உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26926 topics in this forum
-
‘பெண்கள் விருப்பத்தின் பேரில்தான் ரேப் நடக்கிறது’: சொல்கிறார் காங்கிரஸ் பிரதிநிதி! ”ஆண்களுடன் செக்சில் ஈடுபட பெண்கள் விரும்புகின்றனர். 90 சதவீத பாலியல் வல்லுறவு குற்றங்கள் பெண்ணின் விருப்பத்தின் பேரில்தான் நடக்கிறது,” என அரியானா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் தரம்வீர் கோயட் கூறி பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளார். அரியானாவில் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு, கடந்த ஒரு மாதமாக, மாநிலத்தில் நடைபெறும் பாலியல் வல்லுறவு குற்றங்கள் தான் பெரும் பிரச்னையாக உள்ளது. தலித் பெண்கள் பள்ளி மாணவி மற்றும் சிறுமிகள் என கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து, இப்போது வரை 12 பாலியல் வல்லுறவு குற்றங்கள் பதிவுச் செய்யப் பட்டுள்ளன் மேலும் போலீஸ் மறைத்த இத…
-
- 2 replies
- 893 views
-
-
[size=5]தமிழக அரசியல்வாதிகள் முடிந்தால் தடுக்கட்டும்: இலங்கை சவால்[/size] "வரும் டிசம்பர் மாதத்தில் இலங்கை ராணுவ உயரதிகாரிகள் 45 பேர் பயிற்சிக்காக இந்தியா செல்லவுள்ளனர்.தமிழக அரசியல்வாதிகள் முடிந்தால் தடுத்துக் கொள்ளட்டும்” ௭ன்று இலங்கை ராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய சவால் விடுத்துள்ளார். இலங்கை ராணுவத்தின் 63-வது ஆண்டு நிறைவையொட்டி அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஜகத் ஜயசூரிய,"யுத்தத்தின் பின் தீவிரவாதத்தை எமது நாட்டில் இருந்து முழுமையாக அகற்றியுள்ளோம்.இந்த யுத்தத்தில் நாம் பெற்றுக் கொண்ட அனுபவங்களை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதிலும் ஆர்வமாகவே உள்ளோம். இதன் அடிப்படையிலேயே இந்திய ராணுவத்தினருடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகள…
-
- 3 replies
- 985 views
-
-
இந்தியாவை இழிவாக விமர்சித்த ராபர்ட் வதேராவுக்கு கடும் எதிர்ப்பு! இந்தியாவைவாழைப்பழ நாடு’ என கேவலப்படுத்திய சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு கெஜ்ரிவால் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால்,வதேரா தனது இணைய தள தொடர்பை துண்டித்துக்கொண்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதோராவுக்கு,டி.எல்.எப். என்ற பிரபலமான ரியல் எஸ்டேட் தொழில் நிறுவனம் வழங்கிய வட்டியில்லா கடன் மூலம்,அவர் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்து இருப்பதாகவும், ரூ.500 கோடி மதிப்புள்ள நிலம் மற்றும் வீட்டுமனைகளை அடிமாட்டு விலைக்கு அந்த நிறுவனம் வதேராவுக்கு ஒதுக்கி இருப்பதாகவும்,'ஊழலுக்கு எதிரான இந்தியா' இயக்கத்தை சேர்ந்த அரவ…
-
- 4 replies
- 1.1k views
-
-
நெய்வேலி: .கர்நாடகாவுக்கு மின் விநியோகத்தை நிறுததக்கோரி நெய்வேலி அனல் மின்நிலையத்தை முற்றுகையிட முயன்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட அக்கட்சியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நெய்வேலி என்.எல்.சி. அனல்மின் நிலையங்களில் உற்பத்தியாகும் ஒரு பகுதி மின்சாரம் கர்நாடக மாநிலத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காவிரி ஆணையமும்,உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்ட பின்னரும் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் விட கர்நாடகா மறுத்து வருகிறது. இதற்கு பதிலடியாக நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தை கர்நாடகாவுக்கு அனுப்ப கூடாது என்று தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் வற்புறுத்தி வருகின்றன. அதன் ஒருபகுதியாக நெய்வேலியில் இருந…
