Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தளரும் நிலையது வந்திடலாமோ _இனியும் எழுந்திடமல் என்னினமே இருந்திடலாமோ புலரும் பொழுதின் தடையுடைக்க _புயலாய் இறங்கிடோமோ புலத்தில் நாம் புதுக்களம் கொண்டிடோமோ நிலமிழந்ததிற்காய் _நீ நிலைகுலைந்திடலாமோ வாழ்ந்த வளமிழ்ந்ததிற்காய் _உன் பலம் மறந்திடலாமோ கண்ணில் நீரேழுந்திட கலங்கிடும் காலமல்ல _இது உணர்வுகளில் தீஎழுந்திட எரிமலையாகிடும் நேரமிது வேரடி மண் பறித்து பகை வெற்றிகொண்டடிட _நீ வேரிழந்தவனாகிடலாமோ உறவைக்கொன்று _தமிழ் மகவை புணர்ந்து ஊடுருவ நிற்குது சிங்களம் _இன்று மாதகல் தனதென்று மார்தட்டுறான் கொடியவன் _அவனுக்கு சவரிவீசி ஆலவட்டம் பிடித்தொருகூட்டம் மகிழ்கிறது . கவரி மானினம் நீ _தமிழா புலத்தில் புது வே…

  2. இனம் தின்னும் ராஜபக்சே கவிஞர் வைரமுத்து சொந்த நாய்களுக்குச் சொத்தெழுதி வைக்கும் தேசங்களே! ஓர் இனமே நிலமிழந்து நிற்கிறதே நிலம் மீட்டுத் தாருங்கள் பூனையொன்று காய்ச்சல் கண்டால் மெர்சிடீஸ் கார் ஏற்றி மருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே! ஈழத்து உப்பங்கழியில் மரணத்தை தொட்டு மனித குலம் நிற்கிறதே! மனம் இரங்கி வாருங்கள்! வற்றிய குளத்தில் செத்துக் கிடக்கும் வாளை மீனைப்போல் உமிழ்நீர் வற்றிய வாயில் ஒட்டிக்கிடக்கும் உள்நோக்கோடு ரொட்டி ரொட்டியென்று கைநீட்டிடும் சிறுவர்க்குக் கைகொடுக்க வாருங்கள்! தமிழச்சிகளின் மானக்குழிகளில் துப்பாக்கி ஊன்றித் துளைக்கும் சிங்கள வெறிக் கூத்துக்களை நிரந்தரமாய் நிறுத்துங்கள்! …

    • 1 reply
    • 832 views
  3. உன் கல்லூரி நண்பி மனிதக் கூடுகளைச் சுமந்தலையும் உயிர்களுக்கு மத்தியில் ‘மனிதம்’ காட்டி என்னை மயங்க வைத்த தோழனே ! உன்னைப் பிரிவதற்கு என் மனம் ஒப்பவில்லை நண்பா. வார்த்தையில் வர்ணஜாலங்களை வாரி இறைத்த என் கல்லூரிக் கலைஞனே என் உயிரை அழுத்திப் பெருவலியெடுக்க, உன்னைப் பிரிவதை எண்ணி நான் துடித்துப் போகிறேன். காயமற்ற இடங்களில் கூட உன் பிரிவு வலியைத் தருகிறது தோழா ! உடைந்த சிலம்பின் கதறலாய் தனித்து விடப்பட்ட சிறு தீவின் குமுறலாய் துயரெடுத்துப் புலம்புகிறது என் இதயம். என் உயிர் நண்பனே ! உன் கைப்பேசியில் என் எண்ணை அழுத்தி அடிக்கொரு ஒரு ‘குறுஞ் செய்தி’ அனுப்…

