Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. தொல்லியல்தலமான ஆதிச்சநல்லூர் கட்டுப்பாடு கேரளத்திடமா?ஆய்வறிஞர் பத்மநாபன் கடுங்கண்டனம் குமரி மாவட்டத்திலுள்ள வட்டக்கோட்,ை சிதரால் (திருச்சாரணத்துமலை), திருநந்திக்கரை, பார்த்திபசேகரபுரம் ஆகிய தொல்லியல் மையங்கள் மத்திய அரசின் தொல்லியல்துறை திருச்சூர் அலுவலகத்தின் ஆதிக்கத்திலேயே உள்ளன. நெல்லை மாவட்டத்திலுள்ள பல தொல்லியல் தலங்கள் ஏற்கனவே திருச்சூர் அலுவலகத்தின் ஆதிக்கத்திலே தான் உள்ளன. திருப்புடைமருதூர் கோயில் திருப்பணி செய்ய திருச்சூர் சென்று அனுமதி வாங்க வேண்டியுள்ளது. தொன்மை வாய்ந்த திருமலாபுரம் குடைவரைக்கோயிலில் தினசரி பூஜை நடத்த திருச்சூர் சென்று அனுமதி வாங்க வேண்டிய நிலை உள்ளது. இக்குடைவரைக் கோயிலில் கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டில் தினமும் அபிஷேகமும், வ…

    • 1 reply
    • 1.7k views
  2. போதுமிந்த வாய்ப்பந்தல்! கோடியக்கரை பகுதியில் இரண்டு தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப் பட்டிருக்கிறார்கள். கடந்த 25 ஆண்டு களில் சுமார் 800க்கும் மேற்பட்ட மீனவர் களை சிங்களக் கடற்படையினர் சுட்டு வீழ்த்தியிருக்கிறார்கள். கடந்த இரண் டாண்டுகளில் மட்டும் கொல்லப் பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 250க்கும் மேல். தமிழக மீனவர்கள்மீது இலங்கை ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்து வதும், கைது செய்து இழுத்துச் செல்வதும், படகுகளையும் மீன்பிடிக்கும் சாதனங்களையும் சேதப்படுத்துவதும் கடந்த 35 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வேடிக்கை என்னவென்றால், பல முறை இலங்கை இராணுவத்தினர் நமது எல்லைக்குள் வந்து மீனவர்களைத் தாக்கி இருக்கிறார்கள். ஹெலிகாப்டரில் வந்து சுட்ட சம்பவங்…

  3. அரசியல் கைதிகள் விடுதலைக்கான குழு அகில இந்திய அளவில் தொடங்கப்பட்டது இந்திய சிறைகளில் இருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான குழு ஒன்று அண்மையில் தொடங்கப்பட்டது. இக்குழுவின் அறிமுகக் கூட்டம் கடந்த சூலை 6, 2008 அன்று சென்னையில் நடைபெற்றது. இக்குழுவின் அகில இந்திய செயலாளர் நாயகமான வங்காளத்தைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளரான அமித் பட்டாச்சார்யா, துணைத் தலைவரான தில்லி பல்கலைக்கழகப் பேராசிரியரும், நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் பொடா நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவருமான பேரா. கிலானி ஆகியோர் இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள…

  4. துருக்கியில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 14 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று (27.07.2008) இரவு 22.00 மணியளவில் இஸ்தன்பூல் என்ற இடத்தில் இடம்பெற்றதாகவும், அங்கு 14 பேர் குண்டு வெடித்த இடத்திலேயே உயிரிழந்ததாகவும்,100 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என தெரியவருகின்றது. மேலும் வாசிக்க............ http://www.tamilseythi.com/world/14-killed-in-Tyrkia.html

