Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே எதிர்பாராத வகையில் போர் மூளக்கூடும்: பிரித்தானியா! ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே எதிர்பாராத வகையில் போர் மூளக்கூடும் என்று பிரித்தானிய இராணுவ தலைமைத் தளபதி நிக் கார்ட்டர் எச்சரித்துள்ளார். டைம்ஸ் வானொலிக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “ஒருவருக்கொருவர் மோதுவதையே குணமாகக் கொண்ட அரசியல்வாதிகள் எடுக்கும் முடிவுகளால், எதிரி நாடுகளுடனான பதற்றம் அதிகரிக்கவும் அந்தப் பதற்றம் தவறான கணக்கீடுகளை உருவாக்கவும் நாம் அனுமதிக்கக் கூடாது. சர்வாதிகாரப் போக்கைக் கொண்ட எதிரி நாடுகளின் தலைவர்கள், தங்கள் வெற்றிக்காக அகதிகள் பிரச்சினை, எண்ணெய் விலையேற்றம், மறைமுகப் போர்…

  2. ரஷ்யாவுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே தற்போது நிலவி வரும் பதட்டம் நீடித்தால் அது போராக வெடிக்கும் அபாயம் உள்ளதாக முன்னாள் சோவியத் யூனியன் அதிபர் கோர்பசேவ் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ரஷ்யாவை மீண்டும் ஒரு பனிப்போருக்கு மேற்கத்திய நாடுகள் இழுத்துள்ளன. இந்த பனிப்போர் முழு போராக வெடிக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றார். கிழக்கு உக்ரைனில் அரசு படையினருக்கும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்று வரும் சண்டையில் 5,100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சண்டையில் கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா உதவியளித்து வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டி வருகிறது. கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பகுதிகளை…

  3. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை நம்பியுள்ளார் கட்டுரை தகவல் எழுதியவர், டாம் பேட்மேன் பதவி, வெளியுறவு விவகாரங்கள் செய்தியாளர் 9 மணி நேரங்களுக்கு முன்னர் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் யுக்ரேன் ஊடுருவி வரும் நிலையில், சீம் ஆற்றின் மீதுள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பாலத்தை தற்போது அழித்துள்ளது. கிளஷ்கோவோ நகருக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கை, உள்ளூர் மாவட்டத்தின் ஒரு பகுதியைத் துண்டித்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தனது துருப்புகளுக்கான விநியோகச் சங்கிலியாக இந்தப் பாலத்தை ரஷ்யா பயன்படுத்தி…

  4. பட மூலாதாரம்,REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், ஜரோஸ்லாவ் லுகிவ் & சோபியா ஃபெரீரா சாண்டோஸ் பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் யுக்ரேன் படைகள் ரஷ்ய எல்லைக்கு புகுந்து தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியான நிலையில், யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி முதல்முறையாக அதனை ஒப்புக்கொண்டுள்ளார். "ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் (Kursk) பகுதிக்குள் தனது ராணுவம் எல்லை தாண்டிய தாக்குதலை நடத்தி வருகிறது” என்று அவர் கூறியுள்ளார். சனிக்கிழமை (ஆகஸ்ட் 10) மாலை வெளியிட்ட வீடியோவில், யுக்ரேனிய ராணுவம் ஆக்கிரமிப்பாளரின் நிலத்தில் மோதலை முன்னெடுத்து வருவதாக ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். யுக்ரேன் செவ்வாயன்று …

  5. ரஷ்யாவுடனான 30 நாள் போர் நிறுத்தத்திற்கு தயார் – உக்ரேன் இணக்கம்! சவுதி அரேபியாவில் அமெரிக்கா-உக்ரேன் இடையே நடந்த ஒரு நாள் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், அமெரிக்கா முன்மொழிந்த ரஷ்யாவுடன் உடனடியான 30 நாள் போர் நிறுத்தத்தை ஏற்கத் தயாராக இருப்பதாக கெய்வ் தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளிவிகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ, இந்த வாய்ப்பை ரஷ்யாவிடம் முன்வைக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், “நேர்மறையான” திட்டத்திற்கு ரஷ்யாவை ஒப்புக்கொள்ள வைப்பது இப்போது அமெரிக்காவின் பொறுப்பாகும் என்று உக்ரேன் ஜனாதிபதி வோலோடோமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். ஜெட்டாவில் செவ்வாயன்று (11) நடந்த பேச்சுவார்த்தை, ஓவல் அலுவலகத்தில் ஜெலென்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையிலான முன்னதாக …

