Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. தூக்கு தண்டனை கைதிகளான பேரறிவாளன்,சாந்தன்,முருகன், மூவரின் உயிர் காக்க சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் பிரமாண்ட கூட்டம் சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நாம் தமிழர் இயக்கம் சீமான் தலைமையில் நடந்தது. இதில் சீமான்,இயக்குனர் மணிவண்ணன்,பேராசிரியர் தீரன்,தடாசந்திரசேகர் மற்றும் பலர் கலந்துகொண்டு உணர்ச்சி பொங்க பேசினார்கள் கூட்டத்தில் பேசிய அனைவரும் மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும், காங்கிரஸ் கட்சி மற்றும் தினமலர் நாளிதழை விமர்சித்தும் பேசினார்கள். இயக்குனர் மணிவண்ணன் பேசும் போது " நான் இறந்த பின்னர் என்னுடைய உடலை நாம் தமிழர் கட்சி சீமானிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அவர் தான் என்னுடைய இறுதிச் சடங்கை செய்ய …

  2. சட்டசபையில் இன்று போக்குவரத்து துறை மானியத்தின் மீது நடந்த விவாதத்துக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதில் அளித்தார். அப்போது தி.மு.க. ஆட்சியின் போது போக்கு வரத்து துறையில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பல முறைகேடுகளை செய்து இருப்பதாகவும் கூறினார். அதுபற்றிய விவரங்களை புத்தகமாக அச்சடித்து உறுப்பினர்களுக்கு வழங்க போவதாகவும் அறிவித்தார். இதுகுறித்து சபாநாயகர் ஜெயக்குமார் பேசும்போது, இந்த புத்தகங்களை பத்திரிகையாளர்களுக்கும் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். குணசேகரன் (இந்திய. கம்யூ.), இந்த ஊழல் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். அதற்கான அறிவிப்பை முதலமைச்சர் இப்போதே வெளியிட வேண்டும் என்று வலியுறுத்த…

  3. [Wednesday, 2011-09-07 12:42:48] ராஜீவ் காந்தியின் சிலைகளுக்குப் பலத்த பாதுகாப்பு அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள ராஜீவ் காந்தி சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை தூக்கில் போடக் கூடாது என்று பல்வேறு கட்சிகள், அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களது போராட்டம் வரலாறு காணாத வகையில் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து தமிழக அரசு சட்டசபையில் மூவருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று கோரி தீர்மானம் நிறைவேற்றியது. சென்னை உயர்நீதிமன்றமும் இடைக்காலத் …

  4. புதுதில்லி உயநீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு இரண்டு பேர் பலி. 07 செப்டம்பர் 2011 பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த புதுதில்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் ஐந்நாம் நுழைவாயிலில் இன்று காலை 10-17 மணிக்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியார்கள், வழக்கு தொடர்புடையோர் நீதிமன்றத்திற்கு வந்த நிலையில் இந்த குண்டு வெடித்துள்ளது இந்த குண்டு வெடிப்பின் காரணமாக சுமார் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று தெரிகிறது. இந்த குண்டு வெடிப்பில் இரண்டு பேர் மரணித்திருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் இந்த குண்டு வெடிப்பிற்கு எந்த அமைப்பும் இது வரை பொறுப்பேற்க முடியாத நிலையில் மேலும் தகவல்கள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன. சென்ற ஏழாம…

  5. ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா தாக்குதலுக்குள்ளாகுமா? வரும் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் இரட்டைக்கோபுர தாக்குதலின் பத்தாவது வருட நினைவுதினத்தில் அமெரிக்காவின் நியுயோர்க் மற்றும் வாசிங்க்டன் நகரங்கள் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நம்பகரமான தகவல் என்றும் ஆனால் உறுதிப்படுத்த முடியவில்லை எனவும் கூறப்படுகின்றது. மூவர் இந்த தாக்குதலில் ஈடுபடலாம் எனவும் ஒருவர் அமெரிக்க பிரசை எனவும் கூறப்படுகின்றது. இவர்களின் பெயர்கள் பொதுவான பெயர்களாக உள்ளதால் இவர்களை தேடிப்பிடிப்பது கடினமாக உள்ளது என கூறப்படுகின்றது. இந்த தாக்குதல் ஒரு கடத்தப்பட்ட வாகனம் ஒன்றின் ஊடாக நடாத்தப்படலாம் என ஊகிக்கப்படுகின்றது. ஒசாமா பின்லாடனை கொலை செய்த பொழுது அவர் இருந்த வீட்ட…

