Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. தங்களைத் தாங்களே கொலை செய்யும் குழந்தைகளின் கையில் உடைந்த பொம்மைகளைத் தவிர ஒன்றுமில்லை போர் தின்று நஞ்சுண்ட நிலத்தில் குந்தி இருப்பதற்காய் இன்னும் போர் நடக்கிறது’’ இலங்கை அரசின் இனப்படுகொலைகளுக்கு சாட்சிகளாய் விரிகின்றன தீபச்செல்வனின் வரிகள். கவிஞர் தீபச்செல்வன் கிளிநொச்சி இரத்தினபுரத்தைச் சேர்ந்தவர். போருக்கு தன் சகோதரனை பலிகொடுத்தவர். ஆவணப் படங்கள், கட்டுரைகள், கவிதைகள் என போரின் அவலத்தை தொடர்ச்சியாகப் பதிவு செய்து வருகிறார். ‘இறுதி எச்சரிக்கை’ என்ற பெயரில் சுவரொட்டிகள் மூலம் இலங்கை ராணுவம் இவரை எச்சரித்தது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், தன் உயிரையும் பொருட்படுத்தாது இலங்கை அரசுக்கு எதிராகவும், தமிழ் மக்களுக்காகவும் தொடர்ந்து இயங்கி வருகிறார். அகதிகள் முகாமில் இ…

  2. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் தி.மு.க.வும்,காங்கிரஸும் மறைமுக யுத்தம் நடத்திக் கொண்டிருப்பது ஊரறிந்த ரகசியம்.கனிமொழி கைது, அவருக்கு ஜாமீன்கூட கிடைக்காமல் தாமதமாவது...இவையெல்லாம் அந்த யுத்தத்தை உச்சநிலைக்குக் கொண்டுபோயிருக்கின்றன. ஆனால், தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் பத்திரிகையாளர்கள் இதுபற்றி கேள்வி எழுப்பினாலே, ‘தி.மு.க. காங்கிரஸ் உறவு சுமுகமாக இருக்கிறது. காங்கிரஸ் மீது தி.மு.க.வினருக்கு எந்தக் குமுறலும் இல்லை. அப்படி எந்த தொண்டராவது உங்களிடம் குமுறினாரா?’என கேள்வி எழுப்புபவர்கள் மீதே பாய்ந்து கொண்டிருக்கிறார். உயர்மட்ட செயல்திட்டக் குழுக் கூட்டம் முடிந்த பின்னர் நிருபர்கள் இதைப் பற்றியே கேள்வி கேட்டதால், தி.மு.க.-காங்கிரஸ் உறவைத் துண்டிக்க பத்திரிகைகள் துடிப்பத…

  3. நாடு கடந்த தமிழீழ அரசுக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உயர்நிலைக் குழுவின் கலந்தாய்வுக் கூட்டம், கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நாடு கடந்த தமிழீழ அரசு உலகம் தழுவிய அளவில் மேற்கொண்டு வருகிற பெரும் முயற்சிகளுக்கு ஒத்துழைக்கிற வகையில் விடுதலைச் சிறுத்தைகள் தமிழகம் தழுவிய அளவில் சுமார் 10 இலட்சம் பேரிடம் கையெழுத்துப் பெறும் மாபெரும் இயக்கத்தை மேற்கொள்வதென இக்குழு தீர்மானிக்கிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நக்கீரன்.இணையம்.