  6. ரஷ்யாவுடனான அணுவாயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேற்றம்! பனிப்போர் காலத்தில் ரஷ்யாவுடன் அமெரிக்கா மேற்கொண்ட அணுவாயு வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்காவை விலக்கிக்கொள்ளப் போவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஊடகங்களுடனான சந்திப்பில் நேற்று (சனிக்கிழமை) கருத்துத் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த 1987ஆம் ஆண்டு இடைப்பட்ட தூரத்திற்குள் செயற்படும் அணுவாயுதங்களுக்கான வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா-ரஷ்யா கைச்சாத்திட்டதற்கு இணங்க, ரஷ்யா முறையாக செயற்படவில்லையென ட்ரம்ப் மேலும் குறிப்பிட்டுள்ளார். குறித்த ஒப்பந்தமானது, 500 தொடக்கம் 5,500 வரையான கிலோ மீற்றர் பரப்பிற்குள் செயற்படும் அணுவாயுதங்க…

  7. ரஷ்யாவுடனான உறவை இந்தியா முறித்துக் கொள்ளாது : அமெரிக்கா தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவிச் செயலாளர் டொனால்ட் லூ, ரஷ்யா – உக்ரைன் மோதலில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து அமெரிக்காவின் பார்வையை வெளிப்படுத்தியுள்ளார். ரஷ்யாவுடனான உறவை இந்தியா விரைவில் முடித்துக் கொள்ளப் போகிறது என அமெரிக்கா நினைக்கவில்லை. உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவுடனான தனது செல்வாக்கை இந்தியா பயன்படுத்தும் என்று நம்புகின்றேன் என்றும் குறிப்பிட்டார். இந்தியா, கஜகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கான அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அண்டனி பிளிங்கனின் எதிர்வரும் விஜயம் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளிக்கும் போதே அவர்…

  8. ரஷ்யாவுடனான போரினால்... உக்ரைனில், 3,752க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்பு! உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததற்குப் பிறகு, அந்த நாட்டில் 3,752க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தப் போரில் 4,062பேர் காயமடைந்தாகவும் உயிரிழந்துள்ளளோர் காயமடைந்தோரின் உண்மையான எண்ணிக்கை இதைவிட இன்னும் அதிகமாக இருக்கலாம் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, உக்ரைனின் 31 இடங்களில் தாங்கள் நடத்திய தாக்குதலில் 270 ‘தேசியவாத’ படையினர் உயிரிழந்ததாகவும் அமெரிக்க பீரங்கிகள் உள்ளிட்ட 54 இராணுவ தளவாடங்கள் அழிக்கப்பட்டதாகவும் ரஷ்யா கூறியுள்ளது. இதுவரை உக்ரைனின் 172 விமானங்கள், 125 ஹெலிகாப்டர்கள்,…

  9. ரஷ்யாவுடனான மோதலில்... இதுவரையில் 1,300 படையினர், கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி அறிவிப்பு! ரஷ்யாவுடனான மோதலில் இதுவரையில் 1,300 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஷெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் சுமார் 600 ரஷ்ய படையினர் உக்ரைனிடம் சரணடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் உக்ரனின் கியிவ் பகுதியிலுள்ள இராணுவ விமான நிலையத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் சுமார் 13 ஆயிரம் பேர் நேற்று மனிதாபிமான அடிப்படையில் வெளியேற்றப்பட்டதாக உக்ரைன் துணை பிரதமர் அறிவித்துள்ளார். இதேவேளை, உக்ரைன் வான் பரப்பில் விமானங்கள் பறப்பதற்கு தடைவிதிக்க நேட்டோ நடவடிக்கை எ…

