Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மகிந்தவுக்கு ஒரு மடல் மகிந்தா கிளிநொச்சி இன்று உன் வசம் அதனால் நீ அடைந்திருக்கிறாய் பரவசம் நீ கொண்டாடிக் கொண்டிருக்கிறாய் பட்டாசு வெடித்து அப்பாவித் தமிழர்கள் கதறி அழுகிறார்கள் கண்ணீர் வடித்து சற்றே சிந்தித்துப் பார் ஆறேழு நாடுகளின் உதவி கொண்டு தமிழ்த் துரோகக் கும்பல்களையும் துணைக்குக் கொண்டு மனித உரிமை விதிகளை தட்டிக் கழித்து பத்திரிகைச் சுதந்திரத்தையும் முற்றாக மறுத்து மருத்துவ மனை, அகதி முகாம்களையும் தாக்கி அழித்து அப்பாவித் தமிழர்களையும் கொன்று குவித்து நீ அடைந்திருப்பதெல்லாம் ஒரு வெற்றியா நீ வெட்கமின்றிப் பிதற்றுகிறாய் இதைப் பற்றியா நீ இன்று போட்டிருகிறாய் போர்க் கோலம் அதனால் தமிழர் வீடுகளில் மரண ஓலம் …

  2. இரத்தத்தில் தோய்ந்த இளம் மல்லிகைகள் கவிதை - இளங்கவி அதிகாலைச் சூரியனின் அழகு வெளிச்சத்திலே பனித்துளிகள் தாங்கி பூத்திருந்த மல்லிகைகள் இன்று அதே சூரியன் அதே ஒளிக்கீற்று ஆனால் பனித்துளிகள் இல்லை மலர்ந்திடும் மல்லிகையும் செங்குருதித் துளிதாங்கி சிவந்து மலர்கிறது..... ஆனாலும் கார்த்திகைப் பூ மட்டும் கலங்காது நிற்கிறது...! மனதெல்லாம் மகிழ்விக்கும் நம் மண்ணின் செல்வங்கள் சிதறிவிட்ட முத்துக்களாய் தெருக்களிலே கிடக்கிறது தாங்கள் சிந்திவிட்ட இரத்தத்திலே தம் வாய்மூடி கிடக்கிறது...! எமது பிய்ந்த மழலைகளின் பிணக்கோலம் காட்டி போரை நிறுத்தச் சொன்னால் மேற்குலகுலகின் பதில் நமக்கு காட்டாதே ..! காட்டாதே...! மேற்குலகுச் சிறு…

  3. ஒரு ஈராக்கியனின் சப்பாத்து அடே ஜோர்ஜ் புஷ் கண்ணீரால் எம்மக்களின் வேள்வி அதனால் கேட்கிறேன் ஒரு கேள்வி எதற்காக எம்மீது படை எடுத்தாய் எண்ணற்ற உயிர்களைப் பலி எடுத்தாய் எண்ணெய் மேல் நீ கொண்ட பித்தத்தினால் தண்ணி போல் இரத்தத்தை ஓடவிட்டாய் பேரழிவு ஆயுதங்கள் எம்மிடம் இருக்குதென்றாய் பேரழிவுகளை எம்மிடம் ஏற்படுத்தினாய் இலட்சியம் நிறைவேறியதென முன்னர் முழங்கினாய் அதை ஏமாற்றமெனப் பின்னர் கலங்கினாய் சதாமைப் பின்னர் அழித்தவனும் நீதான் அவனை முதலில் வளர்த்தவனும் நீதான் நீ வருமுன் எம்நாடு நாசமயிருந்தது நீ வந்தபின் இன்னமும் மோசமாயிருக்கிறது இன்று என் கையில் சப்பாத்து முடிந்தால் உன் தலையைக் காப்பாத்து http…