    • 7 replies
    • 4.2k views
  4. சட்டைக்குள் புகுந்துதினம் சில்மிசம் செய்த _என் கிராமத்துக்காற்றே, அந்த ஆலமர மடத்தில் _உன் ஸ்பரிசம் தந்த சுகமும் விளையாடிக்களைத்த மம்மல்போழுதில் வந்தெனை ஆரத்தழுவி வியர்வைதுடைத்த பரவசமும் _இன்று நினைவுகளில் மட்டுமே ! எல்லைகளில் உயர்ந்த பனைகளோடு உரசி சிரித்தவள் நீ , முல்லையின் வாசத்தோடு முற்றத்து மண் அள்ளிக்கொட்டி ஆக்கினைசெய்தவள் நீ , நேற்கொழுவில் நேற்கதிகளோடு சல்லாபித்து நெஞ்சைத் தொட்டவள் நீ , ஏகாந்த இராத்திரியில் மஞ்சம் வந்து _கன்னம் கொஞ்சிப்போனவள் நீ , என் கிராமத்துப்பூங்கற்றே வேலிக்கிழுவையும் ஆடுதண்டுப்பூவரசும்_உன் தரவுகளின் ஆமொதிப்பாளர்களாக இ (த)லையாட்டிக்கொண்டிருக்கும் வரை மாற்றமில்லாமல் நீ வந்து…

    • 3 replies
    • 820 views
  5. வீழ்ந்த வீரர்களும்... வென்ற கோழைகளும்....... கவிதை - இளங்கவி....... முள்ளிவாய்க்கால்.... தமிழர் பிணங்கள் பல வீழ்ந்து.... மலைகள் பல சாய்ந்து..... இரத்தத்தில் நிலமெல்லாம் குளமாகி...... தசைகளிலே மண்ணெல்லாம் சேறாகி..... இறுதிவரை வீரம் சொல்லிய மண்..... வேங்கைகை பல சாய்ந்த மண்.... வல்லரசின் வீரர்களைச் சேர்த்து.... வாங்கி வந்த குண்டுகளைப் போட்டு.... பறந்து வந்து எரிமலையை போட்டு.... பாய்ந்து வரும் பீரங்கியால் தாக்கி... எத்தனை படுகொலையை இலகுவாய் செய்துவிட்டு...... வெற்றியாம் வெற்றி....! அவர்கள் வீரராம் விரர்....! கோழையின் வெற்றி உன் கொல்லைப்புறம் மட்டும் தான்.... வந்தவர்கள் போய்விட்டால் உன் வ…

  6. தமிழ் ஈழம்தான் சரியான தீர்வு என்றாலும் தற்காலிகமாக அதற்கு முன் ஒரு தீர்வு வேண்டும் தமிழக முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் ஈழத்தில் தமிழர் பகுதிகளில் சிங்களவர்கள் குடியமர்த்தப்படுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என அண்மையில் வலியுறுத்தியுள்ளார். அண்ணா திமுக வின் செயலாளர் செல்வி ஜெயலலிதாவும் தேர்தல் காலத்திற்கு சற்று முன் தமிழ் ஈழம்தான் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு சரியான தீர்வு எனக்கூறியதுடன் அதை அடைந்து கொடுக்க தன்னாலான எல்லா முயற்சிகளையும் எடுப்பதாக கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து கருணாநிதி அவர்களும் தமிழீழம் அமைய, தானும் முயற்சிக்கப் போவதாக தேர்தல் காலத்தில் கூறினார். காங்கிரஸ் கட்சியைத்தவிர ஏனையவர்களெல்லாம் ஈழத் தமிழ்மக்களின் விடிவுக்காக் குரல் கொடுத்துக் கொண்டே வந்துள்ள…

  7. அறிமுகமாகாமல் நான் ஆமீ அட்டித்த குண்டில் அம்மாவின் கருவறையோடு நானும் அஷ்தியானவன் அம்மாவின் கல்லறைக்குள் அறிமுகமாகாமல் நான்

