உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26617 topics in this forum
-
1967 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட எல்லைகளின் அடிப்படையில் பாலஸ்தீனம் -ரஸ்யா November 1, 2023 இஸ்ரேல் பாலஸ்தீன பேச்சு மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் அதனை எல்லோரும் கூட்டாக செய்ய வேண்டும். ஐ.நாவினால் அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தை இலக்காக கொண்டு இரு நாடுகள் என்ற தீர்வின் அடிப்படையில் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படவேண்டும். கிழக்கு ஜெருசலத்தை தலைநகராக கொண்டு 1967 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட எல்லைகளின் அடிப்படையில் பாலஸ்தீன தேசம் உருவாக்கப்பட வேண்டும் என ரஸ்யாவின் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மோதல் மேலும் பரவாது வெளியார் தடுக்க வேண்டும். அந்த பிரதேசம் வியூகங்களின் அடிப்படையில் முக்கியமான பிரதேசம் என ரஸ்யா தெரிவித்துள்ளது. ஹமாஸ் மற்றும் ஈரான் அதிகாரிகளுடனா…
-
- 1 reply
- 785 views
-
-
இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த 7-ந்திகதி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரொக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் இராணுவம் காசா பகுதிக்குள் அதிரடியாக நுழைந்து ஹமாஸ் அமைப்பின் இலக்குகள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந் நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் விவகாரம் தொடர்பாக நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்தின் இயக்குநர் கிரேக் மொகிபேர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் உயர் ஆணையருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், காசா முற்றுகை விவகாரத்தில் ஐ.நா. சபை மற்றும் மேற்கத்திய நாடுகளின் அணுகுமுறை குறித்து அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார் என தகவல் …
-
- 1 reply
- 326 views
-
-
31 அக்டோபர் 2023 ரஷ்யாவின் விமான நிலையம் ஒன்றை யூத எதிர்ப்பு கூட்டம் முற்றுகையிட்டதற்கு யுக்ரேன் மற்றும் மேற்கு நாடுகளே காரணம் என ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் கூறியதை அமெரிக்கா நிராகரித்துள்ளது. என்ன நடந்தது? ஞாயிற்றுக்கிழமை இரவு ரஷ்யாவின் மகாச்காலா (Makhachkala ) விமானநிலையத்தை நூற்றுக்கணக்கான நபர்கள் முற்றுகையிட்ட வீடியோ ஒன்று , சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் இருந்து ரஷ்யாவுக்கு ஒரு விமானம் வந்தபோது கோபமடைந்த ஒரு கூட்டம் விமான ஓடுதளத்துக்கே சென்றது. அங்கே இஸ்ரேலில் இருந்து வந்த விமானத்தை சுற்றி வளைத்தது. சமூக ஊடகங்களில் வெளியான வீடியோக்களை பார்க்கும்போது நூற்றுக்கணக்கான…
-
- 0 replies
- 367 views
- 1 follower
-
-
எதிர்பார்த்ததை விட வேகமாக காசா பகுதிக்குள்ளான இஸ்ரேலிய படைகளின் நகர்வுகள் இருப்பதை அங்கிருந்து வரும் காட்சிகள் வெளிப்படுத்துகின்றன. காசா நகரிற்கு வடக்கில் இருந்து இஸ்ரேலிய இராணுவம் முன்னேறிக்கொண்டிருக்கும் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கும் அதேவேளை காசா பகுதியின் பின்புறமாக இஸ்ரேலிய படைகள் வந்திருக்கும் காட்சிகள் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசா நகரையும் தெற்கு நாசா பகுதியையும் இடைமறித்து இஸ்ரேல் தற்போது நிலைகொண்டுள்ளார்கள். காசாவிற்கு இஸ்ரேலிய படைகளின் தரை வழியான முன்னேற்றங்கள் எதுவும் நடக்கவில்லையென ஹமாஸ் அறிவித்த சில மணிநேரங்களிலே காசா மீதான இஸ்ரேலிய படைகளின் தாக்குதல் ஆரம்பித்துள்ளது. https://tamilwin.com/article/israeli-forces-have…
