Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பட மூலாதாரம்,SOCIAL MEDIA படக்குறிப்பு, எம்.எஸ். படிக்க அமெரிக்கா சென்ற ஹைதராபாத் பெண்மின்ஹாஜ் ஜைதி கட்டுரை தகவல் எழுதியவர், அமரேந்திர யர்லகட்டா சதானந்தம் பதவி, பிபிசிக்காக 28 ஜூலை 2023, 08:30 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்காவின் சிகாகோ நகரில் இளம்பெண் ஒருவர் சாலையில் படுத்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஹைதராபாத்தை சேர்ந்த பிஆர்எஸ் தலைவர் கலேகர் ரெஹ்மான் இதனை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில் காணப்படும் இளம் பெண் தனது பெயர் மின்ஹாஜ் ஜைதி என்று கூறுகிறார். வெ…

  2. பட மூலாதாரம்,SOCIAL MEDIA படக்குறிப்பு, அரிசி வாங்குவதற்காக வரிசையில் காத்திருக்கும் இந்தியர்கள் கட்டுரை தகவல் எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு பதவி, பிபிசி செய்தியாளர் 22 ஜூலை 2023, 10:13 GMT புதுப்பிக்கப்பட்டது 3 நிமிடங்களுக்கு முன்னர் பாஸ்மதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்வதற்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால், அமெரிக்கா போன்ற நாடுகளில் அரிசியின் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, அரிசி வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருப்பதாக வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் கூறுகின்றனர். இந்தியாவின் மத்திய அரசு கடந்த ஜூலை 20ஆம் தேத…

  3. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2018 ஆம் ஆண்டு 30 கிராம் ஹெராயின் கடத்திய வழக்கில் 45 வயதான சாரிதேவி ஜமானி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். கட்டுரை தகவல் எழுதியவர், நிகோலஸ் யோங் பதவி, பிபிசி நியூஸ், சிங்கப்பூர் 9 மணி நேரங்களுக்கு முன்னர் சிங்கப்பூரில் கடந்த 20 ஆண்டுகளில் முதல்முறையாக ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக மனித உரிமை செயல்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அவரது பெயர் சாரிதேவி ஜமானி. 2018 ஆம் ஆண்டு 30 கிராம் ஹெராயின் கடத்திய வழக்கில் 45 வயதான சாரிதேவி ஜமானி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். மூன்றே நாள்களில் …

  4. நடுகடலில் பற்றி எரிந்த கப்பல்; ஒருவர் உயிரிழப்பு: சுமார் 3000 கார்கள் தீக்கிரை நெதர்லாந்தின் வடக்கு கடற்பரப்பில் சுமார் 3000 கார்களை ஏற்றிச்சென்ற சரக்கு கப்பலொன்று நேற்றைய தினம் (26) நடுக்கடலில் வைத்து தீ பிடித்து எரிந்துள்ளது. ஜேர்மனியின் துறைமுகமான ப்ரெமனில் இருந்து எகிப்தில் உள்ள போர்ட் சைட் துறைமுகத்தை நோக்கிப் பயணித்த சரக்குக் கப்பலே இவ்வாறு தீவிபத்திற்கு உள்ளாகியுள்ளது. இவ் விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் கப்பலில் இருந்த23 ஊழியர்களும் ஹெலிகொப்டரின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்களில் காயமடைந்தவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

  5. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஷோய்கு தலைமையிலான ரஷ்ய பிரதிநிதிகளையும், சீன அதிகாரிகளையும் கிம் ஜோங் உன் தங்கள் நாட்டுக்கு அழைத்திருந்தார் கட்டுரை தகவல் எழுதியவர், கெல்லி எங் பதவி, பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் வடகொரியாவின் நவீன ஆயுதங்களை ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்குவிடம் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் காட்டினார். ஷோய்கு தலைமையிலான ரஷ்ய பிரதிநிதிகளையும், சீன அதிகாரிகளையும் கிம் ஜோங் உன் தங்கள் நாட்டுக்கு அழைத்திருந்தார். கொரிய சண்டை நிறுத்தத்தின் 70-ஆவது ஆண்டு விழாக்களில் அவர்கள் கலந்துகொள்வார்கள். இதில் பொதுவாக …

