Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. Published By: DINESH SILVA 26 AUG, 2023 | 11:54 AM அன்டார்டிகாவில் கடந்த வருடம் பனிப்பாறை உடைந்ததால் ஆயிரக்கணக்கான பென்குயின் குஞ்சுகள் கொல்லப்பட்டிருக்கலாம் என ஆய்வொன்று தெரிவித்துள்ளது. இதனை விஞ்ஞானிகள் பேரழிவு என வர்ணித்துள்ளனர். என்ற இதழ் வெளியிட்டுள்ள ஆய்வில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. பெலிங்சவுசன் கடற்பகுதியில் பென்குயின்கள் இனப்பெருக்கம் செய்யும் ஐந்து இடங்களை ஆய்வு செய்து இந்த ஆய்வு வெளியாகியுள்ளது. இந்த பகுதி அன்டாட்டிக்கிற்கு மேற்கில் அமைந்துள்ளது. இந்த பகுதியே கடல் பனியால் மோசமாக பாதிக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது பென்குயின்கள் வசிக்கும் பகுதிகள் குஞ்சுகள் வளர்ந…

  2. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரிக்ஸ் மாநாட்டை நடத்தும் தென்னாப்பிரிக்கா, நெல்சன் மண்டேலாவின் படத்துடன் விளம்பரங்களை வெளியிட்டுள்ளது. 19 ஆகஸ்ட் 2023, 14:29 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகள் அடங்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பின் தலைவர்கள் ஆகஸ்ட் 22ம் தேதி தென்னாப்பிரிக்காவின் ஜொகன்னஸ்பர்க் நகரில் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் சந்தித்துப் பேசவுள்ளனர். இச்சந்திப்பின் போது, பிரிக்ஸ் அமைப்பில் புதிய உறுப்பு நாடுகளைச் சேர்த்துக் கொள்வதா என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. இந்த மாநாட்டை நடத்தும…

  3. Published By: RAJEEBAN 21 AUG, 2023 | 11:52 AM யேமன் எல்லையில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் சவுதிஅரேபிய படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்தெரிவித்துள்ளது. எத்தியோப்பியாவை சேர்ந்தவர்களே கொல்லப்பட்டுள்ளனர். யுத்தத்தில் சிக்குண்டுள்ள எத்தியோப்பியாவிலிருந்து சவுதிஅரேபியாவிற்குள் நுழைய முயன்ற 100க்கும் மேற்பட்ட எத்தியோப்பிய குடியேற்றவாசிகளையே சவுதி அரேபிய படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். துப்பாக்கி பிரயோகத்தினால் தங்கள் அவயங்கள் துண்டிக்கப்பட்டதாகவும் கொல்லப்பட்டவர்களின் உடல்களை பார்த்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான திட்டமிடப்பட்ட கொலைக…

  4. சமீபத்தில் வெளியாகியுள்ள இந்தப் படம் உலகையே உலுக்கி எடுத்து வருகிறது, பார்ப்பவர் கண்களை எல்லாம் கண்ணீர் பெருக்கச் செய்கிறது. நீண்ட காலமாக நடந்துவரும் ரஷ்யா-உக்ரைன் போர்க்கள கொடுமைகளின் சாட்சியே இந்தக் காட்சி. உக்ரைனில் உள்ள ஒரு மருத்துவமனையில் போரினால் கைகளை இழந்து, முகம் சிதைந்த நிலையில் உள்ள தனது இளம் கணவர் ஆண்ட்ரியை, அவரது மனைவி அலினா கட்டிப்பிடித்திருக்கிறார். மனைவியின் அன்பை, ஆறுதலை ஏற்றுக்கொண்டேன் என்பதை தனது கைகளால் ஆரத்தழுவி உடல் மொழியால் சொல்ல முடியாத இயலாமை கணவரை இன்னும் கவலையுறச் செய்கிறது. ஆண்ட்ரி உக்ரைனிய இராணுவத்தின் 47வது படைப்பிரிவின் வான் உளவுத்துறை அதிகாரி, அவர் ரஷ்ய துருப்புக்களுடன் நடந்த போரில் இந்தளவிற்கு காயமடைந்துள்ளார். கடந்த…

