Jump to content

பாகிஸ்தானின் முக்கிய நகரங்களைத் தாக்குவதற்கு தலிபான்கள் ரகசிய திட்டம்


Recommended Posts

அமெரிக்காவுடன் மீண்டும் சுமுக உறவைத் தொடர முடிவு மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்துவது குறித்து தெஹ்ரிக்-இ-தலிபான் தலைவர் ஹகீமுல்லா மெஹ்சூத் தலைமையில் ரகசிய ஆலோசனை நடைபெற்றது.

இதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை சேர்ந்த தலிபான்கள் மற்றும் அல்கொய்தா அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாகூர் உள்ளிட்ட நகரங்களில் தாக்குதல் நடத்த முடிவு செய்யப்பட்டதாகவும், இதற்காக 21 பேரை கொண்ட தற்கொலைப்படையை தயார்படுத்தி இருப்பதாகவும் உளவுத்துறையை மேற்கோள் காட்டி பாகிஸ்தான் பத்திரிகை கூறியுள்ளது.

தினம் ஒரு குண்டு வெடிப்பும், தற்கொலைப் படைத் தாக்குதலையும் சந்தித்து வரும் பாகிஸ்தானிற்கு தலிபான்களின் இந்த ரகசிய திட்டம் புதியதொரு தலைவலியை உண்டாக்கியுள்ளது.

அமெரிக்காவுடனான உறவை முறித்துக் கொண்டாலொழிய இந்த தலிபான் தாக்குதல்களிலிருந்து தப்ப முடியாது என்று பாகிஸ்தானிற்கு தெரிந்திருந்தாலும், சர்வதேச அளவில் அமெரிக்காவின் உறவை பாகிஸ்தானால் வெட்டிவிட முடியாது. அமெரிக்காவின் நிதி உதவியால் பாகிஸ்தான் தனது ராணுவத்தை பலப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் 16- அன்று ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்தின் மீது தலிபான் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதேபோன்ற தாக்குதல்களை பாகிஸ்தானில் அரங்கேற்ற திட்டம் தீட்டியிருக்கிறார்கள் என்றும் பாகிஸ்தான் உளவுத்துறை எச்சரித்து இருப்பதாக அப்பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

http://thaaitamil.com/?p=16264

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.