உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26610 topics in this forum
-
புதுடில்லி: இந்தியாவின் பாதுகாப்புக்கு பாகிஸ்தானும் சீனாவும் மிகப்பெரிய தொல்லையாக இருக்கின்றன என்று இராணுவத் தளபதி வி.கே.சிங் கூறினார். இந்திய இராணுவம் பங்கும் பணியும் என்ற கருத்தரங்கை டில்லியில் சனிக்கிழமை தொடக்கி வைத்து வி.கே.சிங் பேசியதாவது; இந்தியாவுக்கு இரண்டு பெரிய தொல்லைகள் இருக்கின்றன. பாகிஸ்தானில் ஆட்சி நடத்துவதில் பிரச்சினை இருக்கிறது.அங்குள்ள உள்நாட்டு நிலைவரம் நன்றாக இல்லை.ஆனால், தீவிரவாத அமைப்புகள் இப்போதும் கட்டுக்கோப்பாக இருக்கின்றன. இது நமக்கு கவலை அளிக்கிறது. பொருளாதாரம் மற்றும் இராணுவ ரீதியாக வேகமாக வளர்ந்து வரும் சீனாவும் இந்தியாவுக்கு கவலை அளிக்கும் வகையில் இருக்கிறது. அந்த நாட்டின் உடனான எல்லைகள் ஸ்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருந்தாலும் எல்லைப் ப…
-
- 2 replies
- 804 views
-
-
சீன அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வரைபடத்தில், இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலத்தை, தனக்கு சொந்தமான பகுதியாகக் குறிப்பிட்டு, விஷமம் செய்துள்ளது. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்னை இருந்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலத்துக்கு, சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இது தொடர்பாக, இரு நாடுகளுக்கு இடையே வார்த்தை போரும் நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில், நேரம் கிடைக்கும்போதெல்லாம், தன்னால் முடிந்த அளவுக்கு சீன அரசு விஷமத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சீன அரசு சார்பில், "மேப் வேர்ல்டு' என்ற வரைபடம் (மேப்) சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், சீனாவின் நிலப்பரப்பு தொடர்பான விவரங்களும் இடம் பெற்றுள்ளன. சீன மொழி…
-
- 3 replies
- 686 views
-
-
ஐக்கிய அமெரிக்கா, மேற்கு பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள குவாம் (Guam) தீவுகளில் சுமார் 12.8 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் மிகப் பிரமாண்ட இராணுவ தளமொன்றினை அமைத்து வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேற்படி தளமானது ஏவுகணை எதிர்ப்புக் கட்டமைப்பு , அணுச்சக்தி விமான தாங்கிகளுக்கான கப்பற்துறை உட்பட அதிநவீன கட்டமைப்புக்களை உள்ளடக்கவுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மேற்கு பசுபிக் பிராந்தியத்தில் இராணுவத் தளமொன்றுக்காக மேற்கொள்ளப்படும் மிகப்பாரிய முதலீடு இதுவாகும். அது மட்டுமல்ல, கடந்த காலங்களில் கடற்படை கட்டுமானங்களுக்கென செலவிடப்படவுள்ள மிகப்பெரிய தொகையும் இதுவாகும். எனினும் இந்நடவடிக்கை தமது சாதாரண வாழ்வினை பாதிக்கும் என குவாம் தீவு மக்கள் அச்…
-
- 1 reply
- 706 views
-
-
காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கவில்லை: அருந்ததி ராய் 'ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஒருபோதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கவில்லை'' என்று பிரபல எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான அருந்ததி ராய் தெரிவித்துள்ளார். காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தது குறித்து அருந்ததி ராய் பேசிய பேச்சு சர்ச்சையானதைத் தொடர்ந்து, தற்போது இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். ஸ்ரீநகரில் சமூக அமைப்புகளின் கூட்டமைப்பு நடத்திய கருத்தரங்கு ஒன்றில் அருந்ததி ராய் உரையாற்றினார். காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக ஒருபோதும் இருக்கவில்லை. இது வரலாற்று உண்மை. இந்திய அரசும் இதை ஏற்றுக்கொண்டுள்ளதாக அருந்ததி ராய் அப்போது குறிப்பிட்டுள்ளார். http://…