  5. பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, ஸ்வீடனின் ஆறு நாட்கள் பணய கைதிகளாக வைக்கப்பட்டிருந்த கிரெடெட்பேங்கென் வங்கி்க்கு எதிரில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள். 23 ஆகஸ்ட் 2023, 06:48 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் என்பது கடத்தப்பட்ட பணயக்கைதிகள் கடத்தல்காரர்கள் மீது கரிசனத்துடன் இருப்பதாகும். அதாவது தன்னை துன்புறுத்தும் நபர் மீதே, கரிசனமும் பாசமும் வளரும் சூழல் தான் ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் என்றழைக்கப்படுகிறது. இதை எளிதாக புரிந்துக் கொள்ள, பிரபல மணி ஹெய்ஸ்ட் தொடரில் வரும் சம்பவங்களை உதாரணமாக கூறலாம். அதில் கொள்ளைக்காரர்கள் ஸ்பெயினில் உள்ள வங்கியை கொள்ளை அடித்…

  6. படக்குறிப்பு, எப்ரிமா சஜ்னியா மற்றும் அவரது மனைவி கடந்த ஆண்டு தங்கள் மகன் கண்முன்னே உயிரிழந்ததைப் பார்ப்பதைத் தவிர வேறு வழி தெரியாமல் தவித்தனர். கட்டுரை தகவல் எழுதியவர், வினீத் கரே பதவி, பிபிசி நியூஸ் 22 ஆகஸ்ட் 2023, 07:58 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எப்ரிமா சஜ்னியா தனது 3 வயது மகன் கண்முன்னே மெல்ல மெல்ல இறந்ததை தவிப்புடன் பார்ப்பதை தவிர வேறு வழியில்லாமல் தவித்தார். காம்பியாவில் வாடகைக் கார் ஓட்டிவரும் சஜ்னியா, தனது மகன் லாமினுக்கு காய்ச்சல் வந்ததற்கு சில வாரங்கள் முன்பாகத் தான், அவன் மழலையர் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியதாகத் …

  7. கோடீஸ்வர பல்வைத்தியர், மனைவியை கொலை செய்தாரா? அமெரிக்காவில், டென்வர் பகுதியில் ஒரு பல் வைத்திய நிலையம் வைத்திருந்தவர் லார்ரி ருடால்ப். இவரது மனைவி பியன்கா ருடால்ப். மனைவிக்கு வாழ்வில் ஒருமுறையாவது சிறுத்தை ஒன்றை வேட்டை யாடவேண்டும் என்பதில் பெரும் வாழ்நாள் கனவாக வைத்திருந்தார். அதேவேளை 67 வயது பல் வைத்தியருக்கு, ஒரு கள்ள பொம்பிளை, லோரி மில்லிரோன். வைத்தியரும், மனைவியும் சாம்பியா நாட்டுக்கு கிளம்பிச் சென்றார்கள். அங்கே, பெருமளவில் சிறுத்தைகள் பெருகும் காலத்தில், வேட்டைக்கு தடை இல்லை. அதிகாரிகளிடம் கை துப்பாக்கியும் வாங்கிக் கொண்டனர். தான் குளியல் அறையில் இருந்த பொது, வெடிச்சத்தம் கேட்டதாகவும், ஓடிவந்து பார்த்த போது, மனைவி, நெஞ்சில் குண்டடி பட்டு, உயிருக்…

    • 0 replies
    • 582 views
  8. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, நிலவின் தென்துருவத்தை நோக்கி இரண்டு விண்கலங்கள் சென்று கொண்டிருக்கின்றன கட்டுரை தகவல் எழுதியவர், கிறிஸ் பரனியுக் பதவி, பிபிசிக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் தற்போது ஒரு குட்டி விண்வெளி பந்தயம் நடந்து கொண்டிருக்கிறது. ஆம். இதற்கு முன்பு எந்த விண்கலமும் வெற்றிகரமாக சென்றடையாத, நிலவின் தென்துருவத்தை நோக்கி இரண்டு விண்கலன்கள் சென்று கொண்டிருக்கின்றன. ஒன்று- இந்தியாவின் விண்கலம், மற்றொன்று ரஷ்யாவின் விண்கலம். நிலாவில் உள்ள பயனுள்ள தாதுக்கள் மற்றும் பனியினை தேடும் போட்டியில் தான் இந்தியா மற்றும் ரஷ்ய விண்கலங்கள் ஈட…

