Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. Published By: SETHU 21 SEP, 2023 | 10:21 AM கொவிட்19 வைரஸ் ஆனது, சீனாவின் வுஹான் நக­ரி­லுள்ள ஆய்­வு­கூ­டத்திலிருந்து கசிந்தது அல்ல எனக் கூறு­வ­தற்­காக தனது சொந்த ஆய்­வா­ளர்­க­ளுக்கு அமெ­ரிக்­காவின் மத்­திய புல­னாய்வு முகவரகம் (சி.ஐ.ஏ.)'இலஞ்சம்' வழங்­கி­ய­தாக சி.ஐ.ஏ.யின் சிரேஷ்ட ஒருவர் அமெ­ரிக்கப் பாரா­ளு­மன்றக் குழு­விடம் அண்­மையில் சாட்­சியம் அளித்­துள்ளார். சி.ஐ.ஏ பணிப்­பாளர் வில்­லியம் பர்ன்­ஸுக்கு, அமெ­ரிக்கப் பாரா­ளு­மன்­றத்தின் இரு தெரி­வுக்­கு­ழுக்­களின் தலை­வர்கள் எழு­திய கடி­தத்தில் இச்­சாட்­சியம் குறித்து தெரி­வித்­துள்­ளனர். அமெரிக்கப் பாரா­ளு­மன்றத்தின் கொவிட்-19 பெருந்­தொற்று தொடர்­பான உப தெரி­வுக்­க…

  2. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வடகொரிய அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. கட்டுரை தகவல் எழுதியவர், பிரான்சிஸ் மாவோ பதவி, பிபிசி நியூஸ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் ஒளிரும் விண்வெளி மையமான வாஸ்டோச்னி காஸ்மோட்ரோமில் சந்தித்தனர். ஒரு பெரிய விருந்தில், இருவரும் ரஷ்ய மதுவை அருந்திக்கொண்டே, ஒருவருக்கொருவர் தங்களது தனிமைப்படுத்தப்பட்ட நாடுகளை வளப்படுத்துவது குறித்துப் பேசிக்கொண்டிருந்தனர். அங்கிருந்து புறப்படும் முன், இரு தலைவர்களும் மாதிரி துப்பாக்கிகளை அவர்களுக்குள் பரி…

  3. பட மூலாதாரம்,DR ROBBIE MALLET படக்குறிப்பு, பனிக்கட்டிகள் அதிவேகமாக உருகி வருவது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட், பெக்கி டேல் மற்றும் எர்வான் ரிவால்ட் பதவி, பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் அண்டார்டிகாவைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் இருக்கும் பனி, இதற்கு முந்தைய குளிர் காலத்தில் இருந்ததை விட மிகவும் குறைவாக உள்ளது என்பதை செயற்கைக்கோள் படம் காட்டுகிறது. ஒரு காலத்தில் புவி வெப்பமடைதலைத் தடுக்கும் விதத்தில் இருந்த ஒரு பகுதி குறித்த கவலையளிக்கும் தகவலாக இது பார்க்கப்படுகிறது. "இது இதுவரை நாம் பார்த்த எந்த ஒரு தர…

  4. கிழக்காசியாவில் உள்ள தீவு நாடு ஜப்பான். அந்நாடு ஒரு புதுவிதமான சிக்கலை எதிர்கொண்டு வருகிறது. ஜப்பானின் தேசிய தகவல் தரவின்படி அந்நாட்டு மக்கள் தொகையில் 29.1% பேர் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினராக உள்ளனர். இந்நிலை இப்படியே நீடித்தால், 2040 வருட காலகட்டங்களில் இது 34.8 சதவீதம் எனும் நிலையை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. 24.5 சதவீதத்துடன் இத்தாலியும், 23.5 சதவீதத்துடன் பின்லாந்தும் அடுத்தடுத்த நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. முதல்முறையாக ஜப்பானில் 10 பேரில் ஒருவர் 80 வயது நிரம்பியவராக இருப்பது தெரிய வந்துள்ளது. உலகிலேயே பிறப்பு விகிதம் குறைவான நாடுகளில் ஜப்பானும் ஒன்று. நாட்டில் பணியில் உள்ள குடிமக்களில் 65 வயதை கடந்தவர்கள் 13 சதவீதத்திற்கும் மே…

