Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. 1984 ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக ந்டைபெற்ற கலவரம் அப்போதைய காங்கிரஸ் அரசு ஆதரவுடன் நடந்தேறியதாக மத்திய புலனாய்வுக் கழகமான சி.பி.ஐ. நீதிமன்றத்தில் இன்று அதிரடியான வாதத்தை முன்வைத்தது. 1984 ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் சீக்கியர்களுக்கு எதிராக டெல்லியில் பெரும் கலவரம் நடைபெற்றது. இந்த கலவரம் தொடர்பான வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று இவ்வழக்கு விசாரணையின்போது சிபிஐ தரப்பில் ஆஜராகி வாதிட்ட வழக்கறிஞர் சீமா,1984 கலவரம் நன்கு திட்டமிடப்பட்டு அரங்கேறியதாகவும், குறிப்பிட்ட சமூகத்தினரை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த கலவரம்,போலீஸ் மற்றும் அப்போதைய (காங்கிரஸ்) அரசின் ஆதரவுடன் நடந்ததாகவும் கூறி…

    • 1 reply
    • 613 views
  2. முதற்கட்ட பிரான்ஸ் அதிபர் தேர்தலில் சார்கோசி பின்னடைவை சந்தித்துள்ளார்! Published on April 23, 2012-6:08 am · பிரான்ஸில் நேற்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதையை அதிபர் நிக்கொலா சார்கோசி பின்னடைவை சந்தித்துள்ளார். சோசலிச கட்சியை சேர்ந்த பிரான்கோஸ் ஹொலண்ட் 28.6 வீத வாக்குகளையும், நிக்கொலா சார்கோசி 27.1வீத வாக்குகளையும் பெற்றுள்ளனர். தேசிய வலதுசாரி முன்னணியின் வேட்பாளர் மரையன் லு பென் 18.1வீத வாக்குகளையும் பெற்றுள்ளார். முதல் சுற்றில் 50வீதத்திற்கு மேற்பட்ட வாக்குகள் எவருக்கும் கிடைக்காததால் எதிர்வரும் மே 6ஆம் திகதி நடைபெற உள்ளது. இரண்டாம் கட்ட தேர்தலில் பிரான்கோஸ் ஹொலண்ட், நிக்கொலா சார்கோசி ஆகியோருக்கிடையில் போட்டி இடம்பெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிட்ட ஏனை…

    • 2 replies
    • 437 views
  3. போராளிகளின் உடல்களை அவமதிக்கும் அமெரிக்க ராணுவத்தினரின் புகைப்படங்கள் வெளியாகின வாஷிங்டன்:ஆப்கான் போராளிகளின் இறந்த உடல்களை அவமதிக்கும் விதமாக உடல் பாகங்களுடன் ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்த அமெரிக்க ராணுவ வீரர்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிகை இப்புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.ஆப்கானிஸ்தானில் ஸபூல் மாகாணத்தில் 2010-ஆம் ஆண்டு இச்சம்பவம் நடந்தது. ராணுவத்தினரின் நடவடிக்கைக்கு அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லியோன் பனேட்டா கண்டனம் தெரிவித்தார். கடுமையான ஒழுங்கீனங்களை ராணுவத்தினர் செய்துள்ளதாகவும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஆப்கானில் இறந்த உடல்களை அவமதிக்கும் சம்பவங்…

  4. 22 april 2012 இன்று காலை இந்தோனேசியாவில் 6.6 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக அறியவருகிறது. இந்தோனேசியா பப்புவா எனும் மாகாணத்தில் 83 கீலோமிற்றர் தொலைவில் கடற்பரப்பில் இவ் நில அதிர்வு பதியப்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடி சேத விவரங்கள் குறித்து எதுவும் தெரியப்படவில்லை எனவும் நகரத்தில் நில அதிர்வை உணர்ந்த மக்கள், வீடுகளிலிருந்தும் கட்டிடங்களிலிருந்தும் பதற்றத்துடன் வீதியோரங்களில் கூடியுள்ளதாகவும் தகவல்கள் தருகின்றன. இதன் தொடர்பாக சுனாமி அச்சுறுத்தல்கள் எதுவும் அறியப்படவில்லை. http://www.paristamil.com/tamilnews/view-news-MTg1MDk1OTky.htm