-
- 4 replies
- 738 views
-
-
ஈராக் போரில் அமெரிக்காவின் அத்துமீறல்கள்: ரகசிய ஆவணங்கள் வெளியானதால் பரபரப்பு!! ஈராக் மீது அமெரிக்கா நடத்திய போர் தொடர்பான ரகசிய ஆவணங்கள் லீக் ஆன விவகாரம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 2004 ம் ஆண்டு முதல் 2009 வரை ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்து அதிபர் சதாம் உசேன் வரை சிறையில் தள்ளப்பட்டு அவரும் தூக்கிலிடப்பட்டார். இந்த போருக்கு பின் ஈராக்கில் ஜனநாயக தேர்தல் நடத்தப்பட்டு அங்கு புதிய ஆட்சி கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் விக்கிலீக் இணையதளத்தில் ஈராக் போர் ஆவணங்கள் லீக் ஆகி இருக்கிறது. 4 லட்சம் ரகசியம் கொண்ட ஆவணங்களில் அமெரிக்காகவின் அத்துமீறல்கள், அட்டூழியங்கள், மற்றும் போர் வீரர்கள், பொதுமக்கள் துன்புறுத்திய சம்பவம் கொண்ட புகைப்படங்களு…
-
- 2 replies
- 695 views
-
-
"தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது' என, கர்நாடக அனைத்து கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து கட்சிக் கூட்டத்தில் நடந்த காரசார விவாதத்துக்குப் பின், இம்முடிவு எடுக்கப் பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. "தமிழக விவசாயத்திற்கு, மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்' என, தமிழக முதல்வர் கருணாநிதி, கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிடம் கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து, முதல்வர் எடியூரப்பா, சட்டசபை மற்றும் மேலவை அனைத்து கட்சிக் கூட்டத்தை அவரது அலுவலக இல்லமான கிருஷ்ணாவில் நேற்று மாலை கூட்டியிருந்தார். கர்நாடக அரசியலில், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ம.ஜ.த., கட்சிகள், ஒரு மாதமாக, எடியூரப்பாவின் பா.ஜ., ஆட்சியை ஒழித்து கட்ட வேண்டும் என, கடும் முயற்சி ம…
-
- 0 replies
- 613 views
-
-
. இந்தோனேசியாவில் சுனாமியும், எரிமலையும் பீறிட்டு கிளம்பியது 7.7 ரிக்டர் நில அதிர்வு ஏற்பட்ட 24 மணித்தியாலத்துக்குள் இந்தோனேசிய தீவுப் பகுதிகளை மூன்றடி உயரமான அலைகள் 600 மீற்றர் வரை ஊருக்குள் ஊடுருவியது. இதுவரை 150 பேர் வரை மரணம். 500 பேரை காணவில்லை. தகவல் மூலம்; http://www.general-anzeiger-bonn.de/index.php?k=news&itemid=10007&detailid=803921 http://www.bbc.co.uk/news/world/ .
-
- 0 replies
- 706 views
-
-
இவருக்கு வாக்களியுங்கள்: 2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன் தமிழ் ஊடகங்களும் இணைய இதழ்களும் இச்செய்தியை பிரசுரம் செய்யவேண்டும் திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம். உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாக உணர்வோடும் , சேவை மனப்பான்யுடனும் , துணிவுடனும் உழைத்துகொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக , தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம். அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம். அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் க…
-
- 5 replies
- 2.6k views
-
-