  5. ஈரானில் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அதுபோல் அமெரிக்காவும் ஈரானியர்களை சிறைபிடித்துள்ளது. இவ்வாறு சிறை பிடிக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய அமெரிக்கா- ஈரான் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஈரானில் உள்ள ஐந்து அமெரிக்கர்கள் சிறையில் இருநது விடுதலை செய்யப்படுவார்கள். அதேபோல் ஈரான் நாட்டைச் சேர்ந்த ஐந்து பேரை அமெரிக்கா விடுதலை செய்ய இருக்கிறது. மேலும், தென்கொரியாவில் இருந்து கட்டாருக்கு 6 பில்லியன் அமெரிக்க டொலரை மாற்றம் செய்யவும் அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் பிளிங்டன் கடந்த வாரமே கையெழுத்திட்ட நிலையில், நேற்றுதான் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே அமெரிக்க…

  6. Published By: RAJEEBAN 20 SEP, 2023 | 12:40 PM சூடானில் வாக்னர் ஆதரவு படையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னணியில் உக்ரைனின் விசேட படையணியினர் உள்ளனர் என சிஎன்என் தெரிவித்துள்ளது. சூடான் தலைநகருக்கு அருகில் வாக்னர் ஆதரவு படையினரின் நிலைகள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமானதாக்குதல் மற்றும் தரைநடவடிக்கைகளின் பின்னணியில் சூடானின் விசேட படையினர் உள்ளனர் என்பது சிஎன்என்னின் விசாரணையின் போது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக உக்ரைன் மீதான ரஸ்யாவின் தாக்குதலின் விளைவுகள் போர்முனையிலிருந்து பல மைல்களிற்கு அப்பால்வரை காணப்படுவதும் தெரியவந்துள்ளது. சூடானில் இடம்பெறும் தாக்குதல்களை சூடா…

  7. உக்ரைனோடு நிற்காது: உலக நாடுகளுக்கு ஜெலன்ஸ்கி எச்சரிக்கை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஐ.நா. பொதுச்சபையில் வருடாந்திர உயர்மட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஒரு நாட்டிற்கு எதிராக வெறுப்பு ஆயுதமாகும்போது, அது அந்த நாட்டுடன் நிற்காது. தற்போது உக்ரைனுக்கு எதிராக நடத்தப்படும் போரின் இலக்கு எங்கள் நிலங்கள், எங்கள் மக்கள், எங்கள் உயிர், எங்கள் வளங்கள் ஆகியவற்றை சர்வதேச விதிமுறை உத்தரவுக்கு எதிராக உங்களுக்கு (உலக நாடுகள்) எதிராக ஆயுதமாக மாற்றுவதற்காகத்தான். கொரோனா தொற்றால் ஏற்பட்ட உணவு, எரிபொருள் உள்ளிட்டவையின் விலைவாசி உயர்வை உக்ரைன் மீதான போர் மேலும் அதிகப்படுத்தியுள்ளது. உலகளாவிய பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வளர்ந்து வரும் …

  8. 12 SEP, 2023 | 10:53 AM லிபியாவின் கிழக்கு பகுதியை தாக்கியுள்ள டானியல் புயல் காரணமாக உருவான பெரும் வெள்ளம் பல கரையோர நகரங்களில் குடிமனைகளிற்குள் புகுந்து பெரும் சேதத்தை விளைவித்ததால் 2000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். 2000 பேர் உயிரிழந்துள்ளனர் ஆயிரக்கணக்கானவர்களை காணவில்லை என சர்வதேச சமூகத்தினால் அங்கீகரிக்கப்படாத கிழக்கு லிபிய அரசாங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். உயிரிழப்புகள் பல ஆயிரமாக மாறாலாம் என லிபியா குறித்த நிபுணர் ஒருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார். டானியல் புயலை தொடர்ந்து அதிகாரிகள் அவசரநிலையை அறிவித்துள்ளனர். லிபியாவின் கிழக்கில் ஊரடங்கினை அதிகரித்துள்ள அதிகாரிகள் கட…

  9. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கத்யா அட்லர் பதவி, ஐரோப்பிய ஆசிரியர், பிபிசி 18 செப்டெம்பர் 2023, 15:10 GMT புதுப்பிக்கப்பட்டது 40 நிமிடங்களுக்கு முன்னர் ரஷ்யா - யுக்ரேன் போரில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகள், யுக்ரேனுக்கு ஆயுத உதவிகள் செய்து வருகின்றன என்பதை உலகறியும். நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள், எஃப்16 ரக போர் விமானங்கள் உள்ளிட்டவை இந்த ஆயுத உதவியில் அடங்கும். ஆனால், யுக்ரேனிய ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மற்றொரு உதவியான “சௌனாஸ்” பற்றி உலகம் அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. ஆனால், எஸ்டோனியா நாட்டைச் சேர்ந்த த…