  5. அழகிரி - ஸ்டாலின் மோதல் விவகாரத்தில் பிரச்னை வெடித்தது: கருணாநிதி விரக்தி அழகிரி ஆதரவாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம், கட்சியில் புயலைக் கிளப்புவதற்கு முன், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் வீட்டுக்குள் புயல் வீசி வருகிறது. ஸ்டாலின் மதுரைக்கு வந்த பிரச்னையில் தி.மு.க., தென் மண்டல செயலர் அழகிரியின் ஆதரவாளர்கள், 17 பேருக்கு, தி.மு.க., தலைமை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அடுத்து என்ன: இதையடுத்து, கடும் கோபமான அழகிரி, மதுரை வந்ததும், கட்சியில், யாருக்கும் வரவேற்பு கொடுக்க வேண்டும் என்று, கட்சி சட்ட திட்டத்தில் இல்லை என்று பதிலளித்தார். அவரது ஆதரவாளர்கள், 17 பேரும், கட்சித் தலைமைக்கு, தனித்தனியே விளக்கம் அளித்து பதில் அனுப்பியுள்ளனர். இதுகுறித்து கட்சி என…

  6. ஒரு பேப்பருக்காக – வேல் தர்மா இந்த ஆண்டு இலங்கைப் பத்திரிகைகளில் இதுவரை வந்த நகைச்சுவைகளில் மிகச் சிறந்த நகைச்சுவை இந்திய இணை அமைச்சர் வி நராயாணசுவாமி இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா பாதுகாப்பாக இருக்கும் என்று கூறியதே. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இந்தியப் பாராளமன்ற உறுப்பினர்களின் குழு ஒன்று சுஸ்மா சுவராஜ் தலைமையில் போருக்கு பிந்திய ஈழத்தமிழர்களின் மறுவாழ்வு குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக என்று சொல்லிக் கொண்டு இலங்கை சென்றது. அது பசில் ராஜபக்ச, மலையத் தொழிற்சங்கவாதிகள், மலையக அரசியல்வாதிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடபடப் பலதரப்பினரைச் சந்தித்தனர். இக்குழுவின் பயணம் தொடர்பாகக் கேட்டபோதே அமைச்சர் வி நராயாணசுவாமி தனது திருவாய் மலர்ந்தருளினார். இக்குழுவினர் 15-ம்…

  7. பிரான்ஸ் நாட்டில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் முதல் கட்ட வாக்கு பதிவு இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபராக பதவி வகிக்‌கும் நிகோலஸ் சர்கோஸி இரண்டாவது முறையாக மீண்டும் போட்டியிடுகிறார். அவருடன் சோஸலிஸ்‌ட் கட்சி வேட்பாளர் பிரான்சுவா ஹோலண்ட் உட்பட 10 பேர் களத்தில் உள்ளனர். இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள இந்த தேர்தலில் முதல் கட்ட தேர்தலில் அதிகளவு ஓட்டுக்கள் பெறும் இரண்டு வேட்பாளர்கள் தேர்வு ‌செய்யப்பட்டு இரண்டாம் கட்ட தேர்தலுக்கு தகுதியானவர்களாக அறிவிப்பர். இந்த அதிபர் தேர்தலில் பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் சுமார் 4 கோடியே 40 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். http://www.seithy.co...&language=tamil

  8. நோர்வேயில் அண்மையில் நடந்த அமைச்சரவை மாற்றத்தின்போது, பதவியிழந்த சிறிலங்காவுக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் ஐ.நாவுக்கான தூதுவர் பதவிக்கு நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தீவிர அரசியலில் இருந்து விலகி, இராஜதந்திரப் பணியில் இணைந்து கொள்ளும் நோக்கில் அவர் முக்கியத்துவம் மிக்க ஐ.நாவுக்கான தூதுவர் பதவிக்குப் போட்டியில் குதித்துள்ளார். நியுயோர்க்கில் ஐ.நாவுக்கான நோர்வேயின் தூதுவராகப் பணியாற்றும் மோர்டென் வெற்லன்ட் நான்கு ஆண்டு பதவிக்காலத்தை முடித்து ஒஸ்லோ திரும்பவுள்ளார். ஐ.நாவுக்கான தூதுவர் பதவிக்கு எரிக் சொல்ஹெய்முடன் மேலும் மூவர் போட்டியில் உள்ளனர். எனினும் இந்தப் பதவிக்கு எரிக் சொல்ஹெய்ம் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. …