  4. ஈழத்துப் பாப்பா பாடல் – தமிழரின் அவலம் ஓடி மறைந்துகொள் பாப்பா - நீ ஒளிந்து வாழப்பழகிக்கொள் பாப்பா பங்கருக்குள் முடங்கிக்கொள் பாப்பா - நீ பதுங்கி வாழப்பழகிக்கொள் பாப்பா சிங்களப் படை வரும் பாப்பா - வானில் சீறும் விமானம்வரும் பாப்பா எங்களுக்கெனக் குரல்கொடுக்க உலகில் - மனிதர் எவரும் இல்லையடி பாப்பா சினத்தோடு வந்தான் எதிரி பாப்பா - எம்மை இனத்தோடு அழிக்க நினைத்தான் பாப்பா வனத்தோடு விலங்குகளாய் ஆனோம் பாப்பா -எம் மனத்தோடு சோகங்கள் ஆயிரம் பாப்பா பகைவனுக்கு வேண்டியது சண்டை - அவன் வகைவகையாய் வீசினான் குண்டை புகைமண்டலமாய் ஆனதெம்தேசம் - பார்த்து நகை கொள்கிறான் எதிரி பாப்பா தெய்வமும் மறந்ததடி பாப்பா - வெறி நாய்கள் சூழ…

  5. இறைவா எம்மை ஏன் படைத்தாய் இறைவா எம்மை ஏன் படைத்தாய் இழிய வாழ்கை வாழ்வதற்கா ஈழத்தில் எம்மை ஏன் படைத்தாய் ஈன வாழ்கை வாழ்வதற்கா வன்னியில் எம்மை ஏன் படைத்தாய் வனத்தில் விலங்குகளாய் வாழ்வதற்கா யாழ்ப்பாணத்தில் எம்மை ஏன் படைத்தாய் யாருமற்ற அனாதைகளாய் வாழ்வதற்கா கிழக்கில் எம்மை ஏன் படைத்தாய் காணாமற்போனோர் கணக்கில் சேர்வதற்கா இந்துக்களாய் எம்மை ஏன் படைத்தாய் இன்னல்கள் சூழ வாழ்வதற்கா கிறிஸ்தவராய் எம்மை ஏன் படைத்தாய் கிலிகொண்ட வாழ்கை வாழ்வதற்கா முஸ்லிம்களாய் எம்மை ஏன் படைத்தாய் முடங்கி அடங்கி வாழ்வதற்கா தமிழராய் எம்மை ஏன் படைத்தாய் தலை குனிந்த வாழ்கை வாழ்வதற்கா பௌத்த சிங்கள வெறியர் பக்கம் பாவிகளாய் எம்மை…

  6. ஈழம் எங்கள் தேசம் தமிழ் ஈழம் எங்கள் தேசம் அதை அந்நியன் செய்கிறான் நாசம் பச்சைப் பசேலேன்ற வயற்காடு இன்று பச்சிளம் குழந்தைக்கும் சுடுகாடு வந்தாரை விருந்தோம்பும் புகலிடம் இன்று அந்நியப் படைகளின் உறைவிடம் எல்லாள மன்னனின் கோட்டை இன்று குள்ள நரிகளின் சேட்டை பாட்டன் பூட்டனின் களியாட்டம் இன்று சிங்களப் பேய்களின் வெறியாட்டம் இனியும் பொறுக்குமா எம்மினம் இது கங்கை கொண்ட தமிழினம் ஆற்றில் இரும்பு போல் தாழ மாட்டோம் காற்றில் சருகு போல் வீழ மாட்டோம் ஆற்றில் சருகு போல் மிதந்து நிற்போம் காற்றில் இரும்பு போல் நிலைத்து நிற்போம் நட்போடு வந்தவனை வாழ வைப்போம் நஞ்சோடு வந்தவனை வாளால் முடிப்போம் கையில் எடுப்போம் நெருப்…