  8. நீ என்றும் என் காதலி.... கவிதை - இளங்கவி அதிகாலை ஓர் அழைப்பு மணி அவசரமாய் சென்று யாரது...? பதில்.. நான் தான் உன் தேவதை...! கதவை திறக்கிறேன், யார் தேவதையா...? ஆம்..! அங்கே ஓர் அதிசயம்....! அனைத்தையும் அடித்துவிடும் அழகான ஓர் முகம்... ஆனாலும் கண்களிலே கண்ணீர்... கலைந்த கூந்தல்.... மாற்றான் கைபட்டு கசங்கிய மேலாடை... மான மறைப்புகளில் ஆங்காங்கே இரத்தத் துளி..... கலைந்த கூந்தலையும் அலங்கரித்த கார்த்திகைப் பூ என் கண்முன்னே கதறுகிறாள் ஏன் என்னை கைவிட்டாய்..? நான் கேட்டென்...? எப்போ உனை கைவிட்டேன்...? நான் உன்னைப் பார்த்ததில்லை...! அட பாதகனே.. எனை பிரிய மனமின்றி அன்று ஏங்கி அழுது நின்றாய்... எனை விட்டு பிரிய மு…

  9. முள்ளிவாய்க்கால் ஒரு நீண்ட தவத்தை உடைத்தெறிந்து நெடிய பயணத்தின் முடிவுரை எழுதிய தீயினால் வேகாமல் பொய்யினால் வெந்த மண் ஆயிரம் ஆயிரம் கனவுகளை கருக்கியெறிந்த மண் அன்னிய சக்திகளின் பசிக்கு இரையாகி பட்டினியில் வெந்த மண் வேரோடு விழுதுகளையே வீசியெறிந்த மண் வரலாற்றில் தன்மீது கறை படித்த மண் எம் கனவெல்லாம் தன்னுள்ளே கரைத்தெறிநத மண்

    • 1 reply
    • 988 views
  10. தமிழிச்சியின் ஓர் வீரப் படைப்பு அருமையான படைப்புக்களை ஒரு தமிழிச்சி துணிவுடன் படைத்துள்ளார். பொதுவாகவே தமிழ் பெண்களின் வீரமிகு எழுத்துக்கள் ஆண்களின் படைப்புகளுடன் ஒப்பிடும் போது குறைவாகவே காணப்படுகின்ற போது ஒரு தமிழிச்சி இதோ வீறு கொண்டெளுகிறாள். நாம் தான் அவளை ஊக்குவிக்க வேண்டும். http://reginidavid.wordpress.com/

    • 0 replies
    • 981 views
  11. எரி நட்சத்திரம் - கருணாநிதியின் பிறந்த நாள் கவிதை - இளங்கவி கலைஞரே வாழ்க வாழ்க தமிழின் காவியத்தலைவனே வாழ்க எண்பத்தாறு வருடங்களை தமிழருக்காய் அர்ப்பணித்த தமிழ் நாட்டுச் சிங்கமாம் நீ தமிழினத்தின் தங்கமாம்...? விடிவெள்ளியாய் நினைத்து விளக்கின்றிக் காத்திருந்தோம் எரி நட்சத்திரமாய் விழுந்து ஈழத்தின் குலையறுத்தாய் குடும்பப் பாசத்துக்காய் உன் குலத்துக்கே நெருப்பு வைத்தாய் எங்கள் இனத்துக்கோர் சாபக்கேடாய் இன்றுவரை உயிர் வாழ்வாய்.... ஈழத்தில் நிலத்தினிலே குரும்பையெல்லாம் கருகிவிழ வெற்றிக்கொடியோடு டெல்லி சென்றாய் நீயோ வேண்டுமந்த பதவியென்றாய் எதிரியின் தீயிலே நாமெரிய நீ வேண்டிய பதவிபெற்றாய் வேண்டியதை பெற்றதனால் பிறந்த நாள…