  10. நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் பெரும்பான்மையான கிரிமிய நாட்டு மக்கள் ரஷ்யாவுடன் இணைய வாக்களித்ததைத் தொடர்ந்து இனி அந்தப் பிரதேசம் ரஷியாவின் ஒரு பகுதியாக மாறும் சாத்தியம் அதிகரித்துள்ளது. அளிக்கப்பட்ட வாக்குகளில் பாதிக்கும் மேற்பட்டவை எண்ணப்பட்ட நிலையில் 95 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் ரஷ்யாவுடன் கிரிமியா இணைவதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளனர். மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்களிப்பில் கிரிமியா தனி சுதந்திர நாடாக மாறுவது அல்லது ரஷ்யாவின் ஒரு பிரதேசமாக இணைவது என இரு தேர்வுகள் கொடுக்கப்பட்டிருந்தன. கிரிமியா வாக்கெடுப்புக்கு எதிரான ஐ.நா. தீர்மானம் தோல்வி இதற்கிடையில் கடந்த சனிக்கிழமை (15) ஐக்கிய நாட்டு சபையின் பாதுகாப்பு மன்றத்தில் கிரிமியா வாக்கெடுப…

  11. ரஷ்யாவுடன் இணைய பொது வாக்கெடுப்பு கம் சினி செய்திகள் கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு உக்ரைன் பகுதியான லுஹான்ஸ்கை ரஷ்யாவுடன் இணைப்பது குறித்து விரைவில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்று அந்தப் பகுதி ஆட்சியாளா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து லுஹான்ஸ்க் ‘குடியரசு’ தலைவா் லியோனிட் பாசெச்னிக் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ரஷ்யாவின் ஒரு பகுதியாக லுஹான்ஸ்கை அறிவிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து பொதுமக்களின் கருத்தை அறிந்துகொள்வதற்காக கூடிய விரைவில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் என்றாா். கடந்த 2014 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரின்போது, உக்ரைன் ராணுவத்துக்கு எதிராக சண்டையிட்ட லியோனிட் படை, ரஷ்யா உதவியுடன் லுஹான்ஸ்க் பகுதிய…

    • 0 replies
    • 355 views
  12. ரஷ்யாவுடன் இணையும் உக்ரைன் பிராந்தியங்கள் ரஷ்ய ஆதரவு பெற்றுள்ள பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் நான்கு பிராந்தியங்கள், அந்நாட்டுடன் இணைய உள்ளன. இதற்காக மக்களிடம் கருத்து கேட்கும் ஓட்டெடுப்பு விரைவில் துவங்க உள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா கடந்த, பிப்., 25ல் போர் தொடுத்தது. ஏழு மாதங்களை கடந்து போர் நீடித்து வருகிறது. ரஷ்யப் படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவம் கடும் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், போரை தீவிரப்படுத்தும் வகையில், உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கே உள்ள நான்கு பிராந்தியங்களை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர ரஷ்யா திட்டமிட்டுள்ளது. டோனெட்ஸ்க், லுஹான்க்ஸ், கெர்சான் மற்றும் ஜபோரிஸ்சியா ஆகிய இந்த நான…

  13. ரஷ்யாவுடன் உடனடியாக போர் நிறுத்தம்- அமைதிப் பேச்சுக்களை நடத்த தயார்: உக்ரைன்! ரஷ்யாவுடன் உடனடியாக போர் நிறுத்தம் மற்றும் அமைதிப் பேச்சுக்களை நடத்த தயாராக இருப்பதாக, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் செய்தித் தொடர்பாளர், செர்ஹி நிக்கிஃபோரோவ் அறிவித்துள்ளார். முகப்புத்தகத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த மறுத்துவிட்டோம் என்ற அறிக்கைகளை நான் மறுக்க வேண்டும். உக்ரைன் சண்டையின் முடிவு மற்றும் அமைதி பற்றி பேச தயாராக உள்ளது. இதுதான் எங்களின் மாறாத நிலை. ரஷ்ய ஜனாதிபதியின் சலுகைக்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம். இந்த நேரத்தில், பேச்சுவார்த்தை நடத்துவதற்கான இடம் மற்றும் நேரம் குறித்து இருதரப்பும் ஆலோசனை நடத்தி வருகின்றன…