  4. தூ‌க்‌கி எ‌றி‌ந்தது ம‌க்க‌ள்தா‌ன்... இள‌ங்கோவனு‌க்கு பு‌ரி‌கிறதா? 'கூடா நட்பு கேடா‌ய் முடியு‌ம் என்று கருணா‌நி‌தி சொல்லவேண்டிய இடத்தில் சொல்லியிருக்க வேண்டும். தைரியம் இருந்தால் வெளிப்படையாக காங்கிரசை விமர்சிக்க வேண்டும். உயர்மட்டக்குழு என்று யாரை பயமுறுத்த நினைக்கிறீர்கள்'' எ‌ன்று செ‌ன்னை‌யி‌ல் நே‌ற்று இளைஞ‌ர் கா‌ங்‌கிர‌ஸ் சா‌ர்‌பி‌ல் ந‌ட‌ந்த உ‌ண்ணா‌விரத‌ப் போரா‌ட்‌‌ட‌த்‌தி‌ல் கல‌ந்து கொ‌ண்டு இ‌ப்படி பே‌சி இரு‌க்‌கிறா‌ர் ஈ.‌வி.கே.எ‌ஸ்.இள‌ங்கோவ‌ன். ‌விடுதலை‌ப்பு‌லிகளு‌க்கு எ‌‌திராக இல‌ங்கை இராணுவ‌ம் நட‌த்‌திய போ‌ர் முழு‌க்க முழு‌க்க ப‌ழிவா‌ங்கு‌ம் நோ‌க்க‌த்துட‌ன் இ‌ந்‌தியா நட‌த்‌தியது எ‌ன்று எ‌ல்லோ‌ம் அ‌றி‌ந்த, தெ‌ரி‌ந்த ‌விஷய‌ம். அ‌ப்படி இரு‌க்கு‌ம…

  5. ஜெயலலிதா ஆட்சியைப் பிடித்தால், புதிய சட்டசபையைப் பூட்டுவார். சமச்சீர்க் கல்வியை நிறுத்துவார். மெட்ரோ ரயிலுக்கு ரெட் சிக்னல் போடுவார். ஐந்து நாட்கள் முட்டை திட்டம் அம்போதான். கலர் டி.வி. காலி. கலைஞர் காப்பீட்டுத் திட்டம் காணாமல் போகும். வீடு கட்டும் திட்டம் வீணாய்ப் போகும்... இவை அனைத்துமே எல்லோரும் கணித்தது. ஆனால், 'இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்’ என்று ஜெயலலிதா தீர்மானம் கொண்டுவருவார் என்று தமிழின உணர்வாளர்கள்கூட நினைக்கவில்லை. கடந்த 40 ஆண்டுகளாக 'தமிழினத் தலைவர்’ என்ற பட்டம் தாங்கிய கருணாநிதி செய்யத் தவறியதை, 'பொடா ராணி’ ஜெயலலிதா செய்து காட்டிவிட்டார். 'இலை மலர்ந்தால் ஈழம் மலரும்’ என்று சீமான், தமிழ் நயத்துக்காகச் சொன்ன போதுகூடப் பலரும் அவர் மீது…

  6. குடும்ப விவகாரம் கொலு மண்டபத்துக்கு வரும் விசித்திரத்தை சரித்திரம் இப்போதுதான் சந்திக்கிறது'' - 'மனோகரா’ படத்துக்காக கருணாநிதியின் பேனா தீட்டிய அதே வசனத்தை, இப்போது கோபாலபுரம், பாட்டியாலா கோர்ட், சி.ஐ.டி. காலனி வீடு, திஹார் ஜெயில் காட்சிகள் நினைவூட்டுகின்றன! ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுப் புகார் படிப்படி யாக முன்னேறி, கனிமொழி வரையில் சிறைக் கதவுகள் திறந்துகொண்டபோது, தி.மு.க. தொண்டன் துடித்தான். அடுத்தபடியாக, தயாநிதி மாறனை மையம்கொண்டு 'தெகல்ஹா' இதழ் கிளப்பிய புயல் வேகம் பெறும் நேரம் இது! படிப்படியாக திசை மாறி மையம் கொள்ளும் இந்தப் புயலை, ஒரே கட்சியின் வெவ்வேறு முகாம்களில் இருப்பவர்கள் பரஸ்பரம் ரசிக்கும் விதத்தை சாதாரண கோஷ்டி அரசியலாகவோ, குடும்ப அரசியலாகவோ மட்டுமே சொல…

