உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26640 topics in this forum
-
போப் பிரான்சிஸை இன்ஸ்டாகிராமில் 30 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள் என்று வாடிகன் ரேடியோ தகவல் தெரிவித்துள்ளது. பிரான்சிஸ் கடந்த மார்ச் மாதம் இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கி தனது புகைப்படத்தை வெளியிட்டார். இந்நிலையில், போப் பிரான்சிஸை இன்ஸ்டாகிராமில் 30 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள் என்று வாடிகன் ரேடியோ தகவல் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உட்பட 143 பதிவுகளை செய்துள்ளார். அதில் சில வசனங்கள் ஆங்கில மொழியிலும், மேலும் மொழிபெயர்க்கப்பட்ட பல மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. 1.2 பில்லியன் கத்தோலிக்கர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் தனது மூன்றாவது ஆண்டு நிறைவை ஒட்டி இன்ஸ்டாகிராமில் இணைந்தார் என்பது…
-
- 0 replies
- 243 views
-
-
உக்ரேன் ஜனாதிபதியை சந்தித்தார் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் உக்ரேன் தலைநகர் கீவ்வுக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்து 45 நாளாகிறது. இராணுவ கட்டமைப்புகளை தகர்க்கப் போவதாக கூறி போர்தொடுத்த ரஷ்யா, அடுக்குமாடி குடியிருப்புகள், வைத்தியசாலைகள், அரசு கட்டிடங்கள், குண்டு வீச்சு தவிர்ப்பு புகலிடங்கள் என தாக்குதல் வரம்பை நீட்டித்தது. தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் கைப்பற்ற முடிந்தும் வெற்றி பெறாத நிலையில் ரஷ்ய படைகள் தனது கவனத்தை இப்போது கிழக்கு உக்ரைன் மீது திருப்பி உள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரேனுக்கு அமெரிக…
-
- 1 reply
- 243 views
-
-
வைரஸ் எதிரொலி- இத்தாலியின் பல சிறைகளில் வன்முறை – விடுதலை செய்யுமாறு கைதிகள் ஆர்ப்பாட்டம் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்hக இத்தாலி அறிவித்தள்ள நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற வன்முறைகள் காரணமாக ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிறைக்கைதிகளிற்கு வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக அவர்களை பார்வையிடுபவர்களிற்கு அதிகாரிகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதை தொடர்ந்தே சிறைச்சாலைகளில் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. மொடெனா என்ற பகுதியில் உள்ள சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் மெத்தைகளிற்கு தீ மூட்டியதுடன்,சிறைச்சாலையின் மருந்தகத்திற்குள் நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த மருந்துகளை அளவுக்கதிகமாக பயன்படுத்தியதில் ஆறுபேர் உயிரிழந்துள்ள…
-
- 0 replies
- 243 views
-
-
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! இந்தோனேசியாவின் மேற்கு ஆச்சே (Aceh) மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், கடலில் சுனாமி அலைகள் எதுவும் எழவில்லை என்று இந்தோனேஷியாவின் நாட்டின் வானிலை மற்றும் புவியில் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில், நிலநடுக்கத்தின் அளவு 6.2 ஆக இருந்ததாக நிறுவனம் அறிவித்தது, பின்னர் அதை கீழ்நோக்கி திருத்தியது. இந்த நிலநடுக்கம் செவ்வாய்க்கிழமை ஜகார்த்தா நேரப்படி அதிகாலை 2:48 மணிக்கு ஏற்பட்டது. இதன் மையம் சிமியூலு ரீஜென்சியில் உள்ள சினாபாங் நகரிலிருந்து தென்கிழக்கே 62 கி.மீ தொலைவில், கடற்பரப்பிலிருந்து 30 கி.மீ ஆழத்தில் அமைந்துள்ளது. நிலநடுக்கம் பெரிய அலைகளை உருவாக்க வாய்ப்பில்லை என்ப…