  10. பட மூலாதாரம்,PA MEDIA 18 செப்டெம்பர் 2023, 11:33 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் மிக நவீன போர் விமானம் ஒன்று எங்கே சென்றது என்று தெரியாமல் தேடிக் கொண்டிருக்கிறது அமெரிக்க ராணுவம். அதைக் கண்டால் உடனடியாகத் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களையும் கேட்டுக் கொண்டிருக்கிறது. எஃப்-35 வகையைச் சேர்ந்த இந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது, விமானி அவசரமாக பாரசூட் மூலமாகக் குதித்துவிட்டார். அதன் பிறகு விமானம் என்ன ஆனது என்று யாருக்கும் தெரியவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தெற்கு கரோலினா மாகாணத்துக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது விமானம் காணாமல் போனது. பாராசூட் உதவியுடன் குதித்த விமானி, மருத்துவமனையில் நலமாக உள…

  11. Published By: RAJEEBAN 09 SEP, 2023 | 09:25 AM மொராக்கோவை நேற்றிரவு தாக்கிய பாரிய பூகம்பத்தினால் 300க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். ஒரு நூற்றாண்டு காலப்பகுதியில் மொராக்கோவை தாக்கிய மிகப்பாரிய பூகம்பத்தினால் பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. நள்ளிரவில் மொராக்கோவின் உயரமான அட்லஸ் மலைப்பகுதியை பூகம்பம் தாக்கியுள்ளது( 6.8) மராகெச் என்ற நகரமே மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது 296 பேர் உயிரிழந்துள்ளனர் 156 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என ஆரம்ப கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ச்சியான சிறிய அதிர்வுகள் காணப்படலாம் என மொராக்கோவின் விமானப்படை எச்சரித்துள்ளது. …

  12. பட மூலாதாரம்,GOFUNDME படக்குறிப்பு, அமெரிக்காவில் விபத்தில் இறந்த இந்திய பெண் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்காவில் ரோந்து கார் மோதி உயிரிழந்த இந்திய பெண் பற்றி அந்நாட்டு போலீஸ் அதிகாரி ஒருவர் கேலியாகப் பேசியது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. பாடிகேம் எனப்படும் உடலில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் இந்த விசாரணை நடக்கிறது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஜானவி கந்துலா என்ற அந்த 23 வயது பெண் சியாட்டிலில் உள்ள தனது பல்கலைக்கழகத்துக்கு அருகே போலீஸ் வாகனம் ஒன்று மோதி உயிரிழந்தார். அந்த இடத்துக்கு காவல்துறை அதிகாரி டேனியல் ஆடரர் என்பவர் சென்றிருக்கிறார். …

  13. பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜ் ரைட் மற்றும் ஜான் மெக்கென்ஸி பதவி, பிபிசி செய்தியாளர்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன் இந்த மாதம் ரஷ்யா சென்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினைச் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் பிபிசியின் அமெரிக்கக் கூட்டாளியான சிபிஎஸ் இடம் தெரிவித்துள்ளார். யுக்ரேனில் நடக்கும் போரில் வடகொரியா ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பார்கள் என்று அந்த அதிகாரி கூறினார். திட்டமிடப்பட்டிருக்கும் இந்தக் கூட்டம் எங்கு நடக்கவிருக்கிறது என்பது இன…

  14. 11 SEP, 2023 | 10:24 AM ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் பேரவையின் தலைவர் வக்லவ் பலெக்கின் (செக் குடியரசு தூதுவர்) தலைமையில் இன்று திங்கட்கிழமை (11) ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது. ஜெனிவா நேரப்படி காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் இக்கூட்டத்தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி வரையான ஒருமாதகாலத்துக்கு நடைபெறவுள்ளது. அதன்படி 54 ஆவது கூட்டத்தொடரின் முதலாம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கின் ஆரம்ப உரை இன்று இடம்பெறும். அதனைத்தொடர்ந்து இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள…

  15. Published By: RAJEEBAN 12 SEP, 2023 | 12:06 PM அமெரிக்க மக்கள் செப்டம்பர் 11 தாக்குதலின் 22 வருடத்தினை கண்ணீருடனும் அஞ்சலிகளுடனும் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் நினைவு கூர்ந்துள்ளனர். 22 வருடத்திற்கு முன்னர் இடம்பெற்ற சம்பவத்தினை அடுத்த தலைமுறைக்கு கற்பிக்கவேண்டும் என்ற வேண்டுகோள்களும் வெளியாகியுள்ளன. அன்றைய தினம் உறவுகளை குடும்பத்தவர்களை இழந்தவர்களிற்கு அந்தநாள் இன்னமும் தொடர்கின்றது என செப்டம்பர் 11 தாக்குதலில் தனது உறவினர் ஒருவரை இழந்த எட்வேட் எடெல்மென் என்பவர் தெரிவித்துள்ளார். ஏனையவர்கள் அதிலிருந்து விடுபட்டு முன்னோக்கி நகர்கின்றார்கள். நாங்கள் அதிலிருந்து விடுபட்டு முன்னோக்கி செல்ல…

