்தார். மகள் தன்னுடைய கஷ்டங்களை எல்லாம் ஒவ்வொன்றாக தயாரிடம் சொன்னாள். இவற்றிலிருந்து எப்படி விடுபடப் போகிறேன் என்று தெரியவில்லை என்று கூறி தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள் மகள். இவற்றை எல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட தாயார், தன் மகளை சமையலறைக்கு அ…
-
- 1 reply
- 772 views
-
-
டெல்லி: எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பதற்றமான நிலைமை நீடித்து வரும் நிலையில் பாகிஸ்தானுடன் வழக்கமான சுமூக உறவுக்கு இடமில்லை என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்தமன்மோகன்சிங், இந்திய ராணுவ வீரர்களின் தலையைத் துண்டித்தது கொடூரமான குற்றம். இந்தக் குற்றத்தைப் புரிந்தவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும். இதற்கான எதிர்வினையை பாகிஸ்தான் புரிந்து கொள்ளும். எல்லையில் பாகிஸ்தான் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக அரசு மேற்கொண்டு வரும் செயல்பாடுகள் குறித்து அறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்றார் அவர் http://tamil.oneindia.in/news/2013/01/15/india-cannot-be-business-as-usual-with-pakistan-manmohan-sing-1679…
-
- 2 replies
- 306 views
-
-
தேனி: கல்லணை கட்டிய கரிகாலனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் கர்னல் ஜான் பென்னி குயிக் நினைவு மணிமண்டபம் திறப்பு விழா, திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா,"முல்லைப் பெரியாறு அணையைவிட மிகவும் பழமை வாய்ந்த அணை கொள்ளிடம் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள கல்லணை. 2000 ஆண்டுகளுக்கு முன்பு கரிகால் சோழனால் கட்டப்பட்டு இன்றளவும் கோடானு கோடி மக்களுக்கு பயனளித்துக் கொண்டிருக்கும் இந்த அணை ஒரு பொறியியல் அற்புதம் ஆகும். இந்தியாவில் தற்போது புழக்கத்தில் இருக்கும் அணைகளில் கல்லணையே மிகவும் பழமை வா…
-
- 0 replies
- 370 views
-
-
பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப்பை கைது செய்ய அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் உருவாக்கப்பட்ட மின் உற்பத்தி திட்டத்தில் நடந்துள்ள ஊழலில் ராஜா பர்வேஸ் அஷ்ரப்புக்கு தொடர்பு இருப்பதாக வந்த புகாரினை அடுத்து, உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதையடுத்து, பாகிஸ்தான் பிரதமர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. http://dinamani.com/latest_news/article1421689.ece
-
- 1 reply
- 325 views
-
-
இது வரை தமிழகத்தில் இல்லாத ஒரு புதிய திட்டமாக சிற்றுண்டி அமைக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியிருக்கிறது, சுகாதாரமான குறைந்த விலையில் உணவு கிடைக்க வழி செய்யும் நோக்கில் சென்னையில் மலிவு விலை சிற்றுண்டி துவங்கப்படுகிறது. இந்த உணவகத்தில் இட்லி ஒன்று ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும் விற்கப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான முதல்வர் அலுவலக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வயிற்றுக்கு சோறிட வேண்டும்: நோயற்ற சமுதாயம் அமைத்திட வேண்டும் என்ற நோக்கில் சத்தான உணவு வழங்கும் பல்வேறு திட்டங்களை அரசு செய்து வருகிறது. வயிற்றுக்கு சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்ற பாரதியாரின் நோக்கத்தின் அடிப்பட…
-
- 18 replies
- 1.5k views
-
-
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில் பாலத்தில் மோதிய கடற்படைக் கப்பல் விசைப்படகுகள் உதவியுடன் மீட்கப்பட்டது. இருப்பினும் ரயில் பாலம் சேதமடைந்திருப்பதால் ஒரு வார காலத்துக்கு ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கப்பல் படைக்குச் சொந்தமான கப்பல் பாம்பன் அருகே தரை தட்டியது. கடந்த சில நாட்களாக கடற்பரப்பில் தத்தளித்த இந்த கப்பலை இழுக்கும் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் அலைகளில் கப்பல் இழுக்கப்பட்டு நேற்று பாம்பன் ரயில் பாலம் அருகே நின்றது. பாம்பன் ரயில் பாலம் அருகே தத்தளித்துக் கொண்டிருந்த இந்த கப்பல் இன்று நூற்றாண்டு பழமை வாய்ந்த பாலத்தின் 24-வது தூணின் மீது மோதியது. இதில் தூண் சற்று திரும்பியுள்ளது. இதனால் அந்த பாலம் வழியேயான ரயில்…
-
- 0 replies
- 420 views
-