-
- 0 replies
- 490 views
-
-
கொரோனாவைவிட மிகக் கொடிய வைரஸ்கள் விரைவில் உலகைத் தாக்க வாய்ப்பிருப்பதாக சீனாவின் வூஹான் ஆய்வுக்கூட விஞ்ஞானி ஷி ஸெங்லி எச்சரித்துள்ளார். கொவிட் 19 பாதிப்பிலிருந்து உலகம் இன்னமும் முழுமையாக விடுபடவில்லை. அதற்குள் அடுத்த எச்சரிக்கை கிளம்பியிருக்கிறது. கொரோனா வைரஸ் முதலில் அடையாளம் காணப்பட்ட சீன தேசத்தின் வூஹானிலிருந்து புதிய அபாயம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வூஹானின் வைராலஜி ஆய்வுக் கூடத்தின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஷி ஸெங்லி என்ற பெண் விஞ்ஞானி, ’சீனாவின் பேட்வுமன்’ என்று மேற்குலத்தினரால் அழைக்கப்படுகிறார். இவர் தலைமையிலான குழுவினர், உலகில் பரவி வரும் மற்றும் பரவக் காத்திருக்கும் தொற்று நோய்கள் மற்றும் அவற்றை உருவாக்கும் நுண்ணுயிரிகள் குறித்து …
-
- 7 replies
- 947 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,UNITED NATION@TWITTER 24 நிமிடங்களுக்கு முன்னர் காஸாவில் போர் நிறுத்தம் கோரி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது இந்தியா வாக்களிக்கவில்லை. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 120 நாடுகளும் எதிராக 14 நாடுகளும் வாக்களித்தன. இந்தியாவுடன் சேர்த்து 45 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஏஐஎம்.ஐ.எம் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான மோதல் 3 வாரங்களை கடந்தும் நீடிக்கும் நிலையில், காஸாவில் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போர் நிறுத்தத்தைக் கொண்டு வரக் கோரி ஐ.நா. பொதுச் சபையில் ஜோர்டான் அmரசு தீர்மானம் ஒன்றை வெள்ளிக்க…
-
- 23 replies
- 1.7k views
- 2 followers
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 30 நிமிடங்களுக்கு முன்னர் மாணவர் விசாவில் வரும் மாணவர்களிடம் ஏஜெண்டுகள் செய்யும் மோசடிகளைத் தடுக்க கனடா அரசு புதிய விதிகளை அறிவித்துள்ளது. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு சென்று கல்வி கற்க வேண்டும் என்பது இந்திய மாணவர்களின் கனவாக இருக்கிறது. குறிப்பாக கனடாவில் கல்வி கற்க இந்திய மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பிக்கின்றன. இதற்கான முயற்சிகளில் ஈடுபடும்போது சில நேரங்களில் முகவர்கள் மூலம் மாணவர்கள் ஏமாற்றப்படுவதும் நடக்கிறது. சமீபத்தில், போலி ஆவணங்களுடன் கனடா சென்ற இந்திய மாணவர்களை நாடு கடத்தும் அரசின் நடவடிக்கை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்தியாவைச் சேர்ந்த 700 மாணவர்கள் வரை இந்த மோசடியில் …
-
- 1 reply
- 527 views
- 1 follower
-
-
இஸ்ரேல் தாக்குதலால் 50 பணயக் கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஹமாஸ் – தற்போதைய தகவல்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 45 நிமிடங்களுக்கு முன்னர் காஸாவின் மீது இஸ்ரேலின் தாக்குதல் துவங்கியதில் இருந்து, சுமார் 50 இஸ்ரேலியப் பணயக் கைதிகள் கொல்லப்பட்டிருப்பதாக அக்குழு கூறியிருக்கிறது. இதுபற்றி, ஹமாஸ் ராணுவப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபேய்தா கூறுகையில், இஸ்ரேலின் தாக்குதல்களின் விளைவாக, தங்கள் குழுவினரால் காஸாவில் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த சுமார் 50 பிணைக்கைதிகள் கொல்லப்பட்டனர், என்றார். கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி, பலரைக் கொன்று, மேலும் பலரைச் பேரைச் சிறைபிடித்துச் சென்றது. …
-
- 4 replies