  6. பாடசாலைகளில் ஸ்மார்ட்போன்களுக்கு தடை விதிக்க யுனெஸ்கோ அழைப்பு விடுத்துள்ளது. கல்வியில் தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு குறித்து ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி மற்றும் அறிவியல் பிரச்சினைகளைக் கையாளும் குழுவான யுனெஸ்கோவின் 2023 உலகளாவிய கல்வி கண்காணிப்பு அறிக்கையில் இந்த விஷயங்கள் விளக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்றும், கல்வியின் தரத்தை மேம்படுத்த ஓன்லைன் கல்வியை அதிகம் நம்பக்கூடாது என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை கூறியுள்ளது. அறிக்கையின்படி, ஸ்மார்ட்போன்களின் அதிகப்படியான பயன்பாடு கற்றலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் குழந்தைகளின் உணர்…

  7. Published By: SETHU 26 JUL, 2023 | 09:38 AM அவுஸ்திரேலியாவின் மேற்குப் பிராந்திய கடற்கரையொன்றில் 51 திமிங்கிலங்கள் கரையொதுங்கி உயிரிழந்துள்ளன அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். பேர்த் நகரிலிருந்து 400 கிலோமீற்றர் தொலைவிலுள்ள அல்பானி நகருக்கு அருகிலுள்ள செய்னேஸ் கடற்கரையில் பைலட் வேல் இனத்தைச் சேர்ந்த சுமார் 100 திமிங்கிலங்கள் செவ்வாய்க்கிழமை மாலை காணப்பட்டது. மேற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தின் பூங்கா மற்றும் வனஜீவராசிகள் துறை அதிகாரிகள் இத்திமிங்கிலங்களை காப்பாற்றுவற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். இரவிலும் இந்நடவடிக்கை நீடித்தது. இந்நலையில், இன்று காலை 51 திமிங்கிலங்கள் உயிரிழந்துள்ளன என அதிகாரிகள் உறுதி…

  8. Published By: RAJEEBAN 24 JUL, 2023 | 06:23 AM இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கும் அத்துமீறல்களுக்கும் பொறுப்புக்கூறப்படவேண்டும் என நாங்கள் தொடர்ந்து கோருகின்றோம். மனித உரிமைகளுக்காக குரல்கொடுப்பதை கனடா ஒருபோதும் நிறுத்தாது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கறுப்பு ஜூலையின் 40வது ஆண்டை நினைவுகூர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நாற்பது வருடங்களுக்கு முன்னர் இலங்கையெங்கும் தமிழர்களுக்கு எதிராக கொடுரமான கொலைகள் புரியப்பட்டன. இவற்றில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் உயிரிழந்து பெரும் எண்ணிக்கையானோர் காயமடைந்தார்கள், இடம்பெயர்ந்த…

  9. 115 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட புத்தர் சிலை தீயில் சேதம் சீனாவின் கான்சு (Gansu) மாகாணத்தில் உள்ள ஷான்டன் (Shandan) பௌத்த விகாரையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் 115 மீற்றர் உயரம் கொண்ட பிரம்மாண்ட புத்தர் சிலை சேதம் அடைந்துள்ளது. கி.பி. 425ஆம் ஆண்டு காலத்தைச் சேர்ந்த சிலை ஒன்றை பார்த்து இப்புத்தர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் , சிலையின் ஒரு பகுதி மட்டுமே தீயில் சேதம் அடைந்துள்ளதாகவும், விகாரையின் கலாச்சார நினைவுச்சின்னங்கள் சேதமடையாமல் இருப்பதாகவும் உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அத்துடன் இத்தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் இல்லை என்றும், விபத்துக்காண காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக…

  10. சீனா பயணிக்கவுள்ளார் ரஸ்ய ஜனாதிபதி ரஸ்ய ஜனாதிபதி Vladimir Putin எதிர்வரும் ஒக்டோபர் மாதம் சீனாவி;ற்கு விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார். ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடன் ஆசியாவை இணைக்கும் கட்டமைப்பு திட்டங்களை உள்ளடக்கிய நிகழ்வொன்றில் பங்கேற்பதாக இந்த விஜயம் அமையவுள்ளதாக ரஸ்ய வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் தெரிவித்துள்ளார். சீனா விஜயத்தினைத் தொடர்ந்து அவர் துருக்கிக்கும் பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை எதிர்வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் இடம்பெறவிருக்கும் ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு ரஸ்ய ஜனாதிபதி ஏடயனiஅசை Pரவin க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாநாட்டில் பங்கேற்பது குறித்து இதுவரை தீர்ம…