    • 4 replies
    • 835 views
  6. ரூ.30,000 கோடி செலவில் ஒபாமாவின் வேலை வாய்ப்பு திட்டம்! வாஷிங்டன்: அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரும் ரூ.30 ஆயிரம் கோடி செலவிலான திட்டத்தை அந்நாட்டு அதிபர் பாரக் ஒபாமா இறுதி செய்துள்ளார். அமெரிக்க பொருளாதாரம் மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கியுள்ளது. கடன் தர வரிசையில் சறுக்கல், வேலையின்மை, பொருளாதார பின்னடைவு, சர்வதேச அரசியலில் ஆளுமை குறைந்தது போன்றவற்றால் அமெரிக்க மக்கள் ஒபாமாவின் தலைமை மீது நம்பிக்கை இழந்து வருகிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டம் இப்போது 9 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. இதை குறைக்க வேண்டும் என்று ஒபாமா மிகுந்த பிரயத்தனம் செய்துவருகிறார். அப்படி குறைத்தால் மட்டுமே அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடக்க இருக்கும் அதிபர் தேர்தலில் தா…

    • 4 replies
    • 657 views
  7. பயங்கர குண்டுவெடிப்பால் கலங்கிய டெல்லியை இரவில் நிலநடுக்கம் உலுக்கியது! டெல்லி: டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தால் அதிர்ந்து போயிருந்த டெல்லி மக்களுக்கு இரவில் தாக்கிய நிலநடுக்கம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று நள்ளிரவையொட்டி டெல்லியின் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 4.2 ஆக பதிவாகியது. டெல்லி மட்டுமல்லாமல் அதன் துணை நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி ரோடுகளுக்கும், தெருக்களுக்கும் வந்து நின்றனர். ஹரியானா மாநிலம் சோனீபட்டில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. டெல்லி தவிர காஜியாபாத், நோய்டா, கர்கான் ஆகிய நகரங்களிலும் மக்கள் நிலநடுக்கத்தை…

  8. தமிழக காங்கிரசின் பொறுப்பு தலைவராக இருக்கும் தங்கபாலு “காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளும்” விதமாக தனது விசுவாசிகளான கல்லேரிப்பட்டி செல்வராஜ் என்பவரை சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், எடப்பாடி கோபால் என்பவரை சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் நியமனம் செய்துள்ளார். வாசன் ஆதரவாளர்களான, சேலம் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த முன்னாள் எம்.பி தேவதாஸ், மேற்கு மாவட்ட தலைவராக இருந்த ஆர்.ஆர்.சேகரன் இருவரின் ஆதரவாளர்களும் தங்கபாலுவுக்கு எதிராக பல இடங்களில் போராட்டம் நடத்திவருகிறார்கள். இதற்கிடையில், சேலம் மேற்கு மாவட்ட தலைவர் எடப்பாடி கோபால் தனக்கு கீழுள்ள பதவிகளில் உள்ள வாசன் ஆதரவாலர்களை எல்லாம் தூக்கிவிட்டு தனது விசுவாசிகளுக்கு புது பொறுப்பு கொடுக்க …

  9. புதுடில்லி: காந்தியவாதியான அன்னா ஹசாரே நாளை ( செவ்வாய்க்கிழமை) நடத்தவிருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு வழங்கிய அனுமதியை போலீசார் ரத்து செய்து விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள ஹசாரே குழுவினர் டில்லியில் நாளை அணுக வேண்டிய விஷயங்கள் குறித்து அவசரமாக ஆலோசித்து வருகின்றனர். அனுமதியை மீறும் பட்சத்தில் டில்லியில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை எற்படும். இதனையடுத்து டில்லி நகர் முழுவதும் போலீசார் உஷாராக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அரசு நினைத்தது போல் வரைவு மச‌ோதா : ஊழல் குற்றம் புரிவோரை தண்டிக்கும் லோக்பால் மசோதாவில் மாற்றம் செய்ய வலியுறுத்தி கடந்த ஏப்ரல் மாதம் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் இருந்தது நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிரான அலையை ஏற்படுத்தியது. இதனையட…