-
- 1 reply
- 534 views
-
-
2012 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் ஐரோப்பிய கண்டத்தை ஒருங்கிணைத்தமைக்காக இப் பரிசு வழங்கப்படுவதாக நோர்வேத் தலைநகர் ஒஸ்லோ நகரில் வைத்து அமைதிக்கான நோபல் பரிசுக் குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகளை இணைக்க 1957ம் ஆண்டு ஐரோப்பிய யூனியன் உருவாக்கப்பட்டது. எதிரிகளாக இருந்த ஜெர்மனியும், பிரான்ஸும் ஐரோப்பிய யூனியனால் இணைந்தன. http://onlineuthayan...081509212812280
-
- 11 replies
- 802 views
-
-
பிபிசியின் செய்திப்படி பிரான்ஸ் கடல் எல்லையை ஒட்டி சர்வதேசக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பிரிட்டன் மீன்பிடிப் படகு ஒன்றை பிரான்ஸ் மீனவர்கள் கற்கள் பொல்லுங்கள் கொண்டு தாக்கி உள்ளனர். பிரான்ஸ் மீனவர்கள் திட்டமிட்டு மீன் வளத்தைப் பெருக்க அதைப் பிடித்து பிரிட்டன் மீனவர்கள் ஆதாயம் தேட விளைவதால் ஏற்பட்டுள்ளது இந்தப் பிரச்சனை..! இந்தச் சம்பவத்தை அடுத்து பிரிட்டன் மீனவர்களால் உதவிக்கு அழைக்கப்பட்ட பிரிட்டன் நேவி அவர்களை பாதுகாப்பாக மீட்டு வந்துள்ளதாம்..! இப்படி ஒரு சம்பவம் இந்திய - இலங்கை கடற்பரப்பில் நடந்தால் தமிழக மீனவர்களையோ.. தாயக மீனவர்களை காக்க ஒருவரும் வரமாட்டார்கள். தாக்குதல் நடத்திக் கொல்லவோ.. விரட்டவோ தான் சிறீலங்கா கடற்படை வரும்..! இடையில் அரசியல…
-
- 4 replies
- 739 views
-
-
இன்று கிழக்கு வலயம் நியூயோர்க் நேரம் 9:00 மணி இரவு நடை பெற்ற உப அதிபர் விவாததித்தின் வெற்றி தோல்வி பற்றிய கருத்து கணிப்புகள் நாளை வெளிவரும். செய்திகள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. ஆனால் இன்றைய பார்வையில் பைடன் இரும்பாக கதிரையில் இருந்துகொண்டு நமட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டு அம்பை அம்பால் அடித்துக்கொண்டிருந்தார். றையனை இலகுவில் இதுவரையில் செய்த்துவந்த பிரசாரங்களில் இருந்து விலக எளிதில் விட்டுக்கொடுக்கவில்லை. எதையும் "பூச்சூட்டி, போட்டு வைத்த அலங்கார பிரச்சார வார்த்தைகள்" என்று தட்டிக்கழித்தார். றையன் அடிக்கடி தண்ணீர் கப்பை எடுத்து உறிஞ்சுவது இருக்கையில் இருந்த கடுப்பை காட்டுவது போலிருந்தது. பைடனின் கடுபேத்தும் பதில்களால் மட்டிறுத்தினர் மார்த்தாவின் குரல் …
-
- 1 reply
- 584 views
-
-
[size=4]நியூயார்க்: நியூயார்க்கில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் கன்னியாஸ்திரி ஒருவர் பீர் டின் ஒன்றை திருடியது அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. கடந்த ஒருவார காலமாக இந்த வீடியோ பதிவு யுடியூப்வில் உலாவருவதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க்கில் உள்ள ஒரு கடைக்கு பொருட்களை வாங்க வந்த கன்னியாஸ்திரி ஒருவர் குளிர்பானங்கள் இருக்கும் பிரிவுக்கு சென்று ரெப்ரிஜிரேட்டரை திறந்து ஒரு பீர் டின்னை திருடி தனது பையில் மறைத்து வைத்து கொண்டார். பின்னர் அங்கிருந்து நகர்ந்து சென்று மற்றொரு ரெப்ரிஜிரேட்டரை திறந்து தண்ணீர் பாட்டில் ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு அதற்கு மட்டும் அவர் பணம் கொடுத்து விட்டு ஒன்றுமே நடக்காதது போல வெளியே சென்று விட்டார் ஆனால் அவர் பீர் பாட்டில் எடுத்து ஒளி…
-
- 0 replies
- 562 views
-
-
