உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
கனிமொழியைக்கண்டு காந்திஅழகிரி கண்ணீர் ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருக்கும் கனிமொழியை மத்திய அமைச்சர் அழகிரியின் மனைவி காந்தி இன்று டெல்லி நீதிமன்றத்தில் சந்தித்தார். இன்று காலை டெல்லி வந்த காந்தி, தனது மகன் துரை தயாநிதி உள்ளிட்ட சிலருடன் பாட்டியாலா வளாகத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றத்துக்கு வந்தார். காந்தி நீதிமன்ற அறையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தவுடன் கனிமொழி நேராக அவரிடம் சென்றார். இருவரும் தங்கள் உணர்வுகளைப் பரிமாறிக் கொண்டனர். ஆனால் சிறிதுநேரத்தில் காந்தி அழ ஆரம்பித்துவிட்டார். எனினும் கனிமொழி உணர்வுகளை கட்டுப்படுத்தியவராக காந்தியிடம் பேசினார். இருவரும் நீதிமன்ற பார்வையாளர் பகுதிக்கு சென்றனர். அங்க…
-
- 1 reply
- 899 views
-
-
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பிரிட்டன், அயர்லாந்து, பிரான்ஸ் மற்றும் போலந்து ஆகிய நாடுகளுக்கு ஒரு வாரகால சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் அயர்லாந்திற்கு செல்லும் ஒபாமா, அங்கிருந்து இங்கிலாந்து சென்று, 3 நாட்கள் அங்கு முக்கிய சந்திப்புக்களில் கலந்து கொள்கிறார். பிரிட்டிஸ் பிரதமர் டேவிட் கமரன் உட்பட, பிரிட்டிஷ் மகாராணியையும் ஒபாமா சந்திக்கவுள்ளார். அங்கிருந்து பிரான்ஸ் பயணமாகும் அவர், பிரான்சில் இடம்பெறவுள்ள ஜி-8 எனும், உலகின் பலமிக்க எட்டு நாட்டுத் தலைமைகளின் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள ஒபாமா, பின்னர் போலந்து ஊடாக அமெரிக்கா திரும்புவார். அண்மையில் அல்கைதா அமைப…
-
- 3 replies
- 590 views
-
-
. பாக். கடற்படைத் தளத்தில் பயங்கர தாக்குதல் - 10 பேர் பலி-சண்டை நீடிக்கிறது கராச்சி: கராச்சியில் உள்ள பாகிஸ்தான் கடற்படைத் தளத்தில் புகுந்துள்ள தலிபான் தீவிரவாதிகள் பெரும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். 2 விமானங்களை அவர்கள் குண்டு வைத்துத் தகர்த்து விட்டனர். 12 மணி நேரமாக நடந்து வரும் சண்டையில் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர். கராச்சியில் பாகிஸ்தான் கடற்படையின் பிஎன்எஸ் மேஹ்ரான் என்ற கடற்படைத் தளம் உள்ளது. இங்கு நேற்று இரவு பயங்கர ஆயுதங்களுடன் பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகள் 12 முதல் 15 பேர் வரை புகுந்தனர். அருகில் உள்ள விமானப்படை அருங்காட்சியகம் வழியாக இவர்கள் கடற்படைத் தளத்துக்குள் புகுந்து விட்டனர். உள்ளே நுழைந்த அவர்கள் அங்கிருந்த 2 விமானங்களை அவர்க…
-
- 1 reply
- 662 views
-
-
தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மரியம் பிச்சை சாலை விபத்தில் மரணம் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவியேற்றுள்ள மரியம் பிச்சை, இன்று காலை திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருடன் காரில் வந்த விளையாட்டுத்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி காயமடைந்தார். சமீபத்தில் பதவியேற்ற முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பொறுப்பேற்றவர் என்.மரியம் பிச்சை. திருச்சி மேற்குத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நேருவை வீழ்த்தியதால் இவரை பதவி தேடி வந்தது. இன்று எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழா சட்டசபையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக மரியம் பிச்சை,திருச்சியிலிருந்து சென்னை கிளம்பினார…
-
- 3 replies
- 1.3k views
-
-
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பரான ஹஸன் அலியை தோற்கடித்தவரும், ஈழ நண்பருமான பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கு மனிதம் பாராட்டு பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் அன்மையில் மனித நேய மக்கள் கட்சி சார்பாக இராமநாதபுரம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய இந்திய நண்பரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரான ஹஸன் அலியின் பணபலம், அதிகார பலம், ஆள் பலம் என அனைத்தையும் மீறி தமிழக சட்ட மன்ற தேர்தலில் 15,000 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியுற செய்து, உலக தமிழர்களின் பாராட்டை பெற்றார். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் ஈழ பிரச்சனையில் எப்போதும் கரிசனம் கொண்டிருந்து வருபவர். மனிதம் அமைப்பின் நெடுங்க…
-
- 1 reply
- 1.2k views
-
-
கனிமொழி கைதும் அரசியல் வெளிச்சமும் - குட்டி ரேவதி கனிமொழி கைது செய்யப்பட்டது, அவர் இழைத்த குற்றத்திற்கானதாக ஒரு புறம் இருந்தாலும், எனக்கு அதனுடன் பிணைந்த வேறு பல விஷய முடிச்சுகளையும் உடன் இழுத்து வருகிறது. அரசியல் நோக்கிய நகர்வைப் பெண்கள் எளிதாக எடுத்து வைக்கமுடிவதில்லை. குடும்பம், தான் சார்ந்துள்ள சமூகம் போன்ற வெளிகளைத் தாண்டி, அல்லது அந்த வெளிகளைத் தனக்கான அளவில் சமாதானப்படுத்திவிட்டு, நிறைவு பெறச் செய்து விட்டுத்தான் அரசியல் என்ற ஆண்களுக்கு மட்டுமே என இருந்த வெளியை எட்டிப் பிடிக்க முடிந்தது. இன்று அது, தன் தந்தை, சகோதரர், கணவர் என்று யார் மூலமாகத் தனக்குச் சாத்தியப்பட்டாலும், அது இன்னும் ஆண்களின் வெளியாகவே இருப்பதைத்தான் உணர்த்துகிறது. அந்த இடத்த…
-
- 2 replies
- 726 views
- 1 follower
-
-
வடக்கு மற்றும் தெற்கு சூடானுக்கு இடையில் மீண்டும் மோதல்கள் ஆரம்பித்துள்ளன. தென்சூடான் படைகளுக்கும் வட சூடான் படைகளுக்குமிடையில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற மோதல்கள் உக்கிரமடைந்துள்ளன. இந்த நிலையில், தென் சூடானின் எல்லைப்பகுதியின் அபே(Abyei) நகரம் -வட சூடானின் படையினரின் கட்டுப்பாட்டினுள் வந்திருப்பதாக கார்ட்டொமினைத் (Khartoum) தளமாகக் கொண்டு இயங்கும் சூடான் தொலைக்காட்சி அறிவித்திருக்கிறது. வடக்கு மற்றும் தெற்கு சூடானுக்கு இடையில் மீண்டும் மோதல்கள் ஆரம்பித்திருப்பதை ஐக்கிய நாடுகள் அமைப்பும் உறுதி செய்திருகிறது. எண்ணெய்வளச் சிறப்பு மிக்க இந்தப் பிரதேசம் மீண்டுமொரு போர் ஆரம்பமாவதற்கான தொடக்கப் புள்ளியாக அமைந்துவிடுவதற்கான சாத்தியம் தென்படுவதாக எச்சரித்…