  7. இந்திய மக்களின் அடிப்படைக் கோபமான கறுப்புப் பணம் என்கிற பூனை கொஞ்சம் கொஞ்சமாக சாக்கு மூட்டையை விட்டு வெளியே வந்து கொண்டிருக்கிறது. சுவிஸ் வங்கிகளின் கூட்டமைப்பின் அறிக்கையில் உலகின் அத்தனை நாடுகளின் கறுப்புப் பணத்தைச் சேர்த்தாலும், அதை விட அதிகமாக இந்திய கறுப்புப் பணம் அங்கே இரு ப்பதாகச் சொல்கிறது. நம் மக்களின் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்து, விலைவாசியைக் கட்டுப்படுத்தி ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை வழி நடத்திச் செல்வதாகச் சொல்லப்படும் பொருளாதார மாமேதை மன்மோகன் சிங் இதைக் கேட்ட பிறகும் நாற்காலியைத் தேய்த்துக் கொண்டு தினமும் பிரதமர் அலுவலகத்துக்கு டைம் பாஸுக்காக வருகிறார். அதுமட்டுமல்ல, ‘‘சுவிஸ் வங்கியில் இருக்கும் பணத்தைத் திரும்பக் கொண்டு வருவது சாத்தியமி…

  8. ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் நடந்த மாநாட்டில் உரை வீச்சு நடத்தி, ஈழத் தமிழர் பிரச்னையை ‘பளிச்’ என பதிவு செய்துவிட்டு வந்திருக்கிறார் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ. அங்கு நடந்த அனுபவங்கள் மற்றும் தமிழக அரசியல் நிலவரம் பற்றி... ‘‘லண்டனில், 2008-ம் ஆண்டு நடந்த ‘மாவீரர் நினைவு நாள்’ தான் வெளிநாட்டில் நான் கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி. அதன்பின்னர், பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்தும் வெளிநாட்டுக் கூட்டங்களில் பங்கேற்பைத் தவிர்த்து வந்தேன். ஆனால் இம்முறை என்னால் தட்டமுடியவில்லை. அதற்குக் காரணம்... ‘தமிழ் ஈழ மக்களின் அனைத்துலக தலைமைச் செயலகம்’ ஐரோப்பிய யூனியன் நாடுகளில் ஒன்றான பெல்ஜியத்தின் ‘பசுமைக் கட்சி’யிடமிருந்து வந்த அழைப்புதான்.இலங்கைத் தமிழர்களுக்கு எப்போது…

    • 0 replies
    • 515 views
  9. முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈவிகேஎஸ்.இளங்கோவன், கடந்த 14ம் தேதி அன்று ஈரோடு ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் சார்பில், ஈரோடு ரயில் நிலையத்தில், நடைபெற்ற சேலம் கோட்ட சிறப்பு விளக்க கூட்டத்தில் பேசியபோது, ’’காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி இல்லாவிட்டால், கூண்டோடு உள்ளே போகவேண்டிவரும் என்பதால் தான் கூட்டணி தொடரும் என்று பேசிவருகிறார் கலைஞர். காங்கிரஸ் கட்சி எப்போதும் ஊழலுக்கு துணை போகாது. கட்சியின் பெரிய தலைவரான கல்மாடி உழல் செய்துவிட்டதாக தெரிந்த உடனே அவரை கட்சியை விட்டு நீக்கி விட்டனர். கூடா நட்பு உங்களுக்கு லேட்டாகத்தான் தெரிகிறது. அனால் நான் ஒரு மாதம் முன்பே சவகாச தோஷம் பற்றி பேசிவிட்டேன்’’ என்று கூறினார். இது குறித்து இன்று விடுதலைச் சிறுத்தைகள…

