உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26628 topics in this forum
-
http://www.youtube.com/watch?v=tb5vZaUf5vE&feature=player_embedded 14 வயதுச் சிறுவனை அவனது தாயார் முன்னிலையில் 3 தடவை மாறி மாறிச் சுட்டுள்ளனர் பொலிசார். இதனை தொலைவிலிருந்து ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார். இக் காட்சிகள் உலகை உலுப்பியுள்ளன. இச் சம்பவம் கடந்தவருடம் இடம்பெற்றிருந்தாலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கைதாகும்வரை இக் காணொளி வெளியிடப்படவில்லை. சுடப்பட்ட சிறுவனின் கைகளிலும் மார்பிலும் ரத்தம் கொட்டக் கொட்ட அவனை அவர்கள் இழுத்துச் சென்று மிரட்டிய காட்சிகளும் வீடியோவில் பதிவாகியுள்ளது. உலகில் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். 29 Mar 2011
-
- 0 replies
- 447 views
-
-
[கருணாநிதியின் குடும்ப மரம் : http://rste.org/wp-content/uploads/2011/03/karunanidhi-family-tree-2.jpg ] கருணாநிதி ஆட்சியில் எல்லாம் இலவசம்… இலவசம்… இலவசம்…’ என்று கேலி செய்கிறார்கள். அவர்கள் இலவசத்தை கேலி செய்யவில்லை. இந்த இயக்கத்தை கேலி செய்கிறார்கள்; கிண்டல் செய்கிறார்கள். ஆனால், இந்த இயக்கம் ஏழைகள் உள்ளவரை, அந்த ஏழைகளுக்காக இலவசமாக எதையும் வழங்கும் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்…’’ இலவசங்கள் குறித்த விமர்சனங்களுக்கு முதல் வர் கருணாநிதி கொடுத்த விளக்கம்தான் இது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, இலவச அரிசி, இலவசமாக மிக்ஸி அல் லது கிரைண்டர் என்று தேர்தல் அறிக்கையை இந்தத் தேர்தலுக்கும் வெளியிட்டிருக்கிறது தி.மு.க. ‘அடுத்து, இலவச ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின் கொடுத்தாலும் க…
-
- 1 reply
- 950 views
-
-
ரொறன்ரோ விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டவருக்கு எதிராகப் பயங்கரவாதம்சார் குற்றச்சாட்டு! பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் எனக் கருதப்படும் ஒருவரை ரொறன்ரோ பொலிசார் கைதுசெய்திருக்கிறார்கள். செவ்வாயன்று இரவு ரொறன்ரோவின் பியர்சன் சர்வதேச விமானத்தில் வைத்து இந்தச் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். பிரித்தானியாவின் ஹீத்துறூ விமான நிலையம் ஊடாக எகிப்தின் ஹெய்ரோ நோக்கிப் புறப்படுவதற்குத் தயாராக இருந்த இந்தச் சந்தேகநபர் குறிப்பிட்ட விமானம் ஏறி அமர்ந்த பின்னர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். குறிப்பிட்ட இந்தச் சந்தேக நபரது பெயர் விபரங்கள் மற்றும் அவர் எந்த நாட்டினைச் சேர்ந்தவர் என்பது பற்றிய தகவல்கள் எதுவுமே இதுவரை வெளியிடப்படவில்லை. குறிப்பிட்ட இந்தச் சந்தேக நபர்…
-
- 1 reply
- 818 views
-
-