-
- 0 replies
- 243 views
-
-
அமெரிக்கா அதிபர் பதவியிலிருந்து தன்னை நீக்க கோரி கொண்டுவரப்படும், நம்பிக்கையில்லாத் தீர்மானம், ஒரு கும்பல் தாக்குதலை போன்றது என, டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். அடுத்தாண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிடும், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனின் மகன் மீதான புகாரை விசாரிக்க உக்ரைன் உதவியை டிரம்ப் நாடினார் என்பது குற்றச்சாட்டாகும். இதனை அடிப்படையாக கொண்டு, ஜனநாயக கட்சியின் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை, தனது டுவிட்டர் பக்கத்தில் டிரம்ப் கடுமையாக விமர்சித்திருக்கிறார். தனக்கு எதிராக, எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானம், ஒரு கும்பல் தாக்குதலைப் போன்றது என டிரம்ப் கூறியிருக்கிறார். poli…
-
- 0 replies
- 243 views
-
-
உக்ரைனில், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான... பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம்: ரஷ்யா தகவல்! உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தையில், சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மரியா ஸகாரோவா கூறுகையில், ‘பொதுமக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்வதற்கு பாதுகாப்பு வழித்தடம் அமைப்பது குறித்து உக்ரைன் பிரதிநிதிகளுடன் மேலும் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடைபெறும். உக்ரைனின் தற்போதைய அரசைக் கவிழ்க்கும் நோக்கில் அங்கு இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இந்தப் போர் உக்ரைனின் இறையாண்மைக்கோ, அந்த நாட்டு மக்களுக்கோ எதிரானது அல்ல…
-
- 0 replies
- 243 views
-
-
Published By: RAJEEBAN 31 MAY, 2025 | 02:46 PM இலங்கை ருவாண்டா ஸ்ரெப்ரெனிகாவில் நாங்கள் (ஐநா) உரிய தருணத்தில் செயற்படவில்லை உரிய தருணத்தில் எச்சரிக்கை விடுக்கவில்லை என உலகம் பின்னர் தெரிவித்தது என ஐக்கியநாடுகளின் மனிதாபிமான விவகாரங்களிற்கான தலைவர் டொம் பிளெச்சர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கான மே 14ம் திகதி உரையில் பிளெச்சர் காசாவில் இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவதற்கு பாதுகாப்பு சபை முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். அவர் ஏன் இவ்வாறான வேண்டுகோளை விடுத்தார் என்ற பிபிசி செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்துள்ள பிளெச்சர் காசாவில் பலவந்தமாக இடம்பெயரச்செய்தல் குறித்து தகவல்கள் கிடைக்கின்றன பட்டினி குறித்து தகவல்கள் கிடைக்கின்றன சி…
-
- 1 reply
- 243 views
- 1 follower
-
-
ஏயர்டெல் மக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கு தொடர்பில் சன் குழும தலைவர் கலாநிதி மாறன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அமுலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. மத்திய அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி அவரது ஏயர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விற்க வைத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தயாநிதி மாறன், கலாநிதி மாறன் மற்றும் காவேரி கலாநிதி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை எனத் தெரி…
-