  10. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திரசிங் டோனி. ஏற்கனவே புகழின் உச்சத்தில் இருக்கும் அவர் சமீபத்தில் உலக கோப்பையை பெற்றுக் கொடுத்ததால் மேலும் உயர்ந்த நிலைக்கு சென்று விட்டார். கிரிக்கெட் மீது டோனிக்கு உள்ள ஆர்வம்போல விலங்குகள் மீது அவருக்கு அதிகப்படியான ஆர்வம் இருந்தது. அவர் ஏற்கனவே புலிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் மைசூர் விலங்கியல் பூங்காவில் உள்ள புலியை டோனி தத்தெடுத்து உள்ளார். 9 வயதான அகஸ்டியா என்ற புலியை அவர் ஒரு ஆண்டுக்கு தத்தெடுத்துள்ளார். இதை மைசூர் விலங்கியல் பூங்காவின் செயல் இயக்குனர் தெரிவித்தார். புலியை தத்தெடுத்தற்காக டோனி ரூ.1லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். முன்னாள் வேகப்பந்து வீரர…

  11. மு.க.ஸ்டாலினுக்கு முதுகு வலி: கருணாநிதி நலம் விசாரித்தார் சென்னை, ஜூன் 15: முதுகு வலியால் அவதிப்பட்டு வந்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை முன்னாள் முதல்வர் கருணாநிதி நேரில் சென்று நலம் விசாரித்தார். மு.க.ஸ்டாலின் முதுகு வலியால் கடந்த சில நாள்களாக அவதிப்பட்டு வந்தார். மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் வற்புறுத்தி வந்தனர். ஆனால் பேரவைக் கூட்டம் முடியும் வரை சிகிச்சை வேண்டாம் என்று ஸ்டாலின் தவிர்த்து வந்தார். இந்த நிலையில் வலி அதிகமானதையடுத்து, கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். அங்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினார். நலம் விசாரிப்பு…

  12. தயாநிதி மாறன் -- மலையாய் மாறிய (ஸ்பெக்ட்ரம்) அலை மழைக்காலம், வெயில் காலம் என்பது போலவே இப்போது இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது ஸ்பெக்ட்ரம் காலம். திமுகவின் ஆட்சியை காவு வாங்கிய காரணங்களில் ஒன்றாக இருந்த இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பற்றி நாளொரு மேனியும் புதுப்புது வண்ணத்துடன் செய்திகள் வந்து கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு செய்திக்குள்ளும் ஓராயிரம் மர்ம முடிச்சுகள். முதலில் திஹாருக்கு தனியாக போன ராசா துணைக்கு ஒரு கூட்டத்தையே சேர்த்து அழைத்துக் கொண்டார். இப்போது ' மெல்லிய மலர் வாடுகின்றது' என்ற தத்துவத்தை கலைஞர் உதிர்க்கும் அளவிற்கு கனிமொழி பேசும் மொழி திஹார்மொழியாக மாறிப் போயுள்ளது. இன்னும் சில வாரங்களுக்கோ அல்லது மாதங்களுக்கோ உள்ளேயிருக்கும் அத்தனை பேர்களும் இந்த திஹார் …

  13. போரை நிறுத்தக் கோரி உண்ணாவிரத நாடகமாடினார் முன்னாள் முதல்வர் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தாக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி இலங்கையில் போர் நிறுத்தம் கோரி சென்னையில் உண்ணாவிரதம் இருந்ததை நாடகம் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடுமையாக சாடியுள்ளார். சிலர் காலை உணவு சாப்பிட்டு விட்டு கடற்கரை ரோட்டில் உண்ணாவிரதம் இருந்துவிட்டு மதிய சாப்பாடு வேளை வந்ததும் உண்ணா விரதத்தை முடித்துக் கொண்ட சம்பவமும் உண்டு. அது போல் இந்த உண்ணாவிரதம் கிடையாது. என்று ஊழல், கறுப்பு பணத்துக்கு எதிராக யோகா குரு பாபா ராம்தேவ்வின் உண்ணாவிரதம் அரசியல் ஆக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தவேளையில் இளங்கோவன் பேசினார். மேலும் அவர் தேர்தல…