  7. Started by s.kumaar,

    தீயன தீய தீயும் தீயும் தூயன தூய தூய்மை தூயும் வேயன வேய வேயும் வேங்களம் பாயென புலி பாயும் பாரில் ஓயாத அலையாகி ஓங்காரமாய் ஒலிக்கும். திளைந்திருக்க தினவெடுக்கும் விளைந்திருக்க வினையெடுக்கும் முளைத்திருக்க மனமிருக்கும் உழைத்திருக்க உரமெடுக்கும். களைத்திருக்கும் பகையிருக்கும்.புலி நிலைத்திருக்க களம் விழைத்திருக்கும் வகை புலி இருக்க வாகை கிழக்கிருக்கும் நகை முகிழ்த்திருக்க நாமாய் நெகிழ்ந்திருப்போம். பிரபஞ்சம் பிரமித்து ஏற்ற பிரபாகரம் கொண்ட சாரம், பஞ்ச பூதம் வாழும் வரையும் தஞ்சமாக தரணியில் வாழும். ஏந்திய கொடி சிலிர்க்கும்,எல்லாள மண் துளிர்க்கும் சீந்திய குருதியெல்லாம் குவளயமாய் குதூகலிக்கும். தீயினை தீய்த்த தீரம்,தூய்வினை ஏற்றி ஏந…

    • 2 replies
    • 714 views
  8. பெண்ணே உனக்கே உனக்காய் அடங்கி அடங்கி ஆண்டாண்டு காலமாய் அடுப்பங்கரையே உன் உலகமென்று முடங்கிக் கிடந்தது போதும். புதுமைகள் அறிந்து பழமைகள் களைந்து பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் சாதனை படைக்க - பெண்ணே துணிந்து நீயும் எழுந்து வா நதியென்றும் மலரென்றும் நிலவென்றும் அமுதென்றும் போகம் தரும் காதற் பொருளாய் கவிஞர் உன்னைக் கண்டது போதும் சரித்திரம் படைக்கும் புயலாய் அறியாமை களையும் தீயாய் அகிலம் உனைக்காண அடங்காத வேகத்துடன் - பெண்ணே துணிந்து நீயும் எழுந்து வா பின் தூங்கி முன்னெழுந்து தலை கோதி அடி வருடி அருகிருந்து தூங்க வைத்து தேவைகள் அறிந்து சேவைகள் செய்யும் துணைவியாய் மட்டும் நீ வாழ்ந்தது போதும் அடக்கு முறைகளை உடைத்து எறிந்து…

    • 13 replies
    • 9k views
  9. ஈழத்தின் இனப்படுகொலைகளுக்கு எதிரான போராட்டங்களில், தமிழக உறவுகள் பலர் முனைப்புடன் உள்ள போதும், அது குறித்த எண்ணமும, செயலும் இல்லாத பலரது நிலை கண்டு கவிக்கோ அப்துல் ரகுமான் வடித்துள்ள கவிதையிது. இரத்தம் வெவ்வேறு நிறம் அங்கே பிணங்கள் விழுந்து கொண்டிருக்கின்றன நாம் “எத்தனை விக்கெட்டுகள் விழுந்தன?” என்று விசாரித்துக் கொண்டிருக்கிறோம்! அங்கே குண்டுகள் வெடித்துக் கொண்டிருகின்றன நாம் பட்டாசு வெடித்துப் பரவசப்பட்டுக் கொண்டிருக்கிறோம்! அவர்கள் வேட்டையாடப்பட்டுக் கதறிக் கொண்டிருக்கிறார்கள் நாம் வெள்ளித் திரைகளுக்கு முன் விசிலடித்துக் கொண்டிருக்கிறோம்! அவர்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் நாம் “கற்பி…

