உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26601 topics in this forum
-
அரச பாரம்பரிய முறைப்படி பிரித்தானிய மகாராணி 2 ஆம் எலிசபெத்தின் பூதவுடல் நல்லடக்கம் 19 Sep, 2022 | 10:48 PM பிரித்தானிய மகாராணி 2 ஆம் எலிசபெத்தின் பூதவுடல் அரச பாரம்பரிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது. பிரித்தானியாவில் நீண்ட காலம் ஆட்சி செய்த மகாராணி இரண்டாம் எலிசபெத் (வயது 96) உடல் நலக்குறைவு காரணமாகவும், வயது மூப்பினாலும் கடந்த 8 ஆம் திகதி மரணம் அடைந்தார். அவரது உடல் லண்டன் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இலட்சக்கணக்கான பொதுமக்கள் பல மணி நேரம் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ராணி மேல் வைத்திருந்த அன்பால் நீண்ட வரிசைய…
-
- 0 replies
- 389 views
-
-
ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட 4 பிராந்தியங்களில் இராணுவச் சட்டம்: புடின் அறிவிப்பு! ரஷ்யாவால் இணைத்துக்கொள்ளப்பட்ட உக்ரைன் பிராந்தியங்களில் இராணுவச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக ஜனாதிபதி விளாடிமீர் புடின் அறிவித்துள்ளார். இதற்கமைய இன்று (வியாழக்கிழமை) முதல் அந்தப் பகுதிகளில் அவசரக் கால நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட தலைவர்களுக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து புடின் கூறுகையில், ‘4 பிராந்தியங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காகவும் ரஷ்யாவின் எதிர்காலத்தை உறுதி செய்வதற்காகவும் மேற்கொள்ளப்பட வேண்டிய மிகவும் சிக்கலான மற்றும் பிரம்மாண்டமான பணிகள் குறித்து ஆலோசித்து வருகிறோம். இந்த இக்…
-
- 0 replies
- 178 views
-
-
பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டம்! பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜனாதிபதி ஜோ பைடன் இந்த வாரம் இந்த நடவடிக்கையை அறிவிப்பார் என்று பெயரிடப்படாத அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ரஷ்ய தாக்குதல்கள் தொடர்ந்து பொதுமக்களைக் கொன்று பெரும் இருட்டடிப்புகளை ஏற்படுத்தியதால், உக்ரைன் சில காலமாக மேலும் வான் பாதுகாப்பு ஆதரவைக் கோரி வருகிறது. பேட்ரியாட் மிகவும் மேம்பட்ட அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகும், ஆனால் உக்ரைனுக்கான விநியோகம் குறைவாகவே இருக்கும் என நம்பப்படுகின்றது. இதில் எத்தனை பேட்ரியாட் வ…
-
- 0 replies
- 300 views
-
-
இந்தோனீசியா: தேவாலயங்களில் தற்கொலைப்படை தாக்குதல் - 11 பேர் பலி பகிர்க இந்தோனீசியாவின் இரண்டாவது பெரிய நகரான சுரபயாவில் உள்ள மூன்று கிறிஸ்துவ தேவாலயங்கள் மீது தற்கொலை படையினர் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் குறைந்தது 11 பேர் இறந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைEPA சில நிமிட இடைவெளியில் நடந்த இந்த தாக்குதல்களில் பல டஜன் மக்கள் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை. தாக்குதல் நடந்த ஒரு தேவாலயத்தின் நுழைவாயிலில் குப்பைகள் மற்றும் சிதிலங்கள் சிதறிக் கிடப்பதை தொலைக்காட்சியில் வெளியான படங்கள் காண்பித்துள்ளன. முஸ்ல…
-
- 0 replies
- 501 views
-
-