-
- 1 reply
- 543 views
-
-
உடுக்கை இழந்த கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சவப்பெட்டி மீது இன்னொரு ஆணி அடித்தாகி விட்டது.. தேர்தல் முடிவுகளால் உள்ளாடைகளுடன் நின்றிருந்த தி.மு.க கனிமொழி கைதுடன் அம்மணமாக்கப்படுள்ளது. இந்த தேர்தலில் 3 ஆவது இடத்தைப் பிடித்த தி.மு.க தொடர்ந்து அதே நிரந்தர இடம் தானா என கருணாநிதியே சிந்திக்க வைக்கும் அளவுக்கு சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன.. பழம்பெருமை வாய்ந்த திராவிடக் கட்சி என (தங்களை தாங்களே) கூறிக்கொள்ளும் திமுகவின் எதிர் காலமே சூனியமாக காணப்படுகிறது. நெருப்பாறுகளைக் கடந்து திமுக முடிசூடும்இ கனிமொழி கைதால் திமுகவிற்கு பாதிப்பில்லை என வீரமணி போன்ற கைப்பிள்ளைகள் காமடி பண்ணினாலும்இ இந்த அதிர்ச்சிகளை கடந்து மீண்டு வர குறைந்தது 2 ஆண்டுகள் …
-
- 0 replies
- 848 views
-
-
பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைவது அவசியம்: மன்மோகன் சிங் பயங்கரவாதத்துக்கும் வன்முறைக்கும் எதிராகப் போராட அனைவரும் ஒருங்கிணைவது அவசியம் என, பிரதமர் மன்மோகன்சிங் பேசினார். ஐமுகூட்டணி அரசு இரண்டாவது முறையாகப் பதவிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு அடைந்ததை ஒட்டி, டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், ஐமுகூ அரசு 7 வருடங்கள் நிலையான ஆட்சியைக் கொடுத்துள்ளது; சமூக முன்னேற்றம், மத நல்லிணக்கம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றைக் கொடுத்துள்ளது. உணவு பெறும் உரிமைச் சட்டம் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்த திட்டம் இடப்பட்டுள்ளது. பயங்கரவாதம் மிகப் பெரிய சவால்; பயங்கரவாதத்துக்கும் வன்முறைக்கும் எதிராகப் போராட அனைவரும் ஒருங்கிணைவது அவசிய…
-
- 0 replies
- 651 views
-
-
ஊழல் புரிந்தவர்கள் தண்டிக்கப் படுவார்கள்: சோனியா ஊழல் புரிந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று சோனியா தெரிவித்தார். ஐமுகூட்டணி அரசு இரண்டாவது முறையாகப் பதவிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு அடைந்ததை ஒட்டி, டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில், 'ஐமுகூட்டணி அரசு: நாட்டு மக்களுக்கான அறிக்கை" என்பதை வெளியிட்டுப் பேசும்போது, சோனியா இதைத் தெரிவித்தார். மேலும் பேசிய சோனியா காந்தி, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் வெறும் பேச்சளவில் மட்டும் இல்லாமல், செயலளவிலும் கண்டிப்புடன் எடுக்கப்படும். நேர்மை, நாணயம், வெளிப்படைத்தன்மை, கடமை, பொறுப்பு இவையே எங்கள் அரசாட்சியின் முக்கிய அம்சங்கள். பொறுப்புள்ள, செயல்தன்மையுள்ள அரசையே மக்கள் விரும்புகிறார்கள் என்பதை …
-
- 2 replies
- 1.1k views
-
-