  9. பட மூலாதாரம்,MICHAEL HAYES படக்குறிப்பு, ஹின் நீ ஒரு லெப்டினன்ட் கர்னல் மற்றும் போதகர் ஆவார். கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜ் ரைட் பதவி, பிபிசி நியூஸ் 21 ஆகஸ்ட் 2023, 12:40 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் 75 வயதான பாஸ்டர் ஒய் ஹின் நீ, அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் உள்ள தனது தேவாலயத்தில் வசதியாக இருந்து நற்செய்தியை பிரசங்கித்தார். ஆனால் ஒரு இளைஞனாக, அவர் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக காட்டில் உயிர் வாழ்ந்துவந்தார். போர் முடிந்து நீண்ட காலத்திற்குப் பிறகு வியட்நாமிய ராணுவத்துடன் போரிடும் தோழர்களுக்கு பிரசங்கம் செய்தார் -…

  10. பெயரைப் பார்த்து கிளிங்டன் கில்லாரி என்று எண்ண வேண்டாம். எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின்பு பெரும் வெள்ளம் மண்சரிவுகளை உண்டாக்கக் கூடிய காலநிலை நாளை காலை தென் கலிபோர்ணியாவுக்குள் வரப் போகின்றது. ஒவ்வொரு சூறாவளிக்கும் ஒவ்வொரு பெயர் வைப்பார்கள்.இந்த சூறாவளிக்கு கில்லாரி என்று பெயர் வைத்துள்ளார்கள். இங்கு பனி கொட்டப் போகுது.புயல் வரப்போகுது என்றால் கடைகளில் தண்ணி சாப்பாட்டுச் சாமான்களை அள்ளிக் கொண்டு போய்விடுவார்கள். தென்கலிபோர்ணியாவில் சாப்பாட்டுச் சாமான் தண்ணீருக்கு தட்டுப்பாடு என்கிறார்கள். கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசோம், ஹிலாரியின் எதிர்பார்க்கப்படும் தாக்கங்கள் காரணமாக தெற்கு கலிபோர்னியாவின் பெரும்பகுதிக்கு அவசரகால நிலையை அறிவித்தார். புயலுக்கு …

  11. இந்திய மாணவர்களைத் திரும்பி செல்ல அச்சுறுத்தும் உக்ரைன் மக்கள்! christopherAug 21, 2023 07:50AM உக்ரைனிலுள்ள பல்கலைக்கழகங்களில் மருத்துவம், உயர் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு பட்டங்களுக்காக இந்திய மாணவர்களும், மாணவியர்களும் அங்கு சென்று, அங்கேயே தங்கி, படித்து, பட்டம் பெறுவது வழக்கம். தற்போது உக்ரைன் – ரஷ்யா போர் நீடித்துவரும் நிலையில் அங்கேயே தங்கி படித்துக்கொண்டிருக்கும் 3,400 இந்திய மாணவர்களைத் திரும்பி செல்ல உக்ரைன் மக்கள் அச்சுறுத்தி வருகின்றனர். கடந்த 2022 ஆண்டில் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் போர் தொடங்கி தற்போது வரை தொடர்ந்து நடைபெறுகிறது. போர் தொடங்கிய சில நாட்களிலேயே, உக்ரைனில் வசித்து வந்த இந்தியர்களின் உயிரிழப்புகளைத் தடுக்க இந்திய அரசா…

    • 3 replies
    • 631 views
  12. 2 மகள்கள் துஷ்பிரயோகம்: தந்தைக்கு 702 வருடங்கள் சிறை தன்னுடைய இரண்டு மகள்மார்களையும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட அவ்விரு யுவதிகளின் தந்தைக்கு 702 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கபபட்டுள்ளதுடன் 234 கசையடிகளும் வழங்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. மலேசிய பிரஜைக்கே அந்நாட்டு நீதிமன்றம் மேற்கண்ட தண்டனையை அண்மையில் விதித்திருந்தது. 53 வயதான அந்த நபர், அவருடைய 12 மற்றும் 15 வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகiயும் 2018 முதல் 2023 வர…