    • 4 replies
    • 798 views
  14. சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த், நேற்று மாலை டிஸ்சார்ஜ் ஆனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போதைக்கு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனாலும், தொடர்ச்சியான பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகளுக்காக தொடர்ந்து சிங்கப்பூரிலேயே ஒரு நவீன அபார்ட்மெண்டில் தங்கியிருப்பார். இந்த அபார்ட்மெண்ட் மிகுந்த பாதுகாப்பு மற்றும் சகல வசதிகளும் கொண்டதாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூலை முதல்வாரம் வரை இங்கே தங்கியிருக்கும் ரஜினி, இரண்டாவது வாரம் சென்னை திரும்புகிறார். இதற்கிடையே, ரஜினியை வரவேற்க இப்போதே தயாராக ஆரம்பித்துவிட்டனர் அவரது அனைத்து மாவட்ட ரசிகர்களும். திரையுலகம் காணாத வகையில் ஒரு மெகா வர…

  15. கச்சத்தீவை தாரைவார்க்க திமுக உடன்படவில்லை என்று அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "கச்சத் தீவுக்காக பேரவையிலே கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வர் ஜெயலலிதாவும், அந்த தீர்மானத்தை ஆதரித்து பேசிய எதிர்க்கட்சியினரும் தேவையில்லாமல் "கருணாநிதி ஆட்சியில் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட" என்று ஆரம்பித்து, கச்சத்தீவினை நான்தான் மத்திய அரசிடம் கூறி இலங்கைக்கு வழங்கும்படி கூறியதைப்போல எண்ணிக்கொண்டு என்மீது வசைமாரி பொழிந்திருக்கிறார்கள். வேறு சிலர் தமிழகத்தின் அழிவுக்கே நான்தான் காரணம், காவிரி பிரச்சினைக்கும் நான்தான் காரணம் என்றெல்லாம் வீராவேசமாக முழங்கியிருக்கிறார்கள். இதிலிருந்து…

    • 0 replies
    • 435 views
  16. முதன் முறையாக நாடாளு மன்ற எம்.பி-யானபோதே, மத்திய அரசின் கேபினெட் அமைச்சராகி... அதுவும் முக்கியத்துவம் வாய்ந்த தகவல் தொழில்நுட்பம், தொலைத் தொடர்புத் துறை போன்ற பொறுப்புகளைப் பெற்றவர் தயாநிதி மாறன். இப்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் சுழலில் இவரும் சிக்குகிறார்! தயாநிதி குறித்த விவகாரங்களை ஏற்கெனவே வாக்குமூலமாகக் கொட்டி இருந்தார் - முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் அருண் ஷோரி. இப்போது அவர் சொல்வது என்ன? அவரை நாம் சந்தித்தபோது... ''மத்திய அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி சிவராஜ் பாட்டீல் விசாரணை அறிக்கையில் ஓர் அத்தியாயம் முழுக்க தயாநிதி மாறன் செய்த காரியங்கள் குறித்துச் சொல்லப்பட்டு உள்ளது. ஆனால், மீடியாக்கள் அந்த அத்தியாயத்தை அப்போது கண்டுகொள்ளவில்லை. ஆ.ராசா என்ன செ…

    • 0 replies
    • 1.6k views
  17. வேலூர் சட்டமன்றத் தொகுதியை, 20 வருடங்களாகத் தன் கைக்குள் வைத்திருந்தவர், காங்கிரஸ் கட்சியின் ஞானசேகரன். விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஆவேசமாகப் பேசுபவர். அதனால், அவ்வப்போது 'கொலை மிரட்டல்’ அபாயத்துக்கு ஆளானவர். சமீபத்தில் அவர் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்த நிலையிலும், ''வெளிநாட்டுத் தொலைபேசி எண்ணில் இருந்து எனக்கு கொலைமிரட்டல் வந்துள்ளது. போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துகிறார்கள்...'' என்று புகார் கூறவே, ஏரியா பரபரத்துக் கிடக்கிறது. இந்த புகார் பற்றி விசாரிக்கக் களம் இறங் கினோம். நம்மிடம் பேசிய காங்கிரஸ் பிரமுகர்கள், ''ஞானசேகரனை கொலை செய்ய விடுதலைப் புலிகள் திட்டமிட்டு வேலை செஞ்சது உண்மை. அப்பவே, போலீஸில் புகார் கொடுத்தார். பாதுகாப்புக…