"பார்ப்பவரின் கண்களில்தான் ஆபாசம்; படத்தில் இல்லை" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். "தாய்ப்பால் ஊட்டும் அட்டை படம் ஆபாசம் இல்லை" படத்தின் காப்புரிமைGRIHALAKSHMI MAGAZINE குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் பெண்ணின் புகைப்படத்தை, அட்டையில் பிரசுரித்த மலையாள பத்தி…
-
- 0 replies
- 450 views
-
-
அரசு பதவிகளில் அமர்த்தியுள்ள உறவினர்களை பணிநீக்குமாறு தலிபான்களுக்கு அதன் தலைவர் உத்தரவு! அரசு பதவிகளில் அமர்த்தியுள்ள உறவினர்களை பணிநீக்கம் செய்யுமாறு தலிபான்களுக்கு அதன் தலைவர் ஹிபத்துல்லா அகுண்ட்சாடா உத்தரவிட்டுள்ளார். அரசு பதவிகளில் நியமிக்கப்பட்ட மகன்கள் அல்லது பிற குடும்ப உறுப்பினர்களை அதிகாரிகள் மாற்ற வேண்டும் என்றும் எதிர்காலத்தில் உறவினர்களை பணியமர்த்துவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அனுபவமில்லாத பணியாளர்கள் தனிப்பட்ட தொடர்புகளின் அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தலிபான்கள் 2021இல் ஆட்சிக்கு வந்தபோது சில மூத்த ஊழியர்களை பணி…
-
- 0 replies
- 192 views
-
-
இலங்கை தமிழர் பிரச்சினை மற்றும் இந்திய மீனவர்கள் பிரச்சினையை அரசியலாக்காமல் நிரந்தர தீர்வு காணுவதற்கான மாநாடு, சென்னையில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதாக தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள கூட்டம் நடக்கிறது. இதில் இலங்கை தமிழர்களின் வாழ்வாதார பிரச்சினைகள் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் விவாதிக்கப்பட உள்ளன. இலங்கையை சேர்ந்த சில வல்லுனர்களும், இலங்கை தமிழர் நலனில் அக்கறை கொண்ட அமைப்பை சேர்ந்த தலைவர்களும் கலந்துகொள்கிறார்கள். அன்றைய தினம் மாலையில், 'இலங்கை தமிழர் பிரச்சினையில் தீர்வை நோக்கி', 'இந்திய மீனவர்கள் பிரச்சினையில்…
-
- 0 replies
- 1k views
-
-
டெல் அவிவ்வில் காரை மோதி தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு- ஏழு பேர் காயம்! டெல் அவிவ் கடற்கரைக்கு அருகில் கார் மோதியதாக சந்தேகிக்கப்படும் தாக்குதலில் இத்தாலிய சுற்றுலா பயணி ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலிய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்டவர் இத்தாலிய பிரஜை அலெஸாண்ட்ரோ பரினி என இஸ்ரேல் அடையாளம் கண்டுள்ளதாக இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகள், ஒரு உலாவுப் பாதையின் அருகே கவிழ்ந்த கார் மற்றும் ஒரு இஸ்ரேலிய பொலிஸ் அதிகாரி துப்பாக்கிச் சூடு நடத்துவதைக் காட்டியது. தாக்குதல் நடத்திய சந்தேக நபர் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக உள்ளூர் பொலிஸார் தெரிவித்தனர்.…
-
- 0 replies
- 598 views
-
-
பதிமூன்று ஆண்டுகளாக தேடப்பட்ட ஒரு ஜோடி செருப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடைபெற்ற முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம். செருப்புக்கான ஒரு தேடல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES தி விஸார்ட் ஆஃப் ஓசெட் படத்தில் ஜூடி கார்லாண்டால் அணியப்பட்ட மாணிக்க செருப்பு ஒன்று பதிமூன்று ஆண்டுகளுக்குப்பின் கிடைத்துள்ளது. மின்சோடா …
-
- 0 replies
- 556 views
-
-