  9. சீனா போட்டுள்ள முத்துமாலை குறித்தும், அதனை முறியடிக்க அமெரிக்கா போட்டு வருகின்ற பாதுகாப்பு வளையம் குறித்தும் கடந்த இதழில் பார்த்திருந்தோம். பலுசிஸ்தான் மாகாணத்தை தனிநாடாகப் பிரிப்பதற்கு நடந்துவரும் நகர்வுகளைப் பார்ப்பதற்கு முன்பாக இந்து - பசுவிக் சமுத்திரத்திரங்களுக்கு இடையில் அமைந்திருக்கும் தென் சீனக் கடற் பிராந்தியம் குறித்தும், இதற்காக சீனாவும் - இந்தியாவும் முட்டி மோதிக்கொள்வது ஏன் என்பது குறித்தும் இந்தத் தொடரில் பார்ப்போம். இந்திய - சீன எல்லையில் உள்ள அருணாச்சலப் பிரதேசம் இந்தியா தனக்கு சொந்தமானது என்கின்றது. ஆனால், இதனை தனக்கு சொந்தமென சீனா உரிமை கொண்டாடி வருவதுடன், அப்பகுதி மக்கள் சீனாவிற்குள் நடமாடுவதற்கும் விசா தேவையில்லை எனக்கூறி, தனது சொந்த நாட்டு மக்கள்…

  10. April 20, 2012 ஈராக்கில் நான்கு இடங்களில் நேற்று குண்டு வெடித்ததில் 30 பேர் பலியாயினர்.ஈராக்கில் பாக்தாத், கிர்குக், சலாஹிதின் உள்ளிட்ட இடங்களில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 30 பேர் பலியாயினர். பாக்தாத் குண்டு வெடிப்பில் 17 பேரும், கிர்குக் மாகாண குண்டு வெடிப்பில் ஒன்பது பேரும், சலாஹிதின் மாகாணத்தில் சமாரா என்ற இடத்தில் மூன்று பேரும் குண்டுவெடிப்பில் பலியாயினர். தியாலா மாகாணத்தில் வெடித்த குண்டில் போலீஸ் அதிகாரி ஒருவர் பலியானார். http://www.paristami...Tg0NjYxNDQ4.htm

  11. தமிழகத்தில் உள்ள கண்மாய், குளங்களில் மணற் கொள்ளையில் ஈடுபட தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதனை தடுக்க பொதுமுக்கள் முன்வருமாறும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். தமிழகத்தின் ஆற்றுப்படுகையில் ஆளும் கட்சியினர் கணக்கின்றி மணலை அள்ளி விற்பனை செய்து, நமது ஆற்று வளத்தை சூறையாடி வருகிற செயல் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. உயர்நீதிமன்றத்தின் தலையீடு, பொதுமக்களின் விழிப்புணர்வு காரணமாக, பிரதான ஆற்றுப்படுகைகளில், மணல் திருட்டு குறைந்து உள்ளது. எனினும் ஆளும் கட்சிக்கு வருவாய் ஈட்டும் முக்கியத் தொழிலாக சட்டவிரோத மணல் திருட்டு அமைந்து உள்ளதால், பிரதான ஆற்றுப்படுகைகளைத் தவிர்த்து பல சிற்றாறுகள், கால்வரத்துப் பகுதிகள் காட்டாறுகளை…

  12. Sri Lanka: Urge United Nation to hold Referendum on "Free Tamil Eelam" http://www.change.org/petitions/sri-lanka-urge-united-nation-to-hold-referendum-on-free-tamil-eelam http://www.petitions.in/petition/sri-lanka-urge-united-nation-to-hold-referendum-on-free-tamil-eelam/10072 Circulate to your Contacts

  13. டென்மார்க்கின் பிரபலமான தொழில் அதிபர் மாஸ்க் கெனி மக் மூலரின் இறுதிக்கிரியைகள் கொல்மன்ஸ் தேவாலயத்தில் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இது தனிப்பட்ட குடும்ப நிகழ்வாகவே நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டேனிஸ் மகாராணியார் இந்த வைபவத்தில் பங்கேற்க இருக்கிறார். மாமனிதன் மாஸ்க் ஒரு வரலாற்றுப் பார்வை 1903 ம் ஆண்டு யூலை மாதம் 23 ம் திகதி பிறந்தார். 1930 ல் கப்பல் மாலுமிக்கான பரீட்சையில் சித்தியடைந்தார். 1932 ல் பிரான்ஸ், ஜேர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளில் மாலுமியாக பணியாற்றினார். 1938 ல் கோப்பன்கேகன் திரும்பி தந்தையின் ஏ.பி.மூலர் நிறுவனத்தில் சேர்ந்தார். 1939 ல் டென்மார்க் நீராவிக் கப்பல் நிறுவனத்தின் நிர்வாகத்தில் இடம் பெற்றார். 1940 ல் உயர்நிலை பா…

