உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26865 topics in this forum
-
லிபியாவின் முன்னாள் அதிபர் கேணல் கடாபியின் மகன்களில் ஒருவரான சயீவ் அல் இஸ்லாம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் சரணடைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தன்னை லிபியாவின் தென் பகுதியிலுள்ள பாலைவனத்திலிருந்து வெளியேற்றுவதற்காக விமானமொன்று வேண்டும் எனவும் கேட்டுள்ளதாக லிபிய இடைக்கால கவுன்ஸிலின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேணல் கடாபி கடந்தவாரம் கொல்லப்பட்ட பின்னர் அவரின் புதல்வர்களில் ஒருவரான சயீவ் அல் இஸ்லாம், லிபிய கிளர்ச்சிப் படையினரிடமிருந்து தப்பியோடிக்கொண்டிருக்கிறார். கிளர்ச்சியாளர்களின் கைகளில் அகப்படாமல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் (ஐ.சி.சி.) சரணடைவதற்கு அவர் விரும்புவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், லிபியாவின் முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவ…
-
- 1 reply
- 864 views
-
-
[ வெள்ளிக்கிழமை, 28 ஒக்ரோபர் 2011, 01:36 GMT ] [ கார்வண்ணன் ] அவுஸ்ரேலியாவின் சிட்னி வில்லாவூட் தடுப்பு நிலையத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவுஸ்ரேலியாவின் அகதிகள் பற்றிய கொள்கை குறித்த கடும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. “சுட்டிவிகடன்“ என்று நண்பர்களால் அழைக்கப்பட்ட 27 வயதான ஜெயசங்கர் ஜெயரட்ணம் என்ற இளைஞர் கடந்த புதன்கிழமை அதிகாலை, அதிகளவிலான தூக்க மாத்திரைகளை அருந்தி தற்கொலை செய்து கொண்டார். கடந்து ஆண்டு மார்ச் மாத இறுதிப் பகுதியில் இருந்து இந்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவரது தஞ்சக் கோரிக்கை கடந்த ஓகஸ்ட் மாதமே ஏற்கப்பட்டு விட்டது. ஆனால் அவுஸ்ரேலிய புலனாய்வு அதிகாரிகளின் அறி…
-
- 2 replies
- 740 views
-
-
ஸ் ரீவ் யேப்ஸ் புதிய புத்தகம் நேற்று வெளியானது ஆப்பிள் நிறுவனத்தின் வெளியீடுகளால் உலகின் சிகரங்களை தொட்டு அண்மையில் புற்நோயால் மரணமடைந்த ஸ் ரீவ் யேப்ஸ்சின் வாழ்க்கை வரலாறு நூல் வடிவில் நேற்று வெளியானது. வோல்ரர் ஈசக்சன் walter Isaacson இதை எழுதியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் 40 தடவைகள் ஸ் ரீவ் யேப்சை இவர் தொலைக்காட்சிக்காக பேட்டி எடுத்துள்ளார். மேலும் இவர் தொடர்பான கருத்துக்களை பல ஆயிரக்கணக்கானவரிடமிருந்து திரட்டியும் உள்ளார். ஸ் ரீவ் யேப்ஸ் பற்றிய பாரிய அனுபவத்துடன் நூலை வெளிக் கொணர்ந்துள்ளார். இவர் சி.என்.என் நிர்வாகத்தில் உள்ளவர், ரைம் சஞ்சிகையின் நிர்வாக எடிட்டர், மற்றும் ஐன்ஸ்டைன், பென்ஞமின் பிராங்கிளின், அன் அமெரிக்கன் லைப் கீஸிங்கர் போன்ற புகழ…
-
- 9 replies
- 1.3k views
-
-
அந்தமான் தீவுகளில் இந்தியா பாதுகாப்பை அதிகரிக்கிறது - சீன ஊடுருவலால் அதிர்ச்சி:- இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்கக்கடலில் சீனாவின் ஊடுருவலை தாமதமாக உணர்ந்த இந்தியா, அந்தமான் தீவுகளில் தனது பாதுகாப்பை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அந்தமான் நிகோபர் தீவுகள் இந்தியப் பெருங்கடலில் வரலாற்று ரீதியாகவும் பூகோளரீதியாகவும் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தியாவிலிருந்து மிக தொலைவில் இருக்கும் அந்தமான் தீவுகள், தென்கிழக்கு ஆசியாவுக்கான நுழைவு வாயிலாகவும் இருக்கிறது. இந்தியப் பெருங்கடலில் அந்தமான் தீவுகளைக் கடந்தே இந்தியாவுக்கு எவ்வித ஆபத்தும் வர முடியும். இப்பகுதி மீது ஆரம்பத்தில் இருந்தே சீனாவுக்கு அதிக ஆர்வம் உண்டு. கடந்த சில நாட்களுக்கு முன் சீனக்கடற்படை…