    • 0 replies
    • 641 views
  5. டெல்லி: டெல்லியிலிருந்து மும்பைக்கு பறந்து கொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் கதவுகள் சரியாத பூட்டப்படாததால் அந்த விமானம் அவசரமாக மீண்டும் டெல்லியில் தரையிறங்கியது. இதையடுத்து அந்த விமானத்தின் இரு சிப்பந்திகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அதில் மத்திய அமைச்சர் சரத்பவாரும் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியிலிருந்து நேற்று மாலை இந்த விமானம் மும்பை கிளம்பியது. போயிங்௭37 ரக விமானமான இந்த விமானம் 5,000 மீட்டர் உயரத்தை அடைந்த நிலையில், விமான சிப்பந்திகள் கதவு சரியாக பூட்டப்படாமல் திறந்திருப்பதைக் கண்டு அதிர்ந்தனர். அந்தக் கதவு வழியாக விமானத்திலிருந்து அழுத்தப்பட்ட காற்று வெளியேறியது மட்டுமல்லாமல், வெளியிலிருந்தும் காற்று புகுந்தது பெரும் சத்தம் கி…

  6. பெங்களுரில் 7 தொடர் குண்டு வெடிப்பு: 5 பலி! 20 பேர் காயம் வெள்ளி, 25 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] இந்தியாவின் பெங்களுர் மாநிலத்தில் இன்று வெள்ளிக்கிழமை அடுத்து அடுத்து வெடித்த 7 குண்டு வெடிப்பில் பெண் ஒருவர் உட்பட 5 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 20 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். முதலாவது குண்டு பெங்களுரில் மதியம் 1.45 மணியளவில் ஒசூர் ரோட்டில் உள்ள மடிவாளா சோதனைச்சாவடி அருகே உள்ள போரம் மால் என்ற இடத்தில் முதல் குண்டு வெடித்தது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து 15 நிமிட இடைவெளிகளில் நாயந்தஹள்ளி, சிவாஜி நகர், கோரமங்களா-ஆடுகோடி, லாங்போர்ட்டவுன் உள்ளிட்ட 7 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. pathivu.co

    • 9 replies
    • 1.3k views
  7. நெல்சன் மண்டேலாவுக்கு மகாத்மா காந்தி விருது வீரகேசரி நாளேடு 7ஃ24ஃ2008 5:39:57 Pஆ - அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது தென் ஆபிரிக்கா தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்கா டர்பனில் உள்ள மகாத்மா காந்தி அறக்கட்டளை மற்றும் சத்தியாகிரக அமைப்பே அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருதை நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கியுள்ளது. தியாகத்தாலும் பங்களிப்பாலும் உலக மக்களின் மனதில் இடம் பிடித்தார் என்றும் அவர் பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். நேற்று நடந்த விருது வழங்கும் விழாவில் மண்டேலா கலந்து கொள்ளவில்லை. விருதை அவருக்கு பதிலாக அவரது சிறைத் தோழரும் அரசியல் ஆலோசகருமான அகமது கத்ராடா பெற்றுக் கொண்டா…

    • 20 replies
    • 2.4k views
  8. வீரகேசரி நாளேடு - உலகின் முதலாவது சோதனைக் குழாய் குழந்தையான லூஸி பிறவுண், தனது 30 ஆவது பிறந்த நாளை வெள்ளிக்கிழமை நாளை கொண்டாடுகிறார். உலகங்குமுள்ள மில்லியன்கணக்கான குழந்தைகளற்ற தம்பதியினருக்கு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் லூஸி பிறவுண், தனது கணவர் வெஸ்லி முலின்டர் மற்றும் 18 மாத குழந்தையான கமெரொன் ஆகியோருடன் இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார். இவர் 1978 ஆம் ஆண்டு ஜுலை 25 ஆம் திகதி இங்கிலாந்தின் ஓல்ட்ஹாமிலுள்ள மாவட்ட பொதுமருத்துவமனையில் பிறந்தார்.