பருவநிலை மாற்றம் குறித்த பாரீஸ் ஒப்பந்தத்தில் உள்ளபடி புவி வெப்ப அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸ் அளவைவிட குறைவாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அதனை நோக்கி அனைத்து நாடுகளும் பயணிக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது அதற்கு எதிராக புவி வெப்பம் அதிகரிப்பதாக எச்சரிக்கிறார்கள் ஆய்வாளர்கள். அதாவது புவி வெப்ப அதிகரிப்பு 3 டிகிரி செல்சியஸ் அளவை நோக்கி செல்வதாக கூறுகிறார்கள். பருவநிலை மோசமாக பாதிப்படையாமல் இருக்க வேண்டுமென்றால் புவி வெப்ப அதிகரிப்பு 1.5 செல்சியஸுக்கும் குறைவாக இருக்க வேண்டும். இப்போதுள்ள சூழ்நிலை தொடர்ந்தால் மோசமான விளைவுகள் ஏற்படும். ஆனால், இப்போதும் இதிலிருந்து தப்பிக்க வாய்ப்புள்ளதாக நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் அறிவியலாள…
-
- 0 replies
- 584 views
-
-
உயிர்த்தியாகம் செய்தவர்களுக்காக பேரணியாக சென்று மரியாதை செலுத்திய உலகத் தலைவர்கள்! மில்லியன் கணக்கான போர் வீரர்கள் மரணித்த முதலாம் போரில் தத்தமது நாட்டு வீரர்களின் பங்களிப்பதை பறைசாற்றும் விதமாக உலகத் தலைவர்கள் பாரிஸ் நகரில் கூடியுள்ளனர். அந்த வகையில் நிகழ்வை தலைமையேற்று நடத்தும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், உலகத் தலைவர்களை ஒன்றுகூட்டி மழையையும் பாராமல் நடைபவனி ஒன்றையும் நடத்தியுள்ளார். வான் வழியில் ஜெட் விமானங்கள் பறந்து மலர்களை தூவி அஞ்சலி செலுத்த பாரிஸ் பெருந்தெரு வழியே அரச தலைவர்கள் அணிவகுத்துச் செல்கின்றனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், ஜேர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கல், உட்பட பல இளவரசர்கள், மு…
-
- 0 replies
- 610 views
-
-
-
- 0 replies
- 1.7k views
-
-
ஆப்ரிக்கா, பாகிஸ்தானில் இருந்து லட்சக்கணக்கான கழுதைகளை சீனா வாங்குவது ஏன்? பட மூலாதாரம்,THE DONKEY SANCTUARY படக்குறிப்பு, வேலை செய்யும் கழுதைகள் குவாரியில் வண்டியை இழுக்கின்றன கட்டுரை தகவல் எழுதியவர், விக்டோரியா கில் மற்றும் கேட் ஸ்டீபன்ஸ் பதவி, அறிவியல் குழு, பிபிசி செய்திகள் 18 பிப்ரவரி 2024 இளமையை நீட்டிக்கும், கருத்தரிக்க உதவும், இரத்தத்தை வலுப்படுத்தும், தூக்கம் வர உதவும் என பல நன்மைகள் இருபதாக நம்பப்படும் ஒரு சீன பாரம்பரிய மருந்து தயாரிக்க கழுதைத் தோலில் உள்ள ஒரு ரசாயனம் தேவைப்படுகிறது. இதற்காகச் சீனாவுக்கு ஏறுமதி செய்ய, ஆப்பிரிக்கா முதல் பாகிஸ்தான் வரை பல நாடுகளில் கழுதைகள்…
-
- 0 replies
- 403 views
- 1 follower
-
-
வேண்டாத நாட்டுத் தலைவர்களுக்கு நோயைப் பரப்புகிறதா அமெரிக்கா அமெரிக்கா தனக்கு வேண்டாத நாடுகளின் தலைவர்களுக்கு ரகசியமாக புற்றுநோயைப் பரப்பி வருகிறதா என்று வெனிசுலா அதிபர் சாவேஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்காவின் தீவிர எதிர்ப்பாளரான சாவேஸூம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அவர் தவிர பராகுவே அதிபர் பெர்ணான்டோ லுகோ, பிரேசில் அதிபர் டில்மா ரெüசெஃப், அவருக்கு அடுத்த நிலையில் உள்ள லூயிஸ் ஆகியோரும் இந்த ஆண்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் ஆர்ஜெண்டீனா அதிபர் கிறிஸ்டினா பெர்ணான்டஸூக்கு தைராய்டு புற்றுநோய் ஏற்பட்டுள்ள தகவல் புதன்கிழமை வெளியானது. இது தொடர்பாக சாவேஸ் மேலும் கூறியிருப்பது: இந்த விவகாரம் தொடர்பாக அசட்டையாக எவர் மீதும்…
-