ஈராக்கின் முன்னாள் பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான தாரிக் அஸீஸுக்கு அந்நாட்டு உயர் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மாற்று மத கட்சிகளை அழிக்க முயன்ற குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 74 வயதான தாரிக் அஸீஸ், முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுஸைனின் ஆட்சிக்காலத்தில் பிரதிப் பிரதமராகவும் வெளிவிவகார அமைச்சராகவும் பதவி வகித்தார். சதாமின் நெருங்கிய ஆலோசகராகவும் அவர் விளங்கினார். அவர் ஒரு கிறிஸ்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி வழக்கில் ஏனைய இரு பிரதிவாதிகளான; முன்னாள் உள்துறை அமைச்சர் சதோவுன் ஷாகிர், சதாம் ஹுஸைனின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் அபேத் ஹமோட் ஆகியோருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள…
-
- 0 replies
- 556 views
-
-
இந்தோனேசியா: சுனாமிக்கு 40 பேர் பலி இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், கடலில் 10 அடி உயரத்துக்கு சுனாமி உருவானது. இதில் 40 பேர் பலியாயினர்; பெண்கள், குழந்தைகள் என 380 பேர் காணாமல் போய்விட்டனர். இந்தோனேசியாவின், மேற்கு பகுதியில், சுமத்ரா தீவின் அருகிலுள்ள மென்டாவாய் தீவுக்கருகில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், மேற்கு சுமத்ரா தீவிலுள்ள பல்வேறு மாகாணங்களில் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால், கடலில் 10 அடி உயரத்துக்கு சிறிய அளவில் சுனாமி ஏற்பட்டது.மென்டாவாய் தீவுகளில் 20 கி.மீ., தூரத்துக்கு சுனாமியால் ஏற்பட்ட அலைகள் புகுந்தன. இந்தச் சுனாமியில் சிக்கி மென்டாவாய் தீவுகளில் …
-
- 0 replies
- 564 views
-
-
. பெங்களூரில் கழுதைப் பாலுக்கு கிராக்கி - 1 லிட்டர் 200 முதல் 400 ரூபாய். பெங்களூர்: பெங்களூரில் கழுதைப் பாலுக்கு செம கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பால் ரூ. 200 முதல் 400 வரை விற்கப்படுகிறதாம். கழுதைப் பால் குழந்தைகளுக்கு நல்லது என்ற எண்பது மக்களின் பொதுவான எண்ணம். குறிப்பாக குழந்தைகளுக்கு வரும் நோய்களை கழுதைப் பால் குணப்படுத்துகிறது என்றுமக்கள் நம்புகிறார்கள். இதில் பாதியை டாக்டர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். அதாவது கழுதைப் பாலில் புரதச் சத்து அதிகம் உள்ளது என்பதை டாக்டர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். அதேசமயம், அதன் மருத்துவப் பயன் குறித்து டாக்டர்கள் இதுவரை முழு அளவில் ஒப்புக்கொள்ளவில்லை. இப்படி இருவேறு கருத்துக்கள் இருந்தாலும் கழுதைப் பா…
-
- 0 replies
- 649 views
-
-
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தீபாவளிப் பண்டிகையன்று தனது இந்தியப் பயணத்தைத் தொடங்குகிறார். முன்னதாக நவம்பர் 7ம் தேதி ஒபாமா இந்தியா வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்திய மக்களின் பெரும் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி 5ம் தேதி கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் இந்தியாவில் தீபாவளியைக் கொண்டாடும் வகையில் ஒபாமாவின் பயணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 4ம் தேதி இரவு இந்தியா புறப்படுகிறார் ஒபாமா. தீபாவளியன்று இரவு அவர் இந்தியா வருகிறார். முதலில் மும்பை செல்கிறார். அங்கு வர்த்தக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். மும்பையில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறா். பின்னர் 7ம் தேதி அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குப் போகிறார். 8ம் தேதி டெல்லி…
-
- 4 replies
- 955 views
-
-