யேமனுக்கான அமெரிக்க, பிரித்தானிய, ஐ.ஒன்றிய தூதுவர்கள் ஆயுதபாணிகளால் சுற்றிவளைப்பு யேமன் நாட்டிலுள்ள அமெரிக்க பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்கள் யேமன் ஜனாதிபதி அலி அப்துல்லா சலாஹ்வுக்கு விசுவாசமான ஆயுதபாணிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யேமன் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான மோதல் தொடர்பாக மத்தியஸ்தம் வகிப்பது குறித்து யேமன் தலைநகர் சனாவிலுள்ள எமிரேட்ஸ் தூதரகத்தில் இத்தூதுவர்கள் கலந்துரையாடி வரும் நிலையில் இம்முற்றை இடம்பெற்றுள்ளது. வளைகுடா கூட்டுறவுப் பேரவையின்தலைவர் அப்துல் லத்திவ் அல் - ஸயானியும் முற்றுகையிடப்பட்டுள்ளவர்களில் ஒருவராவார். வளைகுடா நாடுகளின் மத்தியஸ்தத்துடனான ஒப்பந்தமொன்றில் யேமன் …
-
- 2 replies
- 499 views
-
-
கனிமொழி விவகாரத்தில் சி.பி.ஐ.,க்கு கிடைத்த ஆதாரம் சிக்க வைத்த “செக்!’: கனிமொழி விவகாரத்தில் சி.பி.ஐ.,க்கு கிடைத்த ஆதாரம் ஸ்பெக்ட்ரம்’ ஊழல் விவகாரத்தில், கனிமொழிக்குத் தொடர்பு உண்டு என்பதை ஆணித் தரமாக நிரூபிக்க, கலைஞர் “டிவி’ துவங்க, தனியார் நிறுவனம் மூலம், காசோலை (செக்)வடிவில் வந்த பணம் தான், மிகப் பெரிய ஆதாரமாக சி.பி.ஐ.,க்குக் கிடைத்துள்ளது. ஊழல் விவகாரங்களில் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகள், காசோலை மூலம் நடப்பது மிக அரிதே; பணமே கை மாறும். அப்படி மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகளுக்கான கணக்குகளும், சம்பந்தப்பட்ட நபர்களின் உண்மைப் பெயரில் இருக்காது. பொய்ப் பெயரிலோ, வேறு யாருடைய பெயரிலாவது நடக்கும்.ஆனால், “2ஜி’ ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், 214 கோடி ரூபாய…
-
- 0 replies
- 658 views
-
-
இந்திய தேசிய விருதை தேசத்தாய் பார்வதியம்மாவிற்கு சமர்பித்தார் இயக்குநர் சீனுராமசாமி Sunday, May 22, 2011, 18:27இந்தியா29 viewsAdd a comment கடந்த ஆண்டு வெளியான படங்களில் சிறந்த தமிழ்ப்படமாக தென்மேற்கு பருவக் காற்று திரைப்படம் தேசிய விருதிற்கு தெரிவாகியுள்ளது. இந்திய தேசிய விருது கிடைத்ததையடுத்து கருத்துத் தெரிவித்த அதன் இயக்குநர் சீனுராமசாமி தமிழர்களின் வாழ்வுக்கு கிடைத்த விருதெனக் குறிப்பிட்டார். அத்துடன் இவ் உயரிய விருதை என் அம்மாவிற்கும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பார்வதி அம்மாளுக்கும் சமர்பணம் என தெரிவித்துள்ளார். இந்தியளவில் தயாராகி வெளிவரும் திரைப்படங்களில் சிறந்தவற்றை தெரிவு செய்து அதனடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் விருதுகளை வழங்கி கௌரவிக்கப்படுகின்றன. இந்த…
-
- 1 reply
- 784 views
-
-
ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா திரும்பிய திக்கெல்லாம் ஊழல், எல்லைக்கு அருகே நடந்த இனப்பேரழிவை கண்டு தடுக்காமல் விட்டது என்று ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள், குளறுபடிகளுக்கு மத்தியில் 2 ஆண்டுகளை முடித்துள்ளது 2வது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. நாடு சுதந்திரமடைந்த இத்தனை காலத்தில் இதுவரை இப்படி ஒரு ஊழல் குவியலை நாட்டு மக்கள் கண்டதில்லை என்று கூறும் அளவுக்கு மக்களை மலைக்க வைத்து விட்டது காங்கிரஸும், அதன் கூட்டணிக் கட்சிகள் சிலவும். வரலாறு காணாத ஊழல், உலகம் கண்டறியாத பெரும் ஊழல் என்றெல்லாம் சொல்லும் அளவுக்கு எதைத் தொட்டாலும் ஊழல், ஊழல், ஊழல்தான். இதுதான் 2வது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மகத்தான சாதனை. ஆதர்ஷ் சொசைட்டி ஊழல், காம…