- 0 replies
- 556 views
-
-
கருணாநிதி இனி 'திராவிடப் பெருந்தலைவர்', ஸ்டாலின் 'தமிழினத் தளபதி'!-நேரு கொடுத்த பட்டம்!! திருச்சி: திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்னும் ஒரு புதுப் பட்டத்தை சூட்டியுள்ளார் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு. அதேபோல அடுத்த வாரிசு யார் என்ற மோதலில் தீவிரமாக இருப்பவர்களில் ஒருவரான மு.க.ஸ்டாலினுக்கும் அவர் புதுப் பட்டம் கொடுத்துள்ளார். திருச்சியில் கே.என்.நேரு மகன் திருமணம் நடந்தது. இதை தனது ஆதரவு யாருக்கு என்பதைக் காட்டும் நிகழ்ச்சியாக மாற்றி விட்டார் கே.என்.நேரு. மு.க.ஸ்டாலினின் தீவிர ஆதரவாளரான அவர், அழகிரி தரப்பை கடும் கோபமேற்படுத்தும் வகையில் விளம்பரங்களையும், வரவேற்பு தட்டிகளையும் வைத்து அமர்க்களப்படுத்தியிருந்தார். அழகிரி படத்தை எங்குமே காண முடியவில்லை. சில…
-
- 0 replies
- 730 views
-
-
பாகிஸ்தானை புறக்கணித்த சர்வதேச ஊடகங்கள்! பிரித்தானியாவில் நடைபெற்ற ‘ஊடக சுதந்திரத்துக்கான பாதுகாப்பு’ என்ற மாநாட்டில் பாகிஸ்தான் அமைச்சரின் உரையை சர்வதேச ஊடகங்கள் புறக்கணித்துள்ளன. லண்டனில் ‘ஊடக சுதந்திரத்துக்கான பாதுகாப்பு’ என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. இதில் பிரித்தானியா, கனடா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். குறித்த மாநாடு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ஊடகவியலாளர் ஒருவர் பாகிஸ்தானில் ஊடக சுதந்திரம் பறிக்கப்படுவதாகவும் கருத்துரிமை தணிக்கைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் கோஷம் எழுப்பினார். மேலும், சுதந்திரமாக கருத்துக்களை தெரிவித்ததற்காக பாகிஸ்தான் அவரது தனது டுவிட்டர் கணக்கை முடக்கிவிட்டதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனா…
-
- 0 replies
- 508 views
-
-
பிரான்சின் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி தேர்தல் பிரசாரத்திற்காக வந்திருந்த போது, முட்டைகளை வீசி எதிர்ப்பாளர்கள் தாக்குதல் நடத்தினர். பிரசாரக் கூட்டத்திற்கு வருகை புரிந்த சர்கோசி தன் காரை விட்டு இறங்கியதுமே, எதிர்ப்பாளர்கள் தங்களது பாங்க் மொழியில் நிக்கோலஸ் கம் போரா(நிக்கோலஸ் வெளியே போ) என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். சர்கோசியை கூட்டத்தினர் சூழ்ந்து கொண்டு ஓ வென்று கூச்சலிட்டனர், முட்டைகளை அவர் மீது வீசி வெளியோ போ, வெளியே போ என்று கூக்குரலிட்டு எதிர்ப்புக் கோஷங்களை எழுப்பினர். இவர்களுக்குப் பயந்து உணவகத்திற்குள் சென்ற சர்கோசி ஒரு மணிநேரம் வரை அங்கு இருக்க நேரிட்டது. எதிர்ப்பாளர்களின் இந்த செயலுக்கு சர்கோசி தனது எதிர்ப்பை தெரிவித்தார். பாஸ்க் பகுதி பிரான்சின் தென்க…
-
- 0 replies
- 490 views
-
-
'பாரீஸ் தாக்குதல்: அன்பை பரிமாறுகிறவர்களே இறுதியில் ஜெயிக்கிறார்கள்!' கடந்த நவம்பர் 13-ம் தேதி பாரிஸில் நடந்தக் கொடூர தீவிரவாதத் தாக்குதலுக்கு 130க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் இறந்து போனார்கள். இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ்.ஐ.எஸ் ( இரானியன் ஸ்டேட் ஆஃப் ஈராக் அண்ட் சிரியா) இயக்கம், உலகம் முழுதும் இருந்து கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் எதிர்கொண்டுள்ளது. இந்த மனிதத் தன்மையற்ற செயலுக்கு பலியான மக்களுக்காக எங்கும் நினைவஞ்சலிகள் நடத்தப்படுகின்றன. இதே போல், கடந்த ஜனவரியில் ஃபிரான்ஸின் சார்லி ஹெப்டோ என்கிற பத்திரிக்கை, இஸ்லாமியர்களின் முகம்மது பற்றிய கேலிச் சித்திரங்களை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து அந்த அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத…