-
- 7 replies
- 2k views
-
-
கடாபியின் இரகசிய இரசாயன ஆயுத களஞ்சியசாலை கண்டுபிடிப்பு _ வீரகேசரி இணையம் 10/27/2011 5:11:28 PM லிபியாவில் கடாபியினது இரகசிய இரசாயன ஆயுதக் களஞ்சியசாலையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது சிர்ட் நகரின் தெற்கே நிலத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த 80 ஆயுதக் களஞ்சியசாலையொன்றிலேயே அபாயகரமான இரசாயன ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்துள்ளன. இந்த ஆயுதங்கள் இடைக்கால அரசாங்கப் படையினர் சிர்ட் நகரைக் கைப்பற்றும் வரை கடாபியின் படையினரின் காவலின் கீழ் இருந்தாக இடைக்கால அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேட்டோவின் உளவு விமானங்கள் சிர்ட் நகரிலிருந்து தெற்கே 130 மைல் தொலைவில் ருகவா எனும் இடத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில் சந்தேகத்துக்கிடமாக இரசாயன ஆயு…
-
- 0 replies
- 970 views
-
-
கவின் / வீரகேசரி இணையம் 10/27/2011 10:53:25 AM Share சவூதி மன்னர் அப்துல்லா தனது அடுத்த வாரிசாகவும், புதிய இளவரசராகவும் அந்நாட்டு உள்துறை அமைச்சர் நயீப்பை நியமிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்நாட்டின் இளவரசராக இருந்த சுல்தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார் இதைத்தொடர்ந்து புதிய இளவரசரைத் தேர்வு செய்யும் செயற்பாடு நடைபெற்றுவருகின்றது. இந்நிலையில் தற்போது உள்துறை அமைச்சராக உள்ள நயீப் புதிய இளவரசராக தேர்வு செய்யப்படலாம் எனவும், அதுதொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவுப்பு…
-
- 0 replies
- 689 views
-
-
சுதந்திர போராட்ட வீராங்கனை ஆங் சாங் சுகிக்கு அமெரிக்க பல்கலைக்கழகம் விருது வழங்கி கௌரவம். மியான்மர் சுதந்திர போராட்ட வீராங்கனை ஆங் சாங் சுகிக்கு அமெரிக்க பல்கலைக்கழகம் விருது வழங்கி கவுரவித்துள்ளது. மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடி வருபவர் ஆங் சாங் சுகி. ராணுவத்திற்கு எதிராக போராடியதற்காக 15 ஆண்டுகள் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகம் அவருக்கு உயரிய வாலன்பர்க் விருது வழங்கி கவுரவித்துள்ளது. அவர் வெளிநாடுகளுக்கு செல்ல ராணுவ அரசு அனுமதி வழங்காததால் இணையதளம் மூலம் அவர் இவ்விருதை பெற்றுக்கொண்டார். http://mykathiravan....a-news/?p=17868
-
- 0 replies
- 574 views
-
-
வீரகேசரி இணையம் 10/26/2011 3:29:51 PM லிபியாவில் அண்மையில் கொல்லப்பட்ட முன்னாள் அதிபர் கடாபி, லிபியர்கள் தன்னை அதிகம் விரும்பியதாக திரிபோலி புரட்சியாளர்களால் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டபோதிலும், கடைசி நிமிடம்வரை நம்பினார் என்று அவருடைய பாதுகாவலர் தெரிவித்தார். தி நியூயார்க் டெய்லி நியூஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் கடாபியின் பாதுகாவலரான மன்சூர் தாவ் இவ்வாறு தெரிவித்தார். திரிபோலி ஆக்கிரமிப்பாளர்களால் கைப்பற்றப்பட்டுவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்ட பிறகும், லிபியர்கள் தன்னை அதிகம் விரும்புகிறார்கள் என்றே நம்பினார் மம்மர் கடாபி என்றார் அவர். லிபியா…
-
- 7 replies