    • 1 reply
    • 342 views
  14. கராச்சியிலிருந்து 127 பயணிகளுடன் புறப்பட்ட பொஜா ஏயார்லைன்ஸ்விமானம் பாகிஸ்தானின் ராவல்பிண்டிக்கு அருகாமையில் வெடித்துச் சிதறியுள்ளது. குறித்த விமானம் கராச்சியிலிருந்து இஸ்லாமபாத்திற்கு புறப்பட்ட வேளையில் மோசமான காலநிலை காரணமாக ராவல்பிண்டிக்கு அருகாமையில் வைத்து வீழ்ந்து வெடித்துச்சிதறியுள்ளது. மேலும் விமானம் முற்றாக தீப்பிடித்து சேதமாகியுள்ளதாக பாகிஸ்தான் பொலிஸ் அதிகாரியான அக்பர் தெரிவித்துள்ளார். உயிரழப்பு மற்றும் சேதம் தொடர்பான விடயங்கள் குறித்து இதுவரையில் எதுவும் தெரிவிக்க்படவில்லை. மேலும் தற்போது அங்கு மீட்புப் பணிகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37694

  15. இன்னும் சிறிது நேரத்தில் நேரலை சாதி மத மூடநம்பிக்கைகளால் அடிமைப்பட்டுக் கிடந்த தமிழனை விடுவிக்க வந்த ஆயுதமே திராவிடம். சுயநலவாதிகளுக்கும், சாதி வெறியர்களுக்கும், பெண்ணடிமைவாதிகளுக்கும், மதத்தால் மனிதனை அடிமை செய்வோருக்கும் எதிரியே திராவிடம். தமிழீழ விடுதலைப்போருக்கு ஆயுதப்பயிற்சிக்களத்தை தமிழகத்தில் அமைத்துக்கொடுத்ததும் திராவிடர்களே. சாதி மத வேற்றுமைகளை நீக்கி தமிழர்களை ஒற்றுமைப்படுத்தும் ஆயுதமான திராவிடத்தை ஒழிக்கும் முயற்சியில் முதலாளித்துவ சுயநலவாதிகள் சிலர் ஈடுபட்டுள்ளனர். இளைய தலைமுறையினருக்கு தந்தைப்பெரியாரின் சிந்தனைகளையும் திராவிடக்கருத்துக்களையும் விளக்கும் வகையில் “குடி அரசு வாசகர் வட்டத்தினர் ஏற்பாட்டில் பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் தோழர் கொளத்தூர்…

    • 0 replies
    • 377 views
  16. வருபவர்களை வரவேற்க வேண்டும் என்பது திமுகவில் சட்டமா என்ன?: அழகிரி அதிரடி மதுரையில் மு.க. ஸ்டாலின் நடத்திய திமுக இளைஞரணி நிர்வாகிகள் தேர்வு குறித்தும், அவர் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் குறித்தும் எனக்கு தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கூறினார். முன்னதாக மதுரையில் திமுக இளைஞரணி நிர்வாகிகளைத் தேர்வு செய்ய அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் நடத்திய நேர்காணலையும், ஸ்டாலின் கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தையும் மதுரை மாவட்டத்தின் அனைத்து திமுக நிர்வாகிகளும் புறக்கணித்தனர். பொதுக் கூட்டத்துக்கு திமுக சார்பில் போலீசாரிடம் அ…

    • 0 replies
    • 514 views
  17. செங்கல்பட்டு காந்திபுரம் நெடுஞ்சாலையில் உள்ள கிளை சிறையில் கைதிகள் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதம் இன்று 5வது நாளாகவும் தொடர்கிறது. இச்சிறையில் ஈழத்தை சேர்ந்த 32 பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். கடவுச்சீட்டு இல்லாமல் தங்கியது, சந்தேகப்படும் வகையில் செயல்பட்டது போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் இராமேஸ்வரம், மதுரை, திருச்சி போன்ற நகரங்களில் பிடிபட்ட இவர்கள் கடந்த சில மாதங்களாக இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களை திறந்த வெளி முகாமுக்கு மாற்ற வேண்டும் என்று கோரி கடந்த 3 மாதங்களுக்கு முன் உண்ணாவிரதம் இருந்தனர். அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 45 நாட்களுக்குள் உங்கள் கோரிக்கைக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து உண்ணாவிரதத்தை கைவிட்…