  14. ரஷ்யாவுடன் ஐரோப்பிய பேச்சுவார்த்தைகளை வலியுறுத்துவதில் மெலோனி மக்ரோனுடன் இணைகிறார். மாஸ்கோவுடனான கலந்துரையாடல்களுக்கு ஒரு சிறப்பு தூதரை நியமிக்க இத்தாலிய பிரதமர் பரிந்துரைக்கிறார். கேளுங்கள் இணைப்பை நகலெடு இலவச கட்டுரை பொதுவாக சந்தாதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. "ஐரோப்பாவும் ரஷ்யாவுடன் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நான் நம்புகிறேன்," என்று ஜியோர்ஜியா மெலோனி வெள்ளிக்கிழமை ரோமில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். | எட்டோர் ஃபெராரி/EPA ஜனவரி 9, 2026 மாலை 5:41 CET ஹன்னா ராபர்ட்ஸ் எழுதியது ரோம் - உக்ரைனில் கிரெம்ளினின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், ரஷ்யாவுடன் பேச ஒரு சிறப்புத் தூதரை நியமிக்குமாறு இத்தாலிய பிரதமர…

    • 2 replies
    • 294 views
  15. ரஷ்யாவுடன் சமரசம் செய்து கொண்டேனா? ஆவேசத்துடன் டிரம்ப் மறுப்பு தன்னை சங்கடத்துக்குள்ளாக்கும் முக்கிய தகவல்களை ரஷ்யா வைத்துள்ளதாக கூறப்படுவதற்கு எதிராக கடுங்கோபத்துடன் பதிலளித்துள்ள அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், தன்னை பயன்படுத்திக் கொள்ள ரஷ்யா எப்போதும் முயன்றதில்லை என்று கூறியுள்ளார். தாங்கள் சமரசம் செய்து கொண்டதாக கூறப்படுவதை மறுத்துள்ள டிரம்ப் மற்றும் புதின் அலுவலகங்கள் இது போன்ற தவறான தகவல்களை பொது மக்களிடையே கசிய அனுமதித்த உளவு முகமைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள டிரம்ப், , '' நாம் என்ன நாஜி ஜெர்மனியிலா வாழ்ந்து வருகிறோம்? என்று கேள்வியெழுப்பினார். டிரம்ப்பின் தேர்தல் பிரச்சாரக் குழு…

  16. ரஷ்யாவுடன் நேட்டோ துருப்புக்கள் நேரடியாக மோதுவது உலகளாவிய பேரழிவிற்கு வழிவகுக்கும்: புடின் ரஷ்யாவுடன் நேட்டோ துருப்புக்கள் நேரடியாக மோதுவது உலகளாவிய பேரழிவிற்கு வழிவகுக்கும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார். கஸகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நடைபெற்ற முன்னாள் சோவியத் நாடுகளின் உச்சிமாநாட்டைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘உக்ரைனுக்கு எதிராக இப்போதைக்கு இன்னும் பாரிய தாக்குதல்களை ரஷ்யா திட்டமிடவில்லை. ரஷ்யாவின் நோக்கம் நாட்டை அழிப்பது அல்ல. இப்போது பாரிய தாக்குதல்கள் தேவையில்லை. இப்போதைக்கு மற்ற பணிகள் உள்ளன. பின்னர் அது தெளிவாகத் தெரியும…

    • 2 replies
    • 260 views
  17. ரஷ்யாவுடன் மீண்டும் பனிப்போர் ஏற்படாது முட்டாள்தனமாக செயற்படும் மொஸ்கோ * கொண்டலீசா ரைஸ் வாஷிங்டன்: ரஷ்யா- அமெரிக்கா இடையே மீண்டும் பனிப்போர் காலப் பதற்றம் ஏற்படாதென அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரஷ்யா அமெரிக்கா இடையே மீண்டும் பனிப்போர் ஏற்படும் அபாயம் குறித்து நிலவும் வதந்திகள் தொடர்பில் உலக வர்த்தக மையத்தில் அமெரிக்க வெளியுறுவு அமைச்சர் கொண்டலீசா ரைஸ் வழங்கிய பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்: ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் மீண்டும் பனிப்போர் ஏற்படப் போவதில்லை . ஆனாலும், ரஷ்யா முட்டாள்தனமாகவும் பொறுப்பற்ற தன்மையிலும் நடந்து கொண்டிருக்கின்றது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவி…