- 1.8k views
-
-
புதுடில்லி: இந்தியப்பெருங்கடல் மற்றும் வங்கக்கடலில் சீனாவின் ஊடுருவலை தாமதமாக உணர்ந்த இந்தியா, அந்தமான் தீவுகளில் தனது பாதுகாப்பை அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இந்தியப்பெருங்கடலில் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்தது அந்தமான் நிகோபர் தீவுகள். இந்தியாவிலிருந்து மிக தொலைவில் இருக்கும் அந்தமான் தீவுகள், தென்கிழக்காசியாவுக்கான நுழைவு வாயிலாகவும் இருக்கிறது. இந்தியப் பெருங்கடலைத் தாண்டி இந்தியாவுக்கு வந்த எவ்வித ஆபத்தும், அந்தமானை கடந்து தான் இந்தியாவை தொடமுடியும் என்பதால், இப்பகுதி மீது சீனாவுக்கு ஆர்வம் அதிகம். கடந்த சில நாட்களுக்கு முன் சீனக்கடற்படை கப்பல் ஒன்று இங்கு உளவு பார்த்த சம்பவம் மத்திய அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியதுடன், தனது தவறை தாமதமாக உணர்த்தியும் உள்ளது…
-
- 0 replies
- 702 views
-
-
லிபிய அதிபர் கடாபியை கைது செய்துள்ளதாக லிபிய கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளதாகவும இதனை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் பீபீசி கூறியுள்ளது. http://www.bbc.co.uk...e-east-15385955 http://edition.cnn.com/2011/10/20/world/africa/libya-war/index.html?hpt=T1
-
- 60 replies
- 5.1k views
-
-
- 30.10.11 ஹாட் டாபிக் அழுகை, வருத்தம், கெஞ்சல், ஆறுதல் என உணர்ச்சிகரமாக நடந்து முடிந்துள்ளது கருணாநிதி-கனிமொழியின் மூன்றாவது சிறைச் சந்திப்பு. இந்தமுறை கொஞ்சம் பிடிவாதமாக, மகளுடன்தான் சென்னை திரும்புவேன் என டெல்லியிலேயே தங்கியிருக்கிறார் கருணாநிதி. உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியை சந்தித்த இறுகிய முகத்துடன், கடந்த 21-ம் தேதி மாலை கனிமொழியை சந்திக்க டெல்லி சென்றார் கருணாநிதி. அவருடன் து ணைவி ராஜாத்தி அம்மாளும், பேரன் ஆதித்யாவும் சென்றனர். வழக்கமாக தங்கும் ‘லீலா பேலஸ்’ நட்சத்திர விடுதியில்தான் தங்கினார். டெ…
-
- 3 replies
- 2.8k views
-
-
சென்னை: மதிமுகவினர் நிச்சயம் இந்தத் தேர்தலை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்ளலாம். காரணம் 3 மாநகரட்சிகளில் அக்கட்சிக்கு எதிர்பாராத அளவுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. மேலும் பல இடங்களில் ஓரளவுக்கு வாக்குகள் கிடைத்துள்ளன. அனைவராலும் சீந்தப்படாத கட்சியாகவே இந்த தேர்தலை சந்தித்தது மதிமுக. இருந்தாலும் கூட்டணிக்காக யாரிடமும் போய் கெஞ்சாமல், அடிபணியாமல் துணிச்சலுடன் தனியாகவே தேர்தல் களத்திற்கு அனுப்பினார் வைகோ. அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. தன்னந்தனியாக, எந்தவித பின்பலமும் இல்லாமல், தமிழ் ஆர்வலர்களையும், மதிமுக கொள்கைப் பிடிப்பாளர்களை மட்டுமே நம்பி நின்ற வைகோவுக்கு சந்தோஷச் செய்தியாக கணிசமான வாக்குகள் இந்தத் தேர்தலில் கிடைத்துள்ளன. தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தேர்…
-
- 23 replies
- 2k views
-
-