-
- 1 reply
- 743 views
-
-
பின்லேடன் மீதான தாக்குதலை போன்று மீண்டும் அதிரடி தாக்குதல் நடத்தப்படும்: ஒபாமா உறுதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு அருகே உள்ள அபோதாபாத் நகரில் மே மாதம் 2ஆம் திகதி அல்கொய்தா தீவிரவாதத் தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்கப் படைகள் சுட்டுக் கொன்றனர். பாகிஸ்தான் மண்ணில் இன்னொரு தீவிரவாதத் தலைவரை கண்டறிந்தால் அதே போன்ற தாக்குதலை அமெரிக்கா நடத்தும் என ஜனாதிதி ஒபாமா திட்டவட்டாக தெரிவித்தார். தங்கள் மண்ணில் அத்துமீறிய அமெரிக்கா பின்லேடனை கொன்ற விவகாரம் பாகிஸ்தானுக்கு எரிச்சலை தந்துள்ளது. இதனால் இருநாடுகள் இடையே உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் நிர்வாகத்தை நாங்கள் மதிக்கிறோம். அதே நேரத்தில் பின்லேடனை போன்ற இன்னொரு தீவிரவாதி பதுங்கி இருந்தால் மீண்டும்…
-
- 2 replies
- 692 views
-
-
. மூத்த தமிழ்ப் பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி மாரடைப்பால் மரணம். சென்னை: தமிழகத்தின் மூத்த பத்திரிக்கையாளரும், திராவிட இயக்கத்தின் தனிப்பெரும் சிந்தனையாளருமான எழுத்தாளர் சின்னக்குத்தூசி எனப்படும் தியாகராஜன் இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். 77 வயதான சின்னக்குத்தூசி உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல் நலன் குன்றியிருந்த நிலையிலும் கூட அவர் தொடர்ந்து அரசியல் கட்டுரைகளை எழுதி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சின்னக்குத்தூசியின் உடல் நலம் குறித்த விசாரிக்க திமுக தலைவர் கருணாநிதியும் நேரில் வந்து விசாரித்து விட்டுச் சென்றிருந்தார். இதேபோல பல்வேறு தலைவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையா…
-
- 4 replies
- 770 views
- 1 follower
-
-
| சனிக்கிழமை, 21, மே 2011 (22:34 IST) உ. பி. : புழுதி புயலுக்கு 40 பேர் பலி உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக புழுதிப்புயல் வீசி வருகிறது. சமீபத்தில் இந்த புயலுக்கு திருமண கோஷ்டியினர் உள்பட 22 பேர் பலியானார்கள். இன்றும் மாநிலத்தில் பல்வேறு பகுதியில் வீசிய பயங்கர புழுதிப்புயலில் ஏராளமான இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் மின்வினியோகமும் தடை பட்டுள்ளது. மாநிலத்தில் இன்று வீசிய புழுதிப்புயல் மற்றும் கடுமையான வெப்பத்தால் இன்று ஒரே நாளில் மட்டும் 40-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். இதற்கிடையே இன்னும் 48 மணி நேரத்தில் பயங்கர புழுதிப்புயல் வீசக்கூடும் என்றும் எனவே பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ச…
-
- 0 replies