  18. கணவன் வேறு ஒரு பெண்ணை நாட.. அவனது மனைவியோ மற்றொரு ஆணிடம் இதயத்தைப் பறிகொடுத்தாள். அமெரிக்காவில் நடந்த இந்தக் குழப்பத்துக்கு ஈரோட்டு பகுத்தறிவாளர்கள் தீர்வு கண்டிருக்கிறார்கள். குழப்பத்துடன் இருந்த நால்வரது வாழ்க்கை இன்று குதூகலமாகிப் போயிருக்கிறது. ஈரோட்டைச் சேர்ந்தவர் அரவிந்தன். (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அமெரிக்காவில் ‘சாஃப்ட்வேர்’ இன்ஜினீயராக பணியாற்றி வருகிறார். அமெரிக்க கலாசாரத்தை அரவிந்தன் மனம் ஏற்கவில்லை. மணந்தால் தமிழ்ப் பெண்ணைத்தான் மணக்க வேண்டும் என்று வைராக்கியமாக இருந்தார். ஈரோடு அருகேயுள்ள ஒரு கிராமத்தில், ஓரளவு படித்த சியாமளாவைத் திருமணம் செய்து வைக்க அரவிந்தனின் பெற்றோர் முடிவு செய்தனர். இதற்கு அரவிந்தனும் சம்மதம் தெரிவித்தார். மணமகன், மணமகள் வீ…

    • 0 replies
    • 817 views
  19. Tuesday, June 14, 2011, 19:31இந்தியா தன் மீதான ஊழல் புகாரில் இருந்து தப்பிப்பதற்காகவே கருணாநிதி முதல்வராக இருந்த போது கச்சத் தீவை தாரை வார்த்துக் கொடுத்துவிட்டார்’’ என்று கச்சத் தீவு குறித்த தீர்மானத்தின் போது சட்டப்பேரவையில் விளாசித் தள்ளினார் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த். ‘கச்சத் தீவு மட்டுமல்ல, கருணாநிதியின் ஆட்சியில் அவரது தன்னலப் போக்கினால் பறிபோன தமிழர் உரிமைகள் எவ்வளவோ இருக்கின்றன’ என்கிறார், முன்னாள் முத ல்வர் எம்.ஜி.ஆரின் 22 ஆண்டு கால நெருங்கிய நண்பரும், கவிஞருமான புலமைப் பித்தன். ‘‘1974-ல் தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத் தீவை இலங்கைக்குத் தூக்கிக் கொடுக்க இந்தியா முன்வந்தது. இந்தியா – பாகிஸ்தான் போரின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக களமிறங்கிய அமெர…

  20. சாமியார் நித்யானந்தா குதிரை சவாரி செய்யும் போது, குதிரை மிரண்டு கீழே தள்ளியதால், அவரது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, பெங்களூரு மருத்துவமனையில் ஆபரேஷன் செய்யப்பட்டது. பிடதி நித்யானந்தா தியான பீட ஆசிரமத்தில் இன்று குதிரை சவாரி செய்த போது, குதிரை மிரண்டதில் சாமியார் நித்யானந்தா கீழே விழுந்தார். இதில் அவரது கையில் எலும்பு முறிவு இருக்கும் என, டாக்டர்கள் கூறியதால், காலை 11 மணிக்கு, பெங்களூரு மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இங்குள்ள வி.ஐ.பி.,க்கள் அறையில், அவர் சிகிச்சை பெற்று வருகிறார். Thanks to dinamalar.com சாமியார் குதிரையையும் றன்ஜிதான்னு நினைச்சாரோ தெரியல்ல...