- 0 replies
- 243 views
-
-
டுவிட்டர் நிறுவனத்திற்கு புதிய தலைமை நிறைவேற்று அதிகாரி நியமனம் உலகின் மிகவும் பிரபலமான சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டர் நிறுவனத்துக்கு புதிய தலைமை நிறைவேற்று அதிகாரியாக பராக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியாக இருந்த ஜாக் டோர்சி நேற்று தனது பதவியை இராஜினாமா செய்தார். இதனையடுத்து, டுவிட்டர் நிறுவனத்தின் அடுத்த தலைமை நிறைவேற்று அதிகாரி யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வந்தன. இந்நிலையில், டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை நிறைவேற்று அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தியாவை பூர்விகமாக கொண்ட பராக் அகர்வால் மும்பை ஐ.ஐ.டி.யில் படித்தவர். இவர் 10 ஆண்டுகளு…
-
- 0 replies
- 243 views
-
-
உக்ரேன் போருக்கு எதிராக ரஷ்யாவில் தொடர்ந்து போராட்டம் ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பர்க்கில் உக்ரைன் போருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ரஷ்ய பொலிஸார் கைது செய்துள்ளனர். உக்ரேன் மீது ரஷ்ய படைகள் 8 ஆவது நாளாக உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரேன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரேன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பை எதிர்த்து ரஷ்யாவில் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரமான சென் பீட்டர்ஸ்பர்க்கில் நேற்று நடைபெற்ற ப…
-
- 0 replies
- 243 views
-
-
அமுலுக்கு வரும் அமெரிக்கா மீதான சீனாவின் புதிய வரி! உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போர் அதிகரித்து, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேலும் பல நாடுகளுக்கு வரி விதிக்கப்படும் என அச்சுறுத்தல் விடுத்துள்ள நிலையில், சில அமெரிக்கப் பொருட்களுக்கு சீனா விதித்துள்ள இறக்குமதி வரி திங்கட்கிழமை (10) முதல் அமலுக்கு வருகிறது. அனைத்து சீனப் பொருட்களுக்கும் 10% புதிய அமெரிக்க வரிகள் அமலுக்கு வந்த சில நிமிடங்களுக்குப் பின்னர், பீஜிங் பெப்ரவரி 4 அன்று வரி திட்டத்தை அறிவித்தது. ஞாயிற்றுக்கிழமை (09) ட்ரம்ப், அமெரிக்காவிற்கு அனைத்து எஃகு மற்றும் அலுமினியம் இறக்குமதி மீது 25% வரி விதிக்கப்படும் என்று கூறினார். விரைவான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய …
-
- 0 replies
- 243 views
-
-
பாரிஸில் மசூதிக்கு வெளியே வாகனம் ஓட்டி தாக்குதல் நடத்த முயன்றதாக ஒருவர் கைது பாரிஸ் நகரில் மசூதிக்கு வெளியே ஒரு கூட்டத்திற்குள் வாகனம் ஓட்டியதற்காக ஒரு நபரை போலீசார் கைது செய்தனர். படத்தின் காப்புரிமைREUTERS இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி மாலை 6:30மணிக்கு(இந்திய, இலங்கை நேரப்படி இரவு 10 மணிக்கு) க்ரீட்டல் புறநகர் பகுதியில் நடந்தது . இதில் யாரும் காயமடையவில்லை. பள்ளிவாசலை பாதுகாக்க வைக்கப்பட்டுள்ள தடைகளால் அந்த நபரின் முயற்சி முறியடிக்கப்பட்டது. அந்த நபரின் நோக்கங்கள் தெளிவாக இல்லை. ஆனால் அவர் ஆர்மீனிய இனத்தை சேர்ந்தவர் என்றும் அவர் பாரிசில் நடந்த இஸ்லாமியவாத-தொடர்புடைய தாக்குதல்களுக்கு பழிவாங்க விரும்புவ…
-
- 1 reply
- 243 views
-
-