[size=4]அமெரிக்காவின் நாடாளுமன்றத்தை தாக்கும் ஏவுகணைகள் தங்கள்வசம் உள்ளதாக வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக வடகொரியா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:[/size] [size=4]கொரியாவும் அமெரிக்காவும் சமீபத்தில் ஓர் ஒப்பந்தம் மேற்கொண்டன. இதன்மூலம் தென்கொரியாவின் ஏவுகணை பலம் அதிகரித்துள்ளது. இது கொரியா தீபகற்பத்தில் போர் ஏற்படும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. மற்ற நாடுகள் குற்றம்சாட்டுவதுபோல், ராணுவ ஆயுதங்களை வடகொரியா மறைத்து வைக்கவில்லை. தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் முக்கிய இடங்களைத் தாக்கும் அபாயகரமான ஏவுகணைகள் எங்களிடத்தில் உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]வடகொரியா, அவ்வப்போது நடத்தும் ராக்கெட் சோதனைகளுக்கு தென்…
-
- 2 replies
- 655 views
-
-
[size=4]வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடியிருந்த சுமார் 20,000 வாராந்திர பார்வையாளர்களை, பொப் 16ஆம் பெனடிக்ட் இன்று முதன்முறையாக அரபு மொழியில் ஆசீர்வாதம் செய்தார்.[/size] [size=4]இதுபோன்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் அரபு மொழி உச்சரிக்கப்பட்டது இதுவே முதல்முறை. பொப்பின் ஆசீர்வாதத்தை ஆயர் ஒருவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 'அரேபிய பார்வையாளர்களுக்காக பொப் இப்போது பிரார்த்திக்கிறார். உங்கள் அனைவரையும் ஆண்டவர் ஆசீர்வதிக்கட்டும்' என மொழிபெயர்ப்பாளர் கூறினார். அதன் பின்னர் பேசிய பொப், இரண்டாவது வத்திக்கான் குழுவை பாராட்டினார். 50 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட வழிகாட்டு குழு இப்போதும், அனைத்து பிரச்சினைகளின் மத்தியிலும் கத்தோலிக்க சபை…
-
- 1 reply
- 669 views
-
-
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ்நாடு ஆதிபத்ய உரிமையாகவும் சட்டபூர்வமாகவும் அனுபவித்து வரும் காவிரித் தண்ணீரைத் தமிழகத்திற்கு வரவிடாமல் கர்நாடக அரசு அக்கிரமமாகத் தடுக்கிறது. காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பையும் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டது. தமிழகத்திற்கு உரிமையான காவிரித் தண்ணீரை, கர்நாடகம் வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. தமிழக அரசு கோரிக்கை விடுத்த அளவுக்குத் தண்ணீரை வழங்கிட காவிரி நதிநீர் ஆணையம் உத்தரவு பிறப்பிக்காமல், ஆணையத்தின் தலைவரான இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங், ஒப்புக்காக, விநாடிக்கு 9,000 கன அடி தண்ணீர் கர்நாடகம், தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டும் என்று அறிவித்தார். அதனை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் வ…
-
- 1 reply
- 451 views
-
-
[size=4] [size=5]இந்தோனேசியாவில் நேற்று பூகம்பம் ஏற்பட்டது. எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்தோனேசியாவின் பாண்டா கடல் பகுதியில் நேற்று மாலை 6.43 மணிக்கு திடீரென பூகம்பம் ஏற்பட்டது. 6.3 புள்ளிகள் அளவுக்கு ரிக்டர் அளவில் பூகம்பம் பதிவானது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. பாண்டா கடல் பகுதியில் 34 கி.மீ. ஆழத்தில் பூகம்பம் மையம் கொண்டிருந்தது. பூகம்பத்தின் தாக்கம் அம்பான் நகரிலும் உணரப்பட்டது.[/size][/size][size=4] [size=5]பூகம்பத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. அடிக்கடி பூகம்பம் ஏற்படும் நிலப்பகுதியில் இந்தோனேசியாவும் ஒன்று. கடந்த ஏப்ரல் மாதம் மேற்கு பகுதியில் 8.7…
-
- 0 replies
- 592 views
-
-