சேலம்: "தேர்தலில் என்னை வெற்றி பெற செய்தால், வீட்டுக்கு ஒரு நானோ கார் இலவசமாக வழங்கப்படும்' என, மனுத்தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர், தேர்தல் அறிக்கையை வெளியிட்டு சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சேலம், அம்மாபேட்டை வித்யா நகரைச் சேர்ந்தவர் ஷாஜஹான்(41). வக்கீல் தொழில் செய்யும் அவர், கடந்த சட்டசபை, லோக்சபா தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டுள்ளார். 2004 லோக்சபா தேர்தலில், 8,466 ஓட்டுக்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். இந்த தேர்தலில், சேலம் வடக்கு, தெற்கு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட விரும்பி மனுத்தாக்கல் செய்தார். அவர் தனது தேர்தல் அறிக்கையை, கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது: தேர்தல் நாளன்று அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன…
-
- 2 replies
- 1.1k views
-
-
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா மீது ஏப்ரல் 2ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. மேலும் குற்றப்பத்திரிக்கையில் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியும் சேர்க்கப்படலாம் என்றும் தெரிகிறது. ராசா மீது ஊழல் வழக்கு, அன்னியச் செலாவணி குற்றச்சாட்டு, ஏமாற்றுதல், மோசடி ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய உள்ளதாக சிபிஐ ஏற்கெனவே நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை இம்மாதம் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தயாரித்து வருவதாகவும், அதற்கு மேலும் 2 நாள் அவகாசம் வேண்டும் என்றும் சிபிஐ தரப்பில் கோரப்…
-
- 0 replies
- 521 views
-
-
கனடா கொள்வனவு செய்ய விரும்பும் எவ்.35 தாக்குதல் விமானங்கள் ஒவ்வொன்றும் 100 மில்லியன் டொலருக்கு அதிகமாம் கனேடிய அரசாங்கம் அமெரிக்காவிடமிருந்து கொள்வனவுசெய்ய முற்படும் எவ்.35 வகையினைச் சேர்;ந்த தாக்குதல் விமானங்கள் ஒவ்வொன்றும் கனடா எதிர்பார்க்கும் தொகையினை விட 25 மில்லியன் டொலர் அதிகமானதாக இருக்கும் என அமெரிக்க நிறுவனம் ஒன்று கூறுகிறது. அதிக வினைத்திறன் கொண்ட இந்த வகை விமானங்கள் ஒவ்வொன்றையும் 100 மில்லியன் டொலருக்கே கொள்வனவு செய்ய முடியும் என அந்த அமைப்பு கூறுகிறது. தற்போது கனேடிய விமானப்படையின் பயன்பாட்டின் கீழ் இருக்கும் எவ்-75 வகையினைச் சேர்ந்த தாக்குதல் விமானங்களுக்குப் பதிலாக எவ் 35 வகையினைச் சேர்ந்த விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை கனடாவ…
-
- 0 replies
- 692 views
-
-
கருத்துக்கணிப்பில் கென்சவேட்டிவ் கட்சியினர் முன்னணி நிலையில் கடந்த வாரம் கனேடியப் பாராளுமன்றில் கென்சவேட்டிவ் கட்சியின் அரசாங்கத்திற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மாத்தில் காப்பர் அரசாங்கம் தோல்விகண்டநிலையில் கனடாவின் 40 ஆவது பாராளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த ஐந்து நாட்களாக கனடாவில் தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடித்திருக்கிறது. வாக்குறுதிகள் அள்ளி வீசப்படுகின்றன. கடந்த வாரம் தாங்கள் பாராளுமன்றில் முன்வைத்த வரவு செலவுத் திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு நாட்டினது பொருளாதாரத்தினைக் கட்டியெழுப்பப்போவதாகவும் கனேடியர்கள் ஒவ்வொருவரினதும் வரிப்பணத்தினைக் குறைக்கப்போவதாகவும் கென்சவேட்டிவ் கட்சிய…