  18. சென்னை சிறுவன் கொலை: முன்னாள் ராணுவ அதிகாரிக்கு ஆயுள் சிறை சென்னையில், ராணுவக் குடியிருப்புக்குள் நுழைந்த சிறுவனை சுட்டுக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிக்கு, சென்னை விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் ராமராஜுக்கு, ஆயுள் தண்டனையுடன், 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அதில் 50 ஆயிரம் ரூபாயை, கொல்லப்பட்ட 13 வயது சிறுவன் தில்ஷனின் குடும்பத்துக்கு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் துவங்கிய வழக்கு விசாரணை 7 மாதங்களில் முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். …

    • 2 replies
    • 612 views
  19. அக்னி 5 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துவிட்ட நிலையில், அடுத்தபடியாக வரப் போவது 'ஏ-6' என்று பெயரிடப்பட்டுள்ள ஏவுகணை. இந்த ஏவுகணை ஒரே நேரத்தில் பல அணு குண்டுகளை ஏந்திக் கொண்டு 10,000 கி.மீ. வரை சென்று ஒரே நேரத்தில் பல இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்று தெரிகிறது. 17.5 மீட்டர் உயரம் கொண்ட அக்னி 5 ஏவுகணை திட எரிபொருளால் இயக்கக் கூடியதாகும். இதனால், இதை மிக எளிதாக ராணுவ வாகனங்களில் எந்த இடத்துக்கும் கொண்டு சென்று ஏவ முடியும். சுமார் 1.5 டன் (1,500 கிலோ) எடை கொண்ட அணு குண்டையோ அல்லது வேறு ஆயுதங்களையோ இந்த ஏவுகணையால் ஏந்திக் கொண்டு 5,000 கி.மீ. வரை பயணிக்க முடியும். 'இன்டர் காண்டினென்டல் பேலிஸ்டிக் மிஸைல்' (Inter-Contine…

  20. கருநாடகத்தில் நடைபெறவுள்ள ‘பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்வு’ தமிழ் மக்களின் உரிமைக்கான உன்னத நிகழ்வாக அமைய வேண்டுமென்று ஈழத் தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிகழ்வின் மூலம் தமிழ் மக்களின் உரிமைக்குரல் உலக நாடுகளின் காதுகளில் ஒங்கி ஒலிக்கட்டும் என்றும் இவர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழகத்தில், எதிரியின் இரும்புக் கரங்களுக்குள் பிரசவமாகிய பொங்கு தமிழ் உலகின் மூலை முடுக்கெங்கும் தவழ்ந்து சென்று இன்று கருநாடகத்தில் வளர்ந்து நிற்கிறது. புலம்பெயர் தமிழர்களால் வளர்க்கப்பட்டுள்ள இந்தப் பொங்கு தமிழ் நிகழ்விற்கு, ஈழத் தமிழ் மக்கள் தமது ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். காற்றாடியை முறித்தால் காற்றே வீசாதென்று சிங்களம் கனவு காண்கிறது. ஈழத் தமிழரின…

  21. சூடானின் திபர் ஒமர் அல் பஷீர் வியாழக்கிழமை தென் சூடானுக்கு எதிராகத் தனது யுத்தப் பிரகடனத்தை விடுவித்துள்ளார். தென் சூடான் அரச தலைவர்களை பூச்சிகள் என வர்ணித்துள்ள அவர் விரைவில் அவர்களுக்கு எதிராக பாடம் கற்பிக்க போவதாகவும் கூறியுள்ளார். தென் சூடான் அரசாங்கத்தைக் களைப்பதற்கான ஒரு முயற்சியாகவே இந்த யுத்தப் பிரகடனம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். மிக நீண்ட உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் தென் சூடான் மிகச் சமீபத்திலேயே அதாவது ஜூலை 9 2011 இல் விடுதலை பெற்று தனி நாடானாது. தற்போது எண்ணெய் வளம் மிக்க தென் சூடானின் எல்லைப் பகுதிகளை கைப் பற்றுவதற்காக சூடான் அவ்வப்போது தாக்குதல்களை மேற்கொண்டு வந்தது. சூடானின் பாராளுமன்றத்தில் தென் சூடானின் ஆள…