பஞ்சாப் மாநிலத்தில் ராகுல் வருகையொட்டி வைக்கப்பட்ட பேனர்கள், போஸ்டர்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல், இரண்டு நாள் பயணமாக பஞ்சாப் மாநிலத்தில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது வருகையொட்டிபஞ்சாப் மாநிலம் அமிர்தரஸில் ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் அதனை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக அகற்றினர். பொதுசொத்துக்களை பாழ்ப்படுத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் அகற்றபட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். பஞ்சாப் மாநிலத்தில் பா.ஜ. ஆளும் மாநிலமாகும் ,பெரும்பாலான மாநகராட்சிகள் பா.ஜ. ஆளும் மாநகராட்சிகளே. பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கு பின்னர் ராகுல் இம்மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது இ…
-
- 0 replies
- 558 views
-
-
இந்த ஆண்டின் பௌதிகத்திற்கான நோபல் பரிசை பிரான்ஸைச் சேர்ந்த சேர்ஜ் ஹரோசியும் அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் வினிலான்ட்டும் கூட்டாக செவ்வாய்க்கிழமை வென்றெடுத்துள்ளனர். தனியான துணிக்கைகள், அவற்றின் இயற்கையான கதிரியக்க பொறிமுறை நிலையில் பேணப்பட்டிருக்கையில் அவற்றை அளவிடுதல் மற்றும் செயற்படுத்தல் தொடர்பான அவர்களின் பணிக்காகவே இந்த நோபல் பரிசு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்த ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு பிரித்தானியாவைச் சேர்ந்த ஜோன் குர்டொன் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஷின்யா யமனகா ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்படவுள்ளது. வயது வந்தவர்களின் கலங்களை உடலின் ௭ந்தவொரு வகைக் கலமாகவும் மாற்றக்கூடிய மூலவுயிர் கலங்களாக மாற்றுவது தொடர்பில் அவர்கள் மேற்கொண்ட…
-
- 0 replies
- 1k views
-
-
பாகிஸ்தானில் தலிபான்களின் கடும்போக்குக்கு எதிராகக் குரல்கொடுத்ததன் விளைவாக அண்மையில் சுடப்பட்ட 14 வயதான மலாலா யூசுப்சாய் என்ற சிறுமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மலாலா யூசுப்சாய் சுவட் பள்ளத்தாக்கில் தலிபான்களின் கடும்போக்கு மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பில் பி.பி.சி ஊடாக வெளியுலகுக்கு தெரியப்படுத்தி வந்தார். அவர் வசித்து வந்த பகுதியில் பெண்களுக்கான கல்வியுரிமை தலிபான்களால் மறுக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து லாலா குரல்கொடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று மலாலா யூசுப்சாய் பாடசாலையிலிருந்து வீடு திரும்பும் போது தலிபான்களால் சுடப்பட்டார். அவரது தலை மற்றும் கழுத்துப் பகுதியில் குண்டுகள் பாய்ந்ததுடன் அவர் உடனடி…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிதம்பரம் மாணவன் முகமது பைசலை கடத்தி சென்ற கடத்தல் காரர்கள் இலங்கை தமிழில் பேசி இருக்கிறார்கள். எனவே அவர்கள் இலங்கை தமிழர்களாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. சிதம்பரம் மாணவன் முகமது பைசலை கடத்தி சென்ற கடத்தல் காரர்கள் நேற்று 5 தடவை முகமது பைசலின் தந்தைக்கு போன் செய்து பேசியுள்ளனர். ஒவ்வொரு தடவை பேசி முடித்ததும் போனை ஆப் செய்து விடுகிறார்கள். எனவே இங்கிருந்து அந்த போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. முதலில் வந்த போன் வேலூர் அருகே உள்ள டவரில் பதிவாகி இருந்தது. அதன்பிறகு ஆந்திரபகுதியில் இருந்து போன் வந்தது. எனவே தமிழக ஆந்திர எல்லையில் எங்கோ பதுங்கி இருக்கலாம் என கருதப்படுகிறது. போனில் பேசிய கடத்தல் காரர்கள் இலங்கை தமிழில் பேசி இருக்கிறார்கள். எனவ…
-
- 1 reply
- 711 views
-
-