- பாகம் 1 http://www.dinamalar.com/video_Inner.asp?news_id=1213&cat=32 - பாகம் 2 http://www.dinamalar.com/video_Inner.asp?news_id=1212&cat=32 தமிழக மாணவர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை தீவிரம் ( அக்டோபர் 22,2010 ) தமிழக மாணவர் காங்கிரஸ் தேர்தலையொட்டி, கல்லூரிகளில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி கோஷ்டி தலைவர்களின் ஆதரவாளர்கள் மத்தியில் தீவிரம் அடைந்துள்ளது.அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் உத்தரவின்படி, தமிழக மாணவர் காங்கிரஸ் கலைக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்தல் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. கல்லூரிகள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்பக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்ற அற…
-
- 0 replies
- 574 views
-
-
புலிகள் பயங்கரவாதிகளா?அமெரிக்க நீதிபதி அண்மையில் கருணா என்று அழைக்கப்படும் கந்தசாமி கருணாகரன் என்பவருக்கு எதிரான வழக்கில் நடந்த விவாதம். NY Judge Asks: Are Tamil Tigers A Threat To US? by Associated Press, October 15, 2010 The case against the jailed Kandasamy doesn't neatly fit the definition of "a more obvious or garden variety terrorism case, where ... our security interests are compromised and the safety of our citizenry is in jeopardy," More than three years after federal agents locked up a Sri Lankan immigrant they say was the top U.S. representative of the Tamil Tigers, his fate may hinge on a complex question: Was the rebel group a terrorist…
-
- 4 replies
- 940 views
-
-
பேரழிவுக்கான ஆயுதங்கள் வைத்திருப்பதாக கூறி 2003 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் திகதி ,அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் அதன் நேசநாடுகள் ஈராக்கின் மீது போர்தொடுத்தன. 2002 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தீர்மானம் 1441 நிறைவேற்றியது. அது ஈராக்கை ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுத ஆய்வாளர்கள் ஈராக்கிடம் பேரழிவிற்கான எந்த வித ஆயுதமும் இல்லை என்பதனை உறுதிப்படுத்த ஒத்துழைக்குமாறு கூறியிருந்தது.ஐக்கிய நாடுகள் கண்காணிப்பு சரி பார்த்தல் மற்றும் சோதனைக் குழு பேரழிவிற்கான எந்த வித ஆயுதங்களும் ஈராக்கிடம் இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை.இருப்பினும் ஈராக்கின் ஆயுத இருப்பு அறிக்கையின்படி நிச்சயமாக கூறமுடியவில்லை என்று கூறியது. அமெரிக்காவால் அனுப்பப்பட்ட ஈராக் ஆய்வுக்குழு 1991 ஆம் ஆண்டிலே…
-
- 3 replies
- 905 views
-
-
மகிந்தவுக்கு போதனை செய்த தமிழன். ஏழாவது நிமிடத்திலிருந்து அவரது உரை ஆரம்பமாகிறது. யாரும் மொழி பெயரக்க்க கூடியவரகள் இருந்தால் அவரது உரையை தமிழாக்கம் செய்யவும்.
-
- 1 reply
- 895 views
-
-
ஒரு காலத்தில் கனடா இராணுவத்தின் புகழ்பூத்த அதிகாரியாக இருந்த கேர்ணல் ரசல் வில்லியம்ஸின் இரட்டை வாழ்க்கையின் இரகசியங்கள் இன்று முதல் நீதிமன்றத்தில் அம்பலமாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இவர் மீதான இரட்டைக் கொலை வழக்கு விசாரணைகள் இன்று ஆரம்பமாகின்றன. கனடாவின் மிகப்பெரிய இராணுவ விமானத்தளமான CFB Tenton இன் கட்டளையிடும் தளபதியாக இருந்தவர்தான் கேர்ணல் வில்லியம்ஸ். 27 வயதான ஜெஸிகா லோய்ட் மற்றும் 38 வயதான கோப்ரல்.மேரி பிரான்ஸ் கொமயோ ஆகிய இரண்டு பெண்களையும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திக் கொலை செய்தார் என்பதுதான் இவர் மீதான குற்றச்சாட்டுக்களாகும். கடந்த பெப்ரவரியில் இந்தக் குற்றச்சாட்டுக்களுக்காக இவர் கைது செய்யப்பட்டபோது கனடா இராணுவமே அதிர்ச்சியடைந்தது. இவர் ஒர…
-
- 2 replies
- 905 views
-
-