    • 3 replies
    • 4.4k views
  10. எனக்கும் கவிதை எழுத ஆசை இலக்கியம் எதுவும் கற்கவில்லை இலக்கணம் எதுவும் அறிந்ததில்லை மொழியின் வகைகள் புரிந்ததில்லை ஆனாலும் எனக்கு கவிதை எழுத ஆசை மரபுக் கவியின் இலக்கணமோ புதுக்கவியின் வரையறையோ எதுவும் அறியா பாமரன் நான் ஆனாலும் எனக்கு கவிதை எழுத ஆசை தமிழ் மொழியில் உள்ள அணி அறியேன் தொல்காப்பியம் குறும் கூறும் யாப்பறியேன் பழம் கவிநூல் எதுவும் கற்றறியேன் ஆனாலும் எனக்கு கவிதை எழுத ஆசை காப்பிய நூல்களை கண்டதில்லை பாரதி பாடல் கேட்டதில்லை உருத்திரமூர்த்தியின் கவி ஒன்றும் படித்ததில்லை ஆனாலும் எனக்கு கவிதை எழுத ஆசை

    • 11 replies
    • 2.6k views
  11. ஆப்பிழுத்த குரங்கர்கள் - எங்கள் தமிழ்த்தேசம் தோர்க்குமென்று நினைப்பாரோ.!? அதனாலும் உறுதியொன்று நாம்கொள்ள இதுவாச்சு தக்க நேரம். பொன்னான பூமியிலே தமிழ்க் கண்ணான ஈழதேசம் - இன்று ஒப்பாரி ஓலமிட – ஆங்கே கொத்தணிக் குண்டெறிந்து கொல்கிறானே கோத்தபாயாக் குண்டர்கள். முண்டங்களாய் பிண்டங்களாய் - எம் தமிழன் அறுபட்ட மிருகம்போல அங்கங்கள் சிதறிப்போய்க் கிடக்கிறானே அவரொடு ஏதறியாப் பாலகரும் சாகிறதே கொத்துக் கொத்தாய்..!? தட்டி அதைக் கேட்பதற்கோ நிறுத்த அதைச் சொல்வதற்கோ நாதிகள் தாம் ஏதுமற்ற நிலையாச்சே இவ்வுலகில். அன்றென்றால்... பாரதமே படுகுழியுள் போகுமென்று பாக்கிஸ்த்தானாய்..! பங்…

  12. போராளிப் பெண்ணுக்கு அம்மாவின் கடிதம்.... கவிதை.... அன்புள்ள மகளுக்கு உன் அம்மாவின் ஆசிர்வாதம் காவலுக்கு செல்கிறேன் என்றாய் எம் இனத்தை காக்க எழுந்துவிட்டேன் என்றாய்..... ! உன் ஆசைத்தம்பியை பட்டினிக்கு பறிகொடுத்தாய் அவனைப்போல் பலபேரைக்காக்க பகைவனுடன் மோதச் சென்றாய்..... எனக்கும் தெரியும் நீ புலியாக பிறக்கவில்லை புலியாக மாற்றப்பட்டாய் எங்களின் விடுதலைப் போரிலே புள்ளியாக என்னையும் ; எதிரி புலியாக வைத்துவிட்டான் அவன் உருவாக்கிய புலிகலெல்லாம் பிரம்மிட்டின் உருவம் போல் வியாபித்து எழுதிடுவர் ; என்று எதிரி இன்னமும் நினைக்கவில்லை என்று எழுதிவைத்து நீ சென்றாய்.... பட்டினி எங்களுக்கு பழகிவிட்ட ஒன்று என்றாய் பசிதாங்காப் …