  9. கடந்த பதின்மூன்றாம் தேதி தே.மு.தி.க. சார்பில் ராமேஸ்வரத்தில் நடந்த மீனவர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் `ஆளும் தி.மு.க.வினரை சுட்டுக் கொல்லணும்' என்று விஜயகாந்த் பேசிய பேச்சு தமிழக அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. விஜயகாந்துக்கு சரியான பதிலடி கொடுக்க தி.மு.க.வினர் காத்துக் கொண்டிருக்க, அதற்குத் தோதாக வந்து வாய்த்தது, தமிழக மீனவர்கள் சிங்கள ராணுவத்தினரால் சுடப்படுவதைக் கண்டித்து கலைஞர் அறிவித்த உண்ணாவிரதப் போராட்டம். தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கடந்த பத்தொன்பதாம் தேதி நடந்த இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட அன்பழகன், ஆற்காட்டார் உள்பட பல தி.மு.க. தலைவர்களும் விஜயகாந்தை ஒரு பிடிபிடித்து விட்டுத்தான் சிங்க…

    • 21 replies
    • 4.3k views
  10. நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் அரசு வெற்றி வீரகேசரி நாளேடு 7ஃ22ஃ2008 7:58:42 Pஆ - இந்திய பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 275 வாக்குகளைப் பெற்று வெற்றிவாகை சூடியுள்ளது.ஐக்கிய முற்போக்குக் கூட்டணிஇ அரசின் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்கும் வகையில் இன்று இரவு 7.30 மணிக்கு பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவாக 275 வாக்களும் எதிராக 256 வாக்குகளும் கிடைத்தன. இதனையடுத்து 19 வாக்குக்களினால் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு தப்பிப் பிழைத்தது. மொத்தமாக 531 உறுப்பினர்கள் இன்று வாக்களிப்பில…

    • 3 replies
    • 1.4k views
  11. மன்மோகன் தப்பிப் பிழைப்பார்? இந்திய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் இந்திரா காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று நம்பப் படுகிறது. இன்னும் சொற்ப வாக்குகள் எண்ணப்பட வேண்டிய நிலையில் இந்திரா காங்கிரஸ் முன்னணியில் இருப்பதாகத் தெரிகிறது.

    • 20 replies
    • 2.5k views
  12. நளினிக்கு ஆதரவாகக் கூட்டம் நடத்த நீதிமன்றத்தில் கோரிக்கை மனு சமர்ப்பிப்பு: இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினிக்கு ஆதரவாகச் சென்னையில் திருவல்லிக்கேணியில் கூட்டம் ஒன்றை நடத்த அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. 10 ஆண்டுகள் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தவர்கள், ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டிருக்கின்ற போதிலும் நளினி 17 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வரும் நிலையில் அவரை விடுதலை செய்ய விடுதலை செய்ய மறுக்கப்பட்டு வருவதாக அந்த மனுவில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. இந்தநிலையில் நளினியை வி…

    • 0 replies
    • 590 views
  13. ஜூலை 26 முதல் ஓகஸ்ட் 4 ஆம் நாள் வரையான காலப்பகுதியில் சிறிலங்காவில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அதிகாரபூர்வமாக போர் நிறுத்தத்தினை அறிவித்துள்ளனர். தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் சாதுர்யமான காய்நகர்த்தலால் பந்தை அரசாங்கத்தின் பக்கம் நகர்த்தியுள்ளார்.ஒரு இக்கட்டான சூழ்நிலைய அரசாங்கத்திற்கு இதன் முலம் ஏற்படுத்தியுள்ளார். இவ்வறிக்கையின் பின் வெளிவிவகார அமைச்சர் பதில் அறிக்கைகளை வெளியிட்டு பிதற்றிக்கொண்டிருக்கிறார். பொருத்தமான நேரத்தில் வந்த தலைவரின் அறிவிப்பு. விஷேடமாக இந்திய தலைவர்களுக்கு சற்று தடுமாற்றத்தை உண்டாக்கலாம். இன்றைய நாளில் நடக்க இருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் காங்கிரஸ் தோற்றால் தேர்தல் நடைபெறும் வரை ஒரு இடைக்கால…