  11. Published By: VISHNU 25 JUL, 2023 | 04:43 PM ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரக்கு இடையிலான அண்மைய சந்திப்பு பலதரப்பட்ட முக்கிய கூட்டு முயற்சிகள் குறித்து அவதானம் செலுத்தியது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவின் போக்கை வடிவமைக்க அமெரிக்காவும் இந்தியா உள்ளிட்ட ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி ஜோ பைடனின் அறிவியல் ஆலோசகர் ஆரத்தி பிரபாகர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், தற்போதுள்ள சட்டத்திற்கு உட்பட்டு எடுக்கக்கூடிய நிர்வாக நடவடிக்கைகளிலும் பணியாற்றி வருகிறோம், செயற்கை நுண்ணறிவின் தீங்குகளை சமாளிக்கும் திறனை அதிகரிக்கவும், அதை நன்மைக்காகப் பயன்படுத்தத் தொடங…

  12. Published By: SETHU 25 JUL, 2023 | 05:03 PM சீனாவின் வெளிவிவகார அமைச்சர் சின் காங், அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவுக்கான சீனத் தூதுவராக 2 வருடங்க்ள பணியாற்றிய சின் காங், கடந்த டிசெம்பர் மாதம் சீன வெளியுறவு அமைச்சராக பதவியேற்றார். இவர் கடந்த கடந்த ஜூன் 25-ம் திகதி இலங்கை, ரஷ்யா மற்றும் வியட்நாம் நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார். அதன் பிறகு பல வாரங்களாக அவர் பொதுவெளிக்கு வரவில்லை. அண்மையில் இந்தோனேசியாவில் ஆசியாவின் நடந்த வெளியுறவு அமைச்சர்களின் சர்வதேச கூட்டம் போன்ற முக்கிய அரசு நிகழ்வுகளில் கின் காங் கலந்து கொள்ளவில்லை. இதனால், அவரது நிலை குறித்து பல்வேறு கேள்…

  13. தெருக்களில் கூடிய லட்சக்கணக்கான மக்கள் - இஸ்ரேல் அரசு வரலாறு காணாத எதிர்ப்பை சந்திப்பது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ஜார்ஜ் ரைட் பதவி,பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் நீதித்துறை அமைப்பை மாற்றியமைப்பதற்கான அரசாங்கத் திட்டங்களுக்கு எதிராக லட்சக்கணக்கான இஸ்ரேலியர்கள் அணி திரண்டுள்ளனர். இது அந்த நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய போராட்டம் என்று அமைப்பாளர்கள் கூறுகின்றனர். பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்த மாற்றங்கள், நீதிமன்றங்களின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் என்றும், அரசாங்கத்தின் கிளைகளுக்கு இடையே சமநிலையை மீட்டெடுக்கும்…

  14. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கொசோவோவில் செர்பிய ராணுவப் படைகளிடமிருந்து தப்பித்த அகதிகள் 1999-ல் அல்பேனியா வந்தனர். 25 ஜூலை 2023, 03:26 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தை விட இறுதியில் அதிக யூதர்களைக் கொண்ட வெகு சில ஐரோப்பிய நாடுகளில் ஒன்று அல்பேனியா. ஜெர்மனி, ஆஸ்த்ரியா போன்ற நாடுகளிலிருந்து நாஜி ஆட்சியின் துன்புறுத்தல்களிலிருந்து தப்பித்து ஓடி வந்த ஆயிரக்கணக்கான அகதிகளை, அல்பேனியர்கள் - பெரும்பாலும் இஸ்லாமியர்கள் - தங்கள் இல்லங்களுக்கு வரவேற்று பாதுகாப்பு அளித்தனர். ஏற்கெனவே 1938ல், போருக்கு ஓராண்டு முன்பே, அல்பேனி…

  15. உலக வானிலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அமெரிக்காவிலிருந்து சீனா வரை கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் பல நாடுகளில் உணவு உற்பத்தி மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளரான இந்தியா, தனது உள்நாட்டில் அரிசி விலையேற்றத்தை தவிர்க்க, அனேக வகை அரிசி ரகங்களுக்கு ஏற்றுமதி தடை விதித்திருக்கிறது. போர் காரணமாக, உக்ரைன் துறைமுகங்களிலிருந்து கோதுமை, சோளம் உட்பட தானிய ஏற்றுமதிக்கு அனுமதியளிக்கும் ‘கருங்கடல் ஒப்பந்தம்’ எனும் உடன்படிக்கையிலிருந்து ரஷ்யா வெளியேறியது. எல் நினோ எனப்படும் பருவகால வானிலை மாற்றங்கள் கடுமையாகியிருக்கிறது. இது இன்னும் தீவிரமடையலாம் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து வருகிறார்கள். இது ஒரு புறமிரு…