  22. அமெரிக்காவுடன் மீண்டும் சுமுக உறவைத் தொடர முடிவு மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்துவது குறித்து தெஹ்ரிக்-இ-தலிபான் தலைவர் ஹகீமுல்லா மெஹ்சூத் தலைமையில் ரகசிய ஆலோசனை நடைபெற்றது. இதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை சேர்ந்த தலிபான்கள் மற்றும் அல்கொய்தா அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாகூர் உள்ளிட்ட நகரங்களில் தாக்குதல் நடத்த முடிவு செய்யப்பட்டதாகவும், இதற்காக 21 பேரை கொண்ட தற்கொலைப்படையை தயார்படுத்தி இருப்பதாகவும் உளவுத்துறையை மேற்கோள் காட்டி பாகிஸ்தான் பத்திரிகை கூறியுள்ளது. தினம் ஒரு குண்டு வெடிப்பும், தற்கொலைப் படைத் தாக்குதலையும் சந்தித்து வரும் பாகிஸ்தானிற்கு தலிபான்களின் இந்த ரகசிய திட்டம்…

    • 0 replies
    • 453 views
  23. உலகிலேயே பெரிய அணை சீனாவில் உள்ள யாங்சி ஆற்றில் 2006-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த அணையில் இருந்து 22 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அணை கட்டுமான பணி 1994-ம் ஆண்டு தொடங்கி 2006-ல் முடிவடைந்தது. இந்த அணையை கட்டி முடிக்க ரூ.2லட்சம் கோடி செலவிடப்பட்டது. அப்போது அணை பகுதியில் இருந்த 14 பெரிய நகரங்கள், 133 சிறு நகரங்கள், 1350 கிராமங்கள் காலி செய்யப்பட்டு 14 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டனர். அணை கட்டி முடிக்கப்பட்டதில் இருந்து அடிக்கடி அணை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதுவரை 96 தடவை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இனியும் 5386 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கண்டறிந்து உள்ளனர். நிலச்சரிவை தடுக்க 355 இடங்களில் தடுப்பு நடவ…

    • 0 replies
    • 779 views
  24. புவி வெப்பமடைவதால் பனி மலைகள் உருகி வருகின்றன. ஆனால் இமயமலையின் மேற்கு பகுதியான காரகோரம் மலையில் பனி இறுகி, கெட்டியாகி வருவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். இந்த மலைத்தொடரில் பனியின் அளவு அதிகரித்து வருவதை பிரெஞ்சு விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது. புவி வெப்பமடைவதால் இமய மலையின் மற்ற பகுதிகளில் உள்ள பனி மலைகள் உருகி வரும் நிலையில், இந்த மலை மட்டும் இறுகி வருவதன் காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை. இந்த பிராந்தியத்தில் உள்ள பனிமலைகள் 10 கோடி மக்களுக்கு நீர் வழங்கும் ஆதாரமாக இருந்து வருகின்றன. இமயமலையில் உள்ள மொத்த பனியும் 2035 ஆம் ஆண்டில் உருகிப் போய்விடும் என்று 2007 ஆம் ஆண்டு வெளியான காலநிலை மாற்றத்துக்கான குழுவின் அறிக்கை கூறியது. இதையடுத்து, இமயமலை பனி …

  25. மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக 22 ஆண்டுகள் போராடிய ஆங் சாங் சூகி இராணுவத்தால் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் 24 ஆண்டுகளுக்குப் பின் தற்போது முதன் முறையாக ஆங் சாங் சூகி எதிர் வரும் ஜூன் மாதத்தில் ஓஸ்லோவிற்கு வருகை தருவதாக நோர்வே நாட்டின் வெளிவிவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இப்பயணம் குறித்து கடந்த ஞாயிறன்று நோர்வே நாட்டின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜோன்ஸ் கர் ஸ்டோயிர், ஆங் சாங் சூகி உடன் தொலைபேசியில் பேசியதாக நோர்வே நாட்டின் வெளிவிவகாரத் துறையின் செய்தி தொடர்பாளர் ஸ்வீன் மிச்செல்சன் தெரிவித்தார். மேலும் 1989ம் ஆண்டிற்கு பிறகு மியான்மரில் இருந்து நோர்வே வரும் முதலாவது எதிர்க்கட்சி தலைவர் என்றும் அவர் தெரிவித்தார். முன்னதாக இவருக்கு ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.