சென்னை: நாங்கள் இல்லாவிட்டால் ஒருவரும் ஆட்சியமைக்க முடியாது, எதையும் செய்ய முடியாது என்று வாய் கிழியப் பேசி வந்த காங்கிரஸாருக்கு இப்போது உள்ளாட்சித் தேர்தலில் சம்மட்டி அடி கிடைத்துள்ளது. இதுதான் காங்கிரஸின் நிஜமான பலம். காமராஜரோடு காங்கிரஸ் கரையறி விட்டது என்பதை மக்கள் ஆணித்தரமாக நிரூபித்துள்ளனர் தேர்தல் முடிவு மூலம். தமிழகத்தில் ஓசியிலேயே உடம்பேற்றி வந்த ஒரே கட்சி எது என்றால் அது காங்கிரஸ்தான் என்பதை கருவில் இருக்கும் சிசு கூட கரெக்டாக சொல்லி விடும். ஆனால் இதை காங்கிரஸார் மட்டும் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். மாறாக, நாங்கள் யாருடன் இருக்கிறோமோ அவர்களுக்குத்தான் வெற்றி கிடைக்கும். நாங்கள் ஆதரவு தரும் கட்சிதான் ஆட்சியைப் பிடிக்கும் என்று கோஷ்டி கோஷ்டியாக கானம் பாடி வரு…
-
- 1 reply
- 731 views
-
-
விபரம்கள் சரியா என தெரியவில்லை முக நூலில் கிடைத்ததை பகிர்ந்துள்ளேன் முன்னாள் லிபிய ஜனாதிபதி ஜெனரல் கடாபியையும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினையும் ஒரே பார்வையில் பார்க்கும் ஈழத்தமிழர் கவனத்திற்கு : ஜெனரல் கடாபி ஆட்சியில்........: 1) லிபிய குடிமக்கள் எவரும் மின்சாரகட்டணம் செலுத்தவேண்டியதில்லை. 2) லிபிய அரசின் வங்கிகளில் எந்த ஒரு லிபிய குடிமகனும் 0% வட்டிக்கு வங்கிகடன் பெற்றுகொள்ளலாம். 3) லிபிய மனித உரிமைகளில் ஒன்று : லிபிய குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தனிதனி வீடுகள் பெற்றுகொள்ளலாம், கடாபி இறக்கும் நேரம் வரை கடாபியின் தாயும் தந்தையும் ஒரு தகர கூடாரத்தினுள்ளே வாழ்ந்துவருகின்றனர். 4) லிபிய குடிமக்கள் எவரும் புதிதாக மணம் முடிக்கும் …
-
- 0 replies
- 588 views
-
-
25-11-2011 ஜெயலலிதா எதை எதிர்பார்த்தாரோ அது கிடைத்துவிட்டது..! கருணாநிதி எதை எதிர்பார்க்கவில்லையோ அதுவும் கிடைத்துவிட்டது. விஜயகாந்த், ராமதாஸ், திருமாவளவன் போன்றோரின் செல்வாக்கு என்ன என்பதையும் அவர்களுக்கு உணர்த்தியாகிவிட்டது. வைகோவுக்கு அவரது பெயருக்குள்ள செல்வாக்கு இருப்பது மட்டுமே மீண்டும் நிரூபணமாகியுள்ளது. கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு ஜெயிக்க வைக்கக் கூடிய அளவுக்கான தொண்டர்களை இன்னமும் அவர்கள் பெறவில்லை என்பது சொல்லப்பட்டுவிட்டது. பாரதீய ஜனதாவுக்கு மாற்று ஆள் தேடிக்கிட்டிருக்கோம் என்ற சிக்னலை கொடுத்தாகிவிட்டது.. ஆனால் தமிழகத்து மக்களுக்குத்தான் என்ன கிடைக்கப் போகிறது என்று தெரியவில்லை..! நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலே முறைகேடாக நடத்தப்பட்ட ஒரு தே…
-
- 1 reply
- 1.9k views
-
-
சீனாவில் மனிதாபிமானம் முற்றாகவே மரணித்துவிட்டதா? இரண்டு வயதுக் குழந்தை மீது வாகனத்தினால் மோதிவிட்டு வேன் சாரதி ஒருவர் அலட்சியமாக வேனில் சென்றதுடன் அக்குழந்தை உயிரிழக்கக் காரணமான இரண்டு பேரை சீனநாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். அக் குழந்தையானது இவ் விபத்திற்கு முகங்கொடுத்து சில நாட்களின் பின்னரே உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவத்தின் காணொளிக் காட்சி ஊடகங்களில் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அக்காணொளியில் குழந்தை வாகனத்தில் மோதப்படுவது முதல் மற்றையவர்கள் அலட்சியமாக விலகிச் செல்வது வரை அனைத்தும் பதிவாகியிருந்தது. மேலும் சீனர்களில் மனிதாபிமானம் தொடர்பிலும் கேள்விகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அச்சம்பவம் தொடர்பில் விசார…
-
- 9 replies
- 1.1k views
-
-