    • 36 replies
    • 2.1k views
  10. ரஷ்ய விமான விபத்தில் 43 பேர் பலி ரஷ்யாவில் இன்று இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 43 பேர் பலியாகியுள்ளனர். மொஸ்கோவிலிருந்து 250 கிலோமீற்றர் தொலைவிலுள்ள யாரோஸ்லோவ்ல் நகரிலுள்ள விமான நிலையத்திலிருந்து இவ்விமானம் புறப்பட்டு சிறிதுநேரத்தில் விபத்துக்குள்ளானதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். யாரோஸ்லாவ் ஐஸ் ஹொக்கி அணியின் அங்கத்தவர்களை ஏற்றிச்சென்ற விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது. இவர்கள் இப்பருவகாலத்தின் முதல் போட்டிக்காக பெலாரஸுக்கு சென்றுகொண்டிருந்தாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இறந்தவர்களில் எத்தனை பேர் இவ்விளையாட்டு அணியின் அங்கத்தவர்கள் என்ற விபரம் தெரியவில்லை. விமானத்தின் சிதைவுகள் வொல்கா நதியில் கண்டுபிடிக்கப்பட்டன. இச்சம்பவத்தில் மேலும் …

  11. 'தனக்கு அதிகாரம் இல்லை என்று யாரோ சொன் னதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு காலம் கடத்தாமல்... தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ள மூவரையும் காப்பாற்ற ஜெயலலிதா முன்வர வேண்டும்!'' என முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி கூறி இருக்கிறார்! இவ்வாறு கூறியதோடு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தியாகு, புலவர் கலியபெருமாள் ஆகியோ ரின் தண்டனைகளை தான் குறைத்ததுபற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். யார் யாருக்கு இவர் தூக்குத் தண்டனைகளைக் குறைத்தார் என்பது இப்போது கேள்வி அல்ல. 'சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கு தூக்குத் தண்டனையைக் குறைக்க, இவர் அதிகாரத்தில் இருந்தபோது எதுவும் செய்யவில்லையே ஏன்?’ என்பதுதான் இப்போதைய கேள்வி. வழக்கம்போல இந்தக் கேள்விக்குப் பதில் கூறாமல் திசை திருப்பும் முயற…

  12. பாதுகாப்பாக சென்றார் கடாபி? இரண்டு வாகன தொகுதிகள், முதலாவது தொகுதியில் கூடுதலான வாகனங்கள் சென்றன. இவற்றில் அதிகளவில் பணமும் தங்கமும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இவர்களை நேட்டோ படையினர் தெரிந்தே செல்லவிட்டனர் எனக்கூறப்படுகின்றது. மேலும், இவர்களுக்கு நைஜர் நாட்டு இராணுவமும் பாதுகாப்பு வழங்கியுள்ளது. அதேவேளை கடாபி குடும்பத்தினர்கள் இன்னொரு ஆபிரிக்க நாடான புர்கினோபாசோவுக்கு செல்லலாம் எனவும் கூறப்படுகின்றது. ஆனால் இவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது உலகசட்டத்திற்கு முரணானது என சொல்லப்படுகின்றது. Large Libyan armoured convoy arrives in Niger About 250 vehicles enter country, as Libyan fighters hol…