- 837 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 03 OCT, 2023 | 02:58 PM மோசடி மூலம் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 100 மில்லியன் டொலருக்குமேல் பணம் சம்பாதித்தார் என சட்டத்தரணியொருவர் குற்றம்சாட்டியுள்ளார். டொனால்ட் டிரம்பிற்கு எதிரான சிவில் மோசடி விசாரணைகள் திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் சட்டத்தரணியொருவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். டிரம்பும் அவரது நிறுவனத்தை சேர்ந்தவர்களும் அதிகாரிகளும் அவரது இரண்டு மகன்களும் இந்த வழக்கில் நியுயோர்க் சுப்பீரியர் நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ள இந்த வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். அவர்கள் மோசடியில் ஈடுபட்டனர் போலியான வர்த்தக ஆவணங்களை சமர்ப்பித்தனர் ப…
-
- 1 reply
- 310 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் பயங்கரம் : மர்ம நபரின் துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் உயிரிழப்பு! அமெரிக்காவில் மர்ம நபரொருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 22 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. மைன் நகரில் உள்ள லெவிஸ்டன் பகுதியிலேயே நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் இத்துப்பாக்கிச் சூட்டில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், எனவும் அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்த விசாரணைகளைப் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2023/1355686
-
- 19 replies
- 1.5k views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல்களையும், எச்சரிக்கையும் கொடுத்து வரும் இரானால் உண்மையில் இஸ்ரேலுடன் போரிடுவதற்கான திறன் உள்ளதா என்பதுதான் தற்போதைய கேள்வியாக உள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், பிரியங்கா ஜா பதவி, பிபிசி செய்தியாளர் 27 அக்டோபர் 2023, 03:35 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் காஸா மீதான தாக்குல்களை நிறுத்த வேண்டும், இல்லை என்றால் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தாங்கள் தள்ளப்படுவோம் என இரான் வெளியுறவுத் துறை அமைச்சர் இஸ்ரேலுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே, ஐ.நா.வ…
-
- 4 replies
- 1.2k views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 27 OCT, 2023 | 11:20 AM சிரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஈரான் இராணுவம் மற்றும் ஈரான் ஆதரவு குழுக்களின் இரண்டு நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. ஈராக் சிரியாவில் உள்ள அமெரிக்க படையினரின் தளங்கள் மீது சமீபத்தில் ஆளில்லா விமானதாக்குதல்கள் இடம்பெற்ற நிலையிலேயே இந்த தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டின் தெரிவித்துள்ளார். ஈராக் சிரியாவில் உள்ள அமெரிக்க படையினரை பாதுகாப்பதற்காக இந்த துல்லிய தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க படையினருக்கு எதிரான ஈரான் ஆதரவு தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை அவ…
-
- 0 replies
- 574 views
- 1 follower
-
-
இஸ்ரேல் நடத்தும் போர் மத்திய கிழக்கிற்கு அப்பாலும் பரவக்கூடும் – ரஷ்ய ஜனாதிபதி எச்சரிக்கை. காசாவில் இஸ்ரேல் நடத்தும் போர் மத்திய கிழக்கிற்கு அப்பாலும் பரவக்கூடும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். ஒருசிலர் செய்யும் குற்றங்களுக்காக பாலஸ்தீன பகுதியில் உள்ள அப்பாவி குழந்தைகள், பெண்கள் மற்றும் வயதானவர்கள் தண்டிக்கப்படுவது தவறு என்றும் தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் எஇரத்தக்களரி மற்றும் வன்முறையைத் தடுப்பதே அனைவரது நோக்கமாக இருக்க வேண்டும் என விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். நெருக்கடி மேலும் அதிகரித்தல் கடுமையானதும் மிகவும் ஆபத்தான மற்றும் அழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார். …