  12. நட்பை வளர்க்க வார்த்தைகள் தேவையில்லை. புன்னகை மட்டும் போதுமென்று புரிய வைத்த என் அன்பு நண்ப ! என் இதயப் பாலைவனத்தில் நீரூற்றிப் பூமரம் நட்டவனே வெறும் பனி மூட்டமாய் இருந்த என் இதயத்தில் மேக மூட்டம் தோன்றிப் பெருமழை பொழியக் காரணமானவனே கூட்டைப் பிரித்து றெக்கை விரிக்கும் பட்டுப் பூச்சியாய் கூட்டம் கூடிப் பறந்து திரியும் பட்டாம் பூச்சியாய் எத்தனை பரவசங்கள் நமக்குள் நடந்தேறின. என் ஆருயிர் நண்ப ! சிப்பிக்குள் பதுங்கிக் கொண்ட பனித்துளியாய் என் அன்புக்குள் உறங்கிக் கொள்ளும் முத்தானாய் நீ அந்தரத்தில் பறப்பது போல் ஆனந்த தாண்டவத்தைக் கற்றுத் தந்த என் வாலிப நண்பனே ! பனித்துளி தெளித்த ரோஜாவாய் முள்முடி தரித்த எண்ண…

    • 3 replies
    • 1.3k views
  13. இன்று பிறந்தநாள் கொண்டாடும் துரோகி கருணாய்நிதிக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நடு ஊரில் நச்சுமரம் காய்த்தென் பயன். வாழ்கின்றபோதே நீ பிணமானவன். உன்னை பெற்றவளும் பாவியே கருவில் உன்னைக் கலைக்காததால் சகுனி உன் செயலால் நல்லவனான்இளவலுக்கு முடிசூட்ட பலியான உன் இனம் எத்தனை எத்தனை கேடு கெட்டவனே வெள்ளைத் தோலில் உனை மறந்த காமுகனே அந்நய மோகத்தில் உனை மறந்தாயோ? காத்திருக்கின்றோம் புதிய தீபாவளிக்காய் இரணியன் மறைந்ததிற்கு தீபாவளி நீ இறக்கபபோகும் நாள் எமக்கு இன்னோர் தீபாவளி இந்த எட்டிமரம் பழுத்தாலென்ன இல்லாவிட்டால் என்ன

    • 2 replies
    • 939 views
  14. Started by Tamilinpan,

    தமிழனே வாழ்கையின் விழ்ச்சி நாம் தோற்றிட அல்ல பகைவரின் வெற்றி நாம் பயந்திட அல்ல சொத்தின் இழப்பு நாம் செத்திட அல்ல சொந்ததின் இழப்பு சோகமாய் நாம் வாடிட அல்ல ஊரவர் வெறுப்பு நாம் ஒழிந்திட அல்ல உரிமையின் மறுப்பு நாம் உறங்கிட அல்ல தமிழனே எழுந்திரு வீரமாய் கடலிலும் வேகமாய் இழந்தது உனை சேரும் பிரிந்தது இன்று உனை நாடும் மறந்தவர் கை கோர்ப்பார் தொடர்ந்திடும் உலகம் என்றும் உன் நிழலை அருவி கவித்தொகுப்பு தமிழருவி வானொலியின் நேரடி

    • 0 replies
    • 639 views
  15. அம்மா நீ வேண்டும் கூட்டுக்குள் புறா போல் நானும் வாழ்கின்றேன் போகும் இடம் தெரியவில்லை போகவும் யாரும் விடவும் இல்லை அம்மா என்றழைக்க அம்மா இங்கில்லை உறவு என்று எனை அணைக்க எனக்கு யாருமில்லை அரிச்சுவடி படிக்கவில்லை அம்மா நடை பழக்கவில்லை அம்மா முகம் பார்த்து தூங்க ஒரு புகைப்படம் கூட எனக்கில்லை என்னை ஏனம்மா தனியாக விட்டுசென்றாய் நான் உன்னை அம்மா என்று அழைக்கமுன்பே அதை கேளாமல் சென்றாயே உன்னைத்தான் நான் நம்பிவந்தேன் அம்மாவே என்னை எங்கே விட்டுசென்றாய் அம்மாவே அன்னம் உண்ண பழக முன் கஞ்சி குடிக்கின்றேன் அம்மா எனக்கு ஒரு வாய் சோறூட்ட நீ எப்பொழுது வருவாய் அம்மா தரையில் உறங்குகிறேன் அம்மா உன்மடி உறங்க நீ வருவாயா அப்பா எங்கே அம்மா உன்னோடு கூட்டி ச…