    • 0 replies
    • 452 views
  13. பிரமிட்கள் என்றாலே எகிப்து நாட்டிலுள்ள உலக அதிசயங்களில் ஒன்றான பிரமிட்கள்தான் நமக்கு நினைவுக்கு வரும். வெளிப்புறங்களில் முக்கோணமாகவும், மேலே செல்லச்செல்ல கூம்பு வடிவமும் பெறும் இந்த பிரமாண்டமான பிரமிட்கள், கட்டிடக்கலை வடிவங்களில் ஆச்சர்யமான ஒன்றாக கருதப்படுகிறது. இவற்றின் அழகை ரசிக்க உலகெங்குமிலிருந்து எகிப்துக்கு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரமிட்களில் “ஸ்டெப் பிரமிட்கள்” (step pyramids) இன்னும் அரிதானவை. இவ்வகை பிரமிட்கள் படிப்படியாக ஒவ்வொரு தரைதளங்களின் மேல் ஒவ்வொன்றாக கட்டப்பட்டு இருக்கும். மத்திய ஆசியாவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் பரவி இருக்கும் நாடான கசக்ஸ்தானின் தலைநகரான அஸ்தானாவில் (Astana) உள்ள அபய் (Abai) மாவட்டத…

  14. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அன்டாய்நெட் ராட்ஃபோர்ட் & சைமன் ஃப்ரேசர் பதவி, பிபிசி நியூஸ் 19 ஜூலை 2023, 08:07 GMT புதுப்பிக்கப்பட்டது 30 நிமிடங்களுக்கு முன்னர் தென்கொரியாவில் இருந்து பாதுகாப்புமிக்க எல்லையை கடந்து வடகொரியாவுக்குள் நுழைந்த அமெரிக்க ராணுவ வீரரை வடகொரியா பிடித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வீரர், இரு நாடுகளையும் பிரிக்கும் பகுதியில் ஐக்கிய நாடுகள் அமைப்பு நிர்வகித்து வரும் பாதுகாப்பு மண்டலத்திற்கு (DMZ) ஏற்கெனவே திட்டம் போட்டு பயணம் செய்திருக்கிறார். அங்கிருந்து அவர் எல்லை தாண்டி வட கொரியாவுக்குச் சென்றதாகத் தெரியவருகிறது. …

  15. Published By: RAJEEBAN 19 AUG, 2023 | 08:46 PM பிரான்ஸ் தலைநகர் பாரிசில் தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் வசிக்கின்ற ஈல்-சென்-துனியில் இன்று தொடர்மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுமி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். பதினொரு அடுக்குகள் கொண்ட கட்டடத்தின் ஒன்பதாவது தளத்தில் காலை பத்து மணி அளவில் தீ பரவத் தொடங்கியது. 195 தீயணைப்பு வீரர்கள் அறுபது வண்டி வாகனங்கள் சகிதம் தீயை அணைக்கின்ற முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களில் இருவரும் பலத்த தீக்காயங்களுக்குள்ளான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 13 வயதுச் சிறுமி ஒருத்தி உட்பட மூன்று பேரே இந்தத் அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் ஜன்னல் வழியாகக் குதித்த…

  16. Published By: RAJEEBAN 18 AUG, 2023 | 12:53 PM பெலாரசினை வலுச்சண்டைக்கு இழுத்தால் அந்த நாடு ரஸ்யா வழங்கிய அணுவாயுதங்களை பயன்படுத்தும் என அந்த நாட்டின் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லுகசென்கோ மீண்டும் தெரிவித்துள்ளார். பெலாரசிற்கும் அதன் எல்லையில் உள்ள நேட்டோ நாடுகளுக்கும் இடையில் பதற்றநிலை அதிகரித்துள்ள நிலையிலேயே பெலாரஸ் ஜனாதிபதி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். உக்ரைன் தனது எல்லைகளை கடந்தால் தவிர உக்ரைன் ரஸ்ய யுத்தத்தில் பெலாரஸ் ஒருபோதும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் நாங்கள் ரஸ்யாவிற்கு உதவுகின்றோம் அவர்கள் எங்கள் சகாக்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பெலார…

  17. பாகிஸ்தான் நாட்டின் இடைக்கால பிரதமராக அன்வர் உல் ஹக் ககர் நியமனம் Posted on August 13, 2023 by தென்னவள் 10 0 பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது 100-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அரசுக்கு வந்த பரிசுப் பொருட்களை விற்று சொத்து சேர்த்ததாக இம்ரான்கான் மீது ‘தோஷகானா’ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக இம்ரான்கானின் எம்.பி. பதவி பறிபோனது. ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அதைத்தொடர்ந்து இம்ரான்கான் உடனடியாக கைது செய்யப்பட்டு பஞ்சாப் மாகாணத்தின் அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தான் பாராளுமன்றம் இரவோடு இர…