இனிமேல் ''மேதகு" என்ற வார்த்தையே கூடாது.. மாண்புமிகு, ஸ்ரீ, ஸ்ரீமதிக்கு ஓகே: பிரணாப் முகர்ஜி. டெல்லி: ஆங்கிலேயர் காலத்திலிருந்து பின்பற்றப்பட்டு வரும் மரபுகளை ஆய்வு செய்து அவற்றைக் கைவிட குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டிருக்கிறார். குடியரசுத் தலைவர், ஆளுநர் உள்ளிட்ட உயர் பதவி வகிப்போரை `மேதகு' என்ற வார்த்தையால் அழைப்பது வழக்கம். இனி இந்த வார்த்தையை உள்நாட்டு நிகழ்ச்சிகளிலோ, உள்நாட்டு தலைவர்களுடனான சந்திப்புகளின்போதோ பயன்படுத்தக்கூடாது. இத்தகைய நிகழ்ச்சிகளில், இந்தியில், `மகாமகின்' என்ற வார்த்தைக்கு பதிலாக `ராஷ்டிரபதி மகோதாய்' என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும். இருப்பினும், `மேதகு' என்பதை வெளிநாட்டு தலைவர்களுடனான சந்திப்பின்போது மட்டும் பயன்படுத்தலாம…
-
- 3 replies
- 866 views
-
-
கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் கடல் வழி முற்றுகைப் போராட்டத்தில் ஆயிரம் ஆயிரமாய் படகுளில் மீனவர்கள் கலந்து கொண்டனர். இதில் ஒரு படகில் அணு உலைக்கு எதிரான கலை நிகழ்ச்சியும் நடந்த வண்ணம் உள்ளது. பறை இசை ஒரு பக்கம் முழங்க , மறுபக்கம் அணு உலைகளை இழுத்து மூடு என்கிற முழக்கங்களும் எழுப்பட்டு வருகிறது . சுற்றியுள்ள படகுகளில் வழக்குரைஞர் குழுவும் பங்கு கொண்டுள்ளது. கரையில் இருந்து இந்நிகழ்வை கூர்ந்து கவனித்து கொண்டிருகின்றனர் காவல் துறையினர். http://thaaitamil.com/?p=34684
-
- 1 reply
- 672 views
-
-
[size=2][size=4]யூடியுப் உள்ளடங்களாக 20,000 இணையத்தளங்களை பாக்கிஸ்தான் அதிகாரிகள் முடிக்கியுள்ளதாக உத்தியோகப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 'இன்னஸன்ஸ் ஒப் முஸ்லிம்' திரைப்படம் போன்ற ஆட்சேபனைக்குரிய விடங்களை இணையத் தளங்களில் வெளியிடுவதால் இவ்வாறான இணையத்தளங்களை முடக்கியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 'முஹம்மது நபி (ஸல்) அலைஹிவஸ்ஸலம் அவர்களை களங்கப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் போன்ற ஆட்சேபனைக்குரிய விடயங்களை வெளியிடும் 20,000 இணையத்தளங்கள் மற்றும் வலைத்தளங்களை நாங்கள் சட்டபூர்வமாக முடக்கியுள்ளோம்' என பாகிஸ்தான் தொலைத் தொடர்புகள் அமைப்பு அறிவித்துள்ளது. 'இவ்விடயம் தொடர்பாக நாங்கள் நீதிமன்றத்தின் கட்டளைகளை கடுமையாக பின்பற்றுகின்றோம்' …
-
- 0 replies
- 373 views
-
-
[size=3][size=4]ஸ்டாக்ஹோம்: 2012-ம் ஆண்டிற்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசை பிரிட்டிஷ் மற்றும் ஜப்பான் விஞ்ஞானிகள் இருவர் பெறுகின்றனர்.[/size][/size] [size=3][size=4]இதுகுறித்த முறையான அறிவிப்பு இன்று அறிவிக்கப்பட்டது. ஸ்டெம்செல் உருவாக்கம் குறித்த மருத்துவ ஆராய்ச்சிக்காக பிரிட்டனின் ஜான் கர்டன், ஜப்பானின் ஷின்யா யமனகா ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. கர்டன், யமனகா ஆகியோரின் கண்டுபிடிப்புகள், உலகம் முழுவதிலும் உள்ள மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று ஸ்டாக்ஹோம் கரோன்லின்ஸ்கா மருத்துவ பல்கலைக்கழக தேர்வுக்குழு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் அறிவிக்கப்பட்ட முதல் நோபல் பரிசு இதுதான். இயற்பியலுக்கான நோபல் பரிசு நா…
-
- 4 replies
- 543 views
-
-
அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஒபாமா, தனது தேர்தல் நிதியாக ரூ. பல நூறு கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 6-ம் தேதி நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் அதிபராக ஒபாமா போட்டியிடுகிறார். இத்தேர்தலில் பிரசாரத்திற்காக தனது ஆதரவாளர்கள் வாயிலாக நிதி வசூல் செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஒபாமா பிரசார கமிட்டியின் மேலாளர் ஜிம் மெஸ்சினா, சமூக வலைதளம் வாயிலாக கூறுகையில், கடந்த செப்டம்பர் வரை 1 கோடியே 82 லட்சத்து 5 ஆயிரத்து 813 பேர், 181 பில்லியன் டாலர் நிதி அளித்தனர். அது, 947 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.தற்போது வரலாறு காணாத வகையில் கூடுதலாக 5 லட்சத்து 67 ஆயிரம் பேர் என 1 பில்லியன் டாலர் அளவுக்கு தேர்…
-
- 0 replies
- 465 views
-
-
[size=4]இளைய தலைமுறைக்கு தனி மனித ஒழுக்கத்தை கற்றுத் தர வேண்டும் - நல்லக்கண்ணு..! பிறகு ஏன் இலங்கையில் குண்டு போட்டு கொன்றீர்கள் இளைஞர்களை..?![/size] [size=4] நாட்டில் லஞ்சமும், ஊழலும் வாழ்க்கை முறையாக மாறிவிட்டது. இன்றைய இளைய தலைமுறையினருக்கு தனி மனித ஒழுக்கத்தை கற்றுத் தறுவதன் மூலமே இந்த அவல நிலையை மாற்ற முடியும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சென்ட்ரல் கமிட்டி உறுப்பினர் ஆர்.நல்லக்கண்ணு கூறினார். [/size] [size=4] எல்லாவற்றையும் துறந்து சிறைகளில் பல ஆண்டுகள் இருந்தவர்கள் கூட பதவி என்ற ஆசைக்கு அடிமையாகி விடுகிறார்கள். மண், பொன்,பெண் ஆகியவற்றை துறந்தவர்களை முற்றும் துறந்த முனிவர் என்கிறோம். இனி இந்த வரிசையில் பதவி ஆசையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றார் ந…
-
- 0 replies
- 2.7k views
-
-
'கலைஞரும், புரட்சிக் கலைஞரும்' இணைவார்களா.. 'கை'யை உதறுமா திமுக? Published: திங்கள்கிழமை, அக்டோபர் 8, 2012, 11:27 [iST] Posted by: Mathi சென்னை: மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் அதிரடியான நடவடிக்கைகளால் அனைத்துத் தரப்பு மக்களும் கொந்தளிப்பில் இருக்கும் சூழலில் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறும் முடிவில் திமுக உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸை வெளியேற்றும் திமுக அந்த இடத்தில் தேமுதிகவை கொண்டுவருவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தலுக்கான வியூகங்களை கட்சிகள் முனைப்புடன் தொடங்கி வருகின்றன. தமிழகத்தில் அதிமுக தொகுதிகள் தோறும் ஆலோசனைக் கூட்டங்களை தீவிரப்படுத்தி வருகிறது. திமுகவும் தமது தேர்தல் வியூகத்தை விரிவா…
-
- 3 replies
- 639 views
-
-
http://elections.huf...a-electoral-map கொலராடோ, வேர்ஜினியா, புளோரிடா ஒகாயோ மதில் மேல் பூனைகளாகிவிட்டன. இதில் ஒகாயொ முழுவதாக ஒபமாவின் கையில் இருந்தது. நோத்கரோலைனா கையைவிட்டு போய்விட்டது. அதை இனி இவரால் தேர்தல் முடியும் வரை பெற்றுக்கொள்ள முடியாது. இருந்தாலும் பொதுவில் 2% பொதுசன வாக்குகள் கூட வைத்திருக்கிறார் என சில கருத்துக்கள் கூறுகின்றன.
-
- 0 replies
- 593 views
-
-
காவிரி தமிழகத்தின் உயிர் பிரச்சனை..? செப்புகிறார் திருமா..! காவிரி நீரில் தமிழகத்துக்கான உரிமையை நிலை நாட்டினால் மட்டுமே தமிழகத்தின் உணவு உற்பத்தியை பாதுகாக்க முடியும். காவிரி தமிழகத்தின் உயிர் பிரச்சனை என்று உரத்து செப்பினார் திருமா அவர்கள். மேலும் கூறுகையில், கர்நாடகத்தில் ஒரு பிரச்சனை என்றால் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து விடுகிறது. ஆனால் தமிழகத்தில் தான் இது போன்ற ஒற்றுமை இல்லை. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் பிற அமைப்புகளும் இன்னும் இந்த பிரச்சனையில் கவனம் செலுத்தவில்லை என்று கஷ்டப்பட்டு பாரம் சுமந்தார் திருமா அவர்கள். காவிரி நீரில் தமிழகத்துக்கான உரிமையை நிலைநாட்டினால் மட்டுமே, தமிழகத்தின் உணவு உற்பத்தியை பாதுகாக்க முடியும் என்றார். இதில் ஏ…
-
- 0 replies
- 738 views
-