சவூதி இளவரசருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சவூதி இளவரசரான சவுத் அப்துல் அஜிஸ் பின் நாசர் அல் சவுத் தன்னுடய பணியாளரை கொலை செய்த வழக்கு இங்கிலாந்து நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பு வழங்கிய நீதிபதி பீன் கூறுகையில், "ஒரு இளவரசர் தண்டனைக்கு உள்ளாவது வழக்கமாக இல்லாத ஒன்று. சட்டத்துக்கு அப்பாற்பட்டு இந்த நாட்டில் யாருக்கும் இடம் இல்லை. சவூதி அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவரான உங்களுக்கு இதை விட கடுமையானதாகவோ அல்லது குறைவாகவோ தண்டனை வழங்குவது எனக்கு தவறான ஒன்றாகும்" என்றார். http://www.z9world.com/view.php?2edY…
-
- 0 replies
- 666 views
-
-
இந்திய அமைதிப்படையினரால் யாழ். ஆஸ்பத்திரி ஊழியர் 21 பேர் படுகொலையுண்ட நினைவு நாள் யாழ்.போதனா வைத்தியசாலையில் 1987 ஆண்டு ஒக்ரோபர் 21 ஆம், 22 ஆம் திகதிகளில் இந்திய அமைதிப்படையினரால் கொல்லப்பட்ட 21 பணியார்களின் 23 ஆம் ஆண்டு நினைவு தினம் நாளை வெள்ளிக்கிழமை வைத்தியசாலையில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. கடமை நேரத்தில் பலியான இந்த 21 பணியாளர்களினதும் நினைவாக வைத்தியசாலையில் உள்ள அவர்களுடைய உருவப் படங்களுக்கு சுடர் ஏற்றி மலரஞ்சலி செய்யும் நிகழ்வு இடம்பெறும். இதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. கொல்லப்பட்ட பணியாளர் களின் உறவினர்கள், வைத்திய அதிகாரிகள், வைத்தியசாலைப் பணியாளர்கள் எனப் பலர் இந்த நினைவு நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர். இந்தப் படுகொலைச் சம்பவத்தில் யாழ். போதனா…
-
- 0 replies
- 576 views
-
-
இராவணனை வழிபடக்கூடிய பழங்குடி மக்கள் இந்தியாவில் இருக் கிறார்கள். இராமாயணம் – ஆரிய திராவிடப் போராட்டத்தையே குறிக் கிறது என்றார், மறைந்த ஜவகர்லால் நேரு. நேரு குடும்பத்தில் வந்ததாகக் கூறிக் கொள்ளும் சோனியாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும், குடியரசுத் தலைவரும் டெல்லியில் இராவணன் உருவத்தை எரிக்கும் ‘ராமலீலா’ ஆரியத் திருவிழாவில் பங்கேற்று, தென்னாட்டு மக்களை திராவிடர்களை இழிவுபடுத்தி இருக்கிறார்கள். மாவீரர் இராவணன் பூமியில் வாழ்ந்த ஈழத் தமிழர்களை அழித் தொழித்தக் கூட்டம், மீண்டும் ஆர்ப்பரிக்கிறது. ‘இராமன் பிறந்த இடத்தை’ உயர்நீதி மன்றங்கள் தீர்மானிக்கின்றன. ‘இராவணன்’ அழிவில் சோனியா குடும்பம் மகிழ்ச்சி கூத்தாடுகிறது. அன்று ராஜாஜியின் ‘சக்கரவர்த்தி திருமகன்’ என்ற இராமா…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஊட்டி: விடுதலைப் புலிகள் [^] இயக்கம் மீதான தடை நீங்கும் வரை ஓய மாட்டோம். இப்போது நடக்கும் விசாரணை நம்பிக்கை தருவதாக உள்ளது, என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ. விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்தியாவில் தடை செய்ததற்கு போதிய காரணங்கள் இருகின்றனவா, இல்லையா என்பதை விசாரிப்பதற்காக சட்டவிரோத நடவடிக்கைத் தடுப்புச் சட்டத்தின் கீழ், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரமஜித் தலைமையில் மத்திய தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பாயத்தின் கூட்டம் ஊட்டி தமிழகம் விருந்தினர் மாளிகையில் காலை 11 மணிக்கு நடந்தது. இந்த கூட்டத்தில் தீர்ப்பாயத்தின் தலைவர், டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி விக்ரமஜித் தலைமையில் 13 உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த அமர்வின்போது நேரில் ஆஜரான மதிமுக பொத…
-
- 0 replies
- 555 views
-
-