  16. ஸ்விட்சர்லாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பா நாடுகளுக்கு ஒருமுறையாவது செல்ல வேண்டும் என்பது பலரின் கனவு. காரணம், அங்குள்ள குளிர் ஐரோப்பா நாட்டின் குளிர் அலைக்கு மக்கள் இறந்ததாக கேள்விபட்டிருப்போம். ஆனால், வெப்பத்துக்கு கடந்தாண்டு மட்டும் 61,000 பேர் பலியாகியுள்ளதாக ஒரு ஆய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலக நாடுகள் அனைத்தும் இயற்கை பேரழிவுகளை சந்தித்து வருகின்றன. ஒருபுறம் அதீத மழையால் ஏற்படும் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி மக்கள் உயிரிழக்கும் நிலையில், மற்றொருபுறம் வெப்பம் தாங்காமல் மக்கள் செத்து மடிகின்றனர். இந்நிலையில், ஐரோப்பிய யூனியனின் 35 நாடுகளில், கடந்தாண்டு கோடைக் காலமான மே 30 முதல் செப்டெம்பர் 4 வரை வெப்பத்துக்கு பலிய…

  17. பட மூலாதாரம்,BRANDY MORIN படக்குறிப்பு, இப்போது 22 வயதான கேம்ப்ரியா ஹாரிஸ் 18 வயதில் தாயானார். 23 ஜூலை 2023, 16:02 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஏழு மாதங்களுக்குப் பிறகு, கேம்ப்ரியா ஹாரிஸ் தனது தாயிடம் எந்தத் தொடர்பும் இல்லாத நிலையில், அவரை ஒரு சீரியல் கில்லர் கொன்றதை அறிந்தார். அது மட்டுமல்ல. அவரது உடல் கனடாவில் அவர் வசித்துவந்த நகரமான வின்னிபெக்கில் உள்ள ஒரு குப்பைக் கிடங்கில் வீசப்பட்டது. இப்போது அங்கே டன் கணக்கில் குப்பை குவிந்துள்ளது. கேம்ப்ரியா ஹாரிஸின் தாய் மட்டும் இந்த கொலையில் பாதிக்கப்பட்டவர் எனக் கருத முடியாது. அந்த தொடர் கொலையாளி மேலும் மூன்ற…

  18. அமெரிக்க கடற்படைக்கு முதல் முறையாக பெண் ஒருவர் தளபதியாக நியமனம் அமெரிக்க கடற்படைக்கு முதல் முறையாக பெண் ஒருவர் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். கடற்படை தளபதி Michael M. Gilday வின் பதவிக் காலம் நிறைவடைந்துள்ள நிலையில் புதிய தளபதியாக Lisa Franchetti வை அமெரிக்கா ஜனாதிபதி Joe Biden நியமித்துள்ளார். குறித்த நியமனத்திற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளிக்கப்படும் பட்சத்தில் அமெரிக்க இராணுவ தளபதியாக பதவி ஏற்கும் முதல் பெண் என்ற பெருமையை Lisa Franchetti பெறுவார் என அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை அமெரிக்காவின் 32 ஆவது கடற்படைத் தளபதியாக Michael M. Gilday 2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 22 ஆம் திகதி நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது…

  19. அமெரிக்காவில் மூளையை தின்னும் அரிய வகை நோயான அமீபா நோய் பரவி வருகிறது. நெல்லேரியா பெளலேரி என்ற தொற்று மூலம் இந்த நோய் ஏற்படுகிறது. இந்த நோய் நேரடியாக மூளையில் உள்ள திசுக்கள் மற்றும் நரம்புகனை நேரடியாக தாக்கும். இதனால் உயிர் இழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்து உள்ளனர். ஏரி, குளம், போன்றவற்றில் வாழும் அமீபா மூலம் இந்த நோய் பரவும். அசுத்தமான தண்ணீரில் குளிக்கும் போது மூக்கு வழியாக அமீபா உடலுக்குள் சென்று விடும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், வாந்தி, தூக்கமின்மை, கடுமையான தலைவலி, சுவையில் மாற்றம், கழுத்து வலி, மாறுபட்ட மனநிலை போன்றவை ஏற்படும். இந்த நோயால் அமெரிக்காவில் பாதிக்கப்பட்ட நிவேடா என்ற பகுதியை சேர்ந்த உட்ரோ டர்…