    • 0 replies
    • 1.1k views
  14. டெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பெரும்பான்மை பலத்திற்குத் தேவையான எம்.பிக்களை பெற்றுள்ளதாக காங்கிரஸ் தரப்பு கூறுகிறது. அதே சமயம், எதிரணியை விட 1 எம்.பியே காங்கிரஸ் கூட்டணிக்கு கூடுதலாக உள்ளதால் கடைசி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே குழப்பம் தொடர்கிறது. இந் நிலையில் பாஜகவில் உள்ள 6 அதிருப்தி எம்பிக்கள், ஒரு பிஜூ ஜனதா தள எம்பி, 1 சிவ சேனை எம்பி மற்றும் மம்தா பானர்ஜி உள்ளிட்ட 11 பேர் வாக்களிக்கப் போவதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இவர்களின் கையில் தான் அரசின் எதி்ர்காலம் உள்ளது. அடுத்தடுத்து நடக்கும் திருப்பங்கள். அவர் இங்கே தாவுகிறார், இவர் அங்கே போகிறார் என்ற செய்திகள். யாருக்கு எத்தனை பேர் ஆதரவு என்பதில் நிலையில்லாத நிலை என டெல்லி வட்டா…

    • 0 replies
    • 570 views
  15. ஒரு கண் திறந்துள்ள நிலையில் உள்ள ஷீரடி சாய்பாபாவின் சிலையைக் காண பெங்களூரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பெங்களூர் கவிபுரம் குட்டஹள்ளியைச் சேர்ந்தவர் பாபு. அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஷீரடி சாய்பாபா சிலையின் மூடிய நிலையில் இருந்த வலது கண் திடீரென திறந்துகொண்டது. இதை அறிந்த பக்தர்கள் வெள்ளிக்கிழமை பாபுவின் வீட்டுக்கு சென்று அந்த சிலையைப் பார்த்து அதிசயித்துச் சென்றனர். இந்தச் செய்தி தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வெளியானது. இதைப் பார்த்த சாய் பக்தர்கள் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து குறிப்பாக தும்கூர், கோலார் மாவட்டங்களில் இருந்து சனிக்கிழமை பெங்களூருக்கு வந்த வண்ணமிருந்தனர். அவர்கள் கவிபுரத்தில் உள்ள பாபுவின் வீட்டுக்குச் சென்றனர். இதனால் சனிக்கிழமை…

    • 12 replies
    • 3.5k views
  16. காங்கிரஸ் அரசுக்கு இந்திய அமெரிக்க அணுசக்தி உடன்பாடு எமனாக அமையுமா? இந்த உலகில் எதுவும் நிச்சயமில்லை. பொன் பொருள், பட்டம் பதவி, உற்றா உறவினர் எவரும் சதமில்லை. அதனால்தான் “காதறுந்த ஊசியும் வராதுகாண் கடைவழிக்கே” என்று பட்டினத்து அடிகளார் பாடினார். வாழ்வு நிச்சயமில்லை என்பது அரசியலுக்கும் பொருந்தும். படை பட்டாளம் சூழ ஆட்சி செய்யும் அரசியல் தலைவர்கள் முடியும் குடையும் இழந்து ஒருகால் தெருவுக்கு வரலாம். 2004 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடந்த தேர்தலில் அதிக இருக்கைகளைக் கைப்பற்றிய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி இடதுசாரிகளின் வெளி ஆதரவோடு ஆட்சிக் கட்டில் ஏறியது. இப்போது இடதுசாரிகள் காலை வாரிவிட்டதால் அதற்குக் கண்டம் ஏற்பட்டுள்ளது. வருகிற செவ்வாய்க்கிழமை (யூலை 22) நடை…

    • 6 replies
    • 1.1k views
  17. டெல்லி: அரசுக்கு ஆதரவு தரும் எம்.பிக்களை திரட்டுவதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடுமையாக திணறி வருகிறது. மாறாக, எதிர்க்கட்சிகள் தரப்பில் ஆதரவு கூடிக் கொண்டே போகிறது. இதனால் அரசு கவிழுமோ என்ற கவலையில் காங்கிரஸ் ஆழ்ந்துள்ளது. இன்னும் 3 நாட்களில் லோக்சபாவில் நடக்கப் போகும் நம்பிக்கை வாக்கெடுப்பு, அரசுக்கு முடிவுரை எழுதுமா அல்லது அணு சக்தி ஒப்பந்தத்திற்கு முன்னுரை எழுதுமா என்ற எதிர்பார்ப்பில், டெல்லி அரசியல் வட்டாரத்தில் தினசரி ஒரு பரபரப்பு நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. ஆதரவு எம்.பிக்களைத் திரட்டுவதில் காங்கிரஸ் தரப்பும், எதிர்க்கட்சிகள் தரப்பும் படு மும்முரமாக உள்ளன. ஆரம்பத்தில் காங்கிரஸ்தான் படு தீவிரமாக எம்.பிக்களை இழுத்துக் கொண்டிருந்தது. ஆனால் இப்போது …