வாஷிங்டன், அக்.19: அமெரிக்க வாழ் இந்தியப் பேராசிரியர் சுப்ரா சுரேஷ், வாஷிங்டனில் உள்ள தேசிய அறிவியல் அறக்கட்டளை (என்.எஸ்.எப்) இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் மிக உயர்ந்த அறிவியல் அமைப்பாக என்எஸ்எப் விளங்கிறது. இவரது நியமன உத்தரவை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உறுதி செய்துள்ளார். அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிக்கு ஒதுக்கப்படும் 740 கோடி டாலரை நிர்வகிக்கும் பொறுப்பு இவரிடம் அளிக்கப்பட்டுள்ளது. அறிவியல் மற்றும் பொறியியல் சார்ந்த ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் அமைப்பாக என்எஸ்எப் திகழ்கிறது. இதன்கீழ் 2,000 நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஏற்கெனவே இப்பொறுப்பில் இருந்த ஜான் ஹோல்ட்ரன், அமெரிக்க அதிபரின் ஆலோசகராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து இந்த அறக்கட்டளையின் 13-வது …
-
- 0 replies
- 684 views
-
-
நூறு வயதைக் கடந்தும், ஆராய்ச்சி படிப்புக்கு (பிஎச்.டி.,) விண்ணப்பித்துள்ளார் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முதியவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான போலராம் தாஸ். கடந்த வாரம், தன் 100வது பிறந்த நாளைக் கொண்டாடிய தாஸ், கவுகாத்தி பல்கலைக் கழகத்தில் பிஎச்.டி., சேர்ந்துள்ளார்.மனைவியை இழந்த இவருக்கு ஒரு மகள், ஐந்து மகன்கள், 10 பேரன், பேத்திகள் மற்றும் ஒரு கொள்ளுப் பேத்தி உள்ளனர். இவருக்கு அவரது மகளே ஆசிரியராக இருந்து வழிகாட்டுதல்களை வழங்குகிறார் என்பது தான் குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாகும். இது குறித்து தாஸ் உற்சாகத்துடன் கூறியதாவது:பிஎச்.டி., படிப்பை படிக்க வேண்டும் என்பது பல நாள் கனவு. என் 100 வயது அனுபவத்தில், அரசியல், நிர்வாகம், மதம், சமுதாயம் என எல்லாவற்றிலும் பல சாத…
-
- 0 replies
- 598 views
-
-
சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோ வ்ஸ் சாலையில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வீடு உள்ளது. இங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். இந்நிலையில் நேற்று (அக்.17) நள்ளிரவில் ப.சிதம்பரம் வீட்டின் பின்புறத்தில் உள்ள மாடி வீட்டில் மூன்று இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களது கையில் டிஜிட்டல் கேமராக்கள் இருந்தது. ப.சிதம்பரம் வீட்டை புகைப்படம் எடுத்ததாக தெரிகிறது. உடனே கண்காணிப்பு பணியில் இருந்த போலீசார் பார்த்து ஓடிச் சென்று இளைஞர்களை பிடித்தனர். வீட்டின் கீழே நின்று கொண்டிருந்த மேலும் 2 பேரையும் பிடித்து ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இன்ஸ்பெக்டர் மோகன் புகைப்படம் எடுத்த 5 இளைஞர்களிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர்கள் 5 பேரும்…
-
- 3 replies
- 1k views
-
-
. தலைப்பாகைப் பிரச்சினை: பொற்கோயிலுக்குச் செல்லமாட்டார் ஒபாமா!! டெல்லி: அமெரிக்க அதிபர் ஒபாமா அடுத்த மாதம் இந்தியா வரும்போது அமிர்தசரஸுக்கு செல்ல மாட்டார் எனத் தெரியவந்துள்ளது. ஒபாமா, நவம்பர் 6-ம் தேதி மும்பை வருகிறார். அங்கு ஒருநாள் தங்கிய பின்னர் தில்லிக்கு செல்கிறார். முன்னதாக மும்பையில் இருந்து பொற்கோயிலைப் பார்வையிடுவதற்காக அமிர்தசரஸுக்குச் செல்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவருடைய பயணத்திட்டத்தில் செய்யப்பட்டுள்ள சில மாற்றங்கள் காரணமாக அவர் அங்கு செல்லமாட்டார் எனத் தெரிகிறது. ஒபாமாவின் இந்திய வருகையை முன்னிட்டு வெள்ளை மாளிகை அதிகாரிகள் குழு கடந்த மாதம் இந்தியா வந்தது. ஒபாமா பொற்கோயிலுக்குச் செல்லும்போது பாரம்பர…
-
- 1 reply
- 679 views
-