-
- 1 reply
- 555 views
-
-
Published By: RAJEEBAN 26 OCT, 2023 | 12:22 PM இஸ்ரேலிற்கு ஆதரவளிக்கும் வகையில் அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் கருத்து தெரிவித்து வருவதற்காக அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக சிட்னியை சேர்ந்த சட்டநிறுவனமொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அவுஸ்திரேலிய பிரதமரும் அவரது அமைச்சரவை சகாக்களும் வெளியிட்டுவரும் கருத்துக்கள் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு உடந்தையாவதற்கு சமமானது என பேர்ச்குரொவ்லீகல் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் உள்ள பாலஸ்தீனியர்களின் சார்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதை தவிர்க்கவேண்டும் என்றால் அவுஸ்திரேலிய அரசாங்கம் பல நடவடிக்கைகளை தவிர்க்கவேண்டும் என அந்த அமைப்பு தெரிவ…
-
- 1 reply
- 178 views
- 1 follower
-
-
ஹமாஸ் பெண்களை எவ்வாறு நடத்துகிறது? சுரங்கப் பாதையில் உணவு, பாதுகாப்பு எப்படி? மீண்டு வந்தவர் பேட்டி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேலிய பிணைக்கைதிகள் 2 பேரை இன்று அதிகாலை விடுவித்தது. அவர்கள் 79 வயதான நூரித் கூப்பர் மற்றும் 85 வயதான யோஷேவேத் லைஃப்ஷிட்ஸ் ஆகியோர் ஆவர். ஆனால் இவர்களது கணவர்கள் இன்னும் ஹமாஸ் பிடியிலேயே இருக்கிறார்கள். இதன் மூலம் ஹமாஸ் விடுவித்திருக்கும் பணயக் கைதிகளின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்திருக்கிறது. அக்டோபர் 7ம் தேதி நடைபெற்ற திடீர் தாக்குதலுக்கு பிறகு, ஹமாஸ் குழுவினரால் 222 பேர் பணய கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர் என்று இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. அவர்களில் 20 குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட 2…
-
- 24 replies
- 1.3k views
- 1 follower
-
-
கனடாவின் ஒட்டாவாவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் அதன் துணைத் தூதரகங்களாக விளங்கும் ரொறன்ரோ மற்றும் வான்கூவர் ஆகிய அலுவலகங்களில் விசா சேவைகளை தற்காலிகமாக நிறுத்திவைக்க முன்னர் தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போது பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு பரிசீலனைகள் மற்றும் கனடியர்களின் பிரயாணத் தேவைகள் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு பாதுகாப்பு நிலைமையை பரிசீலித்த பிறகு இது தொடர்பாக கனடாவின் சமீபத்திய நடவடிக்கைகள் ஆகியவற்றையும் கவனத்தில் எடுத்து தற்போது கனடியர்களுக்கான விசா சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஒக்டோபர் 26முதல் அமுலுக்கு வரும் பின்வரும் விசா வகைகள் நுழைவு விசா வணிக விசா மரு…
-
- 0 replies
- 432 views
-
-
Published By: RAJEEBAN 25 OCT, 2023 | 12:03 AM ஹமாஸ் ஒக்டோபர் ஏழாம் திகதி மேற்கொண்ட தாக்குதலிற்கான வரலாற்று சூழ்நிலைகளை முன்வைத்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் ஆற்றிய உரைக்கு இஸ்ரேல் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளதுடன் அவர் பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் கூட்டமொன்றில் உரையாற்றிய அன்டனியோ குட்டரஸ் ஹமாசின் தாக்குதல் வெற்றிடமொன்றில் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ளார். பாலஸ்தீன மக்கள் 56 வருட மூச்சுதிணறவைக்கும் ஆக்கிரமிப்பிற்குட்படுத்தப்பட்டுள்ளனர். தங்கள் நிலங்கள் ஆக்கிரமிப்பாளரினால் பறிபோவதையும் வன்முறையில் சிக்குண்டுள்ளதையும் பார்த்துள்ளனர் என ஐக்கியநாடுகள் நாடுகள் செயலாளர் நாயகம…