  13. போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும் -------------------------------------------------------------- 01 வன்னேரிக்குளத்தில் குளித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த அம்மாவை அக்கராயனில் நான் தேடிக்கொண்டிருந்தேன் ஷெல்களுக்குள் அம்மா ஐயனார் கோயிலை விழுந்து கும்பிட்டாள் ஷெல் ஆனைவிழுந்தானை கடக்கிறது. நேற்று நடந்த கடும் சண்டையில் சிதைந்த கிராமத்தில் கிடந்தன படைகளின் உடல்கள் கைப்பற்றப்பட்ட படைகளின் உடல்களை கணக்கிட்டு பார்த்தபடி சிதைந்த உடல்கள் கிடக்கும் மைதானத்தில் பதுங்குகுழியிலிருந்து வெளியில் வந்த சனங்கள் நிறைகின்றனர். பக்கத்து வீட்டில் போராளியின் மரணத்தில் எழுகிற அழுகையுடன் இன்றைக்க…

    • 0 replies
    • 913 views
  14. Started by nochchi,

    கிளிநொச்சி --------------- 01. *பி*ரகாசிற்கு இப்பொழுது பியரில் நாட்டமில்லை முன்பு நாம் பியர் குடிப்பதில்லை சமாதான காலத்தில்தான் இங்கு பியர்கள் கொண்டுவரப்பட்டன. அப்போதுதான் நானும் பிரகாசும் பியர் குடிக்கப்பழகினோம். இப்பொழுது இங்கு பியர்கள் அனுமதிக்கப்படுவதில்லை முன்பு கொண்டுவரப்பட்ட பியர் போத்தல்களின் சுட்டுத்துண்டு நிறங்கள் வெளுறிக்கிடக்கின்றன. 02. நாங்கள் பயணம் செய்த பேருந்துகள் ஓய்ந்தோ முடங்கியோ கிடக்கின்றன நாங்கள் பேருந்துகளையோ பயணங்களையோ விரும்புவதில்லை இப்பொழுது சைக்கிளை மெதுவாக ஓட்டியபடி போகிறோம் எங்கள் மோட்டார் சைக்கிள் வீட்டில் நிற்கிறது. இனி நடந்தும் …

    • 0 replies
    • 935 views
  15. சாத்தான்களின் வருகையால் …. மனிதம் நசுங்கும் பொழுதொன்றில் வரும் என் அவலக்குரல் -உங்களுக்கு ஒப்பாரிப் பாடாலாய் தோன்றலாம் இதுதான் வாழ்க்கை எமக்கு நித்தம் சப்பாத்துக் கால்களில் மிதிபட்டு நசுங்குகிறது எம் குரல்வளை... உயிர் உறையக் கதவடைத்து துயில்கையில் நாய்களில் ஓலத்தில் எமனின் பிரசன்னம் ! மூச்சு விட மறந்து உயிர் பற்றி தவிக்கையில் இடித்து உடைகிறது கதவு தாழ்ப்பாள் தெறிக்க ... இராணுவ மிருகங்கள் ஊர் புகுந்தபின் அன்றாட வலிகளாய் போனது இதுவும் .. ஆண்பிள்ளைகள் கைதாக்கி முற்றத்திலே சோதனை என தொட்டுத் தடவுகையில் செத்துப் போகிறாள் முதல் தடவை தமிழிச்சி .. பெற்றவர், கட்டினவர் கண்முன்னே அடித்து உதைத்திழுத்து செல்லுகையில் யார் கதறலு…

    • 2 replies
    • 684 views
  16. நான் பங்குபற்றிய , சிங்களவருடன் மோதி தோற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட ஒரு கணத்தில , சிறந்த வீரன் ஒருவனால் ஏற்பட்ட எதிர்பாராத முடிவால் வியந்த ஒரு யுத்தம் பற்றிய கதைதான் இது... இது நடந்தது கிபி2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம்... எங்கட கொம்ப்யூட்டர் லாப் இல... கோபப்படாதீங்க... ஒரு உண்மைச்சம்பவத்த அடிப்படயா வச்சு சாத்தியமான ஒரு முடிவத்தான் சொல்லவாறன்... அதுக்காக இத வாசிச்சு ஓவரா எதிர்பார்ப்ப கிறியேட் பண்ணிடாதீங்க... எங்கும் மரண ஓலம்.... வெட்ட ப்பட்டு வீழந்த தலைகள் குதிரைகளின் குளம்புகளில் அகப்பட்டு நொருங்கும் ஓசையும் கேடயங்களில் வாள்கள்மோதித்தெறிக்கும் ஓசையும் கலந்து நாலாபக்கமும் எதிரொலித்துக்கொண்டிருந்தது.. . விழ விழ அலை அலையென வந்து கொண்டிருந்த குதிரைப்படைகள் எதிரி மா…