    • 14 replies
    • 3.2k views
  16. என் உயிர் உறவுகளே செத்துக் கொண்டு இருக்கும் தேசத்தில் இருந்து ஒரு குரல் நான் துள்ளித் திரிந்த தெருக்களில் குருதி ஆறு கொப்பளித்துக் கொண்டு இருக்கிறது - எம் தேகத்தின் தோல்கள் உரிக்கப் பட்டு வத்தலுக்காய் வாட்டப் பட்டுக் கொண்டு இருக்கிறோம் கன்னியர்கள் ஆடைகள் களையப்பட்டு சூறையாடப் படுகிறது அவர்கள் கற்புக்கள் - எம் கண்களில் இருந்த கண்ணிர் வற்றி நடைப் பிணமாய் நாம் இப்போ........ ஜயகோ....! தமிழ்ச் சமுகமே தட்டிக்கேழுங்கள் செத்துக் கொண்டிருக்கும் தேசத்துக்கு - ஓர் சத்துணவு திட்டமாவது தரும் படி ஏன், எதற்கு எப்படி யானோம் -? நாம் இப்படி ................? கேளுங்கள் ஒவ்வொருவரிடமும் கேளுங்கள் - பதில் வராவிடின் தேடுங்கள் - அதற்கான பதிலைத் தேடு…

  17. உன்னை சுட்டெரிக்கும் என் வலிகள் ஈழத்தில் எம்மக்கள் ஏதிலிகளாய் ஏனென்று கேட்க ஒரு நாதியில்லை என் இனம் அழிக்கும் சிங்களமே கோர்வு கொண்ட சில நாடுகளே சோர்வு கொண்ட ஐ நாவே உன்னை சுட்டெரிக்கும் என் வலிகள்

  18. பூத்த நெருப்பு அறிவுமதி * என் மரணம் அது கண்ணீரை யாசிக்கும் பிச்சைப் பாத்திரமன்று கவிதைக்குள் முகம் புதைத்து யாரங்கே கதறியழுவது... என் மரணம் இரங்கற்பா எழுதுவதற்கானதும் அன்று சவுக்கு மரத்து ஊசி இலைகளில் சறுக்கி விழுகிற பனித் துளிகளாய் நீங்கள் சிந்தும்கண்ணீர்ச் சொற்களால் என் பெயரை உச்சரிக்காதீர்கள் பூமி இது தண்ணீரின் கல்லறை கடல் அது பூமியின் சமாதி என வார்த்தைகளுக்கு வண்ணம் பூசுவதால் கவிதையை நீங்கள் கெளரவப்படுத்தலாம் வாழ்க்கையை கெளரவிக்க இந்த வண்ணங்கள் என்ன செய்யும் மின்னல் இருளின் விரோதியன்று அது மழையின் விளம்பரம் கனவுகளையும் கற்பனைகளையும் மட்டுமே காதலிக்கத் தெரிந்த உங்களின் கவிதைகள் கூட காதல் தோ…

  19. சிவப்பு ஒற்றை ரோஜாவை பார்க்கும் போதெல்லாம் என்னிடம் காதல் வரவில்லை என் அன்புத் தோழியே என்னினம் சிந்திய குருதியின் விம்பங்கள் பட்டுத் தெறிக்கும் இதை இனிமேல் காதல் சின்னம் என்று சொல்லாதீர்கள்