-
- 0 replies
- 623 views
-
-
பட மூலாதாரம்,NORWEGIAN ORCA SURVEY படக்குறிப்பு, உள்ளூர் மக்களுக்கு இந்த திமிங்கலம் ஒரு செல்லப்பிராணி. அதற்கு அவர்கள் ‘ஹவ்லாடிமிர்’ என்று பெயரிட்டுள்ளனர். எழுதியவர், ஜோனா ஃபிஷர் மற்றும் ஒக்ஸானா குண்டிரென்கோ பதவி, பிபிசி சுற்றுச்சூழல் நிருபர் மற்றும் `Secrets of the Spy Whale’ சிறப்பு தயாரிப்பாளர் கழுத்துப் பட்டையுடன் பெலுகா திமிங்கலம் ஒன்று நார்வே கடற்கரைக்கு வந்தது எப்படி? என்ற மர்மத்திற்கு இறுதியாக தற்போது விடை கிடைத்துள்ளது. உள்ளூர் மக்களுக்கு இந்த திமிங்கலம் ஒரு செல்லப்பிராணி. அதற்கு அவர்கள் ‘ஹ்வால்டிமிர்’ என்று பெயரிட்டுள்ளனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, 2019 ஆம் ஆண்டு , கடற்கரையில் காணப்பட்ட போது இந்த …
-
- 0 replies
- 337 views
- 1 follower
-
-
2016 ஆம் ஆண்டு மனிதாபிமான உதவிகளுக்கு 20 பில்லியன் தேவை; ஐ.நா [ Tuesday,8 December 2015, 04:31:16 ] எதிர்வரும் 2016 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள மனிதாபிமான உதவி செயற்பாடுகளுக்காக 20 பில்லியன் அமெரிக்க டொலர் உதவியை ஐக்கிய நாடுகள் சபை கோரியுள்ளது. இவற்றில் ஐந்தில் இரண்டு பங்கு நிதி சிரியாவில் தொடரும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவைப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுமார் 87 மில்லியன் மக்களுக்கு உடனடியான உதவிகள் தேவைப்படுவதாக மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான ஐக்கிய நாடுகளின் தலைமை அதிகாரி ஸ்ரீபன் ஓ பிரையன் தெரிவித்துள்ளார். முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகளவிலான மக்கள் சொந்…
-
- 0 replies
- 708 views
-
-
நமீபியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக நெடும்போ பதவியேற்பு! ஆபிரிக்க நாடான நமீபியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதில் தென்மேற்கு ஆபிரிக்க மக்கள் அமைப்பு கட்சி சார்பில் போட்டியிட்ட நெடும்போ நந்தி தைத்வா (Netumbo Nandi-Ndaitwah) 58 சதவீதம் வாக்குகள் பெற்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். 72 வயதான அவரை எதிர்த்து போட்டியிட்ட மாற்றத்திற்கான சுதந்திர தேசபக்தர்கள் கட்சியினால் 26 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. இந்நிலையில் தலைநகர் விண்ட்ஹோயிக்கில் உள்ள நாடாளுமன்றத்தில் அண்மையில் அவரது பதவியேற்பு விழா நடைபெற்றது. இதன்போது, முன்னாள் ஜனாதிபதி நங்கோலா பும்பா அதிகாரத்தை அவரிடம் ஒப்படைத்தார். இந்நிகழ்ச்சியில் தான்சானியா ஜனாதிபதி சாமியா சுலுஹூ ஹாச…
-
- 0 replies
- 318 views
-
-