  18. பயங்கரவாதிகள் தாக்குதலில் 9 இந்திய இராணுவத்தினர் பலி தாக்குதலுக்கு இலக்கான பேருந்து இந்தியாவின் நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் பிரிவினைவாத பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் நடத்திய குண்டுத்தாக்குதலில் இந்திய இராணுவத்தினரில் குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஸ்ரீநகருக்கு வடக்கே இருக்கின்ற நர்பல் பகுதியில் துருப்புகளை ஏற்றி சென்ற பேருந்து குண்டு வெடிப்பில் சிக்கிய இச்சம்பவத்தில் மேலும் இருபத்து மூன்று பேர் காயம் அடைந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். காயம் அடைந்தவர்களில் ஒரு சிலர் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர். இந்த சம்பவத்திற்கு எந்த பிரிவினரும் இதுவரையில் உரிமை கோரவில்லை. சர்ச்சைக்குரிய காஷ்மீர் ப…

  19. Started by nunavilan,

    ஓ பக்கங்கள் நன்றி : குமுதம் ஆட்சியையும் பிரதமர் பதவியையும் காங்கிரஸ் கட்சியையும்கூட பணயம் வைக்கும் அளவுக்கு மன்மோகன் சிங் பிடிவாதம் பிடிக்கும் இந்தியஅமெரிக்க அணு ஒப்பந்தம் எதற்காக? மின்சாரத்துக்கா? அணுகுண்டுக்கா? `மின்சாரத்துக்காகத்தான். இது இல்லாவிட்டால் இந்தியாவே இருண்டுவிடும்' என்று மன்மோகன் அரசாங்கம் லட்சக்கணக்கான ரூபாய் செலவில் விளம்பரங்கள் வெளியிட்டு மக்கள் ஆதரவைத் திரட்ட களத்தில் இறங்கியிருக்கிறது. உண்மையில் இந்த ஒப்பந்தம் மின்சாரத்துக்கானது இல்லை என்ற சந்தேகம் எனக்கு ஆரம்பத்திலிருந்தே உண்டு. நாளுக்கு நாள் வலுப்பட்டு வருகிறது. மின்சாரத்துக்கான ஒப்பந்தம் என்றால், இதைப் பற்றிய விளக்கங்களை மக்களிடமோ அரசியல் கட்சிகளிடமோ தெரிவிக்க வேண்டியவர…

    • 0 replies
    • 748 views
  20. நெல்சன் மண்டேலா இன்று தனது 90வது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்! தென்னாபிரிக்காவின் முன்னாள் அரசுத் தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான நெல்சன் மண்டேலா இன்று தனது 90வது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்.தென்னாபிர

  21. திருவாடானை: சிவகங்கை மாவட்டம் திருவாடானையில் நடந்த ஆடி திருவிழாவில் எருமை ரத்தத்தைக் குடித்து குழந்தைகள் நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவாடானையில் உள்ள சமத்துவபுரம் அருகே நரிக் குறவர்கள் காலனி உள்ளது. இங்கு 36 குடும்பங்களை சேர்ந்த நரிக்குறவர்கள் ஊசி, பாசி விற்பனை செய்து வசித்து வருகிறார்கள். இவர்கள் பத்திரகாளியம்மன், மீனாட்சி அம்மன், அய்யனார், பாண்டி உள்ளிட்ட குலதெய்வங்களை வழிபட்டு வருகிறார்கள். இதில் அருளாந்து என்பவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் தலைமுறை, தலைமுறையாக பத்திரகாளி அம்மனை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் ஆடிமாதம் ஆடித் திருவிழா கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்காக காரைக்குடியில் இருந்து பத்திரகாளியம்மன் உருவ வெள்ளி சில…