    • 1 reply
    • 280 views
  18. பட மூலாதாரம்,SINGAPORE POLICE FORCE படக்குறிப்பு, சுமார் 6000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். கட்டுரை தகவல் எழுதியவர், அன்னபெல் லியாங் பதவி, வணிக செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சிங்கப்பூரில் ஆடம்பர வீடுகள், கார்கள், கைக்கடிகாரங்கள் உட்பட சுமார் 6000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். சிங்கப்பூர் வரலாற்றில் இது மிகப்பெரிய பணமோசடி சோதனை என்று கூறப்படுகிறது. சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருட்களில் தங்க கட்டிகள், டிசைனர் கைப்பைகள், ஒயின் மற்றும் கட்டுக்கட்டாக இருந்த பணம் ஆகியவை அடங்கும…

  19. Published By: RAJEEBAN 17 AUG, 2023 | 12:17 PM சிட்னியில் வீடொன்றில் அணுபொருட்களை அவுஸ்திரேலியாவில் எல்லை காவல்படையினர் மீட்டுள்ளனர். ஆர்ன்கிளெவில் உள்ள வீடொன்றில் வேறு ஒரு சோதனையில் ஈடுபட்டிருந்தவேளை அணுபொருட்கள் மீட்கப்பட்டன என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜோன்ஹெஸ்லீ வீதியில் உள்ள தொடர்மாடியொன்றில் அணுபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.இந்த பகுதி ஆபத்தான பகுதி என அடையாளமிடப்பட்டுள்ளது, பொருத்தமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். அவசரசேவை பிரிவினரின் உத்தரவுகளை பொதுமக்கள் பின்பற்றவேண்டும் என்ற வேண்டுகோளும் வெளியாகியுள்ளது. …

  20. 16 AUG, 2023 | 11:10 AM அவுஸ்திரேலியாவில் காலநிலை நெருக்கடி தீவிரமடைவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஜூலை மாதத்தில் முன்னர் எப்போதையும் விட வெப்பம் மிக அதிகமாக காணப்பட்ட நிலையிலேயே இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் ஜூலை மாத வெப்பநிலை வழமையான சராசரி வெப்பநிலையை விட 1.2சென்டிகிரேட் அதிகமாக காணப்பட்டது. கான்பெராவை தவிர ஏனைய அனைத்து தலைநகரங்களிலும் வழமையை விட அதிகளவு வெப்பநிலை காணப்பட்டது என வானிலை ஆய்வு பணியகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. சிட்னி, மெல்பேர்ன், ஹொபார்ட் உட்பட பல முக்கிய நகரங்கள் தங்களின் ஜூலை மாத வெப்பத்தில் சாதனை அளவை எட்டியுள்ளன. சில நகரங்களில்…

  21. Published By: RAJEEBAN 14 AUG, 2023 | 04:08 PM சிட்னியிலிருந்து மலேசியா புறப்பட்ட விமானத்தின் பயணியொருவர் இஸ்லாமை குறிப்பிட்டு ஆபத்தான வார்த்தை பிரயோகங்களில் ஈடுபட்டதால் விமானம் நடுவானில் மீண்டும் சிட்னிக்கு திருப்பப்பட்டது. எம்122 விமானம் 194 பயணிகள் ஐந்து பணியாளர்களுடன் புறப்பட்ட சில நிமிடத்தில் முதுகுப்பையுடன் காணப்பட்ட நபர் எழுந்து நின்று நான் இஸ்லாமின் அடிமை என சத்தமிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவுஸ்திரேலிய விமானப்பாதுகாப்பு படையினர் அவரை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். விமானம் தற்போது ஓடுபாதையில் காணப்படுகின்றது - விமானநிலையம் மூடப்பட்டுள்ளது. …