  13. சோனியாவை பிரதமராக்க ஆசைப்பட்ட மு.கருணாநிதி கடந்த 2009ம் ஆண்டில், மன்மோகன் சிங்கிற்குப் பதிலாக, சோனியா பிரதமராக வேண்டும் என, தி.மு.க., விரும்பியது’ என்று, விக்கிலீக்ஸ் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2008 ஜூனில், அமெரிக்க துணைத் தூதரக அதிகாரி டென்னிஸ் டி.ஹூப்பருடன் பேசிய, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமான சிவபிரகாசம் என்பவர், “காங்கிரஸ் கட்சியின் உள்விவகாரத்தில் தி.மு.க., ஒரு போதும் தலையிடாது. இருந்தாலும், 2009ம் ஆண்டில் மன்மோகன் சிங்கை விட, சோனியாவே பிரதமராக வேண்டும் என்பதே தி.மு.க.,வின் விருப்பம். சோனியா பிரதமராக வேண்டும் என்பதையே தமிழக மக்களும் விரும்புகின்றனர். அதே நேரத்தில், …

  14. இந்தியாவின் புதிய தகவல்: விக்கிலீக்ஸில் அம்பலம் _ 2011.09.05 12.06.19 Share மும்பைத் தாக்குதல் சம்பவத்தின்போது பிரதான கர்த்தாவாக செயற்பட்ட டேவிட்கோல்மென் ஹெட்லியை நாடு கடத்தி கொண்டு வருவதற்கு இந்தியா ஆர்வம் காட்டவில்லை என இந்தியாவுக்கான அமெரிக்க தூதரிடம், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் கூறியதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. மும்பையில் 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி பயங்கரவாதத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பிரதானமாக செயல்பட்டதாக லஷ்கர் - இ - தொய்பா அமைப்பைச் சேர்ந்த டேவிட்கோல்மென் ஹெட்லி மீது அமெரிக்க நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. 2009 ஆம் …

  15. சர்வதேச சட்டத்தை மதிக்காத சீனாவுடன் கைகோர்க்கும் சிறீலங்கா சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெற முடியுமா..? கடாபியின் படைகளுக்கு ஆயுதங்களைக் கொடுப்பது சர்வதேச குற்றச் செயல்.. கடாபியின் விமானங்கள் சர்வதேச வான் பரப்பில் பறந்தால் சுட்டு வீழ்த்தப்படும்.. சொந்த மக்களையே கொன்ற கடாபி சர்வதேச போர்க்குற்ற நீதிமன்று கொண்டுவரப்பட வேண்டிய குற்றவாளி.. அவருடன் வர்த்தகம் செய்வது குற்றச் செயல்.. அவருடைய சொத்துக்கள் யாவும் உலக நாடுகளில் உறைய வைக்கப்பட்டுள்ளன.. ஐ.நாவில் கடாபிக்கு எதிராக இயற்றப்பட்ட தீர்மானத்தின் முக்கிய விடயங்கள் மேலே சொல்லப்பட்டுள்ளன.. உண்மை நிலை இப்படியிருக்க.. ஐ.நா தடைகளுக்கு முரணாக சீனா கடாபியின் படைகளுக்கு ஆயுதங்களையும் வெடி மருந்துகளையு…

  16. சோமாலியாவில் எதிர்வரும் மாதங்களில் ஏற்படக்கூடிய வறட்சியான காலநிலை மற்றும் பசி பட்டினியால் சுமார் ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் மக்கள் மரணமடையக்கூடும் என ஐ.நா எச்சரித்துள்ளது. கிழக்கு ஆபிரிகாவில் 60 வருட காலப்பகுதியில் ஏற்பட்ட வறட்சியான காலநிலை மற்றும் பட்டினியால் பல்லாயிரக் கணக்கான மக்கள் இறந்ததாகவும் ஜ.நா தெரிவித்துள்ளது. இஸ்லாமிய கட்டுப்பாட்டில் உள்ள தென் சோமாலியா பகுதியில் பெரும் பஞ்சம் ஏற்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சுமார் 12 மில்லியன் மக்களுக்கு உணவு தேவை என ஜ.நா சுட்டிக்காட்டியுள்ளது. சோமாலியாவில் சுமார் 4 மில்லியன் மக்கள் பெரும் நெருக்கடி நிலைக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரியவருகிறது. _ http://www.virakesari.lk/news/…