-
- 0 replies
- 785 views
-
-
காங்கிரசை வீழ்த்துவது அவசியம் - சீமான் புதன், 30 மார்ச் 2011( 15:50 IST ) காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவது ஒவ்வொரு தமிழனின் கடமை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். ராமேஸ்வரம், பரமக்குடி பகுதியில் நடைபெற்ற அக்கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். "மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்களை சித்ரவதை செய்து சுட்டுக்கொல்லும் சிங்கள கடற்படையை கண்டுகொள்ளாமல் தமிழின அழிப்பிற்கு துணை போய் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியை நாம் வீழ்த்த வேண்டும். இனி ஒரு முறை இந்த மண்ணில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், வருங்கால தமிழ்ச் சொந்தங்கள் அனைவருடைய வாழ்க்கையும் கேள்விக்குறியாக ஆகிவிடும். காங்கிரஸ்…
-
- 0 replies
- 875 views
-
-
கலைஞர் டிவிக்கும் தனக்கும் ஒரு தொடர்பும் கிடையாது என்கிறார் களைஞர். தனக்கும் கலைஞர் ரிவிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்றும் தன்னுடைய பெயரை வைத்ததைத் தவிர தனக்கு அங்கு நடப்பது எதுவும் தெரியாது எனவும் கரிநாநிதி தெரிவித்துள்ளார். ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியிலேயே அவர் இந்த உண்மையை வெளிப்படுத்தியுள்ளார். மனைவி தயாளு அம்மாள் மற்றும் மகள் கனிமொழி ஆகியோருக்கு பங்குகள் இருப்பதை ஒத்துக்கொண்ட களைஞர் தனக்குப் பங்குகள் எதுவும் இல்லையென்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். போற போக்கிலை தயாளு அம்மாவுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை எண்டு சொன்னாலும் சொல்லுவார். http://funnycric.blogspot.com/2011/03/i-dont-know-anything.html
-
- 0 replies
- 1.1k views
-
-
2050 ம் ஆண்டில் கார்களுக்கு தடை - ஐரோப்பிய யூனியன் நாடுகள்! உலகம் வெப்பமயமாதலை தடுக்கும் நடவடிக்கையில் உலக நாடுகள் அனைத்தும் ஈடுபட்டுள்ளன. இதற்கு முதன்மை காரணம் பசுமை வாயுக்களே. கார்கள் மற்றும் லாரிகள் போன்ற வாகனங்களில் இருந்தும், தொழிற்சாலைகளில் இருந்தும் வெளியேறும் கார்பன் டை ஆக்சைடினால் வானில் உள்ள ஓசோன் மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டு பருவ நிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. எனவே கார்பன் டை ஆக்சைடு வெளியாவதை தடுக்க ஐரோப்பிய யூனியன் நாடுகள் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளன. அதன்படி லண்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் முக்கிய நகரங்களில் 2050 ம் ஆண்டில் கார்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த 40 ஆண்டுகளில் 60 சதவீதம் கார்பன்டை ஆக்சை…