உலக ஒற்றுமையின் சின்னம் ஐ.நா தினம் இன்றாகும். ஐ.நா தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 24ல் கொண்டாடப்படுகிறது. ஐ.நா அமைப்பின் நோக்கம், சாதனை, எதிர்காலத் திட்டம் போன்றவற்றை மக்களிடம் சேர்ப்பது இத்திட்டத்தின் நோக்கம். முதல் உலகப் போர் நடந்த போது அது போல் மீண்டும் ஒரு பயங்கரம் நடக்கக் கூடாது என உலக நாடுகள் எண்ணின. அதற்காக உலக நாடுகளின் ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்க முயற்சித்தனர். அது தோல்வியில் முடிந்தது. அதன் பின் இரண்டாம் உலகப் போர் ஏற்பட்டு உலகில் பேரழிவை ஏற்படுத்தியது. இனி இன்னொரு போர் உலக நாடுகளிடையே ஏற்பட்டுவிடக் கூடாது. உலகில் அமைதியும் சமநிலையும் ஏற்பட வேண்டும் என்பதற்காக 1945 ஏப்ரல் 25 மற்றும் ஜூன் 26ல் சான்பிரான்சிஸ்கோ நகரில் உலக நாடுகளின் கூட்டம் நடந்தது. அ…
-
- 1 reply
- 1k views
-
-
விக்கிலீக்ஸ் இணையதளத்தை முடக்க சிலர் சதி செய்வதாக கூறியுள்ள அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் தற்காலிகாக தனது தளத்தின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் கூறியுள்ளார். அமெரிக்க தூதரகங்களுக்கும், அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திற்கும் இடையிலான தகவல் பரிமாற்ற விவரங்களை வெளியிட்டு உலகையே உலுக்கிய இணையதளம் விக்கிலீக்ஸ். இதன் தலைவர் ஜூலியன் அசாஞ்ச். விக்கிலீக்ஸ் வெளியிட்ட பல பரபரப்புத் தகவல்களால் அமெரிக்காவில் மட்டுமல்லாமல் பல உலக நாடுகளிலும் பெரும் புயல் கிளம்பியது. இந்தநிலையில் தனது தளத்தின் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று லண்டனில் செய்தியாளர்களிடம் கூறுகையில், எங்களுக்கு எதிராக …
-
- 0 replies
- 369 views
-
-
அங்காரா: துருக்கியின் கிழக்கு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 7.3 ஆகபதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் எர்கிஸ் நகரம் மற்றும் வான் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எர்கிஸ் நகரில் 80 கட்டடங்கள் இடிந்துவிழுந்தன. வான் நகரில் 10 கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இந்த பூகம்பத்திற்கு எர்கிஸ் நகரில் 45 பேரும், வான் நகரில் 15 பேரும் பலியாகியுள்ளனர். இந்த பூகம்பத்தில் 1000ம் பேர் வரை பலியாகியிருக்கலாம் என அந்நாட்டு புவியியல் தலைவர் மதிப்பிட்டுள்ளார். http://www.dinamalar.com/News_Detail.asp?Id=337245
-
- 1 reply
- 569 views
-
-
# அரக்கோணம் நகராட்சியில் திமுக வேட்பாளர் மனோகரன் முன்னிலை # கடலூர் நகராட்சியில் அதிமுக வேட்பாளர் சுப்பிரமணியன் முன்னிலை # கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் முன்னிலை வேதாரண்யம் நகாட்சியில் திமுக வேட்பாளர் முத்துலட்சுமி முன்னிலை கிருஷ்ணகிரி நகராட்சியில் அதிமுக வேட்பாளர் தங்கமுத்து முன்னிலை # மேட்டூர் நகராட்சியில் திமுக வேட்பாளர் கோபால் முன்னிலை # பத்மநாபபுரம் நகராட்சியில் அதிமுக வேட்பாளர் சத்யாதேவி முன்னிலை
-
- 8 replies
- 3.3k views
-
-
ஆட்சி மாற்றத்துக்குப் பின் டுனீஷியாவில் தேர்தல் மத்திய கிழக்கு நாடுகளில் மக்கள் எழுச்சி ஏற்பட்ட பின்னர் அந்நாடுகளில் ஒன்றில் முதன் முதலாக நடக்கக்கூடிய தேர்தலாக டுனீஷியாவில் ஞாயிறு அன்று நடக்கும் தேர்தல்களில்மக்கள் வாக்களித்து வருகின்றனர். அரபு வசந்தகாலம் என்று சொல்லப்படுகின்ற மக்கள் எழுச்சி டுனீஷியாவில்தான் ஆரம்பித்திருந்தது. எல்லோருடைய எதிர்பார்ப்புகளையும் விஞ்சும் வகையில் மிக அதிக எண்ணிக்கையில் மக்கள் வாக்களிப்பதாக தேர்தல் அதிகாரி ஒருவர் கூறினார். நாட்டிற்கு புதிய அரசியல் சாசனம் ஒன்றை வகுப்பதற்கான மன்றத்தை இத்தேர்தல் மூலம் மக்கள் தேர்ந்தெடுக்கவுள்ளனர். அந்த அரசியல் சாசன மன்றம் புதிய இடைக்கால அதிபர் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும். அந்த அதிபர் நாட்ட…