தமிழகத்தில் தீயாக பரவிய மெகந்தி பீதியால் விடிய விடிய மக்கள் அவதி!! சென்னை: மெஹந்தி எனப்படும் மருதாணி வைத்துக் கொண்டால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணமடைவார்கள், தோல்வியாதி ஏற்படும், கை, கால்கள் பாதிக்கப்பட்டு அவற்றைத் துண்டிக்கும் நிலை ஏற்படும் என தமிழகத்தின் பல பகுதிகளிலும் நேற்று வதந்தி பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு விட்டது. இதையடுத்து பல்வேறு மருத்துவமனைகளுக்கும் பெண்களும், குழந்தைகளும் படையெடுத்து வந்தனர். இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று பெண்களும், குழந்தைகளும் கைகள் மற்றும் கால்களில் மெஹந்தி எனப்படும் மருதாணி வைத்து அலங்கரித்துக் கொண்டனர். பெரும்பாலானோர் கோன் வடிவில் உள்ள ரெடிமேட் மெஹந்தியால் அலங்காரம் செய்து கொண்டனர். இந…
-
- 0 replies
- 933 views
-
-
புதிய தலைமுறை-எஸ்.ஆர்.எம்-IJ கட்சி பாரிவேந்த பச்சமுத்துவுக்கு பிறந்தநாள் வாழ்த்து! செய்தி -26 ஓரிரு மாதங்களாகவே தலைப்பில் உள்ள கம்பெனிகளின் முதலாளியும் இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவருமான டாக்டர் பாரிவேந்தர் என்ற பச்சமுத்துவின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் வார, வாரமிருமுறை, மாத இதழ்களில் விளம்பரங்களாக படையெடுத்தன. சேலம், திருப்பூர், நெல்லை, திருச்சி என்று பல்வேறு மாவட்ட தலைகள் கொடுத்த விளம்பரங்கள் அனைத்தும் ஒரே டிசைனில் இருந்ததைப் பார்த்தால் எல்லாம் தலையே செய்த செட்டப் என்று புரிந்து கொள்ள ரொம்ப அறிவு தேவையில்லை. இன்று ஆகஸ்ட்டு 24 அவரது பிறந்த நாளை ஒட்டி எல்லா தினசரிகளிலும் வண்ண விளம்பரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இப்படி கைக்காசு போட்டு தன்னையே …
-
- 0 replies
- 557 views
-
-
ஆப்கானிஸ்தான் போரில் அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகள் மேற்கொண்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையை முன்னெடுப்பதற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையை தடுக்கும் அந்த நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை அது திரும்பப் பெற்றுள்ளது. இதன்படி 2003 மே மாதம் தொடக்கம் தலிபான்கள், ஆப்கான் அரசு மற்றும் அமெரிக்க துருப்புகளின் செயற்பாடுகள் ஆய்வுக்கு உட்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இணையாத நிலையில் அதன் அமெரிக்க பிரஜைகள் மீதான அதிகாரித்தை அமெரிக்க அங்கீகரிப்பதில்லை. எனினும் ஆப்கானிஸ்தான் அந்த நீதிமன்றத்தின் உறுப்பு நாடாக உள்ளது. …
-
- 0 replies
- 322 views
-
-
நெருப்புடன் விளையாட வேண்டாம்! கொரோனா தொடர்பாக அலட்சியமாக இருக்கும் நாடுகளுக்கு WHO எச்சரிக்கை கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொடர்பில் உலக நாடுகள் முன்னெடுக்கும் நடவடிக்கை தொடர்பில் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சில நாடுகளில் கொரோனா ரைவஸ் (கொவிட் 19) தொடர்பில் அலட்சியமாக செயற்படுதாகவும், இது நெருப்புடன் விளையாடுவதற்கு சமன் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் (கொவிட் 19) பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகளுக்கு நோயறிதல் பரிசோதனைகளை நடத்துவதை நிறுத்திய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு தனது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு இவ்வாறாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்கள் யார் என்று அந்தந்த…
-
- 0 replies
- 271 views
-