- 1k views
-
-
ஏசியில் இருந்த கனிமொழி இன்று பாசி படிந்த வடவர் சிறையில் May 21, 2011 ஆயிரம் அக்கா போட இளைஞர் அணி, ரெண்டும் ரெண்டும் பத்து என்றால் அதையும் ஆமோதிக்க கழகத் தொண்டர்கள். பக்கத்தில் நின்று போட்டோ எடுக்க போனால் இரகசியமாக ஒரு லட்சம் கேட்கும் கழக வீரர்கள், திரைப்பட உலகில் சலாமடிப்பவர்களுக்கு விசேட விருது, கனிமொழிக்கு வேண்டியவர் அவரைப் பகைக்கக் கூடாது என்று பல கோமாளி டைரக்டர்களுக்கு மரியாதை என்று கிடந்த தமிழக அரசியலில் இன்று கனிமொழியின் நிலை பலருக்கு பாடமாகியுள்ளது. திஹார் சிறையில் 15 அடிக்கு 10 அடி அளவிலான அறையில் அடைக்கப்பட்டுள்ளார் திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி. சொகுசான, வசதியான வாழ்க்கை வாழ்ந்து வந்த கனிமொழி தற்போது 150 சதுர அடி அளவேயான குறுகலான அறையில் வாழும் நிலைக்க…
-
- 0 replies
- 972 views
-
-
மும்பை தாக்குதல் போல் இந்தியாவில் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமா? பதவி விலக இருக்கும் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திமோதி ஜெ.ரோமர் சிகாகோ சென்று உள்ளார். அங்கு நடந்த வெளியுறவு அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. அதே வேளையில் ஒரு சிறிய வன்முறை சம்பவம் நடந்தால்கூட இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவில் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகும். ஏனெனில் மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதல் போன்று இந்தியாவில் மீண்டும் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதுபோன்று நடந்தால் இரு நாடுகளுக்கும…
-
- 0 replies
- 665 views
-
-
வருவதை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறேன் : கனிமொழி ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருக்கும் கனிமொழிவிசாரணைக்காக இன்று காலை 10 மணிக்கு டெல்லியில் உள்ள பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். நேற்று முழுவதும் இறுக்கமாக தோற்றமளித்த கனிமொழி, இன்று லேசான புன்முறுவலுடன் காணப்பட்டார். நீதிமன்றத்திற்குள் கனிமொழி அவசர அவசரமாக செல்ல முற்பட்டபோது தனியார் தொலைக்காட்சி செய்தியாளரிடம் ஓரிரு நிமிடம் பேசினார். கனிமொழி, ‘’ நான் நன்றாக இருக்கிறேன். வருவதை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறேன்’’ என்று கூறினார். நக்கீரன்.
-
- 0 replies
- 1.9k views
-
-
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலுக்கு 15 நாடுகள் தேர்வு ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உறுப்பினராக இந்தியா உள்பட 15 நாடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே உறுப்பினர்களாக இருந்த 15 நாடுகளின் பதவி காலம் ஜுன் மாதம் முடிவடைகிறது. அந்த இடங்களை நிரப்புவதற்காக தற்போது ஆசிய நாடுகளான இந்தியா, குவைத், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் உள்பட 15 நாடுகளின் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். நக்கீரன்.