  18. ரஷ்யாவுடன் மோதும் எண்ணம் எங்களுக்கு இல்லை: பின்வாங்கியது துருக்கி! சிரியாவில் நிலைக்கொண்டுள்ள ரஷ்யாவுடன் மோதும் எண்ணம் தங்களுக்கு இல்லை என துருக்கி தெரிவித்துள்ளது. சிரியா இராணுவம் மீது தொடர்ச்சியாக தாக்குதலை தொடுத்துவரும் துருக்கி, இத்தாக்குதலை நிறுத்தப் போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து துருக்கி பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹூலுசி ஆகார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இட்லிப் மாகாணத்தில், எங்களது படையினர் மீது சிரியா இராணுவம் கடந்த மாதம் 27ஆம் திகதி நடத்திய விமானத் தாக்குதலில் 33 வீரர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டுப் படையினர் மீது தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். இருந்தாலும், சிரியா படையினருக்கு ஆதரவாக செயற்பட்டு வர…

  19. 18 Nov, 2025 | 04:41 PM ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோதே இதனைத் தெரிவித்துள்ள ட்ரம்ப், “குடியரசு கட்சி எம்.பிக்கள் செனட் சபையில் பொருளாதார தடைகளுக்கான சட்ட மசோதாக்களை தாக்கல் செய்துகொண்டே இருப்பார்கள். இதுதான் அவர்களுடைய பணி. ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாட்டின் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை மேற்கொள்ளும். இதில் பாரபட்சம் இல்லை. அது எந்த நாடாக இருந்தாலும் சரி. இந்த பட்டியலில் ஈரானையும் சேர்க்கச் சொல்லியிருக்கிறேன்” என்றார். ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதிய…

  20. வாஷிங்டன், அடுத்த வாரம் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். இந்நிலையில், ரஷ்யாவுடன் வியாபாரம் செய்வதற்கு இது சரியான நேரமல்ல என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையை இது எந்த விதத்திலும் பாதிக்காது எனவும் தெரிவித்துள்ளது. இதுபற்றி அமெரிக்காவின் செய்தித்துறை செயலாளர் மேரி ஹார்ப் கூறுகையில், 'எங்களுக்கு பிடிக்காத சில விஷயங்கள் இருந்தாலும் பல நாடுகளுடன் நட்புறவை வளர்த்துக் கொள்வதில் தவறில்லை. எனக்கு தெரிந்த வரையில் ஒரு நாட்டின் அதிபரின் பயணம் மற்றொரு நாட்டு அதிபரின் வருகையை எந்த விதத்திலும் பாதிக்காது. முதலில் அதிபர் புதினின் வருகையால் என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். வர்த்தக, பொருளாதா…

  21. ரஷ்யாவுடன்... கிரீமியா தீபகற்பத்தை, இணைக்கும் பாலம்... தகர்க்கப்பட வேண்டும்: உக்ரைனின் கருத்தால் பரபரப்பு! ரஷ்யாவுடன் கிரீமியா தீபகற்பத்தை இணைக்கும் பாலம் தகர்க்கப்பட வேண்டும் என உக்ரைன் கூறியுள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மைய தினங்களாக ஆக்கிரமிப்பு கிரீமியாவில் தொடர் தாக்குதல்கள் இடம்பெற்று வரும் நிலையில், உக்ரைனின் இந்த கருத்து ரஷ்யாவை மேலும் கோபமடைய வைத்துள்ளது. கிரீமியா தீபகற்பத்தை தங்களது பகுதியுடன் இணைத்து ரஷ்யா கட்டியுள்ள பாலம் சட்டத்துக்கு விரோதமானது என்பதால் அந்த பாலம் தகர்க்கப்பட வேண்டியது அவசியம் என உக்ரைனின் ஜனாதிபதியின் ஆலோசகர் மிகய்லோ பொடோலியக் தெரிவித்துள்ளார். அத்துடன், ரஷ்யா தாமாக முன்வந்து அ…