  16. Published By: RAJEEBAN 08 SEP, 2023 | 10:36 AM வடகொரிய தலைவர் கிம்ஜொன் அன் தனதுநாட்டின் புதிய அணுவாயுத நீர்மூழ்கியை நிகழ்வொன்றில் உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். வடகொரிய தலைவர் கடற்படை அதிகாரிகளுடன் பாரிய நீர்மூழ்கிக்கு அருகில் காணப்படுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. வடகொரியா உருவாக்க விரும்பிய ஆயுதங்களின் பட்டியலில் நீண்டகாலமாக அணுவாயுத நீர்மூழ்கிகாணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. வடகொரிய தலைவர் பல வருடங்களாக இந்தவகையான நீர்மூழ்கியை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். அவரது அணுவாயுத திட்டத்திற்கு நீர்மூழ்கி மிகமுக்கியமானது என்ற கருத்து காணப்பட்டது. …

  17. பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஜி 20 மாநாட்டிற்காக உலகத் தலைவர்கள் பலர் இந்தியாவிற்கு வருகை தரவுள்ளனர். இதன் காரணமாக டெல்லியில் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இந்தியா வருகிறார். ஆனால், அவருடன் அவரின் பெரும் பாதுகாப்பு படையும் இந்தியா வருகிறது. அமெரிக்க அதிபரின் பாதுகாப்பு குறித்து ஹாலிவுட்டில் பல படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஏனெனில் சினிமா எடுக்குமளவுக்கு வலுவான பாதுகாப்பு அரணை கொண்டவர் அமெரிக்க அதிபர். The United States Secret Service என்ற அமெரிக்காவின் ரகசிய சேவை அமைப்பு அதிபரின் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. 1865ஆம் ஆண்…

  18. Published By: RAJEEBAN 09 SEP, 2023 | 12:27 PM மெல்பேர்ன் சிபிடியில் நேற்றிரவு இடம்பெற்ற சம்பவத்திற்கு பயங்கரவாதம் காரணம் இல்லை என தெரிவித்துள்ள காவல்துறையினர் வாகனத்தை செலுத்துவதற்கான உடல்தகுதியற்ற ஒருவர் அதனை செலுத்தியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். மெல்பேர்ன் சிபிடியில் நேற்றிரவு கார் ஒன்று பாதசாரிகள் மீது மோதியதில் ஒருவர் கொல்லப்பட்டார் ஐவர் காயமடைந்துள்ளனர். மெல்டன் வெஸ்ட்டை சேர்ந்த 26 வயது நபர் ஒருவர் இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்பற்றது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வாகனச்சாரதி மருத்துவமனையி…

  19. 08 SEP, 2023 | 10:15 AM மாலியின் வடகிழக்கில் படகொன்றில் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஐஎஸ் அமைப்பினரே இந்த தாக்குதலை மேற்கொண்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐஎஸ் அமைப்பினர் இராணுவமுகாமொன்றின் மீதும் தாக்குதலை மேற்கொண்டதில் 15 மாலி இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/164075

  20. ராணுவம் - துணை ராணுவம் இடையே பயங்கர மோதல் தினத்தந்தி ஹர்டோம், சூடான் வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. அங்கு 2019 ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் மற்றும் ராணுவம் கலந்த கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. அந்த ஆட்சியில் அப்துல்லா ஹம்டோ சூடான் பிரதமராக செயல்பட்டு வந்தார். ஆனால், அந்நாட்டில் கூட்டணி ஆட்சியை கவிழ்ந்து கடந்த 2021 அக்டோபர் மாதம் 25-ம் தேதி ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் ஃபடக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை ராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயல்பட்டு வருகிறார். இதனிடையே, ராணுவத்திற்கும் துணை ராணுவத்தின் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.…