  20. கார்த்திகைப் பூக்கள் உங்களுக்காய் பூத்து நிற்கும்.... கவிதை- இளங்கவி எங்கள் மக்களின் அவலத்தில் எங்கள் வீரர்களை மறந்தோமா..? மாவீரர் ஆகி விட்ட எங்கள் புலிகளை மறந்தோமா...? ஆழிப்பேரலை போல் அழித்தவண்ணம் வந்தவனை சிறு மண்மேடாய் நின்று தடுத்தவரை மறந்தோமா..? சுற்றிவிழும் எறிகனைகள் நெருப்பு கக்கிவரும் பீரங்கிகள் காற்றுப் போல் சன்னங்கள் கழுகு போட்ட கொத்தணிகள் கருக்கிவிடும் வாயுக்கள் பொஸ்பரசின் பொசுக்கல்கள் இத்தனையும் தாங்கி எரிமலையில் நின்றுகொன்டு தன்னுயிர் போக முதல் ஒவ்வொரு தமிழரையும் காத்த எங்கள் கருங்கல்லு மலைகலை கனவிலும் நாம் மறப்போமா...? வேங்கைகள் பலருடனும் வீழ்ந்த பல விரத்தளபதிகள்... எங்கள் மக்களுக்காய் மடிந்த இ…

  21. வல்ல தமிழீழமென்னும் வலிமைகொண்ட யாழ்மண்ணில் வெல்லவொரு வேங்கை தந்த வேலுப்பிள்ளை யண்ணல் கருச்சுமந்த யன்னையாம் பார்வதி வயிற்றினிலே அருகேகிப் பழமென்று சூரியனை பிடித்தவெங்கள் மாருதியின் பலபொருந்த அவதாரமெடுத்த வொரு சுயபல மிகுத்தவொரு சுந்தரக் கரிகாலன் மருவுபெயர் தாங்கியவன் மாயா வுலகினிலே மண்ணுமொத்துச் சீராட்ட மறத்தமிழன் தமிழ்மணக்க எங்களுயிர் கலந்திருந்து எடுத்தநல் சேனையுடன் வீரத்தின் வித்தகனாய் உலகத்தமிழ் நெஞ்சமதில் மனமுருகி இன்றுனக்கு வாழத்துகின்ற வேளையிலே வாடாத பாமாலை அணிவதற்கு விளைகின்றேன் தமிழீழப் பெருஞ்சுவையாய் வற்றாத கனவோடு எண்ணமதில் பிறந்த மண்ணின் விடிவுக்காய் ஈரெட்டு வயதினிலே எடுத்தவுன் சுதந்திரத்தின் மூச்சாகி உன்னை யுருக்கி வீரர்களை யுருவ…

    • 2 replies
    • 2.3k views
  22. என் கவிஞன் எங்கே? ------------------------------ கண்ணாலும் காணவில்லை காதாலும் கேட்கவில்லை உன்னை காணாமல் தேடுகிறேன். என் கவிஞ! நீ எங்கே இருக்கிறாய்? செந்தமிழின் சொல்லெடுத்து உன் பேனா பெரும் செல்லடிக்கும் போதும் எழுதியதே கண்ணால் கண்டு உன்னோடு கதைத்த பொழுதுகள் இன்னும் என் நெஞ்சத்துள் உருகுகிறதே வாழ்வு பெரும் சோகம் வன்னி வாழ்வு பெரும் சோகம் என் மண்ணில் கிடந்து உழன்றெழுந்தாய் எழுதினாய் உன் கவிதைகளை என்கவிஞ! உன் கவிதை கண்டு என்மனம் எப்பொழுதும் ஆறுமடா! ஈழத்து கவிஞன் என்று உன்னை போற்றாதார் யாருண்டு? எதிரவர்க்கு கூட உன்தமிழ் பிடிக்குமடா? இனி அழக்கண்ணீரில்லை என்பதற்கு பிறகு உன்னைக்காணவில்லை …