    • 0 replies
    • 524 views
  17. கஞ்சி குடிக்கும் கனவில் கதறியழும் பதுங்குகுழிகள் நிலங்களை விழுங்கும் சிங்கத்தின் திறந்த வாய்க்குள் எறும்புகள் போல் நுழைந்து போர்முகங்கள் தற்கொலை செய்கிறது ஒருவேளை கஞ்சிக்காய் உயிர் சுமக்கும் கோப்பையில் உச்ச துன்பங்களை அணைத்தபடி உறங்கும் எலும்புக் கூடுகள் தொண்டு நிறுவனங்களும் எட்டாத தூரத்தில் தொலைந்து போனது எலும்புக் கூடுகளில் பட்டினிப் பதாகைகள் ஏந்தியபடி காலில்லாத கைகள் அசைகிறது அழித்து அழித்து ஆனா எழுதிய மண்ணில் உயிர்எழுத்தும் மெய்யெழுத்தும் உயிர் இழந்து கிடக்கிறது கண்ணீர் வெடித்துச் சிதறியபடி ”ஐயோ அறுவான்கள் பல்குழல் அடிக்கிறாங்கள்” மௌனக் குரல்கள் கொதிக்கிறது வல்லினம் மெல்லினம் இடையினம் எல்லாம் வ…

    • 4 replies
    • 1.2k views
  18. மேலை நாடெங்கும் ஈழத்தின் ஏழைப் புத்திரர்கள் உழைத்துழைத்து வரி கட்டி வளம் பெருக்கி; வாழ எண்ணி திசை நகர்ந்து சமுத்திரத்து மீன்களாக சகதியிலே மாட்டி மாட்டி யாசித்துக் கிடக்கின்றார். *** *** *** தன் தேசம் அங்கே தீப்பற்றி எரிகையிலே மக்களங்கே தெருத் தெருவாய் அலைகையிலே வாயில் நுழைய மறுக்கும் ஓர் மேலை நாட்டில் ஓர் வீட்டில், இன்றைய துயர்ச் செய்தியை தொலைக்காடசி பார்த்தோ அன்றி; யாதொன்றில் கேட்டோ மனம் சோர்ந்து தூங்கிப் பின் கண் விழிப்பான். *** *** *** காலத்தின் சதியினாலே அவனுமோர் அகதிதான். நகர் நகராய் நாடு நாடாய் விட்டலையும் ஈழத்து அகதியவன். இணைபிரிந்த தனியாடு. *** *** *** …

    • 11 replies
    • 1.3k views
  19. நம்ப வைச்சு கழுத்தறுத்த குள்ள நரி ....நீ!! உலகத் தமிழினத் தலைவன்......நீ எமக்காய் உயிரைவிட துணிந்தவன்....நீ எமக்காய் பதவியை எறிந்திட துணிந்தவன்..... நீ உலகத் தமிழினமே நம்பினோம் ...... ஐயா தமிழனுக்கு விடிவுகாலம் பிறந்தது ......என்று சரத் பொன்சேகா சொன்னான் .....அன்று தமிழகத் தலைவர்கள் கோமாளிகள் ....என்று தமிழகமே கொதித்து எழுந்தது ...அன்று உங்களை நம்பினோர் எல்லோரும் கோமாளிகள் ...என்று தமிழர்களுக்கும் தமிழின உணர்வாளர்க்கும் புரிந்தது....இன்று நீங்கள் அன்று சொன்னது வெறும் கவிதை....என்று கேவலம் சிங்களவனுக்கு புரிந்தது கூட நமக்கு புரியவில்லையே....அன்று. உலகத் தமிழினத் துரோகி ....நீ …