சீனா அவுஸ்திரேலிய உறவுகள் முன்னொருபோதும் இல்லாத மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியா தனது தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு எடுத்த நடவடிக்கைகள் உட்பட பல நிகழ்வுகள் காரணமாக சீனாவிற்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையில் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த உறவுகள் மேலும் மோசமடைந்துள்ளன என ஆசிய பசுபிக் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலிய அரசாங்கம் தனது பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக 27 பில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்யவுள்ளதாக இந்த வாரம் அறிவித்துள்ளது. 2040 ம் ஆண்டிற்குள் இராணுவ தொழிலாளர்களின் எண்ணிக்கையை18000த்தினால் அதிகரிக்கவுள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. 2040ம் ஆண்…
-
- 0 replies
- 242 views
-
-
ராகுல் காந்தி கட்டிப்பிடித்தது தவறு... பிரதமர் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்- சு.சுவாமி அட்வைஸ். ராகுல் காந்தி கட்டிப்பிடித்ததால் பிரதமர் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார். மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆந்திரத்தின் தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்தது. அதன் மீது வெள்ளிக்கிழமை விவாதம் நடைபெற்றது. அப்போது ராகுல் பேசிய போது பிரதமர் என் கண்ணைப் பார்த்து பேசவேண்டும், ஆனால் அதை தவிர்க்கிறார், பிரதமரின் புன்னகையில் ஒரு பதற்றம் தெரிகிறது என்று பேசினார்.பாதுகாப்புத்துறை குறித்தும் குற்றச்சாட்டுகளையும் ராகுல் காந்தி முன்வைத்தார். அனல் பறந்த அவரது பேச்சை எதிர்கொள்ள முடியாமல் அம…
-
- 0 replies
- 242 views
-
-
தாய்வானில் பல நீர்த் தேக்கங்களில் மிகவும் குறைவான அளவே நீர் உள்ளது தாய்வானில் கடும் வறட்சி காரணமாக தண்ணீர் உபயோகத்தை அரசு கட்டுப்படுத்தும் நடவடிக்கையை நடைமுறைபடுத்தியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இல்லாத வகையில் அங்கு கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நாட்டின் வடபகுதி நகர்களில் வாரம் இருமுறை நீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இதன் காரணமாக சுமார் ஒரு லட்சம் வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தாய்வானில் கடந்த 60 ஆண்டுகளில் மிகக் குறைவான அளவு மழையே இப்போது பெய்துள்ள நிலையில், பல நீர்த் தேக்கங்களின் பாதிக்கும் குறைவான கொள்ளவிலிலேயே நீர் உள்ளது. இதேவேளை அரசும், அரசுக்கு சொந்தமான நீர் விநியோக நிறுவனமும் மிகவும் பழமையான, ஒழுகும் குழாய்களை மாற்றுவதற…
-
- 0 replies
- 242 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மும்மர் கடாஃபி சிறந்த கல்வியைப் பெற ராணுவத்தில் சேர முடிவு செய்தார் கட்டுரை தகவல் எழுதியவர், வலீத் பத்ரன் பதவி, பிபிசி அரபு ஜனவரி 16-ஆம் தேதி, 1970-ஆம் ஆண்டில் லிபியாவின் அதிபராகப் பதவியேற்ற மும்மர் கடாஃபி தனது ஆட்சி 42 ஆண்டுகள் நீடிக்கும் என்றும் அதன் விளைவுகள் என்னவாக இருக்கப் போகின்றன என்பது குறித்தும் கற்பனை செய்திருக்க மாட்டார். கடாஃபி, ஆட்சியில் இருந்த காலத்தில், தனக்கு எதிரான அனைத்து வகையான எதிர்ப்புகளையும் கொடூரமான முறைகளில் தகர்த்தெறிந்தார். லிபியாவில் வேறு எந்த தலைமையும் உருவாக முடியாமல் போனதற்கு அவரது இந்த அணுகுமுறையே காரணமாக இருந்திருக்கலாம். ஆன…
-
- 0 replies
- 242 views
- 1 follower
-
-
இஸ்ரேல் – காசா போரின் விளைவாக காசாவில் 5 வயதிற்குட்பட்ட 8,000ற்கும் அதிகமான சிறுவர்கள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக காசாவில் 28 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் தற்போது காசாவில் பட்டினியை எதிர்கொள்வதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://thinakkural.lk/article/303632