  22. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சீனாவை தற்போது வாட்டுவது, பணவாட்டம், அதாவது பொருட்களின் விலைகள் மளமளவென சரிந்து வருகின்றன. 12 ஆகஸ்ட் 2023 உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடான சீனா, தற்போது தீவிர சிக்கலில் உள்ளது. பொதுவாக பணவீக்கம், அதாவது பொருட்களின் விலையேற்றத்தால் நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும். ஆனால் சீனாவை தற்போது வாட்டுவது, பணவாட்டம், அதாவது பொருட்களின் விலைகள் மளமளவென சரிந்து வருகின்றன. கடந்த 18 மாதங்களாக பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா திணறிக்கொண்டிருக்கும் நிலையில், சீனாவில் தலை கீழ் நிலைமை நிலவுகிறது. மக்களும் தொழில் நடத்துபவர்களும் பணத்தை செலவு செய்வதில்ல…

  23. கூண்டுச் சண்டைக்கு மஸ்க், ஸக்கர்பேர்க் தயார்! இடத்தையும் அறிவித்தார் மஸ்க் Published By: Sethu 23 Jun, 2023 | 10:16 AM டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் இலோன் மஸ்க்கும் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸக்கர்பேர்க்கும் கூண்டுச் சண்டையில் மோதுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். டுவிட்டரும் பேஸ்புக்கும் உலகின் முன்னிலை சமூக வலைத்தளங்கள். ஒன்றுக்கு ஒன்று போட்டியானவையாகவும் கருதப்படுகின்றன. தொழில்நுட்பத்துறை கோடீஸ்வரர்களான் இலோன் மஸ்க்கும், மார்க் ஸக்கர்பேர்கும் அரசியல், செயற்கை நுண்ணறிவு உட்பட பல விடயங்களில் எதிரெதிரான அபிப்பிராயங்களை வ…

  24. பட மூலாதாரம்,GETTY IMAGES 13 ஆகஸ்ட் 2023 இயற்கைக்குள் எல்லாம் இருக்கிறது. அவற்றில் அதன் படைப்புகள் எத்தனை ஆண்டுகள் வாழும் என்பதும் அடக்கம். மேஃபிளை என்று அழைக்கப்படும் எபிமெரோப்டெரா , வெறும் 24 மணிநேரம் மட்டுமே வாழும் போது, டர்ரிடோப்சிஸ் டோர்னி என்ற ஜெல்லி மீனும் அதன் பெயருக்கு ஏற்றவாறு வாழ்கிறது. சிறிய மற்றும் வெளிப்படையான, இந்த உயிரினங்கள் அசாதாரண உயிர்வாழும் திறன்களைக் கொண்டுள்ளன. இவை உடல் ரீதியாக பாதிக்கப்படும்போது, பட்டினி கிடக்கும் போது, அல்லது மன அழுத்தத்தின் போது தங்களின் பழைய இளமையான தோற்றத்தைப் பெறுகின்றன. இதை கோட்பாட்டளவில் சொன்னால், இந்த உயிரினங்கள் எப்போதும் வாழ முடியும். மான்டெய்க்னே என்ற தத்துவஞா…

  25. இனி ஒரே வாகனத்தில் ஆணும் பெண்ணும் பயணிக்க கூடாது! அமலுக்கு வந்தது உத்தரவு! இந்தோனேசிய மாகாணம் ஒன்றில், ஆண் – பெண் வாகனப் பயணங்கள் தனித்தனியாக அமைய வேண்டும் என்ற உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இந்தோனேசியாவில் சுமத்ரா தீவின் மேற்கு மூலையில் இருக்கும் மாகாணம் ஆச்சே. உலகளவில் இஸ்லாமிய மக்கள் செறிவாக உள்ள பகுதிகளில் ஆச்சேவும் ஒன்று. மிகவும் கட்டுக்கோப்பான இஸ்லாமிய சட்டதிட்டங்கள் நடைமுறையில் உள்ள பிராந்தியம் என்ற வகையிலும் ஆச்சேவுக்கு உலகப் பிரபலம் உண்டு. இஸ்லாமிய ஷரியத் சட்டங்களின் அடிப்படையிலான ஆட்சி நடைபெறும் இந்த மாகாணத்தில், தண்டனையாக பொது இடத்தில் வைத்து கசையடிகள் வழங்குவது பல்வேறு சட்டங்கள் அமலில் இருக்கின்றன. சூதாட்டம், மது அர…

    • 3 replies
    • 652 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.