  21. தென்மேற்கு பசிபிக் கடற்பகுதியில் உள்ள தீவு நாடு நியூசிலாந்து. இதன் தலைநகரம் வெலிங்டன். இந்நாட்டிலுள்ள பெருநகரங்களில் ஒன்று ஆக்லாந்து. இங்குள்ள மருத்துவமனையில் ஒரு கர்ப்பிணி பெண், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். சுகப்பிரசவம் [இயற்கையான] நடப்பதற்கு வாய்ப்பில்லாத நிலையில் அவருக்கு சி-செக்ஷன் (C-section)எனப்படும் சிசேரியன் அறுவை சிகிச்சை முறைப்படி பிரசவம் நடைபெற்றது. பிரசவம் முடிந்து சுமார் ஒன்றரை வருடங்களுக்கு அவருக்கு கடுமையான வயிற்று வலி இருந்தது. வழக்கமான மருந்து மற்றும் மாத்திரைகளால் வலி குறையாததால், அவருக்கு எக்ஸ்-ரே எனப்படும் கதிரியக்க படங்கள் எடுக்கப்பட்டன. பரிசோதனையிலும் எதுவும் வழக்கத்திற்கு மாறாக தென்படவில்லை. இதனையடுத்து அவருக்கு சிடி ஸ்கேன் பரிந்துரை…

  22. 05 SEP, 2023 | 06:24 PM (காலித் ரிஸ்வான்) உலகளாவிய நீர் வளத்தை பாதுகாப்பதற்கான ஓர் அமைப்பை சவூதி அரேபியா நிறுவுவதாக அந்நாட்டு பட்டத்து இளவரசரும் பிரதமருமான இளவரசர் முஹம்மத் பின் சல்மான் அறிவித்துள்ளார். உலகின் நீர் விநியோகச் சிக்கல்களை சீர்செய்யும் தூர நோக்கோடு இவ்வமைப்பு நிறுவப்பட்டுள்ளதோடு சுற்றுச்சூழல் மற்றும் வளங்களை பாதுகாத்தல் தொடர்பான சவூதி அரேபியாவின் கரிசனைக்கான ஒரு எடுத்துக்காட்டாக இத்திட்டம் அமைகிறது. உலகளாவிய நீர் வளத்தை பாதுகாப்பதற்கான பிற நாட்டு அரசாங்கங்கள் மற்றும் அமைப்புகளின் முயற்சிகளை ஒருங்கிணைத்து அவற்றை மேம்படுத்தி அவற்றோடு சேர்ந்து பயணிப்பதற்கு இவ்வமைப்பு முயற்சிக்கிறது. அத்தோடு இந்நிறு…

  23. பிரிட்டனில் உள்ள இளநிலை டாக்டர்கள் தங்களுக்கு 35 சதவீதம் சம்பள உயர்வு வழங்க வேண்டும் எனஅரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு எட்டப்படாததால் அவர்கள் கடந்த பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி ரயில்வே, விமான போக்குவரத்து உட்பட பல்வேறு துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபடும் போது பேச்சுவார்த்தை நடத்துவதில்லை என்ற கொள்கையில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. கொரோனா தொற்று, உக்ரைன் போர், பிரெக்சிட் அமைப்பில் இருந்து வெளியேற்றம் போன்றவற்றால் ஏற்கனவே பிரிட்டனின் பொருளாதாரம் பாதாளத்தில் உள்ளது. இந்த நிலையில் 35 சதவீத சம்பள உயர்வு வழங்கினால் அது பணவீக்கத்தை இன்னும் அதிகரித்து விடும். இதனால் ஏழ…

  24. பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த வாரம் சீனா தனது புதிய வரைபடத்தை வெளியிட்டபோது, இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், நேபாளம் மற்றும் தைவான் ஆகிய நாடுகள் கடும் ஆட்சேபனை தெரிவித்த போதிலும், ரஷ்யா அமைதியாக இருந்தது. புதிய வரைபடத்தில், இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் மற்றும் அக்சாய் சின் ஆகியவற்றை சீனா தனது பகுதியாகக் காட்டியிருந்தது, அதே நேரத்தில் தென் சீனக் கடலில் உள்ள மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தைவான் ஆகிய கடல் பகுதிகள் மற்றும் தீவுகளை சீனா தனது சொந்த பகுதியாக அறிவித்திருந்தது. அதேபோல் சீனா தனது புதிய வரைபடத்தில், ரஷ்யாவின் வடகிழக்கு எல்லையில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய போல…

  25. உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கம்! உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்சி ரெஸ்னிகோவ் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக அந்த நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் ரஷ்யா ஆக்கிரமிப்பு செயற்பாடு ஆரம்பிப்பதற்கு முன்னரே ஒலெக்சி ரெஸ்னிகோவ் அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றார். இந்தநிலையில் பாதுகாப்பு அமைச்சில் ‘புதிய அணுகுமுறைகளுக்கு” நேரம் வந்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினம் அந்த நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/271594

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.