-
- 0 replies
- 897 views
-
-
தேர்தல் காலத்தில் கிரிக்கெட்டையும் கொஞ்சம் கவனிக்க வேண்டியிருக்கிறது. இந்தியாவில் இந்து மதத்தை விட பெரிய மதம் கிரிக்கெட். ஆனாலும் ஐந்து, பத்து வருடங்களுக்கு முன்னர் இருந்த கிரிக்கெட் பரபரப்பு இப்போது குறைந்திருக்கிறது. இரண்டு மாதத்திற்கு ஒருமுறை போட்டி, கோப்பை என்று மக்களுக்கு சலித்துப் போகுமளவு ஏராளமான ஆட்டங்கள். 20 ட்வெண்டி வந்ததும் அதன் பரிமாணம் நிறையவே மாறியிருக்கிறது. இரசிகனை பொறுத்த வரை முன்னர் போல நுணுக்கங்களை அணுஅணுவாய் இரசிக்கும் தேவை இப்போது இருப்பதில்லை. ஆறு, நாலு என பரபரவென்று அவன் கூச்சலிடுகிறான். சரி, ஒழிந்து போகட்டும் என்றால் கிரிக்கெட்டை வைத்து கல்லா கட்டும் முதலாளிகள் அந்த விளையாட்டை ஏதோ மாபெரும் தேசபக்த போர் போல சித்தரிக்கும் கொடுமை இருக்கிறதே அதைத்…
-
- 1 reply
- 929 views
-
-
ஒன்ராரியோவில் பெற்றோரைக் கொலைசெய்ததாக மகன் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. ஒன்ராரியோவினைச் சேர்ந்த 21 வயதுடைய ஒருவர் தனது பெற்றோரைக் கொலைசெய்திருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. குறோகறி வைற் என்பவர் தனது பெற்றோர்களான 53 வயதுடைய டொனால்ட் வைற் மற்றும் 51 வயதுடைய லுவர்டித் வைற் ஆகிய இருவரையும் கொலைசெய்திருப்பதாக கடந்த திங்களன்று ஒன்ராரியோப் பிராந்தியப் பொலிசார் அறிவித்திருக்கிறார்கள். ஒன்ராரியோவின் பாறி என்ற நகரத்திலிருந்து 30 கி.மீ தொலைவிலுள்ள கிராமமொன்றில் குறிப்பிட்ட இந்தக் குற்றவாளி தனது பெற்றோர்களுடன் வசித்து வந்திருக்கிறார். டொனால்ட் வைற் பணிக்குத்திரும்பவில்லை என முறையிட்டு பொலிசாருக்குக் கிடைத்த தொலைபேசி அழைப்பையடுத்து மேற்கொள்ளப்பட்ட வ…
-
- 0 replies
- 586 views
-
-
ரொறன்ரோவின் கிழக்கே துப்பாக்கிச் சூடு ஒருவர் மரணம் ரொறன்ரோ நகரின் கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தினைத் தொடர்ந்து ஒருவர் மரணமடைந்திருக்கிறார். திங்களன்று காலை 7.45 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை முடுக்கிவிட்டிருக்கிறார்கள். கிழக்கு குயின் வீதிக்கும் கிங்ஸ்ரன் வீதிக்கும் இடையே இடம்பெற்ற சம்பவத்தினைத் தொடர்ந்து பொலிசாருக்குக் கிடைத்த தகவலையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்திருந்தனர். இருபது வயது மதிக்கத்தக்க ஒருவர் சரமாரியான துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, உயிராபத்தான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் சிகிச்சை பலனின்றி செவ்வாயன்று காலையில் மரணமடைந்த…
-
- 0 replies
- 561 views
-
-