-
- 1 reply
- 663 views
-
-
அங்காரா: துருக்கியின் கிழக்கு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு ஐநூறு முதல் ஆயிரம் பேர் வரை பலியாகியுள்ளதாக அந்நாட்டு புவியியல் துறை தலைவர் கூறியுள்ளார். துருக்கியின் கிழக்கு பகுதியில் உள்ள வான் என்ற மிகப்பெரிய நகரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 7.3 ஆக பதிவானது. இதில் பல கட்டடங்கள் சேதமடைந்தன. நிலநடுக்கத்தில் காயமடைந்தர்களில் பலர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது. மக்கள் பீதியில் தெருக்களில் குவிந்தனர். எரிக்ஸ் மாவட்ட மேயர் ஜூல்பிகர் அரபோகு கூறுகையில், "நிறைய கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன; பலர் பலியாகியுள்ளனர். எனினும், எத்தன…
-
- 1 reply
- 413 views
-
-
சவூதியின் முடிக்குரிய இளவரசர் சுல்தான் பென் அப்துல் அசீஸ் காலமானதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. இளவரசர் தனது 86வது வயதில் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு சென்றிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுல்தான் பென் அப்துல் அசீஸ் சவூதியின் பாதுகாப்பு அமைச்சராகவும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.c.../18910/57/.aspx
-
- 0 replies
- 627 views
-
-
நேற்று டெல்லியில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இடையில் 30 நிமிடங்கள் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. முன்னதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் தீஹார் சிறையிலிருக்கும் மகள் கனிமொழியை சந்தித்த கருணாநிதி மாலை 7.30 மணியாவில் பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்தார். இதன் போது ராஜாத்தி அம்மாள், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோரும் மத்திய அமைச்சர் நாராயண சாமியும் உடனிருந்தனர். இச்சந்திப்பின் போது கூடங்குளம் அணு மின் திட்டத்தை, மீனவர்களின் அச்சத்தை போக்கிய பிறகே தொடங்க வேண்டுமென கருணாநிதி வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று கருணாநிதி டெல்லியிருந்து சென்னை திரும்புகிறார். http://www.seithy.co...…
-
- 3 replies
- 1.1k views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 23, அக்டோபர் 2011 (10:54 IST) லிபியா இன்று சுதந்திர நாடாக அறிவிப்பு லிபியா அதிபர் கடாபி கடந்த 20ந் தேதி புரட்சி படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதை தொடர்ந்து கடாபி ஆதரவு ராணுவத்துக்கும், புரட்சி படையினருக்கும் இடையே கடந்த 8 மாதங்களாக நடந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. லிபியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக இன்று அறிவிக்கப்படுகிறது. சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டதும் அங்கு புதிய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்படுகிறது. மேலும், புதிய தலைவரும் அறிவிக்கப்பட உள்ளார். இந்த தகவலை லிபியா பிரதமர் முகமது ஜிப்ரில் தெரிவித்தார். பிரதமர் பதவியில் இருந்து முகமது ஜிப்ரில் விலகுகிறார். இன்னும் அங்கு 8 மாதத்தில் தேசிய கவுன்சில் தேர்தல் நடக்கிறது. அதில் …
-
- 5 replies
- 915 views
-