-
- 6 replies
- 405 views
- 1 follower
-
-
காசாவின் நிலை -எங்கள் கூட்டு மனச்சாட்சி மீதான கறை – நாளாந்தம் 400 சிறுவர்கள் கொல்லப்படுகின்றனர் – காயமடைகின்றனர் – யுனிசெவ் Published By: RAJEEBAN 25 OCT, 2023 | 07:43 AM காசாவில் கடந்த 18 நாட்களில் கொல்லப்பட்ட சிறுவர்கள் குறித்த விபரங்களை யுனிசெவ் அமைப்பின் மத்திய கிழக்கிற்கான இயக்குநர் வெளியிட்டுள்ளார். காசாவில் கடந்த 18 நாட்களில் 2346 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் 5364 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ள அடெலே கொடர் நாளாந்தம் 400 பாலஸ்தீன சிறுவர்கள் கொல்லப்படுகின்றனர் அல்லது காயமடைகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். காசாவில் காணப்படும் நிலை எங்கள் கூட்டு மனச்சாட்சி மீதான கறையாகும் என தெரிவித்துள்ள யுனிச…
-
- 1 reply
- 636 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜொனாதன் பேலி பதவி, பாதுகாப்பு செய்தியாளர், இஸ்ரேல் 25 அக்டோபர் 2023, 10:12 GMT புதுப்பிக்கப்பட்டது 52 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்கா தடையற்ற ஆதரவை இஸ்ரேலுக்கு தொடர்ந்து தருவதாக உறுதியளித்துள்ளது. அதற்காக தனது ராணுவ உதவியையும் அளித்துள்ளது. ஆனால் இப்பகுதியில் கடந்த காலச் சிக்கல்களின் வடுக்கள் இன்னும் உணரப்படுவதால், அமெரிக்காவின் ஈடுபாட்டிற்கான வரம்பு எவ்வளவு தூரம் உள்ளது? இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலுக்கு தனது முதல் எதிர்வினையில், அமெரிக்க அதிபர் பைடன், அமெரிக்கா யார் பக்கம் என்பதை தெளிவுபடுத்தினார்: "அமெரிக்கா இஸ்ரேலுக்கு பின்னே பக்கப…
-
- 0 replies
- 288 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் பனிப்பொழிவால் விபரீதம்: 168 வாகனங்கள் மோதி சங்கிலித்தொடர் விபத்து – 8 பேர் பலி அமெரிக்காவில் லூசியானா மாகாணத்தின் தெற்கு பகுதியில் மிகப்பெரிய சதுப்பு நிலம் காணப்படுகிறது. இங்கு ஏற்பட்ட தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இதற்கிடையே அங்கு காலையில் கடும் பனிப்பொழிவு உருவானது. இந்த பனிப்பொழிவுடன் தீயில் இருந்து வெளியேறிய புகையும் சேர்ந்தது. எனவே அந்த பகுதியில் உள்ள சாலை முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சி அளித்தது. ஒன்றன்பின் ஒன்றாக மோதின இதனால் சாலையில் முன்னால் வரும் வாகனங்களை பார்க்க முடியாத அளவுக்கு மூடுபனி உருவானது. அப்போது அபாயகரமான வேதிப்பொருட்களை ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று அந்த வழியாக சென்றது. மூடுபனி காரணமாக எதிரே வந்த வா…
-
- 1 reply
- 448 views
-
-
இலங்கையை இராணுவ தளபாட விநியோக தளமாக பயன்படுத்துவதற்கு சீனா முயற்சி- பென்டகன் அறிக்கை Published By: RAJEEBAN 23 OCT, 2023 | 11:36 AM இலங்கையை இராணுவ தளபாட விநியோகத்திற்காக பயன்படுத்துவது குறித்து சீனா ஆராய்ந்துள்ளது என பென்டகன் தெரிவித்துள்ளது. சீனா தனது உலகளாவிய இராணுவ தளங்களை விஸ்தரிக்க முயல்கின்றது என தெரிவித்துள்ள பென்டகன் சீனா தனது இராணுவ தளபாட விநியோகத்திற்காக 18 நாடுகள் குறித்து கவனம் செலுத்தியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது. இராணுவ நடவடிக்கைகளிற்கான தேவை எழும்போது சீனா இராணுவம் பயன்படுத்தக்கூடிய தளங்களை உருவாக்குவது குறித்தே சீனா கவனம் செலுத்துகின்றது. சீனா இராணுவ தளபாட விநியோகத்திற்கான தளங்கள…