  20. தீபச்செல்வனின் அழகான கவிதை. தரப்பால்களின் கீழாய் கிடந்து அடங்குகிறது நமது எல்லா வழிகளும். துப்பாக்கியின் நுனியில் வடிகிற முகத்தில் எழுகிறது நமது எலும்புக்கூட்டின் நினைவுகள். எல்லாமே சட்டென தலைகீழாகிறது நிலத்தை எரித்துக் கொண்டிருக்கிற துவக்கு சாம்பலை எதிராய் கிளம்புகிறது. சனங்களின் குருதி கடலில் குதித்து தப்பிச் செல்லுகிறது. வழியில் தற்கொலை செய்துகொள்ள துடிக்கிறது மீதமிருக்கிற நகரத்தின் சுவடு. ஒரு மாபெரும் அரசனின் ஒற்றை வாளில் முழுச் சுவரும் வெட்டுண்டுபோகிறது. பிள்ளைகளை அனுப்பிய தாய்மாரின் கண்ணீரைத்தவிர குறுகிய நிலத்தில் எதுவும் இல்லை. மிகவும் கொடுமையான அனுபவங்களை வானத்திற்கு மேலால் கடல் நிரம்புகிறது. இப்பொழுது கடைச…

  21. பிணங்களைக் காக்கவோ வருவர் ? நினைவுகளோடு வாழும் நிலமற்ற அகதிகள் நாங்கள். 'நாளைய பொழுது நமக்கானது' கனவுகள் பொய்த்துக் காலிடை மிதியும் பிணங்களை விலக்கி உடலில் வழியும் குருதியைத் துடைத்து ஓடுதல் ஒதுங்குதல் உயிர் வாழுதல் பற்றிய ஏக்கமும் துயரும்.... கடற்கோள் கொள்ளையிட்ட துயரைவிடக் கொடுமையிது காப்பிடமற்ற விரிந்த வெளியில் கூப்பிடவும் யாரும் கேட்காத் தொலைவிருந்து காத்திடுவர் தூதர் கடலிடை வந்து மீட்டிடுவர் என்றான நம்பிக்கையும் களவு போய் பிணங்களின் நடுவேயான கூக்குரலும் குழந்தைகளின் கதறலும் ஏழ்கடல் நுனிவரையும் எங்களின் அழுகை.... எறிகணை துரத்தித் துரத்தி எறிந்திருப்பது கடைசி முனை.... எங்களைப் பற்றி உலகம் பேச…

    • 3 replies
    • 1.1k views
  22. இடைத்தங்கல் முகாங்கள்...... கவிதை..... இடைத்தங்கல் முகாங்களில் எங்கள் துன்பங்களும் தெரியாமல் தம் வாழ்வு அங்கே ஏனென்றும் புரியாமல் தீராத பசியினிலும் மணல்வீடு கட்டும் ; நம் மழலைகளின் முகம் பார்த்தேன்...! அனைத்து உணர்வுகளும் அடங்கும் நிலை மரணம்....! அங்கேயும் அதே நிலைதான் அதைப் பார்ப்போர்க்கும் அதே நிலைதான்..... உயிர்காக்க ஓடிவந்து உயிர்மட்டும் காத்துவிட்டு உணர்வெல்லாம் செத்து உறவெல்லாம் பறிகொடுத்து உறக்கம் ஏதுமின்றி ஒவ்வோர் மூலையிலும் ஒதுங்கிவிட்ட நம் உறவு கண்டேன்...! கோத்தபாய வாசகமாய் தமிழீழ குமரிகளின் பருவத்தின் அழகுதனை பார்த்து அனுபவித்து படுகொலை செய்வதற்கு பத்திரமாய் முகாமொன்று அதன் பெயரோ விச…