    • 26 replies
    • 1k views
  22. ரஷ்யாவை... ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இருந்து, நீக்க வேண்டும் என உக்ரைன் கோரிக்கை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இருந்து ரஷ்யாவை நீக்க வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி வொளொடிமிர் ஸெலென்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார். ஐ.நா. பாதுகாப்புச் சபையின் கூட்டத்தில் நேற்றைய தினம், காணொளி மூலம் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது, உக்ரைனில் ரஷ்ய படைகளினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து, பாதுகாப்புச் சபைக்கு அவர் விளக்கமளித்துள்ளார். இதன்போது, ரஷ்ய படையினால், உக்ரைனியர்கள் கொல்லப்பட்டும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டும் வருகின்ற நிலையில், ரஷ்யா பொறுப்புக் கூரலுக்கு உள்ளாக வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இதேநேர…

  23. ரஷ்யாவை... ஜி20 அமைப்பில் இருந்து விலக்க, அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் திட்டம் ! ரஷ்யாவை ஜி20 அமைப்பில் இருந்து விலக்குவதற்கான நடவடிக்கையை அமெரிக்காவும் பிற மேற்கத்திய நாடுகளும் பரிசீலித்து வருவதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை ரஷ்யாவை மாற்றவேண்டும் என்ற பரிந்துரையை போலந்து, அமெரிக்க அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதை நோக்கமாகக் கொண்டு குறித்த அமைப்பு செயற்பட்டு வருகின்றது. இந்நிலையில் குறித்த அமைப்பில் இருந்து ரஷியாவை நீக்க கோருவது மேற்கிலிருந்து ரஷ்யாவிற்கு எதிராக இருக்கும் பொருளாதாரத் தடைகளை அதி…

  24. Published By: RAJEEBAN 26 JUN, 2024 | 01:09 PM உக்ரைனில் இடம்பெற்ற யுத்த குற்றங்களிற்காக ரஸ்யாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் தற்போதைய இராணுவ பிரதானிக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணையை பிறப்பித்துள்ளது. உக்ரைன் மீதான ரஸ்யாவின் படையெடுப்பின் போது உக்ரைனின் சிவில் உட்கட்டமைப்பு மற்றும் மின்நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிற்காகவே ரஸ்ய அதிகாரிகளிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் சேர்ஜி சொய்குவும் மற்றும் பாதுகாப்பு பிரதானி வலெரி ஜெராசிமோவும் பொதுமக்கள் இலக்குகளை தாக்கியமை, பொதுமக்களிற்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியமை, சேதப்படுத்தியமை…

  25. Published By: RAJEEBAN 15 MAY, 2023 | 03:05 PM ரஸ்யாவிற்கு எதிராக உக்ரைன் பதில் தாக்குதலை மேற்கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பு காணப்படும் நிலையில் பிரிட்டன் ஸ்டோர்ம் சடோ என்ற அதிநவீன ஏவுகணையை உக்ரைனிற்கு வழங்கியுள்ளது. பிரிட்டன் உக்ரைனிற்கு ஸ்டோர்ம் சடோ அதிநவீன ஏவுகணைகளை வழங்கியுள்ளதன் மூலம் மிகவும் எதிர்பார்க்கப்படும் பதில் தாக்குதலிற்கு முன்னதாக உக்ரைனின் நீண்ட தூரம் தாக்கும் திறனை அதிகரித்துள்ளது. ரஸ்யாவின் ஈவிரக்கமற்ற தன்மைக்கு எதிராக உக்ரைன் தன்னை பாதுகாத்துக்கொள்வதற்கான சிறந்த வாய்ப்பு இந்த ஏவுகணை என பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சர் பென்வலெஸ் தெரிவித்துள்ளார். துல்லியமாக தாக்கும் திறன் உள்ள நீண்டதூர குறுஸ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.