கனடாவில் ஆபத்தான இரசாயனங்களுடன் கார் கண்டுபிடிப்பு கனடாவின் வின்னிபெக்கின் தென் பிராந்தியத்தில் ஆபத்தான இரசாயனங்கள் ஏற்றப்பட்ட நிலையில் பயணித்த காரினை இடைமறித்திருக்கும் பொலிசார் அது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்திருக்கிறார்கள். செவ்வாயன்று அதிகாலை 12 மணியளவில் பெம்பினா நெடுஞ்சாலையில் இடைமறிக்கப்பட்ட இந்த வாகனத்தில் எத்தகைய இரசாயனங்கள் இருந்தன என்பதை ஆராய்வதற்கு உடனடியாகவே துறைசார் வல்லுநர்கள் வரவழைக்கப்பட்னர். அண்மையில் சட்டவிரோத ஆய்வுகூடம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட வகையினைச் சேர்ந்த இராசாயனங்களே இந்தக் காரிலும் கண்டெடுகப்பட்டதாகப் பொலிசார் கூறுவதோடு அது தொடர்பான மேலதிக விபரங்களை வழங்குவதற்கு மறுத்துவிட்டார்கள். சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைதுசெய்யப…
-
- 0 replies
- 564 views
-
-
ஆட்சிக்கு வந்தால் பல்கலை மாணவர்களுக்கு ஆண்டொன்றுக்கு ஆயிரம் டொலராம் என்கிறார்கள் லிபரல்கள் கனடாவில் இடம்பெறவுள்ள 41ஆவது பாராளுமன்றத் தேர்தலின்போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 1000 டொலர்கள் வழங்கப்படும் என லிபரல் கட்சியினர் அறிவித்திருக்கிறார்கள். இதற்காக தங்களது அரசாங்கம் ஒரு பில்லியன் டொலர் பணத்தினைச் செலவிடும் என செவ்வாயன்று காலையில் லிபரல் கட்சியினர் அறிவித்திருக்கிறார்கள். கனடாவில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்திருக்கும் நிலையிலேயே லிபரல் கட்சியின் இந்த அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்விகற்கும் மாணவர்களுக்கு ஆண்டொன்றுக்குத் தலா 1000 டொல…
-
- 0 replies
- 501 views
-
-
லிபியாவில் தாக்குதலை ஆரம்பித்த பின்னர் இன்று அமெரிக்க மக்களுக்கும் அரபு, உலக மக்களுக்கும் அமெரிக்காவின் அதிபர் ஒபாமா உரையாற்றினார். பலரும் இந்த உரை அமெரிக்கா தனியாக எந்த நடவடிகைகளிலும் ஈடுபடாது என்பதை ஒபாமா கூறியுள்ளதாக கருத்து தெரிவிக்கின்றனர். தான் ஏன் லிபியாவுக்குள் ஐ. நா. மற்றும் நேட்டோ நாடுகளுடன் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டனர் என விளக்கினார். முக்கியமாக பெங்க்காசி மக்களை காப்பாற்றவே சென்றதாக கூறினார். கடாபியை அரசியல் மூலம் வெளியேற்ற வேண்டும் என்ற தொனிப்பட கூறினார், அதாவது இராணுவ நடவடிக்கை அவரை அகற்ற அல்ல என மீண்டு கூறினார். ஆனால் எவ்வாறு அரசியல் நடவடிக்கை மூலம் அகற்றலாம் என்பது பற்றி தெளிவாக கூறவில்லை. அமெரிக்க மக்கள் எவ்வாறு வெற்றியை இந்த ந…
-
- 2 replies
- 834 views
-
-
வழக்கம் போல் இந்தத் தேர்தலின் போதும் பூனைக்குட்டி வெளியே வந்துள்ளது. சோ, சுப்பிரமணியசாமி-திருமாவளவன், வைகோ போன்ற எதிரெதிர் துருவங்கள் கூட ஒன்றுபட்டுச் சொல்கின்ற ஒரே விஷயம் ஜெ. சசிகலாவின் பிடியில் இருக்கிறார் என்பதே. பல சந்தர்ப்பங்களில் இந்தக் குற்றச்சாட்டு சொல்லப்பட்டுள்ளது. இப்போதும் அதே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. யாருடன் கூட்டணி, யாருக்கு எவ்வளவு தொகுதி போன்ற எல்லா விஷயங்களும் சசிகலா குரூப்பினால் முடிவு செய்யப்பட்டுள்ளன. ஜனநாயக அரசியலின் அடிப்படையான தேர்தல் செயல்பாடுகளைக் கூட சுதந்திரமாகச் செய்ய முடியாத நிலையில் தான் ஜெ. இருக்கிறாரா? அப்படியென்றால், ஆட்சிக்கு வந்தபின் நம்மை ஆளும்போது மட்டும் சுதந்திரமான முடிவுகள் ஜெ.வால் எடுக்கப்படுமா அல்லது நம்மை ஆளப்போவதே …