  21. சட்டவிரோத சுரங்கத் தொழிலில் இருந்து கங்கை நதியை காப்பாற்றுமாறு 73 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுவாமி நிகாமானந்த் உயிரிழந்துவிட்டார். கறுப்புப் பணத்தை மீட்கக் கோரி உண்ணாவிரதம் இருந்து டேராடூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 9 நாட்களில் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் யோகா குரு பாபா ராம்தேவ். அவரை அமைச்சர்கள், அரசியல்வாதிகள் என பலரும் சந்தித்ததால் அவரது உண்ணாவிரதம் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் கங்கை நதியை காப்பாற்றுமாறு உண்ணாவிரதம் இருந்த நிகாமானந்த் டேராடூனில் பாபா ராம்தேவ் அனுமதிக்கப்பட்டிருந்த அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கங்கை…

  22. தி.மு.க. உயர்நிலைக் குழு கூட்டத்தில் ‘காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறும்’ முடிவை தி.மு.க. எடுக்கும் என்றுதான் தொண்டர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் வழக்கம்போல் கருணாநிதி தொண்டர்களை ஏமாற்றி விட, ‘தலைவரின் கட்டுப்பாட்டில் கட்சி இல்லை’ என்று புலம்புகிறார்கள் தொண்டர்கள். ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி திகார் சிறையில் இருக்கும் கனிமொழிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதும் உயர்நிலைக் குழு கூட்டத்தைக் கூட்டினார், கருணாநிதி. இதையடுத்து, தி.மு.க. அவசர உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் கடந்த 10-ம் தேதி கூடியது. இக்கூட்டத்தில் மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க. வெளியேறிவிடும் என்று உடன்பிறப்புகள் அனைவரும் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால், தி.மு.க. அவசர உயர்நிலை செயல்திட…

    • 0 replies
    • 689 views
  23. ஆட்சியில் அமர்ந்த கையோடு இலங்கை விவகாரத்தில் முதல்வர் ஜெ. இப்படித் தடாலடியாக இறங்குவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. இலங்கை மீது பொருளாதாரத் தடை, கச்சத்தீவை மீட்க வேண்டும்.. என அதிரடியாக அ.தி.மு.க. அரசு நிறைவேற்றிய தீர்மானங்களால் அதிர்ந்து போனது இலங்கை அரசு மட்டுமல்ல, இந்திய அரசும்தான். இதையடுத்து சிவசங்கர் மேனன் இலங்கை கிளம்பினார். செல்லும் வழியில் ஜெயலலிதாவைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இலங்கை சென்ற சிவசங்கர் மேனன், வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் ஆகியோர் அடங்கிய இந்திய அரசின் உயர்மட்டக் குழு சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பின்னர், பிளாட் எனப்படும் …

    • 0 replies
    • 510 views
  24. Started by Nellaiyan,

    A day after a ferry service from Tuticorin to Colombo was flagged off, Tamil Nadu Chief Minister J. Jayalalithaa today asked the central government to suspend it, saying her government was not consulted on the move. Submitting a memorandum to Prime Minister Manmohan Singh in New Delhi, copies of which were released to the media in Chennai, Jayalalithaa said the ferry service has been resumed at a most inopportune time. The service was suspended in 1983. "The Tamil Nadu legislative assembly has recently passed a resolution urging the Government of India to initiate action by working with other nations for the imposition of an economic embargo on the Government of…

    • 0 replies
    • 382 views
  25. பிரதமர் மன்மோகன் சிங்கை டெல்லியில் முதல் அமைச்சர் ஜெயலலிதா சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு இன்று மதியம் 12 மணிக்கு நடைபெற்றது. இச்சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, முல்லை பெரியாறு விவகாரத்தை சட்ட ரீதியாக தமிழக அரசு அணுகும். முல்லைப் பெரியாரில் கேரள அரசு அணை கட்டுவதை தமிழக அரசு எதிர்க்கும். சிவகங்கையில் முறைகேடு மூலம் ப.சிதம்பரம் வெற்றி பெற்றுள்ளார். ப.சிதம்பரம் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. சிவகங்கையில் உண்மையிலேயே வெற்றி பெற்றது அதிமுக வேட்பாளர்தான். ஆகவே மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ப.சிதம்பரம் விலக வேண்டும் என்றார். http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=55970

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.