    • 27 replies
    • 8.8k views
  23. எங்களுக்காய் வாழ்ந்த எழுமதியே எங்களுக்காய் வாழ்ந்து எங்களுக்காய் மாய்ந்த எழுமதியே ! வணங்குகிறோம். சூரியனாய்ப் பிறப்பெடுத்துச் சுதந்திரத்தின் காவலனாய் கால்நூற்றாண்டையும் கடந்து காடும் மேடும் களவாழ்வுமென வாழ்வையும் உங்கள் வம்சத்தையும் எங்களுக்காய்த் தந்தவரே ! காலப் பெருநதியில் காணாமல் போகாமல் ஓயாமல் பாய்ந்த எரிமலையே ! காலகாலங்களுக்கும் ஆறாத்துயராக – எங்கள் அவதாரனின் துயரில் அனைத்தும் அசையவோ அடுத்து நகரவோ இயலாமல் போட்டு வைத்த பிணங்கள் போல் காலம் காப்பிடமின்றி அலைகிறது. வஞ்சம் கொன்றது எங்கள் வாழ்வைத் தின்றது இதை வரலாறு தன் மடியில் ஒளித்து வைக்க என்ன மர்மம் உள்ளதோ…..? வாழ்ந்தீர் எமக்காக எப்போதும் சொன்னது போல் இ…

    • 0 replies
    • 925 views
  24. புலிகளுக்கு ஓய்வு கொடு, உன் கையை நீ உயர்த்து இளங்கவி- கவிதை கவலைகளை நீ நீக்கு உன் கடமைகளை நீ நோக்கு தமிழினத்தை கரை சேர்க்க துடுப்புகளை நீ தூக்கு... தோல்விகளா நீ பெற்றாய் நம் தலைவனிடம் எதை கற்றாய்..? தணலிலே எரிந்தால் தான் ஜொலிக்கும் தங்கமாய் உருப்பெறுவாய்... துவண்டுவிட நீ வாழை மரமா...? இல்லை.! இரும்பு தெறிக்கும் வீர மரம்..! உன் நிலத்தில் வாழ்வில்லையென்றால் என் நிலத்தில் உன் வாழ்விருக்கும்.... கலங்கரை விளக்கத்தால் உனக்கு வழிகாட்டத்தான் முடியும்... அந்தவழி தொடராவிட்டால் இருள்தானே உன் வாழ்வில் மிஞ்சும்... எடுத்த உன் ஆயுதத்தால் உன் வீரம் சொல்லி நின்றாய்... இப்போது உன் கடமை அகிம்சையில் உரிமை வென்றிடுவாய்.... இதை விட…

  25. என் இனமே என் சனமே கூடு சேரும் பறவைகளே நம்புங்கள் தமிழீழம் நிச்சயம் கிடைக்கும் தானைத்தலைவன் கண்சிவப்பது என் இனத்தின் மீது சூரிய ஒளி பட்டொளியாய் வீசவே அன்னைபூமியின் மடியில் உறங்கும் பாலகர் மீது சத்தியம் மாய்ந்து விட்ட மழழைகள் மீது சத்தியம் மரணித்த மங்கையர் மீது சத்தியம் வித்துக்களை தந்த வீரத்தாய் மீது சத்தியம் பண்பாட்டின் பாட்டிகள்.பாட்டனார்மீது சத்தியம் மானம் காத்த மறவர் மீது சத்தியம் சகோதரி சகொதரன் மீது சத்தியம் என் இனமே என் சனமே கூடு சேரும் பறவைகளே நம்புங்கள் தமிழீழம் நாளை கிடைக்கும் அதுவும் தானைத் தலைவன் காலத்திலே என் இனமே என் சனமே பூக்கள் பூத்துக் குலுங்கும் தேனீக்கள் இசை பாடும் நெற்கதிர்கள்வரவேற்கும் தலயசைத்து முற்றத்து…

    • 1 reply
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.