  23. வணக்கம் உறவுகளே ! ஆள் ஆளாய் எழுந்து அலையெனவே திரண்டு ஐ.நா சபைக்கு அணிவகுத்துள்ளோம். எத்தனை முறையெனினும் அயர்ச்சி எமக்கில்லை போராடும் இனமே விடுதலைக்கென்றாகும் இதுவும் போராட்டப் பணியே அழைக்கும் போதெல்லாம் எழுந்து வாரீர் பயணம் நீண்டதெனினும் பாதங்கள் ஓயாது களத்தில் முதற்பணி புலத்தில் கிளைப்பணியென விரிந்து கிடந்த தெம் போராட்டம் இப்போது புலத்தில் தான் முதற்பணியே நீங்களும் நாங்களும் தான் போராளிகள் எங்கள் உறவுகளின் மரணஓலம் மனுக்குலத்தின் செவிகளுக்கு எட்டும்வரை எங்கள் கண்ணீரின் ஈரத்தை உலகசபை உணரும் வரை எங்கள் விடுதலையுணர்வின் வீரியத்தை ஐ.நா சபை அறியும் வரை அழைக்கும் போதெல்லாம் …

  24. ஏ.ஆர்.ரகுமானுக்கு ஒரு ஈழத்தமிழனின் வாழ்த்து ரோஜாவில் பூத்த ராஜாவே உங்கள் இசையோடு புலம்பெயாந்த ஈழத் தமிழனின் வாழ்த்துக்கள். நூறு கோடி இசைத் தொகுப்புகளால் உங்கள் முகம் உலகமெங்கும் விரிகிறது. இசைக்கு மொழியில்லை என்று உங்கள் இசையே உலகுக்கு புரிய வைத்தது இசைக்கு ஏது எல்லையென்று உலக விருதுகளே உங்களைத் தேடி வருகிறது. ராஜாவின் இசைத் தாலாட்டில் நாங்கள் நனைந்தாலும் உங்கள் இசைகேட்டபோது தான் துள்ளிக் குதித்து எழுந்தோம். தாயகத்தைப் பிரிந்து நாங்கள் குளிர்க்கூடுகளில் வாழ்ந்தாலும் உங்கள் இசையே எங்கள் வீடுகளில் ஊர்வலம் போகிறது. நீங்கள் மீட்டுகிற கறுப்பு வெள்ளைக் கட்டைகள் அது ஏழு கட்டையோ அல்லது எட்டுக்கட்டையோ …

  25. நெருடல் தந்த அகச் சிக்கல் பூமிப் பந்தில் புதியதோர் உலகம் வாரிச் சுருட்டிய மன அழுத்தம் நெம்பி மனமது விகல்பி நைந்து போயினவாம் நமதான வாழ்வாக! விரும்பிக் கேட்ட நிலையா? இடர் நீயாகத் தந்த வாழ்வாச்சு! உந்தன் பிறப்பு சாசுவதமாயின,; எந்தன் வாழ்வு அசுவதமாவோ? எமதான இறப்பில்,அதுவான இழப்பில், உமதான வாழ்வு சிறப்பாகும் என்ற நினைவுன்னை, சிதைவாக்கும் உண்மை சிந்தை கொள மறவாதே! உனதான வாழ்வுரிமை எமக்கானதுமாகும் இதை நீ மறுக்க கறுப்பாகும் உன் வாழ்வும்.; எமதான நிலத்தில் ஏகமாக நீயா? நமதான உரிமை நாதியற்று போமா? ஆனதான வாழ்வே ஆதியற்று போமா? வருடல் என்பது உனதான ஆத்மா! மருகல் ஒன்றே தமிழனவன் வாழ்வா! விரிதல் ஒன்றே எமதான ஆற்றல், பிரிதல் ஒ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.