-
- 1 reply
- 2k views
-
-
சத்தியமாய் காங்கிரசுக்கு ஓட்டுப் போட மாட்டோம்: சீமானிடம் உவரி மக்கள் உறுதிமொழி உவரி: வரும் தேர்தலில் சத்தியமாக காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் ஓட்டுப் போட மாட்டோம் என உவரி பகுதி மக்கள் சீமானிடம் கூறினர். நடைபெறவிருக்கும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் சூறாவளிப் பிரச்சாரம் செய்து வருகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் அவர் தனது முதல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். காங்கிரஸ் மட்டும்தான் அவர் இலக்கு. 'திமுக, பாமக, அதிமுக யாருக்கு வேண்டுமானாலும் உங்கள் ஓட்டு போகட்டும். ஆனால் நமது இன விரோதி காங்கிரஸுக்கு மட்டும் ஓட்டளிக்காதீர்கள்' எ…
-
- 0 replies
- 518 views
-
-
லிபியா மீதான விமானப் பறப்பு தடை வலயத்தை அமுல்படுத்தப்போவதாக நேட்டோ அறிவித்திருக்கிறது. ஆனால்,அந்த அமைப்பு ஐ.நா. வின் ஆதரவுடனான இராணுவ நடவடிக்கைகளில் முழுமையான கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்ளவில்லை. வியாழக்கிழமை லிபியாவின் தென்பிராந்தியத்தில் மேற்குலக விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. ஆனால், மிஸ்ராடா நகரத்துக்குள் கடாபியின் தாங்கிகள் மீளப்பிரவேசிப்பதை தடுத்து நிறுத்துவதில் தோல்விகண்டுள்ளன. மிஸ்ராடாவிலுள்ள பிரதான வைத்தியசாலை கவச வாகனங்களாலும் அரசாங்கத்தின் ஊடுருவல் படையினராலும் முற்றுகையிடப்பட்டுள்ளன. கிழக்கு லிபியாவிலுள்ள கிளர்ச்சிப் படைகள் கடாபியை அகற்றிவிடுவார்கள் என்று மேற்குலகத் தளபதிகள் கருதுகின்றனர். ஆனால், மிஸ்ராடாவுக்கு தாங்கிகள் திரும்ப வருகைதந்திருப்பதானத…
-
- 4 replies
- 916 views
-
-
கடனாவின் முதியோர் இல்லமொன்றில் கைகலப்பு, 87 வயதான முதியவர் மருத்துவமனையில் அனுமதி கனடாவின் வின்னிபெக் பிராந்தியத்திலுள்ள முதியவர் இல்லமொன்றில் இரண்டு முதியவர்களுக்கு இடையில் இடம்பெற்ற கைகலப்பினைத் தொடர்ந்து ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அதேநேரம் மற்றையவர் சட்டவிசாரணையினை எதிர்கொண்டிருக்கிறார். கடந்த வியாழனன்று மாலையில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 87 வயதான முதியவர் ஒருவர் தலையில் காயமடைந்த நிலையில் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிசார் சனியன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 70 மற்றும் 87 வயதுடைய இரண்டு முதியவர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்த் தர்க்கம் ஈற்றில் கைகலப்பாக மாறியதாக ஆரம்பகட்ட விசாரணையினை …
-
- 4 replies
- 1.2k views
-
-
-