-
- 0 replies
- 720 views
-
-
கனிமொழி கைதும் கலைஞரின் சிலப்பதிகாரமும்.. May 20, 2011 கோவலனாய் புலிகள் வன்னியில் வெட்டப்பட சென்னையில் ராசாத்தி அம்மாள் காலில் 2 ஜி சிலம்பு பூட்டிய கலைஞர் கதை.. . . . . . . . . . . கனிமொழி இன்று சிறைச்சாலைக்கு போயிருப்பதற்கு யார் காரணம்.. ? பதில் : அரசியல் இராஜதந்திரி, தென்னகத்தின் சாணாக்கியன் கலைஞர் மு.கருணாநிதிதான் என்று சிறு குழந்தைகூட சொல்லிவிடும். 2 ஜி ஊழல் பணத்தை தனியாக ஒருவர் எண்ணத் தொடங்கினால் எண்ணி முடிப்பதற்குள் அவர் இறந்துவிடுவார். ஊழல் பணம் ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடி எப்படியிருக்கும் என்பதை இப்படி ஓர் உதாரணம் சொல்லி மக்களுக்கு எளிதாக விளங்கப்படுத்தியவர் சீமான். தக்கார் தகவிலார் என்பதெல்லாம் அவரவர் எச்சத்தால் நோக்கப்படும்..…
-
- 0 replies
- 1.2k views
-
-
திஹார் சிறையில் 15 அடிக்கு 10 அடி அளவிலான அறையில் கனிமொழி திஹார் சிறையில் 15 அடிக்கு 10 அடி அளவிலான அறையில் அடைக்கப்பட்டுள்ளார் திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி. சென்னை சிஐடி காலனியில் உள்ள அரண்மனை போன்ற வீட்டில் இருந்த கனிமொழி இவ்வளவு குறுகிய அறையில் அடைக்கப்பட்டிருப்பது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கனிமொழி வருமான வரி செலுத்துபவர் என்பதால் அவருக்கு சிறை அறையில் மின்விசிறி, டிவி, கட்டில் ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன. நேற்று சிபிஐ நீதிபதி ஷைனி, கனிமொழியின் முன்ஜாமீன் மனுவை நிராகரித்து உடனடியாக அவரைக் கைது செய்ய உத்தரவிட்டபோது கனிமொழி அழுது விட்டார். அருகில் இருந்த தனது கணவர் அரவிந்தனின் தோள் மீது சாய்ந்து அவர் அழுதார். இதைப் பார்த்த…
-
- 0 replies
- 732 views
-
-
கருணாநிதியைக் கிண்டலடிக்கும் வைகோ.. காரியம் முடிந்ததும் கதவைச் சாத்திய சோனியா! ஈழம்.. கொடூரமும் கொலையும்! அம்பலமாக்கும் ஐ.நா.அறிக்கை! திடீர் தொடர் 6 சர்வதேச இலக்காகும் புலிகளின் வலைப்பின்னலும் ஐ.நா. அறிக்கையும்! இனிவரும் காலங்களில் இலங்கையில் புதிய தாக்குதல்கள் நடக்காதென உத்தரவாதமளிக்க முடியாது: நெதர்லாந்து நெடியவனை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு அரசாங்கம் கோரிக்கை செய்தி Share Photo கருணாநிதியைக் கிண்டலடிக்கும் வைகோ.. காரியம் முடிந்ததும் கதவைச் சாத்திய சோனியா! [ சனிக்கிழமை, 21 மே 2011, 03:40.05 AM GMT ] ஈழத் தமிழினம் இனப் படுகொலை செய்யப்பட்ட இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை, கடந்த 18-ம் தேதி பேரெழுச்சியுடன் சென்னையில் நினைவுகூர்ந்தனர் தமிழின உணர்வாளர்க…
-
- 0 replies
- 682 views
-
-
T) உங்கள் மனம் என்ன பாடுபடுமோ அந்த மனநிலையில் என் மனம் இருக்கிறது : கலைஞர் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சம்மந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி பெற்றது தொடர்பாக அந்த டி.வி.யின் பங்குதாரரும், தி.மு.க. தலைவர் கலைஞரின் மகளுமான கனிமொழி எம்.பி. மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அவரது ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நேற்று டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் அறிவிக்கப்பட்டது. அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். கனிமொழி ஜாமீன் மனு மீது தீர்ப்பு கூறப்படுவதையொட்டி, அவரது தந்தையும் தி.மு.க. தலைவருமான கலைஞர் நேற்று காலை 11 மணிக்கு கோபாலபுரம் இல்லத்தில் இருந்து, சி.ஐ.டி. காலனி இல்லத்திற்கு சென்றார். …
-
- 0 replies
- 715 views
-