-
- 0 replies
- 242 views
- 1 follower
-
-
13 APR, 2025 | 12:14 PM அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மின்னணு சாதனங்களுக்கு பரஸ்பர வரி விதிப்பிலிருந்து விலக்களித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த 02 ஆம் திகதி இலங்கை உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு வரிகளை அறிவித்தார். இலங்கைப் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதேவேளை, அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு சீனாவும் பரஸ்பரம் வரி விதிப்பு மேற்கொண்டது. இதனால் சர்வதேச பொருளாதார மந்தநிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஸ்மார்ட் கைப்பேசிகள், கணினிகள் மற்றும் வேறு சில மின்னணு சாதனங்களுக்கு சீன இறக்குமதிகள் மீது விதிக்கப்படும் 125 சதவீத வரிகள் உள்ளிட்ட பரஸ்பர வரிகளிலிருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் விலக்கு அளித்துள்ளது. இந்நிலைய…
-
- 1 reply
- 242 views
- 1 follower
-
-
தாய்வான், நடவடிக்கையைத் தடுக்க... சீனாவிற்கு, பொருளாதாரத் தடை விதிப்பது குறித்து... அமெரிக்கா பரிசீலனை. தாய்வான் மீதான படையெடுப்பதைத் தடுக்க சீனாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அறிவிப்பது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருகிறது. தாய்வான் கடற்பரப்பில் இராணுவ பதட்டங்கள் அதிகரித்து வருவதால், சீனப் படையெடுப்பு குறித்த அச்சங்களுக்கு மத்தியில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. தொலைத்தொடர்பு சாதனங்கள் போன்ற முக்கியமான தொழில்நுட்ப கருவிகள் மீதான முன்னர் இருந்த தடைகளுக்கு மேலதிகமாக இந்த தடையை விதிப்பது குறித்து ஆலோசிக்கப்படுகின்றது. ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை விட சீனாவின் மீது தடைகள் விதிக்கப்படுவது மிகவும் சிக்கலான நடவடிக்கை என அமெரிக்க…
-
- 3 replies
- 242 views
-
-
வடகொரியாவிலிருந்து கோமா நிலையில் அனுப்பப்பட்ட அமெரிக்க மாணவர் மரணமடைந்திருப்பது குறித்த செய்தி; கானாவில் அதிகரிக்கும் கும்பல் கொலைகள் குறித்த நேரடித்தகவல்கள் மற்றும் கொலஸ்ட்ராலை குறைக்கும் தடுப்பு மருந்தை கண்டுபிடித்திருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்திருப்பது குறித்த செய்தி ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 242 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜிம்பாப்வேயில் 84,000-க்கும் மேற்பட்ட யானைகள் இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது கட்டுரை தகவல் எழுதியவர், பிரியா சிப்பி பதவி, பிபிசி உலக சேவை 8 மணி நேரங்களுக்கு முன்னர் யானைகளின் எண்ணிக்கை அதீதமாக உயர்ந்துவிட்டது என்று சொல்ல முடியுமா? ஜிம்பாப்வே அரசை பொருத்தவரை யானைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. எனவே ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக யானைகளை கொல்ல அந்நாடு அனுமதி வழங்கியுள்ளது. விலங்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நடைமுறை, அவற்றின் ஒரு பகுதியைக் 'கொல்லுதல்' ஆகும். அதாவது அதிகளவில் இருக்கும் விலங்குகளை, ஒரு குறிப்பிட்ட அளவில் அழிப்பதன் மூலம் அந்த விலங்கினத்தின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டில் (2024), இருநூறுக்கும் மேற்பட்…