சீனாவில் 2 முறை பயங்கர நிலநடுக்கம் ஞாயிறு, 27 மார்ச் 2011( 11:42 IST ) [Feedback] [Print] சீனாவில் அடுத்தடுத்து இரண்டு முறை சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் வீட்டை விட்டு அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 மற்றும் 5. 9 ஆகய பதிவாகியுள்ளது. பீஜிங் நகரில் வடகிழக்கு நகரில் உள்ள லம்பாசா, சவுசவு நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உயிர் தேசம், பொருள் தேசம் குறித்த விவரம் உடனடியாக தெரியவில்லை. tamil.webdunia.com
-
- 4 replies
- 1k views
-
-
மதிமுக தொண்டரின் குமுறல் வை.கோ என்னுடய தலைவர். ஆனால் இன்று எங்களுக்கு ஏன் இந்த நிலை? ஏன் எங்களுக்கு இத்தனை சோதனைகள்? தோல்விகள்? தகுதியான வை.கோ அவர்கள் முன்னணி தலைவராய் தமிழகத்தில் ஆக முடியாமல் போனதற்கான காரணங்கள் சிலவற்றை பட்டியலிடுகிறேன ் பாருங்கள். 1. "மனைவி1/மனைவி2/துணைவி என்கிற இல்லறம் இல்லாதது. 2. வாரிசு அரசியல் செய்ய துணியாதது. 3. 18 ஆண்டுகள் டெல்லியில் இருந்தும் ஊழல் செய்யாமல் இருந்தது. 4. உலகில் எங்கெல்லாம் தமிழன் பாதிக்கப்பட்டால ும் அவனுக்காக குரலெழுப்பி போராடியது. 5. தன் அரசியல் வாழ்வையே ஈழத்து சொந்தங்களுக்காக இழந்து நிற்பது. 6. ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மக்களின் வாழ்வுரிமையை காக்க 18 ஆண்டுகள் போராடி வென்றது. 7. முல்ல…
-
- 0 replies
- 1.4k views
-
-
20,000 டொலர் பெறுமதியான போதைச் செடிகளை வளர்த்த பிரித்தானியர் மீது கனேடியப் பொலிசார் நடவடிக்கை கனடாவில் மரியுவானா வகையினைச் சேர்ந்த போதைச் செடிகளை வளர்த்த பிரித்தானியாவினைச் சேர்ந்த ஒருவருக்கு கனேடியப் பொலிசார் சட்ட நடவடிக்கையினை எடுத்திருக்கிறார்கள். குறிப்பிட்ட இந்த நபரிடமிருந்து 800 கிறாம் மரியுவானா வகையினைச் சேர்ந்த போதைப்பொருளையும் 14 மரியுவானா பயிர்களையும் கையகப்படுத்தியிருப்பதாக பொலிசார் கூறுகிறார்கள். குறிப்பிட்ட இந்தப் போதைப்பொருட்கள் 20,000 டொலர் பெறுமதியானவை எனப் பொலிசார் கணக்கிடுகிறார்கள். குறிப்பிட்ட இந்த நபரை கனடாவிலிருந்து வெளியேற்றுமாறு கிடைத்த உத்தரவினை அடுத்து அதனைச் செயற்படுத்துவதற்காக பொலிசார் சந்தேக நபரின் வீட்டுக்குச் சென்றபோதே அங்கு ப…
-
- 0 replies
- 868 views
-
-
பகலில் பணியாளர், இரவில் பாலியல் பட நடிகை: வேலையினை இழப்பார் கியூபெக் பெண் பகலில் அவள் கியூபெக் நகர பாடசாலை ஒன்றில் அலுவலக உதவியாளர். இரவில் தனக்குக் கிடைக்கும் ஓய்வுநேரத்தில் பாலியல் பட நடிகை. கியூபெக்கின் முன்னணிப் பாடசாலை ஒன்றில் அலுவலக உதவியாளராகப் பணிபுரியும் சமன்தா ஆடென்ரி என்ற இந்தப் இளம் பெண்ணே இவ்வாறு இரவில் பாலியல் படங்களில் நடித்து வருவது அண்மையில் கண்டறியப்பட்டிருக்கிறது. இதுபோன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டமைக்காக குறிப்பிட்ட இந்தப் பெண்ணைப் பணியிலிருந்து நிரந்தரமாக நிறுத்தலாமா என்பது தொடர்பில் பாடசாலை நிர்வாகம் ஆராய்ந்து வருகிறது. குறித்த இந்தப் பெண்ணின் பாலியல்சார் படமொன்றில் நடித்திருந்தை இணையத்தில் அவதானித்த பாடசாலை மாணவன் நிர்வாகத்திடம் முறையிட, இந…
-
- 0 replies
- 1.5k views
-