  17. ராய்ப்பூர்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப.சிதம்பரம் ஆகியோர் நக்சலைட்டுகள் தாக்குதல் பட்டியலில் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சத்தீஸ்கர் மாநிலம், தம்தாரி மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியில் நக்சலைட்டுகளைத் தேடும் பணியில் மத்திய போலீஸ் படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அடர்ந்த காட்டுக்குள் ஒரு முகாம் இருப்பதை கண்டுபிடித்தனர். ஆனால் அந்த முகாமில் யாருமே இல்லை. அங்கு சோதனை நடத்தியதில் ஏராளமான ஆயுதங்கள், வெடிகுண்டுகள் கிடைத்தன. மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, சத்தீஸ்கர் முதல்வர் ராமன்சிங், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரது புகைப்படங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. http://thatstam…

  18. சென்னை, செப். 5- சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கிலிருந்து நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு ஏற்கனவே ஜெயலலிதா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும் பெங்களூர் நீதிமன்றம் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. இதன் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. இதில் குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜரவாதிலிருந்து விலக்கு அளிக்குமாறு கூறுவது வழக்கை தாமதப்படுத்தும் செயல். விலக்கு அளிக்க எந்த முகாந்திரமும் இல்லை. எனவே நேரில் ஆஜ…

  19. Started by அறிவிலி,

    ராஜிவ் கொலையும் சொல்ல மறந்த கதையும் சென்னை:பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனை தேதி நிர்ணயிக்கப்பட்டது தான் தாமதம்; இனப்படுகொலைக்கு எதிரான போராட்ட சீசன் முடிந்த களைப்பில் இருந்தவர்கள் எல்லாம் கொதித்து எழுந்து, மரண தண்டனைக்கு எதிராக களமிறங்கிவிட்டனர். காதலில் தோல்வியுற்ற செங்கொடிகள் தீக்குளிக்கின்றனர்; இலங்கைப் பிரச்னையை குத்தகைக்கு எடுத்துள்ள வைகோ, நெடுமாறன் மற்றும் சீமான்கள் அனல் கக்குகின்றனர்.இவர்கள் அத்தனை பேரும், இத்தனை நாளாய் எங்கிருந்தனர்? முருகனும், சாந்தனும், பேரறிவாளனும் இன்று தான் கொலையாளிகள். சம்பவம் நடந்தபோது அவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டுமே. அன்று ஏன் இவர்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தப்படவில்லை.இன்று ஐகோர்ட் வழக்கறிஞர்கள…

  20. தமிழகத்தை விட்டுச் செல்லும் கார் நிறுவனங்கள் கார் உற்பத்தியில் உலக அளவில் கோலோச்சும் பெரும் நிறுவனங்கள் தமது புதிய ஆலையை அமைக்க குஜராத் மாநிலத்தை தேர்ந்தெடுத்துள்ளமை தமிழக தொழில் துறை வட்டாரங்களில் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நகரைச் சுற்றி ஏராளமான கார் தொழிற்சாலைகளும் கார்களின் உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் தொழற்சாலைகளும் இருப்பதால் அமெரிக்காவின் கார் தொழிற்சாலைக்குப் பேர் போன டேட்ராய்ட் என்ற பகுதியுடன் சென்னை ஒப்பிடப்படுகிறது. சென்னைக்கு அருகே பல ஆண்டுகளாக ஆலை வைத்து கார் தயாரிக்கும் ஃபோர்ட் நிறுவனம் குஜராத் மாநிலத்தில் புதிய ஆலையை நிறுவும் திட்டத்தை சமீபத்தில் அறிவித்தது. போஜோ நிறுவனமும் போனது தற்போது ஐரோப்பாவின் இராண்டாவது…

  21. சென்னை: திமுக தலைவர் கருணாநிதி தனது மகள் கனிமொழி அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை. ஆனால் துணைவி ராசாத்தி அம்மாளின் கட்டாயத்தால்தான் கனிமொழியை அரசியலுக்குக் கொண்டு வந்தார் கருணாநிதி என்று முன்னாள் அமெரிக்கத் துணைத் தூதர் டென்னிஸ் ஹாப்பர், அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு அனுப்பிய கேபிளில் கூறப்பட்டிருப்பதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்தத் தகவலில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த 2008ம் ஆண்டு ஜூன் மாதம், சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் துணைத் தூதராக இருந்த டென்னிஸ் ஹாப்பர் அனுப்பிய கேபிளில், மூத்த காங்கிரஸ் உறுப்பினர் சிவப்பிரகாசம் என்பவர் தன்னிடம் பேசியது குறித்த தகவல்களை வெளியுறவுத்துறைக்கு அனுப்பியுள்ளார். அதில் பிரதமர் பதவிக்கு மன்மோகன…