-
- 0 replies
- 242 views
- 1 follower
-
-
இந்தியாவில் கருப்புப் பணம் வைத்திருப்போர், கணக்கில் காட்டப்படாத தங்களது சொத்து விவரங்களை தெரிவிக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி எச்சரிக்கை விடுத்தார்.இந்தியாவில் கணக்கில் காட்டாத சொத்துகளை வைத்திருப்போர், 45 சதவீத வரி, அபாரதம் ஆகியவற்றைச் செலுத்தி நடவடிக்கையில் விலக்கு பெறுவதற்கான 4 மாத கால அவகாசம், வரும் ஜூன் 1-ஆம் தேதி தொடங்குகிறது.இந்நிலையில், அன்னிய முதலீடுகளைக் கவர்வதற்காக, அரசு முறைப் பயணமாக ஜப்பான் சென்றுள்ள அருண் ஜேட்லி, டோக்கியோவில் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது: இந்தியாவில் கணக்கில் காட்டாத சொத்துகளை வைத்திருப்போர், தங்களது சொத்து விவரங…
-
- 0 replies
- 242 views
-
-
அணு ஆயுத தடுப்புப் படைகளை... சிறப்பு எச்சரிக்கையில் இருக்குமாறு புடின் உத்தரவு! அணு ஆயுதங்களை உள்ளடக்கிய அதன் தடுப்புப் படைகளை சிறப்பு எச்சரிக்கையில் இருக்குமாறு, ரஷ்யாவின் இராணுவத்திற்கு ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார். உக்ரைன் மீதான அவரது படையெடுப்புக்கு பரவலான கண்டனங்களுக்கு மத்தியில், மேற்கு நாடுகளின் ஆக்கிரமிப்பு அறிக்கைகள் இதற்குக் காரணம் என்று அவர் பாதுகாப்புத் தலைவர்களிடம் கூறினார். இந்த அறிவிப்பு ரஷ்யா ஆயுதங்களைப் பயன்படுத்த விரும்புகிறது என்று அர்த்தமல்ல எனவும் அவர் தெரிவித்தார். அமெரிக்கா உடனடியாக புடினின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறி கண்டனம் வெளியிட்டுள்ளது. கடந்த வாரம், உக்ரைனில் எங்களுக்கு …
-
- 1 reply
- 242 views
-
-
ஆஸ்திரேலியாவில் சிறுவனை தூக்கி பறந்து செல்ல முயன்ற கழுகு மத்திய ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற வனவிலங்கு நிகழ்ச்சி ஒன்றில், பெரிய கூர்மையான ஆப்பு போன்ற வால் கொண்ட கழுகு ஒன்று சிறுவன் ஒருவனை தூக்கி பறந்து செல்ல முயன்றது. அலிஸ் ஸ்ப்ரிங்ஸ் டெசர்ட் பார்க்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அந்த பெரிய கழுகு பயத்தில் அலறிய அந்த சிறுவனின் தலையின் மேல் தனது நகங்களை பதித்ததை கூட்டத்தினர் ஸ்தம்பித்து போய் பார்த்துக்கொண்டிருந்தனர். இதை நேரில் பார்த்தவர்கள் அந்த பறவை, அச்சிறுவனை ஒரு சிறிய விலங்கைப் போல தூக்கிச் செல்ல முயன்றதாக கூறுகின்றனர் . ஆறிலிருந்து எட்டு வயதானவனாக கருதப்படும் அச்சிறுவன், முகத்தில் ஒரு லேசான வெட்டுக் காயத்துடன் உயிர் பிழைத்…
-
- 0 replies
- 242 views
-
-
துருக்கியில் பணவீக்கம் 85.51 சதவீதமாக அதிகரிப்பு By DIGITAL DESK 3 03 NOV, 2022 | 02:05 PM துருக்கியின் வருடாந்த பணவீக்கம் கடந்த ஒக்டோபர் மாதத்தில் 85.51 சதவீதமாக அதிகரித்துள்ளதை உத்தியோகபூர்வ தரவுகள் இன்று (03) வெளிப்படுத்தியுள்ளன. 1997 ஆம் ஆண்டின் பின்னர் துருக்கில் ஏற்பட்ட மிக அதிகளவு பணவீக்கம் இதுவாகும். துருக்கியில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு பிரச்சினைகளைக் கட்டுப்படுத்துவதற்கு வழக்கத்துக்கு மாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை ஜனாதிபதி தாயீப் ஏர்டோவான் ஆதரித்து வருகிறார். விலை உயர்வுகளை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியாக உலகெங்கும் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை அதிகரித்து வருகின்றன. ஆனால், உயர் …
-
- 0 replies
- 242 views
- 1 follower
-