-
- 3 replies
- 333 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 7 நிமிடங்களுக்கு முன்னர் அக்டோபர் 23-ஆம் தேதியின் 24 மணி நேரத்தில் மட்டும் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 700-க்கும் மேற்பட்ட பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் குழு நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதே 24 மணிநேரத்தில் 400 ‘பயங்கரவாத இலக்குகளைத்’ தாக்கி ஹமாஸ் குழுவின் பல தளபதிகளைக் கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் கூறியிருக்கிறது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, அக்டோபர் 23-ஆம் தேதிகாஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 700-க்கும் மேற்பட்ட பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் குழு நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது …
-
- 0 replies
- 196 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, தெற்கு சீன கடல் அல்லது மேற்கு பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்த சீனாவும் பிலிப்பைன்ஸும் போட்டியிட்டு வருகின்றன. 19 நிமிடங்களுக்கு முன்னர் ஞாயிற்றுக்கிழமை சீன கடற்படையின் கடலோரக் காவல் கப்பலுக்கும் பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல் கப்பலுக்கும் இடையே நடைபெற்ற மோதல் வீடியோவைக் கவனமாகக் கவனியுங்கள். மோதலின் போது, ஒரு கப்பலின் பின்புறம் மற்றொரு கப்பலின் மேல் மோதும்போது, அதற்கிடையில் ஒரு பிலிப்பைன்ஸ் தொலைக்காட்சி குழுவினர் இதனை படமாக்க கடுமையாக முயற்சிப்பது தெளிவாகத் தெரிகிறது. தென் சீன கடலில் உள்ள மூழ்கிய பவளத் திட்டுகள் தொடர்பாக மணிலாவிற்கும் பெய்ஜிங்கிற்கும் இடையிலான மோதல் பல தசாப்…
-
- 0 replies
- 147 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் காசா பகுதியில் வசிக்கும் மக்களை ‘பாதுகாப்புப் காரணங்களுக்காக’ அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது. காசா நகரத்தில் வசிப்பவர்களை தெற்கு பகுதிகளுக்குச் செல்லுமாறு இஸ்ரேல் ராணுவம் அறிவித்திருக்கிறது. கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 7) அன்று ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேல் காசா மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதில் 447 குழந்தைகள், 248 பெண்கள் உட்பட 1,417 பேர் உயிரிழந்துள்ளதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த எதிர்தாக்குதலின் பகுதியாக, தரைவழித் தாக்குதல் நடத்த காசா எல்லையில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள், கனரக பீரங்கி…
-
- 20 replies
- 1.7k views
- 1 follower
-
-
1980 களின் பிற்பகுதியில் ஹிந்தியாவின் பிராந்திய நலனை முன்னிலைப்படுத்தி.. புளொட் கும்பலை வைத்து.. ஹிந்திய உளவு அமைப்பின் உதவியோடு செய்யப்பட்ட இராணுவப் புரட்சி.. பின் அதை ஒடுக்கப் போவதாகச் சொல்லி மாலைதீவில் இறங்கிய ஹிந்தியப்படை.. இது நாள் வரை அங்கு பல்வேறு இராணுவ விமானப்படை தேவைகளுக்காகத் தங்கி இருக்கிறது. இந்தச் சம்பவத்தை வைத்து ஹிந்தியா உலக அரங்கில் தமிழீழ விடுதலைக்காகப் போராடிய.. அனைத்து ஈழத்தமிழ் இயக்கங்களையும் பயங்கரவாதிகள் என்று சித்தரித்து வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. தற்போது மாலைதீவு அதிபராக தெரிந்தெடுக்கப்பட்டிருக்கும். மொகமட் முய்ஸ்சு.. இவ்வாறு தங்கியுள்ள ஹிந்தியப் படைகளை வெளியேற்றப் போவதாக அறிவித்துள்ளதுடன்.. இந்த அறிவிப்பை சீனா வரவேற்றிருக்கிறது. …
-
- 6 replies
- 677 views
- 1 follower
-