  22. இத்தாலியின் சிறிய நகரமொன்று சுதந்திரப் பிரகடனம் செய்துள்ளது : 04 செப்டம்பர் 2011 இத்தாலியின் சிறிய நகரமொன்று சுதந்திரப் பிரகடனம் செய்துள்ளது. இத்தாலியின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பிலிட்டீனோ என்ற நகரமே இவ்வாறு சுதந்திரப் பிரகடனம் செய்துள்ளது. குறித்த நகரம் தனியான நாணய தாள்களை அச்சிட்டு புழக்கத்தில் விட்டுள்ளது. ரோம் நகரிற்கு கிழக்கே 100 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள பிலிட்டீனோ நகரம் பிரதமர் சில்வியோ பார்லூஸ்கோனியின் செலவு குறைப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் சுதந்திரப் பிரகடனம் செய்துள்ளது. குறித்த நகரத்தில் மொத்தமாக 550 பேர் மட்டுமே வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. உள்நிர்வாக செலவுகளை குறைக்கும் நோக்கில் சிறிய நகரங்…

  23. இந்திய பிரதமர், அமைச்சர்களின் சொத்து விபரங்கள் வெளியிடப்பட்டன இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் அவரின் அமைச்சர்களும் தமது சொத்து விபரங்களை இன்று சனிக்கிழமை வெளியிட்டனர். இந்திய பிரதமரின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பிரதமர் மன்மோகன் சிங், 32 அமைச்சரவை அமைச்சர்கள், 7 அமைச்சர்கள், 32 துணை அமைச்சர்களின் சொத்து விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவர்களில் நகர அபிவிருத்தி அமைச்சர் கமல்நாத் தான் மிகவும் செல்வந்தராக விளங்குகிறார். அவரின்சொத்து மதிப்பு 263 கோடி இந்திய ரூபாவாகும். இந்திய பிரதமர் மன்மோன் சிங்கின் சொத்து மதிப்பு 5 கோடி (இந்திய) ரூபா ஆகும். 1.8 கோடி ரூபா பெறுமதியான கட்டிடங்கள் அவருக்கு உள்ளன.சண்டிகரிலுள்ள 90 லட்சம் பெறுமதியான வீடும், டில்லி வாந்த் …

    • 0 replies
    • 868 views
  24. By Nita Bhalla, Reuters NEW DELHI (Reuters) - Surging flood waters in northern and eastern India have affected millions of people, forcing many from their homes as swollen rivers wash away roads and make rescue work difficult, government and aid officials said on Friday. Aid workers said 5.2 million people are now affected, double the figure from 10 days ago, as tail-end seasonal monsoon rains sweep the heavily-populated states of Uttar Pradesh, Bihar and Assam where 158 people have died in flooding incidents in the past three months. "The number of people affected by the floods has more than doubled in the last ten days. We have sent teams to do more accur…

  25. சென்னை, செப். 2- முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்துக்கு பேசிய நபரை போலீசார் தேடி வருகிறார்கள். சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் அமைப்பின் தலைமை அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்துக்கு அடிக்கடி விஷமிகள் யாராவது போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கிறார்கள். நேற்று மாலை 3.12 மணியளவில் இந்த அலுவலகத்துக்கு சிறுவன் குரலில் மர்ம நபர் ஒருவர் பேசினார். "ஜெயலலிதா அம்மாவுக்கும், அவரது அலுவலகத்துக்கும், டைம் செட் பண்ணியாச்சி. சொல்வதை சொல்லிவிட்டேன். பார்த்துக்கொள்ளுங்கள்" என்று பேசி விட்டு அந்த மர்ம நபர் போனை வைத்து விட்டார். இதுதொடர்பாக திருவல்லிக்கேணி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.