  22. சென்னை: சைக்கோ மனிதன் என சந்தேகப்படும் ஒரு மர்ம நபரை நள்ளிரவில் சென்னை கே.கே.நகர் பகுதி மக்கள் துரத்தியதால் விடிய விடிய அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. சென்னை வடபழனி, கே.கே.நகர், அசோக்நகர், மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களில் அடுத்தடுத்து ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில்ஒரு கொலையில் மட்டும்தான் துப்பு துலங்கியுள்ளது. மற்ற ஐந்து கொலைகளுக்கும் யார் காரணம் என்பது இதுவரை தெரியவில்லை. கொலையானவர்களில் பெரும்பான்மையானவர்கள் வீட்டுக் காவலாளிகள் என்பதால் குறி வைத்து கொல்வது சைக்கோ மனிதனாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர். இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் கே.கே. நகர் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. கருப்பு உடையுடன், முகத்தில் ரத்…

    • 7 replies
    • 1.6k views
  23. தமிழாய்ந்த மூத்த தமிழறிஞரின் தலைமையில் ஆட்சி நடக்கும் தமிழ் நாட்டில் தமிழுக்கு நேருகிற அவமதிப்பு -நெல்லை கண்ணன் "தமிழ்த் திருநாடு தனைப் பெற்ற தாயென்று கும்பிடடி பாப்பா அமிழ்தின் இனியதடி பாப்பா நம் -ஆன்றோர்கள் தேசமடி பாப்பா" முழுமையாகப் பாரதி தமிழனாகவே இருந்தான். அதனால் தான் தமிழச்சியைவிட வேறொரு பெண் அழகாயிருத்தலைக்கூட அவன் ஒத்துக் கொள்ளவில்லை. தமிழைக்கூடச் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் தமிழ் வாழ்க என்று குரல் கொடுத்தவன் இல்லை பாரதி. எட்டு மொழிகளைப் பழுதறக் கற்ற பின்னரே தமிழை, "வானமளந்தனைத்தும் அளந்திட்ட வண்மொழி வாழியவே' என்று போற்றித் துதிக்கிறான். அதனால் தான் யான் படித்த மொழிகளிலே என்று அவன் பாடவில்லை. "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் கா…

    • 1 reply
    • 767 views
  24. பிரிட்டனில் தஞ்சம் கோருபவர்கள் தொடர்பில் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு பிரிட்டனில் தஞ்சம் கோரியிருந்த தமிழ் அகதி ஒருவரை இலங்கை திருப்பியனுப்புவதற்காக செய்யப்பட்ட முயற்சிகளை எதிர்த்து அந்த அகதி மேற்கொண்டுவந்த முறைப்பாட்டுக்கு ஆதரவாக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் முடிவு தெரிவித்துள்ளது. பெயர் வெளியிடப்படாத இந்தத் இலங்கைத் தமிழ் அகதி, தான் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால், அங்கு விடுதலைப் புலிகளாலும் இலங்கை இராணுவத்தாலும் மோசமாக நடத்தப்படலாமென்று தான் அஞ்சுவதாக வாதிட்டிருந்தார். விடுதலைப் புலிகளை முறியடிப்பதற்காக இலங்கை இராணுவம் சித்ரவதையை ஒரு உத்தியாகக் கையாள்கிறது என்பதாகக் குறிப்பிட்டு; அவ்விவகாரத்தை நீதிமன்றம் கருத்தில் எடுத…

  25. மெக்சிகோ நாட்டில் தனது 4 மகள்களையும் கற்பழித்த தந்தைக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ நாட்டில் லாரி டிரைவராக உள்ள ஒருவர் தனது 4 மகள்களை கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்களில் இரண்டு பேர் கர்ப்பமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து கடந்த 2006 ஆம் ஆண்டு அந்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார். இது குறித்து நடைபெற்ற வழக்கில் மெக்சிகோ நீதிமன்றம் அவருக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட அவரது மனைவி நீதிமன்றத்தில் ஆஜராகி தனது கணவருக்கு எதிராக சாட்சியமளித்ததை தொடர்ந்து அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனினும் அந்த நபரின் அடையாளத்தை வெளியிட நீதிமன்றம் மறுத்து விட்டது. http…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.