  20. வட கொரியா மீண்டும் தென்கொரியா மீது ஏவுகணைத் தாக்குதல் வட கொரியா மீண்டும் தென்கொரியா மீது ஏவுகணைகளை ஏவியுள்ளதாக தென்கொரியா இராணுவம் தெரிவித்துள்ளது. உள்ளுர் நேரப்படி இன்று அதிகாலை 4 மணிக்கு குறித்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளது. தென்கொரிய துறைமுகத்தில் அணு ஆயுதம் கொண்ட அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த ஏவுகணை தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை வடகொரியா தலைநகரான Pyongyang பகுதியில் இருந்து மற்றுமொரு ஏவுகணையொன்றும் ஏவப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1341045

  21. சுவீடன் தூதரகம் தீக்கிரை; தூதர் வெளியேற்றம்: அதிகரிக்கும் பதற்றம் ஈரானின் தலைநகரான பாக்தாத்தில் உள்ள சுவீடன் தூதரகமானது நேற்று அதிகாலை 100-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது. சுவீடனில் அண்மையில் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு எதிராக இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் நாடுகளில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுவீடனில் கடந்த மாதம் 28ஆம் திகதி சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமின் மையப் பகுதியில் உள்ள மசூதி அருகில், 37 வயதான ஈராக்கிய அகதி ஒருவர் குர்ஆன் நூலை கிழித்து எறிந்ததுடன், அவற்றைத் தீயிட்டும் கொளுத்தினார். இச்சம்பவமான…

  22. Published By: RAJEEBAN 19 JUL, 2023 | 12:13 PM ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தனது நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளும்போது அவரை கைதுசெய்வது யுத்தபிரகடனம் செய்வதற்கு சமமான விடயம் என தென்னாபிரிக்கா தெரிவித்துள்ளது. தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில்ரமபோச இதனை தெரிவித்துள்ளார். தனது நாட்டு ஜனாதிபதி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளும்போது அவரை கைதுசெய்வது யுத்தப் பிரகடனம் செய்வதற்கு சமமானது என ரஸ்யா தெளிவாக தெரிவித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்தமாதம் ஜொகனாஸ்பேர்க்கில் இடம்பெறும் பிரிக்ஸ் மாநாட்டிற்கு புட்டின் அழைக்கப்பட்டுள்ளார். எனினும் அவருக்கு எதிராக சர்வதேச குற்றவிய…

  23. புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இனி இங்கு இடமில்லை: வெளியான அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு இனிமேல் நியூயோர்க்கில் இடமில்லை என அந்நகரத்தின் மேயர் எரிக் ஆடம்ஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “நியூயோர்க் நகரம் நிரம்பிவிட்டது. புலம்பெயர்ந்த மக்களுக்கு இனி இங்கு இடமில்லை. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சுமார் 90,000 பேர் நியூயோர்க்கிற்கு வந்துள்ளனர். இனியும் வந்தால் அவர்கள் தங்குவதற்கு இடமில்லை. இதனை நான் முன்னரே பதிவு செய்திருந்தேன். ஆனால்,இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது இங்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை நேரடி சாட்சியாக பார்க்கிறோம். நியூயோர்க்கில் வீட்டுக…

  24. ஹிஜாப் அணியாத நடிகைக்கு இரண்டு ஆண்டுகள் சிறை ஈரானில் ஹிஜாப் அணியாமல் திரைப்படவிழாவொன்றில் கலந்துகொண்டிருந்த பிரபல நடிகையான அஃப்சானே பயேகனுக்கு (Afsaneh Bayegan ) 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஈரானில் பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டு நிலையில், 61 வயதான அஃப்சானே பயேகன் குறித்த விழாவுக்கு, குல்லா அணிந்தவாறு சென்றிருந்ததோடு இது குறித்த புகைப்படங்களையும் இணையத்தில் பதிவேற்றியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் ஹிஜாப் அணியாத குற்றத்திற்காக பொலிஸார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தநிலையில், நீதி…

  25. Published By: RAJEEBAN 20 JUL, 2023 | 06:02 AM நியுசிலாந்தின் ஆக்லாந்து நகரில் மகளிர் பீபா உலககிண்ணப்போட்டிகள் ஆரம்பமாவதற்கு சில மணிநேரத்திற்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட ஆறுபேர் காயமடைந்துள்ளனர் – தாக்குதலை மேற்கொண்ட நபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கட்டுமானப்பணி இடம்பெற்றுக்கொண்டிருந்த பகுதியொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலை பயங்கரவாத சம்பவமாக கருதவில்லை என பிரதமர் கிறிஸ்ஹிப்ஹின்ஸ் தெரிவித்துள்ளார். பொலிஸார் மேலதிக ஆபத்துக்களை கட்டுப்படுத்தி விட்டனர் குயின்வீதி சம்பவத்தின…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.